என் மலர்
பீகார்
- பீதியில், கீழே இறங்க படிக்கட்டுகளை நோக்கி பிரியா ஓடினாள்.
- சிறுமி மீது ஆக்ரோஷமாக பாய்ந்து அவளை கடுமையாகத் தள்ளியது
பீகாரில் வீட்டின் மாடியில் படித்துக்கொண்டிருந்த 10 ஆம் வகுப்பு மாணவி குரங்குகளால் கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பீகாரின் வைசாலி மாவட்டத்தில் பகவான்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகர் கிராமத்தை சேர்த்தவர் 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி பிரியா.
குடும்பத்தினர் கூற்றுப்படி, குளிரான கிளைமேட்டால், நேற்று [சனிக்கிழமை] பிற்பகல், சிறுமி பிரியா வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தாள். அப்போது குரங்கு கூட்டம் ஒன்று அங்கு வந்துள்ளது. பீதியில், கீழே இறங்க படிக்கட்டுகளை நோக்கி பிரியா ஓடினாள். ஆனால் சிறுமியை விடாமல் குரங்குகள் துரத்தியுள்ளன.
அப்போது ஒரு குரங்கு சிறுமி மீது ஆக்ரோஷமாக பாய்ந்து அவளை கடுமையாகத் தள்ளியது. இதன் காரணமாக சிறுமி நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்தாள். சிறுமியின் தலையின் பின்புறம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
மயக்கமடைந்த சிறுமி பிரியாவை, குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி சிறுமி பிரியா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கிராமத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வெகு காலமாக அப்பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகம் உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
- டெல்லியில் புதிய காங்கிரஸ் கட்சி அலுவலகமான இந்திரா பவன் திறப்பு விழா நடைபெற்றது.
- அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது
பீகாரை சேர்ந்த ஒருவர் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியால் தனக்கு 250 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தின் சோனுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ் சவுத்ரி. கடந்த வாரம், 'இந்திய அரசுக்கு எதிராக சண்டையிட வேண்டும்' என்ற ராகுல் காந்தி சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் கையில் இருந்த பக்கெட்டை கீழே போட்டுவிட்டேன்.
'அதில் இருந்த 5 லிட்டர் பால் கொட்டியதில் எனக்கு 250 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இதற்கு ராகுல் காந்தியே காரணம். நாட்டின் இறையாண்மைக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியது எனக்கு அதிர்ச்சி அளித்தது. எனவே ராகுல் காந்தியின் மீது, தேசத்துரோகத்திற்கான பிரிவு 152 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிய வேண்டும்' என்றும் கூறி ரோசரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முன்னதாக கடந்த வாரம் ஜனவரி 15 ஆம் தேதி டெல்லியில் புதிய காங்கிரஸ் கட்சி அலுவலகமான இந்திரா பவன் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் பேசிய ராகுல் காந்தி, நமது போராட்டம் பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எதிராக மட்டுமே என்று நினைக்க வேண்டாம். நீங்கள் அப்படி நினைத்தால், உங்களுக்கு நிலைமை புரியவில்லை என்று அர்த்தம்.
பாஜக-வும், ஆர்எஸ்எஸ்-ம் சேர்ந்து, நாட்டின் ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றி விட்டன. அதனால், பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமல்லாமல், இந்திய அரசுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டும் என்று பேசினார்.

இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கருத்து எனக் கூறி அவரை பாஜக விமர்சித்தது. ராகுலின் பேச்சுக்கு எதிராக அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பெரும்பாலோர் கரைக்கு நீந்திச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மற்றவரை இன்னும் அடையாளம் காண முடியவில்லை
பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் கங்கையில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
இன்று, 17 பேருடன் சென்ற படகு அம்தாபாத் பகுதியில் உள்ள கோலாகாட் அருகே கங்கை நதியில் சென்றுகொண்டிருந்தபோது கவிழ்ந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர் என்றும் 4 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை பத்து பேர் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் கரைக்கு நீந்திச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலியானவர்களில் இருவர் பவன் குமார் (60) மற்றும் சுதிர் மண்டல் (70) என அடையாளம் காணப்பட்ட நிலையில், இனனொருவரை இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

"காணாமல் போன நான்கு பேரை மீட்கும் பணி இன்னும் நடந்து வருகிறது. சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று மாவட்ட மாஜிஸ்திரேட் மனேஷ் குமார் மீனா தெரித்துள்ளார்.
- அனைத்திந்திய கருத்தரித்தல் சர்வீஸ் என்ற தலைப்பில் மோசடி நடந்துள்ளது.
- ப்ளே பாய் சர்வீஸ்' உள்ளிட்ட பிற கவர்ச்சிகரமான சேவைகளை அறிமுகப்படுத்தினர்.
அனைத்திந்திய கர்ப்பமாகும் சர்வீஸ் என்ற தலைப்பில் மோசடி செய்யும் கும்பலை பீகார் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
பீகாரின் நவாடா மாவட்டத்தின் நர்டிகஞ்ச்சில் உள்ள கஹுவாரா கிராமத்துக்கு அருகே ஒரு கிடங்கில் இருந்து இந்த கும்பல் செயல்பட்டுள்ளது.
ரகசிய தகவலின் அடிப்படையில் சைபர் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பிரின்ஸ் ராஜ், போலா குமார் மற்றும் ராகுல் குமார் என மூன்று பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பின்னர், குற்றவாளிகள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.
திருமணமான குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கும் சேவை, 'ப்ளே பாய் சர்வீஸ்' உள்ளிட்ட பிற கவர்ச்சிகரமான சேவைகளை அறிமுகப்படுத்தி தொலைபேசி அழைப்புகள் மூலம் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளனர்.
இந்த கும்பல் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பலரிடம் மோசடி செய்துள்ளது. இதுவரை ஏமாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையை போலீசார் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீஸ் கூறுகையில், மோசடி செய்பவர்கள் பல்வேறு மாநிலங்களில் தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் மூலம் ஆண்களை தொடர்பு கொண்டனர். பேஸ்புக் விளம்பரங்களையும் வெளியிட்டனர்.
பான் கார்டு அல்லது ஆதார் அட்டை போன்ற பல ஆவணங்களையும், பதிவு என்ற பெயரில் நபரின் செல்ஃபியையும் கேட்பார்கள்.
குழந்தை பெற முடியாத பெண்களை வெற்றிகரமாக கருவூட்டுவதுதான் வேலை. அதில் வெற்றி பெற்றால் ரூ. 10 லட்சம், தவறினாலும் ரூ.50,000 தருவதாக பொய்யான உத்தரவாதத்தை வழங்கியுள்ளனர்.
இதற்கு சம்மதம் தெரிவித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் பதிவுக்கட்டணமாக ரூ.500 முதல் ரூ.20,000 வரை வசூலித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 ஸ்மார்ட்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதிலுருந்து வாட்ஸ்அப் சாட்கள், ஏமாந்தவர்கள் புகைப்படங்கள், ஆடியோ பதிவுகள் மற்றும் வங்கி பரிவர்த்தனை தகவல்கள் பெறப்பட்டுள்ளன என்று போலீஸ் தெரிவித்தது. கடந்த ஆண்டும் பீகாரில் இதே கான்சப்டில் செயல்பட்ட மற்றொரு சைபர் மோசடி கும்பல் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
- பயணியை அடித்ததுடன் அவரை மோசமான வார்த்தைகளில் ரெயில்வே ஊழியர் திட்டுகிறார்.
- இந்த சம்பவம் ஆம்ரபாலி ரெயிலில் நடந்ததாக சொல்லப்படுகிறது.
ஓடும் ரெயிலில் பயணி ஒருவரை ரெயில்வே அதிகாரிகள் பெல்ட்டை கொண்டு தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், "ஓடும் ரெயிலில் ரெயில்வே ஊழியர் ஒருவர் பயணி ஒருவரை படுக்க வைத்து பெல்ட்டை கொண்டு பலமுறை அடிக்கிறார். அப்போது அந்த பயணி தப்பிக்காமல் இருக்கும் வகையில் ரெயில் டிக்கெட் பரிசோதகர் அவர் மீது அமர்ந்துள்ளார்.
மேலும், பயணியை அடித்ததுடன் அவரை மோசமான வார்த்தைகளில் ரெயில்வே ஊழியர் திட்டுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் அமிர்தசரஸ் மற்றும் கதிஹார் ரெயில் நிலையங்களுக்கு இடையில் ஆம்ரபாலி ரெயிலில் நடந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- பீகார் அரசுத் தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்து அவர் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தார்.
- பாதிக்கப்பட்டு காலையில் பாட்னாவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் , பாட்னாவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டார்
பீகார் அரசுத் தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்து அவர் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தார். பாட்னாவில் காந்தி மைதானத்தில் ஜனவரி 2 முதல் உண்ணாவிரதம் இருந்து வந்த வார் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியதாக அவர் மீது போலீஸ் குற்றம்சாட்டியது.

அந்த இடத்தில் இதுபோன்ற ஆர்ப்பாட்டம் நடத்த பாட்னா உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும் நீதிமன்றத்தின் நிபந்தனையற்ற ஜாமீனில் பிரசாந்த் கிஷோர் வெளிவந்தார். இந்நிலையில் இன்று [செவ்வாய்க்கிழமை] நீரிழப்பு மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலையில் பாட்னாவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சில மருத்துவப் பிரச்சனைகளை முழுமையாகப் பரிசோதிக்க வேண்டியுள்ளது. அவர் தொற்று மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகிறார். அவர் பலவீனமாகவும் அசௌகரியமாகவும் இருக்கிறார் என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
வினாத்தாள் கசிந்ததாக கடந்த மாதம் நடத்தப்பட்ட பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (பிபிஎஸ்சி) தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, சிவில் சர்வீஸ் தேர்வர்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டங்களில் கிஷோர் தன்னை இணத்துக்கொண்டு தீவிரமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

- முதன்முறையாக 2005-ல் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றபோது, நான் முதல்வராக வேண்டும் என வாஜ்பாய் விரும்பினார்.
- அப்படி இருக்கும்போது நான் ஏன் பாஜகவுடன் இருக்கக் கூடாது.
பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேற வாய்ப்புள்ளது. அவருக்காக தனது கதவை திறந்தே வைத்திருப்பேன் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாரத் யாதவ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகும் கருத்தை நிதிஷ் குமார் நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக நிதிஷ் குமார் கூறியாதாவது:-
மரியாதைக்குரிய வாஜ்பாய் என்னை மத்திய மந்திரியாக்கினார். அவர் என் மீது அதிக பாசம் காட்டினார். என்னுடைய பரிந்துரைரைக்கு அவரிடம் இருந்து சம்மதம் பெற ஒருபோதும் கடினமான சூழ்நிலையை சந்தித்தது இல்லை.
முதன்றையாக 2005-ல் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றபோது, நான் முதல்வராக வேண்டும் என வாஜ்பாய் விரும்பினார்.
அப்படி இருக்கும்போது நான் ஏன் பாஜகவுடன் இருக்கக் கூடாது. இரண்டு முறை என் கட்சியில் உள்ளவர்கள் தவறு செய்து விட்டார்கள். அவர்கள் காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்க வற்புறுத்தினர். இரண்டு முறையும் நான் அதை சரி செய்தேன்.
இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
- பிரசாந்த் கிஷோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
- பிரசாந்த் கிஷோரை அம்மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் தேர்வாணைய பணியாளர் வாரியம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்ததாக தேர்வர்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பூதாகாரமாக வெடித்துள்ளது. இதையடுத்து, இந்தத் தேர்வை ரத்து செய்யக் கோரி ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை பிரசாந்த் கிஷோர் தொடங்கினார். இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் பிரசாந்த் கிஷோரை அம்மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தற்போது அவர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பிரசாந்த் கிஷோர் மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
உண்ணாவிரத போராட்டம் இருக்கும் நிலையில், தனக்கு சிகிச்சை வழங்கக்கூடாது என்று பிரசாந்த் கிஷோர் திட்டவட்டமாக கூறிவிட்டதாகவும், திட்டமிட்டப்படி சாகும் வரை தனது உண்ணாவிரதம் தொடரும் என்று கூறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிரசாந்த் கிஷோர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற இடத்தில் பிரசாந்த் கிஷோர் ஆதரவாளர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே மோதல் வெடித்தது.
- ஜிதேந்திர யாதவ் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் போலீசாரை தடுக்க முயன்றதால் கலவரமாக சூழல் ஏற்பட்டது.
- சம்பவத்தில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் உட்பட 3 அதிகாரிகள் காயமடைந்தனர்.
பீகாரில் வர தட்சணை வழக்கில் குற்றவாளியை கைது செய்ய சென்ற போலீசாரை தடுத்து உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள லஹேரியசராய் பகுதியில் உள்ள அபண்டா கிராமத்தில் வசிக்கும் ஜிதேந்திர யாதவை நீதிமன்ற பிடிவாரண்ட் படி கைது செய்ய நேற்று போலீஸ் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது.
அப்போது ஜிதேந்திர யாதவ் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் போலீசாரை தடுக்க முயன்றதால் கலவரமாக சூழல் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றில், ஒரு பெரிய கும்பல் காவல்துறை அதிகாரிகள் மீது கற்களை வீசி துப்பாக்கிகளை பறிக்க முயற்சிக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்திர யாதவ் வீட்டிற்கு போலீசார் வருவதைத் தடுக்க, அவர்கள் பிரதான சாலையில் டயர்களை எரித்து மறிக்க முயன்றனர்.
சம்பவத்தில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் உட்பட 3 அதிகாரிகள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

போலீசாரின் கூற்றுப்படி, தாக்குதலை நிறுத்தவும் கூட்டத்தை கலைக்கவும் கூடுதல் பாதுகாப்பு படையினர் குழு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து பேசிய தர்பங்கா துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி (SDPO) அமித் குமார், உள்ளூர் மக்கள் கூட்டத்தில் குழந்தைகள் இருந்தனர்.
அதனால் நாங்கள் அவர்களை நோக்கி அதிகம் சுடவில்லை. அவர்கள் பாதுகாப்புப் பணியாளர்கள் மீது கற்களை வீசினர். இருப்பினும், லேசான சக்தியைப் பயன்படுத்தி நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று கூறினார்.
இதற்கிடையே கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட ஜிதேந்திர யாதவ் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- விளையாட்டு மோகத்தால் 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது. செல்போனில் அதிகம் நேரம் செலவிடுவதால் உடல் நலம், மன நலம் பாதிக்கப்படுவதாக பல ஆய்வுகளில் தெரியவந்தாலும் அதனை யாரும் கண்டுகொள்வதில்லை. செல்போன் விளையாட்டால் சுற்றி என்ன நிகழ்வது என்பது கூட தெரியாமல் அதிலேயே மூழ்கி விடுகின்றனர்.
அப்படி தான், ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் PUBG விளையாடிக்கொண்டிருந்த பீகாரைச் சேர்ந்த வாலிபர்கள் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் ரெயில் தண்டவாளத்தில் காதில் இயர்போன் அணிந்து 3 வாலிபர்கள் PUBG விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது ரெயில் வருவதை அறியாமல் விளையாட்டில் மூழ்கி இருந்த அவர்கள் மீது ரெயில் மோதியது. இதில் 3 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தி 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விளையாட்டு மோகத்தால் 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகளின் விளையாட்டு பழக்கத்தை பெற்றோர்கள் கண்காணித்து, எதிர்காலத்தில் இதுபோன்ற அவலங்களைத் தடுக்க பொது இடங்களில் விழிப்புடன் இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- தேர்வை ரத்துசெய்து புதிய தேர்வு நடத்தவேண்டும் என கோரிக்கை எழுந்தது.
- ஆனால் இந்தக் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை.
பாட்னா:
பீகார் மாநிலத்தின் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வுசெய்ய டிசம்பர் 13-ம் தேதி தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை, வினாத்தாள் கசிந்தது என தேர்வர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தினர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மாநில அரசு மறுத்தது. இந்தத் தேர்வை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்தவேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கடந்த 3 நாளுக்கு முன் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான அரசுக்கு பிரசாந்த் கிஷோர் 48 மணி நேரம் கெடு விதித்திருந்தார். ஆனால் அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், டிசம்பர் 13-ல் நடந்த தேர்வை ரத்துசெய்து புதிதாக தேர்வு நடத்தவேண்டும் என்பதே எங்களது ஆரம்ப கட்ட கோரிக்கை. தேர்வு மூலம் நிரப்பவேண்டிய தேர்வை விற்பனை செய்துள்ளதாகக் கேள்விப்பட்டேன். அத்தகைய ஊழல் அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
- நிதிஷ்குமார் கையில் ரூ.21,052 மற்றும் பல்வேறு வங்கிகளில் ரூ.60,811.56-ம் உள்ளது.
- சொந்தமாக டெல்லி துவாரகாவில் உள்ள கூட்டுறவு வீட்டுவசதி சொசைட்டியில் ஒரு வீடு உள்ளது
பாட்னா:
பீகாரில் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டின் இறுதி நாளில் தங்கள் சொத்து மதிப்பை வெளியிட்டு, அதை அரசு இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.அதன்படி முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் மந்திரிகளின் சொத்து மதிப்பு நேற்று முன்தினம் அரசு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது.
இதில் நிதிஷ் குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி என தெரியவந்துள்ளது. அவரது கையில் ரூ.21,052 மற்றும் பல்வேறு வங்கிகளில் ரூ.60,811.56-ம் உள்ளது.
நிதிஷ் குமாரின் அசையும் சொத்து மதிப்பு ரூ.16,97,741.56 ஆகும். அசையா சொத்து மதிப்பு ரூ.1.48 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. அவருக்கு சொந்தமாக டெல்லி துவாரகாவில் உள்ள கூட்டுறவு வீட்டுவசதி சொசைட்டியில் ஒரு வீடு உள்ளது. அரசு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள விவரங்களின்படி மாநிலத்தின் பல மந்திரிகள் நிதிஷ் குமாரை விட அதிக சொத்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.






