என் மலர்
பீகார்
- பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
- தேசிய கட்சிகளின் தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி தேசிய கட்சிகளின் தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், பீகாரின் சமஸ்திப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நவம்பர் 6-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் இங்கு நடைபெறும். நவம்பர் 6-ம் தேதி பீகாரின் ஆட்சி யாருடைய கைகளில் இருக்கும் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.
15 ஆண்டுகளாக காட்டு ராஜ்ஜியத்தைப் பரப்பிய கைகளிலோ அல்லது 20 ஆண்டுகளாக நல்லாட்சியைக் கொண்டு வந்த தேசிய ஜனநாயக கூட்டணி கைகளிலா என்பதை நீங்கள் முடிவு செய்யவேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ் பாபுவும், 11 ஆண்டுகளாக பிரதமர் மோடியும் நிதிஷ் பாபுவும் இணைந்து பீகாரின் வளர்ச்சிக்கான எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள 5 கட்சிகளும் 5 பாண்டவர்கள் போல, ஒன்றாக தேர்தல் களத்தில் இறங்கிவிட்டன.
நமக்கு முன்னால் மகாகட்பந்தன் கூட்டணி உள்ளது. அது எங்களுக்கு எதிராக போட்டியிடுவதற்குப் பதிலாக, தங்களுக்குள் போட்டியிடும் அளவுக்கு குழப்பத்தையும் உள்கட்சிப் பூசலையும் கொண்டுள்ளது என தெரிவித்தார்.
- ராஷ்டீரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம்.
- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று பீகாரில் பிரசாரம் செய்தார்.
பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வருகிற 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் ஐக்கிய ஜனதாதளம்- பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், எதிர்கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று பீகாரில் பிரசாரம் செய்தார். பெகுசராய் பகுதியில் அவர் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக ஓட்டு சேகரித்தார்.
முன்னதாக பாட்னா விமான நிலையத்தில் பிரியங்கா காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
ஒரு கோடி வேலை வாய்ப்புகளை வழங்குவதாக பா.ஜ.க கூட்டணி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இதுவரை அவர்கள் அதை வழங்காதது ஏன்? இப்போது அதைப்பற்றி கூறுவது ஏன்?
பீகாரில் மெகா கூட்டணி ஏன் ஆட்சி அமைக்காது. நிச்சயமாக நாங்கள் ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.
- பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
பாட்னா:
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட சட்ட சபைக்கு இரு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி 121 தொகுதிகளுக்கு நடக்கிறது.
லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில் எதிர்க்கட்சிகளின், மகாகட்பந்தன் கூட்டணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது. முதல் மந்திரி நிதிஷ்குமார், பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் வெளியிட்டனர். அதன் விபரம் பின்வருமாறு:
ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு நிதி உதவி ரூ.6,000ல் இருந்து ரூ.9,000ஆக உயர்த்தப்படும்.
பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவு வழங்கப்படும்.
பீகாரில் மேலும் 4 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்படும்.
இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐஐடியும் அமைக்கப்படும்.
பீகாரில் பத்து புதிய தொழில் பூங்காக்கள் திறக்கப்படும்.
பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.10 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
புதிய வீடுகள், இலவச ரேஷன், 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
- பிகாரில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தோல்வியை சந்திக்க உள்ளது.
- 243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் பிரசார களம் பரபரப்பாகி உள்ள நிலையில் நேற்று பீகாரில் சாப்ராவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பிகாரில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தோல்வியை சந்திக்க உள்ளது. பிகார் மக்களை அவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள்.
பஞ்சாபில் இருந்த காங்கிரஸ் முதல்வர் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்களை மாநிலத்திற்குள் அனுமதிக்காதீர்கள் என்று பகிரங்கமாக கூறினார்.
அந்தச் சமயத்தில், அதே மேடையில், தற்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மகள்(பிரியங்கா காந்தி), அதற்குச் சந்தோஷமாக கைதட்டிக்கொண்டிருந்தார்.
அதேபோல் , கர்நாடகா, தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள், பீகார் மக்களை அவதூறு செய்கின்றனர். தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது.
இவ்வளவு நடந்தும், பீகாரில் ஆர்ஜேடி அமைதியாக வாயடைத்துப் போனது போல் இருக்கிறது. இந்தத் தேர்தலில் அவர்கள் எல்லையைக் கடந்துவிட்டனர்.
பீகாரை அவமதித்த அதே காங்கிரஸ் தலைவர்களை, இப்போது ஆர்ஜேடி இங்கே பிரச்சாரம் செய்ய அழைத்துள்ளது" என பேசியுள்ளார்.
முன்னதாக ஒடிசா சட்டமன்றத் தேர்தலின்போது, புரி ஜெகநாதர் கோயிலின் கருவூல சாவி தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில், பிகார் தேர்தலில் தமிழ்நாட்டை குறிப்பிட்டு பிரதமர் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
- இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ.வுக்கு காயம் ஏற்பட்டது.
- எம்.எல்.ஏ.வின் சகோதரருக்கும், ஆதரவாளர்களுக்கும் இந்த தாக்குதலில் காயம் ஏற்பட்டது.
பீகார் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியில் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
திக்ரி சட்டசபை தொகுதியில் இந்துஸ்தானி அவாம் கட்சி போட்டியிடுகிறது. அந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் அனில்குமார் மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்துஸ்தான் அவாம் கட்சி வேட்பாளரும், எம்.எல்.ஏ.வுமான அவர் வாக்கு சேகரிப்பதற்காக கயா மாவட்டத்துக்கு சென்றார். திதோரா கிராமத்தில் பிரசாரம் செய்ய சென்ற போது 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. அதைத் தொடர்ந்து கிராம மக்களும் தாக்கினார்கள்.
உள்ளூரில் சாலை அமைத்து தருமாறு அந்த கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். அதை நிறைவேற்றி தராததால் ஆத்திரமடைந்து கற்கள் மற்றும் செங்கற்களால் கடுமையாக தாக்கினார்கள்.
இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ.வுக்கு காயம் ஏற்பட்டது. கை மற்றும் தலைமையில் பலத்த காயம் ஏற்பட்டது. பாதுகாவலர்கள் அவரைக் காப்பாற்றினார்கள். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எம்.எல்.ஏ.வின் சகோதரருக்கும், ஆதரவாளர்களுக்கும் இந்த தாக்குதலில் காயம் ஏற்பட்டது. கிராம மக்களின் தாக்குதலில் எம்.எல்.ஏ.வின் கார் சேதமானது.
இந்த தாக்குதல் சம்பவம் கேமராவில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் கற்களை வீசிய சிலரை போலீசார் கைது செய்தனர்.
- பிரதமர் மோடி 2-வது கட்டமாக இன்று பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
- சாத் பூஜை திருவிழாவிற்கு யுனெஸ்கோ பாரம்பரிய அடையாளத்தைப் பெற நாங்கள் முயற்சிக்கிறோம்.
பிரதமர் மோடி கடந்த 24-ந்தேதி பீகார் தேர்தலில் தேர்தல் பிரசாரம் செய்து பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். சமாஸ்கிபூர், பெகுசராய் பகுதியில் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி 2-வது கட்டமாக இன்று பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்தார். முசாபர்பூரில் இன்று காலை நடந்த பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-
இங்கு ஏராளமான இளைஞர்களும், பெண்களும் கூடி இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. மீண்டும் ஒருமுறை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைய இருக்கிறது.
சாத் பூஜை (சூரிய வழிபாடு) திருவிழாவிற்கு யுனெஸ்கோ பாரம்பரிய அடையாளத்தைப் பெற நாங்கள் முயற்சிக்கிறோம்.
பீகார் மக்களின் சூரிய வழிபாடு விழாவை காங்கிரசும், ராஷ்டிரீய ஜனதா தளமும் (ஆர்.ஜே.டி.) அவமதித்துவிட்டன. வாக்குகளை பெறுவதற்காக காங்கிரஸ், ஆர்.ஜே.டி. தலைவர்கள் சாத் திருவிழாவை அவமானப்படுத்துகிறார்கள். பீகார் மற்றும் நாட்டு மக்கள் இதை பொறுத்துக் கொள்வார்களா? நீங்கள் அவர்களுடன் உடன்படுகிறீர்களா? நீங்கள் அவர்களை தண்டிப்பீர்களா? அல்லது இல்லையா?
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பீகாரை மேம்படுத்தி வருகிறோம். பீகாரின் வளர்ச்சியை உறுதி செய்துள்ளோம். ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரசால் ஒரு போதும் வளர்ச்சி அடைய செய்ய முடியாது. இந்த கட்சிகள் பல ஆண்டு களாக பீகாரை ஆட்சி செய்தன. ஆனால் அவர்கள் மக்களுக்கு துரோகம் மட்டுமே செய்தனர். பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளித்தனர்.
ஆர்.ஜே.டி.-காங்கிரசால் கொடுமை, கசப்பு, தவறான ஆட்சி, ஊழல் உள்ளிட்ட 5 விஷயங்களில் அடையாளம் காண முடியும். ரெயில் வேயை கொள்ளையடித் தார்கள். பீகாரை மேம்படுத்த போவதாக சொல்வார்கள். பீகாரில் ஆர்.ஜே.டி. ஆட்சி யில் குண்டர்கள் வாகன ஷோரூமை கொள்ளை அடித்தனர். 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கடத்தல் வழக்குகள் இருந்தன.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருந்து வருகிறது. ஏழைக ளுக்கு நிரந்தர வீடுகளை வழங்கினோம், பெண்களின் பெயரில் பதிவு செய்தோம். எங்கள் சகோதரிகளின் கஷ்டங்கள் குறையும் வகையில் குழாய் நீர் இணைப்புகள், இலவச எரிவாயு இணைப்புகள் மற்றும் இலவச ரேஷன் பொருட்களை வழங்கி னோம்.
இவ்வாறு மோடி பேசினார்.
- இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
- பீகார் தேர்தலுக்கான 101 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது.
பீகாரில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் என்டிஏ கூட்டணி மற்றும் மகாபந்தன் (இந்தியா) கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து 32 இடங்களில் மட்டும் களம் காண்கிறது.
இந்நிலையில் பீகாரின் கோபால்கஞ்ச் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த ஓவைசி, தேர்தல் பிரச்சாரத்தின் போது பீகாரில் இருந்து ஊடுருவல்காரர்களை ஒழிப்போம் என்று அமித் ஷா பலமுறை கூறி வருகிறார்.
இருப்பினும், மோடிக்கும் ஷாவுக்கும் மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். ஊடுருவல்காரர்கள் டெல்லியில் உள்ளனர்.
வங்கதேச மக்களால் வெளியேற்றப்பட்ட ஒரு ஊடுருவல்காரரை மோடி வரவேற்று, அவரை சகோதரி என்று அழைத்து வருகிறார்" என்று ஷேக் ஹசீனாவை மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய ஓவைசி,"அனைவரின் வளர்ச்சிக்கும் பாடுபடுவதாகக் கூறும் நரேந்திர மோடி, பீகார் தேர்தலில் ஒரு முஸ்லிமுக்கும் ஒரு சீட் கூட வழங்கவில்லை. பீகார் தேர்தலுக்கான 101 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இடம்பெறவில்லை" என்று குறிப்பிட்டார்.
- பிரதமர் மோடி உங்கள் வாக்குகளை விரும்புகிறார். நீங்கள் டான்ஸ ஆட சொன்னால் ஆடுவார்.
- வாக்காளர்களையும், இந்திய ஜனநாயகத்தையும் கேலி செய்துவிட்டார்- பாஜக.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று பிரசாரத்தை தொடங்கினார்.
முதல் பிரசார கூட்டத்திலேயே பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். பிரதமர் குறித்து ராகுல் காந்தி கூறியதாவது:-
பிரதமர் மோடி உங்கள் வாக்குகளை விரும்புகிறார். நீங்கள் நரேந்திர மோடியை டான்ஸ ஆட சொன்னால், அவர் டான்ஸ் ஆடுவார். அவர்கள் உங்கள் வாக்குகளை திருடுவதில் ஈடுபட்டுள்ளனர். ஏனென்றால், அவர்கள் இந்த தேர்தலை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்கள். மகாராஷ்டிரா, அரியானாவில் தேர்தல்களை திருடினார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். பீகாரில் அவர்கள் உங்களுடைய சிறப்பை திருட முயற்சி செய்வார்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பாஜக உடனடியாக பதலடி கொடுத்துள்ளது. பாஜக-வின் செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி "ராகுல் காந்தி லோக்கல் குண்டர் போல் பேசுகிறார். பிரதமருக்காக வாக்களித்த அனைத்து மக்களையும் அவமதித்துள்ளார். வாக்காளர்களையும், இந்திய ஜனநாயகத்தையும் கேலி செய்துவிட்டார்" என பதில் கொடுத்துள்ளார்.
- பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
- பீகார் சட்டசபைக்கு 2 கட்டமாக அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக பணியாற்றி வருகிறது.
ஆட்சியைக் கைப்பற்றும் வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி-காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே, பீகார் மாநிலத்தின் சரன் மாவட்டத்தில் உள்ள பர்சா பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. இதில் ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் பவன் கெரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சட்டசபைக்கான தேர்தல் வாக்குறுதிகளை இந்தியா கூட்டணி இன்று வெளியிட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் இலவசம்
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலைவாய்ப்பு வழங்குவோம்.
மகளிருக்கு மாதம் தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.
- தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டது.
- முதலில் ராகுல் காந்தி முசாபர்பூரில் உள்ள சகரா தொகுதியில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார்.
243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ந்தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரியணையில் அமரப்போவது யார்? என்பது நவம்பர் 14-ந் தேதி தெரியும்.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு)- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர களப் பணியாற்றி வருகிறது.
நிதிஷ் குமாரிடம் இருந்து ஆட்சியை இந்த முறை கைப்பற்றி விடவேண்டும் என்ற வேட்கையில் எதிர்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி (ராஷ்டிரிய ஜனதா தளம்)-காங்கிரசின் மகா பந்தன் கூட்டணி இருக்கிறது.
பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர். ஆனால் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பிரசாரத்தை இன்னும் தொடங்கவில்லை.
தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டது. கூட்டணி கட்சியினரே 12 தொகுதிகளில் மோதும் நிலை உருவாகியுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக ராகுல் காந்திக்கும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல் வெளியானது. முதல்-மந்திரி வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் ராகுல் காந்தி பீகாரில் நாளை தேர்தல் பிரசாரம் செய்கிறார். முசாபர்பூர், தர்பங்கா ஆகிய 2 இடங்களில் அவர் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.
முதலில் ராகுல் காந்தி முசாபர்பூரில் உள்ள சகரா தொகுதியில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார்.
ராகுல் காந்தி பங்கேற்கும் இந்த பொதுக்கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்கிறார் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ரத்தோர் தெரிவித்தார்.
பின்னர் ராகுல் காந்தி தர்பாங்காவில் பிரசாரம் செய்து இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
- தற்போதைய SIR பணி சுதந்திரத்திற்குப் பிறகு 9ஆவது நடவடிக்கையாகும்.
- 21 ஆண்டுகளுக்கு முன்னதாக இதுபோன்ற பணி நடந்துள்ளது.
பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்பின் இந்தியா முழுவதும் SIR பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
அடுத்த வரும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் இந்த மாநிலங்களில் SIR பணி மேற்கொள்ளப்படலாம் எனத் தகவல் வெளியானது.
இதற்கிடையே, SIR குறித்து இந்திய தேர்தல் தலைமை ஆணையர் நாளை (இன்று) செய்தியாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது 12 மாநிலங்களில் 2ஆம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
பீகாரில் முறையீடு ஏதுமின்றி முதற்கட்ட சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்றது. அரசியல் கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் வாக்காளர் பட்டியலின் தரம் குறித்த பிரச்சினையை எழுப்பியுள்ளன. தற்போதைய SIR சுதந்திரம் அடைந்த பிறகு 9ஆவது மாற்றமாகும். கடைசியாக 21 ஆண்டுகளுக்கு முன்னதாக 2002-2004-ல் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றது.
- என்டிஏ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட மனுதாக்கல்.
- கட்சியின் சித்தாந்தத்திற்கு எதிராக செயல்பட்டதாக நடவடிக்கை.
பீகாரில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, நிதிஷ் குமாரின் ஆர்.ஜே.டி. கட்சிகள் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிராக் பஸ்வான் கட்சி 29 இடங்களில் போட்டியிடுகிறது.
போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் கட்சி அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களை வாபஸ் செய்யுமாறு கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டும், அவர்கள் வாபஸ் பெற மறுத்துவிட்டனர்.
கஹல்கான் தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் பவன் யாதவ். இவருக்கு பாஜக மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. அவர் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
அதேபோல் சன்னி யாதவ், ஷ்ரவன் குஷ்ஹகா, உத்தம் சவுத்ரி, மாருதி நந்தன் மாருதி மற்றும் பவன் சவுத்ரி ஆகியோரும் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய கட்சி உறுபினரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.






