என் மலர்
பீகார்
- விகாஸ் குமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா தேவி (25) என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
- இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்து அடுத்தடுத்து இறந்தன
பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் வசிக்கும் விகாஸ் குமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா தேவி (25) என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
திருமணம் முடிந்த பின்பு தான் விகாஸ் குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி இருப்பதும் அப்பெண்ணை விவாகரத்து செய்யமல் 2 ஆவது திருமணம் செய்ததும் சுனிதாவுக்கு தெரியவந்தது. ஆனால் சுனிதா குடும்பத்தினர் அவரை சம்மதிக்கவைத்து விகாஸ் குமாருடன் ஒன்றாக வாழவைத்தனர்.
இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்து அடுத்தடுத்து இறந்தன. இதையடுத்து விகாஸ் குமார் தான் இன்னொரு பெண்ணை காதலிப்பதாகவும் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் சுனிதாவிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட சண்டையில் சுனிதா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.
துர்கா பூஜையின் போது சுனிதா வீட்டுக்கு சென்று அவரை மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு விகாஸ் வற்புறுத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சுனிதா மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துக் கொன்ற கொண்டுருள்ளார்.
தீயில் கருகிய உடலை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார் இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊழல்வாதிகளுக்கு வாக்களித்ததால் பீகாரில் ஊழல் இருப்பதாகச் சொல்லாதீர்கள்.
- எந்த சூழ்நிலையிலும், ஊழல் செய்தவர்களை நீக்க வேண்டும் என்றார்.
பாட்னா:
ஜன் சுராஜ் கட்சி நிறுவனரான பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் ரகோபூரிலிருந்து போட்டியிட வேண்டுமானால், ரகோபூரின் மக்கள் என்னுடன் நிற்க வேண்டும். இன்று நான் பார்த்ததையும் புரிந்து கொண்டதையும் நாளை கட்சிக் கூட்டத்தில் முன்வைப்பேன். ஓரிரு நாட்களில், யார் போட்டியிடுகிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.
பீகார் மக்கள் இதைப் பார்க்கிறார்கள். இது இருக்கை பகிர்வு அல்ல. இது ஊழலைப் பகிர்ந்து கொள்வது - யார் அதிகமாக கொள்ளை அடிப்பார்கள், யார் அமைச்சராக வருவார்கள், யார் அதிக ஒப்பந்தங்களைப் பெறுவார்கள், யார் கொள்ளையில் அதிக பங்கைப் பெறுவார்கள் - இது அதற்கான போராட்டம்.
இது நீண்ட காலத்திற்கு தொடரும். ஏனென்றால் நாம் கூட்டணி அமைத்தவுடன் பொதுமக்களை மீண்டும் முட்டாளாக்குவோம் என்பது அவர்களுக்குத் தெரியும்.
சிலர் சாதியின் பெயரால் தங்களை விற்றுவிடுவார்கள். சிலர் இந்துக்களாகவோ அல்லது முஸ்லிம்களாகவோ மாறுவார்கள். சிலர் ஐந்து கிலோ தானியத்திற்கு, சிலர் ஐநூறு ரூபாய்க்கு வாக்களிப்பார்கள். ஆனால் இது நடந்தால், உங்கள் மூலம் பீகார் மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்: அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த அமைப்பின் கீழ் வாழத் தயாராக இருங்கள். பிறகு யாரையும் குறை சொல்லாதீர்கள்.
ஊழல்வாதிகளுக்கு வாக்களித்ததால் பீகாரில் நிறைய ஊழல் இருப்பதாகச் சொல்லாதீர்கள். எனவே, எந்த சூழ்நிலையிலும், ஊழல் செய்தவர்களை நீக்க வேண்டும். நீங்கள் இல்லையென்றால், இந்த பரிதாபகரமான நிலையில் வாழத் தயாராக இருங்கள்.
நாம் அவரை நம்பினால், அவர்கள் (ராஷ்டிரிய ஜனதா தளம்) 18 ஆண்டுகளில் 4-5 லட்சம் வேலைகளை வழங்கினர். இப்போது அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 3 கோடி வேலைகளை வழங்குவதாகச் சொல்கிறார். இதன் பொருள் ஒன்றுதான்: நீங்கள் ஒரு முட்டாள் அல்லது நீங்கள் அனைவரையும் முட்டாளாக்க முயற்சிக்கிறீர்கள் என தெரிவித்தார்.
- நான் ரகோபூரில் போட்டியிட்டால், தேஜஸ்வி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார்.
- அப்படி போட்டியிட்டால் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு நடந்தது தேஜஸ்விக்கு நடக்கும்.
பீகார் தேர்தலில், தேர்தல் வியூகம் வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோர் தொடங்கியுள்ள ஜன் சுராஜ் கட்சியில் களம் இறங்குகிறது.
இங்குள்ள ரகோபூர் சட்டமன்ற தொகுதி, லாலு பிரசாத் குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியாகும். இந்த தொகுதியில் லாலு பிரசாத் யாதவ் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். அவரது மனைவி ராப்ரி தேவி மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். இருவரும் முதல்வராக இருந்துள்ளனர். இவர்களது மகன் தேஜஸ்வி யாதவ் 2015 மற்றும் 2020-ல் வெற்றி பெற்றுள்ளார். துணை முதல்வராக இருந்துள்ளார். தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்து வருகிறார்.
இந்த தொகுதியில் போட்டியிட இருப்பதாக பிரஷாந்த் கிஷோர் சூசகமாக தெரிவித்துள்ளார். இங்கு நான் போட்டியிட்டால், தேஜஸ்வி யாதவ் இரண்டு தொகுதியில் போட்டியிடுவார். ராகுல் காந்தி அமேதி தொகுதியில் எதிர்கொண்டதை, தேஜஸ்வி யாதவ் எதிர்கொள்வார்" என்றார்.
ராகுல் காந்தி 2010 மக்களவை தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியடைந்தார். இதைத்தான் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
- இதில் 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
- முன்னதாக சாம்ரான் பகுதியில் உள்ள தும்ரி கிராமத்திலில் 15 பேர் இதேபோல் உயிரிழந்ததாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
அடுத்த மாதம் பீகார் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த மாதமே வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் துரித கதியில் செய்து முடித்தது.
இதில் 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள், ஊடுருவல்காரர்கள் உள்ளிட்ட காரணிகளை வைத்து இந்த திருத்தும் மேற்கொண்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இருப்பினும் இதில் பாஜகவின் வாக்கு திருட்டு சதி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் பீகாரின் தோரையா (Dhoraiya) தொகுதியின் கீழ் உள்ள பட்சர் கிராமத்தில் வசிக்கும் 5 பேர் தாங்கள் உயிரிழந்ததாக குறிப்பிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பூத் என் 216 இன் கீழ் வரும் மோகன் ஷா, சஞ்சய் யாதவ், ராமரூப் யாதவ், நரேந்திர குமார் தாஸ், விஷ்னவார் பிரசாத் ஆகியோர் தாங்கள் இறந்துவிட்டதாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தொகுதி மேம்பாட்டு அதிகாரி (BDO) அரவிந்த் குமாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அதிகாரியிடம் வழங்கிய கடிதத்தில், "ஐயா, நாங்கள் உயிருடன் உள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு பிழை சரி செய்யப்படும், எந்த ஒரு தகுதியுள்ள வாக்காளரின் வாக்குரிமையும் பறிக்கப்படாது என அதிகாரி அரவிந்த் குமார் அவர்களுக்கு உறுதி அளித்து வழியனுப்பி வைத்தார்.
முன்னதாக சாம்ரான் பகுதியில் உள்ள தும்ரி கிராமத்திலில் 15 பேர் இதேபோல் உயிரிழந்ததாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதேபோல் 2018 உயிரிழந்த சோனியா சரண் என்பவரும் 2025 இல் உயிரிழந்த அவரின் மகன் மணித் மணி என்பவரும் வாக்களிக்க தகுதியானவர்களாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.
- இந்தியா கூட்டணியில் இடம் பெற AIMIM விரும்பியது.
- ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் பதில் ஏதும் அளிக்காத நிலையில், 3ஆவது கூட்டணிக்கு முயற்சி.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி- இந்தியா கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
ஐதராபாத் மக்களவை எம்.பி. அசாதுதீன் ஒவைசி-யின் ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சிக்கு இந்தியா கூட்டணியில் இடம் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில் இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக AIMIM களம் இறங்கப்போகிறது. நாங்கள் 100 இடங்களில் போட்டியிடுவோம் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அக்தருல் இமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அக்தருல் இமான் கூறுகையில் "100 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எங்களது திட்டம். இரண்டு கூட்டணிகளும் தங்களது இருப்பை உணர வேண்டிய நிலையில் உள்ளன.
2020 தேர்தலின்போது, நாங்கள் வாக்குகளை பிரித்ததாக மகா கூட்டணி குற்றம்சாட்டியது. அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைக்க விருப்பம் இருப்பதாக நான் லாலு மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு கடிதம் எழுதியது அனைவரும் அறிந்ததே. ஆனால், அங்கிருந்து பதில் வரவில்லை.
தற்போது நாங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளது. 3ஆவது கூட்டணி என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேசி வருகிறோம். இன்னும் சில நாட்களில் அது தெளிவாகிவிடும்" என்றார்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, அசாதுதீன் ஒவைசி கட்சி, தனியாக போட்டியிட்டு மைனாரிட்டி வாக்குகளை பிரித்து, பாஜக கூட்டணி வெற்றிக்கு வழிவகுப்பதாக இந்தியா கூட்டணி குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
- பீகாரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
- என்டிஏ கூட்டணியில் பாஜக, நிதிஷ் குமார் கட்சி பிரதான கட்சிகளாக உள்ளன.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ராஷ்டிரிய ஜனதா தளம் (நிதிஷ் குமார் கட்சி) முக்கிய கட்சிகளாகும். இந்தியா கூட்டணியில் ராஷ்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் பிரதான கட்சிகள் ஆகும்.
இந்த முறை தேர்தல் மிகக்கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
இந்த நிலையில் பீகார் மாநில பாஜக தலைவர், திலிப் ஜெய்ஸ்வால், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரை டஜன் எம்.எல்.ஏ.-க்கள் பாஜகவில் இணைவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திலிப் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-
இன்னும் அடுத்த சில நாட்களில் அரை டஜன் எதிர்க்கட்சி எம்.எம்.ஏ.-க்கள் பாஜகவில் இணைவார்கள். இது பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் தலைமைத்துவம் மீது வளர்ந்து வரும் நம்பிக்கையின் தெளிவான அறிகுறியாகும்.
இவ்வாறு திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
ஆனால் கட்சி தாவும் எம்.எல்.ஏ.-க்கள் யார் யார் என்பதை வெளியிடவில்லை. முன்னதாக இரணடு முறை எம்.பி.யாகவும், கடந்த முறை காங்கிரஸ் சார்பில் முசாபர்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அஜய் நிஷாத் மீண்டும் பாஜக கட்சிக்கு திரும்பினார். அவரை வரவேற்றார். அவரது வருகறை திர்கட் பிராந்தியத்தில் கூடுதல் வலிமையைக் கொடுக்கும் என்றார்.
- ஜன் சுராஜ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் 13 சதவீதம் முஸ்லிம் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- 17 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முடிவுகள் நவம்பர் 18 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த வருடம் காந்தி ஜெயந்தி தினத்தில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கி இருந்தார்.
ஜன் சுராஜ் கட்சியும் வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்து களம் காண உள்ளது.
இந்நிலையில் பீகார் தேர்தலுக்கான 51 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜன் சுராஜ் கட்சி வெளியிட்டுள்ளது.
பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட இந்த பட்டியலில் கணிதவியலாளர், மருத்துவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இடமம்பெற்றுள்ளது கவனம் ஈர்த்து வருகிறது.
ஜன் சுராஜ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் 13 சதவீதம் முஸ்லிம் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். 17 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
வேட்பாளர்களில் 16% முஸ்லிம்கள் மற்றும் 17% மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
வேட்பாளர்களில், பாடப் புத்தகங்கள் தயாரிக்கும், பாட்னா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான கணிதவியலாளர் கே.சி. சின்ஹா (குமஹ்ரார் தொகுதி) மற்றும் பாட்னா உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஒய்.பி. கிரி (மஞ்ஜி தொகுதி) ஆகியோர் அடங்குவர்.
முசாபர்பூர் தொகுதியில், கிராமப்புற சுகாதார விழிப்புணர்வில் பணியாற்றிய மருத்துவர் அமித் குமார் தாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்கே மிஸ்ரா, போஜ்புரி நடிகர் ரிதேஷ் பாண்டே உள்ளிட்டோரும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
முதல் பட்டியலில் பிரசாந்த் கிஷோரின் பெயர் இடம்பெறவில்லை. அவரது சொந்தத் தொகுதியான கார்கஹரில் ரித்தேஷ் ரஞ்சன் என்பவர் ஜன் சுராஜ் போட்டியிட உள்ளார்.
எனவே லாலு பிரசாத் உடைய ஆர்ஜேடி கட்சியின் கோட்டையான ராகோபூரில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- அரசு அமைந்த 20 நாட்களுக்குள் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 மாதங்களுக்குள் நிறைவேற்றுவோம்.
- பீகார் மக்களுக்கு நாங்கள் சமூக நீதியுடன் பொருளாதார நீதியையும் வழங்க விரும்புகிறோம்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
முதல்வர் நிதிஷ் குமார் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை உள்ளிட்ட மக்களை கவரும் திட்டங்களை தொடர்ச்சியாக அறிவித்து வருகிறார்.
இந்நிலையில் இந்தியா கூட்டணியின் முதல்வர் முகமான ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அனைவரையும் வியக்க வைக்கும் தேர்தல் வாக்குறுதி ஒன்றரை இன்று அறிவித்துள்ளார்.
அதாவது, அரசு வேலையில் உள்ளவர்கள் குடும்பங்களை தவிர்த்து மற்ற அனைத்து குடும்பங்களிலும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தள அரசு அமைந்த 20 நாட்களுக்குள் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 மாதங்களுக்குள் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதாக தேஜஸ்வி யாதவ் உறுதியளித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 20 ஆண்டுகளாக பீகாரில் என்டிஏ அரசாங்கத்தால் நிச்சயமின்மை நிலவுகிறது. எந்த ஒரு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படவில்லை.
ஆர்ஜேடி ஆட்சி அமைத்து 20 மாதங்களுக்கு பின் பீகாரில் ஒரு குடும்பம் கூட அரசு வேலை இன்றி இருக்காது. இது பீகாரில் நிலவும் வேலையின்மை பிரச்சனையை வேரோடு தகர்த்தெறியும். பீகார் மக்களுக்கு நாங்கள் சமூக நீதியுடன் பொருளாதார நீதியையும் வழங்க விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் கட்சிகள் இடம் பிடித்துள்ளன.
- நிதிஷ் குமார்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பாஜக மேலிடம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் நிதிஷ் குமார்தான், தொகுதி பங்கீடு விரைவில் முடிவடையும் என பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிரிராஜ் சிங் கூறியதாவது:-
நிதிஷ் குமார்தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) முதல்வர் வேட்பாளர். என்.டி.ஏ. கூட்டணியில் எல்லாம் நன்றாக உள்ளது. தொகுதி பங்கீடு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இறுதி வடிவம் விரைவில் முடிவாகும்.
மகாபத்பந்தன் என அழைக்கப்படும் இந்தியா கூட்டணி பிளவுப்பட்ட வீடு. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் இருப்பார் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. காங்கிரஸ் அறிவிப்பால் ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ் கவலையும், பயமும் அடைந்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கை, தலைமை மற்றும் நோக்கம் அனைத்தும் உறுதியாக உள்ளன என்றும், எந்த வெறுப்பும் இல்லை என்றும் என்றால் உறுதியா சொல்ல முடியும்.
இவ்வாறு கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மற்றும் நிதி்ஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பிரதான கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளுடன் சிராக் பஸ்வான் கட்சியும் முக்கியமான 3ஆவது பெரிய கட்சியாக உள்ளது. சிராக் பஸ்வான் கட்சிக்கு என்டிஏ 25 இடங்களை ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால், சிராக் 40 இடங்கள் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் தலைமையைில் இந்தியா கூட்டணி, NDA-வை எதிர்கொள்கிறது.
- தேஜஸ்வி யாதவ் முதலமைச்சர் வேட்பாளராக களம் நிறுத்தப்படலாம் என எதிர்பார்ப்பு.
பீகார் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. 243 தொகுதிகளை கொண்ட பீகாருக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் முன்னணி வகிக்கும் மகாகத்பந்தன் (மகா கூட்டணி) களம் இறங்கும். இதனால் பீகாரில் கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், நிதிஷ் குமார்தான் முதல்வர் என்பது ஏற்கனவே உறுதியான விசயம். அதேவேளையில் மாகா கூட்டணியில் (தற்போது இந்தியா கூட்டணி) யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்தான் முதல்வர் வேட்பாளராக பார்க்கப்படுகிறது. ஆர்.ஜே.டி. தொண்டர்களும் இதைத்தான் விரும்புகிறார்கள்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் உதித் ராஜியிடம், முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதித் ராஜ் கூறியதாவது:-
ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு வேண்டுமென்றால் தேஜஸ்வி யாதவ் முதலமைச்சர் முகமாக இருக்கலாம். ஆனால், இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் கூட்டாக முடிவு செய்யப்படும். எந்தவொரு கட்சியின் ஆதரவாளர்களும், அவர்களுடைய கட்சித் தலைவரை முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்ய முடியும். ஆனால், இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் முடிவு செய்யப்படவில்லை. காங்கிரஸ் தலைமையகம் என்ன முடிவு எடுக்கிறது என்பதை பார்ப்போம்" என்றார்.
முதலமைச்சர் வேட்பாளரை முன்நிறுத்தாமல் நாங்கள் போட்டியிடமாட்டோம் என சில வாரங்களுக்கு முன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருந்த நிலையில், உதித் ராஜ் தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு உடனடியான ராஷ்டிரிய ஜனதா தளம் அல்லது தேஜஸ்வி யாதவ் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
- டெல்லி மற்றும் பஞ்சாபில் செயல்படுத்தப்பட்ட நிர்வாக மாதிரியை பீகாரிலும் பின்பற்ற முடியும்
- நாங்கள் எந்தக் கட்சியுடனும் அல்லது கூட்டணியுடனும் கைகோர்க்க மாட்டோம்
பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முழுமையான பெரும்பான்மையைப் பெற மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 122 இடங்கள் தேவை. ஐக்கிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய ஆளும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் பீகார் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
டெல்லி மற்றும் பஞ்சாபில் செயல்படுத்தப்பட்ட நிர்வாக மாதிரியை பீகாரிலும் பின்பற்ற முடியும் என்று தான் நம்புவதாக ஆம் ஆத்மி பீகார் மாநில பொறுப்பாளர் அஜேஷ் யாதவ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அறிவிப்பின் ஒரு பகுதியாக, அஜேஷ் யாதவ் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் ராகேஷ் யாதவ் ஆகியோர் 11 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டனர்.
"எங்கள் கூட்டணி மக்களுடன் உள்ளது. நாங்கள் எந்தக் கட்சியுடனும் அல்லது கூட்டணியுடனும் கைகோர்க்க மாட்டோம்" என்று அக்கட்சியின் மாநில இணைப் பொறுப்பாளர் அபினவ் ராய் தெரிவித்தார்.
- 2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது.
- சில கட்சிகள் 2 கட்டங்களாக நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தன.
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
243 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநில சட்டசபையின் பதவி காலம் நவம்பர் 22-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அங்கு விரைவில் தேர்தல் நடைபெறுகிறது.
பீகார் தேர்தல் தயார் நிலை குறித்து கடந்த 2 நாட்களாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாட்னாவில் ஆய்வு மேற்கொண்டார். பீகார் தேர்தலில் 17 புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பீகார் தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பீகார் சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்கிறார்.
2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற்றது. நவம்பர் 10-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
பீகார் சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையரிடம் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. அதே போல சில கட்சிகள் 2 கட்டங்களாக நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தன.
இதனால் பீகார் தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை கடந்த ஜூன் மாதம் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. சமீபத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.
வாக்காளர் பட்டியலில் முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் சிறப்பு தீவிர திருத்தத்தில் 47 லட்சம் பேர் நீக்கப்பட்டு தற்போது 7.42 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
பீகாரில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி கடுமையாக போராடி வருகிறது. லோக் ஜன சக்தி, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்டிரீய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
எதிர்க்கட்சி கூட்டணியில் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அங்கு கடும் போட்டி நிலவுகிறது.






