என் மலர்
நீங்கள் தேடியது "குழந்தைப்பேறு"
- பெண்கள் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும்போது சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளும் பரிசோதிக்கப்படும்.
- பல நேரங்களில் சினைப்பையில் உள்ள முட்டைகளின் இருப்பே குறைந்துவிடும்.
பெண்கள் சமீப காலமாக சிஸ்டமிக் லூபஸ் எரித்தமட்டோசஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் ஆகிய நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். இவை 15 வயது முதல் 40 வயது வரையிலான பெண்களை அதிகம் பாதிக்கிறது. இந்த 2 வகை பாதிப்புகளிலும் ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், இவை இரண்டுமே நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் மாறுபாட்டால் ஏற்படுகிறது. இதனால் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
லூபஸ் பாதிக்கப்பட்ட பெண்கள் திருமணம் செய்யலாம், குழந்தைப்பேறு பெறலாம்:
லூபஸ் பாதிப்பு கொண்ட பெண்களுக்கு கருத்தரிப்பதிலும், கர்ப்ப காலத்திலும் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனது 30 வருட அனுபவத்தில் இந்த லூபஸ் பாதிப்புடன் நிறைய பெண்கள் குழந்தையின்மை சிகிச்சை மூலம் கருத்தரிப்பதற்கு வருவதை பார்த்திருக்கிறேன். இது மிகவும் சவால் நிறைந்த குழந்தையின்மை பிரச்சனை ஆகும். ஏனென்றால் இவர்களுக்கு நிறைய பாதிப்பு காரணிகள் இருக்கிறது.
அவர்களுக்கு சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படலாம், இருதயம் பழுதாகலாம், நுரையீரல் பழுதாகலாம். இதுபோன்ற பல சிக்கல்கள் அந்த பெண்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையும் பாதிப்படைந்து பல பிரச்சனைகள் உருவாகும்.
லூபஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுமா என்று என்னிடம் பலரும் கேட்பதுண்டு. லூபஸ் நோயால் பாதிக்கப்பட்ட 25 வயது பெண் என்னிடம் வந்து கேட்டார். டாக்டர், 'நான் திருமணம் செய்து கொள்ளலாமா? குழந்தைப்பேறு பெற முடியுமா?' என்று கேட்டார். கண்டிப்பாக திருமணம் செய்யலாம், குழந்தைப்பேறு பெறலாம்.
இந்த பாதிப்பு கொண்ட பெண்களுக்கு 2 காலகட்டங்கள் இருக்கிறது. அதாவது ஒன்று நோய் தீவிரம் அடையும் காலகட்டம். மற்றொன்று நோய் குணமடையும் காலகட்டம் ஆகும். இதில் நோய் தீவிரம் அடையும் (எக்சாசர்பேசன்) காலகட்டத்தில் பெண்கள் கருத்தரிக்க கூடாது. அவர்களுக்கு அந்த நோயின் தாக்கம் நன்றாக குறைவாகும் (ரெமிசன்) காலகட்டத்தில் அவர்கள் கருத்தரிக்கலாம்.
இந்த காலகட்டத்தை நிர்ணயிப்பதற்கு சில வரையறைகள் இருக்கிறது. இந்த பெண்கள் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும்போது சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளும் பரிசோதிக்கப்படும். அதில் ஆன்டிபாடி உற்பத்தி மிகவும் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் அவர்கள் கருத்தரிப்பதை தவிர்க்க வேண்டும்.
சினைப்பையில் முட்டைகள் குறையும் அபாயம்:
இவை தவிர பெண்கள் இந்த நோய் தாக்கத்துக்காக பல மாத்திரைகளை எடுத்து இருப்பார்கள். இதில் குறிப்பாக செல்களில் அழற்சியை குறைப்பதற்கு கொடுக்கின்ற மருந்துகள் எல்லாம் புற்றுநோய்க்கு கொடுப்பது போன்றது ஆகும். இவை செல்களில் உள்ள அழற்சியை குறைப்பது போல, கர்ப்ப காலத்தில் கொடுத்தால் கரு வளர்ச்சியையும் பாதிக்கும்.
இதனால் அந்த பெண்களுக்கு கர்ப்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். அவர்களுக்கு குறைபாடு உள்ள குழந்தை உருவாகலாம். இது கருவின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிப்பதால் குறையுள்ள குழந்தை பிறக்கலாம். அதனால்தான் இந்த காலகட்டத்தில் சீரிய மருத்துவம் என்பது இவர்களுக்கு தேவையான ஒன்றாகும்.
இந்த பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், கர்ப்பம் தரிப்பதற்கு தேவையான சினைப்பையின் முட்டைகளையும் குறைக்கும். சில நேரங்களில் சினைப்பைக்கு போகின்ற ரத்த குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டால், அதில் உள்ள திசுக்கள் குறைவாகி, சினைப்பையில் உள்ள முட்டைகளும் குறைவாகும். பல நேரங்களில் சினைப்பையில் உள்ள முட்டைகளின் இருப்பே குறைந்துவிடும். அதனால் அவர்களுக்கு கருத்தரிப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
இதற்கு எடுத்துக் கொள்கின்ற மாத்திரைகள், மருந்துகள் எல்லாமே பைபுரோசிசை உருவாக்கும். ஏனென்றால் செல்களில் அழற்சி இருக்கும்போது அதே கட்டுப்படுத்துவதற்கு கொடுக்கின்ற மருந்து, மாத்திரைகள் எல்லாமே அந்த செல்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் திசுக்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டு கருத்தரிப்பதிலும் பிரச்சனைகள் உருவாகலாம். இந்த மாதிரியான பெண்களுக்கு கருசிதைவு ஏற்படுவது மிகவும் அதிகம். அவர்களுக்கு திரும்பத் திரும்ப கருச்சிதைவு ஏற்படும். 2 மாதம், 3 மாதம், 4 மாதங்களில் கருச்சிதைவு ஏற்படும். பல நேரங்களில் 8 மாதங்களில் ரத்த அழுத்தம் அதிகமாகி, கர்ப்பத்திலும் ரத்த அழுத்தம் அதிகரித்து கருவில் இருக்கும் குழந்தை இறப்பதற்கும் வாய்ப்பு உண்டு.
பிரசவ நேரத்தில் குழந்தையின் ரத்த ஓட்டம் நின்று போகும், தாய்க்கு ரத்த அழுத்தம் அதிகமாகி வலிப்பு ஏற்படலாம், தண்ணீர் சத்து குறையலாம், குழந்தைக்கு துடிப்பு நின்று போகலாம், எடை குறைவான குழந்தை பிறக்கலாம். இந்த மாதிரியான எல்லா சிக்கல்களும் இந்த பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. அதனால் தான் லூபஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பதற்கு குறிப்பிட்ட காலகட்டம் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே தான் இந்த நோயின் தாக்கம் குறையும் காலகட்டத்தில் அவர்கள் கருத்தரிக்க முயல வேண்டும்.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
லூபஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை:
குறிப்பிட்ட காலகட்டத்தில் நோய் குணமடைந்த நிலையில், நோய் பாதிப்பு இல்லாவிட்டாலும் கூட, இவர்களுக்கு ஏற்கனவே இருந்த பாதிப்புகளினால் ரத்த அழுத்தம் அதிகமாகலாம், குறை பிரசவம் ஏற்படலாம், கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம் அதிகமாகலாம். பல நேரங்களில் மூளைக்கு செல்கின்ற ரத்த குழாய்கள் பழுதாகி வலிப்பு ஏற்படலாம். கை, கால்கள் விழுந்து போகலாம். சில நேரங்களில் கோமா நிலைக்கு கூட செல்லலாம். அவர்களுக்கு நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. சில நேரங்களில் சிறுநீரகம் பழுதாகி, சிறுநீரக பாதிப்புகளும் ஏற்படலாம். எனவே கண்டிப்பாக கர்ப்பகாலம் என்பது அவர்களுக்கு ஒரு சவால் நிறைந்த விஷயம். அந்த பாதிப்பு அவர்களுக்கு எப்போது குறைவாக இருக்கிறதோ, அப்போது கருத்தரிப்ப தற்கு முயற்சி செய்ய வேண்டும்.
இவர்களுக்கு முக்கியமான சிகிச்சை முறைகளில் எச்.சி.கியூ. (ஹைட்ராக்சி குளோ ரோகுயின்) மருந்து கொடுக்கிறோம். அதை கொடுக்கும்போது, லூபஸ் பாதிப்பால் ஏற்பட்ட அழற்சியை குறைத்து கருவளர்ச்சிக்கு உதவி செய்கிறது. தாயின் உடல் நிலையையும் பாதுகாக்கிறது. அந்த வகையில் தற்காலத்தில் ஸ்டீராய்டு, ஆஸ்பிரின் உள்ளிட்ட மருந்துகள் கர்ப்ப காலத்தில் குழந்தையின் பாதுகாப்புக்கு தேவையானது. கருத்தரிப்பதில் 2 அல்லது 3 முறை தோல்வி அடைந்தால், முதலில் முக்கியமாக லூபஸ் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இந்த லூபஸ் இருக்கிறவர்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் லூபஸ் வரலாம். அதனால் கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகியவை ஏற்படலாம். இந்த பெண்களுக்கு லூபஸ் பாதிப்பு இருந்தால் கர்ப்பகாலத்தில் சிறப்பு கவனம் மற்றும் கண்காணிப்பு தேவை.
அவர்களுக்கு பலவிதமான மருந்துகள் கொடுக்க வேண்டி இருக்கும். அவை அனைத்துமே கருவின் வளர்ச்சிக்கும் தாயின் பாதுகாப்புக்கும் முக்கியமான தேவை. இவை தவிர இதற்கு வாத நோய் மருத்துவ நிபுணரும் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனென்றால் தாய்க்கு பாதிப்பு வரக்கூடாது. அதேபோல் சிறுநீரகவியல் நிபுணர், நரம்பியல் நிபுணர், தோல் நிபுணர் ஆகிய அனைவருமே சிகிச்சை கொடுக்க வேண்டும். அப்போது தான் இந்த பெண்ணுக்கு தன்னுடைய நிலையும் பாதிக்காமல், குழந்தையின் வளர்ச்சியையும் பாதுகாக்க முடியும்.
அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும்:
என்னுடைய அனுபவத்தில் லூபஸ் பாதித்தவர்கள் சுமார் 45 பெண்களை பார்த்து இருக்கிறேன். இதில் ரொம்ப சவாலே 2 முறை மற்றும் 3 முறை கருச்சிதைவு, 6 மாதத்தில் குழந்தை இறப்பு, வலிப்பு, உடனடியாக ரத்த அழுத்தம் அதிகரிப்பு, சிறுநீரகம் பழுது போன்ற பாதிப்புகளுடன் வந்தவர்கள் நிறைய பேர். இதனை முறையாக சரி செய்து, பின்னர் கருவுற்ற பிறகு கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இவர்களுக்கு சிறப்பான கண்காணிப்புடன் சிகிச்சை கொடுத்தால் கண்டிப்பாக குழந்தைப்பேறு பெற்று ஆரோக்கியமாக வாழ முடியும். ஏனென்றால் இவர்கள் எல்லோருக்குமே ஒரு பயம் இருக்கும், திடீரென்று பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாக முடியுமா என்பதுதான் அந்த பயம். இதனால் கண்டிப்பாக அவர்களுக்கு சிறப்பு கவனிப்பு தேவை. ஏனென்றால் இந்த பெண்களுக்கு அந்த மாதிரி பாதிப்புகள் வரலாம். எனவே முறையாக தேர்ச்சி பெற்ற, இதில் அனுபவம் வாய்ந்த மருத்துவர் தான் அவர்களின் கர்ப்பத்தை கண்காணிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு தேவையான மருந்துகள் எல்லாமே சீராக கொடுக்க வேண்டும். தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பு வராமல் பார்க்க வேண்டும். அது சவால் நிறைந்தது தான். ஆனால் முறையாக செய்தோம் என்றால் இந்த பாதிப்பை சரி செய்து, அந்த பெண்ணை குழந்தைப்பேறு பெற வைக்க முடியும்.
பல நேரங்களில் கர்ப்பகாலம் என்பது அவர்களுக்கு லூபஸ் பாதிப்பில் குணமடையும் நிலையை கொடுக்கும். குழந்தை பெற்றவுடன் அவர்கள் இதில் இருந்து முழுமையாக குணம் அடைவதற்கான வாய்ப்புகள் கூட அதிகம். கண்டிப்பாக லூபஸ் பாதிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சைகளை முறையாக எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கையாகவே கருத்தரித்தால் கூட உங்களது கர்ப்பகால சிகிச்சை மற்றும் பிரசவத்தை ஒரு தேர்ச்சி பெற்ற மருத்துவரின் கண்காணிப்பில் பார்த்துக் கொள்ளுங்கள். இதில் முக்கியமான ஒன்று, கர்ப்ப கால சிகிச்சையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதன் மூலம் குழந்தை பாக்கியம் பெற முடியும்.
- முதல் குழந்தையாக பிறக்கும் அந்த பாம்பிற்கு மரணம் என்பதே கிடையாது.
- நாகராஜருக்கு பூஜை செய்யும் உரிமை வலிய அம்மாவிற்கு மட்டும் உண்டு.
குழந்தைப்பேறு வேண்டுபவர்களின் மனக்குறையைப் போக்கிக் குழந்தைப்பேறு அளிக்கும் நாகராஜர் கோயில், கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், ஹரிப்பாடு அருகில் மன்னார்சாலை என்ற அமைந்திருக்கிறது.
தல வரலாறு
மன்னார்சாலையில் வசித்து வந்த அந்தணர் குடும்பத்துப பெண்ணிற்கு திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாமல் இருந்தது. இதனால் கவலையடைந்த அந்த பெண் பரசுராமரை வேண்டி தனக்கு குழந்தைவரம் அளிக்குமாறு வேண்டினாள். மகாவிஷ்ணுவின் தோற்றமாக கருதப்படும் பரசுராமர் அந்த பெண்ணிடம், "பெண்ணே, சிவபெருமான் கழுத்தில் ஆபரணமாக அணிந்திருக்கும் பாம்புகளின் தலைவரான வாசுகியை வணங்கி வந்தால் உனக்கு குழந்தைப்பேறு கிடைக்கும்" என்று அருளினார்.
அந்த பெண்ணும் பரசுராமர் சொன்னபடி பாம்புகளின் தலைவரான வாசுகியை வணங்கி தனக்கு குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டி வந்தார். அவரின் தொடர் வேண்டுதலின் பலனாக வாசுகி அவர் முன்பு தோன்றி, "பெண்ணே, உன் தொடர் வேண்டுதலால் மகிழ்ந்தேன். உனக்கு முதல் குழந்தையாக ஐந்து தலைகள் கொண்ட நாகப்பாம்பு ஒன்று பிறக்கும்.
அதன் பிறகு, இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்றும் பிறக்கும். முதல் குழந்தையாக பிறக்கும் அந்த பாம்பிற்கு மரணம் என்பதே கிடையாது. இந்த உலகம் இருக்கும்வரை அந்த பாம்பும் உயிருடன் இருந்து உன்னையும், உன் மரபு வழியினரையும் பாதுகாக்கும்" என்று அருளினார்.
வாசுகி அருளியபடி அந்த பெண்ணிற்கு முதலில் ஐந்து தலைகள் கொண்ட நாகப்பாம்பும், அதன் பிறகு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. அந்த பெண் இரு குழந்தைகளையும் ஒன்று போல் கவனித்து வளர்த்து வந்தார். இரு குழந்தைகளும் பெரியவர்களாகினர். அந்த பெண் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். தன்னுடைய விருப்பத்தை முதலாவது மகனான நாகராஜனிடம் கூறினார்.
அதைகேட்ட நாகராஜன், "தனக்கு இந்த மனித வாழ்க்கையில் ஈடுபாடில்லை, எனவே இந்த வாழ்க்கையில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன். தங்கள் விருப்பப்படி தம்பிக்கு திருமணம் செய்து வைத்துவிடுங்கள். நான் இங்கிருந்து வெளியேறுகிறேன்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
"மகனே, நீ என்னைவிட்டு தனியாக எங்கும் செல்ல வேண்டாம். நான் இருக்கும் வரை என் கண் முன்பாகவே இருக்க வேண்டும். நீ இந்த வீட்டின் நிலவறையில் இருந்து கொள். நான் அவ்வப்போது வந்து உன்னை பார்த்துக் கொள்கிறேன்" என்று வேண்டிக் கொண்டாள் தாய்.
நாகராஜன் தாயிடம், "அம்மா, நான் தங்கள் விருப்பப்படி இந்த வீட்டின் நிலவறையில் போய் இருந்து கொள்கிறேன். நான் இந்த குடும்பத்தினரையும், அவர்களை தொடர்ந்து வரும் மரபு வழியினரையும் இந்த உலகம் இருக்கும் வரை காப்பாற்றுவேன். தாங்கள் விரும்பும் நேரத்தில் நிலவறைக்கு வந்து என்னை பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார்.
நாகராஜன் தன் தம்பியிடம், "தம்பி, நான் நிலவறைக்கு சென்ற பின்பு, அதற்கு அருகில் ஒரு கோயில் அமைத்து, கோயிலின் உள்ளே எனது உருவச்சிலை ஒன்றை அமைத்து, எல்லோரும் என்னை வணங்கி வாருங்கள். என்னை வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டியதை வழங்குவேன்" என்று சொல்லி வழிபாட்டு முறைகளையும் சொன்னார்.
அதன் பிறகு அவர் நிலவறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டார். நாகராஜனின் தம்பி நிலவறையின் அருகில் கோவில் அமைத்து, அதில் நாகராஜர் சிலையினையும் நிறுவினார். அன்றில் இருந்து இன்று வரை நாகராஜர் வழிபாடும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோயிலுக்கு அருகில் உள்ள நிலவறையில் நாகராஜர் இருந்து அருள்வதாக பக்தர்களிடம் நம்புகிறார்கள்.
நாகராஜர் இருப்பதாகக் கருதப்படும் நிலவறைக்கு செல்லவும், நாகராஜருக்கு பூஜை செய்யும் உரிமையும் அந்த குடும்பத்தின் மூத்த பெண்மணியாக கருதப்படும் "வலிய அம்மா" என்பவருக்கு மட்டுமே இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை, சிவராத்திரிக்கு அடுத்த நாள், "வலிய அம்மா" நிலவறைக்கு சென்று நாகராஜனை வழிபடுவதாக சொல்கின்றனர்.
பக்தர்களின் வழிபாடு, சிறப்பு வேண்டுதல்கள் மற்றும் கோயில் நிர்வாகத்திற்கான மேற்பார்வை போன்றவைகளையும் இவரே கவனித்துக்கொள்கிறார். இக்கோயிலில் நாகராஜனுக்கு அடுத்து முக்கியத்துவம் உடையவராக "வலிய அம்மா" இருக்கிறார். "வலிய அம்மா" வின் மரணத்திற்கு பிறகு, அந்தக் குடும்பத்தின் மூத்த பெண்மணியாக இருப்பவர் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.
அந்த பெண் திருமண வாழ்க்கையில் இருந்தால், அவர் தனது குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி, "வலிய அம்மா" வாக பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.
உறுளி கவிழ்த்தல்
குழந்தைப்பேறு இல்லாதவர்கள் உறுளி என்கிற நல்ல கனமுள்ள வட்ட வடிவிலான வெண்கலப் பாத்திரத்தினை இக்கோயிலின் பூஜைப்பணிகளை செய்யும் "வலிய அம்மா"விடம் கொடுத்து வேண்டிக் கொடுக்கின்றனர். வலிய அம்மா அந்த உறுளிப் பாத்திரத்தை பூஜை செய்து அதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் கவிழ்த்து வைத்து விடுகிறார்.
அந்த தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறந்த பின்பு, தங்கள் குழந்தையுடன் கோயிலுக்கு வந்து வலிய அம்மாவை பார்த்து, வெள்ளியில் செய்யப்பட்ட ஒரு பாம்பு உருவத்தினைக் கொடுக்கின்றனர். வலிய அம்மா அந்த வெள்ளிப் பாம்பு உருவத்திற்கு பூஜை செய்து, தம்பதியர் முன்பு கொடுத்து கவிழ்த்து வைத்திருந்த உறுளி பாத்திரத்தை நிமிர்த்தி வைத்து வேண்டுதலை நிறைவு செய்து தம்பதியர்களுடன், குழந்தையையும் ஆசிர்வதித்து அனுப்புகிறார்.
ஆயில்யம் நாள் வழிபாடுகள்
நாகராஜா கோயில்கள் அனைத்திலும் புரட்டாசி மாதத்தில் வரும் ஆயில்யம் நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் செய்து கொண்டாடப்படுவது வழக்கம். மன்னார்சாலை நாகராஜா கோயிலிலும் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது.
இந்த வழிபாட்டில் திருவிதாங்கூர் மன்னர் கலந்து கொண்டு நாகராஜரை வழிபடுவதும் வழக்கமாக இருந்தது. ஒரு முறை மன்னர் இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள முடியாமல் போனது. எனவே, அவர் அடுத்து வந்த ஐப்பசி மாதத்தில் வரும் ஆயில்ய நட்சத்திர நாளில் இக்கோயிலுக்கு வருகை தந்து, புரட்டாசி மாத ஆயில்ய நாள் சிறப்பு கொண்டாட்டங்களை போன்றே சிறப்பு வழிபாடுகளை செய்து வழிபட்டார். அதற்கான செலவு அனைத்தையும் தானே ஏற்றுக் கொண்டார், இனி ஆண்டுதோறும் இரு ஆயில்ய நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தும்படி வேண்டிக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி, ஐப்பசி என இரண்டு மாதங்களில் வரும் ஆயில்யம் நட்சத்திர நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்து கொண்டாடப்படுகிறது.
சிறப்புகள்
இந்தியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற பல்வேறு நாடுகளில் நாக வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட கோயில்களில் மன்னார்சாலை நாகராஜா கோவில்தான் மிகப்பெரிய கோயிலாக இருக்கிறது.
கோயில் வளாகத்தில் முப்பது ஆயிரத்துக்கும் அதிகமான நாகதேவதைகளின் சிலைகள் இருக்கின்றன. இக்கோயிலில் குழந்தைப்பேறு வேண்டி செய்யப்படும் உறுளி வேண்டுதல் எண்ணிக்கை ஆண்டுக்கு ஐந்தாயிரத்துக்கும் அதிகமானதாக இருக்கிறது.
அமைவிடம்
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் ஹரிப்பாடு எனும் ஊரில் இருந்து வடகிழக்கில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் மன்னார்சாலை எனுமிடத்தில் கோயில் அமைந்திருக்கிறது.
- அனைத்திந்திய கருத்தரித்தல் சர்வீஸ் என்ற தலைப்பில் மோசடி நடந்துள்ளது.
- ப்ளே பாய் சர்வீஸ்' உள்ளிட்ட பிற கவர்ச்சிகரமான சேவைகளை அறிமுகப்படுத்தினர்.
அனைத்திந்திய கர்ப்பமாகும் சர்வீஸ் என்ற தலைப்பில் மோசடி செய்யும் கும்பலை பீகார் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
பீகாரின் நவாடா மாவட்டத்தின் நர்டிகஞ்ச்சில் உள்ள கஹுவாரா கிராமத்துக்கு அருகே ஒரு கிடங்கில் இருந்து இந்த கும்பல் செயல்பட்டுள்ளது.
ரகசிய தகவலின் அடிப்படையில் சைபர் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பிரின்ஸ் ராஜ், போலா குமார் மற்றும் ராகுல் குமார் என மூன்று பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பின்னர், குற்றவாளிகள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.
திருமணமான குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கும் சேவை, 'ப்ளே பாய் சர்வீஸ்' உள்ளிட்ட பிற கவர்ச்சிகரமான சேவைகளை அறிமுகப்படுத்தி தொலைபேசி அழைப்புகள் மூலம் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளனர்.
இந்த கும்பல் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பலரிடம் மோசடி செய்துள்ளது. இதுவரை ஏமாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையை போலீசார் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீஸ் கூறுகையில், மோசடி செய்பவர்கள் பல்வேறு மாநிலங்களில் தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் மூலம் ஆண்களை தொடர்பு கொண்டனர். பேஸ்புக் விளம்பரங்களையும் வெளியிட்டனர்.
பான் கார்டு அல்லது ஆதார் அட்டை போன்ற பல ஆவணங்களையும், பதிவு என்ற பெயரில் நபரின் செல்ஃபியையும் கேட்பார்கள்.
குழந்தை பெற முடியாத பெண்களை வெற்றிகரமாக கருவூட்டுவதுதான் வேலை. அதில் வெற்றி பெற்றால் ரூ. 10 லட்சம், தவறினாலும் ரூ.50,000 தருவதாக பொய்யான உத்தரவாதத்தை வழங்கியுள்ளனர்.
இதற்கு சம்மதம் தெரிவித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் பதிவுக்கட்டணமாக ரூ.500 முதல் ரூ.20,000 வரை வசூலித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 ஸ்மார்ட்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதிலுருந்து வாட்ஸ்அப் சாட்கள், ஏமாந்தவர்கள் புகைப்படங்கள், ஆடியோ பதிவுகள் மற்றும் வங்கி பரிவர்த்தனை தகவல்கள் பெறப்பட்டுள்ளன என்று போலீஸ் தெரிவித்தது. கடந்த ஆண்டும் பீகாரில் இதே கான்சப்டில் செயல்பட்ட மற்றொரு சைபர் மோசடி கும்பல் சிக்கியது குறிப்பிடத்தக்கது.






