என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    நாளை கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிஸ்தா பருப்பை வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த பாயாசம் செய்வது மிகவும் எளிமையானது.
    தேவையான பொருட்கள் :

    பிஸ்தா - கால் கிலோ
    ரவை - 50 கிராம்
    சர்க்கரை - தேவைக்கு
    பால் - 1 லிட்டர்
    கன்டென்ஸ்ட் மில்க் - 2 டேபிள்ஸ்பூன்
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
    பிஸ்தா எசன்ஸ் - சிறிதளவு
    நெய் - தேவைக்கு



    செய்முறை:

    பாதி அளவு பிஸ்தாவை பிரித்தெடுத்து அதில் பால் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    மீதமுள்ள பிஸ்தாவை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் நறுக்கிய பிஸ்தாவை கொட்டி வறுத்தெடுக்கவும்.

    பின்பு அதனுடன் ரவையை சேர்த்து கிளறவும்.

    பின்னர் பாலில் அரைத்துள்ள பிஸ்தா விழுதை கொட்டி கிளறவும்.

    அதனுடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக வெந்ததும் கண்டென்ஸ்ட் மில்க், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான பிஸ்தா பாயசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    திருமணத்திற்கு முன்பே பெண் கர்ப்பம் அடைவது என்பது நமது கலாசாரத்தில் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாத விஷயம். திருமணத்திற்கு முன் கர்ப்பம் என்பதை சமூக சீர்கேடாகவும், அவமானத்திற்குரியதாகவும்தான் கருதுகிறோம்.
    திருமணத்திற்கு முன்பே பெண் கர்ப்பம் அடைவது என்பது நமது கலாசாரத்தில் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாத விஷயம். காலம் மாறிவிட்டது என்று நாம் வாய்வலிக்க பேசினாலும், இது போன்ற கலாசாரம் சார்ந்த நடைமுறையில் நாம் எந்த மாற்றத்தையும் அனுமதிக்கமாட்டோம். திருமணத்திற்கு முன் கர்ப்பம் என்பதை சமூக சீர்கேடாகவும், அவமானத்திற்குரியதாகவும்தான் கருதுகிறோம்.

    இது பற்றி பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இ்ல்லை. நகரத்து பெண்களைவிட கிராமத்து பெண்களே, திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பான ஆய்வு ஒன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அஜ்மீர் பகுதியில் 4500 இளம் பெண்களிடம் ஆய்வு நடத்தியுள்ளார்கள். 8 கிராமங்களிலும், 8 நகரங்களிலும் ஆய்வு நடந்துள்ளது.

    ஆய்வு முடிவில், ‘படிக்கச் செல்லும் பெண்களைவிட வீட்டில் இருக்கும் பெண்கள்தான் அதிகமாக, திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைகிறார்கள். முறையற்ற கர்ப்பத்திற்கு பின்னால் எடுக்கப்படும் சில பிரச்சினைக்குரிய நடவடிக்கைகளால் அவர்கள் பலியாகவும் செய்கிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளில் கிராமப் பெண்கள் 60 சதவீதம் பேர் திருமணத்திற்கு முன் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். நகரத்து பெண்களில் இது 40 சதவீதமாக இருக்கிறது’ என்று கூறப்பட்டிருக்கிறது.

    குடும்ப நல அமைச்சகம் இது பற்றிய விவரங்களை சேகரித்து, குறிப்பிட்ட பகுதிகளில் ஊர் ஊராகச் சென்று ஆய்வு நடத்தியது. பின்பு அவர்கள் ‘கிராமத்து பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. மேலும் கிராமங்களில் தனிமைக்கான இடங்கள் அதிகமாக இருப்பதால் இது போன்ற தவறுகள் அதிகம் நடைபெறுகிறது. பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் கிராமத்துப் பெண்கள் இதற்கு அப்பாவித்தனமாக பலியா கிறார்கள்’ என்று கூறி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.



    நகரத்துப் பெண்கள் ஓரளவு விஷயம் தெரிந்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு முன் ஏற்படும் வேண்டாத கர்ப்பத்தை சிதைத்துவிடும் வழிமுறைகளும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. மாட்டிக்கொள்ளும் பெரும்பாலான கிராமத்து பெண் களுக்கு கர்ப்பத்தை மறைக்கத் தெரிவதில்லை. அந்த சிக்கலிலிருந்து விடுபட முடியாமல் சமூகத்திற்கு பயந்து தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள்.

    இந்த ஆபத்தான நிலையை மாற்ற, குடும்பநல அமைச்சகம் இதற்கென பணியாளர்களை நியமித்து கிராமம் கிராமமாகச் சென்று அங்கு வசிக்கும் திருமணமாகாத பெண்களை சந்தித்து இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இது அவர்களுடைய எதிர்காலத்தை காப்பாற்றும் முயற்சியாக வரவேற்கப்படுகிறது.

    16 வயதிற்கும் குறைவான பெண்கள், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக இன்னொரு ஆய்வு குறிப்பிடுகிறது. அவர்களில் பெரும்பாலான பெண்கள் என்னவென்றே புரியாத வயதில் தங்களிடம் கட்டாய உறவுகொண்டதாக கூறியிருக்கிறார்கள். விளைவுகளை எதிர்கொள்ளும்போதுதான் அதன் தீவிரம் அவர் களுக்கு புரிகிறது.

    தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணரும்போது வாழ்க்கையில் விரக்தியடைகிறார்கள். இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் பெற்றோர்களாலேயே வெறுக்கப்படுகிறார்கள். சமூகம் தங்களை மட்டுமல்லாமல் குடும்பத்தாரையும் இழிவாக பேசுவதால் மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளாகிறோம் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் பரிதாபமாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இந்த அறியாப் பெண்களை பெற்றோர்களும் கைவிடுவது ஆபத்தின் உச்சம்.

    பெரும்பாலான வெளிநாடுகளில் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் ஒரு இயல்பான விஷயமாகவே கருதப்படுகிறது. அதனால் அந்நாட்டு பெண்கள் அதனை அவமானகரமானதாக கருதுவதில்லை. எந்த மன உளைச்சலுக்கும் அவர்கள் உள்ளாவதில்லை. ஒருவேளை மனஉளைச்சலுக்கு உள்ளாகினாலும், பெற்றோர்களும், மனநல அமைப்புகளும், அரசாங்கமும் அவர்களுக்கு ஆதரவாக இருந்து, அந்த தாக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுத்துவிடுகிறது.



    இங்கு அத்தகைய நெருக்கடி ஏற்பட்டுவிட்டால், பாதிக்கப்பட்ட பெண் அதனை தனது பெற்றோரிடம் சொல்லவே பயப்படுகிறாள். மகள் அதை சொன்னாலும், உடனே பெற்றோர் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி பிரளயத்தை உருவாக்கிவிடுகிறார்கள். நெருக்கமானவர்களிடம் ஆலோசனை கேட்டாலும் தவறான வழியைக்காட்டி அவர்களை பெரும் சிக்கலுக்குள்ளாக்கிவிடுகிறார்கள். பாதிக்கப்பட்ட சில பெண்கள், அதற்கு காரணமான குற்றவாளிகளுக்கே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். சிலருக்கு சொந்தத்தில் உடனடியாக மாப்பிள்ளை தேடிப்பிடித்து அவசர திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள்.

    விடுதிகளில் தங்கிப்படிக்கும் பெண்கள், வேலைக்குப்போகும் பெண்கள், பெற்றோரைப் பிரிந்து உறவினர்களிடத்தில் வசிக்கும் பெண்கள் போன்றோரே திருமணத்திற்கு முன்பு அதிக அளவில் கர்ப்பமடைவதாக இன்னொரு ஆய்வு குறிப்பிடுகிறது. காதல் என்ற பெயரில் கற்பை பறிகொடுக்கும் பெண்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

    ஜெய்ப்பூரில் உள்ள அஸ்ரா என்ற பெண்கள் பாதுகாப்பு மையத்தின் தலைவியான யாமினி ஸ்ரீவாஸ்தவ் இது பற்றி கூறுகையில், “சிறு வயதிலே பெண்களுக்கு சமூகத்தில் நிலவும் நெருடலான விஷயங்களை பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும். பள்ளிகளில் பாலியல் கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும். விஞ்ஞானரீதியான விளக்கங்களை அவர்கள் பெறும்போது, அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பாதுகாப்பு சூழலையும் உணர்வார்கள். காதல் என்ற பெயரில் வீட்டை விட்டு ஓடிவந்த பெண்கள்தான் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    காதலிப்பது தவறல்ல. பெற்றோருக்கு தெரியாமல் வீட்டைவிட்டு ஓடிப்போவது தவறு. இந்தியாவில் 1000 பெண்களில் 86 பேர் திருமணத்திற்கு முன் கர்ப்பமாகிறார்கள் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. அதனால் பெண்கள் அனைவரும் இதில் விழிப்புடன் இருக்கவேண்டும். திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் அடைவதை தடுக்க கல்வி நிலையங்களும், சமூக அமைப்புகளும் முழு முயற்சி எடுக்கவேண்டும்” என்கிறார்.
    மாணவர்கள் நீங்கள் இணையதளம் சென்றால் எங்கு உலவுவீர்கள்? சமூகவலைத் தளங்களில்தானே. அதனால்தான் உங்கள் பெற்றோர் அதிருப்தி அடைகிறார்கள்.
    மாணவர்கள் நீங்கள் இணையதளம் சென்றால் எங்கு உலவுவீர்கள்? சமூகவலைத் தளங்களில்தானே. அதனால்தான் உங்கள் பெற்றோர் அதிருப்தி அடைகிறார்கள். நீங்கள் உங்கள் கல்வியையும், எதிர்காலத்தையும் வளப்படுத்திக் கொள்ள வழி செய்யும் நிறைய இணையதளங்கள் இருப்பதை நீங்கள் பயன்படுத்த வேண்டும். அவற்றில் முக்கியமான சில இணைய தளங்களை இங்கே பட்டியலிடுகிறோம்...

    புதிதாக படிக்க விரும்புபவர்களுக்கு...

    புதிது புதிதாக ஏதாவது படிக்க விரும்புபவர்களுக்காக இணையதளத்தில் ஏராளமான ஆன்லைன் படிப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க இணையதளங்களில் ஒன்றுEdX.org. உலகில் அதிகம்பேர் திறக்கும், அதிகமான ஆன்லைன் படிப்புகள் கொண்ட இணையப் பக்கம் இது. Udacity.com,AcademicEarth.org போன்ற இணையதளங் களும் இது போன்றவையே.Coursera.org இணையதளத்தில் பள்ளிமுதல் பல்கலைக்கழக அளவிலான பாடத்திட்டங்களுடன், கூடுதல் அறிவு வளர்க்கும் விஷயங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    பொது கட்டுரைகளுக்கு...

    நவீன உலகைப் பற்றியும், வாழ்வின் பல்வேறு நிலைகள் பற்றிய அனைத்து விஷயங்களையும் பயனுள்ள வகையில் தொகுத்து வழங்கும் இங்கிலாந்து இணையதளம் இது LifeHacker.co.uk. கதைகள், வாழ்க்கை, வேலை, வர்த்தகம், டிப்ஸ், டிரிக்ஸ், பணம் என பலவிதமான பிரிவுகளில் பயனுள்ள தொகுப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. எந்த சூழ்நிலையில் என்ன பரிசு வழங்கலாம், ஒரு முடிவு எடுக்கும் முன்பு யோசிக்க வேண்டியவை எவை? பண வரவுக்கான வழிகளை உருவாக்குவது எப்படி? ‘லிங்ட் இன்’ பக்கத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துவது எப்படி? என்பது போன்ற தகவல்களை இதில் படித்து பயன்பெறலாம்.

    நீங்கள் இணையதளத்தில் சென்று பொழுதுபோக்கு வீடியோக்களை ரசிக்கும் பழக்கத்திற்கு அடிடையானவர்கள் என்றால், உங்களை அறிவியல் மற்றும் கல்வி சார்ந்த வீடியோக்களால் ஈர்க்கிறது UnplugTheTV.com இணையதளம். வீடியோக்கள் மட்டுமல்லாது கட்டுரைகளாகவும், புகைப்படங்களாகவும், பொன்மொழிகளாகவும், ஒலி வடிவிலும் ஏராளமான தகவல்கள் நிரம்பி உள்ளன. கேள்வி கேட்பதன் மூலமும் நமக்கு அவசியமான தகவல்களை அறிந்து கொள்ள முடியும். வேறுசில முக்கியமான பக்கங்களுக்கான தொடர்பு முகவரிகளையும் கொடுத்திருப்பார்கள்.

    மாணவர்களின் மனதை ஈர்க்கும் தகவல்கள் அடங்கிய இணையதளங்களில் ஒன்று MentalFloss.com அறிவியல், உணவு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளிலான தொகுப்புகள் உள்ளன.



    உணவுப் பிரியர்களுக்கு...

    மாணவர்களுக்கான உணவுப்பட்டியலையும், அதை தயாரிக்கும் முறையையும் கற்றுத்தருகிறது StudentRecipes.com. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரெஸிபிகளும், சமையல் யுத்திகளும் உள்ளன.

    ஆரோக்கியத்தை மதிப்பிட

    உங்களின் தற்போதைய உடல் நலத்தை மதிப்பிட உதவும் இணையதளம்WebMD.com. உங்களுக்குத் தோன்றும் உடல் அறிகுறிகளை குறிப்புகளைக் கொடுத்தால், அதனுடன் தொடர்புடைய நோய் பாதிப்புகளைப் பற்றிய தகவல்களைத் தரும். இது இணைய மருத்துவர் இல்லையென்றாலும், மருத்துவ துணைவனாக சில புரிதல்களை ஏற்படுத்தும். மருந்துகளை இது பரிந்துரைப்பதில்லை என்பதால் உடல்நலம் பற்றிய தெளிவுகளை மட்டும் பெறலாம்.

    இதுபோல மாணவப் பருவத்தில் ஏற்படும் உடல், மன நலப்பிரச்சினைகள் பற்றி கட்டுரைகளை கொண்டது The Ultimate Health Food Guide இணைய தளம். இந்த பக்கத்தில் உடல்நலத்திற்கேற்ற உணவுகளையும் அறிந்து கொள்ளலாம். நோய் எதிர்ப்புசக்திக்குத் தேவையான உணவுப்பட்டியலையும் தரும்.

    உங்கள் தூக்கத்தை ஆராய்ச்சி செய்யும் இணையதளம் Sleepyti.me. இதில் நீங்கள் ஒரு கணக்கு துவங்கிக் கொண்டு, தினசரி தூங்கச் செல்லும் நேரத்தையும், விழிக்கும் நேரத்தையும் பதிவு செய்தால், உங்கள் தூக்க நேரத்திற்கு ஏற்ப பல ஆலோசனைகள் வழங்கும். அப்படி இல்லாமலும் நீங்கள் தூங்கும் நேரத்தின் அளவைக் குறிப்பிட்டும், உங்கள் தூக்கம் போதுமானதா? எவ்வளவு நேரம் ஓய்வு எடுப்பது என்பது போன்ற பயனுள்ள தகவல்களை பெறலாம்.

    புத்தகங்களை வாங்க விற்க...

    TheBookPond.comஇணைய தளம் உங்கள் பழைய பள்ளி, கல்லூரி பாடநூல்களை விற்கவும், மற்றவர்களிடம் இருந்து வாங்கி பயன்பெறவும் துணை செய்கிறது. அமேசான், இபே, கம்ட்ரீ போன்ற பொதுவான இணைய வர்த்தக தளங்களிலும் கல்வி தொடர்பான பொருட்களை தேடி வாங்கலாம்.

    வரவு செலவுக்கான தளங்கள்...

    நீங்கள் பணம் வரவு செலவு மற்றும் நிதி விவரங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள MoneySavingExpert.com என்ற இணையதளம் கைகொடுக்கும். இதில் குறிப்பிட்ட வங்கிகளின் வட்டி விகிதம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைஅறியலாம். Wise Bread.com தளத்திலும் பயனுள்ள நிதி ஆலோசனைகள் கிடைக்கும். இதில் சில ஐடியாக்களை வழங்கி வருவாய் ஈட்டவும் முடியும்.

    Mint.com என்ற இணையதளம் சென்றால் உங்கள் வரவு செலவை பதிந்து வைக்க வழி உண்டு. அதற்கேற்ப சில ஆலோசனைகளையும் இந்த இணையதளம் வழங்கும்.
    குழந்தைகளுக்கு சத்தான சாலட் செய்து கொடுக்க விரும்பினால் கஸ்டர்ட் பழ சாலட் செய்து கொடுக்கலாம். இன்று இந்த கஸ்டர்ட் பழ சாலட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - கால் லிட்டர்
    ஆப்பிள் பழம் - 1
    வாழைப்பழம் - 1
    திராட்சை பழம் - 100 கிராம்
    மாதுளை முத்துக்கள் - அரை கப்
    முந்திரி பருப்பு - 50 கிராம் (தூளாக்கவும்)
    நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
    ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
    கஸ்டர்ட் பவுடர் - 1 டீஸ்பூன்



    செய்முறை:


    ஆப்பிள், வாழைப்பழத்தை சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.

    பாலை கொதிக்க வைத்து அதில் நாட்டு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், கஸ்டர் பவுடர் ஆகியவற்றை கொட்டி, கட்டிப்பிடிக்காமல் கரைத்துக்கொள்ளவும்.

    நன்றாக கொதித்து வந்ததும் கீழே இறக்கி ஆற வைக்கவும்.

    அதில் ஆப்பிள், வாழை, திராட்சை, மாதுளை, முந்திரி பருப்பு போன்றவற்றை கொட்டி கிளறவும். ருசியான கஸ்டர்ட் பழ சாலட் ரெடி.

    சத்தான சுவையான கஸ்டர்ட் பழ சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் இயக்கங்கள் ஒருங்கிணைப்புடன் நடைபெறும். அதனால் உடல் நலம் பெறும். ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்தவும் உதவும்.
    காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி மேற்கொள்வது பெரும்பாலானோரின் அன்றாட வழக்கமாக இருக்கிறது. தினமும் ஒரே விதமாக நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது சிலருக்கு சலிப்பு ஏற்படும். அதை தவிர்க்க வாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி நடைப்பயிற்சியோ, ஜாக்கிங்கோ செய்யலாம். அவைகளை 20 நிமிடங்கள் செய்தால் கூட போதுமானது. அந்த பயிற்சிகளில் உடலுக்கும், மனதுக்கும் நலம் சேர்க்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

    பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் இயக்கங்கள் ஒருங்கிணைப்புடன் நடைபெறும். அதனால் உடல் நலம் பெறும். ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்தவும் உதவும். இரவில் சுழற்சி அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூக்கம் சீராக வரவும் வழிவகை செய்யும். சிந்தனை திறனை மேம்படுத்தும். மனதில் நல்ல யோசனைகள் உதிக்க உதவும். பார்வை திறன் மேம்படவும் துணைபுரியும்.

    பின்னோக்கி நடை பயிலும்போது கால் தசைகளின் வலிமை அதிகரிக்கும். முழங்கால் காயங்களால் அவதிப்படுபவர்கள் பின்னோக்கி நடை பயிலுவது நல்லது. விரைவில் காயங்கள் ஆறத்தொடங்கும். நடைப்பயிற்சியை முறையாக மேற்கொள்வதற்கும் வழிவகை செய்யும். உடல் சமநிலையில் இருக்கவும் உதவி புரியும். அதிக கலோரிகளை எரிக்கவும் உதவும். உடல் எடையை சீராக பராமரிக்கவும் பின்னோக்கி நடைபயில்வது பயனளிக்கும்.

    எலும்புகளும், தசைகளும் வலுப்பெறுவதற்கும் பின்னோக்கி நடைபயில்வது நல்லது. உடலின் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க செய்யும். வீட்டிலேயே பின்நோக்கி நடைப்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் டிரெட்மில் பயன்படுத்தலாம். அது சவுகரியமாகவும், பாதுகாப்பாகவும் அமையும். முதலில் டிரெட்மில்லில் மெதுவாக நடக்க தொடங்கி பின்னர் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.
    கிளிசரினை பயன்படுத்துவதன் மூலம் உதடுகளில் படிந்திருக்கும் இறந்த செல்களும் நீங்கிவிடும். புதிய செல்களின் வளர்ச்சிக்கும் கிளிசரின் அவசியமானது.
    குளிர்காலத்தில் உதடு வெடிப்பு, உலர்தன்மை போன்ற பிரச்சினைகளுக்கு கிளிசரின் நிவாரணம் தரும். உதடு உலர்வடைவதை தடுத்து ஈரப்பதத்தை தக்க வைக்க இது உதவும்.

    இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு கிளிசரினை பஞ்சில் முக்கி உதடுகளில் தடவி வரலாம். தொடர்ந்து அவ்வாறு செய்து வருவதன் மூலம் உதடுகள் உலர்ந்து போவதை தவிர்க்கலாம்.

    உதடுகள் மிருதுவாகவும், இளஞ்சிவப்பு நிறத்திலும் காட்சியளிப்பதற்கும் கிளிசரினை பயன்படுத்தலாம்.

    சுற்றுச்சூழல் மாசுபாடு, முறையான பராமரிப்பு இன்மை போன்ற காரணங்களால் சிலருடைய உதடுகள் கருமை நிறத்திற்கு மாறத்தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள் தினமும் கிளிசரின் பயன்படுத்தலாம். தொடர்ந்து கிளிசரின் தடவி வருவதன் மூலம் உதடுகள் மென்மையாகும். அதேவேளையில் தரமான கிளிசரினை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

    வறண்ட உதடுகளால் சிலருக்கு தொந்தரவுகள் ஏற்படும். உதடு வெடிப்பு, அரிப்பு, எரிச்சல் போன்ற பாதிப்புகள் நேரும். அதனால் உதடுகளின் உள் அடுக்குகளும் பாதிப்புக்குள்ளாகும். அதற்கு தீர்வு காண்பதற்கு டாக்டரிடம் ஆலோசனை பெற்று பிரத்யேக கிரீம்களை பயன்படுத்தலாம்.

    நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்களுக்கு உதடுகள் உலர்ந்து காணப்படும். உதடுகள் உணர்திறன் மிக்கவை. அவைகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உதடு வெடிப்பு, உதட்டு வலி பிரச்சினைகளை தவிர்க்க கிளிசரினை பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்வது நல்லது.

    கிளிசரினை பயன்படுத்துவதன் மூலம் உதடுகளில் படிந்திருக்கும் இறந்த செல்களும் நீங்கிவிடும். புதிய செல்களின் வளர்ச்சிக்கும் கிளிசரின் அவசியமானது.
    உணவு மீதான ஆர்வத்தை மக்களிடையே தூண்டும் விதத்தில் உலகெங்கிலும் பிரபலமாகிக்கொண்டிருக்கிறது, ‘புட் ஆர்ட்’. இது உணவை அழகுபடுத்தும் அலங்காரக்கலை.
    உணவுகளை வெறுமனே விரல்களால் தொடுவதற்கும், இதயபூர்வமாக தொடு வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இதயபூர்வமாக ஒரு உணவோடு ஒன்றிவிட்டு, பின்பு விரல்களால் தொட்டால் அந்த உணவின் மீது ஈர்ப்பு அதிகமாகும். இதயத்தால் விரும்பி, அதன் பின்பு அந்த உணவைத் தொடவேண்டும் என்றால், அது அழகாக தோன்றவேண்டும். அந்த அழகைத்தான் ‘புட் ஆர்ட்’ தருகிறது.

    உணவு மீதான ஆர்வத்தை மக்களிடையே தூண்டும் விதத்தில் உலகெங்கிலும் பிரபலமாகிக்கொண்டிருக்கிறது, ‘புட் ஆர்ட்’. இது உணவை அழகுபடுத்தும் அலங்காரக்கலை. அழகு என்பது உலகில் உள்ள அனைத்துக்கும் தேவை. உணவுக்கும் அது தேவை. அலங்காரம் இல்லாத எதுவும் மக்களை ஈர்ப்பதில்லை.

    சர்வதேச அளவில் தலைசிறந்த ஓட்டல்களில் முதலில் இந்த ‘புட் ஆர்ட்’ அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களையும், ஆண்களையும் அழகுபடுத்த தேர்ச்சிபெற்ற அழகுக்கலை நிபுணர்கள் இருப்பதுபோல், உணவினை அழகுப் படுத்தவும் தேர்ச்சி பெற்றவர்கள் பிரபலமான ஓட்டல்களில் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பெருமளவு சம்பளமும் வழங்கப்படுகிறது. அவர்கள் உணவுகளை தயாரிக்கும் ஷெப் களுடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட உணவை அழகாக வடிவமைக்கிறார்கள். ஒவ்வொரு வாடிக்கையாளரையும் உணவை நோக்கி ஈர்க்கிறார்கள்.

    ‘உணவுக்கு ஆரோக்கியமும், ருசியும்தானே தேவை! அதற்கு அழகு தேவையா?’ என்ற கேள்வி எழலாம். ஆனால் பார்வைக்கு அழகாக இருந்தால்தான் அதனை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். உணவுக்கு ஐம்புலன்களையும் கவர்ந்திழுக்கும் சக்தி உண்டு. உணவு கண்களை கவர்ந்திழுத்து, அதை பார்க்கத் தூண்ட வேண்டும். தூண்டினால்தான் மனது அதில் லயிக்கும். அடுத்து மணம், நாசியை தொட்டு வருடி அதன் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்யும். தொடர்ந்து நாக்கில் உமிழ்நீர் சுரந்து சுவைக்கத் தூண்டும். தொட்டுப்பார்த்தால் அது பரவசத்தை உருவாக்கும். அப்படிப்பட்ட சூழலில் அந்த உணவின் சிறப்பை கேட்கவும் செய்தால், ‘இந்த உணவை சுவைத்தால்தான் என் ஆசை தீரும்’ என்ற எல்லைக்கு போய்விடுவோம். அதை ருசித்து சாப்பிடுவோம்.

    இப்படி பார்த்தல், கேட்டல், நுகருதல், உணருதல், ருசித்தல் என்ற ஐந்து நிலைகளுக்கும் அடிப்படையான ஆரம்பப்புள்ளியாக இருப்பது அழகுதான். அதனால்தான் உலக அளவில் உணவுத்துறையில் ‘புட் ஆர்ட்’ என்பது பெருமைக்குரியதாக இருக்கிறது. அது உணவுத்துறையில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.



    நாம் உணவை எடுத்து சாப்பிடுவதற்கு பெரும்பாலும் கை விரல்களைத்தான் பயன்படுத்துகிறோம். வெளிநாட்டினர் கரண்டி களைத்தான் கைகளால் பிடிக்கிறார்கள். உணவுகளை அவர்களது விரல்கள் தொடுவதில்லை. உலோக கரண்டிகள்தான் தொடுகின்றன. இதனால் உணவைத் தொடும் இதமான உணர்வு அவர் களுக்கு கிடைப்பதில்லை. மட்டுமின்றி சில உணவுகளை ஒன்றுடன் ஒன்றாக கலந்து பிசைந்து சாப்பிட்டால்தான் முழு சுவை கிடைக்கும். அப்படிப்பட்ட கலவை சுகத்தையும் கரண்டிகளால் முழுமையாகத்தர முடியாது. அதனால் உணவு மூலமான முழு இன்பத்தையும் பெற விரல்களை பயன்படுத்தி அள்ளி எடுத்துதான் சாப்பிடவேண்டும்.

    புட் ஆர்ட்டின் பெருமையை நம்மால் நமது குழந்தைகள் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் உணர முடியும். வீட்டில், நெய் சேர்த்து மெலிதாக மொறுமொறுப்பான தோசை சுட்டு குழந்தைகளுக்கு தாய் கொடுத்தாலும், அதை சாப்பிட குழந்தைகள் முகம் சுளிப்பார்கள். அதே தோசையை சுட்டு அழகான ஒரு பிளேட்டில் தொப்பி போன்று சுருட்டிவைத்து, அதன் அருகில் கலர் கலரான மூன்று வகை சட்னியும், இன்னொரு கப்பில் சாம்பாருமாக எடுத்து வந்தால், குழந்தைக்கு அதை சாப்பிட ஆர்வம் வந்து விடும். இப்படி அழகாக்குவதுதான் புட் ஆர்ட். உணவு பரிமாறும் பிளேட், உணவின் வடிவம், உணவின் நிறம், அதில் செய்யப்படும் இணைப்புகள், அலங்காரம் எல்லாவற்றையும் ‘புட் ஆர்ட்’ நேர்த்தியாக்குகிறது.

    பெரும்பாலான உணவுகளுக்கு இப்போது கிரீம், சாஸ் போன்றவை கூடுதல் சுவைக்காக வழங்கப்படுகிறது. பொதுவாக இதனை ஒரு கிண்ணத்திலோ, பாட்டிலிலோ வழங்குவார்கள். தற்போது இவைகளை ஒரு சிறிய பந்துக்குள் அடைத்து முட்டைபோல் உணவுத் தட்டுகளில் வைக்கிறார்கள். அதனை முள் கரண்டியால் லேசாக குத்தி உடைக்கும்போது பல வண்ணங்களில் அவை உள்ளே இருந்து வெளியே வரும். குழந்தைகள் இதை ரசிப்பதோடு, சுவைக்கவும் செய்கிறார்கள். பெரிய பிளேட்டில் சிறிதளவு உணவை சிறப்பாக கலைநயத்தோடு அலங்கரித்து சாப்பிட வழங்குவது இப்போது சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் கலர்புல்லாக பலரையும் சாலட் வகைகள் கவர்கின்றன. அதில் பல வண்ண காய்கறிகளை பயன்படுத்தி அழகு சேர்க்கிறார்கள்.

    ‘வெஜிடபிள் கார்விங்’ இப்போது சர்வதேச அளவில் புகழ்பெற்றிருக்கிறது. ஒலிம்பிக் போன்று அதற்கும் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குகிறார்கள். இந்த கலை, புட் ஆர்ட்டுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. வெஜிடபிள் கார்விங் கற்றவர்கள் காய்கறி மற்றும் பழங்களை நிறங்களுக்கு தக்கபடி ஒன்றோடு ஒன்றாக அற்புதமாக இணைத்து பயன்படுத்துவார்கள். அதோடு அவைகளை விரும்பிய வண்ணம் அழகுற செதுக்கவும் செய்வார்கள். கற்பனைக்கு எட்டாத விதத்தில் அற்புதமான உருவங்களை அவர்கள் உருவாக்குவார்கள். இந்த கலையின் அடிப் படையை தாய்மார்கள் ஓரளவு கற்று வைத்துக்கொண்டால், தங்கள் குழந்தைகளுக்கு வழங்கும் எல்லா உணவுகளையும் அவர்களை ஈர்க்கும் விதத்தில் அழகுபடுத்தி வழங்கலாம். குழந்தைகளும் அதை பார்த்து ரசித்து, ருசித்து சாப்பிடுவார்கள்.



    குழந்தைகள் அரிசி சாதம் சாப்பிடுவதில்லை என்று நிறைய தாய்மார்கள் வருத்தம் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட குழந்தை களுக்கு புட் ஆர்ட் மூலம் சாதத்தின் மீது ஆர்வத்தை உருவாக்கலாம். ஆரஞ்சு நிறம் கொண்ட கேரட், பச்சை நிறம்கொண்ட கீரை, சிவப்பு நிறம் கொண்ட பீட்ரூட், பர்பிள் நிறம்கொண்ட குடை மிளகாய் போன்றவைகளை சேர்த்து தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்கவிடுங்கள். பின்பு அவைகளை விரும்பும் வடிவத்தில் நறுக்கி வெந்த சாதத்தில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், அந்த பலவண்ண சாதத்தை அவர்கள் விரும்பி உண்பார்கள். இப்படி ஒவ்வொரு உணவையும் ‘புட் ஆர்ட்’ மூலம் அழகுபடுத்தி, குழந்தைகளுக்கு வழங்குவது அவர்களிடம் சாப்பிடும் ஆர்வத்தை அதிகரிக்கும்.

    ‘நூடுல்ஸ்’ சில் கூட புட் ஆர்ட் கலையை அற்புதமாக பயன்படுத்தி குழந்தைகளை கவர்ந்து சாப்பிட வைக்கலாம். நூடுல்ஸ்சில் புட் ஆர்ட் மூலம் சிங்கம் உருவாக்குவதாக இருந்தால், அதற்கு நூடுல்ஸ், நவதானிய பிரெட், உலர்ந்த கருப்பு திராட்சைகள், பாலாடைக்கட்டி, சிவப்பு குடைமிளகாய், வெள்ளரிக்காய் துண்டுகள், கேரட் துண்டுகள், கிவி பழத்துண்டுகள் போன்றவை தேவை. நூடுல்ஸை சிங்கத்தின் தலையாக்கி, ரொட்டியை உடலாக்கி, காது-மூக்கு-வாய் போன்ற பகுதிகளுக்கு பாலாடைக்கட்டியை நறுக்கி வைக்கவேண்டும்.

    கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வெட்டி வைத்து, கருவிழிக்கு திராட்சையை செருகவேண்டும். உதடு மற்றும் மீசைக்கு குடை மிளகாய் மற்றும் கேரட் துண்டுகளை குச்சிபோல் நறுக்கி செதுக்கி வைத்தால் உங்கள் குழந்தைக்கு பிடித்தமான சிங்கக்குட்டி நூடுல்ஸ் உருவாகிவிடும். அதனை ஒரு பிளேட்டில் வைத்து சிங்கக்குட்டியை சுற்றி கிவி பழத்துண்டுகளாலும், குடைமிளகாய் துண்டுகளாலும் அலங்கரிக்கலாம். இதில் காய்கறிகள், பழங்கள், ரொட்டி போன்றவை சேருவதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவாகவும் இது மாறிவிடுகிறது.

    உலகில் அனைத்துக்கும் அழகுதேவை. உணவுக்கும் அது முக்கிய தேவை. உணவின் அழகை ரசித்தால்தான் அதனை முழுமையாக ருசிக்க முடியும். ரசித்து, ருசித்து, சத்தான உணவை சாப்பிட்டால் ஆரோக்கியம் மேம்படும். ‘புட் ஆர்ட்’ உணவு மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது. அதன் மூலம் நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

    கட்டுரை: முனைவர் ஜெ.தேவதாஸ்,

    உணவியல் எழுத்தாளர், சென்னை.
    பல நேரங்களில் காரணமின்றி தூங்கி எழுந்தவுடன் நாம் சற்று சோர்வாக உணர்வோம். நம்மை சுறுசுறுப்பாக்கிக் கொள்ள பல எளிய முறைகள் உள்ளன.

    பல நேரங்களில் காரணமின்றி தூங்கி எழுந்தவுடன் நாம் சற்று சோர்வாக உணர்வோம். ஒரு கப் காபி கிடைத்தால் சுறுசுறுப்பாக இருப்போமே என்று தோன்றும். ஆனால் நம்மை சுறுசுறுப்பாக்க காபி தான் அவசியம் என்பதல்ல. நம்மை சுறுசுறுப்பாக்கிக் கொள்ள பல எளிய முறைகள் உள்ளன.

    * சிறிது நேரம் சூரிய ஒளி உடலில் படும்படி நில்லுங்கள். இது உங்ள் வைட்டமின் டி சத்தினை கூட்டும். மனநிலையினை உற்சாக மாக்கும். உடலையும், மனதினையும் சுறுசுறுப்பாக ஆக்கி விடும். அது மட்டுமல்ல இவ்வாறு செய்வது இரவு தரமான தூக்கத்தினை அளிக்குமாம். காலை இளம் சூரிய ஒளிக்கதிர் சில நிமிடங்கள் நம் மீது படுவது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைக்கும்.

    * அறையின் சீதோஷ்ண நிலையில் இருக்கும் நீரில் குளியுங்கள். இது ஒரு மின் அதிர்வுகளை மூளைக்குக் கொடுக்கும். முகத்தினை குளிர்ந்த நீரினால் கழுவுவதும் சிறந்த ரத்த ஓட்டத்தினை ஊக்குவிக்கும். உடலில் சுறுசுறுப்பு ஏற்படும்.

    * சிரிப்பு போன்ற சிறந்த மருந்து கிடையாது. சிரிப்பு உங்கள் உடலில் ஆக்ஸிசன் அளவினைக் கூட்டும். இருதயம், நுரையீரல் நன்கு இயங்கும். ஸ்ட்ரெஸ் நீங்கும். காப்பியினை விட மிகச்சிறந்தது. நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர்களோடு இருங்கள்.

    * சோர்வுக்கு ஒரு காரணம் உடலில் நீர் சத்து குறைதல் ஆகும். அதுவும் இரவு தூக்கத்தில் தொண்டை வறண்டு இருக்கும்.  எனவே பல் துலக்கிய பின் ஒரு கிளாஸ் நீர் பருகுங்கள்.

    * சிறிது நேரம் நடங்கள். துரித நடை இல்லாவிடினும் இயற்கையான முறையில் திறந்த வெளியில் சிறிது நேரம் நடங்கள். இது ரத்த ஓட்டத்தினை சீராக்கும்.

    * தியானம் தினம் 20 நிமிடங்கள் செய்யுங்கள். இது உங்கள் சக்தி அளவினைக் கூட்டும்.

    ஆக இயற்கை வழியில் சக்தியினைக் கூட்டுவது மிக எளிதானதே. செயல்படுத்துவோம்.
    வார நாட்களில் இரவு நேரங்களில் என்ன செய்வதென்று குழம்பி கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு நல்ல இரவு உணவாக கிரீம் நிறைந்த பசலைக் கீரை - காளான் பாஸ்தா இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    மக்ரோனி - 1 கப்
    ஆலிவ் எண்ணெய் - 2 ஸ்பூன்
    பூண்டு பற்கள் - 5
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    காளான் - 10
    பசலைக்கீரை - 1 கட்டு
    டையட் மயோனிஸ் - 5 ஸ்பூன்
    மிளகு தூள் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை

    பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காளானை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பசலைக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அந்த நீரில் உப்பு சேர்த்து மக்ரோனியை போட்டு வேக வைக்கவும். 5 நிமிடங்கள் வேக விடவும். அவ்வப்போது அடியில் மக்ரோனி தாங்காமல் இருக்க கிளறி விடவும். 5 நிமிடத்திற்கு பிறகு, மக்ரோனியை வடிகட்டி எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு ஆறியதும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.  

    வடிகட்டி எடுத்து வைத்த நீரில் 120 மிலி தண்ணீரை தனியே எடுத்து வைத்து கொள்ளவும். இதனை பிறகு பயன்படுத்த வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு ஆலிவ் எண்ணெய் ஊற்றி  சூடானதும் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வெந்தவுடன், காளான் மற்றும் கீரையை சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.

    கீரையில் இருக்கும் நீர் வெளியேறும். அதன் பின்பு, சிறிதளவு மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

    மக்ரோனி வேக வைத்து வடிகட்டி எடுத்து வைக்கப்பட்ட நீரை இப்போது இந்த கலவையில் சேர்த்து நன்றாக கிளறவும்.

    இப்போது அடுப்பில் இருந்து கடாயை இறக்கி, மயோனிஸ் சேர்த்து நன்றாக கிளறவும். பின்பு மறுபடி, அடுப்பில் வைத்து கிளறவும். 1 நிமிடத்தில் சாஸ் சற்று கெட்டியாக மாறும். இந்த நேரத்தில் மக்ரோனியை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

    இப்போது கிரீம் நிறைந்த பசலைக் கீரை - காளான் பாஸ்தா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ‘மீ டூ’ இயக்கம் தங்களுக்கு வேண்டாதவர்களை சிக்கலில் மாட்ட வைத்து அசிங்கப்படுத்தும் ஒரு தளமாக இருக்கிறது என்பதும் பலரது கருத்தாக இருக்கிறது.
    இந்தியா முழுவதும் ‘மீ டூ’ (நானும்தான்) இயக்கம் புயலை கிளப்பி வருகிறது.

    ‘மீ டூ’ இயக்கம் ஆண்களை பயமுறுத்தினாலும் செக்ஸ் கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் கவசம் என்கின்றனர் பெண் உரிமைக்கு போர்க்கொடி உயர்த்துபவர்கள்.

    ‘மீ டூ’ ஹேஷ்டேக் உள்ளே விதவிதமான பாலியல் குற்றங்கள் பற்றிய தகவல்கள் தினமும் குவிகின்றன. பாலியல் ஆசாமிகளை அலற வைக்கும் இந்த ‘மீ டூ’ 2006-ம் ஆண்டிலேயே உதயமாகி விட்டது. இப்போது இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள பட உலகில் சூறாவளியாக சுழன்று பிரபலங்களை நிலைகுலையச் செய்து வருகிறது.

    தமிழ் பட உலகில் முதலில் சுசிலீக்ஸ் முகநூல் பக்கம்தான் திரையுலகினரின் அத்துமீறல்களை அம்பலபடுத்தியது. முன்னணி நடிகர், நடிகைகள் இதில் சிக்கினார்கள்.அதன்பிறகு தெலுங்கு பட உலகில் ஸ்ரீரெட்டி விஸ்வரூபம் எடுத்து பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களை சந்திக்கு இழுத்தார்.

    இப்போது தீராத விளையாட்டு பிள்ளை படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இந்தி நடிகை தனுஸ்ரீதத்தா மூலம் இந்தியா முழுவதையும் ‘மீ டூ’ உலுக்கி வருகிறது. தனுஸ்ரீதத்தா பாலியல் புகாரில் சிக்கிய நானா படேகர் சாதாரணமானவர் அல்ல. தேசிய விருதுகள் பெற்று இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் நடிகர். ‘காலா’, ‘பொம்மலாட்டம்’ என்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

    10 வருடங்களுக்கு முன்பு ‘ஹார்ன் ஓகே ப்ளஸ்’ இந்தி படத்தில் நடித்தபோது தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றும் அதை வெளியே சொன்னதால் ஆட்களை வைத்து மிரட்டினார் என்றும் தனுஸ்ரீ தத்தா கூறினார். அப்போது தனுஸ்ரீ கார் தாக்கப்பட்ட வீடியோவும் இப்போது வைரலாகி அவர் மீது அனுதாபம் ஏற்படுத்தி உள்ளது.

    அதோடு இந்தி நடிகர் அக்னி கோத்ரி படப்பிடிப்பு அரங்குக்குள் தனது ஆடைகள் முழுவதையும் களைந்து விட்டு நிர்வாணமாக நிற்க சொன்னார் என்று இன்னொரு பகீர் தகவலையும் வெளியிட்டார். தனுஸ்ரீதத்தாவிடம் போலீசார் புகார் பெற்று 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நானா படேகரை கோர்ட்டில் ஏற்ற தயாராகி வருகிறார்கள். மகளிர் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.

    இதற்கு பிறகு திரையுலகினர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் குவிய தொடங்கின.

    கங்கனா ரணாவத், தேசிய விருது பெற்ற ‘குயின்’ பட இயக்குனர் விகாஸ் பாஹல் தன்னை சந்திக்கும்போதெல்லாம் கட்டிப்பிடித்து கழுத்தில் முகத்தை புதைத்து எனது தலைமுடியில் வாசனையை நுகர்ந்து உங்கள் வாசனையை நான் விரும்புகிறேன் என்று தொல்லை கொடுத்ததாக குற்றம் சொன்னார்.

    தந்தை வேடங்களுக்கு பொருத்தமான நடிகர் என்று பெயர் எடுத்த பிரபல இந்தி நடிகர் அலோக் நாத் மதுவில் எதையோ கொடுத்து தன்னை கற்பழித்து விட்டதாக பெண் இயக்குனர் வின்டா நந்தா கொந்தளித்தார். இப்படி நிறைய புகார்கள் குவிந்து இந்தி பட உலகை அலற வைத்து வருகிறது.



    இப்போது தமிழ் பட உலகத்திலும் ‘மீ டூ’ புகுந்து பொங்க வைத்து இருக்கிறது. கவிஞர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி சொன்ன குற்றச்சாட்டு அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.

    சின்மயி புகாரின் சாராம்சம் என்னவென்றால், “சுவிட்சர்லாந்தில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றபோது வைரமுத்து அவர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு என்னை அழைத்தார். நான் மறுத்தேன். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் வைரமுத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி மிரட்டினார். எனக்கு பயம் ஏற்பட்டது. உடனடியாக இந்தியா திரும்பி விட்டோம். வைரமுத்து அவரது அலுவலகத்தில் இரண்டு பெண்களுக்கு முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார். என்னைப்போல் பாதிக்கப்பட்ட பாடகிகள் இனிமேல் இதுகுறித்து பேசுவார்கள்” என்பதுதான்.

    இதனை மறுத்துள்ள வைரமுத்து, “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவது இல்லை. உண்மையை காலம் சொல்லும்” என்றார்.

    வைரமுத்துவோடு இது நிற்கவில்லை. வில்லன் நடிகரும் நடன இயக்குனருமான கல்யாண் மீது இலங்கையை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் சொன்னதை சின்மயி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பெண் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராகும் ஆசையில் சென்னை வந்து கல்யாண் குழுவில் சேர்ந்ததாகவும் அப்போது படுக்கையை பகிர்ந்தால் உதவியாளராக வைத்துக்கொள்வேன் என்று கல்யாண் சொன்னதாகவும் கூறி உள்ளார்.

    இன்னொரு வில்லன் நடிகரான ஜான்விஜய்யும் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தகவலை பெங்களூருவை சேர்ந்த பெண் எழுத்தாளர் சந்தியா மேனன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

    மலையாள நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது பெண் இயக்குனர் டெஸ் ஜோசப் பாலியல் புகார் கூறியுள்ளார்.

    தினம் ஒரு தகவல் போல் பலரும் பாலியல் துன்புறுத்தல் பற்றி பேச ஆரம்பித்து உள்ளனர். 10, 15 வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த பாலியல் வன்மங்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார்கள்.

    இதை இனிமேல் கட்டுப்படுத்த முடியாது என்றும் பெண்களுக்கு எதிராக எங்கு தவறு நடந்தாலும் ‘மீ டூ’ தளம் அதை பகிரங்கப்படுத்தும் என்றும் பெண்கள் அமைப்பினர் கூறுகிறார்கள்.

    சினிமா துறை, அரசு, தனியார் அலுவலகங்கள் எங்கும் இனிமேல் ‘மீ டூ’ வுக்கு பயந்து பெண்களை பாலியல் வக்கிரமக்காரர்கள் நெருங்க பயப்படுவார்கள்.

    ‘மீ டூ’ இயக்கம் தங்களுக்கு வேண்டாதவர்களை சிக்கலில் மாட்ட வைத்து அசிங்கப்படுத்தும் ஒரு தளமாக இருக்கிறது என்பதும் பலரது கருத்தாக இருக்கிறது.

    நேர்மையான ஒருவர் மீது ‘மீ டூ’ புகார் பாய்ந்த உடனேயே அவர் மீது சேறு பூசப்பட்டு விடுகிறது. பின்னர் அவர் போராடி தன்னை தூய்மையானவர் என்று நிரூபித்தாலும், அவர் மீது சுமத்தப்பட்ட களங்கத்தின் வடு, காலத்துக்கும் மாறப்போவது இல்லை.

    எனவே ‘மீ டூ’ இயக்கம் தனக்கு பிடிக்காதவர்கள் மீது தவறாக ஏவப்படாமல் இருந்தால் நல்லது என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.
    குழந்தைகள் முழுமையாக நிப்பிளுக்கு அடிமையாவதற்கு முன்னர் அதனை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மை மற்றும் தீமை பற்றி அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
    பலர் குழந்தையின் அழுகையை நிறுத்த நிப்பிள் பயன்படுத்துகின்றனர். அல்லது விரல் சப்புவதைத் தடுக்க நிப்பிள் பயன்படுத்துகின்றனர். குழந்தைகளுக்கு நிப்பிள் பயன்படுத்துவது நல்லதா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    நிப்பிள் அறிமுகத்தால் தாய்பால் குடிப்பதில் தடை உண்டாகலாம். பார்ப்பதற்கு இரண்டும் ஒரே விதமாக இருந்தாலும் நிப்பிள் மற்றும் தாய்ப்பால் உறிஞ்சுதலில் வேறுபாடு உண்டு. மேலும் இந்த வேறுபாட்டை குழந்தைகள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். மத்திய காது பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. நீண்ட காலம் நிப்பிள் பயன்படுத்துவதால் பற்கள் தொடர்பான கோளாறுகள் தோன்றலாம். இரண்டு வருடங்களுக்கு மேல் நிப்பிள் பயன்படுத்துவதால் பல்வரிசை நேர்த்தியாக இல்லாமல் இருக்கும் வாய்ப்புகள் உண்டு, நீண்ட காலம் நிப்பிள் பயன்படுத்துவதால் குழந்தை தாய்ப்பாலை மறப்பது கடினமாக இருக்கலாம். அந்த தருணத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

    குழந்தைக்கு நிப்பிள் பயன்படுத்தத் தொடங்குபோது சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். குழந்தை தாய்ப்பால் குடிப்பதை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பிறகு நிப்பிள் பயன்படுத்தத் தொடங்குங்கள். தாய்ப்பால் பருகுவதில் எந்த ஒரு இடையூறும் நேராதபடி சரியான இடைவெளியில் தாய்ப்பால் புகட்டுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். குழந்தை பால் குடித்து முடித்த பின்னர் அல்லது தாய்ப்பால் குடிக்கும் இடைவெளியில் நிப்பிளை பயன்படுத்துங்கள்.

    குழந்தைக்கு நிப்பிள் பயன்படுத்துவதில் ஆர்வம் இல்லாமல் இருந்தால் அதனை கட்டாயப்படுத்தி பயன்படுத்த வேண்டாம். மேலும், குழந்தை உறங்கும்போது வாயில் இருந்து நிப்பிள் விழுந்துவிட்டால், அதனை மறுபடி வாயில் திணிக்க வேண்டாம்.

    குழந்தையின் வயதுக்கு ஏற்ற நிப்பிள் அளவை உபயோகப்படுத்துங்கள். அடிக்கடி நிப்பிளை மாற்றி விடுங்கள்.
    தொடர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
    பெண்களுக்கு ஆண்களை விட அதிகத் தூக்கம் தேவை. ஆனால், உண்மையில் அவசியமான அளவு தூக்கம் கூட அவர்களுக்குச் சாத்தியப்படுவதில்லை என்றும், தொடர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

    வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் தூக்கம் என்பது கனவுதான். இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், பெண்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை குறித்தும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்க்கலாம்.

    இப்போது மட்டுமல்ல… பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெண்கள் தூங்கும் நேரம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. கணவன் வரும் வரை சாப்பிடாமலும், தூங்காமலும் இருப்பது போன்ற வழக்கங்களால், பெண்கள் தாங்களாகவே தூங்கும் நேரத்தைக் குறைத்து விட்டார்கள். 70 சதவிகித பெண்கள் தங்களுக்குத் தூக்கமின்மை பிரச்சனை இருப்பதையே அறியாமல் இருப்பது தான் வேதனை.

    இன்றைய கால கட்டத்திலோ, பெண்கள் நினைத்தால் கூட தூங்குவதற்குப் போதிய நேரம் கிடைப்பதில்லை. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் சூழலில், காலை முதல் இரவு வரை பெண்களுக்கு வேலை ஓய்வதில்லை. என்னதான் கணவர் வீட்டு வேலை களைப் பகிர்ந்து கொண்டாலும், பெண்களுக்குத் தான் கூடுதல் வேலைகள் இருக்கும் என்பது மறுக்க முடியாத நிஜம்.



    வேலைகளை முடித்து விட்டுத் தாமதமாகச் சாப்பிடுவதும், உடனே படுத்து விடுவதும் கூட உடலுக்கு நாம் இழைக்கும் தீங்கு தான். இரவு நேரப் பணி என்பதும் நம் உடலுக்கு ஒவ்வாத விஷயமே. பகலில் உழைப்பதும், இரவில் உறங்குவதுமே இயற்கையின் நியதி. இந்தச் சக்கரத்தை மாற்றி, பகலில் உறங்கி, இரவில் வேலை செய்வதை நம் மனமும் உடலும் ஏற்றுக் கொள்ளாது.

    மேலும், நம்மைத் தூங்க வைக்கும் ’மெலட்டோனின்’ என்கிற ஹார்மோன் இரவில் அதிகம் சுரக்கும். பகலில் நாம் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கான காரணம், இது குறைவாக சுரப்பது தான்! இந்தச் செயல்பாட்டைத் தலை கீழாக மாற்றும் போது, உடல் நலமும் பாதிப்படையும். குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது, அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

    சரியான தூக்கம் கிடைக்காத பெண்கள் காரணமில்லாமல் எரிச்சல் அடைவார்கள். அதன் தொடர்ச்சியாக கோபம், மனச்சோர்வு, நாள் முழுவதும் மந்தமாக உணர்வது, சிறிய பிரச்சனையைக் கூட பெரியதாக நினைத்து கவலைப்படுவது என மனரீதியான சிக்கலுக்கு ஆளாவார்கள். தூக்கமின்மை காரணமாக ஆரம்ப கால கட்டத்தில் கண் எரிச்சல், தலைவலி, மைக்ரேன் எனப்படும் தீராத தலைவலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள்.

    இவை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் மாதவிடாய் குழப்பங்கள் உண்டாகும். குழந்தையின்மை போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு ஆரம்பமாக அமைந்து விடும். கண்டு கொள்ளாமல் விட்டாலோ, சில ஆண்டுகளிலேயே ரத்த அழுத்தம், இதய நோய், பக்க வாதம், நீரிழிவு வரை கொண்டு சென்று விடும். ஆண்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகுகிறார்கள்.

    பெண்களோ, ‘இதெல்லாம் ஒரு விஷயமா’ என்று சர்வ சாதாரணமாகக் கடந்து விடுகிறார்கள். ‘நான் ஆறு மாசமா தலைவலியால அவதிப்படுறேன். அதுக்கு டேப்லெட் எடுத்துகிறேன் டாக்டர்’ என்பவர்களை ஆராய்ந்தால், தூக்கம் தான் பெரும் பிரச்சனையாக இருக்கும். தூக்கமின்மை என்பது, நம் உடல் நலனில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்த வழி.
    ×