என் மலர்
பீகார்
- லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் நல்ல விதமான ஆலோசனையில் ஈடுபட்டேன்.
- தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூடடணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக போட்டியிடும்.
பீகார் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் கடைசி வரை தொகுதி பங்கீடு செய்யவில்லை.
இதனால் குறிப்பிட்ட தொகுதிகளில் அவர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை மேலும் விரிசலை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் சந்தித்து பேசினார்.
சந்திப்புக்குப்பின் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் நல்ல விதமான ஆலோசனையில் ஈடுபட்டேன். தற்போதுள்ள சூழ்நிலை குறித்து மீடியாக்களுக்கு தெரிவிக்க நாளை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்துவோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூடடணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக போட்டியிடும்.
இந்தியா கூட்டணியில் எல்லாம் நன்றாக உள்ளது. மீடியாக்களில் என்னவெல்லாம் சொல்லப்படுகிறதோ, அது சரியானது அல்ல. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் நட்பு ரீதியிலான போட்டி ஐந்து முதல் ஏழு தொகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இதை வேறுவிதமான எடுத்துக் கொள்ளக் கூடாது.
ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் விரைவில் தேர்தல் பிரசாரத்தை இணைந்து தொடங்குவார்கள். பீகாரில் 243 இடங்கள் உள்ளன. மற்ற மாநிலங்களிலும் நட்பு ரீதியிலான போட்டி நிகழ்ந்துள்ளது. மகாகூட்டணி உறுதியாக உள்ளது. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக ஒன்றுமையாக போட்டியிடும்.
இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
- பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
- என்.டி.ஏ. கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.
ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணிக்கும், லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி-காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருகிறது.
இதற்கிடையே, ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட முடிவு செய்து 6 இடங்களில் போட்டியிடும் என அறிவித்தது.
இந்நிலையில், இந்தியா கூட்டணியில் அதிருப்தியில் இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பீகார் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது. கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் ஜே.எம்.எம். இந்த முடிவை எடுத்துள்ளது.
- 3 தொகுதியில் பிரசாந்த் கிஷோர் கட்சி வேட்பாளர்கள் வாபஸ்.
- பீகாரில் என்டிஏ-வை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம்.
பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜக-ஜேடியு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையில் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே அரசியல் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேர்தலில் போட்டியிடுகிறது.
அந்த கட்சியின் மூன்று வேட்பாளர்கள் திடீரென தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டுள்ளதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர கூறியதாவது:-
கடந்த சில வருடங்களாக யார் தேர்தலில் வெற்றி பெற்றாலும், பாஜக-தான் ஆட்சி அமைக்கும் என்ற பிம்பத்தை பாஜக உருவாக்கியுள்ளது. ஜன் சுராஜ் வெறும் வாக்கை பிரிக்கம் கட்சி, எங்களுக்கு எந்த அடையாளமும் இல்லை என்று கூறிய கட்சியின் நிலையைப் பாருங்கள். வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது, தேசிய ஜனநாயகக் கூட்டணி அச்சத்தில் உள்ளது.
மக்களை பயமுறுத்துவதற்காக அவர்கள் பயன்படுத்தும் லாலு கட்சி கூட்டணிக்கு அவர்கள் பயப்படுவதில்லை. மக்களுக்கு அவர்கள் வாக்களிக்கவில்லை என்றால், லாலு யாதவின் 'காட்டு ராஜ்ஜியம்' மீண்டும் வரும் என்று எச்சரிக்கிறார்கள். இந்த முறை, மக்களுக்கு ஒரு புதிய வழி இருக்கிறது, அது ஜன் சுராஜ்.
லாலுவின் பயத்தால் மக்கள் பாஜகவிற்கும் நிதிஷ் குமாருக்கும் வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாஜகவின் பயத்தால் லாலு ஜிக்கும் வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த 30 ஆண்டுகால அடிமைத்தனத்திலிருந்து வெளியேறுவதற்கான வழி ஜன் சுராஜ்தான்.
தனபூர், பிரஹாம்பூர், கோபால்கஞ்ச்ஆகிய தொகுதிகளில் வலுக்கட்டாயமாக ஜன் சுராஜ் வேட்பாளர்கள் வாபஸ் பெற வைக்கப்பட்டுள்ளனர். ஜன் சுராஜ் தலைவர்கள் ஓடிப்போகிறார்களா அல்லது ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறதா என்பதை பீகார் தெரிந்து கொள்ள வேண்டும். வேட்பாளர்கள் வெளிப்படையாக மிரட்டப்படுகிறார்கள்..
எங்கள் கட்சியில் 240 வீரர்கள் இன்னும் களத்தில் உள்ளனர். அவர்கள் NDA-வை வேரறுக்கும் வரை ஓய மாட்டார்கள். நவம்பர் 14 (வாக்கு எண்ணிக்கை நாள்) அன்று எல்லாம் தெளிவாகிவிடும். பிரசாந்த் கிஷோரும் அவரது ஜன் சுராஜ் கூட்டாளிகளும் பயப்படப் போவதில்லை. நீங்கள் எத்தனை வேட்பாளர்களை வாங்கினாலும், அச்சுறுத்தினாலும் அல்லது கட்டுப்படுத்தினாலும் தேர்தலில் வலுவாகப் போராடும்.
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
- ஒன்று நண்பர்களாக இருக்க வேண்டும். இல்லை எதிரியாக ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டும்.
- தேர்தலில் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டியிடும்போது தலைவர்களை எதிர்த்து பேச வேண்டியிருக்கும்.
பீகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் (NDA)- இந்தியா கூட்டணிக்கும் (India Bloc) இடையில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. அந்தக் கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் 143 தொகுதிகளிலும், காங்கிரஸ் 55 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது.
இன்றுடன் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலும் முடிவடைந்துள்ளன. ஆனால் காங்கிரஸ் 60 தொகுதிகளுக்கு மேலான இடங்களில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் ஒரே தொகுதியில் இரண்டு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் நேருக்கு நேர் மோத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதை நட்பான சண்டை என இந்தியா கூட்டணி அழைக்கிறது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக்சன சக்தி கட்சியின் தலைவரான சிராக் பஸ்வான், நட்பான சண்டை என்பது கிடையாது என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள ஒற்றுமையின்மையை குறித்து அவர் கூறியதாவது:-
ஒன்று நண்பர்களாக இருக்க வேண்டும். இல்லை எதிரியாக ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டும். தேர்தலில் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டியிடும்போது அவர்களுடைய தலைவர்களை எதிர்த்து பேச வேண்டியிருக்கும். அது எப்படி இன்னொரு தொகுதிகளில் பாதி்ப்பை ஏற்படுத்தாமல் இருக்கும். இந்தியா கூட்டணியில் உள்ள பிளவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும்.
நான் அரசியலை நன்றாக புரிந்தவன். தொகுதி பங்கீடுகளில் பிரச்சனை ஏற்படலாம். ஆனால் இந்தியா கூட்டணியில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை முடிவு கூட செய்ய முடியவில்லை. ஒரு தேர்தலில் பெரிய கூட்டணி பிளவு படும் விளிம்பில் இருப்பது போன்றதை இதற்கு முன் நான் பார்த்ததில்லை.
இவ்வாறு சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் சிராக் பஸ்வான் கட்சி 29 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக மற்றும் நிதிஷ் குமார் கட்சி தலா 101 இடங்களில் போட்டியிடுகிறது.
இந்தியா கூட்டணியில் லாலு கட்சி (RJD) 143 இடங்களிலும், காங்கிரஸ் 55 இடங்களிலும், சிபிஐ-எம்எல் 20 தொகுதிகளிலும், சிபிஐ 6 தொகுதிகளில், சிபிஐ-எம் 4 தொகுதிகளிலும், விஐபி 15 தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் 60 தொதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
- பீகார் மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
- தி புளுரல்ஸ் பார்ட்டி 243 இடங்களிலும் போட்டியிடுகிறது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் இரு கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த முறை பீகாரில் குறிப்பிடும் கட்சியாக 'தி புளுரல்ஸ் பார்ட்டி' திகழ்கிறது. முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகளான புஷ்பம் பிரியா சவுத்ரி ஆரம்பித்திருக்கும் இந்தக் கட்சிதான் அங்கு புதிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த முறை 243 இடங்களிலும் அவரது கட்சி போட்டியிடுகிறது, பாதி இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்சிக்கு நகரம் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

தர்பங்காவைச் சேர்ந்த முன்னாள் ஜே.டி.யு எம்.எல்.ஏ. வினோத் குமார் சவுத்ரியின் மகள்தான் இந்த புஷ்பம் பிரியா.
1987, ஜூன் 13-ம் தேதி பிறந்த புஷ்பம் பிரியா தர்பங்காவில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதன்பின், பட்டப்படிப்புக்காக புனே சென்றார். தொடர்ந்து இங்கிலாந்தில் உயர்கல்வியை படித்தார்.
சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டுப் படிப்பில் முதுகலைப் பட்டமும், 2019-ல் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இதையடுத்து, அரசியலில் ஈடுபட்ட அவர் பீகார் அரசின் சுற்றுலா மற்றும் சுகாதாரத் துறைகளில் ஆலோசகராகப் பணியாற்றினார்.
இந்நிலையில், பீகாரின் தர்பங்காவிலிருந்து போட்டியிடும் புஷ்பம் பிரியா சவுத்ரி, கருப்பு உடை மற்றும் மாஸ்க் மூலமே வலம் வருகிறார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

எனது கட்சியின் பெயர் மக்களின் பிரச்சனைகளைப் பிரதிபலிக்கிறது. பன்மை என்பது அனைத்துச் சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதாகும்.
நான் வித்தியாசமானவள். எங்களுக்கென சொந்த சித்தாந்தம் உள்ளது.
அரசியல்வாதிகள் ஏன் வெள்ளை உடை அணிகிறார்கள் என்று எனக்குத் தெரியாததால் கருப்பு நிறத்தை அணிகிறேன்.
தேர்தல் அரசியலில் வெற்றியைப் பெறும்வரை மாஸ்க்கை கழற்றமாட்டேன் என தெரிவித்தார்.
இந்த முறை 243 இடங்களிலும் அவரது கட்சி போட்டியிடுகிறது, பாதி இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்சிக்கு நகரம் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
- பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகள் இரண்டும் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன.
- பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 24ம் தேதி தொடங்குகிறார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் 14-ம் தேதி எண்ணப்பட உள்ளன.
பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகள் இரண்டும் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மத்திய மந்திரி சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 இடங்களிலும், உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் மத்திய மந்திரி ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) ஆகிய கட்சிகள் தலா ஆறு இடங்களில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 24ம் தேதி தொடங்குகிறார்.
இதுதொடர்பாக, பா.ஜ.க. மாநிலத் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் பாட்னாவில் அளித்த பேட்டியில், பீகார் சட்டசபைத் தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி வரும் 24ம் தேதி சமஸ்திபுராவில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். அன்றைய தினமே பெகுசராயில் பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். இந்த மாத இறுதிக்குள் 4 பிரச்சாரப் பேரணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய மந்திரி அமித்ஷா பீகாரில் முகாமிட்டு 25 பொதுக்கூட்டங்களில் பேச இருக்கிறார். மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி ஆகியோரும் 20 கூட்டங்களுக்கு குறையாமல் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுவார்கள்.
பா.ஜ.க. கூட்டணி தொண்டர்கள் அனைவரும் தேர்தல் பணிகளை உற்சாகமாக செய்து வருகிறார்கள். மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் தேர்தல் பிரசார பணிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்கள். பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்கள் செல்லும் இடங்களில் மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரள்வதன் மூலம் எங்கள் கூட்டணி வெற்றி மீண்டும் உறுதியாகி இருக்கிறது என தெரிவித்தார்.
- இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பியது.
- அங்கு இடம் கிடைக்காததால் தனியாக போட்டியிட முடிவு.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜக- ஜே.டியு.-வின் தேசிய ஜனநாயக கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் AIMIM கட்சி 100 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் என அக்கட்சி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முஸ்லிம் அல்லாத இருவருக்கும வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதில் அக்கட்சியின் பீகார் மாநில தலைவர் அக்தருல் இம்ரான் பெயரும் இடம் பிடித்துள்ளது. இக்கட்சி இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பியது. இது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு தூதுவிட்டது. ஆனால், தேஜஸ்வி யாதவ் பதில் அளிக்காததால் தனியாக போட்டியிட முடிவு செய்தது.
- கட்சியில் சீட் தருவாக பணம் பெற்றதாக குற்றச்சாட்டு.
- சீட் மறுக்கப்பட்டதால், விரக்தியில் சட்டையை கிழித்து அழுது புரண்டுள்ளார்.
பீகார் தேர்தலில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி பணம் வாங்கிக் கொண்டு அநீதி செய்வதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி மதன் ஷா கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் இன்று காலை லல்லு பிரசாத் யாதவ் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். தரையில் புரண்டு இந்த அநியாயத்தை கேட்க யாரும் இல்லையா? என சட்டையை கிழித்துக் கொண்டு அழுது புலம்பினார்.
பிறகு அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட சீட் தருவதாக கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறி இருந்தார். நானும் எனது தொகுதியில் பணிகளை தொடங்கி விட்டேன். ஆனால் திடீரென ரூ.2.7 கோடி ரூபாய் கப்பம் கட்ட வேண்டும் என்று சொன்னார்கள். என குழந்தைகளின் திருமணத்தை நிறுத்தி வைத்து விட்டு பணத்தை தயார் செய்தேன். தற்போது சீட் தராமல் எல்லாம் முடிந்து விட்டது. குறைந்த பட்சமாக எனது பணத்தையாவது திருப்பி தர வேண்டும்
இவ்வாறு கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இவர் மதுபான் தொகுதியில் கடந்த தேர்தலில் பாஜக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார். அதில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தற்போது சீட் மறுக்கப்பட்டுள்ளது.
- இதற்கிடையே இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருகிறது.
- நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகும்.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.
ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி - காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
என்டிஏ கூட்டணி ஏற்கனேவே 3 வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருகிறது.
இந்த சூழலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி(ஜேஎம்எம்) கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
அதன்படி பீகாரில் ஜேஎம்எம் ஆறு இடங்களில் தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.எம்.எம் பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான சுப்ரியோ பட்டாச்சார்யா, பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட கட்சி முடிவு செய்துள்ளது. சக்காய், தம்தாஹா, கடோரியா , மணிஹரி, ஜமுய் மற்றும் பிர்பைந்தி ஆகிய ஆகிய ஆறு இடங்களில் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம்" என்று தெரிவித்தார்.
பீகாரில் சில இடங்களில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவிடம் ஜே.எம்.எம் தெரிவித்திருந்தது. ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த சூழ்நிலையில், கூட்டணியை விட்டு வெளியேறி தனியாகப் போட்டியிட கட்சி முடிவு செய்தது.
நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்றிருக்கும் சூழலில் இந்தியா கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.
- நம்பகத்தன்மையான முகமான நிதிஷ் குமாரின் கீழ் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு தர வேண்டும்.
- யார் தங்களைத் தலைமை தாங்கப் போகிறார்கள் என எதிர்க்கட்சிகளுக்கு தெரியாது.
பீகாரில் அடுத்த மாதம் 6ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, மூன்று நாள் பயணமாக பீகார் சென்றிருந்தார்.
இன்றுடன் அவருடைய 3 நாள் பயணம் முடிவடைகிறது. இந்த நிலையில் புதிய முகமூடி அணிந்த காட்டு ராஜ்ஜியத்தை நம்பாதீர்கள் என பீகார் மக்களுக்கு அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொட்ரபாக அமித் ஷா கூறியதாவது:-
கடந்த 20 வருடங்களாக நாங்கள் பள்ளத்தை நிரப்பியது போன்று பீகார் மக்களின் ஆசிகளை பெற நான் இங்கு வந்துள்ளேன், பள்ளத்தை நிரப்பிய நிலையில், தற்போதுள்ள உறுதியான தரையில் ஒரு பிரமாண்டமான கட்டமைப்பைக் கட்ட நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
புதிய முகமூடி அணிந்து காட்டு ராஜ்ஜியத்தை மீண்டும் கொண்டு வருபவர்களை நம்ப வேண்டாம் கேட்டுக்கொள்கிறேன். நம்பகத்தன்மையான முகமான நிதிஷ் குமாரின் கீழ் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு தர வேண்டும். மத்தியில் இருந்து பிரதமர் மோடியும், பீகார் மாநிலத்தில் இருநது நிதிஷ் குமாரும் பல வருடங்களாக உருவாக்கியதை, மேலும் வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல இது உதவும்.
பிரசாந்த் கிஷோர் புதிய கட்சியைத் தொடங்கி, முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிடுகிறார். வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அவரைப் பற்றிப் பேசுவோம்.
தேர்தலுக்கு முன்னதாக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏராளமான இலவசங்களை அறிவித்ததாகவும், ஆட்சிக் காலம் முழுவதும் மக்களின் துயரங்களைப் பொருட்படுத்தாமல் இருந்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது.
எதிர்க்கட்சிகள் தங்களைப் பற்றி கவலைப்படுவதால் அப்படிச் சொல்கின்றன. யார் தங்களைத் தலைமை தாங்கப் போகிறார்கள், எந்தக் கட்சி யாரை எந்தத் தொகுதியில் நிறுத்த விரும்புகிறது என்பது அவர்களுக்கே தெரியாது.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- வேட்புமனு தாக்கல் காலை முதல் வேகம் எடுத்தது. தேர்தல் பிரசாரமும் சூடு பிடித்துள்ளது.
- முன்னாள் மத்திய அமைச்சர் ராம் கிருபால் யாதவ், தானாபூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முடிவடைந்தது. இன்று கடைசி நாள் என்பதால், வேட்புமனு தாக்கல் காலை முதல் வேகம் எடுத்தது. தேர்தல் பிரசாரமும் சூடு பிடித்துள்ளது.
பா.ஜ.க. மூத்த தலைவரும் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி முங்கேர் மாவட்டம் தாராபூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லால் பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், ஜனசக்தி ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். அவர் வைசாலி மாவட்டம் மகுவா தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதுபோல் முன்னாள் மத்திய அமைச்சர் ராம் கிருபால் யாதவ், தானாபூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இங்கு உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று பிரசாரம் செய்தார். ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ் குமார் தனது தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண்கள் வங்கி கணக்குகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
- ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது.
பீகாரில் நவம்பர் மாதம் 6 மற்றும் நவம்பர் மாதம் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, சரண் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அமித் ஷா பேசியதாவது:-
இந்த வருடம் பீகார் மக்கள் 4 தீபாவளியை கொண்டாடி வருகிறார்கள. ஒன்று பெண்கள் வங்கி கணக்குகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மற்றொன்று ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது. 3ஆவது நவம்பர் 14ஆம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நாள்.
பீகாரில் ஏராளமான கட்டமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. பீகாரில் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு பயணம் செய்ய ஐந்து மணி நேரம் கூட ஆவதில்லை.
இந்த வளர்ச்சி பிரதமர் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரால் இணைந்து செய்யப்பட்டுள்ளது. பீகாரில் எங்கள் அரசு அமைவதற்கு முன் இடம் பெயர்வு, மோசடி, கொலைகள், கடத்தல் பொதுவானதாக இருந்தது.
சிவான் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூரில் கேங்ஸ்டாராக இருந்து அரசியல்வாதியாக மாறிய மறைந்த முகமது ஷகாபுதீன் மகன் ஒசாமா ஷஹாப்பிற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதுபோன்ற வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்தால், பீகாரில் மக்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.






