என் மலர்
நீங்கள் தேடியது "மக்களைவை"
- எதிர் வரிசையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்களை மூடி தூங்கும் நிலையில் அமர்த்திருந்தார்
- கிரண் ரிஜிஜுவுக்கு அருகில் அமர்ந்திருந்த பூபேந்திர யாதவ், ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பல பாஜக எம்.பிக்கள் வெடித்துத் சிரிக்கத் தொடங்கினர்
பாராளுன்றத்தில் நேற்று நடத்த மக்களவைக் கூட்டத்தில் வக்பு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்து மத்திய பாராளுமன்ற மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர் வரிசையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்களை மூடி தூங்கும் நிலையில் அமர்த்திருந்தார். இதனைப் பார்த்த கிரண் ரிஜிஜூ தனது உரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு ராகுல் காந்தி தூங்குவதைச் சுட்டிக்காட்டினார்.
உடனே, கிரண் ரிஜிஜுவுக்கு அருகில் அமர்ந்திருந்த பூபேந்திர யாதவ், ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பல பாஜக எம்.பிக்கள் வெடித்துத் சிரிக்கத் தொடங்கினர். ராகுல் காந்தி தூங்கும் நிலையில் உள்ள அந்த வீடியோவையும் புகைப்படத்தையும் பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கேலி செய்து வருகின்றன. ராகுல்காந்தி கண்களை மூடியபடி அமர்த்திருந்தாரா அல்லது தூங்கிக்கொண்டிருந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.
முன்னதாக நாட்டில் உள்ள பல்வேறு சொத்துக்களுக்கு உரிமை கோரும் வக்பு வாரியத்தின் அதிகாரத்தைகுறைப்பது, வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் இடம்பெறுதல், முஸ்லிம் அல்லாதோர் நிர்வாகிகளாக இடம்பெறுவதல் உள்ளிட்ட 44 திருத்தங்களை வக்பு சட்டத்தில் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த சட்டத்திருத்தத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன
- மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன
- திட்டத்தை அமல்படுத்த குறைந்த பட்சம் ஆறு மசோதாக்களை திருத்தம் செய்ய வேண்டும்.
இந்தியாவில் மக்களவை தேர்தலுடன் அனைத்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தி முடித்திட மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை முன்மொழிந்தது.
மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்த குழு ஒரு நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான மசோதாவை இந்த கூட்டத் தொடரிலேயே பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
அதன்படி வரும் டிசம்பர் 16 ஆம் தேதி [திங்கள்கிழமை] மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இந்த மசோதாவை மத்திய மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் அதனை தாக்கல் செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த குறைந்த பட்சம் ஆறு மசோதாக்களை திருத்தம் செய்ய வேண்டும். இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரு அவைகளிலும் கூட்டணி கட்சிகளுடன் மெஜாரிட்டி உள்ளது. ஆனால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு உள்ளதா? என்பது கேள்விக்குறியானது.
245 இடங்களை கொண்ட மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 112 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு 85 இடங்கள் உள்ளன. அரசுக்கு 164 வாக்குகள் தேவை.
மக்களவையில் 545 இடங்களில் 292 இடங்கள் உள்ளன. மூன்றில் இரண்டு பங்கிற்கு 364 வாக்குகள் தேவை. ஆனால் வாக்கு நடத்தப்படும் வீதம் மாறுபடும். அப்போதைய நிலையில் எவ்வளவு உறுப்பினர்கள் அவைக்குள் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கைதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.






