என் மலர்
டெல்லி
- எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்
- பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மனநிலை பெண்களுக்கு எதிரானது மற்றும் தலித் மக்களுக்கு விரோதமானது
முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்-மந்திரி கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார். வயது முப்பு காரணமாக எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்.
இந்நிலையில், பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "குடியரசுத் தலைவர் நிற்கிறார், பிரதமர் மோடி அமர்ந்திருக்கிறார். பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார்.
இது முதல் முறையல்ல - புதிய நாடாளுமன்றம் தொடங்கப்பட்டபோது, குடியரசு தலைவரை அழைக்கவில்லை, ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் கூட அவரை அழைக்கவில்லை.
பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மனநிலை பெண்களுக்கு எதிரானது மற்றும் தலித் மக்களுக்கு விரோதமானது என்பதை இந்த சம்பவங்கள் காட்டுகின்றன" என்று காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.
- கெஜ்ரிவால் அவர்கள், சிறைக்குள் இருந்து ஆட்சியை மட்டும் நடத்தவில்லை, இந்தியா கூட்டணியின் எழுச்சிக்கும் தூண்டுதலாக அமைந்து விட்டார்
- ஆம் ஆத்மி கட்சிக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாகத் துணை நிற்கிறது
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா கலந்து கொண்டார். அங்கு அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வாசித்தார்.
அக்கடிதத்தில், "இந்தியாவில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் கைதுக்கு எனது கடுமையான கண்டனங்கள்
பா.ஜ.க அரசு தனது ஏவல் படைகளான சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றைப் பயன்படுத்தி எங்களை மிரட்டுகிறார்கள். இதில் மிரண்டு பா.ஜ.க.வில் ஐக்கியம் ஆகிறவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்குகளே திரும்பப் பெறப்படும்.
ஆனால் பா.ஜ.க.வின் ஆணவத்துக்கு அடங்காதவர்களாக இருந்தால் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பார்கள். இது இந்தியாவில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதைப் போல இருக்கிறது.
இது போன்ற கைதுகள், 'இந்தியா' கூட்டணியை வலிமையாக ஆக்கியதே தவிர பலவீனப்படுத்தவில்லை. அரைக்க அரைக்கச் சந்தனம் மணப்பதைப் போல, தாக்குதல் அதிகமாக அதிகமாகக் கூட்டணியும், கூட்டணித் தலைவர்களும் வலிமை அடைகிறார்கள்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரைக் கைது செய்திருப்பது பா.ஜ.க.வின் தோல்வி பயத்தின் வெளிப்பாடே ஆகும்!
அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், பாஜகவுக்கு எதிராகப் பரப்புரை செய்தால் அவர் கருத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை அறிந்து, அதனைத் தடுக்கும் முயற்சியாகவே அவரைக் கைது செய்துள்ளனர். ஆனால், அவரது பரப்புரை ஏற்படுத்தி இருக்க வேண்டியதை விட, அவரது கைது மூலமாகக் கிடைத்த அரசியல் விழிப்புணர்வு என்பது மிகமிக அதிகம்.
அருமை நண்பர் கெஜ்ரிவால் அவர்கள், சிறைக்குள் இருந்து ஆட்சியை மட்டும் நடத்தவில்லை, இந்தியா கூட்டணியின் எழுச்சிக்கும் தூண்டுதலாக அமைந்து விட்டார்.
இந்தச் சூழலில் ஆம் ஆத்மி கட்சிக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாகத் துணை நிற்கிறது.
'இந்தியா' கூட்டணியின் ஒற்றுமையால் மட்டுமே மோடியை வீழ்த்த முடியும் என்பதை மறந்து விட வேண்டாம். மக்கள் அளிக்கும் வாக்கு மட்டும்தான் பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு முடிவுரை எழுத முடியும்.
நான் தினந்தோறும் பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து வருகிறேன். பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த மக்கள் தயாராகி விட்டார்கள்.
பாசிச பாஜகவை வீழ்த்துவோம்! கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்" என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- இந்திய மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிற்கிறார்கள். அவரை சிறையில் அடைக்க முடியாது என்று சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்தார்
- அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் எழுதிய ஆறு உத்தரவாதங்களை அவர் வாசித்தார்.
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், "இந்திய மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிற்கிறார்கள். அவரை சிறையில் அடைக்க முடியாது என்று தெரிவித்தார்.
அப்போது சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்காக எழுதிய கடிதத்தை அவர் வாசித்தார் . அதில், "நான் உங்களிடம் வாக்கு கேட்கவில்லை. தேர்தலில் யாரையும் தோற்கடிக்க உதவுமாறு நான் உங்களிடம் கேட்கவில்லை. இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு உதவுமாறு 140 கோடி இந்தியர்களை மட்டுமே கேட்டுக்கொள்கிறேன்" என்று கெஜ்ரிவால் எழுதியுள்ளார்.
மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் எழுதிய ஆறு உத்தரவாதங்களை அவர் வாசித்தார்.
1.நாடு முழுவதும் மின்வெட்டு இருக்காது.
2. நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
3. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நல்ல பள்ளி இருக்கும், அங்கு சமூகத்தின் அனைத்து தரப்பு குழந்தைகளும் தரமான கல்வியைப் பெறுவார்கள்.
3. ஒவ்வொருவரும். கிராமத்தில் மொஹல்லா மருத்துவமனை இருக்கும்,
4. ஒவ்வொரு ஜில்லாவிலும் அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இருக்கும்.
5. சுவாமிநாதன் அறிக்கையின்படி விவசாயிகளுக்கு நல்ல குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும்.
6. டெல்லி மக்களுக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்
இந்த உத்தரவாதங்கள் அனைத்தையும் நாங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றுவோம்," என்று அவர் கூறினார்.
மேலும் அக்கூட்டத்தில் பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, "கெஜ்ரிவால் என்ன தவறு செய்தார்? அவர் டெல்லியின் கல்வியை மேம்படுத்தியுள்ளார், மக்களுக்கு உதவினார். மக்கள் அவர் ஆட்சியில் மகிழ்ச்சியாக இல்லையென்றால் , அவர் டெல்லியை மீண்டும் ஆட்சி செய்திருக்க மாட்டார்.
பாஜகவில் சேராத தலைவர்களை சிறையில் அடைக்கும் வேலையை மட்டுமே தற்போது பாஜக செய்து வருகிறது. பாஜகவின் 2 கோடி வேலைவாய்ப்பு வாக்குறுதி என்ன ஆனது? வருமான வரித்துறை மூலம் பாஜக வசூல் நடத்தி வருகிறது என்று கூறினார்.
- நடுவரை அழுத்தத்திற்கு உட்படுத்தி, கிரிக்கெட் வீரரை விலைக்கு வாங்கி, கேப்டனை பயமுறுத்தி, போட்டியில் வெற்றி பெறுவதுதான் மேட்ச் பிக்சிங்
- மோடியின் 400 தொகுதி வெற்றி கோஷம் என்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாற்றம் செய்யாமல் சாத்தியமில்லை
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, "மேட்ச் பிக்சிங் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நடுவரை அழுத்தத்திற்கு உட்படுத்தி, கிரிக்கெட் வீரரை விலைக்கு வாங்கி, கேப்டனை பயமுறுத்தி, போட்டியில் வெற்றி பெறுவதுதான் மேட்ச் பிக்சிங்.
இந்தத் தேர்தலில் நரேந்திர மோடி நடுவர்களைத் தேர்ந்தெடுத்தார். ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார். மோடியின் 400 தொகுதி வெற்றி கோஷம் என்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாற்றம் செய்யாமல் சாத்தியமில்லை
பாஜகவின் இந்த மேட்ச் பிக்சிங் நாட்டின் அரசியலமைப்பை அதன் மக்களின் கைகளில் இருந்து பறிப்பதற்காக செய்யப்படுகிறது.
அரசியல் சாசனம் இல்லாமல், காவல்துறை, , வற்புறுத்தல்கள் மூலம் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்திய மக்களின் குரலை ஒடுக்கும் சக்தி உலகில் எவருக்கும் இல்லை.
மக்கள் முழு மனதுடன் பாஜகவிற்கு எதிராக வாக்களிக்கவில்லை என்றால், அவர்களின் மேட்ச் பிக்சிங் வெற்றி பெறும். பாஜக வெற்றி பெற்று அரசியல் சட்டத்தை மாற்றினால் நாடு முழுவதும் தீப்பற்றி எரியும். இந்தத் தேர்தல் வாக்குகளுக்கானது அல்ல. இது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதாக நடக்கிறது.
மேட்ச் பிக்சிங், சமூக வலைதளங்கள், ஊடகங்களுக்கு அழுத்தம் தருவது இவையெல்லாம் இல்லையென்றால் பாஜகவால் 180 சீட் கூட வெல்ல முடியாது
இரண்டு முதல்வர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், எங்கள் வங்கி கணக்குகள் சீல் வைக்கப்பட்டன. இதை ஏன் ஆறு மாதங்களுக்குப் பிறகும் தேர்தலுக்கு முன்பும் அவர்கள் செய்யவில்லை" என்று அவர் கேள்வியெழுப்பினார்.
- டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
- இதில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தலைவர்கள் பங்கேற்றனர்.
புதுடெல்லி:
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் மனைவி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி ஆகியோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்று கெஜ்ரிவால் மனைவிக்கு ஆறுதல் கூறினார். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
- வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி அவர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- ரீல்ஸ் வீடியோவுக்காக அவர் பயன்படுத்திய காரையும், அதில் இருந்த சில பிளாஸ்டிக் ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
புதுடெல்லியின் பஸ்சின் விஹார் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் டாக்கா. இவர் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் காரை ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள மேம்பாலம் அருகில் சென்ற போது திடீரென காரை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், மேம்பாலத்தில் அவர் கார் கதவை திறந்த நிலையில் ஓட்டி செல்வதும், ரீல்ஸ் வீடியோவுக்காக சாகசம் செய்யும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி அவர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இது தொடர்பாக அவருக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அப்போது அவர் காவல்துறையினரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்திய தண்டனை சட்டத்தின் கீழும் சில பிரிவுகளில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் ரீல்ஸ் வீடியோவுக்காக அவர் பயன்படுத்திய காரையும், அதில் இருந்த சில பிளாஸ்டிக் ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
रील बनाने के लिए विभिन्न यातायात प्रावधानों का उल्लंघन करने वाले आरोपी के विरुद्ध #दिल्लीपुलिस ने मोटर वाहन अधिनियम के अंतर्गत सख्त कार्यवाही करते हुए चालान कर वाहन ज़ब्त किया और पुलिसकर्मियों से अभद्रता एवं उनपर हमला करने पर आईपीसी की धाराओं में केस दर्ज कर गिरफ्तार किया। pic.twitter.com/2f5VBJrwtS
— Delhi Police (@DelhiPolice) March 30, 2024
- 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
- எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்-மந்திரி கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார். வயது முப்பு காரணமாக எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்.
இதில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
#WATCH | President Droupadi Murmu confers Bharat Ratna upon veteran BJP leader LK Advani at the latter's residence in Delhi.
— ANI (@ANI) March 31, 2024
Prime Minister Narendra Modi, Vice President Jagdeep Dhankhar, former Vice President M. Venkaiah Naidu are also present on this occasion. pic.twitter.com/eYSPoTNSPL
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்.
- பிரமதர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, ஐம்பது ஆண்டுகள் மவுனமாக இருந்து கொண்டு, தேர்தல் நேரத்தில் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு குறித்துப் பேசும் மு.க.ஸ்டாலின் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
மேலும், கச்சத்தீவு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பெற்ற தகவலை குறிப்பிட்டு பிரமதர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரைவார்த்தது என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது.
காங்கிரஸை நாம் ஒரு போதும் நம்ப முடியாது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்த காங்கிரஸ் கட்சி 75 ஆண்டுகளாக உழைத்து வருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் பேரணி.
- பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு.
டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை, பணமோசடி வழக்கில் (மதுபான கொள்கை) அமலாக்கத்துறை கைது செய்தது. அவரது கைதுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக வரும் மார்ச் 31-ந்தேதி டெல்லி ராம்லீலாவில் மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தப்படும் என இந்தியா கூட்டணி அறிவித்தது.
அதன்படி டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணி பிரதமர் மோடி வீடு இருக்கும் லோக் கல்யாண் மார்க் வரை செல்ல இருக்கிறது. பா.ஜனதா தலைமையிலான அரசின் முடிவுக்கான நேரம் என மெசேஜ் உடன் இந்த பேரணியை நடத்துகின்றனர்.
இந்த பேரணியில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
தொடர்ந்து, டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்), திருச்சி சிவா (தி.மு.க.), பரூக் அப்துல்லா (தேசிய மாநாடு), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி), ஜார்கண்ட் முதல்-மந்திரி சம்பாய் சோரன், முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
- அமிர்தசரஸ் தொகுதியில் அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதரான தரன்ஜித் சிங் சந்துவிற்கு சீட் வழங்கியுள்ளது.
- ஃபரித்காட் தொகுதியில் ஹன்ஸ் ராஜை நிறுத்தியுள்ளது.
பா.ஜனதா 11 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதரான தரன்ஜித் சிங் சந்துவிற்கு சீட் வழங்கியுள்ளது. அதே மாநிலத்தின் ஃபரித்காட் தொகுதியில் ஹன்ஸ் ராஜ்-யை நிறுத்தியுள்ளது. ஹன்ஸ் ராஜ் கடந்த 2019-ல் டெல்லி வடகிழக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். ஃபரித்காட் எஸ்சி தொகுதியால் தற்போது அங்கே நிறுத்தப்பட்டுள்ளார்.
லூதியானாவில் ரவ்னீனத் சிங் பிட்டு, பாட்டியாலாவில் பிரினீத் கவுர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பி. மக்டாப்பிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. பிஜு ஜனதா தளத்தில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த உடன் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரவ்னீனத் சிங் பிட்டு பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன் ஆவார். பிரினீத் கவுர் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கின் மனைவி ஆவார். ஜலந்தரில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த ரிங்குவிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
பா.ஜனதா மக்களவை தேர்தலில் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது. ஏற்கனவே இருந்து பல எம்.பி.க்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர்.
அதேவேளையில் நடிகைகள், வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கியுள்ளதாக விமர்சனமும் எழும்பியுள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிட கங்கனா ரனாவத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு வங்காளத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மக்களவையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை பா.ஜனதா 411 தொகுதிகளுக்கு வேட்பாளர் பெயரை அறிவித்துள்ளது.
- அமலாக்கத்துறை அதிகாரிகளால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- நாளை நடைபெறும் பேரணியில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை, பணமோசடி வழக்கில் (மதுபான கொள்கை) அமலாக்கத்துறை கைது செய்தது. அவரது கைதுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தன.
மேலும் மார்ச் 31-ந்தேதி டெல்லி ராம்லீலாவில் மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தப்படும் என அறிவித்தது. அதன்படி நாளை டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்படுகிறது. இந்த பேரணி பிரதமர் மோடி வீடு இருக்கும் லோக் கல்யாண் மார்க் வரை செல்ல இருக்கிறது. பா.ஜனதா தலைமையிலான அரசு முடிவுக்கான நேரம் என மெசேஜ் உடன் இந்த பேரணியை நடத்துகின்றனர்.
இந்த பேரணியில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மாநில முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த பேரணி தனிநபர் சார்ந்தது அல்ல. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கானது என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "இது தனிநபர் சார்ந்த பேரணி அல்ல. இது ஒரு கட்சியின் பேரணி அல்ல. 28 கட்சிகள் ஈடுபடுவது தொடர்பானது. இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து அங்கத்தினரும் கலந்து கொள்வார்கள். இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பதற்கான செய்தியை இது வெளிப்படுத்தும். இந்த பேரணி ஒரு நபரை பாதுகாப்பதற்கானது அல்ல, அரசியலமைப்பை பாதுகாப்பதற்காக" என்றார்.
இந்த பேரணியில் ஜார்க்கண்ட் முதல்வர் சம்பை சோரண், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) தலைவர் சரத் பவார், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஷ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ பொது செயலாளர் டி.ராஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெரிக் ஓ'பிரனை் உள்ளிட்ட தலைவரக்ள் இந்த பேரணியில் கலந்து கொள்கிறார்கள்.
- நிர்மலா சீதாராமன் ஒருங்கிணைப்பாளரான நியமிக்கப்பட்டுள்ளார்.
- பியூஷ் கோயல் துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற மக்களை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி மே மாதம் ஜூன் 1-ந்தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. மாநில மற்றும் தேசிய கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பமனு தாக்கல் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்று மதியம் 3 மணியுடன் முடிவடைந்தது.
பல்வேறு மாநில கட்சிகள் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கியுள்ள காங்கிரஸ் கட்சி ஏப்ரல் ஐந்தாம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் ஆளும் பா.ஜனதா தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை இன்று அறிவித்துள்ளது. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்துள்ள ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்த குழுவில் 27 பேர் இடம் பிடித்துள்ளனர்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருங்கிணைப்பாளராகவும், பியூஷ் கோயல் துணை ஒருங்கிணைப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், அருணாச்சல பிரசேதம், ஒடிசா, குஜராத், அசாம், சத்தீஷ்கர், மத்தயி பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், டெல்லி, ஹரியானா, கேரளா மாநிலங்களை சேர்ந்த 24 உறுப்பினர்கள் இடம் பிடித்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம் பெறவில்லை. அதேபோல் ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து யாரும் உறுப்பினராக இடம்பெறவில்லை.






