என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    ஆப்பிள் சைடர் வினிகருடன் சிறிது தேன் கலந்து சிறிது நீர் சேர்த்து அருந்தினால் இருமல் வெகுவாய் கட்டுப்படும். ஆப்பிள் சைடர் பயன் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகர் என்பது ஆப்பிள், சர்க்கரை, பீஸ்ட் இவற்றினை சேர்த்து உருவாக்கப்படுவது. சாலட், சட்னி இவற்றில் இதனைச் சேர்ப்பர். ஆப்பிளை பிழிந்து அதன் சாற்றில் சில பொருட்களைச் சேர்த்து இதனை உருவாக்குவர். இதனில் சத்து என்று கூற எதுவும் இல்லை. இருப்பினும் இது இன்று அதிக அளவில் பேசப்படுகின்றது.

    காரணம் பொதுவில் வினிகர் என்றாலே தொண்டையில் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க வல்லது. ஆப்பிள் சைடர் வினிகருடன் சிறிது தேன் கலந்து சிறிது நீர் சேர்த்து அருந்தினால் இருமல் வெகுவாய் கட்டுப்படும். வைரஸ் தாக்குதலால் ஏற்படும் இருமலுக்கு சிறிது தேனையே வெந்நீரில் கலந்து குடிக்கச் சொல்லி வெளிநாடுகளில் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    சிறிதளவு அதாவது ஒரு டீஸ்பூன் ஆசிசி இதனை 1/2 கப் வெது வெதுப்பான நீரில் கலந்து விருந்து போன்ற அதிக உணவிற்கு முன்பு எடுத்துக் கொள்கின்றனர். இதனால் வயிற்றில் உப்பிசம் ஏற்படாது.

    நெஞ்செரிச்சல் பிரச்சினை இருப்பவர்களையும் 1 டீஸ்பூன் ஆசிசி+சிறிது தேன் + 1/2 கப் வெதுவெதுப்பான நீர் கலந்து குடிக்கச் சொல்கின்றனர்.

    சுட்டெரிக்கும் வெயிலில் சென்று வந்துள்ளீர்களா? குளிக்கும் நீரில் 1 கப் ஆசிசி சேர்த்து உடலில் ஊற்றி 10 நிமிடம் கழித்து குளித்து விட சருமம் பாதுகாக்கப்படும்.

    * கால்களை சுத்தம் செய்யும் பொழுது பூஞ்சை பாதிப்பு ஏற்படாதிருக்க வெதுவெதுப்பான நீரில் 1/2 கப் ஆசிவி சேர்த்து கால்களை 15 நிமிடம் ஊறவையுங்கள். பின்னர் கால்களை நன்கு கழுவி விடுங்கள்.

    * உடல் பயிற்சியினாலோ அல்லது பொதுவாகவோ ஒரு குறிபிட்ட சதைப் பகுதியில் வலி இருந்தால் அங்கு ஆசிசி தடவுங்கள்.

    * அதிக வெய்யிலால் உடலில் அரிப்பு இருந்தால் ஆசிசி தடவுங்கள். அரிப்பு வெகுவாய் மட்டுப்படும். பின்னர் நன்கு கழுவி விடுங்கள்.

    1 டீஸ்பூன் ஆசிசி+ 1/2 கப் வெது வெதுப்பான நீர் அருந்துவது சைனஸ் தொந்தரவிற்கு மருந்தாக இயற்கை வைத்தியம் கூறுகின்றது.

    * மேலும் நிணநீர் ஓட்டம் சீராய் இருக்கவும் உதவுவதாக வெளிநாட்டு இயற்கை வைத்தியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    * காலையில் நீரில் கலந்து குடிக்க உடலின் சக்தி கூடுகின்றது.

    * உடற்பயிற்சிக்கு பின் ஏற்படும் சோர்வு நீங்குகின்றது.

    * பூஞ்சை பாதிப்பு வெகுவாய் கட்டுப்படுகின்றது.

    * அலர்ஜி மட்டுப்படுகின்றது.

    * தசைப் பிடிப்புகள் நீங்குகின்றன.

    * சருமம் சுத்தம் பெறுகின்றது.

    * ஆசிவியுடன் சிறிது நீர் சேர்த்து மாதம் ஒருமுறை பல்லில் தேய்க்க பல் பளிச்சிடுகின்றது. கண்டிப்பாய் அடிக்கடி செய்யக் கூடாது. பல் எனாமல் தேய்ந்து விடும்.

    * நீர் சேர்த்த ஆசிசி உடலில் மடிப்புகளில் தடவி கழுவ உடல் துர்நாற்றம் நீங்குகின்றது.

    * தலையில் தடவி கழுவ பொடுகு நீங்குகின்றது.

    * வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்குகின்றது.

    * பாத்திரங்களை கூட சுத்தம் செய்யலாம்.

    * காய்கறிகளை கழுவலாம்.

    குறிப்பு:- ஆப்பிள் சைடர் வினிகர் 1 ஸ்பூன் + 1 கப் நீர் என்ற அளவிலேயே எப்பொழுதும் பயன்படுத்த வேண்டும்.

    * தினமும் உபயோகிக்க கூடாது.

    * மருத்துவரிடம் இதனை கூற வேண்டும்.

    * சருமத்தில் பயன்படுத்தினால் சிறிது தடவி எந்த அலர்ஜியும் இல்லாத பொழுதே பயன்படுத்த வேண்டும். 
    ஜீரக சம்பா, பாஸ்மதி அரிசியில் பிரியாணி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கோதுமை ரவையில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - கால் கிலோ
    கோதுமைக் குருணை - 2 கப்
    நெய் - இரண்டரை டேபிள்ஸ்பூன் + ஒரு டீஸ்பூன்
    தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
    பட்டை - ஒன்று
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 3
    பிரிஞ்சி இலை - ஒன்று
    சின்னவெங்காயம் - அரை கைப்பிடி
    பெரியவெங்காயம் - ஒன்று
    இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்
    பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    பச்சைமிளகாய் - 4 (கீறியது)
    தக்காளி - 2
    புதினா இலை - 2 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
    சோம்புத்தூள் - கால் டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
    தேங்காய்ப்பால் - 4 கப்
    முந்திரிப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்



    செய்முறை :

    வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும்.

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி நன்றாக கழுவி வைக்கவும்.

    ப.மிளகாயை கீறிக்கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து இரண்டரை டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் இத்துடன் சின்னவெங்காயம், பெரியவெங்காயம், இரண்டையும் சேர்த்து சிவக்க வறுக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி மற்றும் பூண்டு விழுதுகளைச் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சைமிளகாய், நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் முக்கால் பாகம் புதினா மற்றும் கொத்தமல்லித்தழையை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சிக்கனை சேர்த்து வதக்கி போதுமான அளவு உப்பைச் சேர்க்கவும்.

    சிக்கனில் இருந்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும்.

    இத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள் மல்லித்தூள் (தனியாத்தூள்) சீரகத்தூள், சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள், தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் தேங்காய்ப்பால் ஊற்றி, சிக்கனை வேக விடவும். சிக்கன் வெந்ததும் கோதுமைக் குருணையைச் சேர்த்து 5 நிமிடங்கள் அடிபிடிக்காமல் கொதிக்க விடவும்.

    கோதுமையும் கறி, தேங்காய் பால் சேர்ந்து கெட்டியானதும் தீயைக் குறைத்து 10 நிமிடங்கள் மூடி தம்மில் வைக்கவும்.

    கலவை உப்புமா பக்குவத்துக்கு வந்தவுடன், புதினா, கொத்தமல்லித்தழை, வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான கோதுமை ரவை சிக்கன் பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உங்களுடையது எந்த வகையான சருமமாக இருந்தாலும் சரி, ஐஸ் கட்டி மேஜிக் போல உங்கள் சருமத்தில் மாயம் செய்யும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    உங்கள் சருமத்தை பாதுகாக்கும் எளிய பொருள் உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் உள்ளது. உங்கள் சருமத்தில் உள்ள பருக்கள் மங்க வேண்டுமா? அல்லது நீங்கள் போடும் மேக்கப் ரொம்ப நேரம் நீடிக்க வேண்டுமா? ஐஸ் கட்டி தான் தீர்வு. உங்களுடையது எந்த வகையான சருமமாக இருந்தாலும் சரி, ஐஸ் கட்டி மேஜிக் போல உங்கள் சருமத்தில் மாயம் செய்யும்.

    நாள் முழுவதும் அலைந்து வேலை செய்வதால் உடலும் சருமமும் சோர்ந்து விடுகிறது. சருமத்தின் சோர்வுகளை ஐஸ் கட்டி கொண்டு நீக்கி விடலாம். இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முகத்தை ஐஸ் பொலிவு பெற செய்யும். ஐஸ் பேஷியல் தான் தற்போதைய டிரெண்டிங்காக உள்ளது.

    எல்லாரும் தன்னுடைய சருமம் பிரகாசமாக பளிச்சென்று இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஐஸ் கட்டியை முகத்தில் தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகமாகி முகம் பளிச்சென்று ஆகிவிடும். ஐஸ் கட்டியை தேய்ப்பதால் இரத்த குழாய்கள் முதலில் சுருங்கி இரத்த ஓட்டம் குறையும். பின்னர் இதை ஈடு செய்ய நம்முடைய உடல் அதிகமாக இரத்த ஓட்டத்தை முகத்தில் ஏற்படுத்தும். இது முகத்தை பொலிவாக மற்றும் உயிர்ப்பாக மாற்றும்.

    நமது முக அழகை கெடுக்கும் கருவளையங்களை ஐஸ் கட்டி கொண்டு விரட்டி விடலாம். இதற்கு நீங்கள் சிறிதளவு ரோஸ் வாட்டரை கொதிக்க வைத்து பின்னா் அதில் வெள்ளரிக்காய் சாறு கலந்து இதை ஐஸ் ட்ரேயில் வைத்து ஃபிரிசரில் வைத்து விடுங்கள். இதை முகத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால் கருவளையம் ஓடிவிடும்.
    தற்போதைய சூழலில் பல குழந்தைகள் சுயநலமாகவே வாழப் பழகி வருகின்றனர். குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கு பார்ப்போம்.
    தற்போதைய சூழலில் பல குழந்தைகள் சுயநலமாகவே வாழப் பழகி வருகின்றனர். குறிப்பாக பழக்கிவிடப்படுகின்றனர். இதற்கு பெரும்பான்மையான காரணம் பெற்றோர்களின் வளர்ப்பு முறையே. மேலும், பல குழந்தைகள் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதை விடுத்து, ஒதுங்கி செல்லவே துணிகின்றனர். எதையும் தைரியமாக ஒப்புக்கொள்ளும் அல்லது தைரியமாகப் போராடும் நிலையும் குறைந்து வருகிறது.

    இதற்கு காரணம் பெரும்பாலும் ஒரு சில குடும்பங்களில் ஒரு குழந்தையே போதும் என்ற தங்களது சுயநலம்தான் காரணம். இதனால் குழந்தைகள் தனித்து விடப்பட்டு, சுயநலமாகவே வாழப் பழகிவிடுகின்றனர். தனக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுக்கும் பண்பு தானாகவே வளர்ந்து, அது ஆரோக்கியமான பழக்கமாகிவிடும்.

    சின்னச் சின்ன தவறுகளும், புறக்கணிப்புகளும் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கி தவறான முடிவுகளுக்கு கொண்டு சென்று விடுகின்றனர். எது அவமானம், எது பாராட்டுக்குரியது என்பதை அறியாமலே அந்த உணர்வுகளை தங்களுக்குள் எடுத்துக் கொண்டு சரியான முடிவு எடுக்க முடியாமல் பல குழந்தைகள் திணறி வருகின்றனர்.

    குழந்தைகள் வளரும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை யாரிடமும் நம்பகத்தன்மையாக முன் வந்து அதற்கான தீர்வுகளை தேடுவதில்லை. இணையதளம், சமூக வலைதளங்கள் வாயிலாக அவர்களுக்கான தீர்வுகளை தேடுகின்றனர். அந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட, மற்றொரு பிரச்சனைகளின் வசம் சிக்குகின்றனர்.

    இப்படி குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கு பார்ப்போம்,

    * பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதை தவிருங்கள்.

    * ஒரு தோல்வி ஏற்பட்டால், அதுதான் வெற்றிக்கான முதல் படி என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.



    * ஏமாற்றங்கள் தோல்விகள் அல்ல என்பதை எடுத்து கூறுங்கள்.

    * அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள். எது அத்தியாவசியம், எது அத்தியாவசியம் இல்லாதது என்பதை சொல்லிக் கொடுங்கள்.

    * ஒரே குழந்தை இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு எல்லாமே தனக்கானது என்கிற மனப்பான்மை இருக்கும். இவர்களுக்கு மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே கற்றுக் கொடுங்கள்.

    * அடிக்கடி உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கிருக்கும் குழந்தைகளோடு ஒன்று கலந்து பழகும் சூழலை உருவாக்குங்கள்.

    * ஆண், பெண் வித்தியாசம் பற்றி கற்றுக் கொடுங்கள்.

    * இரண்டும், மூன்று குழந்தைகள் இருப்பின், ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, குறை சொல்லிப் பாராட்டுவது போன்றவற்றை விட்டுவிட்டு, தட்டிக் கொடுத்து சமமாக நடத்துங்கள்.

    * உங்கள் வீட்டுக்கு வருபவர்களிடம் கொடுக்கும் பொருட்களை, உங்கள் குழந்தைகளின் கரங்களாலேயே கொடுக்க வையுங்கள்.

    * பள்ளிக்கூடங்களில் பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதை வீட்டிலும் கற்றுக் கொடுங்கள்.

    * கணவன், மனைவி இடையே பிரச்சனையோ, உறவினர்களிடம் மனஸ்தாபமோ இருந்தால் அவற்றை உங்கள் குழந்தைகள் முன்பு காட்டிக் கொள்ளாதீர்கள்.

    * செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்.

    * போதும் என்கிற மனப்பான்மைக்கு பழக்குங்கள்.

    * அவர்களுடன் நட்புடன் பழகுங்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மறைக்காமல் உங்களிடம் குழந்தைகள் சொல்லும் அளவுக்கு அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்.
    இன்றைய நவீன யூகத்தில் உணவுமுறையில் சில மாறுதல்களை செய்வதன் மூலம் வயிற்று கோளாறுகளை தவிர்க்கலாம். அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    காலை எழுந்தவுடன் எளிய உடற்பயிற்சி செய்யுங்கள், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற் கொள்ளுங்கள். பிறகு காலை நல்ல சத்துள்ள உணவு அதிகமாக சாப்பிட வேண்டும். காலை உணவில் பழங்கள், மற்றும் பால் ஆகியவற்றை சேர்ப்பது நல்லது. காபி மற்றும் டீ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    பிறகு மதிய உணவு சமசீர் உணவாக சாப்பிட வேண்டும். மதிய உணவில் பச்சை காற்கறிகள், பழங்கள், பருப்புகள் மற்றும் கீரைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உங்கள் ஹைட்ரேட் மற்றும் உங்கள் பசி உணர்வை குறைக்கும்.

    ஆகையால் தாகம் எடுத்த பின் நீர் அருந்துவதை விட சிறிது இடைவெளியில் ஒரு முறை நாம் நீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும். இரவு நேர சாப்பாட்டுக்கு கோதுமை உணவு வகைகளை எடுத்துக் கொள்வது, இரவு ஜீரணத்திற்கு எளிமையானது. சாப்பிட்டவுடன் தூங்க செல்லாமல் சிறிது நேரம் நடந்து விட்டு அல்லது வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்க செல்லலாம். அவ்வாறு செய்வது நாம் சாப்பிட்ட உணவு காலோரிகள் நம் உடலில் தங்கி விடாமல் இருக்கும். நொறுக்குத் தீனி தவிர்ப்பது நல்லது.



    இரவு 8 மணிக்குள் சாப்பாட்டை முடித்துக் கொண்டால் அஜீரண கோளாறில் இருந்து தப்பிவிடலாம். நாம் எடுத்து கொள்ளும் உணவுகளின் கலோரிகளை எரி சக்தியாக மாற்றி விட்டால் வீணாக நம் உடலில் தங்கி கொழுப்பாக மாறாது. அதாவது நாம் சாப்பிடும் உணவுக்கு ஏற்ற வேலையை உடலுக்கு தந்தால் உடல் பருமன் என்பது பறந்து போய் விடும். நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப உணவு கலோரிகளை எடுத்து கொள்ள வேண்டும்.
    இவ்வாறு செய்தால் உங்கள் உடல் பருமன் போய் நலினமான உடல் சொந்தமாகும்.

    ஒவ்வொருவருடைய உடலமைப்பு, குடல், இரைப்பை அது சுருங்கி விரியும் தன்மை இதைப் பொறுத்து பாதிப்பின் தீவிரம் இருக்கும். பொதுவா ஜீரணம் செய்ய பித்த நீர், கணையநீர் தேவை. இது குறைந்தால் ஜீரணம் ஆகாது. இவையெல்லாம் நாம் சாப்பிடுகிற உணவைப் பொறுத்து தான் சரியாக இருக்கும்.

    இல்லையென்றால் அஜீரணம், வாய்வு, வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல், அல்சர், பித்தப்பை கல், பெருங்குடல் புற்று நோய், மூலம், நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, இதயநோய், மாரடைப்பு, நெஞ்சுவலி, மஞ்சள் காமாலை அதிகபட்சமாக கேன்சர் கூட வர வாய்ப்பு இருக்கிறது. அதுவும் தந்தூரி பிரியர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். 
    உடலில் உள்ள அதிகப்படியாக கொழுப்பை குறைக்கும் சக்தி கொண்டது கொள்ளு. இன்று கொள்ளுவை வைத்து சத்தான கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி - 1 கப்,
    கொள்ளு - அரை கப்,
    உப்பு - தேவைக்கு.


    செய்முறை :

    கொள்ளுவை வெறும் வாணலியில் வறுத்து நீரில் மூழ்கும் வரைப் போட்டு 2 மணி நேரம் ஊறவிடவும்.

    குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர் அதை குக்கரில் போட்டு அதனுடன் கொள்ளுவை போட்டு மூழ்கும் அளவிற்கு மேல் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.

    நன்கு குழைய வெந்ததும் அதில் கடைந்து அடுப்பில் வைத்து மேலும் நீர் சேர்த்து கிளறிவிட்டு ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

    சூப்பரான குதிரைவாலி கொள்ளு கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    கழுத்து மற்றும் முதுகில் வளையும் தன்மை அதிகரிக்கும் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலிக்கு பயனுள்ள ஆசனம் இது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    பெயர் விளக்கம்: ‘மகர’ என்றால் முதலை என்று பொருள். இந்த ஆசனம் முதலை தலை தூக்கிய நிலை போல இருப்பதால் ‘மகராசனம்’ என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: தரை விரிப்பின் மேல் குப்புறப்படுக்கவும், இரு கால்களையும் ஒன்றாக சேர்த்து வைக்கவும், கைகளை தலைக்கு முன்னால் நீட்டி காதுகளுக்கு அருகில் இருக்கும்படி வைக்கவும், உள்ளங்கைகள் தரைவிரிப்பின் மேல் படிந்திருக்கட்டும். நெற்றியை தரை விரிப்பின் மேல் வைக்கவும், உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். கண்கள் மூடி இருக்கட்டும், சில வினாடிகள் கழித்து கண்களை திறந்து முழங்கைகளை மடக்கி இரண்டு உள்ளங்கைகளையும் கன்னத்தின் இரு பக்கங்களிலும் வைக்கவும். கண்களை மூடவும் இந்நிலையில் 2 முதல் 5 நிமிடம் நிலைத்திருக்கவும், இந்த ஆசனத்தை 2 முதல் 3 முறை பயிற்சி செய்யலாம்.

    பயிற்சிக்குறிப்பு: இரண்டு நிமிடம் கூட இந்த ஆசன நிலையில் நிலைத்திருக்க முடியாதவர்கள் முடிந்த அளவு நேரம் செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: கழுத்து, முதுகு, இடுப்பு பகுதியின் மீதும் மூலாதார சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயன்கள்: கழுத்து மற்றும் முதுகில் வளையும் தன்மை அதிகரிக்கும் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலிக்கு பயனுள்ள ஆசனம் இது. 
    சொந்த வீடு கட்ட அல்லது அடுக்குமாடி வீடு வாங்குவதற்கு வங்கி கடன் பெற முடிவெடுப்பவர்கள் எளிய நடைமுறைகள் கொண்ட வங்கியை அவர்களது தேவைகளின் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள்.
    சொந்த வீடு கட்ட அல்லது அடுக்குமாடி வீடு வாங்குவதற்கு வங்கி கடன் பெற முடிவெடுப்பவர்கள் எளிய நடைமுறைகள் கொண்ட வங்கியை அவர்களது தேவைகளின் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள். வீட்டை கட்டி விட்டு அல்லது வாங்கிய வீட்டில் நிம்மதியாக அமர வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ள நிலையில் கடனுக்கான வட்டி விகிதம் பற்றிய வருங்கால கணக்கீடுகள் பலருக்கும் இருப்பதில்லை.

    காலப்போக்கில் ஏற்படும் பொருளாதார சிக்கல்களால் தவணை தவறும் சமயங்களில்தான் வட்டி விகிதம் பற்றி பலரும் யோசிப்பதாக நிதி ஆலோசகர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த நிலையில் மாதாந்திர தவணையை சற்று குறைவாக செலுத்த இயலுமா..? என்ற கேள்விக்கு அவர்கள் தரும் ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’ (Balance Transfer) என்ற வழிமுறை பற்றிய செய்திகளை இங்கே பார்க்கலாம்.

    வங்கி மாற்றம்

    10 வருடங்களுக்கும் மேலான காலகட்டம் கொண்ட நீண்ட கால கடன்களுக்கு பொருத்தமாக குறிப்பிடப்படும் இந்த வழிமுறையின் மூலம் மீதமுள்ள வீட்டுக் கடனை குறைவான வட்டி விகிதமுள்ள வங்கிக்கு மாற்றிக்கொண்டு அந்த விகிதத்தின்படி மாதாந்திர தவணையை செலுத்தி வரலாம்.

    அவசியமான ஆவனங்கள்


    வீட்டுக் கடன் பெறுவதற்கு தரப்பட்ட அனைத்து ஆவணங்களும் இதற்கும் அவசியம் என்ற நிலையில், முந்தைய வங்கியிலிருந்து ஒரிஜினல் ஆவணங்கள் அனைத்தையும் பெற்று புதிய வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.

    மீதமுள்ள மதிப்புக்கு காசோலை

    ஆவணங்கள் தக்க சோதனைகளுக்கு பின் புதிய வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மீதமுள்ள கடன் தொகைக்கான மதிப்பு காசோலையாக முந்தைய வங்கிக்கு வழங்கப்படும். மேலும், முந்தைய வங்கி நடைமுறைகள் புதிய வங்கியிலும் பின்பற்றப்படும்.

    ஆவணம் பதிவு

    தவணை செலுத்தப்படும் சொத்து அமைந்துள்ள பகுதிக்கான சார்-பதிவாளர் அலுவலகத்தில் கடன் கொடுத்த புதிய வங்கியின் பெயர், மற்றும் கடனுக்கான விபரங்கள் ஆகியவை ஆவணமாக பதிவு செய்யப்படும்.

    நீண்ட கால ஆதாயம்

    மேற்கண்ட முறை எல்லா நேரங்களிலும், அனைவருக்கும் பொருத்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மீதியுள்ள கடன் தொகை, வங்கிகளில் வசூலிக்கப்படும் ‘போர்குளோசர் கட்டணம்’ என்ற அபராத கட்டணம், மற்றும் ‘பிராசஸிங் கட்டணம்’ போன்றவற்றையும், மாறக்கூடிய வட்டி விகித வேறுபாடுகளையும் கணக்கிட வேண்டும். சில நிலைகளில் வீட்டை மறு மதிப்பீடு செய்யவேண்டியதாக இருக்கலாம். அதன் பின்னர் ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’ என்பது மீதி செலுத்த வேண்டிய தவணைகளின் கணக்கீடு அடிப்படையில் ஆதாயம் தரக்கூடியது என்றால் இம்முறையை கடைப்பிடிக்கலாம்.
    கர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
    கர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அதனால்தான் கர்ப்பம் உறுதியானதும் மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனை செய்து ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்து அதற்கேற்ப இரும்புச்சத்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். இதன் மூலம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கும், அதைச் சுமக்கும் தாய்க்கும் இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுகிற எந்த பாதிப்பும் வந்துவிடாமல் தடுக்கப்படும்.

    * முதல் கட்டமாகக் குழந்தையின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படும்.
    * குறைப்பிரசவம் நிகழலாம்.
    * கர்ப்பத்தில் சிக்கல் வரலாம்.
    * குழந்தை எடை குறைவாகப் பிறக்கலாம். பிறந்த பிறகும் அதன் நோய் எதிர்ப்புத் திறன் வெகுவாகப் பாதிக்கப்படலாம்.
    * பிறந்த குழந்தைக்கும் ரத்தசோகை தாக்கலாம்.

    பிரசவத்தின் போதும் பெண்ணுக்குப் பெரிய அளவில் ரத்த இழப்பு ஏற்படும் என்பதால் அதன் பிறகும் ரத்த சோகைக்கு வாய்ப்புகள் அதிகம். அரிதாக பிரசவத்தின்போது தாய் உயிரிழக்கவும் நேரலாம். எனவே, கர்ப்பத்தை எதிர்நோக்கும் நாட்களிலிருந்தே ரத்தசோகை அண்டாமலிருப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும்.

    என்ன செய்ய வேண்டும்?

    கர்ப்பம் உறுதியானதும் மருத்துவர் சொல்கிற பரிசோதனைகளைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். அதில் ஹமோகுளோபின் பரிசோதனையை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது. பரிசோதனையில் தெரிய வரும் அளவுகளை வைத்து மருத்துவர் கர்ப்பிணிக்கான சப்ளிமென்ட்டுகளைப் பரிந்துரைப்பார். கால்சியம் சப்ளிமென்ட்டும் சேர்த்துப் பரிந்துரைக்கப்படும்போது அது பற்றி மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறலாம்.

    கர்ப்ப கால ரத்த சோகையை வெறும் சப்ளிமென்ட்டுகளால் மட்டுமே சரி செய்துவிட முடியாது. இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் சி சத்துகள் நிறைந்த உணவுகளைப் போதுமான அளவு உட்கொள்ள வேண்டும். தினசரி உணவில் கீரைகள், நட்ஸ், பருப்புகள் போன்றவை இருக்க வேண்டும்.
    பளிச்சிடும் பற்கள் நமக்கு அழகு சேர்ப்பவையாகும். ஆரோக்கியமான பற்கள் முத்துகள்போல பளிச்சிடும். பற்களைப் பற்றிய சுவையான செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
    பளிச்சிடும் பற்கள் நமக்கு அழகு சேர்ப்பவையாகும். ஆரோக்கியமான பற்கள் முத்துகள்போல பளிச்சிடும். பற்களில் மஞ்சள் நிறம் படிவது ஏன் என்பது தெரியுமா? பற்பசையை கண்டுபிடித்தவர்கள் யார், டூத் பிரஷை உருவாக்கியவர்கள் யார்? பற்களில் பவள கற்களைப் பதித்து அலங்காரம் செய்துகொள்ளும் பழக்கம் கொண்டமக்கள் பற்றி அறிவீர்களா? பற்களுக்கான பிரத்தியேக வங்கி எங்கு செயல்படுகிறது? இதுபோன்ற பற்களைப் பற்றிய சுவையான செய்திகளை தெரிந்து கொள்ளலாமா குட்டீஸ்...

    * மனிதர்களுக்கு வாழ்நாளில் 2 முறை மட்டுமே பற்கள் வளர்கிறது. முதலில் வளரும் பற்கள் விழுந்து முளைக்கும் தன்மை கொண்டவை. இவை பால் பற்கள் அல்லது பாலர் பற்கள் எனப்படுகின்றன. அப்போது 20 பற்கள் மட்டுமே காணப்படும். அவை விழுந்த பின்பு இரண்டாம் முறை பற்கள் முளைக்கின்றன. அப்போது 32 பற்கள் வரை வளரும்.

    * பற்களின் வளர்ச்சி கருவிலேயே ஆரம்பமாகிவிடுகிறது. ஆனால் குழந்தை பிறந்த 6 மாதங்களுக்குப் பிறகுதான் பற்களின் வளர்ச்சி நிறைவடைகிறது. அரிதாக சில குழந்தைகள் பற்களுடன் பிறப்பது உண்டு.

    * பற்களின் எனாமல்தான் உடலின் கடினமான பொருளாகும்.

    * பற்களில் 300 வகையான பாக்டீரியா இனங்கள் வளர்ச்சி அடைகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பற்களை சேதப்படுத்தும் திறன் கொண்டவை.

    * ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சுமார் 40 நாட்களை பல் துலக்குவதற்காக பயன்படுத்துகிறான் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

    * வெளியே தெரிவது பற்களின் மூன்றில் ஒரு பகுதிதான். தாடையில், ஈறுகளினுள் 2 பங்கு பற்கள் மறைந்த நிலையில் உள்ளன.

    * மாயன் இன மக்கள் பழங்காலத்திலேயே பற்களில் துளையிட்டு அதில் செயற்கை வண்ணக் கற்களை பதித்து அலங்காரம் செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

    * நீரிழிவு, இதய பாதிப்புகள், எலும்புருக்கி போன்றவை பற்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

    * கைரேகைகளைப் போலவே பற்களும் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தன்மையுடன் இருக்கும்.

    * வெட்டும் பற்கள், கோரைப் பற்கள், முன் கடைவாய்ப்பல், கடைவாய்ப்பல் என பற்கள் 4 வகைப்படும். வெட்டும் பற்கள் 8, கோரைப்பற்கள் 4, முன் கடைவாய் பற்கள் 8, கடைவாய்ப்பற்கள் 12 என்ற எண்ணிக்கையில் இருக்கும். சிலருக்கு கடைவாய் பற்களின் எண்ணிக்கை வேறுபடும்.

    * பல் துலக்குவது 40 சதவீத சுத்தத்தையே தருகிறது. பற்களை பஞ்சு கொண்டு துடைப்பது, கொப்பளிப்பது 60 சதவீத சுத்தத்திற்கு துணை செய்யும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    * சீனர்கள்தான் நவீன டூத்பிரஷை உருவாக்கியவர்கள் என்று கருதப்படுகிறது. அவர்கள் மூங்கில் கைப்பிடியும், முடிகள், நார்கள் கொண்ட பிரஷ்களை பயன்படுத்தி பல்துலக்கி உள்ளனர்.

    * இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் ஆலமரம் மற்றும் வேப்பமர குச்சிகளை பல்துலக்க பயன்படுத்துகிறார்கள். அதில் கிருமி எதிர்பொருட்கள் இருப்பதால் அவை டூத்பிரஸ் களைப்போல சிறந்தவை என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    * கழிவறையில் இருந்து 6 அடி தூரத்திற்கு அப்பால் “டூத்பிரஷ்”களை வைத்திருப்பதே அவற்றில் கிருமிகள் தொற்றாமல் பாதுகாக்கும். பிரஷில் ஈரம் இல்லாமல் இருப்பதும் கிருமித் தொற்றை மூன்றில் ஒரு பங்காக குறைக்கும். பிரஷிற்கு மூடி பயன்படுத்தினால் கிருமித் தொற்றை பெருமளவு தடுக்கலாம்.

    * பழமை எகிப்தியர்கள் 5 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே பற்பசை களை பயன்படுத்தியுள் ளனர். அவர்கள், ஒருவகை கற் தூளையும், பழரசத்தையும் கலந்து பற்பசைபோல பயன்படுத்தி உள்ளனர்.

    * சீன ஆராய்ச்சியாளர்கள், எலியின் சிறுநீர் ஸ்டெம்செல்களைக் கொண்டு செயற்கை பல் எனாமலை உருவாக்கி சாதனை செய்துள்ளனர்.

    * நெதர்லாந்தில் குழந்தைகளுக்கான பால்பற்களை பராமரிக்கும் பல் வங்கி உள்ளது. இங்கு 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பற்கள் சேமிக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளின் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளை பரிசோதித்தபின்பு அவர்களுக்கு பொருத்தமான பற்களை பொருத்த அனுமதிக்கிறார்கள்.



    * பல் விழுந்து முளைக்காதவர்கள், செயற்கையாக பற்கள் பொருத்தி அழகுபடுத்திக் கொள்வது வழக்கமாக உள்ளது. மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த வழக்கம் அதிகமாக இருக்கிறது. வயதானவர்கள் செயற்கை பல்கள் அணிவதும் உலகம் முழுவதும் பரவலாக உள்ளது.

    * இந்தியாவைச் சேர்ந்த ஆசிக் கவாய் என்ற 17 வயது இளைஞருக்கு தாடையில் கட்டி வளர்ந்து கொண்டே இருந்தது. அவர் ஆபரேஷன் செய்து கொண்டபோது அந்த கட்டிக்குள், 232 பற்கள் வளர்ந்தது கண்டுபிடித்து நீக்கப்பட்டது.

    * வாயில் உள்ள உமிழ்நீர் பற்களை பாக்டீரியா கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது.

    * உலகில் அதிகமானவர்களை பாதிக்கும் வியாதி பல்வலி என்று அறியப்பட்டுள்ளது.

    * லுசி பீமான் ஹோப்ஸ் உலகின் முதல் பெண் பல் மருத்துவர் ஆவார். இவர் 1866-ல் பல் மருத்துவ சான்றிதழ் பெற்றார்.

    * 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல் மருத்துவர்கள் எகிப்தில் இருந்துள்ளனர். ஹெசி ரே என்பது வரலாற்றில் அறியப்பட்ட பழமையான எகிப்திய பல்மருத்துவரின் பெயராகும்.

    * பல்வலியை குறிக்கும் அறிவியல் சொல் ஒடான்டால்ஜியா.

    * வலது கை பழக்கம் கொண்டவர்கள் தங்கள் உணவை வலது பக்கம் வைத்து மெல்லுவதும், இடது கை பழக்கம் உள்ளவர்கள், உணவை இடதுபக்கமாக வைத்து மெல்லுவதும் வழக்கமாகும். நீங்கள் அதிகமாக எப்படி மெல்லுகிறீர்கள் என்பதை ஒரு நிமிடம் கவனித்துப் பாருங்களேன்.

    * உலகில் அதிகமானவர்களால் நீல நிற பிரஷ் பயன்படுத்தப் படுகிறது.

    * காபி, டீ, பழரசங்கள், குளிர் பானங்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் பற்களில் கறை படிய முக்கிய காரணமாகும். பானங்களைப் பருக, உறிஞ்சுகுழாய் (ஸ்டிரா) பயன்படுத்துவதும், புகையிலைப் பொருட்களை தவிர்ப்பதும் பற்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

    * இனிப்பு பொருட்கள், மற்றும் உணவுத் துணுக்குகள் பற்களில் தங்கும்போது கிருமிகள் பெருகி பற்களுக்கு பாதிப்பை உருவாக்கும். காலையும், இரவும் பல் துலக்கி கொப்பளிப்பது பற்களை பாதுகாக்கும் சிறந்த வழி யாகும். முத்துப்போல் பற்களை பராமரிப்போம், பளிச் புன்னகையால் பார்ப்பவர்களை கவர்வோம்! 
    சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே.
    பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்கக் கூடியதாகும்.

    சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம்.

    ஏனெனில் இத்தகைய மாற்றங்களே சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும். இவ்வாறு உடலில் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்று கூர்ந்து கவனித்து வருவதன் மூலம் சர்க்கரை நோய் இருப்பதை சீக்கிரமே அறிந்து கொள்ளலாம்.

    அவ்வாறு அறிந்து கொண்ட பின், தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இந்நோய் உண்டாக்கக்கூடிய விபரீத விளைவுகளை தவிர்க்கலாம். இப்போது சர்க்கரை நோயின் பல்வேறு அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா!!!

    * சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்களுக்கு ஏற்படுமாயின், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும். சர்க்கரை அளவுகளில் ஏற்படக்கூடிய உயர்வு, இரத்த ஓட்டத்தில் காணப்படும் திரவங்களின் அளவை உயர்த்தக்கூடியதான ஓஸ்மொலாலிட்டியை அதிகரிக்கும். இது சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து, அதிக அளவிலான சிறுநீரை உருவாக்கும் படி செய்யும். இதனாலேயே சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்குகிறது.

    * சர்க்கரை நோயாளிக்கு எப்போதும் அடங்காத தாகம் இருப்பது போன்ற உணர்வு எழும். உடலில் உள்ள திரவங்கள் அனைத்தும் அடிக்கடி வெளியேற்றப்படுவதினால், அந்த நீர் இழப்பை ஈடுகட்ட வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக, அதீத தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகிய இரண்டு அவஸ்தைகளும் இருப்பின், அது சர்க்கரை வியாதி இருப்பதற்கான உறுதியான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.



    * அதிக அளவிலான குளுக்கோஸ், சர்க்கரை நோயாளியின் இரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து திரவத்தை வெளியேற்றுவதினால், அது அவரின் கண் பார்வையை மங்கச் செய்யும். மேலும் இது கண்களின் கூர்ந்து நோக்கும் திறனை பாதிக்கும். சர்க்கரை வியாதிக்கு சரியான மருத்துவ கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில், அது கண் பார்வை குறைவை உண்டாக்கும். ஏன் சில சமயங்களில் கண் பார்வையை கூட பறித்து விடும்.

    * இது டைப்-1 சர்க்கரை நோயின் மிகப் பொதுவான அறிகுறியாகும். உயிரணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காததனால், உடல் தனக்கு தேவையான சக்தியை கொழுப்பு நிறைந்த திசுக்களை உடைத்து எடுத்துக் கொள்ள தலைப்படும். இதனால் தான் எடை குறைவு ஏற்படுகிறது.

    * சர்க்கரை நோயாளியின் உடல், சர்க்கரையை உபயோகித்து தனக்குத் தேவைப்படும் சக்தியைப் பெற்றுக் கொள்ள இயலாது. இதனால், அந்நோயாளி உடற்சோர்வு, அசதி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். உயிரணுக்களால், இரத்த ஓட்டத்தில் இருக்கக்கூடிய குளுக்கோஸை, இன்சுலினின் உதவியின்றி உறிஞ்ச இயலாது. அதனால் அவற்றின் ஆற்றல் குறைந்து காணப்படும்.

    * இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதனால், நரம்பு மண்டலம் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்புக்கு ஆளாகும். சர்க்கரை நோய் நீண்ட காலம் வரையில் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கும் பட்சத்தில், அது கைகளில் அடிக்கடி சிலிர்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் அல்லது உணர்வுகள் ஏதுமின்றி மரத்துப் போகச் செய்யும்.
    பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. பழைய சோறு உடல் சூடு ஏற்படாமல் தடுக்கவும், மலச்சிக்கல் பிரச்சனை நீக்கவும், வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.
    பழைய சோறு... தமிழர்களின் பாரம்பரிய உணவு. கஞ்சி உணவு அரிசிச் சோறும் தண்ணியும் கலந்த ஒரு கலவை. கஞ்சியில் உள்ள நீரை மட்டும் காலையில் அருந்துவார்கள். இதை நீராகாரம் என்பார்கள். பழைய கஞ்சியை நீராகாரம், பழங்கஞ்சி, பழந்தண்ணி, புளிச்ச கஞ்சி, பழஞ்சோறு, பழையது, கஞ்சித்தண்ணி என்பார்கள்.

    பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இந்த உணவில் உள்ள நல்ல பாக்டீரியா உடல் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும். நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த இந்த உணவு செரிமானக்கோளாறுகளைப் போக்கி செரிமான மண்டலம் சிறப்பாகச் செயல்பட உதவும்.

    நீண்டநாள் இளமையுடன் இருக்கவும், முதுமை ஏற்படாமல் தடுக்கவும், எலும்புகளை வலிமைப்படுத்தவும், உடல் சூடு ஏற்படாமல் தடுக்கவும், மலச்சிக்கல் பிரச்சனை நீக்கவும், சோர்வு நீக்கி சுறுசுறுப்பு தரவும், இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தவும், வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கவும், வாதம், பித்தக் கோளாறுகளில் இருந்து விடுதலை தரவும் உதவக்கூடியது பழைய சோறு.

    சத்துகள் நிறைந்த, தாது உப்புகள் நிறைந்த பழைய சோற்றுக்கு சம்பா அரிசி ஏற்றது. அதிலும் கைக்குத்தல் அரிசி மிகவும் சிறப்பு. முதல் நாள் வடித்த சோற்றில் நீர் ஊற்றி வைத்து மறுநாள் உண்ணக்கூடியதே பழைய சோறு.



    முதல் நாள் சமைத்த உணவில் நீர் ஊற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சோற்றுடன் சின்ன வெங்காயம் சேரும்போது நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளிக்கொடுக்கும். பழைய சோற்றைச் சாப்பிட்டு வந்தால் எந்தவிதக் காய்ச்சல்களும் நம்மை நெருங்காது.

    கோடை காலத்தில் கண் நோய்கள், அம்மை, மஞ்சள் காமாலை மற்றும் பல நோய்கள் பாதிக்காமல் இருக்க பழைய சோறு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. நோய்கள் வரும்முன் காக்க சிறந்த உணவு.

    அரிசி சோறு மட்டுமல்ல கேழ்வரகு, கம்பு போன்றவற்றை இடித்து மாவாக்கி காலையில் ஊற வைத்து மாலையில் நீர் விட்டுக் கரைத்து உப்பு சேர்த்துக் காய்ச்ச வேண்டும். முதல்நாள் காய்ச்சி வைத்த மாவை மறுநாள் காலை எடுத்து தண்ணீர் அல்லது மோர் சேர்த்துக் கரைத்து துவையல், ஊறுகாய் சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் ஆற வைத்தும் குளிர்காலத்தில் சூடாகவும் சாப்பிடலாம். மண்பானையில் செய்து வைத்துக் கொண்டால் நான்கு நாள் வரை கூட இதைப் பயன்படுத்தலாம்.

    ×