என் மலர்
பீகார்
- பெண்கள் வங்கி கணக்குகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
- ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது.
பீகாரில் நவம்பர் மாதம் 6 மற்றும் நவம்பர் மாதம் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, சரண் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அமித் ஷா பேசியதாவது:-
இந்த வருடம் பீகார் மக்கள் 4 தீபாவளியை கொண்டாடி வருகிறார்கள. ஒன்று பெண்கள் வங்கி கணக்குகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மற்றொன்று ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது. 3ஆவது நவம்பர் 14ஆம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நாள்.
பீகாரில் ஏராளமான கட்டமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. பீகாரில் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு பயணம் செய்ய ஐந்து மணி நேரம் கூட ஆவதில்லை.
இந்த வளர்ச்சி பிரதமர் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரால் இணைந்து செய்யப்பட்டுள்ளது. பீகாரில் எங்கள் அரசு அமைவதற்கு முன் இடம் பெயர்வு, மோசடி, கொலைகள், கடத்தல் பொதுவானதாக இருந்தது.
சிவான் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூரில் கேங்ஸ்டாராக இருந்து அரசியல்வாதியாக மாறிய மறைந்த முகமது ஷகாபுதீன் மகன் ஒசாமா ஷஹாப்பிற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதுபோன்ற வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்தால், பீகாரில் மக்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
- இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.
- வேட்புமனு தாக்கலுக்கு அவர் தனது ஆதரவாளர்களுக்கு வீட்டில் வைத்து பிரமாண்டமான முறையில் பிரியாணி விருந்து அளித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.
ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி - காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.
வேட்புமனு தாக்கல் தற்போது நடந்து வரும் சூழலில் பீகாரின் கிஷன்கஞ்ச் தொகுதியில் போட்டியிட உள்ள தவுசிப் ஆலம் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலுக்கு அவர் தனது வீட்டில் வைத்து ஆதரவாளர்களுக்கு பிரமாண்டமான முறையில் பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.
இந்த விருந்தில் 10,000 க்கும் மேற்பட்டோர் திரண்ட நிலையில் பிரியாணி பொட்டலங்களை அள்ளிச் செல்ல முந்திக்கொண்டு தள்ளுமுழுப்பட்டதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி விமரிசனத்துக்கு உள்ளாகி வருகிறது.
- பீகார் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
- பதிவான வாக்குகளை எண்ணும் பணி 14ம் தேதி நடைபெறுகிறது.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் நவம்பர் 6, 11-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) 101, லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் (எல்ஜேபி-ஆர்) 29 , ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) 6 , இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்) 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொது அவர் கூறியதாவது:
பீகார் தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ்குமார்தான் முதல் மந்திரியா என்பதை நான் முடிவு செய்ய முடியாது.
இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி நிதிஷ்குமார் தலைமையில் போட்டியிடுகிறது என்பதை மட்டுமே என்னால் இப்போது சொல்ல முடியும்.
தேர்தலுக்கு பிறகு கூட்டணி கட்சி தலைவர்கள் கூடி பேசி அதை முடிவு செய்வார்கள்.
பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ஆட்சியை கண்ட மக்கள் மீண்டும் அந்தக் கட்சியை ஆட்சியில் அமர வைக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
- பீகார் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் இரு கட்டமாக நடைபெறுகிறது.
- 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற இருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிராக் கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 101 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி முதல் கட்டமாக 48 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மாநில தலைவர் ராஜேஷ் ராம் கடும்பா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதில் 24 பேர் முதல் கட்ட தேர்தலிலும், மீதி 24 பேர் இரண்டாவது கட்ட தேர்தலிலும் போட்டியிடுகின்றனர்.
- 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது.
- மொத்தம் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
பீகார் மாநில தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில், முதலில் 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. பின்னர், 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 12 பேர் இடம் பிடித்துள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் தலா 101 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், பீகார் முதற்கட்டத் தேர்தலுக்கான பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
- பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருந்து விலகி, சமீபத்தில் கட்சியில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு வாய்ப்பு.
- தற்போது வரை 83 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
பீகார் மாநில தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது.
நேற்று 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் 12 பேர் இடம் பிடித்துள்ளனர்.
இதில் நாட்டுப்புற பாடகி மைதிலி தாகூர் இடம் பிடித்துள்ளார். இவர் பாட்னாவில் நேற்று முறையாக பாஜக-வில், மாநில தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் முன்னிலையில் இணைந்தார். இந்த உடனேயே அலிநகர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் மிஷ்ரிலால் யாதவ் எம்.எல்.ஏ.-வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மைதிலி தாகூரை தவிர்த்து, முன்னாள் ஐபிஎல் அதிகாரி ஆனந்த் மிஸ்ராவுக்கு புக்சர் தொகுதியில் வாய்ப்பு வழங்கியுள்ளது. பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருந்து வெளியேறி சமீபத்தில்தான் பாஜக-வில் இணைந்தார்.
முசாபர்பூர் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.-வுக்குப் பதிலாக ரஞ்சன் குமார் நிறுத்தப்பட்டுள்ளார். ஹயாகத்தில் ராம் சந்திர பிசாத் நிறுத்தப்பட்டுள்ளார். கோபால்கஞ்ச் தொகுதியில் சுபாஷ் கிங்கிற்கு வாய்ப்ப வழங்கப்பட்டுள்ளது.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது.
- ராஷ்டிரிய ஜனத தளம் 101 இடங்களிலும், சிராக் பஸ்வான் கட்சி 29 இடங்களிலும் போட்டியிடுகிறது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ராஷ்டிரிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்தது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிராக் கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 6 இடங்களிலும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
தொகுதி பங்கீடு செய்யப்பட்ட பிறகும் கூட அந்த கூட்டணியில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கால் அதன் மற்ற தோழமை கட்சிகள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு கணிசமாக 29 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதால் மற்ற தோழமை கட்சிகளுக்குள் அதிருப்தி நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக நிதிஷ்குமாரின் கோட்டை என்று சொல்லப்படும் ராஜகீர், சோன்பர்ஸா இடங்களை சிராகின் கட்சி உரிமை கோரி வருவதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் பெரும் குழப்பம் ஏற்படுள்ளதாக கூறப்படுகிறது.
- மோகன் லாலின் மனைவி 14 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.
- இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
பீகார் மாநிலம் கயாவை சேர்ந்த 74 வயதான முன்னாள் விமானப்படை வீரர் மோகன் லால், தான் இறந்தது போல் நடித்து தனக்கு தானே இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
மோகன் லாலின் மனைவி 14 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், தான் மரணமடைந்தால் இந்த ஊரில் யார் எல்லாம் தன்னுடைய இறுதிச்சடங்கிற்கு வருவார்கள், யாரெல்லாம் என் மீது அன்பு வைத்துள்ளார்கள் என்று அறிய மோகன் லாலுக்கு ஆசை ஏற்பட்டது.
இதையடுத்து தான் இறந்தது போல மொகல் லால் தனக்கு இறுதிச்சடங்கு நடத்தினார். இறுதிச்சடங்கு நடைபெற்ற போது, எழுந்து உட்கார்ந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
- கட்சி பணிகளில் கவனம் செலுத்த போகிறேன்.
- அனைத்து தொகுதிகளிலும் ஜன்சுராஜ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்யப்போகிறேன்.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11-ந் தேதிகளில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேர்தல் வியூக அமைப்பாளராக இருந்து அரசியல்கட்சி தலைவராக உருவெடுத்துள்ள பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன்சுராஜ் கட்சியும் போட்டியிடுகிறது. தனது சொந்த தொகுதியான கர்கஹார் அல்லது ராஷ்டீரிய ஜனதா தளம் கோட்டையான ரகோபூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக முன்பு பிரசாந்த் கிஷோர் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் அவர் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் ரித்தேஷ் ரஞ்சன் கர்கஹார் தொகுதி வேட்பாளராகவும், சஞ்சய் சிங் ரகோபூர் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டனர்.
இதனால் பிரசாந்த் கிஷோர் போட்டியிடமாட்டார் என்பது உறுதியானது. தேர்தலில் போட்டியிட்டால் மற்ற தொகுதியில் கவனம் செலுத்த முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சி பணிகளில் கவனம் செலுத்த போகிறேன். அனைத்து தொகுதிகளிலும் ஜன்சுராஜ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்யப்போகிறேன். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை தழுவும். அக்கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வராது. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களில் வெல்வதற்கு கூட கடுமையாக போராட வேண்டி இருக்கும். நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக வர மாட்டார்.
இந்தியா கூட்டணியின் நிலைமையும் சரியாக இல்லை. ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் மோதல் ஏற்பட்டுள்ளது என்றார்.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது.
- ஐக்கிய ஜனதா தளம் 101 இடங்களிலும், சிராக் பஸ்வான் கட்சி 29 இடங்களிலும் பேட்டியிடுகிறது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்தது. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிராக் கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 101 இடங்களில் 71 இடங்ளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. துணை முதல்வர் சம்ராத் சவுத்ரி தாராபூரில் போட்டியிடுகிறார். அமைசசர் மங்கல் பாண்டே சிவான் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- 243 தொகுதிகளிலும் பிரசாந்த் கிஷோர் கட்சி போட்டியிடுகிறது.
- 116 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், பிரசாந்த் கிஷோர் பெயர் இடம் பெறவில்லை.
அரசியல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலத்தில் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவரது கட்சி பீகார் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது.
முதற்கட்ட தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் நவம்பர் 11ஆம் தேதியும் நடக்கிறது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. 2ஆம் ஆட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
பிரசாந்த் கிஷோர் கட்சி 243 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், இன்று 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இன்றைய பட்டியலில் 65 வேட்பாளர்கள் இடம் பிடித்துள்ளனர். மொத்தம் 116 வேட்பாளர்கள் இடம் பிடித்துள்ளனர். ஆனால் இரண்டு கட்ட பட்டியலிலும் பிரசாந்த் கிஷோர் பெயர் இடம் பெறவில்லை.
தேஜஸ்வியை எதிர்த்து ரகோபூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக பிரசாந்த் கிஷோர் சூசகமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தொகுதி பங்கீடு இறுதி செய்யபடாத நிலையில் பாஜக அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.
- தற்போதைய நிலவரப்படி நிதீஷை விட பாஜக அதிக எம்எல்ஏக்களை கொண்டுள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பாஜக தேசிய தலைவர்கள் டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில் பாஜக அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.
தொகுதி பங்கீட்டில் நிதீஷ், சிராக் பஸ்வான் உள்ளிட்டோர் கறார் காட்டுவதால் சிக்கீல் நீடித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி நிதீஷை விட பாஜக அதிக எம்எல்ஏக்களை கொண்டுள்ளது.
இதனால், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடி குறித்து அமித்ஷா தலைமையில் பாஜகவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்.






