என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை.
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
* மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.

* குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
* முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.
* முருங்கைக்கீரையின் சாறு இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லது.
குறிப்பு: மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு சிறப்பு.
* மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.
* ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

* குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
* முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.
* முருங்கைக்கீரையின் சாறு இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லது.
குறிப்பு: மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு சிறப்பு.
பலவிதமான மசாலாவில் செய்த சமோசாவை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - ஒரு கப்
உப்பு - ஒரு சிட்டிகை
ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
தேங்காய்த் துருவல் - அரை கப்
பன்னீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
வறுத்த பிரெட் தூள் (Toasted bread crumbs) - கால் கப்
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
உடைத்த நட்ஸ் (அக்ரூட், பாதாம் முந்திரி) - 2 டேபிள்ஸ்பூன் (வறுக்கவும்)
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
மைதா மாவுடன் உப்பு, ஆலிவ் எண்ணெய், ஃபுட் கலர் சேர்த்து ஐஸ் வாட்டர் தெளித்துக் கெட்டியாகச் சப்பாத்தி மாவுப் பதத்துக்கு நன்றாக அடித்துப் பிசையவும்.
இந்த மாவின் மேலே சிறிதளவு எண்ணெய் தடவி ஈரத்துணியில் சுற்றி அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
தேங்காய்த் துருவலுடன் பன்னீர் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உடைத்த நட்ஸ் வகைகள், வறுத்த பிரெட் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதுவே இனிப்புப் பூரணம்.
பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி நீளவாக்கில் சப்பாத்தியாகத் தேய்க்கவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, சூடானதும் இந்தச் சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் லேசாக... அதாவது அரை நிமிடம் சூடு செய்து எடுக்கவும். (முழுவதும் வேகவிடக் கூடாது).
இதன்மீது ஈரத்துணியை வைத்து மூடவும் (அப்படியே வைத்தால் காய்ந்துவிடும்; சமோசா மடிக்க வராது. தேவைப்படும்போது பயன்படுத்தலாம்).
பிறகு, சப்பாத்திகளை இரண்டாக நீளவாக்கில் வெட்டவும். ஓரம் முழுவதும் தண்ணீர் தடவவும். நேர்க்கோடாக இருக்கும் பகுதியை நடுவில் கொண்டுவந்து முக்கோணம் போல் செய்து மைதா பசையால் ஒட்டவும்.
இதன் நடுவே சிறிதளவு இனிப்புப் பூரணம் வைத்து ஓரங்களை அழுத்தி ஒட்டி மூடவும். மீதமுள்ள சமோசாக்களையும் இதே மாதிரி தயாரிக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, தயாரித்த சமோசாக்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
சூப்பரான ஸ்நாக்ஸ் இனிப்பு சமோசா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மைதா மாவு - ஒரு கப்
உப்பு - ஒரு சிட்டிகை
ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
தேங்காய்த் துருவல் - அரை கப்
பன்னீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
வறுத்த பிரெட் தூள் (Toasted bread crumbs) - கால் கப்
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
உடைத்த நட்ஸ் (அக்ரூட், பாதாம் முந்திரி) - 2 டேபிள்ஸ்பூன் (வறுக்கவும்)
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
மைதா மாவுடன் உப்பு, ஆலிவ் எண்ணெய், ஃபுட் கலர் சேர்த்து ஐஸ் வாட்டர் தெளித்துக் கெட்டியாகச் சப்பாத்தி மாவுப் பதத்துக்கு நன்றாக அடித்துப் பிசையவும்.
இந்த மாவின் மேலே சிறிதளவு எண்ணெய் தடவி ஈரத்துணியில் சுற்றி அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
தேங்காய்த் துருவலுடன் பன்னீர் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உடைத்த நட்ஸ் வகைகள், வறுத்த பிரெட் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதுவே இனிப்புப் பூரணம்.
பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி நீளவாக்கில் சப்பாத்தியாகத் தேய்க்கவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, சூடானதும் இந்தச் சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் லேசாக... அதாவது அரை நிமிடம் சூடு செய்து எடுக்கவும். (முழுவதும் வேகவிடக் கூடாது).
இதன்மீது ஈரத்துணியை வைத்து மூடவும் (அப்படியே வைத்தால் காய்ந்துவிடும்; சமோசா மடிக்க வராது. தேவைப்படும்போது பயன்படுத்தலாம்).
பிறகு, சப்பாத்திகளை இரண்டாக நீளவாக்கில் வெட்டவும். ஓரம் முழுவதும் தண்ணீர் தடவவும். நேர்க்கோடாக இருக்கும் பகுதியை நடுவில் கொண்டுவந்து முக்கோணம் போல் செய்து மைதா பசையால் ஒட்டவும்.
இதன் நடுவே சிறிதளவு இனிப்புப் பூரணம் வைத்து ஓரங்களை அழுத்தி ஒட்டி மூடவும். மீதமுள்ள சமோசாக்களையும் இதே மாதிரி தயாரிக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, தயாரித்த சமோசாக்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
சூப்பரான ஸ்நாக்ஸ் இனிப்பு சமோசா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகைகளைப் பார்த்து கற்பனைக் கோட்டை கட்டிக் கொண்டிருந்த பல பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது.
பெண்களிடம் திரை உலகில் மின்னும் ஆசை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அழகாக இருக்கும் பெண்கள் அதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். குறைந்த வயதில் நிறைய பணமும், புகழும் சம்பாதிக்க திரை உலகம் ஏற்றது என்ற கருத்து அவர்களிடம் வலுப்பெற்றிருக்கிறது. அதனால் படிக்கவேண்டிய வயதில் அவர்களுக்கு படிப்பில் கவனம் குறைகிறது. கல்வி மீதான நம்பிக்கையும் குறைகிறது.
திரைப்பட கல்லூரிகள், விளம்பர துறை, மாடலிங் துறை போன்று எங்கு பார்த்தாலும் பெண்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஏதேனும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தால் மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் படிப்பைக்கூட பாதியில் விட்டு விடுகிறார்கள். பணம், புகழ் எல்லாவற்றையும் வேகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு வகை பதற்றம் அவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
தங்களது பிள்ளைகள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருப்பதாக இன்னொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதற்காக கல்வி, திருமணம் போன்றவைகளை தள்ளிப்போடவும் தயாராக இருக்கிறார்கள். நடிப்புக் கல்லூரியில் சேர்ந்து கற்கவேண்டும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. அங்கு கற்கும்போதே நட்சத்திரமாகிவிட்டதைப் போன்று கனவு காண்கிறார்கள். அந்த கனவு வாழ்க்கைதான் இப்போது நிறைய பேருக்கு பிடித்தமானதாக இருக்கிறது. யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு குறைவாகத்தான் இருக்கிறது. கனவிலே வாழ்க்கை நடத்துகிறார்கள் பல கன்னிப்பெண்கள்.
பல பெண்களை பெற்றோர்களே சினிமாவில் திணிக்கிறார்கள். குழந்தையாக இருக்கும்போதே விளம்பரங்களில் நடிக்க விடுகிறார்கள். படிப்பு பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. அதோ அந்த டி.வி. விளம்பரத்தில் வருவது என் பெண்தான் என்று பலரிடமும் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதில் அவர்களுக்கு ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி கிடைக்கிறது. கல்வி என்பது எதிர்காலத்தின் அஸ்திவாரம். இதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொண்டால்தான் பின்பு குழந்தைகளுக்கு புரியவைக்க முடியும்.

சினிமா மோகம் சிறுவயதிலே குழந்தைகளிடம் ஏற்பட பெற்றோரின் நடவடிக்கைகளும், குடும்பச் சூழலும் ஒரு காரணம். இப்போதெல்லாம் குழந்தைகள் தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளத்திலும்தான் கண் விழிக்கிறார்கள். வெகு நேரம் அதிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். பெற்றோர்களும் விட்டது தொல்லை என்று கருதி, அதை தடுக்க முன் வருவதில்லை. அதன் மூலம் கண் பாதிக்கப்படுகிறது. அறிவு வளர்ச்சியடைவதில்லை. ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. வெளி உலக தொடர்பும் இல்லாமல் போகிறது. திரைக்காட்சிகளுக்குள்ளே மூழ்கி கிடக்கும்போது எதிர்கால ஆர்வமும் அதை சுற்றித்தான் ஏற்படுகிறது. அவர்களிடம் வயதுக்கு மீறிய பேச்சு இருக்கிறது. அதை அறிவு என்று வகைப்படுத்திக் கொள்ளக்கூடாது. அறிவு என்பது சிந்திக்கும் திறனையும், எதிர்கால சரியான திட்டமிடுதலையும் உள்ளடக்கியது.
முன்பு சர்க்கஸில் மிருகங்கள் ஈடுபடுத்தப்பட்டன. அவை மனிதன் கற்றுக்கொடுத்ததை அப்படியே திருப்பிச் செய்யும். அது அறிவல்ல, பழக்கம். அதுபோல் குழந்தைகளுக்கும் தேவையில்லாதவைகளை கற்றுக்கொடுத்து, பழக்கப்படுத்தக்கூடாது. குழந்தைகளால் இந்த உலகத்தில் இருந்து நிறைய அனுபவங்களை பெறமுடியும். அவைகளை குழந்தைகள் பெற வழிகாட்டவேண்டும். திரை கவர்ச்சிக்குள் குழந்தைகளை சிக்கவைக்க வழிகாட்டக்கூடாது.
ஆண்களுக்கும் சினிமா ஆசை உண்டு. ஆனாலும் அதிக சினிமா தாக்கம் பெண்களுக்குத்தான் ஏற்படுகிறது. சிறுவயதிலேயே அவர்கள் தங்களை சினிமா நடிகைகளைபோல் பாவித்துக்கொண்டு, அவர்களைப் போலவே மாற நினைக்கிறார்கள். உடலை வெளிக்காட்டும் கவர்ச்சி உடைகளை சினிமாவிற்கு உண்டான ஒரு தகுதியாக கருதுகிறார்கள். விதவிதமான சிகை அலங்காரம், ஒப்பனைகள் என்று தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள். எந்த அளவு இவை எல்லாம் அவர்கள் எதிர்காலத்தை வளப்படுத்த உதவும் என்பதற்கு எந்த முன்னுதாரணமும் இல்லை.
கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகைகளைப் பார்த்து கற்பனைக் கோட்டை கட்டிக் கொண்டிருந்த பல பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. அவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் திருமணமும் நடக்காமல், வேறு வேலைக்கும் போக முடியாமல் சினிமா ஆசையும் நிறைவேறாமல் அந்தரத்தில் நின்று விடுகிறார்கள். இதுதான் பரிதாபம். வயதுக்கு மீறிய பேச்சு, வயதுக்கு மீறிய ஒப்பனை இது மட்டுமே சினிமா தகுதியல்ல. அப்படியே எல்லா தகுதிகளும் இருந்தாலும் எல்லோருக்கும் அப்படியொரு வாய்ப்பு கிடைத்துவிடும் என்று சொல்லவும் முடியாது.
பெண்களின் வாழ்க்கையில் சினிமா கட்டாயம் இல்லை.. ஆனால் கல்வி கட்டாயம்..
திரைப்பட கல்லூரிகள், விளம்பர துறை, மாடலிங் துறை போன்று எங்கு பார்த்தாலும் பெண்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஏதேனும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தால் மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் படிப்பைக்கூட பாதியில் விட்டு விடுகிறார்கள். பணம், புகழ் எல்லாவற்றையும் வேகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு வகை பதற்றம் அவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
தங்களது பிள்ளைகள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருப்பதாக இன்னொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதற்காக கல்வி, திருமணம் போன்றவைகளை தள்ளிப்போடவும் தயாராக இருக்கிறார்கள். நடிப்புக் கல்லூரியில் சேர்ந்து கற்கவேண்டும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. அங்கு கற்கும்போதே நட்சத்திரமாகிவிட்டதைப் போன்று கனவு காண்கிறார்கள். அந்த கனவு வாழ்க்கைதான் இப்போது நிறைய பேருக்கு பிடித்தமானதாக இருக்கிறது. யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு குறைவாகத்தான் இருக்கிறது. கனவிலே வாழ்க்கை நடத்துகிறார்கள் பல கன்னிப்பெண்கள்.
பல பெண்களை பெற்றோர்களே சினிமாவில் திணிக்கிறார்கள். குழந்தையாக இருக்கும்போதே விளம்பரங்களில் நடிக்க விடுகிறார்கள். படிப்பு பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. அதோ அந்த டி.வி. விளம்பரத்தில் வருவது என் பெண்தான் என்று பலரிடமும் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதில் அவர்களுக்கு ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி கிடைக்கிறது. கல்வி என்பது எதிர்காலத்தின் அஸ்திவாரம். இதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொண்டால்தான் பின்பு குழந்தைகளுக்கு புரியவைக்க முடியும்.

சினிமா மோகம் சிறுவயதிலே குழந்தைகளிடம் ஏற்பட பெற்றோரின் நடவடிக்கைகளும், குடும்பச் சூழலும் ஒரு காரணம். இப்போதெல்லாம் குழந்தைகள் தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளத்திலும்தான் கண் விழிக்கிறார்கள். வெகு நேரம் அதிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். பெற்றோர்களும் விட்டது தொல்லை என்று கருதி, அதை தடுக்க முன் வருவதில்லை. அதன் மூலம் கண் பாதிக்கப்படுகிறது. அறிவு வளர்ச்சியடைவதில்லை. ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. வெளி உலக தொடர்பும் இல்லாமல் போகிறது. திரைக்காட்சிகளுக்குள்ளே மூழ்கி கிடக்கும்போது எதிர்கால ஆர்வமும் அதை சுற்றித்தான் ஏற்படுகிறது. அவர்களிடம் வயதுக்கு மீறிய பேச்சு இருக்கிறது. அதை அறிவு என்று வகைப்படுத்திக் கொள்ளக்கூடாது. அறிவு என்பது சிந்திக்கும் திறனையும், எதிர்கால சரியான திட்டமிடுதலையும் உள்ளடக்கியது.
முன்பு சர்க்கஸில் மிருகங்கள் ஈடுபடுத்தப்பட்டன. அவை மனிதன் கற்றுக்கொடுத்ததை அப்படியே திருப்பிச் செய்யும். அது அறிவல்ல, பழக்கம். அதுபோல் குழந்தைகளுக்கும் தேவையில்லாதவைகளை கற்றுக்கொடுத்து, பழக்கப்படுத்தக்கூடாது. குழந்தைகளால் இந்த உலகத்தில் இருந்து நிறைய அனுபவங்களை பெறமுடியும். அவைகளை குழந்தைகள் பெற வழிகாட்டவேண்டும். திரை கவர்ச்சிக்குள் குழந்தைகளை சிக்கவைக்க வழிகாட்டக்கூடாது.
ஆண்களுக்கும் சினிமா ஆசை உண்டு. ஆனாலும் அதிக சினிமா தாக்கம் பெண்களுக்குத்தான் ஏற்படுகிறது. சிறுவயதிலேயே அவர்கள் தங்களை சினிமா நடிகைகளைபோல் பாவித்துக்கொண்டு, அவர்களைப் போலவே மாற நினைக்கிறார்கள். உடலை வெளிக்காட்டும் கவர்ச்சி உடைகளை சினிமாவிற்கு உண்டான ஒரு தகுதியாக கருதுகிறார்கள். விதவிதமான சிகை அலங்காரம், ஒப்பனைகள் என்று தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள். எந்த அளவு இவை எல்லாம் அவர்கள் எதிர்காலத்தை வளப்படுத்த உதவும் என்பதற்கு எந்த முன்னுதாரணமும் இல்லை.
கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகைகளைப் பார்த்து கற்பனைக் கோட்டை கட்டிக் கொண்டிருந்த பல பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. அவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் திருமணமும் நடக்காமல், வேறு வேலைக்கும் போக முடியாமல் சினிமா ஆசையும் நிறைவேறாமல் அந்தரத்தில் நின்று விடுகிறார்கள். இதுதான் பரிதாபம். வயதுக்கு மீறிய பேச்சு, வயதுக்கு மீறிய ஒப்பனை இது மட்டுமே சினிமா தகுதியல்ல. அப்படியே எல்லா தகுதிகளும் இருந்தாலும் எல்லோருக்கும் அப்படியொரு வாய்ப்பு கிடைத்துவிடும் என்று சொல்லவும் முடியாது.
பெண்களின் வாழ்க்கையில் சினிமா கட்டாயம் இல்லை.. ஆனால் கல்வி கட்டாயம்..
திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் இதை உண்ணலாம். நீரில் ஊற வைத்த உலர் திராட்சை பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
திராட்சையில் பலவகைகள் இருந்தாலும் கருப்பு திராட்சையில்தான் அதிக மருத்துவ குணம் உள்ளது. கருநீலம், கருஞ்சிவப்பு ஆகிய இரண்டு ரகத்திலும் ‘ஆந்தோசயானின்’, ‘பாலி பீனால்’ ஆகிய வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அவை புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். புற்றுநோய் வந்தால் அதன் தீவிரத்தை குறைக்கும்.
திராட்சையில் அதிக அளவில் நார்ச்சத்தும், ப்ரூக்டோஸ் எனும் பழச்சர்க்கரையும் உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் இதை உண்ணலாம். நீரில் ஊற வைத்த உலர் திராட்சை பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். இதில் இருக்கும் ‘ப்ரூக்டோஸ்’ சாப்பிட்ட உடன் உற்சாகத்தை வழங்கும்.
திராட்சையை சர்க்கரை நோயாளிகள் நிறைய சாப்பிடலாம் என்று சிலர் சொல்கிறார்கள். அது தவறு. சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவு மட்டும் உண்ணலாம். இதில் வைட்டமின்-சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதை அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தே அதற்கு காரணம்.

பொட்டாசியம் சத்தும் உள்ளதால் இருதய நோயாளிகள் இதை உண்ணலாம். வெயில் காலங்களில் வியர்வை இழப்பால் உண்டாகும் நீர்ச்சத்து குறைபாட்டை இது போக்கி, உற்சாகம் தரும். முகப்பரு வராமல் இருக்கவும், உடல்சூடு குறையவும், தோல் நோய்கள் குறையவும் திராட்சை பழத்தை சாப்பிடலாம். திராட்சையில் இருக்கும் ‘ரெஸ்வெராட்ரால்’ எனும் சத்து, நோய்க்கான தடுப்பு மருந்துபோல் செயல்படுகிறது. இது கணைய புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, வயிற்று புற்றுநோய் போன்றவைகளின் பாதிப்பை குறைக்கும்.
திராட்சை விதையில் பெருமளவு கால்சிய சத்து உள்ளது. கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் எலும்பு நோய்களுக்கு இது நல்ல மருந்து. திராட்சையில் இருந்து தயார் செய்யப்படும் ‘ரெட் ஒயின்’ இதயத்துக்கு நல்லது. சித்த மருத்துவத்தில் திராட்சை கலந்த மருந்துகள் தயார் செய்யப்படுகின்றன.
திராட்சையில் அதிக அளவில் நார்ச்சத்தும், ப்ரூக்டோஸ் எனும் பழச்சர்க்கரையும் உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் இதை உண்ணலாம். நீரில் ஊற வைத்த உலர் திராட்சை பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். இதில் இருக்கும் ‘ப்ரூக்டோஸ்’ சாப்பிட்ட உடன் உற்சாகத்தை வழங்கும்.
திராட்சையை சர்க்கரை நோயாளிகள் நிறைய சாப்பிடலாம் என்று சிலர் சொல்கிறார்கள். அது தவறு. சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவு மட்டும் உண்ணலாம். இதில் வைட்டமின்-சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதை அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தே அதற்கு காரணம்.

பொட்டாசியம் சத்தும் உள்ளதால் இருதய நோயாளிகள் இதை உண்ணலாம். வெயில் காலங்களில் வியர்வை இழப்பால் உண்டாகும் நீர்ச்சத்து குறைபாட்டை இது போக்கி, உற்சாகம் தரும். முகப்பரு வராமல் இருக்கவும், உடல்சூடு குறையவும், தோல் நோய்கள் குறையவும் திராட்சை பழத்தை சாப்பிடலாம். திராட்சையில் இருக்கும் ‘ரெஸ்வெராட்ரால்’ எனும் சத்து, நோய்க்கான தடுப்பு மருந்துபோல் செயல்படுகிறது. இது கணைய புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, வயிற்று புற்றுநோய் போன்றவைகளின் பாதிப்பை குறைக்கும்.
திராட்சை விதையில் பெருமளவு கால்சிய சத்து உள்ளது. கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் எலும்பு நோய்களுக்கு இது நல்ல மருந்து. திராட்சையில் இருந்து தயார் செய்யப்படும் ‘ரெட் ஒயின்’ இதயத்துக்கு நல்லது. சித்த மருத்துவத்தில் திராட்சை கலந்த மருந்துகள் தயார் செய்யப்படுகின்றன.
வடஇந்திய உணவு வகைகளில் ஒன்றான ரகடா பட்டீஸ் இனிப்பும் புளிப்புமான ஒரு சிற்றுண்டி. பட்டாணியில் செய்யும் ரகடாவை பட்டீஸ் உடன் சேர்த்து சாப்பிடும்போது இனிப்பும் புளிப்புமாக அருமையாக இருக்கும்.
பேட்டீஸ்:
தேவையான பொருட்கள் :
உருளை கிழங்கு - கால் கிலோ
பிரட் - 3 ஸ்லைஸ்
பூண்டு - சிறிதளவு
சோள மாவு - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
செய்முறை :
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.
பிரட்டை மிக்சியில் போட்டு உதிர்த்து கொள்ளவும்.
பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக மசித்த பின்னர் அதனுடன் உதிர்த்த பிரட், பொடியாக நறுக்கிய பூண்டு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டி வைக்கவும்.
அடுப்பில் தவாவை வைத்து சூடானவுடன் உருண்டைகளை தட்டையாக தட்டி எண்ணெய் தடவிய தவாவில் போட்டு வெந்தவுடன் திருப்பி போட்டு மொறு மொறுப்பாக சிவந்தவுடன் எடுத்து வைக்கவும். சூப்பரான பேட்டீஸ் தயார்.
ரகடா :
தேவையான பொருட்கள் :
பட்டாணி - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று (பெரியது)
கரம்மசாலா தூள் - 2 ஸ்பூன்
தக்காளி சாஸ் - தேவையான அளவு
லெமன் ஜூஸ் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - அரை ஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :
பட்டாணியை குக்கரில் போட்டு நன்றாக வேக வைத்து முக்கால் பாகத்தை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பாதி வெங்காயத்தை போட்டு சுருள வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கரம்மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும்.
மிக்சியில் இஞ்சி, பூண்டு, மீதமுள்ள வெங்காயம், மீதிமுள்ள பட்டாணி சேர்த்து அரைக்க வேண்டும்.
அரைத்த விழுதை கொதிக்கும் குழம்பில் சேர்த்து அதனுடன் சர்க்கரை, தக்காளி சாஸ் சேர்த்து குழம்பு சிறிது கெட்டியானவுடன் இறக்கி விட வேண்டும்.
இறுதியில் கிரேவியில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி விட்டால் ரகடா தயார்.
பேட்டீஸ் மேல் ரகடாவை ஊற்றி அதன் மேல் ஓமப்பொடியை தூவி பரிமாறவும்.
சூப்பரான ரகடா பேட்டீஸ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தேவையான பொருட்கள் :
உருளை கிழங்கு - கால் கிலோ
பிரட் - 3 ஸ்லைஸ்
பூண்டு - சிறிதளவு
சோள மாவு - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
செய்முறை :
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.
பிரட்டை மிக்சியில் போட்டு உதிர்த்து கொள்ளவும்.
பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக மசித்த பின்னர் அதனுடன் உதிர்த்த பிரட், பொடியாக நறுக்கிய பூண்டு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டி வைக்கவும்.
அடுப்பில் தவாவை வைத்து சூடானவுடன் உருண்டைகளை தட்டையாக தட்டி எண்ணெய் தடவிய தவாவில் போட்டு வெந்தவுடன் திருப்பி போட்டு மொறு மொறுப்பாக சிவந்தவுடன் எடுத்து வைக்கவும். சூப்பரான பேட்டீஸ் தயார்.
ரகடா :
தேவையான பொருட்கள் :
பட்டாணி - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று (பெரியது)
கரம்மசாலா தூள் - 2 ஸ்பூன்
தக்காளி சாஸ் - தேவையான அளவு
லெமன் ஜூஸ் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - அரை ஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :
பட்டாணியை குக்கரில் போட்டு நன்றாக வேக வைத்து முக்கால் பாகத்தை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பாதி வெங்காயத்தை போட்டு சுருள வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கரம்மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும்.
மிக்சியில் இஞ்சி, பூண்டு, மீதமுள்ள வெங்காயம், மீதிமுள்ள பட்டாணி சேர்த்து அரைக்க வேண்டும்.
அரைத்த விழுதை கொதிக்கும் குழம்பில் சேர்த்து அதனுடன் சர்க்கரை, தக்காளி சாஸ் சேர்த்து குழம்பு சிறிது கெட்டியானவுடன் இறக்கி விட வேண்டும்.
இறுதியில் கிரேவியில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி விட்டால் ரகடா தயார்.
பேட்டீஸ் மேல் ரகடாவை ஊற்றி அதன் மேல் ஓமப்பொடியை தூவி பரிமாறவும்.
சூப்பரான ரகடா பேட்டீஸ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நமது வீட்டின் அஞ்சறைப்பெட்டிகளில் சுலபமாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே, எப்படி முகப்பருவை நீக்குவது, வராமல் எப்படித் தடுப்பது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
பரு எப்போதும் முகம், நெற்றி, கழுத்து இந்த மூன்று இடங்களில் மட்டும்தான் அதிகமாக வரும். முகப்பரு வந்து மறைந்தாலும், அது வந்ததற்கான தடம் அப்படியே இருக்கும். பரு வந்து நீங்கிய இடத்தில் உள்ள பாதிப்படைந்த டெட் ஸ்கின்னை நீக்கினால்தான் தோலில் உயிரணுக்கள் புதிதாக உருவாகும். எனவே டெட் ஸ்கின்னை முறையான வழியில் நீக்குதல் வேண்டும்.
நமது வீட்டில், நம் அஞ்சறைப்பெட்டிகளில் சுலபமாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே, எப்படி முகப்பருவை நீக்குவது, வராமல் எப்படித் தடுப்பது, முகப்பரு வந்து நிரந்தரமாக ஏற்படுத்திவிட்ட தழும்புகளை எப்படி நீக்குவது என்பதைக் காண்போம்.
இயற்கையாகவே கற்றாழையில் கிருமிகளை அழிக்கும் தன்மை அதிகமாக இருக்கும். இதில் தோலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள என்சைம் தோலுக்கு நெகிழ்வுத் தன்மையைக் கொடுப்பதோடு, பாக்டீரியா, ஃபங்கஸ், அழுக்கு போன்றவற்றை நீக்கி தோலை சுத்தமாக்குகிறது. தோலின் நச்சு, முகத்தில் தோன்றும் வெள்ளைத் தன்மை போன்றவற்றையும் நீக்கும். தோல் வறட்டுத்தன்மையை அடையும்போது சருமத்தை சமநிலையில் வைத்துக்கொள்ளும். முகப்பருவால் தோன்றும் வீக்கத்தையும் குறைக்கும்.

சோற்றுக் கற்றாழையின் மேலிருக்கும் தோலை நீக்கி உள்ளிருக்கும் ஜெல்லை தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து, அத்துடன் தரம் நிறைந்த மஞ்சள் தூளை ஒரு ஸ்பூன் அளவு இணைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் இடத்தில் இந்த ஜெல்லை தடவி இருபது நிமிடம் கழித்து முகத்தை சுத்தம் செய்தல் வேண்டும். மூன்று நாளைக்கு ஒரு முறை இதை தொடர்ந்து செய்தால், உடலின் சூட்டைத் தணிப்பதுடன், முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும். பரு வந்ததற்கான தடம் நீங்கும்.
இயற்கையாகவே முகப்பரு மற்றும் முகப்பருவால் வரும் தடத்தைக் குறைப்பதில் மிகச் சரியான தீர்வு எது என்றால் டீ ட்ரீ ஆயில்தான். தமிழில் தேயிலை மர எண்ணெய் என அழைக்கப்படுகிறது. டீ ட்ரீ ஆயில் கிட்டில் துளசியும் சேர்ந்திருக்கும். அனைத்து காஸ்மெட்டிக் கடைகளிலும் இது கிடைக்கும். எந்த ஒரு ப்ராடக்டையும் ஒரிஜினலாக எடுத்துக்கொண்டால் தோலிற்கு மிகவும் நல்லது. நல்லெண்ணெயும் தோலிற்கு மிகவும் நல்லது.
நல்லெண்ணெயுடன் டீ ட்ரீ ஆயிலைக் கலந்து எங்கெல்லாம் பரு இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் இரவு நேரத்தில் முகத்தில் தடவி, காலையில் முகத்தைக் கழுவ வேண்டும். கழுவுவதற்கு முன்பு காட்டன் வைத்து துடைத்துவிட்டும் முகத்தைக் கழுவலாம். இதை தொடர்ச்சியாகச் செய்தால் முகப்பரு வந்த தடம் சுத்தமாக நீங்கும். பருவும் வராது. தோலில் இருக்கும் ஃபங்கஸ்களையும் நீக்கி, பருவைக் கட்டுப்படுத்தும்.
அந்தக் காலத்தில் பரு வந்தால் பெரும்பாலும் பெண்கள் ஜாதிக்கா யைத்தான் பயன்படுத்துவார்கள். இது தோலுக்கு மிகவும் நல்லது. முழு ஜாதிக்காய் அல்லது ஜாதிக்காய் பவுடரை காய்ச்சாத பாலில் ஊற வைத்து கல்லில் நன்றாக இளைக்க உரசி முகம் முழுதும் போடுவதால், முகம் பொலிவாவதுடன், முகப்பரு நீங்கி, பரு வந்த தடமும் மறைந்துவிடும்.
நமது வீட்டில், நம் அஞ்சறைப்பெட்டிகளில் சுலபமாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே, எப்படி முகப்பருவை நீக்குவது, வராமல் எப்படித் தடுப்பது, முகப்பரு வந்து நிரந்தரமாக ஏற்படுத்திவிட்ட தழும்புகளை எப்படி நீக்குவது என்பதைக் காண்போம்.
இயற்கையாகவே கற்றாழையில் கிருமிகளை அழிக்கும் தன்மை அதிகமாக இருக்கும். இதில் தோலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள என்சைம் தோலுக்கு நெகிழ்வுத் தன்மையைக் கொடுப்பதோடு, பாக்டீரியா, ஃபங்கஸ், அழுக்கு போன்றவற்றை நீக்கி தோலை சுத்தமாக்குகிறது. தோலின் நச்சு, முகத்தில் தோன்றும் வெள்ளைத் தன்மை போன்றவற்றையும் நீக்கும். தோல் வறட்டுத்தன்மையை அடையும்போது சருமத்தை சமநிலையில் வைத்துக்கொள்ளும். முகப்பருவால் தோன்றும் வீக்கத்தையும் குறைக்கும்.

சோற்றுக் கற்றாழையின் மேலிருக்கும் தோலை நீக்கி உள்ளிருக்கும் ஜெல்லை தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து, அத்துடன் தரம் நிறைந்த மஞ்சள் தூளை ஒரு ஸ்பூன் அளவு இணைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் இடத்தில் இந்த ஜெல்லை தடவி இருபது நிமிடம் கழித்து முகத்தை சுத்தம் செய்தல் வேண்டும். மூன்று நாளைக்கு ஒரு முறை இதை தொடர்ந்து செய்தால், உடலின் சூட்டைத் தணிப்பதுடன், முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும். பரு வந்ததற்கான தடம் நீங்கும்.
இயற்கையாகவே முகப்பரு மற்றும் முகப்பருவால் வரும் தடத்தைக் குறைப்பதில் மிகச் சரியான தீர்வு எது என்றால் டீ ட்ரீ ஆயில்தான். தமிழில் தேயிலை மர எண்ணெய் என அழைக்கப்படுகிறது. டீ ட்ரீ ஆயில் கிட்டில் துளசியும் சேர்ந்திருக்கும். அனைத்து காஸ்மெட்டிக் கடைகளிலும் இது கிடைக்கும். எந்த ஒரு ப்ராடக்டையும் ஒரிஜினலாக எடுத்துக்கொண்டால் தோலிற்கு மிகவும் நல்லது. நல்லெண்ணெயும் தோலிற்கு மிகவும் நல்லது.
நல்லெண்ணெயுடன் டீ ட்ரீ ஆயிலைக் கலந்து எங்கெல்லாம் பரு இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் இரவு நேரத்தில் முகத்தில் தடவி, காலையில் முகத்தைக் கழுவ வேண்டும். கழுவுவதற்கு முன்பு காட்டன் வைத்து துடைத்துவிட்டும் முகத்தைக் கழுவலாம். இதை தொடர்ச்சியாகச் செய்தால் முகப்பரு வந்த தடம் சுத்தமாக நீங்கும். பருவும் வராது. தோலில் இருக்கும் ஃபங்கஸ்களையும் நீக்கி, பருவைக் கட்டுப்படுத்தும்.
அந்தக் காலத்தில் பரு வந்தால் பெரும்பாலும் பெண்கள் ஜாதிக்கா யைத்தான் பயன்படுத்துவார்கள். இது தோலுக்கு மிகவும் நல்லது. முழு ஜாதிக்காய் அல்லது ஜாதிக்காய் பவுடரை காய்ச்சாத பாலில் ஊற வைத்து கல்லில் நன்றாக இளைக்க உரசி முகம் முழுதும் போடுவதால், முகம் பொலிவாவதுடன், முகப்பரு நீங்கி, பரு வந்த தடமும் மறைந்துவிடும்.
கர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
கர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அதனால்தான் கர்ப்பம் உறுதியானதும் மருத்துவர்கள் இரத்தப் பரிசோதனை செய்து ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்து அதற்கேற்ப இரும்புச்சத்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். இதன் மூலம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கும், அதைச் சுமக்கும் தாய்க்கும் இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுகிற எந்த பாதிப்பும் வந்துவிடாமல் தடுக்கப்படும்.
மனித உடலில் ஒவ்வொரு செல்லிலும் இரும்புச்சத்து இருக்கும். இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகக் காரணமான ஹீமோகுளோபினின் மிக முக்கிய உட்பொருள் இது. இரத்த சிவப்பு அணுக்கள்தான் உடலின் திசுக்களுக்கு ஆக்சிஜனைக் கொண்டு செல்பவை. வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், தொற்றுகள் ஏற்படுவதிலிருந்து உடலைக் காக்கவும் இரத்த சிவப்பு அணுக்கள் அவசியம்.
கர்ப்பமடைகிறபோது பெண்ணின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தானாகக் குறையும். குழந்தையின் வளர்ச்சிக்கான வேலைகளை உடல் பார்ப்பதே இதற்குக் காரணம். அந்த நேரத்தில் கர்ப்பிணியின் உடலில் போதுமான அளவு வெள்ளை அணுக்கள் இருக்க வேண்டியது அவசியம். இரும்புச்சத்துக் குறைபாடு என்பது அலட்சியமாக விடப்பட்டால் அது தாய் மற்றும் கருவிலுள்ள குழந்தையின் உயிர்களையே பறிக்கலாம்.

கர்ப்பத்தின்போது பெண்ணின் உடலுக்கு வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிக இரும்புச்சத்து தேவைப்படுகிறது. அது உணவு மற்றும் மாத்திரைகளின் மூலம் ஈடுகட்டப்படாதபோது இரத்தசோகை வருகிறது. வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடும் இன்னொரு காரணம். இந்த இரண்டு குறைபாடுகளுமே இரத்த சோகையைத் தீவிரப்படுத்துபவை.
இரண்டில் ஒன்று குறைந்தாலும் அது வெள்ளை அணுக்கள் உற்பத்தியை வெகுவாக பாதிக்கும். இரும்புச்சத்துக்கான சப்ளிமென்ட்டுகளை கால்சியம் சப்ளிமென்ட்டுடன் சேர்த்து எடுத்துக்கொள்வதும் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதில் பிரச்சனையை ஏற்படுத்தி இரத்த சோகைக்குக் காரணமாகும்.
பொதுவாகவே பெண்களிடம் இரத்தசோகை பிரச்சனை இருப்பது மிகப் பரவலான ஒன்று என்கின்றன ஆய்வுகள். மாதவிலக்கின்போது வெளியேறும் இரத்தப் போக்கு இதற்கு முக்கியமான காரணம். மாதவிடாயின் 3 முதல் 4 நாட்களில் பெண்கள் ஒவ்வொரு முறையும் 10 முதல் 35 மி.லி. இரத்தத்தை இழக்கிறார்கள். இரத்தத்தில் வெளியேறும் இரும்புச்சத்தை ஈடுகட்ட அவர்கள் போதுமான அளவு இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதில்லை. அதன் விளைவாக அவர்களுக்கு இரத்த சோகை வருகிறது. கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் ஊட்டும் காலத்திலும் இரத்த சோகை பிரச்சனை இன்னும் அதிகரிக்கிறது.
மனித உடலில் ஒவ்வொரு செல்லிலும் இரும்புச்சத்து இருக்கும். இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகக் காரணமான ஹீமோகுளோபினின் மிக முக்கிய உட்பொருள் இது. இரத்த சிவப்பு அணுக்கள்தான் உடலின் திசுக்களுக்கு ஆக்சிஜனைக் கொண்டு செல்பவை. வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், தொற்றுகள் ஏற்படுவதிலிருந்து உடலைக் காக்கவும் இரத்த சிவப்பு அணுக்கள் அவசியம்.
கர்ப்பமடைகிறபோது பெண்ணின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தானாகக் குறையும். குழந்தையின் வளர்ச்சிக்கான வேலைகளை உடல் பார்ப்பதே இதற்குக் காரணம். அந்த நேரத்தில் கர்ப்பிணியின் உடலில் போதுமான அளவு வெள்ளை அணுக்கள் இருக்க வேண்டியது அவசியம். இரும்புச்சத்துக் குறைபாடு என்பது அலட்சியமாக விடப்பட்டால் அது தாய் மற்றும் கருவிலுள்ள குழந்தையின் உயிர்களையே பறிக்கலாம்.

கர்ப்பத்தின்போது பெண்ணின் உடலுக்கு வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிக இரும்புச்சத்து தேவைப்படுகிறது. அது உணவு மற்றும் மாத்திரைகளின் மூலம் ஈடுகட்டப்படாதபோது இரத்தசோகை வருகிறது. வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடும் இன்னொரு காரணம். இந்த இரண்டு குறைபாடுகளுமே இரத்த சோகையைத் தீவிரப்படுத்துபவை.
இரண்டில் ஒன்று குறைந்தாலும் அது வெள்ளை அணுக்கள் உற்பத்தியை வெகுவாக பாதிக்கும். இரும்புச்சத்துக்கான சப்ளிமென்ட்டுகளை கால்சியம் சப்ளிமென்ட்டுடன் சேர்த்து எடுத்துக்கொள்வதும் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதில் பிரச்சனையை ஏற்படுத்தி இரத்த சோகைக்குக் காரணமாகும்.
பொதுவாகவே பெண்களிடம் இரத்தசோகை பிரச்சனை இருப்பது மிகப் பரவலான ஒன்று என்கின்றன ஆய்வுகள். மாதவிலக்கின்போது வெளியேறும் இரத்தப் போக்கு இதற்கு முக்கியமான காரணம். மாதவிடாயின் 3 முதல் 4 நாட்களில் பெண்கள் ஒவ்வொரு முறையும் 10 முதல் 35 மி.லி. இரத்தத்தை இழக்கிறார்கள். இரத்தத்தில் வெளியேறும் இரும்புச்சத்தை ஈடுகட்ட அவர்கள் போதுமான அளவு இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதில்லை. அதன் விளைவாக அவர்களுக்கு இரத்த சோகை வருகிறது. கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் ஊட்டும் காலத்திலும் இரத்த சோகை பிரச்சனை இன்னும் அதிகரிக்கிறது.
டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது ஓட்ஸ். இன்று ஓட்ஸ், முட்டை சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 100 கிராம்
மக்காச்சோளம் - கால் கிலோ
மிளகு தூள் - சிறிதளவு
சோயா சாஸ் - சிறிதளவு
வெங்காயம் - 1
முட்டை வெள்ளைக்கரு - 1
பால் - அரை கப்
இஞ்சி - பூண்டு விழுது - சிறிதளவு
உப்பு - தேவைக்கு

செய்முறை :
ஓட்ஸ்சுடன் பால், தண்ணீர் சேர்த்து காய்ச்சி கொள்ள வேண்டும்.
மக்காசோளத்தை வேக வைத்து கொள்ளவும்.
முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் ஓட்ஸ் கலவையும், முட்டையின் வெள்ளைக்கருவையும் நுரை பொங்க அடித்து சேர்த்து கிளறிவிட வேண்டும்.
இறுதியில் மிளகுத்தூள் சேர்த்து ருசிக்கலாம்.
ஓட்ஸ் - முட்டை சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஓட்ஸ் - 100 கிராம்
மக்காச்சோளம் - கால் கிலோ
மிளகு தூள் - சிறிதளவு
சோயா சாஸ் - சிறிதளவு
வெங்காயம் - 1
முட்டை வெள்ளைக்கரு - 1
பால் - அரை கப்
இஞ்சி - பூண்டு விழுது - சிறிதளவு
உப்பு - தேவைக்கு

செய்முறை :
ஓட்ஸ்சுடன் பால், தண்ணீர் சேர்த்து காய்ச்சி கொள்ள வேண்டும்.
மக்காசோளத்தை வேக வைத்து கொள்ளவும்.
முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் ஓட்ஸ் கலவையும், முட்டையின் வெள்ளைக்கருவையும் நுரை பொங்க அடித்து சேர்த்து கிளறிவிட வேண்டும்.
இறுதியில் மிளகுத்தூள் சேர்த்து ருசிக்கலாம்.
ஓட்ஸ் - முட்டை சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமாகி 8-ம் மாதம் முழுமை அடைந்த பிறகு தொடர்ந்து பேறுகாலம் வரை இந்த முத்திரையை பயிற்சி செய்து வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.
பெயர் விளக்கம்: மனித உடலின் அடிவயிற்று பகுதியில் செயல்படும் அபான வாயுவை இந்த முத்திரை நன்கு இயங்க செய்வதால் அபான முத்திரை என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை: தரை விரிப்பின் மேல் கால்களை மடக்கி வைத்து உட்காரவும். முடிந்தால் அர்த பத்மாசனத்தில் வலது கால் மேல் வரும்படி வைத்து உட்காரவும். முதுகு, கழுத்து, தலை ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும். இண்டு கைகளையும் நேராக நீட்டி முழங்கால்களின் மேல் உள்ளங்கைகளை வைக்கவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். அடுத்து இரண்டு உள்ளங்கைகளையும் திருப்பி மேல் நோக்கியபடி வைக்கவும்.
பிறகு கண்களை மெதுவாக திறந்து இரண்டு கைகளின் நடுவிரல் மற்றும் மோதிரவிரலை மடக்கி இவ்விரு விரல்களின் நுனிப் பகுதியோடு அந்தந்தக் கையின் கட்டை விரலின் நுனிப்பகுதியை தொடும்படி வைக்கவும். இரண்டு கைகளிலும் உள்ள மற்ற விரல்களான ஆள்காட்டி விரலையும் சிறுவிரலையும் நீட்டி வைக்கவும். கண்களை மூடவும் இந்த முத்திரையை ஒரு வேளைக்கு 15 நிமிடம் என காலை, மாலை பயிற்சி செய்யலாம்.
கவனம் செலுத்த வேண்டிய இடம்: அடிவயிற்றுப் பகுதியின் மீதும் மணி பூர சக்ரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக் குறிப்பு: தரை விரிப்பின் மேல் அமர்ந்து அபான முத்திரையை பயிற்சி செய்ய இயலாத கர்ப்பிணிப் பெண்கள் ஒரு மர நாற்காலியின் மேல் அமர்ந்து அபான முத்திரையை பயிற்சி செய்யலாம்.
தடைக்குறிப்பு: கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமான முதல் மாதத்திலிருந்து எட்டாம் மாதம் முடியும் வரை இந்த முத்திரையை பயிற்சி செய்யக் கூடாது
பயன்கள்: உடல் பலம் பெறும். இருதயம் வலுப்பெறும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். படபடப்பு, பயம் நீங்கி மனம் வலிமை பெறும். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமாகி 8ம் மாதம் முழுமை அடைந்த பிறகு தொடர்ந்து பேறுகாலம் வரை இந்த முத்திரையை பயிற்சி செய்து வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.
செய்முறை: தரை விரிப்பின் மேல் கால்களை மடக்கி வைத்து உட்காரவும். முடிந்தால் அர்த பத்மாசனத்தில் வலது கால் மேல் வரும்படி வைத்து உட்காரவும். முதுகு, கழுத்து, தலை ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும். இண்டு கைகளையும் நேராக நீட்டி முழங்கால்களின் மேல் உள்ளங்கைகளை வைக்கவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். அடுத்து இரண்டு உள்ளங்கைகளையும் திருப்பி மேல் நோக்கியபடி வைக்கவும்.
பிறகு கண்களை மெதுவாக திறந்து இரண்டு கைகளின் நடுவிரல் மற்றும் மோதிரவிரலை மடக்கி இவ்விரு விரல்களின் நுனிப் பகுதியோடு அந்தந்தக் கையின் கட்டை விரலின் நுனிப்பகுதியை தொடும்படி வைக்கவும். இரண்டு கைகளிலும் உள்ள மற்ற விரல்களான ஆள்காட்டி விரலையும் சிறுவிரலையும் நீட்டி வைக்கவும். கண்களை மூடவும் இந்த முத்திரையை ஒரு வேளைக்கு 15 நிமிடம் என காலை, மாலை பயிற்சி செய்யலாம்.
கவனம் செலுத்த வேண்டிய இடம்: அடிவயிற்றுப் பகுதியின் மீதும் மணி பூர சக்ரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக் குறிப்பு: தரை விரிப்பின் மேல் அமர்ந்து அபான முத்திரையை பயிற்சி செய்ய இயலாத கர்ப்பிணிப் பெண்கள் ஒரு மர நாற்காலியின் மேல் அமர்ந்து அபான முத்திரையை பயிற்சி செய்யலாம்.
தடைக்குறிப்பு: கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமான முதல் மாதத்திலிருந்து எட்டாம் மாதம் முடியும் வரை இந்த முத்திரையை பயிற்சி செய்யக் கூடாது
பயன்கள்: உடல் பலம் பெறும். இருதயம் வலுப்பெறும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். படபடப்பு, பயம் நீங்கி மனம் வலிமை பெறும். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமாகி 8ம் மாதம் முழுமை அடைந்த பிறகு தொடர்ந்து பேறுகாலம் வரை இந்த முத்திரையை பயிற்சி செய்து வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.
ஒத்த வயதுடைய குழந்தைகளின் சராசரி கற்கும் திறனைவிட, அளவில் குறைவான கற்றல் திறனுள்ள குழந்தையை கற்றல் குறைபாடுள்ள குழந்தையாகக் கருதுகிறோம்.
பிறப்பதற்கரிய பிறவியான மானிடப்பிறவி எடுத்தாலும், வெளிப்புற அங்க குறைபாடுகள் இல்லாமல் பிறப்பது அரிது. அதைவிட அரிது முறைப்படி கல்வி கற்று ஞானத்தைப் பெறுவது என்பது அவ்வையின் வாக்கு. பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் முறைப்படி கல்வி கற்கும் திறன் ஒரே அளவாக அமைவதில்லை. ஒத்த வயதுடைய குழந்தைகளின் சராசரி கற்கும் திறனைவிட, அளவில் குறைவான கற்றல் திறனுள்ள குழந்தையை கற்றல் குறைபாடுள்ள குழந்தையாகக் கருதுகிறோம்.
முறைசார்ந்த கல்விமுறையில் எழுத்துகளையும், சொற்களையும், எண்களையும் வாசிப்பதிலும், புரிந்து கொள்வதிலும், புரிந்து கொண்டதை கோர்வையாக சொல்வதிலும், மனனம் செய்வதிலும், நினைவூட்டுவதிலும், எழுதுவதிலும் அந்த வயதிற்குரிய சராசரி குழந்தையைவிட சிரமப்படுவதை கற்றல் குறைபாடு என்கிறோம்.
கற்றல் குறைபாடு என்பது பத்து குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு என்ற விகிதத்தில் காணப்படுகிறது. பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு நான்கு மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் புத்தி கூர்மையில் இந்த குழந்தைகள் பெரும்பாலும் சராசரி அளவு அல்லது இதைவிட சற்று அதிக அளவு கூர்மை பெற்றவர்களாக உள்ளனர்.
குழந்தைகளிடம் பின்வரும் அறிகுறிகள் தென்படுவதை வைத்து அவர்களை உரிய மருத்துவரிடம் அழைத்துச்சென்று பரிசோதித்து கற்றல் குறைபாடு உள்ளதா? என்பதை தெளிவுப் படுத்திக் கொள்ள வேண்டும். அந்த அறிகுறிகள் சரளமாக வாசிக்க சிரமப்படுவது, ஒரே மாதிரி உச்சரிப்புள்ள சொற்களை மாற்றி வாசிப்பது, வலது, இடது புறங்களில் மாறிவரும் எழுத்துக்களில் தடுமாற்றம் கொள்வது, சொற்களில் எழுத்துகளை மாற்றி எழுதுவது, படிப்பதில், எழுதுவதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது, சொல்ல வருவதை கோர்வையாக சொல்ல முடியாமல் தவிப்பது, கவனத்தை அதிகமாக சிதறவிடுவது, கையெழுத்து மோசமாக இருப்பது போன்றவையாகும்.
குறைப்பிரசவம், பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள், பிறந்த குழந்தையின் எடை குறைந்திருப்பது, கருவுற்ற காலத்தில் தாய் உட்கொள்ளும் சில மருந்துகள் மற்றும் மதுவகைகள், பெற்றோர்களின் புகைபிடிக்கும் பழக்கம், குழந்தை வந்த பரம்பரையில் அந்த குறைபாடுள்ளோர் இருப்பது, குழந்தை வளரும் சுற்றுச்சூழல் போன்றவைகள் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு ஏற்பட காரணிகள் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளில் பலர் மற்ற துறைகளில் ஈடுபாடும், சிறந்த அறிவும், ஆற்றலும் பெற்றிருப்பதை காணமுடிகிறது. குழந்தைகள் வெளிப்படுத்தும் ஆர்வத்தை கவனித்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறனை கண்டறிந்து அந்த திறன்களை வளர்க்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதனை மேன்மேலும் வளர்க்கும் வண்ணம் அவர்களை ஊக்கப்படுத்துவதையும், உற்சாகப்படுத்துவதையும் செய்ய வேண்டும்.
அப்போது தான் அவர்கள் விரும்பும் துறைகளில் உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியும். இத்தகைய குழந்தைகள் விளையாட்டு, ஓவியம், நாடகம், ஆடை, அணிகலன்கள் வடிவமைப்பு, அறிவியல், கட்டிடக்கலை, தோட்டக்கலை, சமையல் கலை, இசை, வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்புக்கலை போன்ற பல்வேறு துறைகளில் நாட்டம் உடையவர்களாக உள்ளனர்.
கற்றல் குறைபாடு உள்ளதை முறைப்படி பெற்றோர்கள் உறுதிசெய்து கொண்டபின் அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை மருத்துவர் ஆலோசனைப்படியோ, அல்லது இதற்கென பயிற்சிபெற்ற உளவியலாளர் ஆலோசனைப்படியோ அளிக்க வேண்டும்.
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு உரிய மருத்துவ சான்றிதழ் இருந்தால் அரசாங்கம் பொதுத்தேர்வில் சில சலுகைகள் வழங்குகின்றது.
பெற்றோர் கற்பதில் மிகவும் சிரமப்படும் குழந்தைகளை இதற்கென இயங்கும் சிறப்புப் பள்ளியில் அனுமதிக்க வேண்டும். சாதாரணப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை நிவர்த்தி வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டும். பெற்றோர் குழந்தைகளை குற்றம், குறை சொல்லாமல், மற்ற குழந்தைகளோடு ஒப்பிடாமல் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
இக்குறைகளை நீக்க மருந்துகள் இல்லை. தொடர் பயிற்சிகளின் மூலமே இதனை சரிசெய்ய முடியும். குழந்தையின் குறைகளின் அளவைப் பொறுத்தே பயிற்சியின் காலமும், தன்மையும் அமையும். பெற்றோரின் புரிதலும், அனுசரனையும், ஆதரவும் குழந்தைகளை இக்குறையிலிருந்து விரைவில் மேன்மையடைய உதவும்.
கலையரசி, சிறப்பு கல்வி பயிற்சியாளர்
முறைசார்ந்த கல்விமுறையில் எழுத்துகளையும், சொற்களையும், எண்களையும் வாசிப்பதிலும், புரிந்து கொள்வதிலும், புரிந்து கொண்டதை கோர்வையாக சொல்வதிலும், மனனம் செய்வதிலும், நினைவூட்டுவதிலும், எழுதுவதிலும் அந்த வயதிற்குரிய சராசரி குழந்தையைவிட சிரமப்படுவதை கற்றல் குறைபாடு என்கிறோம்.
கற்றல் குறைபாடு என்பது பத்து குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு என்ற விகிதத்தில் காணப்படுகிறது. பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு நான்கு மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் புத்தி கூர்மையில் இந்த குழந்தைகள் பெரும்பாலும் சராசரி அளவு அல்லது இதைவிட சற்று அதிக அளவு கூர்மை பெற்றவர்களாக உள்ளனர்.
குழந்தைகளிடம் பின்வரும் அறிகுறிகள் தென்படுவதை வைத்து அவர்களை உரிய மருத்துவரிடம் அழைத்துச்சென்று பரிசோதித்து கற்றல் குறைபாடு உள்ளதா? என்பதை தெளிவுப் படுத்திக் கொள்ள வேண்டும். அந்த அறிகுறிகள் சரளமாக வாசிக்க சிரமப்படுவது, ஒரே மாதிரி உச்சரிப்புள்ள சொற்களை மாற்றி வாசிப்பது, வலது, இடது புறங்களில் மாறிவரும் எழுத்துக்களில் தடுமாற்றம் கொள்வது, சொற்களில் எழுத்துகளை மாற்றி எழுதுவது, படிப்பதில், எழுதுவதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது, சொல்ல வருவதை கோர்வையாக சொல்ல முடியாமல் தவிப்பது, கவனத்தை அதிகமாக சிதறவிடுவது, கையெழுத்து மோசமாக இருப்பது போன்றவையாகும்.
குறைப்பிரசவம், பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள், பிறந்த குழந்தையின் எடை குறைந்திருப்பது, கருவுற்ற காலத்தில் தாய் உட்கொள்ளும் சில மருந்துகள் மற்றும் மதுவகைகள், பெற்றோர்களின் புகைபிடிக்கும் பழக்கம், குழந்தை வந்த பரம்பரையில் அந்த குறைபாடுள்ளோர் இருப்பது, குழந்தை வளரும் சுற்றுச்சூழல் போன்றவைகள் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு ஏற்பட காரணிகள் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளில் பலர் மற்ற துறைகளில் ஈடுபாடும், சிறந்த அறிவும், ஆற்றலும் பெற்றிருப்பதை காணமுடிகிறது. குழந்தைகள் வெளிப்படுத்தும் ஆர்வத்தை கவனித்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறனை கண்டறிந்து அந்த திறன்களை வளர்க்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதனை மேன்மேலும் வளர்க்கும் வண்ணம் அவர்களை ஊக்கப்படுத்துவதையும், உற்சாகப்படுத்துவதையும் செய்ய வேண்டும்.
அப்போது தான் அவர்கள் விரும்பும் துறைகளில் உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியும். இத்தகைய குழந்தைகள் விளையாட்டு, ஓவியம், நாடகம், ஆடை, அணிகலன்கள் வடிவமைப்பு, அறிவியல், கட்டிடக்கலை, தோட்டக்கலை, சமையல் கலை, இசை, வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்புக்கலை போன்ற பல்வேறு துறைகளில் நாட்டம் உடையவர்களாக உள்ளனர்.
கற்றல் குறைபாடு உள்ளதை முறைப்படி பெற்றோர்கள் உறுதிசெய்து கொண்டபின் அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை மருத்துவர் ஆலோசனைப்படியோ, அல்லது இதற்கென பயிற்சிபெற்ற உளவியலாளர் ஆலோசனைப்படியோ அளிக்க வேண்டும்.
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு உரிய மருத்துவ சான்றிதழ் இருந்தால் அரசாங்கம் பொதுத்தேர்வில் சில சலுகைகள் வழங்குகின்றது.
பெற்றோர் கற்பதில் மிகவும் சிரமப்படும் குழந்தைகளை இதற்கென இயங்கும் சிறப்புப் பள்ளியில் அனுமதிக்க வேண்டும். சாதாரணப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை நிவர்த்தி வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டும். பெற்றோர் குழந்தைகளை குற்றம், குறை சொல்லாமல், மற்ற குழந்தைகளோடு ஒப்பிடாமல் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
இக்குறைகளை நீக்க மருந்துகள் இல்லை. தொடர் பயிற்சிகளின் மூலமே இதனை சரிசெய்ய முடியும். குழந்தையின் குறைகளின் அளவைப் பொறுத்தே பயிற்சியின் காலமும், தன்மையும் அமையும். பெற்றோரின் புரிதலும், அனுசரனையும், ஆதரவும் குழந்தைகளை இக்குறையிலிருந்து விரைவில் மேன்மையடைய உதவும்.
கலையரசி, சிறப்பு கல்வி பயிற்சியாளர்
உணவகங்களில் ஆர்டர் செய்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான விஷயமாகிவிட்டது. விதவிதமான உணவுகளை ருசிக்க விரும்புகிறவர்கள், கீழ்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.
இன்று, உணவகங்களில் வித விதமாக ஆர்டர் செய்து ருசித்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான விஷயமாகிவிட்டது. எவ்வளவுதான் பிடித்தமான உணவுகளை வீட்டில் சமைத்து சுவைத்தாலும், ரெஸ்டாரண்டுகளில் சாப்பிடுவது தனிக் கொண்டாட்டம் தான்.
விதவிதமான உணவுகளை ருசிக்க விரும்புகிறவர்கள், கீழ்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்:
* தரமான உணவகங்கள் பற்றி தெரிந்துவைத்துக்கொண்டு, அதை தேடிச் செல்லுங்கள்.
* ஷாப்பிங் முடிந்த கையோடு அருகில் உள்ள ஏதாவது ஒரு ஓட்டலுக்கு சென்று அவசரமாக சாப்பிட்டுவிடலாம் என்று நினைக்காதீர்கள். உணவின் தரம் முக்கியம்.
* பெரிய ஓட்டல்களில் உணவருந்த ஆசைப்பட்டால் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். அதன் மூலம் வெகுநேரம் காத்திருப்பதை தவிர்க்கலாம். எரிச்சல் இன்றி சந்தோஷமாக சாப்பிடவும் வழி ஏற்படும்.
* முன்பதிவு செய்துவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்களால் அந்த உணவகத்தை அடைய முடியாவிட்டால், உங்கள் இடம் வேறு யாருக்காவது கொடுக்கப்பட்டுவிடும். அதனால் கூச்சல் போடாதீர்கள். ஏன்என்றால் சாப்பிடும் முன்பு மனதை சாந்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கோபத்தோடும், எரிச்சலோடும் சாப்பிடும் உணவு சரியாக செரிப்பதில்லை. பொது இடங்களில் நாகரிகமாகவும் நடந்துகொள்ள தெரிந்துகொள்ளவேண்டும்.
* முன்பதிவு செய்ததைவிட அதிகமான நபர்களை அழைத்துச்செல்லவேண்டாம். வேறு வழியில்லாமல் அழைத்துச் சென்றுவிட்டால், அதை முன்கூட்டியே உணவகத்திற்கு தெரியப் படுத்திவிடுங்கள்.

* உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் நட்போடு பழகுங்கள். அவர்களும் உங்களைப் போன்றவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மரியாதையும், மதிப்பும் அவர்களுக்கு கொடுங்கள்.
* நிதானமாக, யோசித்து ஆர்டர் கொடுங்கள். ஆர்டர் செய்துவிட்டு, பின்பு மாற்றாதீர்கள்.
* மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் எப்படி சாப்பிடுவது என்று, உங்களோடு வரும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். எந்தெந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள். தானே சாப்பிட பழக்குங்கள். குழந்தைகளின் அறிவு வளர்ச்சியடைந்து விட்டது என்பதை குறிக்கும் செயல் தானே எடுத்து சிந்தாமல் சாப்பிடுவது. மனவளர்ச்சி குன்றியவர்களால் அப்படி சரியாக சாப்பிட முடியாததை கவனித்திருப்பீர்கள்.
* பரிமாறும் சர்வருக்கு ‘டிப்ஸ்’ கொடுப்பது இப்போது அங்கீ கரிக்கப்பட்ட விஷயம்போல் ஆகிவிட்டதை கவனத்தில் கொள்ளுங்கள்.
* ஏதேனும் தவறு நிகழ்ந்து விட்டால் அதை மென்மையாக எடுத்துக் கூறுங்கள். நாம் பணம் கொடுக்கிறோம் என்ற கர்வத்தில் வார்த்தைகளை சிந்திவிடாதீர்கள்.
* பலரோடு உணவகத்திற்கு செல்லும் போது அவரவருக்கு விருப்பமானதை ஆர்டர் செய்யும்படி கூறுங்கள். உங்கள் இஷ்டத்திற்கு ஆர்டர் கொடுக்க வேண்டாம். அது அவர்களை உபசரிப்பதாகாது.
* சாப்பிடுவதற்கு பொறுமையும், நிதானமும் அவசியம். போதுமான நேரம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சாப்பிட்டு முடித்துவிட்டு வெகு நேரம் அமர்ந்து அரட்டையடிப்பது சரியான பழக்கம் அல்ல. சத்தமில்லாமல் சாப்பிடுவது நல்லது. உணவை வீணாக்காமல் ருசிப்பது மிக நல்லது.
விதவிதமான உணவுகளை ருசிக்க விரும்புகிறவர்கள், கீழ்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்:
* தரமான உணவகங்கள் பற்றி தெரிந்துவைத்துக்கொண்டு, அதை தேடிச் செல்லுங்கள்.
* ஷாப்பிங் முடிந்த கையோடு அருகில் உள்ள ஏதாவது ஒரு ஓட்டலுக்கு சென்று அவசரமாக சாப்பிட்டுவிடலாம் என்று நினைக்காதீர்கள். உணவின் தரம் முக்கியம்.
* பெரிய ஓட்டல்களில் உணவருந்த ஆசைப்பட்டால் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். அதன் மூலம் வெகுநேரம் காத்திருப்பதை தவிர்க்கலாம். எரிச்சல் இன்றி சந்தோஷமாக சாப்பிடவும் வழி ஏற்படும்.
* முன்பதிவு செய்துவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்களால் அந்த உணவகத்தை அடைய முடியாவிட்டால், உங்கள் இடம் வேறு யாருக்காவது கொடுக்கப்பட்டுவிடும். அதனால் கூச்சல் போடாதீர்கள். ஏன்என்றால் சாப்பிடும் முன்பு மனதை சாந்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கோபத்தோடும், எரிச்சலோடும் சாப்பிடும் உணவு சரியாக செரிப்பதில்லை. பொது இடங்களில் நாகரிகமாகவும் நடந்துகொள்ள தெரிந்துகொள்ளவேண்டும்.
* முன்பதிவு செய்ததைவிட அதிகமான நபர்களை அழைத்துச்செல்லவேண்டாம். வேறு வழியில்லாமல் அழைத்துச் சென்றுவிட்டால், அதை முன்கூட்டியே உணவகத்திற்கு தெரியப் படுத்திவிடுங்கள்.

* உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் நட்போடு பழகுங்கள். அவர்களும் உங்களைப் போன்றவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மரியாதையும், மதிப்பும் அவர்களுக்கு கொடுங்கள்.
* நிதானமாக, யோசித்து ஆர்டர் கொடுங்கள். ஆர்டர் செய்துவிட்டு, பின்பு மாற்றாதீர்கள்.
* மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் எப்படி சாப்பிடுவது என்று, உங்களோடு வரும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். எந்தெந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள். தானே சாப்பிட பழக்குங்கள். குழந்தைகளின் அறிவு வளர்ச்சியடைந்து விட்டது என்பதை குறிக்கும் செயல் தானே எடுத்து சிந்தாமல் சாப்பிடுவது. மனவளர்ச்சி குன்றியவர்களால் அப்படி சரியாக சாப்பிட முடியாததை கவனித்திருப்பீர்கள்.
* பரிமாறும் சர்வருக்கு ‘டிப்ஸ்’ கொடுப்பது இப்போது அங்கீ கரிக்கப்பட்ட விஷயம்போல் ஆகிவிட்டதை கவனத்தில் கொள்ளுங்கள்.
* ஏதேனும் தவறு நிகழ்ந்து விட்டால் அதை மென்மையாக எடுத்துக் கூறுங்கள். நாம் பணம் கொடுக்கிறோம் என்ற கர்வத்தில் வார்த்தைகளை சிந்திவிடாதீர்கள்.
* பலரோடு உணவகத்திற்கு செல்லும் போது அவரவருக்கு விருப்பமானதை ஆர்டர் செய்யும்படி கூறுங்கள். உங்கள் இஷ்டத்திற்கு ஆர்டர் கொடுக்க வேண்டாம். அது அவர்களை உபசரிப்பதாகாது.
* சாப்பிடுவதற்கு பொறுமையும், நிதானமும் அவசியம். போதுமான நேரம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சாப்பிட்டு முடித்துவிட்டு வெகு நேரம் அமர்ந்து அரட்டையடிப்பது சரியான பழக்கம் அல்ல. சத்தமில்லாமல் சாப்பிடுவது நல்லது. உணவை வீணாக்காமல் ருசிப்பது மிக நல்லது.
எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.
ஆறுமாதக் குழந்தை முதல் அறுபது வயது பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். சிறுதானியம் என்பது வரகு, சாமை தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் உள்ள சிறிய அளவிலான தானியங்கள் ஆகும். எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.
கம்பு - ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன் மேம்படும். உடல் வெப்பம் தணியும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும்.
திணை - இதயத்தைப் பலப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலையைத் தரும்.
சாமை - ரத்தசோகையைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் தீரும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.
கேழ்வரகு - எலும்புகளை உறுதிசெய்யும். இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். சருமத்தில் பளபளப்பு உண்டாகும்.
வரகு - உடல் எடையைக் குறைக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மூட்டுவலி இருப்போர் அவசியம் சாப்பிட வேண்டும். சர்க்கரை, நரம்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்லது.
குதிரைவாலி - சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும்.
கம்பு - ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன் மேம்படும். உடல் வெப்பம் தணியும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும்.
திணை - இதயத்தைப் பலப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலையைத் தரும்.
சாமை - ரத்தசோகையைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் தீரும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.
கேழ்வரகு - எலும்புகளை உறுதிசெய்யும். இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். சருமத்தில் பளபளப்பு உண்டாகும்.
வரகு - உடல் எடையைக் குறைக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மூட்டுவலி இருப்போர் அவசியம் சாப்பிட வேண்டும். சர்க்கரை, நரம்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்லது.
குதிரைவாலி - சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும்.






