என் மலர்tooltip icon

    டெல்லி

    • யூபிஐ மூலம் வரி செலுத்துவதற்கான வரம்பை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தபட்டுள்ளது.
    • இதற்கு முன்பு செக் க்ளியரிங் செய்ய இரண்டு வேலை நாட்கள் வரை ஆகும்.

    புதுடெல்லி:

    இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு ஆர்பிஐயின் பணவியல் கொள்கை குறித்து இன்று விவாதத்தித்தது.

    இந்த கூட்டத்திற்கு பிறகு குழுவில் எடுக்கப்பட்ட முடிவை ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.

    யூபிஐ மூலம் வரி செலுத்துவதற்கான வரம்பை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் இது யூபிஐ மூலம் வரி செலுத்துவதை எளிதாக்கும் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

    மேலும், வங்கி காசோலைகளை சில மணி நேரங்களிலேயே செக் க்ளியரிங் செய்யும் திட்டம் கொண்டுவரப்படவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

    தற்போது, செக் ட்ரங்கேஷன் சிஸ்டம் (CTS) மூலம் செக் க்ளியரிங் செய்ய இரண்டு வேலை நாட்கள் வரை ஆகும் நிலையில், இந்த புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

    • பாராளுமன்றத்தில் இன்றும் வினேஷ் போகத் விவகாரம் எதிரொலித்தது.
    • வினேஷ் போகத் பிரச்சினையை கிளப்பி பேச முயன்றனர்.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங் கனை வினேஷ் போகத் எடை பிரச்சினையால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்தியாவின் பதக்கம் பறிபோனது. இந்த விவகாரத்தால் நாடே கொதிப்படைந்து இருக்கிறது. பாராளுமன்றத்திலும் நேற்று எழுப்பப்பட்டது.

    பாராளுமன்றத்தில் இன்றும் வினேஷ் போகத் விவகாரம் எதிரொலித்தது. மேல்சபை கூடியதும் எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிரச்சினையை கிளப்பி பேச முயன்றனர்.

    வினேஷ் போகத் தகுதி நீக்கம் விவகாரத்தில் யார் பின்னால் இருக்கிறார்கள்? என்பதை அறிய விரும்பு கிறேன் என்று கார்கே கூறினார்.

    இந்த பிரச்சினையை எழுப்ப அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதிக்க வில்லை. இதனால் எதிர் கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள். அதை தொடர்ந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் சில பிரச்சினைகளை எழுப்ப நின்றார். ஆனால் அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதிக்கவில்லை.

    தன்கர் கூறும்போது, நீங்கள் நாற்காலியை நோக்கி கத்துகிறீர்கள். உங்கள் நடத்தை சபையில் அசிங்க மாக உள்ளது. உங்கள் செயலை கண்டிக்கிறேன் என்று கூறி எச்சரித்தார்.

    எதிர்கட்சி உறுப்பினர் களின் நடத்தை குறித்து வேதனையை வெளிப் படுத்திய ஜெகதீப் தன்கர் சிறிது நேரம் அவையிலிருந்து வெளியேறினார்.

    • பா.ஜ.க. எம்.பி. ஒருவருக்கு கூட மாம்பழம் அனுப்பி வைக்க வில்லை.
    • மாம்பழம் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட 7 எம்.பி.க்களுக்கு பாகிஸ்தான் தூதரகம் மாம்பழம் அனுப்பி வைத்துள்ளது.

    இந்தியா-பாகிஸ்தான் நட்புறவை பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் தூதரகம் சார்பில் எம்.பி.க்களுக்கு மாம்பழம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

    சமீபத்தில் பதவி விலகிய வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக்ஹசீனா தான் பதவியேற்ற நாள் முதல் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோருக்கு தவறாமல் மாம்பழம் அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

    இந்நிலையில் பாகிஸ்தான் தூதரகம் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் எம்.பி.க்கள் கபில் சிபல், சசிதரூர், சமாஜ்வாடியை சேர்ந்த மொஹிப்புல்லா நத்வி, ஜியா உர் ரஹ்மான் பார்க், ராம்பூர் இக்ரா ஹசன், காஜிபூர் அப்சல் அன்சாரி ஆகிய 7 பேருக்கு மாம்பழம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. பா.ஜ.க. எம்.பி. ஒருவருக்கு கூட மாம்பழம் அனுப்பி வைக்க வில்லை.

    இதுகுறித்து மத்திய மந்திரி கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    ரேபரேலியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பாகிஸ்தானுடன் 'நபக்' (தூய்மையற்ற) தொடர்பு இருக்கிறது. உத்தர பிரதேசத்தில் இருந்து வரும் மாம்பழங்கள் தனக்கு பிடிக்காது என்று சில காலத்திற்கு முன்பு ராகுல் காந்தி கூறினார்.

    பாகிஸ்தான் தூதரகம் தற்போது ராகுல்காந்திக்கு மாம்பழங்களை அனுப்பியுள்ளது. அவர் விரும்பும் மற்ற விஷயங்களை அவர் சொல்ல வேண்டும் என்றார்.

    இதேபோல் பா.ஜ.க. எம்.பி. அனுராக்தாக்கூர் கூறியுள்ள குற்றச்சாட்டில், இதயம் இருக்கும் இடத்தில் இருந்து மாம்பழங்களை பெறுகிறார்கள். அவருக்கு (ராகுல்காந்தி) உத்தர பிரதேசத்தின் மாம்பழங்கள் பிடிக்காது. ஆனால் பாகிஸ்தானில் இருந்து வரும் மாம்பழங்களால் அவர் உற்சாகமாக இருப்பதாக தெரிகிறது என்றார்.

    7 எம்.பி.க்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டும் பாகிஸ்தான் தூதரகம் ஏன் மாம்பழம் அனுப்புகிறது என்று பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான அமித்மால்வியா கேள்வி கேட்டுள்ளார்.

    பா.ஜ.க. மந்திரி, எம்.பி.க்கள் குற்றச்சாட்டால் மாம்பழம் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீட்டிற்கு திரும்பிய சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • சிறுவனின் பள்ளி நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தனது காதலிக்கு ஆப்பிள் ஐபோன் வாங்கவும், பிறந்தநாள் விழாவுக்கு செலவு செய்யவும் தாயின் தங்கத்தை திருடிய சிறுவனை டெல்லி போலீசார் கைது செய்தனர். டெல்லி நஜாப்கரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    டெல்லி நஜாப்கரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து தங்க நகைகள் காணாமல் போனதையடுத்து சிறுவனின் தாய் புகார் அளித்துள்ளார். நகை திருட்டு சம்பவம் தொடர்பாக ஆகஸ்ட் 3-ந்தேதி சிறுவனின் தாய் போலீசில் புகார் அளித்தார்.

    அதில், தனது வீட்டில் இருந்து இரண்டு தங்கச் சங்கிலிகள், ஒரு ஜோடி தங்க கம்மல்கள் மற்றும் ஒரு தங்க மோதிரம் ஆகியவற்றை ஆகஸ்ட் 2-ந்தேதி அடையாளம் தெரியாத நபர் திருடி உள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டுக்குள் யாரும் வராதது, வெளியே செல்லாதது சிசிடிவி காட்சிகளில் கண்டு பிடிக்கப்பட்டது.

    வீட்டிற்குள் உள்ள ஒருவரே இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று நினைத்த போலீசாரின் விசாரணையில், அந்த பெண்ணின் மைனர் மகன் குற்றம் நடந்ததிலிருந்து காணாமல் போனதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து சிறுவனின் பள்ளி நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் ரூ.50,000 மதிப்புள்ள புதிய ஐபோன் வாங்கியுள்ளார் என்பது தெரிய வந்தது. வீட்டிற்கு திரும்பிய சிறுவனை பிடித்து விசாரணை நடத்திய போலீசார், அவனிடம் இருந்து ஆப்பிள் மொபைல் போனை மீட்டனர்.

    சிறுவன் நஜாப்கரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். அவனது தந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாகவும், படிப்பில் ஆர்வம் இல்லாமல் சராசரி மதிப்பெண்கள் எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

    பள்ளியில் சிறுவன் அதே வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியுடன் தொடர்பு வைத்திருப்பதாக அவரது நண்பர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    தனது காதலியின் பிறந்தநாளில் பிரமிக்க வைக்கும் வகையில் அவருக்கு பரிசு கொடுக்க விரும்பிய சிறுவன் தனது தாயிடம் பணம் கேட்டுள்ளார். குடும்ப வறுமை காரணமாக பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்த சிறுவனின் தாய், படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி உள்ளார். தாய் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த சிறுவன் வீட்டில் இருந்து நகைகளை திருடி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    காணாமல்போன ஒரு ஜோடி தங்க கம்மல்கள், ஒரு தங்க மோதிரம் மற்றும் ஒரு செயின் மீட்கப்பட்டது. நகையை வாங்கியவரில் ஒருவரான கமல் வர்மாவை போலீசார் கைது செய்தனர்.

    • ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு வருகிற 11-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
    • முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் இன்னும் தயாரிக்கப்படவில்லை.

    இளநிலை நீட் தேர்வு கடந்த மே மாதம் நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வு முடிவு ஜூன் மாதம் 4-ம் தேதி வெளியானது. தேர்வு நடந்ததில் இருந்து தேர்வு முடிவு வெளியானது வரை வினாத்தாள் கசிவு, மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தன.

    இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, ஒரு வழியாக இளநிலை நீட் தேர்வு முடிவு மீண்டும் வெளியிடப்பட்டு, தற்போது கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கியுள்ளது.

    குளறுபடி என்ற வார்த்தை வந்ததில் இருந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று அரசியல் கட்சி தலைவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.

    இந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ போன்ற முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்தது.

    இளநிலை நீட் தேர்வு விவகாரம் அப்போது விஸ்வரூபம் எடுத்திருந்ததால், தேர்வு நடைபெறுவதற்கு முந்தையநாள் இரவு அந்த தேர்வை தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் ஒத்திவைத்தது.

    அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு வருகிற 11-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத இருக்கின்றனர்.

    இதற்கிடையில் 'டெலிகிராம்' என்ற சமூகவலைதளப் பக்கத்தில் ''PG Neet leaked Materials'' என்ற குழுவில் முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் வேண்டுமா?, ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் வாங்க முன்வந்தால் ஒரு விலை எனவும், அதற்கு பிறகு வாங்கினால் வேறொரு விலை எனவும் தகவல்கள் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

    அதாவது, ஒரு வினாத்தாள் வாங்க ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் எனவும், குழுவில் உள்ளவர்கள் 60 சதவீதம் பணத்தை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இளநிலை 'நீட்' தேர்வு விவகாரத்துக்கு சமீபத்தில்தான் சுப்ரீம் கோர்ட்டு முற்றுப்புள்ளி வைத்து, அடுத்தகட்ட பாதைக்கு வழிகாட்டியது. இந்த சூழலில், தற்போது முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கிடைப்பதாக சமூகவலைதளங்களில் பரவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முதுநிலை நீட் தேர்வை நடத்தும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கணிசமான தொகைக்கு வினாத்தாள் வழங்குகிறோம் என முதுநிலை நீட் தேர்வு ஆர்வலர்களை சில வஞ்சகர்கள் ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசில் புகாரும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வினாத்தாள் வழங்குவதாக சொல்லப்படும் டெலிகிராம் குழுவில் முதுநிலை நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் இருப்பதாக கூறி தவறான பாதைகளில் வழி நடத்த முயற்சி செய்கிறார்கள்.

    முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் இன்னும் தயாரிக்கப்படவில்லை. சமூக வலைதளங்களில் வினாத்தாள் கசிவு என்று பரவும் தகவல்கள் போலியானது. இதுபோன்ற செயல்களில் யாரேனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடுவது, உண்மைகளை சரிபார்க்காமல் வதந்திகளை வெளியிடுவது, பரப்புவதை தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் சரியாக கையாளும்.

    தேர்வுக்கான வினாத்தாளை வழங்குவதாக ஏஜெண்டுகள், மோசடியாளர்கள் செல்போன் அழைப்பு, மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், சமூக வலைதளங்கள் மூலம் அணுகினால் https://exam.natboard.edu.in/communication.php?page=main என்ற இணையதளத்திலோ அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையத்தையும் அணுகலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • அமலாக்கத்துறை கைது செய்யப்பட்ட வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
    • விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சிறையில் இருக்கும் அவரை சிபிஐ மேலும் கைது செய்துள்ளது. அமலாக்கத்துறை கைது செய்யப்பட்ட வழக்கில் டெல்லி விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இந்த ஜாமினை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது உயர் நீதிமன்றம் ஜாமினுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.

    அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். அப்போது உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.

    இந்த நிலையில் விசாரணை நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமினை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது டெல்லி மாநில உயர் நீதிமன்ற நீதிபதி நீனா பன்சால் "நான் குழப்பம் அடைகிறேன். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?. அவரை மீண்டும் கைது செய்ய போகிறீர்களா?" என கேள்வி எழுப்பினார்.

    இன்றைய விசாரணையின்போது அமலாக்கத்துறை சார்பில் நீதிபதி விவேக் குர்னானி ஆஜரானார். அவர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜு இன்று மற்றொரு வழக்கில் ஆஜராக இந்த விசாரணையை நாளைக்கு ஒத்தி வைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி "அமலாக்கத்துறையின் இந்த வழக்கு முற்றிலும் துன்புறுத்தலின் ஒன்றாகும்" எனத் தெரிவித்தார்.

    பின்னர் வழக்கு விசாரணை சில மணி நேரம் ஒத்திவைத்தார்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் நோக்கம் சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மதுபானம், தனியார் லைசென்ஸ் பெற்று கடைகளை நடத்தலாம் என்பதுதான்.

    2022-ம் ஆண்டு ஜூலை மாதம் டெல்லி தலைமை செயலாளர் நரேஷ் குமார் இந்த மதுபானக் கொள்கையில் விதிமீறல் மீறப்பட்டதை கோடிட்டு காட்டினார். மேலும் மதுபான லைசென்ஸ்க்காக மறைமுக பலன்கள் பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

    மதுபானக் கொள்கை உருவாக்கத்தில் மதுபான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவர்களுக்கு 12 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என்பதால் அதில் ஈடுபட்டுள்ள்ளனர். இதற்கு பலனாக தெற்கு குரூப் ஆம் ஆத்மி கட்சிக்கு கிக்பேக்ஸ் என்ற முறையில் 100 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. அதில் ஒரு பகுதியை பொது ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டது என சிபிஐ குற்றம்சாட்டியது. கிக்பேக்ஸ் நடைபெற்றுள்ளதால் பணமோசடி என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

    • 33 பேருக்கு ராஷ்ட்ரிய விஞ்யான் புரஸ்கார் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • வரும் 23ம் தேதி இந்தியா தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை கொண்டாட இருக்கிறது.

    நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரை கடந்தாண்டு வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது இஸ்ரோ.

    இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை உலகமே பாராட்டியது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

    இந்த தினத்தை மத்திய அரசு தேசிய விண்வெளி தினமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் 23ம் தேதி இந்தியா தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை கொண்டாட இருக்கிறது.

    இந்நிலையில், தமிழகத்தின் பி.வீரமுத்துவேல் தலைமையிலான சந்திரயான்-3 திட்டக்குழுவை பாராட்டும் விதமாக இத்திட்டத்தில் பங்காற்றிய விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.

    அதன்படி, இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என 33 பேருக்கு ராஷ்ட்ரிய விஞ்யான் புரஸ்கார் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
    • மல்யுத்த வீரர்களால் ஒரே இரவில் 5 முதல் 6 கிலோ வரை எடையை குறைக்க முடியும்.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை குஸ்மானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

    இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

    இந்நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கத்திற்கு பின்னல் சதி உள்ளது என்று ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பின்னால் சதி இருக்கிறது. எங்களைப் போன்ற மல்யுத்தம், பாக்ஸிங் வீரர்களால் ஒரே இரவில் 5 முதல் 6 கிலோ வரை எடையை குறைக்க முடியும். 100 கிராம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. எடையை குறைப்பது மிகவும் கடினம்தான். ஆனால், பசியையும், தாகத்தையும் எப்படி கட்டுப்படுத்துவது என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

    நானும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொண்டுள்ளேன். இதுபோல ஒன்றை இதற்கு முன்பு நான் பார்த்தது இல்லை. இந்தியா விளையாட்டில் சிறந்த நாடாக உயர்வதை விரும்பாத சிலர் சதி செய்திருக்கின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.

    • வினேஷ் போகத் தகுதி நீக்கம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    • இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் இந்த முடிவுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் இந்திய வீராங்கனை 50 கிலோ எடைப்பிரிவில் விளையாடி வந்தார். நேற்றிரவு அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், உடல் எடை அதிகரித்துள்ளதால் இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    50 கிலோவை விட 100 கிராம் எடை கூட இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக பாரீஸ் ஒலிம்பிக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது அவருக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த நபர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்திய அரசு இந்த முடிவுக்கு எதிராக போராட வேண்டும் என குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

    தகுதி நீக்கத்திற்கு பின்னால் சதி இருப்பதாக முன்னாள் குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு நீதி கேட்டு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் மகார் த்வாரில் நின்றபடி குரல் எழுப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தற்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் பாராளுமன்றத்திற்குள்ளும் எதிரொலித்தது.

    வினேஷ் போகத் காலிறுதியில் 82 முறை தோல்வியடையாத வீராங்கனையை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    • வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம்.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63-வது இடத்தில் உள்ளது.

    இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.

    இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    இந்த நிலையில் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகட்டின் அசாதாரண சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது மற்றும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.

    தகுதி நீக்கம் குறித்த அவரது ஏமாற்றத்தை நாம் அனைவரும் பகிர்ந்து கொண்டாலும், அவர் 1.4 பில்லியன் மக்களின் இதயங்களில் ஒரு சாம்பியனாக இருக்கிறார்.

    வினேஷ், இந்தியப் பெண்களின் உண்மையான சளைக்க முடியாத உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், அவரது காவியமான மன உறுதியும், விளையாட்டு திறனும் இந்தியாவின் வருங்கால உலக சாம்பியன்களை ஊக்குவிக்கிறது.

    எதிர்காலத்தில் வினேஷ் போகட்டிற்கு பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.
    • நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம்.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63-வது இடத்தில் உள்ளது.

    இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.

    இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    இந்த நிலையில் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்,

    வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன்! நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம்.

    இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகளில் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

    அதே சமயம், நீங்கள் வலுவான மனநிலை கொண்டவர் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு.

    வலுவாக திரும்பி வா! நாங்கள் அனைவரும் உங்களுக்காக வேரூன்றி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    • பாரீசில் இருந்து டெல்லிக்கு இன்று காலை வந்திறங்கிய மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • இங்கு எனக்கு இவ்வளவு அன்பு கிடைத்ததது மகிழ்ச்சியளிக்கிறது என்று மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.

    பாரீஸ் ஒலிம்பிக்சில் துப்பாக்கிச்சுடுதலில் பிரிவில் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்றெடுத்த வீராங்கனை மனு பாக்கர் நாடு திரும்பியுள்ளார். ஏர் இந்தியா விமானம் மூலம் பாரீசில் இருந்து டெல்லிக்கு இன்று காலை வந்திறங்கிய மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மனுவின் குடும்பத்தினர் உட்பட 100 கணக்கானோர் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலையில் இருந்தே காத்திருந்த நிலையில் விமானமானது ஒரு மணி நேரம் தாமதமாகி 9.20 மணிக்கு தரையிறங்கியது.

    தொடர்ந்து மனு பாக்கருக்கும் அவருடன் வந்த பயிற்சியாளர் ஜஸ்பால் ராணாவுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மக்களின் வரவேற்பினால் நெகிழ்ந்த மனு பாக்கர், இங்கு எனக்கு இவ்வளவு அன்பு கிடைத்ததது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக பாரீஸ் ஒலிம்பிக்சில் பெண்கள் 10m ஏர் பிரிஸ்டல் துப்பாக்கிச்சூடுதல் ஒற்றையர் போட்டியில் வெண்கலம் வென்ற மனு பாக்கர், 10m பிரிஸ்டல் இரட்டையர் பிரிவில் சரபோஜித் சிங்குடன் சேர்ந்து மற்றொரு வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

    ×