என் மலர்tooltip icon

    டெல்லி

    • எதிர் வரிசையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்களை மூடி தூங்கும் நிலையில் அமர்த்திருந்தார்
    • கிரண் ரிஜிஜுவுக்கு அருகில் அமர்ந்திருந்த பூபேந்திர யாதவ், ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பல பாஜக எம்.பிக்கள் வெடித்துத் சிரிக்கத் தொடங்கினர்

    பாராளுன்றத்தில் நேற்று நடத்த மக்களவைக் கூட்டத்தில் வக்பு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்து மத்திய பாராளுமன்ற மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உரையாற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர் வரிசையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்களை மூடி தூங்கும் நிலையில் அமர்த்திருந்தார். இதனைப் பார்த்த கிரண் ரிஜிஜூ தனது உரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு ராகுல் காந்தி தூங்குவதைச் சுட்டிக்காட்டினார்.

    உடனே, கிரண் ரிஜிஜுவுக்கு அருகில் அமர்ந்திருந்த பூபேந்திர யாதவ், ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பல பாஜக எம்.பிக்கள் வெடித்துத் சிரிக்கத் தொடங்கினர். ராகுல் காந்தி தூங்கும் நிலையில் உள்ள அந்த வீடியோவையும் புகைப்படத்தையும் பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கேலி செய்து வருகின்றன. ராகுல்காந்தி கண்களை மூடியபடி அமர்த்திருந்தாரா அல்லது தூங்கிக்கொண்டிருந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.   

    முன்னதாக நாட்டில் உள்ள பல்வேறு சொத்துக்களுக்கு உரிமை கோரும் வக்பு வாரியத்தின் அதிகாரத்தைகுறைப்பது, வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் இடம்பெறுதல், முஸ்லிம் அல்லாதோர் நிர்வாகிகளாக இடம்பெறுவதல் உள்ளிட்ட 44 திருத்தங்களை வக்பு சட்டத்தில் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த சட்டத்திருத்தத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன

    • உச்சநீதிமன்றத்தில் லாப்டா லேடீஸ் திரைப்படம் திரையிடப்படுகிறது.
    • லாப்டா லேடீஸ் தயாரிப்பாளர், இயக்குநர் திரையிடலில் கலந்து கொள்ள உள்ளனர்.

    உச்சநீதிமன்றத்தில் இன்று லாப்டா லேடீஸ் என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது. இதனை தலைமை நீதிபதிகள், அவர்களது குடும்பத்தார் மற்றும் அலுவலர்கள் கண்டுகளிக்க உள்ளனர். பாலின சமத்துவம் பேசும் இந்த படம் விமர்சன ரீதியிலும், வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

    இந்த படத்தின் விசேஷ திரையிடலின் போது படத்தின் தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான அமீர் கான், இயக்குநர் கிரன் ராவ் ஆகியோரும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளயாகி உள்ளது. இந்திய உச்சநீதிமன்றத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை ஏற்பாடு செய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த படத்தின் திரையிடலுக்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதன்படி ஆகஸ்ட் 9 ஆம் தேதியான இன்று உச்சநீதிமன்றத்தின் நிர்வாக கட்டிட வளாகத்தின் சி பிளாக்கில் உள்ள அரங்கில் லாப்டா லேடீஸ் திரையிடப்பட உள்ளது. இந்த திரையிடலில் தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களின் குடும்பத்தாருடன் கலந்து கொள்ள உள்ளனர். இந்த படம் இன்று மாலை 4.15 முதல் 6.20 மணி வரை திரையிடப்பட உள்ளது. 

    • இந்திய அணி ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது.
    • பஞ்சாப் வீரர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு.

    ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் நேற்று மோதின.

    இதில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.

    இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும், உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்துள்ள பஞ்சாப் வீரர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    இதைதொடர்ந்து, வெண்கலம் வென்ற ஹாக்கி அணி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என இந்திய ஆக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.

    மேலும், அணியின் உதவியாளர்களுக்கு தலா ரூ.7.5 லட்சம் வழங்கப்படும் எனவும் இந்திய ஆக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.

    • வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.
    • வங்கதேசத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதியாக உள்ளது.

    வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதனால் இடைக்கால அரசு அமையும் என வங்கதேச ராணுவ தளபதி தெரிவித்தார். இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இன்று இரவு வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.

    இந்நிலையில், புதிதாக பதவி ஏற்றுள்ள முகமது யூனுஸ்க்கு பிரதமர் மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பேராசிரியர் முகமது யூனுஸ் அவர்களின் புதிய பொறுப்புகளை ஏற்ற அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இந்துக்கள் மற்றும் பிற அனைத்து சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்து, இயல்புநிலைக்கு விரைவில் திரும்பும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான நமது இரு நாட்டு மக்களின் பகிரப்பட்ட அபிலாஷைகளை நிறைவேற்ற வங்கதேசத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதியாக உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது.
    • இதன்மூலம் இந்திய அணி ஒலிம்பிக்கில் 4 வெண்கலம் வென்றுள்ளது.

    புதுடெல்லி:

    ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் இன்று மோதின.

    கடந்த முறை வெண்கலம் வென்ற இந்தியா அந்த பதக்கத்தை தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கியது.

    தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் முதல் பாதியில் 1-1 என சமனிலை வகித்தது. 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் ஒரு கோலும், 30-வது நிமிடத்தில் இந்தியா ஒரு கோலையும் பதிவு செய்தது. ஆட்டததின் 33-வது நிமிடத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றது.

    இறுதியில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், ஒலிம்பிக்கில் ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய ஹாக்கி அணியின் நிலைத்தன்மை, திறமை, ஒற்றுமை இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஹாக்கியில் ஆடவர் அணி பிரகாசமாய் ஒளிர்கிறது. உங்களின் வெற்றியை எதிர்வரும் தலைமுறைகள் கொண்டாடும். ஹாக்கியுடன் இந்தியர்கள் அனைவருக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வீரர்களின் ஆற்றல் மிகுந்த செயல்திறன் விளையாட்டின்மீது புது ஆர்வத்தைத் தூண்டும் என தெரிவித்தார்.

    • ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
    • இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்டுள்ள நிலையில், ஜெய் சங்கரிடம் இங்கிலாந்து மந்திரி பேசியுள்ளார்.

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது எகஸ் பக்கத்தில் இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் லாமி தன்னிடம் பேசியதாகவும், அப்போது வங்காளதேசத்தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை குறித்து பேசியதாகவும், வங்காளதேசம் மற்றும் மேற்கு ஆசியாவின் சூழ்நிலை குறித்து விவாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் நிரந்தரமாக அடைக்கலம் கொடுக்கப்போகும் நாடு எது? என்பதில் சிக்கல் நிலவி வரும் நிலையில் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் பேசியது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

    ஆனால், ஷேக் ஹசீனாவின் அடைக்கலம் குறித்து பேசியதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    வங்காளதேசத்தில் அசாதாரண நிலை நிலவியதால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவசரமாக இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இங்கிலாந்தில் குடியேற அரசியல் அடைக்கலம் கேட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் இங்கிலாந்து குடியேற்ற சட்டப்படி தனிநபர் இங்கிலாந்து சென்று அங்கு அடைக்கலம் கோர முடியாது. இதனால் இங்கிலாந்து இந்த விசயத்தில் இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளது.

    இதற்கிடையே இந்தியா நிரந்தரமாக அடைக்கலம் வழங்க தயாராக இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் இருநாட்டு அதிகாரிகள் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கிடையே இங்கிலாந்தில் அடைக்கலம் திட்டத்தை ஷேக் ஹசீனாவின் மகன் மறுத்துள்ளார்.

    ஷேக் ஹசீனா வங்கதேச பிரதமராக 15 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் தொடங்கிய நிலையில், பின்னர் அவருக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதனால் கடந்த திங்கட்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு வந்தார். அங்கிருந்து ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    ஷேக் ஹசீனாவுடன் இந்தியா வந்தவர்கள் வேறு இடத்திற்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஷேக் ஹசீனாவின் அடுத்த நகர்வு என்ன? என்ற கேள்விக்கு இந்திய வெளியுறவுத்துறை, இந்தியாவுக்கு அதுகுறித்த எந்த அப்டேட்டும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

    • சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மேலும், டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

    இதற்கிடையே, அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், சி.பி.ஐ. வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார்.

    இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் கெஜ்ரிவால் இன்று டெல்லி கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, அவரின் நீதிமன்ற காவலை வரும் 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

    • வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்த இன்று மிகவும் சோகமான நாள்.
    • வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மனித உரிமைக்கு எதிரானது.

    இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்ட காரணங்களுக்காக பயன்படுத்தபட்டு வருகின்றது.

    இந்த வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதுள்ள வக்பு வாரிய சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.

    இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குப்படுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவே இதற்கு கடும் எதிர்ப்புக்கள் எழுந்தன.

    இருப்பினும் பாராளுமன்ற கூடியதும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். அதன் மீது காங்கிரஸ் எம்.பி.வேணுகோபால் பேசினார். அப்போது சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்த மசோதா தாக்கல் செய்த பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

    இந்நிலையில், இதுதொடர்பாக திமுக எம்.பி., கனிமொழி கூறியதாவது:-

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்த இன்று மிகவும் சோகமான நாள். மத சுதந்திரத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தலையிடுகிறது. இந்த மசோதா மனித உரிமைக்கு எதிரானது. அரசியல் அமைப்பு மட்டுமின்றி கூட்டாட்சி முறைக்கும் இது எதிரானது. நாட்டு மக்கள் இடையே பிரிவை ஏற்படுத்தும் முயற்சி இதுவாகும். குறிப்பிட்ட மதம், சமுதாயத்தினரை குறிவைத்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள், சிறுபான்மையினருக்கு முற்றிலும் எதிரான மசோதா. சிறுபான்மை மக்களை குறிவைத்து வக்பு வாரிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய அரசு மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தது.
    • இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    புதுடெல்லி:

    மத்திய அரசு பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவுக்கு பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்துள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின்தெலுங்கு தேசம் கட்சி ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.

    இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றுப் பேசினர்.

    இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், கன்னோஜ் தொகுதி எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் மக்களவையில் இன்று பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், உங்கள் உரிமைகள் மற்றும் எங்கள் உரிமைகள் குறைக்கப்படுகின்றன. நீங்கள் ஜனநாயகத்தின் நீதிபதி என நான் சொல்லி இருந்தேன். உங்களின் சில உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், உங்களுக்காக நாங்கள் போராட வேண்டும் என கேள்விப்பட்டேன் என தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்டுப் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, இது தலைவரை அவமதிக்கும் செயலாகும். சபாநாயகரின் உரிமை எதிர்க்கட்சிகளுக்கு சொந்தமானது அல்ல. முழு சபைக்கும் சொந்தமானது. இதுபோல் இனிமேல் பேசாதீர்கள். நீங்கள் சபாநாயகரின் உரிமைகளைப் பாதுகாப்பவர் அல்ல என காட்டமாக பதிலடி கொடுத்தார்.

    இதைத் தொடர்ந்து அகிலேஷ் யாதவிடம் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, நீங்களும், சபையின் மற்ற உறுப்பினர்களும் தலைவர் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது. இது எனது எதிர்பார்ப்பு. சபாநாயகர் நாற்காலி குறித்து தனிப்பட்ட கருத்துக்கள் எதுவும் கூறக்கூடாது என தெரிவித்தார்.

    • மசோதா வர வேண்டும், வெளிப்படைத்தன்மை கொண்டு வர வேண்டும்- ஜேடியு தலைவர்.
    • அரசிற்கு ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும் வேண்டிய தேவை உள்ளது- தெலுங்கு தேசம் எம்.பி.

    மத்திய அரசு பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவுக்கு பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்துள்ள முக்கியமான இரு கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் (நிதிஷ் குமார்), தெலுங்குதேசம் கட்சி (சந்திரபாபு நாயுடு) ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.

    வக்பு வாரிய செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருவதுதான் இதன் நோக்கம். மசூதிகளை நடத்துவதில் தலையீட முயற்சி இல்லை எனத் தெரிவித்துள்ளன.

    மக்களவையில் ஆளுங்கட்சியால் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ரஞ்சன் சிங், இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என உறுதியளித்தார்.

    மேலும், "வக்பு வாரிய சட்டத் திருத்தம் முஸ்லீம்களுக்கு எதிரானது என பல உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இது எப்படி முஸ்லிம்களுக்கு எதிரானது?. இங்கே அயோத்தியின் உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. கோவிலையும் ஸ்தாபனத்தையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாதா?. இது மசூதிகளில் தலையிடும் முயற்சி அல்ல.

    வக்ஃப் வாரியம் எப்படி உருவாக்கப்பட்டது? அது ஒரு சட்டத்தின் மூலம். சட்டத்தின் மூலம் நிறுவப்படும் எந்த நிறுவனமும் எதேச்சதிகாரமாகிறது. வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வர அரசுக்கு உரிமை உள்ளது. இதில் வகுப்புவாத பிளவு இல்லை. எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றனர். மசோதா வர வேண்டும், வெளிப்படைத்தன்மை கொண்டு வர வேண்டும்" என்றார்.

    தெலுங்குதேசம் கட்சி எம்.பி. ஜி.எம். ஹரிஷ் பாலயோகி "நன்கொடையாளர்களின் நோக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். நோக்கமும் அதிகாரமும் தவறாகப் பயன்படுத்தப்படும்போது, சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதும், வெளிப்படைத்தன்மையை அறிமுகப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

    அரசிற்கு ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும் வேண்டிய தேவை உள்ளது. அதற்காக மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. நாங்கள் அதை ஆதரிக்கிறோம். நாட்டின் ஏழை முஸ்லிம்கள் மற்றும் பெண்களுக்கு உதவும் என்றும், வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

    விரிவான ஆலோசனைகள் தேவைப்பட்டால், அதைத் தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை" என்றார்.

    வக்பு வாரியம்

    நீண்ட காலத்துக்கு முன்பு முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துக்களை இறைவனுக்கு தானமாக வழங்கினர். இத்தகைய சொத்துக்கள் 'வக்பு சொத்துக்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

    இந்த சொத்துக்களை பராமரிக்க 1954-ம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாநில அரசுகளால் மாநில வக்பு வாரியங்கள் நிறுவப்பட்டன. இந்த அமைப்புகள் வக்பு சொத்துக்களை நிர்வகித்து வருகின்றன.

    நாடு முழுவதும் வக்பு வாரியத்துக்கு 9.40 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. அதில் 8 லட்சத்து 72 ஆயி ரத்து 292 சொத்துகள் இருக்கின்றன. அந்த சொத்துக்களை வக்பு வாரியம் பராமரித்து வருகிறது. இவற்றின் மதிப்பு பல லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    வக்பு வாரியத்தின் கீழ் மாவட்ட வக்பு குழுக்கள் செயல்படுகின்றன. குறிப்பாக வக்பு சொத்துக்கள் சுமார் 200 பேரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த வக்பு வாரியங்களை கண்காணிக்க, வக்பு சட்டத்தின்படி, மத்திய வக்பு கவுன்சில் 1964-ல் தொடங்கப்பட்டது.

    மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின்கீழ் இது இயங்குகிறது. 1954-ல் இயற்றப்பட்ட வக்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு, கடந்த 1995-ம் ஆண்டு புதிய வக்பு சட்டம் இயற்றப்பட்டது.

    இந்நிலையில், வக்பு சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் வல்லுனர்கள், பெண்கள், ஷியா மற்றும் போராஸ் உள்ளிட்ட சில பிரிவினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதன் அடிப்படையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. அதன்படி, வக்பு சட்டத்தில் 44 திருத்தங்களை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

    மத்திய வக்பு கவுன்சில், மாநில வக்பு வாரியங்களில் தலா 2 பெண் உறுப்பினர்கள் இடம்பெறுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது. மேலும் மத்திய வக்பு கவுன்சிலில் ஒரு மத்திய மந்திரி, 3 எம்.பி.க்கள், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த 3 பிரதிநிதிகள், 3 முஸ்லிம் சட்ட நிபுணர்கள், 2 முன்னாள் நீதிபதிகள் (ஐகோர்ட்டு அல்லது சுப்ரீம் கோர்ட்டு), தேசிய அளவில் புகழ்பெற்றவர்கள், மூத்த மத்தியஅரசு ஊழியர்கள் 4 பேர் இடம்பெறுவர்.

    இதில் 2 பேர் கண்டிப்பாக பெண்களாக இருக்க வேண்டும் போன்ற ஷரத்துகள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • எதிர்க்கட்சியினர் நடவடிக்கைக்கு மாநிலங்களவை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்தார்.
    • இதையடுத்து, மாநிலங்களவையில் இருந்து ஜெகதீப் தன்கர் வெளியேறினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மாநிலங்களவை இன்று காலை கூடியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து, இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதி தரவில்லை.

    மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன் எழுந்து இன்னும் சில பிரச்சனைகளை எழுப்பினார். இதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

    அப்போது டெரிக் ஓ பிரையனை எச்சரித்த ஜெகதீப் தன்கர், நீங்கள் அவைத்தலைவரை நோக்கி சத்தம் போடுகிறீர்கள். அவையில் உங்கள் நடவடிக்கை மோசமாக உள்ளது. உங்கள் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். அடுத்த முறை வாசல் கதவை காட்டுகிறேன் என தெரிவித்தார்.

    இதையடுத்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

    இந்நிலையில், எதிர்க்கட்சியினர் நடவடிக்கைக்கு கடும் அதிருப்தி தெரிவித்த ஜக்தீப் தங்கர், சில நேரங்களில் நான் இங்கு அமர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அவையை விட்டு கனத்த மனதுடன் வெளியேறுகிறேன் எனக்கூறி அவையில் இருந்து வெளியேறினார்.

    இதைத்தொடர்ந்து, அவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் மாநிலங்களவையை நடத்தினார்.

    • நாடு முழுவதும் வக்பு வாரியத்துக்கு 9.40 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது.
    • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    நீண்ட காலத்துக்கு முன்பு முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துக்களை இறைவனுக்கு தானமாக வழங்கினர். இத்தகைய சொத்துக்கள் 'வக்பு சொத்துக்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

    இந்த சொத்துக்களை பராமரிக்க 1954-ம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாநில அரசுகளால் மாநில வக்பு வாரியங்கள் நிறுவப்பட்டன. இந்த அமைப்புகள் வக்பு சொத்துக்களை நிர்வகித்து வருகின்றன.

    நாடு முழுவதும் வக்பு வாரியத்துக்கு 9.40 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. அதில் 8 லட்சத்து 72 ஆயி ரத்து 292 சொத்துகள் இருக்கின்றன. அந்த சொத்துக்களை வக்பு வாரியம் பராமரித்து வருகிறது. இவற்றின் மதிப்பு பல லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    வக்பு வாரியத்தின் கீழ் மாவட்ட வக்பு குழுக்கள் செயல்படுகின்றன. குறிப்பாக வக்பு சொத்துக்கள் சுமார் 200 பேரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த வக்பு வாரியங்களை கண்காணிக்க, வக்பு சட்டத்தின்படி, மத்திய வக்பு கவுன்சில் 1964-ல் தொடங்கப்பட்டது.

    மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின்கீழ் இது இயங்குகிறது. 1954-ல் இயற்றப்பட்ட வக்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு, கடந்த 1995-ம் ஆண்டு புதிய வக்பு சட்டம் இயற்றப்பட்டது.

    இந்நிலையில், வக்பு சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் வல்லுனர்கள், பெண்கள், ஷியா மற்றும் போராஸ் உள்ளிட்ட சில பிரிவினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதன் அடிப்படையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. அதன்படி, வக்பு சட்டத்தில் 44 திருத்தங்களை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

    இதையடுத்து அந்த மசோதாவின் நகல்கள் பாராளுமன்ற எம்.பி.க்களுக்கு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவில் என்னென்ன விவரங்கள் இடம்பெற்றுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

    நாட்டில் உள்ள பல்வேறு சொத்துக்களுக்கு உரிமை கோரும் வக்பு வாரியத்தின் அதிகாரத்தைகுறைப்பது உள்ளிட்ட சில அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சட்டத்திருத்த மசோதாவில், வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் இடம்பெறுதல், முஸ்லிம் அல்லாதோர் நிர்வாகிகளாக இடம்பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    மத்திய வக்பு கவுன்சில், மாநில வக்பு வாரியங்களில் தலா 2 பெண் உறுப்பினர்கள் இடம்பெறுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது. மேலும் மத்திய வக்பு கவுன்சிலில் ஒரு மத்திய மந்திரி, 3 எம்.பி.க்கள், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த 3 பிரதிநிதிகள், 3 முஸ்லிம் சட்ட நிபுணர்கள், 2 முன்னாள் நீதிபதிகள் (ஐகோர்ட்டு அல்லது சுப்ரீம் கோர்ட்டு), தேசிய அளவில் புகழ்பெற்றவர்கள், மூத்த மத்தியஅரசு ஊழியர்கள் 4 பேர் இடம்பெறுவர்.

    இதில் 2 பேர் கண்டிப்பாக பெண்களாக இருக்க வேண்டும் போன்ற ஷரத்துகள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    மேலும், புதிய மசோதாவில் வக்பு சொத்துக்களை சர்வே செய்யும் அதிகாரம் மாவட்ட கலெக்டருக்கோ அல்லது அவருக்குக் கீழ் இருக்கும் துணை கலெக்ட ருக்கோ வழங்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    அதுமட்டுமின்றி போராஸ், அகாகனிஸ் ஆகிய பிரிவுகளுக்கென தனி சொத்து வாரியம் அக்ப் உருவாக்கப்பட்டு அதில் ஷியாஸ், சன்னி, போராஸ், அகாகனிஸ் மற்றும் பிற இதர பிற்படுத்த முஸ்லிம் சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் வக்பு என்பதற்கான தெளிவான விளக்கம் மசோதாவில் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுபவராகவும், வக்பு சொத்துக்கு உரிமையாளராகவும் இருக்கும் எந்த ஒரு நபரும் வக்பு உறுப்பினர் ஆவார் என்று விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதுமட்டுமின்றி வக்பு வாரிய சொத்துக்கள் பதிவை மத்திய வலைதளம் மற்றும் தரவு தளம் மூலம் முறைப்படுத்துவதே இந்த சட்டத்திருத்த மசோதாவின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டது.

    இதற்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    ஆனால் அதை மத்திய அரசு ஏற்கவில்லை. இதையடுத்து பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் சபாநாயகரிடம் இன்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    காங்கிரஸ் எம்.பி.க்கள் வேணுகோபால், ஹிபி ஈடன் ஆகியோர் கொடுத்து உள்ள நோட்டீசில், "சொத்து உரிமை தொடர்பான சட்டத்தை திருத்துவது சட்ட விரோதம்" என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் சட்டப்பிரிவு 25-ன்படி அடிப்படை உரிமையை இது பறிப்பதாக இருப்பதாகவும் காங்கிரஸ் எம்.பி.க்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

    மேலும் இந்த சட்டத்திருத்த மசோதா மூலம் மாநில அரசு உரிமை பறிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

    சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "காவி கட்சி ரியல் எஸ்டேட் கம்பெனி போல செயல்பட தொடங்கி விட்டது. பா.ஜனதா என்பதை பாரதிய ஜமீன் கட்சி என்று சொல்லும் அளவுக்கு அது மாறி விட்டது. இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் சட்டத்திருத்த மசோதாவை தொடக்கத்திலேயே நாங்கள் எதிர்க்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நிலையில் இன்று இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சி தலைவர்களுடன் ஆேலாசனையில் ஈடுபட்டார். அப்போது வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை தொடக்கத்தி லேயே எதிர்க்க முடிவு செய்யப்பட்டது.

    எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்ய மத்திய அரசு உறுதியாக இருந்தது. பாராளுமன்றம் கூடியதும் இந்த சட்டத்திருத்த மசோதாவை சிறுபான்மை விவகாரத்துறை மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்வார் என்று சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.

    அதன்படி பாராளுமன்ற கூடியதும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். அதன் மீது காங்கிரஸ் எம்.பி.வேணுகோபால் பேசினார். அப்போது சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    ×