என் மலர்
கர்நாடகா
- கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ராஷ்மிகா மந்தனா சினிமாவில் அறிமுகமானார்.
- கர்நாடகா எங்கே இருக்கிறது என தெரியாது என்று ராஷ்மிகா கூறியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ராஷ்மிகா மந்தனா சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் ரக்ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். அப்போது இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர் என்றும் தகவல் பரவியது.
பின்னர் ராஷ்மிகா தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிய பிறகு இந்த திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய அளவில் முன்னணி நடிகையாக ராஷ்மிகா மந்தனா வலம்வருகிறார்.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடத்தை புறக்கணிப்பதாக கர்நாடகா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவிக்குமார் கவுடா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேட்டி அளித்த ரவி, "கன்னட மொழி படத்தின் மூலம் திரையுலகில் வாழ்க்கையை தொடங்கிய நடிகை ராஷ்மிகா தற்போது கன்னடத்தை புறக்கணிக்கிறார். கடந்த ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க நாங்கள் அழைத்தபோது ராஷ்மிகா மறுத்து விட்டார்
என் வீடு ஹைதராபாத்தில் உள்ளது. கர்நாடகா எங்கே இருக்கிறது என தெரியாது, என்னால் வர முடியாது என்று ராஷ்மிகா கூறிவிட்டார் கன்னடத்தை புறக்கணித்த ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டாமா?" என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பெங்களூரு அணி உள்ளூரில் 4 ஆட்டங்களிலும் வரிசையாக தோற்று இருக்கிறது.
- போட்டிகளைக் காண வந்த ரசிகர்கள் தோல்வியால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பெங்களூரு:
3-வது மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது.
வதோதராவில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் வெற்றி கண்ட பெங்களூரு அணி, அதன்பிறகு உள்ளூரில் 4 ஆட்டங்களிலும் வரிசையாக தோற்று இருக்கிறது.
இந்நிலையில், தொடர் தோல்வி எதிரொலியாக பெங்களூரு ரசிகர்களிடம் பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக, ஸ்மிருதி மந்தனா கூறுகையில், இந்தப் போட்டியை காண ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து ஆதரவு அளித்தனர். தோல்வியால் மிகுந்த ஏமாற்றம் அடைந்து இருப்பார்கள். பெங்களூரு மைதானத்தில் அவர்களுக்காக ஒரு போட்டியிலும் எங்களால் வெற்றிபெற முடியவில்லை. அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெறுவோமென நம்புகிறேன் என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய பெங்களூரு 5 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது.
- அடுத்து பேட் செய்த டெல்லி அணி 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பெங்களூரு:
3வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. ஓரளவு நிலைத்து நின்று ஆடிய எல்லீஸ் பெர்ரி அரை சதம் அடித்து 60 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ராக்வி பிஸ்ட் 33 ரன் எடுத்தார்.
டெல்லி சார்பில் ஷிகா பாண்டே, நல்லபுரெட்டி ஷாரனி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கேப்டன் மெக் லேனிங் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய ஜெஸ் ஜான்சேன், ஷபாலி வர்மாவுடன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இருவரும் அரை சதம் அடித்தனர்.
இறுதியில், டெல்லி அணி 15.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
- முதலில் ஆடிய மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது.
- அடுத்து பேட் செய்த டெல்லி அணி 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பெங்களூரு:
3வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது. ஹேலி மேத்யூஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் தலா 22 ரன்கள் எடுத்தனர். நட் சீவர் பிரண்ட் 18, அமெலியா கெர் 17 ரன் எடுத்தனர்.
டெல்லி அணி சார்பில் ஜெஸ் ஜோனாசென், மின்னு மணி ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் இருவரும்
அதிரடியாக ஆடினர்.
முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த நிலையில் ஷபாலி வர்மா 43 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜெமிமாவுடன் மேக் லேனிங் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். மேக் லேனிங் அரை சதம் கடந்து அசத்தினார்.
இறுதியில், டெல்லி அணி 14.3 ஓவரில் 124 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
- சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துக்களுக்கு பதில் அளிக்க முடியாது.
- அதனை யாரும் வரவரேற்க வேண்டிய அவசியம் இல்லை.
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி திருவிழாவில் மத்திய அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதன்படி கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமாரும் சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார்.
ஈஷா மைய சிவராத்திரி விழாவில் டி.கே. சிவகுமார் கலந்து கொண்டது சர்ச்சையானது. இது குறித்து விளக்கம் அளித்த டி.கே. சிவகுமார் தனது தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் மைசூரை பூர்விகமாக கொண்ட சத்குரு தன்னை தனிப்பட்ட முறையில் அழைத்த காரணத்தால் நான் சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டேன் என்று கூறினார்.
இது குறித்து பேசிய டி.கே. சிவகுமார், "ஈஷா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில் நான் கலந்து கொண்டேன். அது என் தனிப்பட்ட நம்பிக்கை. சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துக்களுக்கு பதில் அளிக்க முடியாது. அதனை பா.ஜ.க. அல்லது மற்றவர்கள் யாரும் வரவேற்க வேண்டிய அவசியம் இல்லை.
"இது குறித்து ஊடகங்களும் விவாதிக்க வேண்டாம். இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட நம்பிக்கை. சத்குரு மைசூருவை சேர்ந்தவர், அவர் என்னை அந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்திருந்தார்," என தெரிவித்துள்ளார்.
- உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயன அம்சங்கள் இருப்பதாக புகார் எழுந்தது.
- சுமார் 251 உணவகங்களில் இட்லி மாதிரியை சேகரித்து ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்தனர்
பெங்களூரு:
பெங்களூருவில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் இட்லியை துணி போட்டு வேகவைப்பதற்கு பதிலாக பாலிதீன் போட்டு அதன் மீது இட்லி மாவு ஊற்றி வேக வைக்கப்படுகிறது.
இதில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயன அம்சங்கள் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுமார் 251 உணவகங்களில் இட்லி மாதிரியை சேகரித்து ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் சுமார் 51 உணவக இட்லி மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பது தெரியவந்து உள்ளது. இதையடுத்து இட்லி பாத்திரத்தில் பாலிதீன் பயன்படுத்தி இட்லி மாவை ஊற்றி வைக்க தடை விதிக்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.
- முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய குஜராத் ஜெயண்டஸ் அணி 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பெங்களூரு:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கனிகா 33 ரன்கள் எடுத்தார்.
குஜராத் டாட்டின், தனுஜா கன்வர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி குஜராத் ஜெயண்ட்ஸ் களமிறங்கியது. கேப்டன் ஆஷிக் கார்ட்னர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். லிட்ச்பீல்ட் 30 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், குஜராத் அணி 16.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆனாலும், நடப்பு தொடரில் புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.
- முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
பெங்களூரு:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிரேஸ் ஹாரிஸ் 45 ரன்னும், விரிந்தா தினேஷ் 33 ரன்னும் எடுத்தனர்.
மும்பை சார்பில் நாட்-சீவர் பிராண்ட் 3 விக்கெட்டும், ஷப்னிம் இஸ்மாயில், சன்ஸ்கிருதி குப்தா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. யஸ்திகா பாட்டியா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
ஹைலே மேத்யூஸ், நாட்-சீவர் ப்ரண்ட் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு விரட்டினர் . இருவரும் அரைசதம் கடந்தனர். ஹைலே மேத்யூஸ் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு மும்பை 143 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. மும்பை அணியில் நட் ஸ்கிவர்-ப்ரண்ட் 75 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், மும்பை அணி 17 ஓவரில் 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு தொடரில் புள்ளிப் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்துக்கு முன்னேறியது.
- கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுக்க ரிக்லைனர்கள் வாங்க சபாநாயகர் உத்தரவு
- கர்நாடக மாநில சபாநாயகரின் இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு ஓய்வெடுக்க பிரத்யேக சோஃபாக்கள் வாடகைக்கு எடுக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுக்க வெளியில் செல்வதால் அவை நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்காத சூழல் உள்ளதாக குற்றசாட்டு எழுந்தது.
இந்நிலையில், சட்டமன்ற வளாகத்திற்குள்ளேயே சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுக்க ரிக்லைனர்கள் வாங்க சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கர்நாடக மாநில சபாநாயகரின் இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.
- தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்ப தெரிவித்து வருகிறது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் ஒப்புதல் வழங்காமல் உள்ளது.
காவிரி நதிநீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. அதாவது ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தான் இந்த புதிய அணைகட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்காக ரூ.9 ஆயிரம் கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்துள்ளது.
மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு மத்திய அரசும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்காமல் இருந்து வந்தாலும், தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி அணைகட்டும் திட்டத்திற்கான முன்னேற்பு பணிகளில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் வனப்பகுதி நிலம் அழிக்கப்படுவதை காரணம் காட்டி சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநில துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் மற்றும் வி. சோமன்னா ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேட்டதாக டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-
மேகதாது அணை விவகாரத்தில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? என மத்திய அரசிடம் கேட்டேன். நாம் வலியுறுத்தலாம் அல்லது அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் அல்லது அனுமதிக்க முடியாது எனக் கூட சொல்லாம். ஆனால், அவர்களுடைய நிலைப்பாட்டை அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும்.
தாமதங்களை நாங்கள் விரும்பாததால், மேகதாது திட்டத்தை நாங்கள் முன்வைத்தோம். மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து தெளிவான அறிக்கையை மத்திய அமைச்சரிடம் கேட்டோம்.
இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
- கார் கவிழ்ந்தபோது, உள்ளே அமர்ந்திருந்த இரண்டு பேர் தூக்கி எறியப்பட்டு சாலையில் விழுந்தனர்.
- இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நெடுஞ்சாலையிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
கர்நாடகாவில் நடந்த ஒரு பயங்கரமான சாலை விபத்தின் பதறடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
கர்நாடகாவின் தொட்டபல்லாபூரில் பகுதியில் தாலுகாவில் உள்ள கட்டிஹோசஹள்ளி சாலையில் கடந்த திங்கள்கிழமை இரவு இந்த விபத்து நடந்துள்ளது.
5 பேருடன் சாலையில் அதிவேகமாகச் சென்ற ஒரு கார், நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து 4 முறை சுழன்றது. காரின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், கார் கவிழ்ந்தபோது, உள்ளே அமர்ந்திருந்த இரண்டு பேர் தூக்கி எறியப்பட்டு சாலையில் விழுந்தனர்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நெடுஞ்சாலையிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. காரில் இருந்த ஐந்து பேர் காயமடைந்தனர்.
சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் முகமது யூனிஸ் (20) உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

- தோட்டங்கள், வாகனங்கள் சுத்தப்படுத்த பயன்படுத்த கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
- சிலர் குடிநீர் மூலம் வாகனத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் கடந்த ஆண்டு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிட்டது. அதே போல் பெரும்பாலான பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக டேங்கர் தண்ணீரும் அதிகவிலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூருவில் குடிநீர் பிரச்சனை ஏற்படாத வகையில் இருக்க இந்த ஆண்டு பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், கழிவுநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக குடிநீரை குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றப்படி தோட்டங்கள், வாகனங்கள் சுத்தப்படுத்த பயன்படுத்த கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
மேலும் பெங்களூருவில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய அறிவியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகளும் அறிவித்து உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள் பெங்களூரு மாநகரம் மற்றும் புறநகர் பகுதியில் பொதுமக்கள் குடிநீர் பயன்படுத்துவதை கண்காணித்து வந்தனர்.
அப்போது சிலர் குடிநீர் மூலம் வாகனத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். மேலும் சிலர் தோட்டத்துக்கும், கட்டுமானத்துக்கும், அலங்கார நீருந்துகளுக்கும் குடிநீரை பயன்படுத்தியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் பெங்களூரு நகரின் தெற்கு மண்டலத்தில் அதிகபட்சமாக 33 பேரும், மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் தலா 28 பேரும், வடக்கு மண்டலத்தில் 23 பேரும் என மொத்தம் 112 பேர் குடிநீரை வீணாக்கியது கண்டறியப்பட்டு அவர்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சத்து 6 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.






