என் மலர்
நீங்கள் தேடியது "Riteish Deshmukh"
- கிரிக்கெட் போட்டி 19-வது நூற்றாண்டில் டெஸ்ட் வடிவில் சர்வதேச போட்டியாக மாறியது.
- 16-வது நூற்றாண்டில் இங்கிலாந்தால் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு போட்டியாக கருதப்படுகிறது.
இந்தியாவின் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்பவர் ஜேஸ்பிரிட் பும்ரா. யார்க்கர், ஸ்விங், பவுன்ஸ் என பந்து வீச்சில் கிங்-ஆக திகழ்கிறார். டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகரான ரித்தஷ் தேஷ்முக் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ அனைவரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.
அந்த படம் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம் ஆகும் இந்த சிற்பத்தை பார்க்கும்போது பும்ரா பந்து வீசும் சைகை பிரதிபலிப்பது போல் உள்ளது.
கிரிக்கெட் போட்டி 16-வது நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 19-வது மற்றும் 20-வது நுற்றாண்டில் உலககளில் பல்வேறு நாடுகளில் விளையாடப்பட்டது. 19-வது நூற்றாண்டில் முதன்முறையாக டெஸ்ட் முறையில் கிரிக்கெட்டில் விளையாடப்பட்டது.
ஆனால் 10-ம் நூற்றாண்டு படத்தை பதிவிட்டுள்ளதாக குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
- வேலை செய்யாதவர்களுக்கு தான் மதம் தேவைப்படுகிறது.
- எங்கள் மதத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கு வரும் நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் மாகாயுதி [பாஜக - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் - ஷிண்டே சிவசேனா] மற்றும் மகா விகாஸ் அகாதி [காங்கிரஸ் - சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா] ஆகிய இரண்டு கூட்டணிகள் களத்தில் உள்ளன.
தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் பாஜக தேர்தல்களின்போது கையில் எடுக்கும் வழக்கமான அஸ்திரமான இந்துக்களே ஒன்றுபடுங்கள், தனித்தனியாகி இருந்தால் ஆபத்து என்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முழக்கத்தை தூக்கிப் பிடித்து பிரசாரம் செய்து வருகிறது.
இது இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது வெறுப்பை உண்டுபண்ணும் பிளவுவாத அரசியல் யுக்தி என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சில நாட்கள் முன்னர் தூலேவில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியும் இந்த கோஷத்தை எழுப்பினார்.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும் பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தனது சகோதரர்களான அமித் மற்றும் தீரஜ் தேஷ்முக்கிற்காக ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
லத்தூர் நகரம் தொகுதியில் அமித் தேஷ்முக்கும் லத்தூர் கிராமம் தொகுதியில் தீரஜ் தேஷ்முக்கும் போட்டியிடுகின்றனர்.
லத்தூர் கிராமம் தொகுதியில் போட்டியிடும் தீரஜ் தேஷ்முக்கிற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ரித்தேஷ் தேஷ்முக், "உங்கள் மதம் ஆபத்தில் உள்ளது என்று வாக்குக் கேட்பவர்களின் கட்சிதான் உண்மையில் ஆபத்தில் உள்ளது. நேர்மையாக உழைப்பவர்கள் தர்மம் செய்கிறார்கள். வேலை செய்யாதவர்களுக்கு தான் மதம் தேவைப்படுகிறது. எங்கள் மதத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று அவர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் முதலில் வளர்ச்சியை பற்றி பேசுங்கள்.
மகாராஷ்டிராவில் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை, அவர்களுக்கு வேலை வழங்குவது அரசின் பொறுப்பு, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. 2019 சட்டமன்றத் தேர்தலில், தீரஜ் 1.21 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலிலும் எதிர்க்கட்சி வேட்பாளர் டெபாசிட் இழக்கும் வகையில் தீரஜ்க்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.







