என் மலர்tooltip icon

    பீகார்

    • 4 புதிய பாலங்கள் கட்ட 1,100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
    • என்டிஏ அரசு காரணமாக பால் உற்பத்தி இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் சென்றிருந்தார். அப்போது பீகார் மாநில முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவை மறைமுகமாக விமர்சித்தார்.

    அவர் பேசும்போது கூறியதாவது:-

    காட்டாட்சி தலைவர்கள் மகா கும்பமேளாவையும், இந்து மதத்தையும் கேலி செய்தனர். அவர்களை பீகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    முன்னதாக மகா கும்பமேளா குறித்து லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவிக்கையில் "மகா கும்பமேளா அர்த்தமற்றது" எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் லாலு பிரசாத் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

    மேலும் "விவசாயிகளுக்கான 19-வது தவணை நிதியை விடுவித்த பிரதமர் மோடி, என்டிஏ அரசு விவசாயிகள் நலன் மற்றும் பீகார் மக்கள் வளர்ச்சிகாக உறுதிப்பூண்டுள்ளது. என்டிஏ அரசு காரணமாக பால் உற்பத்தி இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    தாமரை விதைக்கான (makhana) வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன்மூலம் பீகார் விவசாயிகள் பயனடைவார்கள்.

    4 புதிய பாலங்கள் கட்ட 1,100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். பொருளாதார வளர்ச்சிக்காக இணைப்புகளை மேம்படுத்த இந்த பாலங்கள் கட்டப்படுகிறது" என்றார்.

    • டானாபூர் ரெயில்வே கோட்ட மேலாளர் (DRM) ஜெயந்த் காந்த் சவுத்ரி ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
    • டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது ரெயில்வே சட்டங்களுக்கு எதிரானது என்று அமைதியாக தெளிவுபடுத்தினார்.

    பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 16) டானாபூர் ரெயில்வே கோட்ட மேலாளர் (DRM) ஜெயந்த் காந்த் சவுத்ரி ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

    அப்போது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த சில பெண்கள் சிக்கினர்.

    அவர் அந்த பெண்களிடம், ஏன்? டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறீர்கள் என்று கேட்டபோது, "நாங்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மோடி ஜி கூறினார்" என்று பெண்கள் நம்பிக்கையுடன் பதிலளித்தனர்.

    இதைக் கேட்டதும் முதலில் அதிர்ச்சியடைந்த ஜெயந்த் காந்த் சவுத்ரி சிரித்தபடியே மேலும் உரையாடினார்.

    மேலும் அவர்களிடம் பேசியதில், இந்தப் பெண்கள் டிக்கெட் வாங்காமல் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜுக்கு மகா கும்பமேளாவிற்கு (புனித நீராடுதல்) பயணம் செய்தது தெரியவந்தது.

    அந்த பெண்களிடம் பிரதமர் நரேந்திர மோடி அத்தகைய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது ரெயில்வே சட்டங்களுக்கு எதிரானது என்றும் அமைதியாக தெளிவுபடுத்தினார்.

    இந்த சுவாரஸ்யமான உரையாடலை நிலையத்தில் இருந்த ஒருவர் மொபைல் போனில் பதிவு செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    • தீபக் பாஸ்வான் என்ற இளைஞர் வாந்தி எடுத்தபடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

    பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், யூடியூப் வீடியோ பார்த்து மருத்துவர் சிகிச்சை அளித்ததால் நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தீபக் பாஸ்வான் என்ற 24 வயது இளைஞர் வாந்தி எடுத்தபடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோயாளி உயிரிழந்ததையடுத்து, மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

    யூடியூபை பார்த்து மருத்துவர் சிகிச்சை அளித்ததால் அவரின் நிலை மோசமடைந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீகாரில் உள்ள ரெயில் நிலையங்களில் பிரயாக்ராஜ் செல்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    • கூட்டத்தை கட்டுப்படுத்த செல்லத்தக்க டிக்கெட் இல்லாதவர்கள் நுழைய தடைவித்துள்ளது ரெயில்வே நிர்வாகம்.

    மகா கும்பமேளா விழா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வருகிறது. 45 நாள் திருவிழாவான இந்த கும்பமேளா வருகிற 26-ந்தேதி சிவராத்தியுடன் முடிவடைகிறது.

    கும்பமேளா தொடங்கியதில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் புனித நீராடி வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக உ.பி. அரசு தெரிவித்திருந்தது.

    இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பிரயாக்ராஜ் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் பிரயாக்ராஜ் நகருக்கு வர முடியாமல் பல கி.மீ. தொலைவிற்கு அப்பால் மக்கள் வாகனங்களில் தவித்து வருகின்றனர்.

    மேலும் பிரயாக்ராஜ் செல்லும் ரெயில்களில் ஏறுவதற்காக பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பீகாரில் உள்ள ரெயில் நிலையத்தில் பிரயாக்ராஜ் செல்லும் ரெயிலில் கூட்டம் அலைமோதியதால் இடம் கிடைக்காதவர்கள் ஆத்திரத்தில் ஏ.சி. பெட்டி மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

    சனிக்கிழமை இரவு டெல்லியில் பிரயாக்ராஜ் செல்லும் சிறப்பு ரெயிலுக்காக பக்தர்கள் காத்திருந்த நேரத்தில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கிழக்க மத்திய ரெயில்வே (ECR) பீகார் மாநிலத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் செல்லத்தக்க டிக்கெட் இல்லாத பயணிகள் ரெயில் நிலையத்திற்கு நுழைய தடைவிதித்துள்ளது.

    கிழக்கு மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு தலைமை அதிகாரி சரஸ்வதி சந்த்ரா இது தொடர்பாக கூறுகையில் " கிழக்கு மத்திய ரெயில்வேயின் அதிகார வரம்பிற்குட்பட்ட ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை முறையாக நிர்வகிப்பதை உறுதி செய்வதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மகா கும்பமேளாவிற்கு மக்கள் சுமூகமாக பயணம் மேற்கொள்வதை உறுதி செய்ய ரெயில்வே உறுதிப்பூண்டுள்ளது. பீனார் மாநிலத்தில் உள்ள ரெயில் நிலையங்கள் நுலைவு வாயில் செல்லத்தக்க டிக்கெட் இல்லாமல் நுழைய தடைவிதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

    மேலும், டிக்கெட் இல்லாத பயணிகளை தடை செய்ய உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காவல்துறையின் உதவியை ரெயில்வே கேட்டுள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை தடுக்க கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திடீரென கூடும் கூட்டத்தை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் ஊழியர்கள் குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

    பாட்னா, தனாபூர், ஆரா, கயா, சாசராம், முசாபர்பூர், சிதாமர்ஹி, தர்பங்கா உள்ளிட்ட பீகார் மாநிலங்களில் உள்ள ரெயில் நிலையங்களக்கு இதுவரை இல்லாத அளவிற்கு பிரயாக்ராஜ் செல்ல பயணிகள் வருகை தருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்.
    • ஷ்ரவண மாதத்தில் அசைவ உணவை உண்பதன் மூலம் சனாதன தர்ம விதிகளை புறக்கணிக்கிறார்கள்

    உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

    அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். ரெயில்வே துறையில் நிர்வாக தோல்வியே கூட்டநெரிசலுக்கு காரணம் என ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்நிலையில் கூட்டநெரிசல் குறித்து கருத்து தெரிவித்த பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவரும், முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் சர்ச்சை ஒன்றை கிளப்பினார்.

    பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு, மிகவும் சோகமான சம்பவம் நடந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம். இது ரெயில்வேயின் தவறு. ரெயில்வேயின் தவறான நிர்வாகத்தாலும் அலட்சியத்தாலும் இவ்வளவு பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.

    மேலும் மகா கும்பமேளாவில் நிலவும் கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்த கும்பமேளாவின் அர்த்தம் என்ன, கும்பமேளாவே அர்த்தமற்றது" என்றார்.

    இதை கையில் எடுத்த பீகார் பாஜக செய்தித் தொடர்பாளர் மனோஜ் சர்மா, ஆர்ஜேடி தலைவர்கள் எப்போதும் இந்துக்களின் மத உணர்வுகளை அவமதித்து வந்துள்ளனர்.

    மகா கும்பமேளாவை 'அர்த்தமற்றது' என்று ஆர்ஜேடி தலைவர் கூறியது, இந்து மதம் குறித்த அக்கட்சியின் மனநிலையை அம்பலப்படுத்தியுள்ளது. அவர்கள்(ஆர்ஜேடி) ஷ்ரவண மாதத்தில் அசைவ உணவை உண்பதன் மூலம் சனாதன தர்ம விதிகளை புறக்கணிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

     

    • இன்று அதிகாலை டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • பிரதமர் மோடி முன்னெச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி இருந்தார்.

    டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.0 ஆக பதிவானது. இது பூமியில் இருந்து 5 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமும் ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. பீகார் மாநிலம் சிவான் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

    நிலநடுக்கம் சரியாக 8.02 மணிக்கு ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

    முன்னதாக நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.

    • சுதந்திரா சேனானி எக்ஸ்பிரஸில் ஏற முண்டியடித்தனர்.
    • இதனால் பயணிகள் அச்சமும் கோபமும் அடைந்தனர்.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.

    மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26 ஆம் தேதி வரை இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது. எனவே பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதற்காக பிரயாக்ராஜுக்கு சிறப்பு ரெயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில் ரெயிலில் இடம் கிடைக்காமல் மக்கள் ஏசி பெட்டிகளை கபளீகரம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

    பீகாரில் உள்ள மதுபனி ரெயில் நிலையத்தில் நேற்று, மகா கும்பமேளா புறப்பட்ட பக்தர்கள் சுதந்திரா சேனானி எக்ஸ்பிரஸில் ஏற முண்டியடித்தனர்.

    ஆனால் ரெயிலில் ஏசி பெட்டிகள் உட்பட கூட்டத்தால் நிரம்பி வழிந்த நிலையில் பலருக்கு நிற்கக்கூட இடம்கிடைக்கவில்லை . பெட்டிகளின் கதவுகளையும் திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள், ஏசி பெட்டிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    கல் வீச்சு காரணமாக ஏசி பெட்டிகளின் கண்ணாடிகள் உடைந்து உள்ளே அமர்ந்திருந்தவர்கள் மீது விழுந்தன. இதனால் பயணிகள் அச்சமும் கோபமும் அடைந்தனர்.

    தொடர்ந்து ரெயிலில் அமர்ந்திருந்தவர்களுக்கும் பிளாட்பாரத்தில் நின்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியது. இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. நிலைமையை பாதுகாப்பு அதிகாரிகள் பெரும் போராட்டத்துக்கு பின் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    • நடனமாடி கொண்டிருந்த பெண்களுக்கு அஞ்சனி குமார் என்பவர் பணம் கொடுத்து கொண்டிருந்தார்.
    • அஞ்சனி குமாரின் தலையில் குண்டு பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் திருமணத்திற்கு முன்பு நடைபெறும் திலக விழாவின் போது இளைஞர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திலக விழாவின் போது மேடையில் நடனமாடி கொண்டிருந்த பெண்களுக்கு 27 வயதான அஞ்சனி குமார் என்பவர் பணம் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது மேடைக்கு கீழே இருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார். அஞ்சனி குமாரின் தலையில் குண்டு பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். துப்பாக்கியால் சுட்டவர் உடனடியாக சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டார்.

    பிந்து சர்மா மற்றும் பஞ்சாயத்துத் தலைவர் மகேஷ் சர்மா ஆகியோர் தான் அஞ்சனி மரணத்திற்கு காரணம் என்று இறந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். பிஏசிஎஸ் தேர்தலில் அவர்களுக்கு எதிரான வேட்பாளரை அஞ்சனி ஆதரித்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை. ஆகையால் திட்டம் போட்டு அஞ்சனியை கொலை செய்துள்ளனர் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • போலீஸ் நடத்திய தேடுதலில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    • போலீசார் அவரை கைது செய்தனர்

    பீகாரில் பக்சர் மாவட்டத்தில் தனது எட்டு வயது வளர்ப்பு மகளை சித்தி கழுத்தை நெரித்து கொன்று உடலை சாக்குப்பையில் மறைத்து வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் தும்ரான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நயா போஜ்பூர் பகுதியில் உள்ள வீட்டில் மரப்பெட்டிக்குள் இருந்த கோணி சாக்கில் சிறுமியின் எரிந்த உடல் எச்சங்களை நேற்று [சனிக்கிழமை] இரவு போலீஸ் கண்டுபிடித்துள்ளது.

    நேற்று காலை முதலே சிறுமியை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் போலீஸ் நடத்திய தேடுதலில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதுதொடர்பாக பேட்டியளித்த பக்சார் காவல் கண்காணிப்பாளர் சுபம் ஆர்யா, முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் சித்தி குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டார். தனது வளர்ப்பு மகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு உடலை தீ வைத்து கொளுத்தியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், உடலை கோணி பையில் அடைத்து, மரப்பெட்டியில் மறைத்து வைத்துள்ளார்.

    அவரின் வாக்குமூலம் மற்றும் சம்பவ இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், போலீசார் அவரை கைது செய்தனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குற்றத்தை செய்ததற்கான காரணத்தை அவர் போலீசாரிடம் கூறவில்லை. சிறுமியின் தந்தை டெல்லியில் வேலை செய்து வருகிறார். சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

    • மூன்று பெண்கள் உட்பட 5 நேபாள நாட்டவர்கள் பலியானார்கள்.
    • விபத்துக்கு காரணமான இருசக்கர வாகன ஓட்டிகள் அங்கிருந்து தப்பியோடினர்.

    உத்தரப் பிரதேசம் பிராயக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு காரில் திரும்பிய நேபாளத்தைச் சேர்ந்த 5 பேரின் உயிரை பைக் ஸ்டண்ட் பறித்துள்ளது.

    நேற்று, பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில், நெடுஞ்சாலையில் 9 பேருடன் கார் வந்துகொடுந்தபோது சிலர் பைக்கர்கள்  ஸ்டண்ட் செய்துகொண்டிருந்தனர்.

    இதனால் பைக் மீது இடிக்காமல் இருக்க காரை டிரைவர் திருப்பியுள்ளார். இதில் கார் தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இதில் மூன்று பெண்கள் உட்பட 5 நேபாள நாட்டவர்கள் பலியானார்கள். இறந்தவர்கள் அர்ச்சனா தாக்கூர், இந்து தேவி, மந்தர்னி தேவி, பால் கிருஷ்ண ஜா மற்றும் ஓட்டுநர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள நான்கு பேர் பலத்த காயமடைந்த நிலையில் பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். விபத்துக்கு காரணமான இருசக்கர வாகன ஓட்டிகள் அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீகார் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மை . இந்த பட்ஜெட் ஒரு ஏமாற்று வித்தை.
    • அவை வெறும் ஜூம்லேபாசி [வாய்மாலம்] என்று தெரிவித்தார்.

    பாராளுமன்றத்தில் 2025- 26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வருடம் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் பட்ஜெட்டில் அம்மாநிலத்துக்கு அதிக சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

    பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம், 4 புதிய பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட 7 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் பீகாருக்கு எதுவமே கிடைக்கவில்லை என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.

    பீகாருக்கு எதுவும் கிடைக்கவில்லை. அனைவரும் சிறப்புப் பொருளாதார தொகுப்புகள் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்தோம். ஆனால், என்ன கிடைத்தது? இது பீகார் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மை. இந்த பட்ஜெட் ஒரு ஏமாற்று வித்தை. இன்றைய பட்ஜெட் பீகாருக்கு அநீதியானது. கடந்த பட்ஜெட்டில் கூறப்பட்ட அதே பழைய அறிவிப்புகள் தான் தற்போதும் வந்துள்ளது.

    ரெயில் கட்டணம் தினமும் அதிகரித்து வருகிறது. ஆனால், ரயில் பயணக் கட்டணத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு முற்றிலும் தவறிவிட்டது. மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முதல்வர் ஏற்கனவே கைவிட்டதாக தெரிகிறது.

    பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு வார்த்தை கூட அதுகுறித்து பேசவில்லை. வஞ்சிக்கப்படும் ஏழை மாநிலத்திற்கு சிறப்பு பொருளாதார தொகுப்பு இல்லை, ஆனால் பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் அரசு அனைத்து நல்ல காரியங்களையும் செய்து வருகிறது.

    பீகாருக்கான புதிய விமான நிலையங்கள் அமைப்பது போன்ற அறிவிப்புகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், அவை வெறும் ஜூம்லேபாசி [வாய்மாலம்] என்று தெரிவித்தார்.

    இவையெல்லாம் பழைய விஷயங்கள், . பாட்னாவின் புறநகரில் உள்ள பிஹ்தாவில் புதிய விமான நிலையம் போன்ற திட்டங்களில் மத்திய அரசு ஏன் மவுனம் காக்கிறது? நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, அதற்காக நிலத்தை கையகப்படுத்தி விமான நிலையங்களுக்கு ஒப்படைத்தோம் என்று தெரிவித்தார்.

     

    • மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலில் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவில் ஆட்சியை தக்க வைத்தது.
    • நிர்மலா சீதாரானின் உரையில் 1 மணி நேரத்தில் பீகாருக்கு 7 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    பாராளுமன்றத்தில் 2025- 26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து 1 மணி நேரம் 17 நிமிடங்கள் பேசினார்.

    இந்த வருட பட்ஜெட்டில் பீகார் மாநிலத்துக்கு அதிக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பீகாரில் தற்போது பாஜகவின் என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியில் உள்ளது.

    மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் ஆதரவில் ஆட்சியை தக்க வைத்தது. இந்நிலையில் இந்த வருடம் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் பட்ஜெட்டில் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டுள்ளது.

    நிர்மலா சீதாரானின் உரையில் 1 மணி நேரத்தில் பீகாருக்கு 7 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    *பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம் அமைக்கப்படும்

    *பீகாரில் 4 புதிய பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படும்

    *பாட்னா விமான நிலையம் தரம் உயர்த்தப்படும்.

    *பீகார் மாநிலத்தில் உள்ள ஐஐடி பாட்னா விரிபடுத்தப்படும்

    8பீகார் மாநிலத்தில் உணவு பதனிடும் பூர்வோதயா திட்டம் செயல்படுத்தப்படும்

    *பீகாரில் மாக்னா [தாமரை விதை] உற்பத்தியை அதிகரிக்க மக்கானா வாரியம் அமைக்கப்படும் உள்ளிட்ட

    *பீகாரின் மிதிலாஞ்சல் பகுதியில் மேற்கு கோசி கால்வாய் திட்டத்திற்கு நிதி வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 

    ×