என் மலர்tooltip icon

    டெல்லி

    • தெலுங்கானா மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த கேஷவ் ராவ் பதவியை ராஜினாமா செய்தார்.
    • செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தவர் கேஷவ ராவ். இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதனைத்தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அபிஷேக் சிங்வியை வேட்பாளராக நியமித்துள்ளது. இவர் ஏற்கனவே இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தலில் போட்டியிட்டார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் மாறி வாக்களித்ததால் தோல்வியை தழுவினார்.

    கேஷவ ராவ் ஆந்திர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அபிஷேக் சிங்வி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுப்பதற்கு போதுமான எம்.எல்.ஏ.-க்கள் எண்ணிக்கை காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது.

    • பெண் டாக்டர் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது.
    • கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என்றது.

    புதுடெல்லி:

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.

    கைதான சஞ்சய்ராயுடன் அந்த மருத்துவமனையில் உள்ள மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே, பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனக்கூறிய கொல்கத்தா ஐகோர்ட், மாணவி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, கொல்கத்தா பெண் டாக்டர் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில், கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சி, மருத்துவமனை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின்மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

    மருத்துவ கல்லூரி போன்ற இடங்களில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை எப்படி வெளியில் படிக்க வைப்பார்கள்?

    நிர்பயா வழக்குக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட கடும் சட்டங்கள்கூட இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதில் தோல்வி அடைந்தது ஏன்?

    பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சம்பவங்கள் குறித்து ஒவ்வொரு கட்சியும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தீவிர விவாதங்களை நடத்தி உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அத்துடன் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    • மோர்னே மோர்கல் பவுலிங் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • லக்னோ அணி வழிகாட்டியாக கம்பீர் இருந்தபோது மோர்கல் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார்.

    கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளர், பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளர் போன்றவர்களையும் தேர்வு செய்யாமல் இருந்தது.

    இதற்கிடையே, பவுலிங் பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மோர்னே மோர்கலை நியமிக்குமாறு கம்பீர் கேட்டிருந்தார். அதற்கு பி.சி.சி.ஐ. எந்த பதிலும் கூறாமல் இருந்தது.

    இந்நிலையில், இந்திய அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கல் செயல்படுவார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவலை பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

    கவுதம் கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் இருவரும் நீண்ட நாட்களாக நல்ல உறவில் இருந்து வருகின்றனர். கம்பீர் ஒரு வீரராக கொல்கத்தா அணிக்கு விளையாடிய போது மோர்கல் விளையாடியுள்ளார்.

    லக்னோ அணியின் வழிகாட்டியாக கம்பீர் இருந்தபோது மோர்கல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அடுத்த டி20 உலகக் கோப்பை 2026-ம் ஆண்டில் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது.
    • டி20 உலகக் கோப்பையில் விளையாட 12 அணிகள் தற்போது வாய்ப்பை பெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    அடுத்த டி20 உலகக் கோப்பை 2026-ம் ஆண்டில் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இதிலும் 20 அணிகள் பங்கேற்க உள்ளன.

    இதில் விளையாடும் அணிகள் 4 குரூப்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றில் அணிகள் இரு குரூப்பாக பிரிக்கப்படும். இதில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இரு அரையிறுதி போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.

    டி20 உலகக் கோப்பையில் விளையாட 12 அணிகள் தற்போது வரை வாய்ப்பை பெற்றுள்ளது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையை மையமாக வைத்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான தோதா கணேஷ் என்பவரை கென்ய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தோதா கணேஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    • நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.
    • டெல்லியில் பிரதமர் மோடி கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

    இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. அதுபோல முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் சுதந்திரத்தினத்துக்கு முன்பு அல்லது அடுத்த நாள் டெல்லியில் குண்டு வெடிப்பு நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதை உளவுத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

    காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் பேசியதை இடைமறித்து கேட்ட உளவுத் துறையினர் இதுபற்றி மத்திய உள்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். டெல்லி அல்லது பஞ்சாபில் நாசவேலைக்கு பயங்கரவாதிகள் முயற்சி செய்யக்கூடும் என்று உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    • அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று பிற்பகல் இறுதி வழக்காக விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
    • செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை ஆகஸ்ட் 20-ந்தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.

    புதுடெல்லி:

    முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

    செந்தில்பாலாஜி மீதான 3 வழக்குகள் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக சுப்ரீம் கோர்ட் கூறிய நிலையில் வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று பிற்பகல் இறுதி வழக்காக விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமின் மனு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை ஆகஸ்ட் 20-ந்தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.

    ஆகஸ்ட் 20-ந்தேதி முதல் வழக்காக பட்டியலிடப்படும் என்றும் தாங்கள் எழுப்பிய கேள்விக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், ஜாமின் வழக்கை ஆகஸ்ட் 20-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

    • கெஜ்ரிவால் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
    • வழக்கு விசாரணை வருகிற 23-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. கைது செய்ததற்கு எதிராக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அமலாக்கத் துறையால் கைது நடவடிக்கையால் ஜாமின் கிடைத்த நிலையில் திகார் சிறையில் உள்ள அவர் சி.பி.ஐ. கைதுக்கு எதிராக இந்த வழக்கை தொடுத்துள்ளார்.

    கெஜ்ரிவால் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. இந்த வழக்கு விசாரணை வருகிற 23-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    • 3 வழக்கையும் அமலாக்கத்துறை விசாரிக்கிறதா அல்லது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை மட்டும் விசாரிக்கிறதா என தெளிவு தேவை.
    • செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகள் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் சரமாரி கேள்விகள் எழுப்பியதோடு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

    3 வழக்கையும் அமலாக்கத்துறை விசாரிக்கிறதா அல்லது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை மட்டும் விசாரிக்கிறதா என தெளிவு தேவை.

    செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகள் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக சுப்ரீம் கோர்ட் கூறிய நிலையில் வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று இன்று பிற்பகல் இறுதி வழக்காக விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. 

    செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை இன்று இறுதி வழக்காக மீண்டும் விசாரிக்கப்படும்.

    • ஒத்திகை நிகழ்ச்சிகள் காரணமாக செங்கோட்டையைச் சுற்றி போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது
    • செங்கோட்டையையொட்டி மற்றும் உட்புற பகுதியில் துணை ராணுவப்படையினர் அடுக்கடுக்காக நிறுத்தப்பட உள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    இதில் இந்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழா பிரதான விழா ஆகும். இந்த விழாவையொட்டி பிரதமர் மோடி நாளை காலை 7.30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இது அவரது 11-வது சுதந்திர தின உரை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா, 'விக்சித் பாரத்' என்ற சிந்தனையோடு கொண்டாடப்படுகிறது. விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதற்கிடையே சுதந்திர தின விழா முழு ஒத்திகை நிகழ்ச்சி டெல்லி செங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. நாளை சுதந்திரதின விழா எப்படி நடைபெறுமோ அதைப்போல நேற்று விழா நடத்திப் பார்க்கப்பட்டது. இதில் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த முப்படை வீரர்களும் பங்கேற்றனர். மேலும் துணை ராணுவப்படையினர் மற்றும் என்.சி.சி. உள்ளிட்ட மாணவர் படையும் பங்கேற்றது.

    நிகழ்ச்சியையொட்டி தேசியக்கொடி ஏற்றி வணக்கம் தெரிவித்தனர். அப்போது ராணுவ ஹெலிகாப்டர் மேலே பறந்து பூக்களை தூவப்பட்டது.

    இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் ஒருகட்டமாக பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பான ஒத்திகையும் நடத்தப்பட்டது.

    ஒத்திகை நிகழ்ச்சிகள் காரணமாக செங்கோட்டையைச் சுற்றி போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது. டெல்லி ஒத்திகை போல நாடு முழுவதும் முக்கிய அமைப்புகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஏற்கனவே பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு இருப்பதால் பாதுகாப்பில் பாதுகாப்பு படையினர் மிகுந்த அக்கறை செலுத்தியுள்ளனர். உளவுப்பிரிவு போலீசாரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    பாதுகாப்பு பணிக்காக 3,500 போக்குவரத்து போலீசார், 10 ஆயிரம் டெல்லி போலீசார் ஆகியோர் செங்கோட்டையின் வெளிப்புறப் பகுதிகளில் நிறுத்தப்படுகிறார்கள்.

    செங்கோட்டையையொட்டி மற்றும் உட்புற பகுதியில் துணை ராணுவப்படையினர் அடுக்கடுக்காக நிறுத்தப்பட உள்ளனர். செங்கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகள் பாதுகாப்பு படையினரின் வசம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் நிறுவப்பட்டு உள்ளன. செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் 700 இடங்களில் பொருத்தப்பட்டு உள்ளது.

    டெல்லி செங்கோட்டை பகுதி மட்டுமின்றி விமான நிலையம், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    சுதந்திர தினவிழாவில் பல்வேறு தரப்பினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக தெரிவு செய்யப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள், அங்கன்வாடி ஊழியர்கள், 'ஒன் ஸ்டாப்' மைய ஊழியர்கள், குழந்தைகள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தன் மீது போக்சோ பதியப்பட்டதை எதிர்த்து பெண் ஒருவர் மனுத்தாக்கல் செய்தார்.
    • ஆண், பெண் வேறுபாடின்றி போக்சோ சட்டம் பதியலாம்.

    இந்தியாவில் பெண்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறத்தல்களில் ஈடுபடும் பட்சத்தில் பாலின பாகுபாடின்றி பெண்கள் மீதும் இந்த சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முயும் என்று நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

    "குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டம் தான் போக்சோ. இதில் சம்பந்தப்பட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் ஆண் அல்லது பெண் மீது பாலின பாகுபாடின்றி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இந்த சட்டத்தின் மூன்றாவது பிரிவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் "நபர்" என்ற வார்த்தை ஆணை மட்டும் தான் குறிக்கும் என்று ஏன் புரிந்து கொள்ளப்படுகிறது?"

     


    "போக்சோ சட்டத்தின் மூன்று மற்றும் ஐந்தாவது பிரிவுகளில் குறிப்பிடப்பட்டு இருப்பவை கொண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவது பாலின வேறுபாடு இன்றி குற்றம் என்பதையே குறிக்கிறது."

    "பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் போக்சோ சட்டம் இயற்றப்பட்டது என்பதை கவனத்தில் கொண்டு- ஒரு குழந்தை மீது ஆண் அல்லது பெண் குற்றம் செய்தாலும் - நீதிமன்றம் சட்டமியற்றும் நோக்கத்தையும், சட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் எந்த விதியையும் விலக்கக்கூடாது."

    "இந்த சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பாலியல் துன்புறுத்தல், குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் வகையில் ஏதேனும் பொருள் அல்லது உடல் உறுப்பை உள்நுழைத்தல் ஆகியவற்றை குறிக்கிறது. அந்த வகையில், இது ஆணுறுப்பை மட்டுமே குறிக்கும் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இருக்காது," என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அனுப் ஜெய்ராம் பம்பானி தெரிவித்தார்.

    கடந்த வாரம் விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில், பெண் ஒருவர் தன் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கை எதிர்த்து வாதிட்டார். இந்த வழக்கு விசாரணையின் போது தான், நீதிபதி இந்த கருத்தை தெரிவித்து போக்சோ வழக்கை எதிர்த்து மனுத்தாக்கல் செய்த பெண் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், போக்சோ வழக்கை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவையும் ரத்து செய்தார்.

    • அத்துடன் 1000 கி.மீட்டர் தூரம் வரை பறந்து இலக்கை தாக்கக்கூடியது.
    • மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பறக்கும். மொத்தம் 120 கிலோ எடை கொண்டது.

    நவீன காலத்தில் வீரர்கள் நேருக்குநேர் மோதிக்கொள்வது குறைந்து வருகிறது. உக்ரைன்-ரஷியா, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் டிரோன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

    ஆளில்லா விமானமான இதை மிக நீண்ட தூரத்தில் இருந்து ரிமோட் மூலம் இயக்கலாம். எதிரியின் ஒரு இடத்தை இலக்காக வைத்து வெடிப்பொருட்களுடன் டிரோன் அந்த இடத்தை தாக்கும். எதிரி நாடுகள் சுதாரிப்பதற்குள் இந்த தாக்குதலை நடத்தி விடலாம். உக்ரைன்- ரஷியா சண்டையில் இதுதான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இந்தியா உள்நாட்டு என்ஜின் உடன் வெடிபொருட்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை படைத்த நாசக்கார டிரோனை தயாரிக்க உள்ளது. இந்த டிரோனின் வடிவத்தை தேசிய விண்வெளி ஆய்வுக்கூடம் வெளியிட்டுள்ளது. 78-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இது இந்திய பாதுகாப்பின் மிகப்பெரிய மைல் கல்லாக இருக்கும் என்றால் மிகையாகாது.

    இது 2.8 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். மொத்தம் 120 கிலோ எடை கொண்டது. 25 கிலோ வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அத்துடன் 1000 கி.மீட்டர் தூரம் வரை பறந்து இலக்கை தாக்கக்கூடியது. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

    இந்த டிரோனால் 9 மணி நேரம் தொடர்ந்து பறக்க முடியும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து வட்டமடித்து, இலக்கு எது என்பதை கண்டறிந்தபின், ரிமோட் கன்ட்ரோல் மூலம் அந்த இடத்தில் டிரோன் மோதவிட்டு வெடிக்கச் செய்யலாம்.

    • மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
    • சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில முதல் மந்திரிகள் தேசியக்கொடி ஏற்றுவார்கள்.

    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

    சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில முதல் மந்திரி தேசியக் கொடியை ஏற்றுவது மரபு. கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் சிறையில் இருந்து வெளியே வந்து கொடியேற்றுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

    இதுதொடர்பாக பொது நிர்வாகத்துறை மந்திரி கோபால் ராய் கூடுதல் தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல் மந்திரி கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசினேன். சுதந்திர தின விழாவில் மந்திரி அதிஷி தேசியக் கொடியேற்றுவார் என கெஜ்ரிவால் தெரிவித்தார். சத்ரசால் மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய கோருகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதை ஏற்கமறுத்த பொது நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சுதந்திர தின விழாவில் அதிஷி கொடி ஏற்றமுடியாது என தெரிவித்தார்.

    இந்நிலையில், சத்ரசால் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் டெல்லி மந்திரி கைலாஷ் கெலாட் தேசியக் கொடி ஏற்றுவார் என கவர்னர் மாளிகை பரிந்துரை செய்துள்ளது.

    சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில முதல் மந்திரிகள் தேசியக்கொடி ஏற்றுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×