என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    பெண்கள் விரும்பி அணியும் சேலைகள் என்பதும் தற்போது இயற்கை சார்ந்த வகையில் உருவாக்கம் பெறுகின்றன. அதாவது ஆர்கானிக் பருத்தி சேலைகள் விற்பனைக்கு வருகின்றன.
    இயற்கையை விரும்பும் மக்கள் இயற்கையான பொருட்களால் தயாராகும் பொருட்களின் மீதும் அதிக ஆர்வம் கொள்கின்றனர். பெண்கள் விரும்பி அணியும் சேலைகள் என்பதும் தற்போது இயற்கை சார்ந்த வகையில் உருவாக்கம் பெறுகின்றன. அதாவது ஆர்கானிக் பருத்தி சேலைகள் விற்பனைக்கு வருகின்றன. இவற்றின் அருமை, பெருமை அறிந்து பல பெண்களும் இதனை விரும்பி வாங்கி உடுத்தி கொள்கின்றனர். ஆர்கானிக் பருத்தி சேலைகள் என்பது பருத்தி விளைவது முதல் நெய்தல் வரை அனைத்தும் இயற்கையான முறையில், இயற்கையான பொருட்கள் கொண்டும் தயார் செய்யப்படுகிறது.

    ஆர்கானிக் பருத்தி சேலைகள் என்பது தமிழகத்தில் கோயம்புத்தூர், திண்டுக்கல், திருச்சி மாவட்டம் மணமேடு, சேலம் மற்றும் பரமக்குடி போன்ற பகுதியில் உள்ள நெசவாளர்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு பின் விற்பனைக்கு வருகின்றன. ஆண்டுக்கு ஆண்டு மவுசு அதிகரித்து கொண்டே வரும் இயற்கை பருத்தி சேலையின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. இயற்கையோடு இயைந்த வாசமிகு சேலை என்பதால் இதனை நேசத்தோடு பெண்டீர் வாங்கி மகிழ்கின்றனர்.

    இயற்கை பருத்தியால் உருவாகும் சேலைகள்

    இயற்கை பருத்தி எனும்போது முழுக்க முழுக்க ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் ஆர்கானிக் பருத்தி தான் இச்சேலை தயாரிக்கப்பயன்படுத்தப்படுகிறது. இதற்கென இயற்கை ஆர்வலர்கள் மூலம் பயிர் பருத்தி ஆய்வு செய்யப்பட்டு வாங்கப்படுகிறது. பின் அந்த பருத்தியின் மூலமே நூல் நெய்யப்படுகிறது. இதன் காரணமாகவே இதனை இயற்கை (அ) ஆர்கானிக் பருத்தி சேலை என்கின்றனர். மேலும் நூலில் ஏற்றப்படும் சாயம் மற்றும் வண்ணம் சேர்க்கை என்பது இயற்கை முறையிலேயே அரங்கேற்றப்படுகின்றன.



    இயற்கை முறையில் சாயமேற்றுதல்

    இயற்கை பருத்தி என்பது நூலாக நூற்பாலைகளில் திரிக்கப்படும். பின் இந்த நூலில் இயற்கை முறை சாய ஆலைகளில் தயார் செய்யப்பட்ட காய கரைசல்கள் கொண்டு மூழ்க வைக்கப்பட்டு சாயம் ஏற்றப்படுகிறது. அதாவது சரிசலாங்கன்னி, அரளிப்பூ, சங்குப்பூ, புளியமரச் சுள்ளி, புளியம்பழம், செவ்வாழை, கடுக்காய், செண்டுமல்லி, பலாசம்பூ, அவரை இலை அவுரி, மாதுளம் தோல், அவுரி போன்றவை உலர வைத்து பொடியாக்கப்பட்டு, அதனை நீரில் ஊற வைத்து காய்ச்சியும், காய்ச்சாமலும் இயற்கை சாயம் உருவாக்கப்படுகிறது. இந்த இயற்கை சாற்றின் கரைசலில் நூல்கள் சாயமேற்றப்பட்டு விதவிதமான வண்ணங்கள் பெறப்படுகிறது. இவ்வாறு உருவாகும் நூலின் வண்ணம் மங்காமல் இருக்க இதனை மறுபடியும் வெற்றிலை சாற்றில் ஊற வைத்த பின் தேங்காய் எண்ணெய் (அ) வேப்ப எண்ணெயில் நனைத்து உலர வைக்கப்படும். இந்த சாயமேற்ற நூல்களில் தான் பருத்தி சேலை நெய்யப்படும்.

    கைத்தறி நெசவாளர்கள் மூலமாக இயற்கை சாயம் ஏற்றப்பட்ட பருத்தி நூல்கள் மூலமாக அழகிய வண்ணமிகு சேலைகள் விதவிதமாக நெய்யப்படுகின்றன. இவ்வாறு நெய்யப்பட்ட சேலையே இயற்கை பருத்தி சேலைகள் எனப்படுகிறது. இயற்கை பருத்தி சேலைகள் என்பது மற்ற பருத்தி சேலையை போன்று ரசாயன நாற்றமோ, பசை நாற்றமோ இன்றி முழுக்க முழுக்க மணமணக்கும் வாசத்துடன் வெளி வருகின்றன. இயற்கை பருத்தி, இயற்கை வண்ணம், இயற்கையான வாசம் என்பதில் தனித்து விளங்கும் இச்சேலைகள் மங்கையர் விரும்பும் வண்ண கலவையுடன் விதவிதமான டிசைன்களில் வடிவமைத்து நெய்து தரப்படுகின்றன.

    கோடை காலம், மழை காலம் என இரண்ட பருவ காலத்திலும் அணிய ஏற்ற சேலையாக திகழ்கிறது. மேலும் இதன் ரசாயன கலப்பில்லாத நூலும், சாயமும் பெண்களின் உடலோடு ஒட்டி உறவாடும் போது சருமத்திற்கு எந்த பாதிப்ை-யும் எற்படுத்துவதில்லை. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத இயற்கை விவசாய முறையில் பயிர் செய்யப்பட்ட இயற்கை வண்ணம் பூசப்பட்ட இச்சேலைகள் அழகிய தோற்ற பொலிவை தருவதுடன், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இயற்கை பருத்தி சேலைகள் இளநங்கையர்களின் விருப்பமான சேலையாகவும் திகழ்கிறது.
    பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் போது சாப்பிட்டு விட்டு செல்லலாமா என்ற சந்தேகம் பெண்களுக்கு இருக்கும். இதற்கான விடையை இப்போது அறிந்து கொள்ளலாம்.
    ‘குழந்தையைப் பெற்றெடுக்க சக்தி வேண்டும்; அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ’ என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம். எவ்விதத் திட உணவையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது. காரணம், வயிற்றில் உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமப்படலாம்.

    கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். அப்போது வயிற்றில் இருப்பதெல்லாம் வெளியில் வந்துவிடும். இது கர்ப்பிணிக்குக் களைப்பை ஏற்படுத்தும். பிரசவத்தின்போது கர்ப்பிணி முக்க வேண்டியது இருக்கும். அதற்கு சக்தி இல்லாமல் போகும். மேலும், சிசேரியன் சிகிச்சை தேவைப்பட்டால், வயிற்றில் எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி உணவு இருந்தால், மயக்கம் தருவதற்கு அது தடைபோடும்.

    மிகவும் தேவைப்பட்டால், மருத்துவரின் யோசனைப்படி, சிறிதளவில் ஊட்டச்சத்து பானம், பால், மோர், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்தலாம். இதனால் வயிறு நிரம்பியிருக்காது; பிரசவத்துக்கும் தடை போடாது. சிசேரியனுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் தயக்கம் தேவைப்படாது.

    மருத்துவமனைக்குச் சென்றதும், கர்ப்பிணிக்கு உண்மையான பிரசவ வலி வந்துவிட்டதா என்று மகப்பேறு மருத்துவர் அல்லது உதவியாளர் பரிசோதிப்பார். கருப்பை உட்புறப் பரிசோதனை செய்து அதை உறுதி செய்வார். தேவைப்பட்டால், கர்ப்பிணியை அறைக்குள்ளேயோ, வராந்தாவிலோ நடக்கச் சொல்வார். அதைத் தொடர்ந்து பிரசவம் மேற்கொள்வதற்குத் தயாராவார்.
    கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கேழ்வரகில் காலை நேர டிபனாக நீர் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - அரை கப்,
    கேழ்வரகு மாவு - அரை கப்,
    தண்ணீர் - தேவைக்கு,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கேழ்வரகு மாவை போட்டு நன்றாக கலந்து அதனுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு உப்பு, சூடான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

    இந்த மாவு சிறிது ஆறியதும் சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    பிறகு இட்லி தட்டில் உருண்டைகளை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் உருண்டைகளை சேர்த்து கிளறி பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்களே அவ்வப்போது மாற்றிக்கொள்ள வேண்டிய மிக்ஸியை புதிய அம்சங்களை பார்த்து எப்படி தேர்வு செய்வது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.
    இன்று மிக்ஸி இல்லாத வீடுகளை பார்ப்பதே அரிது. எனவே, எல்லோருக்குமே மிக்ஸியின் பயன்பாடு மற்றும் அதன் அம்சங்கள் பற்றி தெரிந்திருக்கும். ஆனால் அவ்வப்போது மாற்றிக்கொள்ள வேண்டிய மிக்ஸியை புதிய அம்சங்களை பார்த்து எப்படி தேர்வு செய்வது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

    மிக்ஸி வாங்கும்போது மேலோட்டமாக கவனிக்க வேண்டியது அதன் வாட்ஸ் (மின் உபயோகம்), ஆர்பிஎம், ஜார்களின் எண்ணிக்கை, உத்திரவாதம் மற்றும் விலை. தில் வாட்ஸ் எனும்போது 500 முதல் 750 வாட்ஸ் மின்சாரத்திறன் கொண்ட மிக்ஸியை தேர்ந்தெடுப்பது நல்லது. 1800-2000 ஆர்பிஎம் கொண்ட மிக்ஸியை தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாண்டுகள் உத்திரவாதம் உள்ளதாலும், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் ஆன பிளேட் கொண்டதும் ஆன மிக்ஸியை தேர்ந்தெடுப்பதும் நல்லது. பொதுவாக பெரிய ஜார்கள் இரண்டும், ஜீசர் ஜார் ஒன்றும், சிறிய ஜார் ஒன்றும் போதுமானது. ஜீசர் ஜார் உள்ள மிக்சியை வாங்கிவிட்டால் ஜீசர் தனியாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

    பாதுகாப்பு அம்சங்கள்

    மிக்ஸி மின்சாரத்தில் இயங்குவது, மேலும் மிக கூர்மையான பிளேடுகள் கொண்டது என்பதால் பாதுகாப்பானதாக இருக்க வேண்டியது அவசியம். சேப்டி லாக் உள்ள மிக்ஸியை தேர்ந்தெடுப்பது நல்லது. ஜாரின் மூடி லேசாக திறந்து கொண்டாலும் மிக்ஸி ஓடாமல் நின்று விடும் அம்சம் உள்ளது மிகவும் உபயோகமாக இருக்கும். கரண்டியையோ, கையையோ விட்டு ஜாரின் ஓரத்தை கிளறும்போது தவறுதலாக மிக்ஸி ஓட ஆரம்பித்தால் கைவிரல் வெட்டப்படும் அபாயம் இந்த அம்சத்தால் தவிர்க்கப்படுகிறது.

    ஓவர் லோட் பாதுகாப்பு

    மிக்ஸியில் இருக்கும் திறனைவிட அதிகமாக மிக்ஸி ஓடினால் மோட்டார் கெட்டுவிடும் அபாயத்தை இந்த பாதுகாப்பு அம்சம் தவிர்க்கிறது. அதிக நேரமோ, அதிக சிரமத்துடன் மிக்ஸி ஓடுவது தெரிந்தால் மிக்ஸி உடனடியாக தானாகவே நின்றுவிடும். மோட்டார் நன்கு ஆறியபின் மிக்ஸியின் கீழ்புறம் உள்ள பட்டனை அமுக்கினால் மட்டுமே மீண்டும் ஓட ஆரம்பிக்கும். இந்த அம்சம் மிகவும் அவசியமானது.

    மிக்ஸி ஓடும்போது அதிரும். அந்த அதிர்வினால் மிக்ஸி கீழே விழுந்து விடும் அபாயம் இருப்பதால், அதன் கால் பகுதியில் வாக்யூம் லாக் இருக்கும். இந்த லாக் மிக்ஸியை திரையுடன் சேர்த்து ஒட்டிவிடும். இந்த அம்சமும் மிக முக்கியமானதாகும். 
    இந்த பிராணாயாமம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோயாளிகளுக்கு பயனுள்ளது. மூச்சின் வேகமும், இருதயத்தின் வேகமும் குறைந்து சீராக இயங்கும். நுரையீரலும், இருதயமும் நல்ல ஆரோக்கியத்தை அடையும்.
    பெயர் விளக்கம்:  உஜ் என்றால் உத்தமமான, மேலான என்றும் ஜய என்றால் வெற்றி என்றும் பொருள்படுகிறது. மனதை அமைதிப்படுத்துவதற்கு, உத்தமமான வெற்றியை இப்பிராணாயாமம் அளிப்பதால் இப்பெயர் அமைந்துள்ளது.

    செய்முறை: அனுகூலமான ஏதாவது ஒரு தியான ஆசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி முழங்கால்களின் மேல் கை விரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்த்திக் கொள்ளவும். நிதானமாகவும், ஆழமாகவும், மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். மூச்சை உள்ளே இழுக்கும்போது தொண்டை பாகத்தில் க்ளாட்டிஸ் என்ற பகுதியில் லேசான அழுத்தம் கொடுத்து சிறிதளவு அடைத்து தொண்டையிலிருந்து ஸ்.....ஸ் என்ற ஒலியை உண்டு பண்ணவும்.

    பிறகு மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் தொடர்ந்து வெளியே விடவும். மூச்சுக் காற்றை வெளியே விடும்போது தொண்டையிலிருந்து உஷ்....உஷ்... என்ற ஒலியை உண்டு பண்ணவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும். ஆரம்பத்தில் 10 முதல் 15 சுற்று பயிற்சி செய்யவும். தொடர்ந்து பயிற்சியில் 20 முதல் 40 சுற்று வரை பயிற்சி செய்யலாம். மூச்சை உள்ளே இழுக்கும்போது மார்பையும், வயிற்றையும் நன்கு விரிக்கவும். மூச்சை வெளியே விடும்போது மார்பை சம நிலைக்கும், அடிவயிறை ஓரளவு உள்ளுக்கும் சுருக்கவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: உள்மூச்சின் போதும், வெளிமூச்சின் போதும் உண்டு பண்ணப்படும் ஒலியின்மீதும் ஆக்ஞா சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு: இந்த பிராணாயாமத்தை முதுகை நேராக வைத்துக் கொண்டு நின்ற, உட்கார்ந்த, படுத்த, நடக்கும் நிலையிலும் பயிற்சி செய்யலாம்.

    பயன்கள்: மனம் அமைதி பெறும். நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு மண்டலம் வலுபெறும். உறக்கமின்மை நீங்கும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோயாளிகளுக்கு பயனுள்ளது. மூச்சின் வேகமும், இருதயத்தின் வேகமும் குறைந்து சீராக இயங்கும். நுரையீரலும், இருதயமும் நல்ல ஆரோக்கியத்தை அடையும்.

    அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கின்றதா? நீங்கள் கீழ்கண்டவைகளை முறையாய் செய்கின்றீர்களா என்று நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
    அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கின்றதா? நீங்கள் கீழ்கண்டவைகளை முறையாய் செய்கின்றீர்களா என்று நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
    சாப்பிடும் முன் கை கழுவும் பழக்கம் இன்று எல்லோரிடமும் இருக்கின்றது. ஆனால் அதனை முறையாய் செய்கின்றோமா என்றுதான் கவனிக்க வேண்டும். வலது கையை குழாயின் கீழ் நீட்டி ஒரு நொடியில் ‘நானும் கை சுத்தம் செய்து விட்டேன்’ என்று வருவது கை கழுவாது உண்பதற்கும் சமம். இரு கைகளையும் நீரில் நனைத்து சோப் கொண்டு 20 நொடிகளாவது நன்கு கை, நகங்களை தேய்த்து கழுவுதே கிருமிகளை நீக்கும் முறையாகும்.

    இல்லையெனில் கிருமிகள் பாதிப்பு உடனே ஓடி வந்து விடும். இளம் வயதினருக்கு இன்று ஒரு பழக்கம் உள்ளது. செல்போனை தன் தலையணை அருகேயே வைத்திருப்பார்கள். தூக்கத்தில் அவ்வப்போது எழுந்து தன் செல்போனில் வாட்ஸ்அப் செய்திகளை படித்துக் கொண்டும், செய்தி அனுப்பிக் கொண்டும் இருப்பார்கள். இப்படி தூக்கம் கெடுவது அதிக தீய பாதிப்புகளை உடலுக்கு ஏற்படுத்துகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது. வெள்ளை அணுக்கள் ரத்தத்தில் குறைகின்றன. அதனால் இவர்கள் எளிதில் வைரஸ் மற்றும் கிருமிகளால் பாதிக்கப்படுகின்றீர்களாம்.

    * அதிக மனஉளைச்சல் உங்களை ஆட்கொள்ளாது தவிருங்கள். இவைகளை கவனத்துடன் செய்தாலே வைரஸ், கிருமிகள் தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். கூடவே பொது கைப்பிடிகளில் டிஷ்யூ பேப்பரை கொண்டு உபயோகிப்பதும், கடன் வாங்காததும், கொடுக்காததும் உங்கள் பேனாவினை பயன்படுத்துவதும் கூடுதல் நம்மை பயக்கும்.

    * கை குலுக்குவதனைக் காட்டிலும் வணக்கம் சொல்வது சுகாதார வெளிப்பாடும் கூட.
    * வேலை செய்யும் டேபிளிலேயே உணவையும் வைத்து சாப்பிடாதீர்கள்.
    * அன்றாட காலை இளம் வெய்யில் உடலுக்கு அவசியம்.
    * யோகா பழகுங்கள்.
    * மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.
    * காலை உணவை கண்டிப்பாய் எடுத்துக் கொள்ளுங்கள்.

    ஆக மேற்கூறியவற்றில் முறையான கவனம் கொடுக்கும் பொழுது ஜலதோஷ பாதிப்பு வெகுவாய் குறையும்.

    தலைவலி சில சமயங்களில் ஆபத்தானதாகக் கூட இருக்கலாம்.

    * மூளைக்கும் அதனை படர்ந்து இருக்கும் மெல்லிய ஜவ்வு படலத்திற்கும் இடையே சில சமயங்களில் ரத்த கசிவு ஏற்படலாம். இதனால் ஏற்படும் தலைவலி ஆபத்தானது.
    * உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் தலைவலி உடனே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
    * மூளையில் கட்டி.
    * மூளையில் கிருமி தாக்குதல் இதனால் ஏற்படும் தலைவலி உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுவது அவசியம்.
    * மண்டைக்குள் நீர் சேர்ந்து மூளை வீக்கம் ஏற்படுதல்.
    * விஷவாயு தாக்குதல்.
    * மூளையில் ரத்தக் குழாய் உடைந்து ரத்தப் போக்கு ஏற்படுதல்.

    இவற்றினால் ஏற்படும் தலைவலியினை உடனடி மிக அவசர சிகிச்சையாக கவனிக்க வேண்டும். இதற்கான அறிகுறிகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    * திடீரென ஏற்படும் தாங்க முடியாத தலைவலி.
    * எப்பொழுதும் வரும் தலைவலியினைக் காட்டிலும் வித்தியாசமான கடும் தலைவலி.
    * தலைவலியுடன் குழறிய பேச்சு, பார்வை மங்குதல், கை, கால் அசைப்பதில் கடினம், மறதி ஏற்படுதல்.
    * தலையில் அடிப்பட்டு ஏற்படும் தலைவலி.
    * 50 வயதிற்கு மேல் இருந்து ஏற்படும் தலைவலி.
    * கண் வலி, கண் சிகப்பு ஒரு கண்ணில் இருந்து ஏற்படும் தலைவலி இப்படிப்பட்ட அறிகுறிகள் இருக்கும் பொழுது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    மருத்துவ தந்தை என்று அழைக்கப்படும் ‘ஹிப்போக்ரேட்ஸ்’ பல காலங்களுக்கு முன்னாள் கூறியுள்ள ஒரு மருத்துவ செய்தினை நினைவு கூர்ந்து பார்ப்போம். ‘எல்லா நோய்களும் உணவுப் பாதையிலே ஆரம்பிக்கின்றது’ என்பதுதான். மருத்துவ உலகில் எண் சான் உடம்பிற்கு உணவு பாதையும், ஜீரண உறுப்புகளுமே பிரதானம்’ எனலாம்.

    குடலின் உள் சுவரில் மெல்லிய படலம் உள்ளது. இந்த படலம் நல்ல சத்துக்களை உடலுக்குள் செலுத்தி தீய, நச்சுகளை வெளியேற்றி விடுகின்றது. இப்படலத்தில் மிக நுண் துளைகள் ஏற்படும் பொழுது நச்சுகளும் ரத்தத்தில் கலந்து விடுகின்றது. இதனால் உடல் ஆரோக்கியம் பல விதத்தில் பாதிக்கப்படுகின்றது என்பதனை சிலர் நீண்ட ஆய்வுகளின் முடிவாகக் கூறுகின்றனர். சரி இந்த பாதிப்பு ஏன் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது?

    * பரம்பரை காரணமாக இந்த பாதிப்பு ஏற்படலாம்.
    * முறையில்லாத உணவுகள் குடலை பாதிக்கின்றன. நல்ல பாக்டீரியாக்களை அழிக்கின்றன. கெட்ட பாக்டீரியாக்களை பெருக்குகின்றன. குடல் வீக்கத்தினை ஏற்படுத்துகின்றன.
    * உணவில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள், குடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
    * மிக அதிக மனஉளைச்சல் ஜீரண மண்டலத்தினையே அதிகம் பாதிக்கின்றது.
    * சுத்தமில்லா நீர் காரணமாக இருக்கலாம்.

    பொதுவில்

    * குடலில் புண் ஏற்பட்டாலோ
    * கிருமிகள் தாக்குதலால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலோ
    * உடலில் சத்து குறைபாடு இருந்தாலோ
    * குடல் வீக்கம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டாலோ
    * நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தாலோ
    * எடை கூடுதல், நீரிழிவு நோய் 2-ம் பிரிவு என தாக்குத்ல ஏற்பட்டாலோ
    முதலில் உங்கள் உணவுப் பாதை, கல்லீரல், பித்தப்பை என உணவு மண்டலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இதற்கு உங்கள் மருத்துவர் உதவியினை உடனடி பெறுவது பல்வேறு நோய்களில் இருந்து உங்களைக் காக்கும்.
    வலி நிவாரண மாத்திரைகள், ஜெல்களைப் பயன்படுத்துவதைவிட, இயற்கையான உணவு முறை, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலமாகவே தலைவலியைப் போக்க முடியும்.
    உலகம் முழுக்க, இன்றைக்குத் தவிர்க்க முடியாத வலிகளில் பிரதான இடம் பிடித்திருப்பது தலைவலிதான். அதீத இரைச்சல், செரிமானக் கோளாறு, கணினித்திரை ஆகியவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், கண் நரம்புகளுக்கு ஏற்படும் அழுத்தம்... எனப் பல பிரச்சனைகள் காரணமாக, நரம்புகள் வீக்கம் அடைந்து தலைவலி ஏற்படுகிறது. தலைவலிக்கு வலி நிவாரண மாத்திரைகள், ஜெல்களைப் பயன்படுத்துவதைவிட, இயற்கையான உணவு முறை, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலமாகவே தலைவலியைப் போக்க முடியும். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போமா ?



    மூளை நரம்புகள் சுருங்கி விரியும் தன்மைகொண்டவை. இது அதீதமாகச் செயல்படும்போது தலைவலி ஏற்படும். இதற்கு இஞ்சி மிகச் சிறந்த மருந்து. இஞ்சியில் தலைவலியைப் போக்கும் ஜிஞ்சரால் ரசாயனம் உள்ளது. காலை வெறும் வயிற்றில் இஞ்சிச் சாறு (2 டீஸ்பூன்) குடித்தால், நாள் முழுக்கத் தலைவலி வராமல் தடுக்கலாம்.

    செர்ரிப் பழத்தில் `ஆந்தோசயானின்’ (Anthocyanin) என்னும் நிறமி உள்ளது. இது நரம்பு வீக்கத்துக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டது. தினமும் காலையில் செர்ரிப் பழத்தைச் சாப்பிடுவதால், மூளை நரம்புகள் புத்துணர்ச்சி பெறும். இதனால், காலை அலுவலகத்துக்குச் செல்லும்போது ஏற்படும் அதீத சத்தம், இரைச்சல் மூலம் ஏற்படும் தலைவலியில் இருந்து தப்பிக்கலாம். இது நாளை இனிமையாகத் தொடங்க உதவும்.

    மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது பட்டை. தினமும் மாலை வேளையில் பட்டை சேர்த்த பிளாக் டீ அருந்திவந்தால் சைனஸால் உண்டாகும் தலைவலி நீங்கும்.

    நாள் முழுவதும் வெயிலில் அலைந்து வேலைசெய்பவர்கள், சில வகை உணவுகளைத் தவிர்த்துவிட்டாலே இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பித்துவிடலாம். சிப்ஸ், ஜாம், கார்ன்ஃப்ளேக்ஸ் போன்ற நைட்ரேட், எம்எஸ்ஜி சேர்க்கப்பட்ட உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். புகை, மதுப் பழக்கத்தைக் கைவிடவேண்டியது அவசியம். ஆல்கஹால், நிகோட்டின், கஃபைன் உள்ளிட்டவை வலியை அதிகரிக்கும்.

    எலுமிச்சைச் சாற்றில் சிட்ரிக் அமிலம் அதிகமாக இருக்கிறது. இது நாக்கு வறண்டு போவதை தடுக்கும்; மூளை நரம்புகளைப் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்.

    செரிமானக் கோளாறுகளாலும் தலை நரம்புகளில் வலி, வாந்தி வரும் உணர்வு உள்ளிட்டவை ஏற்படும். இதற்குச் சீரகம், இஞ்சி, ஓமம் ஆகியவை சிறந்த மருந்துகள். இவற்றில் தயாரிக்கப்பட்ட கஷாயத்தைக் குடித்தால் வலி நீங்கி உடல் புத்துணர்வு பெறும். கிரீன் டீ அருந்துவதும் தலைவலி போக்க நல்ல வழிமுறை.

    50 கிராம் சீரகத்தை அரைத்துப் பொடியாக்கி, 50 கிராம் தேனில் கலக்கவும். இந்தக் கலவையை, எலுமிச்சைச் சாற்றில் கலந்து, ஏழு நாட்கள் வெயிலில் உலரவைக்கவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஐந்து மில்லி கிராம் அளவுக்கு சாப்பிட்டுவந்தால், நாள்பட்ட தலைவலி குணமாகும்.
    குழந்தைகளுக்கு கபாப் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே மட்டனை வைத்து எளிய முறையில் கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரைக்க...

    மட்டன்கொத்துக்கறி - 150 கிராம்,
    இஞ்சி, பூண்டு விழுது- 3 தேக்கரண்டி,
    சோம்பு தூள் - அரை தேக்கரண்டி,
    மட்டன் மசாலா - 3 தேக்கரண்டி,
    உப்பு - சிறிது.



    செய்முறை :

    மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த மட்டன் கொத்துகறியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, சோம்பு தூள், மட்டன் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கலந்த மட்டன் கலவையை ஒரு குச்சியில் நீளவாக்கில் உருட்டி கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள மட்டன் குச்சிகளை வைத்து நன்றாக திருப்பி விட்டு நன்கு வறுத்து எடுக்கவும்.

    சூப்பரான மட்டன் கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் அழாமல் இருக்க வாயில் வைக்கப்படும் ரப்பர் நிப்பிள் குழந்தைக்கு பாதுகாப்பானதா என்றால் நிச்சயம் இல்லை. இதனால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
    அழும் குழந்தை, சோர்வாக மகிழ்ச்சி இல்லாத குழந்தையை இயல்பு நிலைக்குத் திருப்ப பலரும் இந்த ரப்பர் நிப்பிளை (Baby Pacifier) பயன்படுத்துகின்றனர்.

    குழந்தைகள் அழாமல் இருக்க வாயில் வைக்கப்படும் ரப்பர் நிப்பிள் குழந்தைக்கு பாதுகாப்பானதா? நிச்சயம் இல்லை. 6 மாதமாக பயன்படுத்தும் ரப்பர் நிப்பிள் குழந்தையை தாய்ப்பால் அருந்தவிடாமல் பாதிக்க செய்யும். கழுத்து போன்ற பகுதிகளில் அடைத்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தும்.

    அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. தொடர்ந்து இந்த ரப்பர் நிப்பிளை பயன்படுத்தினால் பற்கள் தொடர்பான பிரச்சனைகளும் வரலாம். குழந்தை பேசுவதில் பிரச்னை ஏற்படலாம்.

    ரப்பர் நிப்பிளை தொடர்ந்து வாயில் வைப்பதால் கிருமிகள் வளர வாய்ப்பைத் தருகிறது. கிருமிகள் வளர அதிகம் உதவுகிறது. சுத்தப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகையில் வாயில் தொற்றும் ஏற்படுகிறது.

    Staphylococcus bacteria, Candida fungus ஆகியவை குழந்தைகளை பாதிக்கும். பெரும்பாலும் இந்த செயற்கை நிப்பிளைத் தவிர்ப்பதே நல்லது.

    அவசியம் தேவைப்பட்டால் சிலிக்கான் நிப்பிள் வாங்கலாம். அதையும் முறையாக சுத்தப்படுத்துதல் அவசியம். குழந்தைக்கு அடிக்கடி கொடுக்க கூடாது.

    குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என நினைத்தால் இந்த ரப்பர் நிப்பளை குழந்தைக்கு கொடுக்க கூடாது. அதிகமாக இதைப் பயன்படுத்தினால் குழந்தைகள் தாய்ப்பால் குடிக்க மாட்டார்கள். குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதை விரைவில் நிறுத்திக் கொள்வார்கள்.

    நிறைய குழந்தைகள் பேசவே இல்லை எனப் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் அழைத்து செல்கின்றனர். குழந்தைகளுக்கு அதிகமாக ரப்பர் நிப்பிளை பயன்படுத்தினால் அவர்கள் பேசுவதில் தடையை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு, வாய், பற்கள் ஆகியவை பாதிக்கப்படும். பற்களின் வளர்ச்சி நன்றாக இருக்காது. சரியான வளர்ச்சி இல்லாமல் இருந்தால், குழந்தைகள் பேச முடியாமல் போகும்.

    லேட்டக்ஸ் எனும் மெட்டிரியல் கொண்டு தயாரிக்குப்படும் நிப்பிள், அலர்ஜியையும் ஏற்படுத்தும். ரப்பர் நிப்பிள் அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
    மூக்கு, கண், வாய் போன்ற இடங்களில் எரிச்சல்தன்மையும் அதிகமாக இருக்கும். தொண்டை வீக்கமடையும். மூச்சு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.

    இப்போது உங்கள் குழந்தை இந்த ரப்பர் நிப்பிளை பயன்படுத்தி கொண்டு இருந்தால் உடனே நிறுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துங்கள்.
    சீரகம் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், கருஞ்சீரகம் பற்றி அவ்வளவாகத் தெரியாது என்றே சொல்லலாம். இந்த கருஞ்சீரகத்துக்கு சர்வ ரோக நிவாரணி என்ற செல்லப் பெயர் ஒன்று உண்டு.
    நாம் தினமும் உணவில் சேர்த்து பயன்படுத்துகிற சீரகம், பெருஞ்சீரகம் (சோம்பு) போன்றவற்றை தினசரி எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மருந்தாக பயன்படுகிற கருஞ்சீரகம், காட்டுச்சீரகம் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனையின்றி நாமாகவே தினசரி எடுத்துக் கொள்வது நல்லதல்ல.

    மருந்து என்பது அதன் சேர்மானப் பொருட்களை சரியான அளவில் எடுத்து, குறிப்பிட்ட மருத்துவ முறையில் தயார் செய்து, குறிப்பிட்ட நோய்களுக்கு, சரியான அளவுகளில் பரிந்துரைக்கப்படுவது என்பதால் அதுபோன்ற மருத்துவ குணமுடைய பொருட்களை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வதே நல்லது.

    கருஞ்சீரகத்தின் பெருமைகள்

    * கருஞ்சீரகப் பொடியினை காடியுடன் கலந்து உட்கொள்ள குடலிலுள்ள புழுக்கள் வெளியேறும். இதனையே 3 முதல் 7 நாட்கள் வரையில் காலை 1/2 கிராம், மாலையில் 4 கிராம் வீதம் Rabies என்கிற வெறிநாய்க்கடி மற்றும் இதர நச்சுக்கடிகளின் நஞ்சை நீக்குவதற்கும் கொடுக்கலாம்.

    * கருஞ்சீரகத்தோடு ஆற்று தும்மட்டிச் சாறு விட்டரைத்து இருபக்க விலாப் பகுதிகளிலும் பூச குடலிலுள்ள புழுக்கள் நீங்கும்.

    * நொச்சி குடிநீருடன் கருஞ்சீரகப் பொடியை சேர்த்துக் கொடுக்க மேகப்பிடிப்பு, சுரம், விட்டுவிட்டு வருகிற சுரம் தணியும்.

    * கருஞ்சீரகத்தோடு வெந்நீர் விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச தலைவலி, கீல்வீக்கம், உடல் வீக்கம் போன்றவை குணமடையும். இதோடு காடி விட்டரைத்து படைகளுக்கும் பூசலாம். இதனுடன் தேன் விட்டரைத்து பிள்ளை பெற்றபின் வருகிற வலிக்குப் பூச குணமடையும்.

    * கருஞ்சீரகத்தை அரைத்து நல்லெண்ணெயில் குழப்பி கரப்பான், சிரங்கு போன்றவற்றில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

    * கருஞ்சீரகப் பொடியை தேன் அல்லது நீரில் கலந்து கொடுக்க மூச்சுத்திணறல் நீங்கும். தொடர்ந்து வருகிற விக்கல் நிற்கும். சூதகக்கட்டு, சூதகச்சூலை போன்றவற்றுக்கு 1 கிராம் அல்லது 3 கிராம் அளவில் கொடுக்கலாம்.

    * கருஞ்சீரகத்தின் தீநீர் அல்லது தைலத்தை முகர்ந்தாலும், பூசினாலும் பயத்தால் உண்டாகும் தலைநோய், மூக்குநீர் வடிதல், நரம்பைப் பற்றியுள்ள வலி, இடுப்புவலி போன்றவை தீரும்.

    * கருஞ்சீரகத்தின் தைலத்தை வெற்றிலையில் பூசித் தின்றால் ஆண்மை பெருகும்.

    * சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டரைத்து முகத்தில் பூசி, ஊறிய பின் கழுவிவர முகப்பரு மறையும்.

    * இதை வறுத்து தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்து, அதை மூக்கில் விட கடுமையான தலைவலியையும், சளியையும் போக்கும். கருஞ்சீரகம் குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு நல்ல நிவாரணியாக உள்ளது.
    சிக்கனில் ரசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டனை வைத்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - 250 கிராம்,
    தக்காளி - 2,
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    தனியாதூள் - அரை டீஸ்பூன்,
    புளி - சிறிதளவு,
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 3,
    உப்பு - தேவையான அளவு.  

    தாளிக்க...

    மிளகு - அரை டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 3,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த மட்டனை குக்கரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    தக்காளி நன்றாக நசுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் தக்காளி, ப.மிளகாய், தனியா, சீரகத் தூள் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் வேக வைத்த மட்டனை தண்ணீருடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விடவும்.

    கடைசியாக கரைத்த புளி கரைசல், கொத்தமல்லி தூவி கொதி வரும் போது இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் ரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரசவத்திற்காக மருத்துவமனைக்கும் கிளம்ப தயாராகும் கர்ப்பிணிகள் தங்களுக்கு தேவையான எந்தெந்த பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்பத்தின் ஒன்பதாம் மாதம் பிறந்தவுடனேயே கர்ப்பிணியானவர் மருத்துவமனைக்குக் கிளம்பத் தயாராகிவிட வேண்டும். பிரசவம் சிரமமில்லாமல் நிகழ்வதற்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் எல்லா தொடர்பு எண்களையும், மருத்துவமனை நடைமுறை விதிமுறைகளையும் தெரிந்துகொள்வது நல்லது.

    கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்குப் பிரசவ வலி வந்து சில மணி நேரம் கழித்துத்தான் பிரசவம் ஆகும்.

    இன்னும் சில மணி நேரத்தில் தாயாகப் போகும் கர்ப்பிணிக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பிரசவத்துக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ரிப்போர்ட்டுகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஏ.டி.எம் அட்டை ஆகியவற்றை  முதலில் ஒரு பையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுத்து, முன்பக்கம் பிரித்து அணியக்கூடிய வகையில் தைக்கப்பட்ட பருத்தித் துணியாலான நைட் கவுன்கள் 3 அவசியம். நைட் கவுன் இவ்வாறு இருந்தால், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கும் மருத்துவர் பரிசோதிப்பதற்கும் வசதியாக இருக்கும். அதுபோல் தாய்ப்பால் கொடுக்கத்தக்க உள்ளாடைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.



    கொஞ்சம் அதிக எண்ணிக்கையில் ஜட்டிகள், பேன்டீஸ்கள், சானிட்டரி நாப்கின்கள், சுத்தமான பழைய சேலைகள், டூத் பிரஸ், டூத் பேஸ்ட், சோப்பு, சீப்பு, ஷாம்பு, கண்டிஷனர், ஃப்ளாஸ்க், சில புத்தகங்கள், வார இதழ்கள், மொபைல் போன், மொபைல் சார்ஜர், மூக்குக் கண்ணாடி (ஒருவேளை கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால், பிரசவத்தின்போது அதை எடுத்துவிடுவார்கள்), வசதியான செருப்புகள், கொசுவத்திகள் போன்றவற்றை ஒரு கூடையில் எடுத்துக்கொள்ளலாம்.

    நிறைய பணம் எடுத்துச்செல்ல வேண்டாம். டெபிட் கார்டு பயன்படுத்துவது நல்லது. விலை மதிப்புள்ள ஆபரணங்களை அணிவதைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் ஐபோன் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும் எடுத்துச்செல்ல வேண்டாம்.

    குழந்தைக்குத் தேவையான பொருட்களை மற்றொரு கூடையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பருத்தியாலான ஆடைகள், உடல் துடைக்கத் துணிகள், டயாபர்கள், பஞ்சு, குழந்தையைப் படுக்க வைக்க பருத்தி டவல்கள், ரப்பர் ஷீட்கள், தொட்டிலுக்குரிய கொசு வலை, பேபி சோப், பேபி பவுடர் போன்றவை முக்கியத்தேவைகள். குழந்தைக்கு பழைய சட்டைகளைப் போடுவதாக இருந்தால், அவற்றை கிருமிநாசினி சேர்த்து கொதி
    நீரில் ஊறவைத்து, காயவைத்து, பின்னர் பயன்படுத்துவது நல்லது. கைக்குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கவே இந்த யோசனை.
     
    ×