என் மலர்
நீங்கள் தேடியது "sun worship"
- பிரதமர் மோடி 2-வது கட்டமாக இன்று பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
- சாத் பூஜை திருவிழாவிற்கு யுனெஸ்கோ பாரம்பரிய அடையாளத்தைப் பெற நாங்கள் முயற்சிக்கிறோம்.
பிரதமர் மோடி கடந்த 24-ந்தேதி பீகார் தேர்தலில் தேர்தல் பிரசாரம் செய்து பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். சமாஸ்கிபூர், பெகுசராய் பகுதியில் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி 2-வது கட்டமாக இன்று பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்தார். முசாபர்பூரில் இன்று காலை நடந்த பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-
இங்கு ஏராளமான இளைஞர்களும், பெண்களும் கூடி இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. மீண்டும் ஒருமுறை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைய இருக்கிறது.
சாத் பூஜை (சூரிய வழிபாடு) திருவிழாவிற்கு யுனெஸ்கோ பாரம்பரிய அடையாளத்தைப் பெற நாங்கள் முயற்சிக்கிறோம்.
பீகார் மக்களின் சூரிய வழிபாடு விழாவை காங்கிரசும், ராஷ்டிரீய ஜனதா தளமும் (ஆர்.ஜே.டி.) அவமதித்துவிட்டன. வாக்குகளை பெறுவதற்காக காங்கிரஸ், ஆர்.ஜே.டி. தலைவர்கள் சாத் திருவிழாவை அவமானப்படுத்துகிறார்கள். பீகார் மற்றும் நாட்டு மக்கள் இதை பொறுத்துக் கொள்வார்களா? நீங்கள் அவர்களுடன் உடன்படுகிறீர்களா? நீங்கள் அவர்களை தண்டிப்பீர்களா? அல்லது இல்லையா?
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பீகாரை மேம்படுத்தி வருகிறோம். பீகாரின் வளர்ச்சியை உறுதி செய்துள்ளோம். ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரசால் ஒரு போதும் வளர்ச்சி அடைய செய்ய முடியாது. இந்த கட்சிகள் பல ஆண்டு களாக பீகாரை ஆட்சி செய்தன. ஆனால் அவர்கள் மக்களுக்கு துரோகம் மட்டுமே செய்தனர். பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளித்தனர்.
ஆர்.ஜே.டி.-காங்கிரசால் கொடுமை, கசப்பு, தவறான ஆட்சி, ஊழல் உள்ளிட்ட 5 விஷயங்களில் அடையாளம் காண முடியும். ரெயில் வேயை கொள்ளையடித் தார்கள். பீகாரை மேம்படுத்த போவதாக சொல்வார்கள். பீகாரில் ஆர்.ஜே.டி. ஆட்சி யில் குண்டர்கள் வாகன ஷோரூமை கொள்ளை அடித்தனர். 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கடத்தல் வழக்குகள் இருந்தன.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருந்து வருகிறது. ஏழைக ளுக்கு நிரந்தர வீடுகளை வழங்கினோம், பெண்களின் பெயரில் பதிவு செய்தோம். எங்கள் சகோதரிகளின் கஷ்டங்கள் குறையும் வகையில் குழாய் நீர் இணைப்புகள், இலவச எரிவாயு இணைப்புகள் மற்றும் இலவச ரேஷன் பொருட்களை வழங்கி னோம்.
இவ்வாறு மோடி பேசினார்.
- தியானம், யோகாவைத் தொடங்க ரத சப்தமி சிறந்த தினமாக பார்க்கப்படுகிது.
- 7 எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராடுவது மிகவும் அவசியம்.
அமாவாசைக்கு பிறகு வரும் 7-வது நாள் திதியை 'சப்தமி' என்பார்கள். இது சூரியன் அவதரித்த தினம் என்பதால், இதனை ரத சப்தமி' என்று போற்றுகிறார்கள்.

காசியப முனிவருக்கு பல மனைவிகள் உண்டு. அவர்களில் ஒருவர், அதிதி. ஒரு முறை அவர் தன் கணவரான காசியபருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது வாசலில் யாசகம் கேட்டு ஒரு அந்தணர் வந்து நின்றார். அப்போது அதிதி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், மெதுவாக நடந்து சென்று அந்தணருக்கான உணவை எடுத்துக் கொண்டு வந்தார்.
அப்போது யாசகம் கேட்டு வந்த அந்தணர், "உணவு எடுத்துவர இவ்வளவு தாமதமா? நீ என்னை உதாசீனப்படுத்தி விட்டாய். எனவே உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்" என்று சாபம் கொடுத்து விட்டுச் சென்றார்.
பயந்து போன அதிதி, இதுபற்றி தனது கணவரிடம் தெரிவித்தார். காசியபரோ, "நீ வருந்த வேண்டாம். தேவர் உலகத்தில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்" என்று கூறினார்.
அதன்படியே பிரகாசமான ஒளியுடன் சூரியன், அதிதிக்கு மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த தினமே 'ரத சப்தமி' ஆகும். அன்றைய தினம் சூரியனை நாம் வழிபாடு செய்தால், எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
அன்றைய தினம் செய்யும் தர்மங்களுக்கு அதிக புண்ணியம் வந்துசேரும். அதேபோல் இந்நாளில் தொடங்கும் தொழில், சிறப்பான வளர்ச்சியைப் பெறும். கணவனை இழந்த பெண்கள், இந்த வழிபாட்டை மேற்கொண்டால் அடுத்த பிறவியில் இந்த நிலை வராது என்கிறது புராணங்கள்.
தியானம், யோகாவைத் தொடங்க ரத சப்தமி சிறந்த தினமாக பார்க்கப்படுகிது. ரத சப்தமி அன்று சூரியனுக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் விளக்கேற்றி வழிபட்டால் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
சூரியனுக்கு உகந்த தானியம், கோதுமை. எனவே ரத சப்தமி அன்று சூரியனுக்கான நைவேத்தியத்தில் கோதுமையால் செய்யப்பட்ட உணவு இருப்பது பெரும் புண்ணியம் தரும்.
ரத சப்தமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, சூரியனை வணங்க வேண்டும். பின்னர் சூரியனுக்குரிய துதிகளைச் சொல்ல வேண்டும். ரத சப்தமி அன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் வாய்ந்தது.

சூரியனுக்கு உகந்த நைவேத்தியம், சர்க்கரைப் பொங்கல். அதனை சூடாக இருக்கும் போதே நைவேத்தியம் செய்துவிட வேண்டும். வழிபாட்டிற்குப் பிறகு அந்த சர்க்கரைப் பொங்கலை, மற்றவர்களுக்கு வழங்கி நாமும் சாப்பிட வேண்டும்.
ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடுங்கள். சூரியனுக்கு உகந்த பத்ரம் (இலை), எருக்கம் இலை ஆகும். ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராடுவது மிகவும் அவசியம். இதனால் ஆரோக்கியமும் செல்வ வளமும் பெருகும்.
நீராடும் போது ஏழு என்ற எண்ணிக்கையில் எருக்கம் இலைகளை எடுத்து அடுக்கிவைத்து, அதன் மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆண்கள் என்றால் அதனுடன் விபூதியும், பெண்கள் என்றால் அதனுடன் மஞ்சளும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த இலை அடுக்கை, தலை மீது வைத்து நீராட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக, மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ. அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்களும் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு, நம் உடலில் பாய்ந்து,உடல் உபாதைகளையும், நோய்களையும் நீக்கும் என்பது ஐதீகம்.
சூரியன், நாராயணரின் அம்சம் என்பதால், ரத சப்தமி தினம் அன்று, பெருமாள் கோவில்களில் அவர் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குவார். சூரியன் வழிபாட்டை தினமும் கூட செய்யலாம்.
இப்படி தினமும் அதிகாலை நீராடி சூரியனை வழிபடுவதன் மூலமாக செல்வந்தராக உயரும் வாய்ப்பு கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
- வயலில் நல்ல நாள் பார்த்து படையலிட்டு பூஜைகள் செய்து ஏர் கலப்பை கொண்டு உழவு செய்தால் அந்த ஆண்டு வளமான முறையில் விவசாயம் நடைபெறும் என்பது பாரம்பரிய வழக்கம்.
- பாரம்பரிய முறையில் பொன்னேர் பூட்டும் விழாவாக இதனை இந்திரன் கோட்டம் என்ற அமைப்பு ஒருங்கிணைத்து நடத்தியது.
பூதலூர்:
பூதலூர் அருகே உள்ள வீரமரசன்பேட்டடை கிராமத்தில் வைகாசி விசாகத்தை ஒட்டி உழவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
பாரம்பரிய முறையில் பொன்னேர் பூட்டும் விழாவாக இதனை இந்திரன் கோட்டம் என்ற அமைப்பு ஒருங்கிணைத்து நடத்தியது. வயலில் நல்ல நாள் பார்த்து படையலிட்டு பூஜைகள் செய்து ஏர் கலப்பை கொண்டு உழவு செய்தால் அந்த ஆண்டு வளமான முறையில் விவசாயம் நடைபெறும் என்பது பாரம்பரிய வழக்கம்.
தற்போதைய சூழ்நிலையில் விவசாயம் எந்திரமயமாகி விட்டது. இயற்கை வேளாண்மை பாரம்பரிய வேளாண்மை என்பதை வரும் தலைமுறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திரன் கோட்டம் என்ற அமைப்பு பொன்னேர் பூட்டும் திருவிழாவை நடத்தியது.வீரமரசம்பேட்டை கிராமத்தில் உள்ள ஒரு வயலில் வாழையிலையில் படையலிட்டு சூரியனுக்கு வழிபாடு நடத்திய பின்னர். கலப்பையில் மாடுகளை பூட்டி உழவு செய்து உழவு பணிகளை தொடங்கினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.






