search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lips"

    • ஒரு ஸ்பூன் ஜெல்லில் சிறிது சர்க்கரை கலந்து உதடுகளில் தடவ வேண்டும்.
    • பெண்களின் உதடுகள் சிவப்பு நிறமாக மாறி பெண்களுக்கு அழகை கூட்டி தரும்.

    கடுமையான வெயில் காலங்களில் உதடுகளில் உள்ள செல்கள் இறந்து விடுவதால் உதடுகள் காய்ந்து கருப்பாகி விடுகிறது.

    இதனால் பெண்களின் அழகுகளில் குறைபாடு ஏற்படுகிறது.

    இதுகுறித்து தோல் சிகிச்சை டாக்டர்கள் கூறியதாவது:-

    இவ்வாறு உதடுகளில் இறந்த நிலையில் உள்ள செல்களை அவ்வப்போது அகற்ற வேண்டும்.

    அப்போதுதான் அவை ஈரமாக இருக்கும். இதற்கு ஒரு ஸ்பூன் ஜெல்லில் சிறிது சர்க்கரை கலந்து உதடுகளில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

    டூத் பிரஷில் சிறிது சர்க்கரை சேர்த்து உதடுகளில் தேய்த்தால் போதும். இதை வாரம் ஒருமுறை செய்தால் உதடு கருமை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

    அல்லது ஒரு கொத்து ரோஜா இதழ்களை அரைத்து, அதனுடன் சிறிது தேங்காய் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து உதடுகளில் மெதுவாக தேய்க்கவும்.

    அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நேரில் உதட்டை கழுவவும். இப்படி தினமும் செய்து வந்தால் ஒரு வாரத்தில் உதட்டில் உள்ள கருமை மறையும்.

    அல்லது ஒரு ஸ்பூன் சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் இலவங்கப்பட்டை தூள் கலந்து உதடுகளில் பூசவும். அரை மணி நேரம் கழித்து பாலுடன் மென்மையான துணியை கொண்டு தேய்த்து தேய்த்து கழுவ வேண்டும்.

    இப்படி அடிக்கடி செய்து வந்தால் இறந்த செல்கள் நீங்கி மென்மையாக மாறும். இரண்டு ஸ்பூன் ரோஜா இதழ் பொடியுடன் சிறிது சாக்லேட் பவுடர், சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ள வேண்டும்.

    அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் உதடுகள் வெடிக்காமல் புத்துணர்ச்சி பெறும். மேலும் பெண்களின் உதடுகள் சிவப்பு நிறமாக மாறி பெண்களுக்கு அழகை கூட்டி தரும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • இது மிகவும் பொதுவான பிரச்சனையாகும்.
    • சில பழக்கவழக்கங்கள் நம் உதடுகளை கருமை மாற்றும்.

    பிக்மென்டேஷன் என்பது தோல் தொடர்பான பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். இதில், நமது சருமம் கருமையாகி புள்ளிகள் ஏற்படும் அல்லது கருமையான திட்டுகள் வரும்.

    தோல் பிக்மென்டேஷன் போலவே, உதடு பிக்மென்டேஷனும் (lip pigmentation) மிகவும் பொதுவான பிரச்சனையாகும், மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இதில் பாதிக்கப்படலாம். ஹெல்த்லைன் படி, உதடுகள் கருமையாக இருப்பது ஹைப்பர் பிக்மென்டேஷனின் விளைவாக இருக்கலாம். இது மெலனின் அதிகமாக இருப்பதால் ஏற்படும் பொதுவாக பாதிப்பில்லாத நிலை.

    மாசு, சூரியக் கதிர்கள் போன்ற பல காரணங்களால் உதடுகள் நிறம் மாறலாம். சில பழக்கவழக்கங்கள் நம் உதடுகளை கருமையாக மாற்றினாலும், பிக்மென்டேஷனை மாற்றுவதற்கான வழிகள் இன்னும் உள்ளன.

    லிப் பிக்மென்டேஷன் மிகவும் பொதுவானது, சரியான சிகிச்சைகளைப் பயன்படுத்தி இதை எளிதில் மாற்றியமைக்க முடியும்.

    * பகலில் வெளியே செல்லும் முன் உதடுகளில் சன்ஸ்கிரீன் போடவும்.

    * உங்கள் உதடுகளை கடிக்கவோ அல்லது நக்கவோ கூடாது, ஏனெனில் இது வீக்கத்தால் தூண்டப்பட்ட ஹைப்பர் பிக்மென்டேஷனை ஏற்படுத்தும்.

    * வாரத்திற்கு இரண்டு முறை கெமிக்கல் பீல் பயன்படுத்தவும்.

    * வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை லேசான எக்ஸ்ஃபோலியேட்டர் பயன்படுத்தவும்.

    எந்தவொரு க்ரீம் அல்லது சீரம் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்யவும், எந்த சிகிச்சையையும் தொடங்கும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

    • சிலருக்கு காலநிலை ஒவ்வாமையால் உதடுகள் கருத்து, வெடிப்புகளும் ஏற்படும்.
    • உதட்டின் கருமைக்கு சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வுகள் உள்ளன.

    பொதுவாக ஒருவரின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும். இப்படி உதடுகளின் அழகு பாழாவதற்கு அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்களின் தாக்கம், காப்ஃபைன், புகைப்பிடித்தல் போன்ற பல விஷயங்கள் காரணங்களாக உள்ளன.

    அதிக குளிர், அதிக வெப்பம் காரணமாகவும் சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு காலநிலை ஒவ்வாமையால் உதடுகள் கருத்து, வெடிப்புகளும் ஏற்படும்.

    இதனை கவனிக்கமால் விட்டால் இன்னும் கருப்பாக மாற்ற வாய்ப்பு இருக்கும். இதனை எளியமுறையில் கூட நீக்க முடியும். 

    தற்போது உதட்டு கருமை நீக்க சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

    இதற்கான மருத்துவம்: பீட்ரூட் சாறுடன், சிறிதளவு குங்குமப்பூ கரைத்து உதட்டில் தடவி வந்தால் உதடு வெடிப்பு, கருப்பு நீங்கும். பாலாடையுடன், நெல்லிக்காய் சாறு கலந்து அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெண்ணெயுடன், ஆரஞ்சு பழச்சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தாலும் வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும். ரோஜா இதழ்களின் சாறு, கேரட் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதடு கருப்பு நீங்கும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • பீட்ரூட் உலர்ந்த உதடுகளை பொலிவாக்கக் கூடியது.
    • பீட்ரூட் இயற்கையான ‘லிப் பாம்’ ஆகவும் செயல்படக்கூடியது.

    உதட்டை அழகுபடுத்துவதற்கு லிப்ஸ்டிக் போன்ற அழகு சாதன பொருட்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்றில்லை. உதட்டின் நிறத்திற்கு ஏற்பவே பளிச் வண்ணத்தில் மிளிரும் பீட்ரூட்டும் சிறந்த உதட்டு அலங்கார பொருள்தான். இது சரும பராமரிப்பிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. உதடுகளை இளஞ்சிவப்பு நிறத்தில் பொலிவு பெற வைப்பதோடு மென்மைத்தன்மையை தக்க வைக்கக்கூடியது.

    சரும பராமரிப்பில் கவனம் செலுத்துபவர்கள் முகத்திற்கு விதவிதமான பேஸ் பேக்குகளை பயன்படுத்துவதுண்டு. முகத்திற்கு கொடுக்கும் முக் கியத்துவத்தை உதடுகளுக்கு கொடுக்க தவறிவிடுவார்கள். உதட்டு பராமரிப்புக்கு எந்த பொருள் பொருத்தமாக இருக்கும் என்று தெரியாமல் குழம்பவும் செய்வார்கள். அந்த குறையை பீட்ரூட் போக்கிவிடும். உதட்டுக்கு பிரகாசத்தையும், கூடுதல் அழகையும் பெற்று தரும்.

    பீட்ரூட்டில் இருக்கும் வைட்டமின் சி சத்து, உதட்டில் படர்ந்திருக்கும் கருமை நிறத்தை போக்கக்கூடியது. பீட்ரூட் இளம் சிவப்பு நிறத் தினால் ஆனது. அதே நிறத்தை உதடுகளுக்கும் கொடுக்கக்கூடியது. உதட்டுக்கு இயற்கை மாய்ஸ்சுரைசராக செயல்படக்கூடியது. பீட்ரூட் உதட்டுக்கு அழகு சேர்ப்பதோடு, உலர்ந்த உதடுகளை பொலிவாக்கக் கூடியது.

    உதட்டு வெடிப்புகளையும் போக்கக்கூடியது. தினமும் பீட்ரூட் சாறை உதட்டில் தடவி வந்தால், உதடுகள் மென்மையாக மாறும். மேலும் உதடுகளில் உள்ள வெடிப்புகள், கோடுகளை குறைத்து இளமை பொலிவை தக்க வைக்கும். விரைவில் வயதான தோற்றம் எட்டிப்பார்ப்பதை தள்ளிப்போடும்.

    பீட்ரூட்டை நன்றாக மசித்து, அதனுடன் சர்க்கரை கலந்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து தினமும் உதட்டில் தடவி வரலாம். அவ்வாறு செய்யும்போது இறந்த செல்கள் அகற்றப்படும். உதடுகள் மென்மையாகவும், பிரகாசமாகவும் மிளிரும்.

    பீட்ரூட் இயற்கையான 'லிப் பாம்' ஆகவும் செயல்படக்கூடியது. ஒரு துண்டு பீட்ரூட்டை அரை மணி நேரம் பிரிட்ஜில் குளிர வைத்துவிட்டு, அதனை உதடுகள் மீது தடவினால் போதுமானது. சில நொடிகள் தேய்த்தாலே போதும். உதடுகள் ரோஜா மலர் போல பொலிவுடன் காட்சி அளிக்கும். ஒரு டீஸ்பூன் பீட்ரூட் சாற்றுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து உதடுகள் மீது தேய்த்து வந்தாலும் உதடுகள் பிரகாசமடையும். பீட்ரூட் மற்றும் எலுமிச்சை இரண்டிலும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவை உதடுகளை பிரகாசமாக்க உதவுகின்றன.

    • பெண்களின் அழகை எடுத்து காட்டுவதில் உதடு முக்கிய பங்கு வகிக்கிறது.
    • வறட்சியால் உதட்டில் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

    தினமும் இரவில் படுக்கும் முன் உதடுகளில் வெண்ணெயை தடவி வந்தால் உதடுகளும் தானாக வறண்டு போகாது, அல்ல‍து காய்ந்து போகாது.

    நமது உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்ல‍து அடிக்கடி காய்ந்து போவதற்கு நமது உடலின் வெப்ப‍நிலை உயர்ந்து விட்ட‍தன் அறிகுறியே இது. ஆகவே உதட்டை நாவினால் வருடி ஈரமாக்குவதை விட உஷ்ணத்தைக் குறைக்கும் மோரை அடிக்கடி நாம் பருகி வர வேண்டும்.

    வெண்ணெய் சிறிது எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.

    ஒவ்வொரு நாள் இரவில் வெண்ணெயைக் கொஞ்சம் உதட்டில் தடவிக்கொண்டு படுக்கைக்கு செல்ல‍ வேண்டும். இவற்றின் காரணமாக நமது உடலில் ஏற்பட்டுள்ள‍ உஷ்ணம் குறையும், உதடுகளும் தானாகவே வறண்டு போகாது, அல்ல‍து காய்ந்து போகாது.

    உதடு சொரசொரப்பாக வறட்சியாக இருந்தால், தேனுடன் சர்க்கரையை சேர்த்து லேசாக தேய்த்தால் உதடு மிருதுவாகி விடும். குடை மிளகாய் வாங்கும் போது லேசாக ஆட்டிப்பார்த்து வாங்கவும். விதைகள் உள்ளே உருண்டால், அவை புதியது அல்ல.

    தயிருடன் கடலை மாவை சேர்த்து முகத்தில் தடவி வர வெயிலினால் ஏற்படும் கருமை நீங்குவதுடன் எண்ணெய் பிசுபிசுப்பும் நீங்கும். வெறும் புளித்த தயிரை வீணாக்காமல் மஞ்சள் சேர்த்து தடவினால் முகத்தில் ஏற்படும் எரிச்சல் நீங்கும். அழுக்குகளும் நீங்கும்.

    • இன்று பெண்கள் உதடுகளை அழகாக வெளிக்காட்ட அன்றாடம் லிப்ஸ்டிக் போடுவார்கள்.
    • உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு மிக முக்கிய காரணமாக லிப்ஸ்டிக் உள்ளது.

    இன்று பெண்கள் பலரும் தங்கள் உதடுகளை அழகாக வெளிக்காட்ட அன்றாடம் தவறாமல் லிப்ஸ்டிக் போடுவார்கள். லிப்ஸ்டிக்கை போடுவதால் உதடுகள் பொலிவிழந்து போவதோடு, உடலின் உள்ளுறுப்புகளும் பாதிப்படைய ஆரம்பமாகும். அத்தகைய லிப்ஸ்டிக்கை போடுவதால் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி பார்ப்போம்.

    லிப்ஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் * லிப்ஸ்டிக்கில் குரோமியம், காட்மியம் மற்றும் மக்னீசியம் அதிக அளவில் இருப்பதால் தினமும் லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தினால் உடலில் உள்ள உறுப்புகள் பாதித்து கடுமையான நோய் ஏற்பட வழிவகுக்கின்றது.

    * லிப்ஸ்டிக்கில் காட்மியம் சிறுநீரகத்தில் படிந்து அவை நாளடைவில் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும். மேலும் ஒரு நாளைக்கு பலமுறை லிப்ஸ்டிக் போட்டுவதினால் வயிற்றில் கட்டிகள் வளர ஆரம்பிக்கும்.

    * லிப்ஸ்டிக்கை அன்றாடம் பயன்படுத்தி வந்தால் உடலில் உள்ள நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதோடு, மூளையும் பாதிப்பிற்குள்ளாகும். இதற்கு முக்கிய காரணம் லிப்ஸ்டிக்குகளில் நரம்புகளை அழிக்கக்கூடிய ஈயம் அதிகமாக இருப்பதுதான்.

    * உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு மிக முக்கிய காரணமாக லிப்ஸ்டிக் உள்ளது. மேலும் இதனால் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.

    * லிப்ஸ்டிக் தயாரிப்பில் பெட்ரோகெமிக்கல்கள் பயன்படுத்தப்படுவதால் இவை நாளமில்லா சுரப்பிகளில் சீர்குலைவை ஏற்படுத்தி இனப்பெருக்கம், வளர்ச்சி, புலனாய்வு திறன் போன்றவற்றை அழிக்கும்.

    * உடலில் புற்றுநோயைத் தூண்டும் ஃபார்மால்டிஹைடு லிப்ஸ்டிக் அதிக அளவு உள்ளது. மேலும் இதனால் மூச்சுத்திணறல், இருமல், கண்கள் மற்றும் சரும எரிச்சல் போன்ற இதர பக்க விளைவுகளும் ஏற்படும்.

    * லிப்ஸ்டிக் உள்ள முக்கிய பொருளான கனிம எண்ணெய் சருமத்துளைகளை அடைக்கும் தன்மை கொண்டது, இதனை தினமும் பயன்படுத்தி வருவதினால் உதடுகளின் இயற்கை அழகு பாதிக்கும்.

    எளிதாக கிடைக்கக்கூடிய கிளிசரின் கொண்டே உதடுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். கிளிசரின் கொண்டு உதடுகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
    உதடுகளை பொலிவாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க இரசாயணம் நிறைந்த கிரீம்களை உதட்டிற்கு பயன்படுத்த வேண்டாம். எளிதாக கிடைக்கக்கூடிய கிளிசரின் கொண்டே உதடுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். கிளிசரின் கொண்டு உதடுகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

    வறண்ட உதட்டிற்கு

    உங்கள் உதடு வறண்டு போய் இருந்தால், ஒரு காட்டனில் கிளிசரின் தொட்டு தூங்க போகும் முன் உதட்டில் தடவி இரவு முழுவதும் விட்டு காலையில் கழுவி விடலாம். இதனால் உதட்டில் இருக்கும் கருமை நிறம் மாறிவிடும். உதடு ஈரப்பதத்துடன் இருக்கும்.
     
    மென்மையான உதட்டிற்கு

    பெரும்பான்மையானவர்களுக்கு சுற்றுச்சூழல் காரணமாகவும் புகைப்பழக்கம் காரணமாகவும் உதட்டின் நிறம் மாறிவிடும். தினமும் உதட்டிற்கு கிளிசரின் தடவி வருவது நல்லது. இது உதட்டை மென்மையாக்கி பிங்க் நிறத்தை கொடுக்கும்.

    ஈரப்பதத்தை தக்கவைக்க

    உதடு வறண்டு போயிருந்தால் அரிப்பு, வெடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க லிப் பாம் பயன்படுத்தலாம் அல்லது கிளிசரின் பயன்படுத்தலாம். இது உடலை ஹைட்ரேட் செய்யும்.

    உதடுகளில் வெடிப்பை தடுக்க

    உதடுகள் வறண்டு போனால் வெடிப்பு ஏற்பட்டு, இரத்த கசிவு ஏற்படும். உதடுகளின் மீது எப்போதுமே தனி அக்கறை செலுத்த வேண்டும். கிளிசரினை உதடுகளில் தடவி வர உதடுகளில் பிளவு ஏற்படாது.

    இறந்த செல்களை அகற்ற

    உதடுகளுக்கு தொடர்ச்சியாக கிளிசரின் பயன்படுத்தி வர உதடுகள் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் உதடுகளில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு பொலிவாக இருக்கும்.
    வறண்ட வெடித்த உதடுகளின் சிகிச்சைக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் கொண்டு வெடித்த உதடுகளை சிகிச்சை செய்வதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.
    குளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும். இவற்றை பராமரிக்க நாம் கடைகளில் கிடைக்கும் கிரீம்களையும், லோஷன்களையும், ஷாம்புக்களையும், லிப் பாம்களையும் வாங்க வேண்டிவரும். இவற்றில் உள்ள இரசாயனப் பொருட்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே நமது சருமத்தை பராமரிக்கலாம்.

    நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் கிடைப்பதில்லை. இதனால், நமது உடலில் உள்ள மற்ற சருமத்தைக்காட்டிலும் உதடுகளுக்கு அதிக கவனம் தேவைப்படுகின்றது. குளிர்காலத்தில் நமது உதடுகள் வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு அழகற்று காட்சியளிக்கின்றது.

    இதனை போக்குவதற்கு கடைகளில் ஏராளமான மாய்ஸ்சுரைசர்களும், லிப் பாம்களும், லிப் கிரிம்களும் கிடைக்கின்றன. வறண்ட வெடித்த உதடுகளை குணமாக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சைகள் பல உள்ளன. சிலவகை இயற்கையான மாயிஸ்ச்சரைசர்கள் உங்கள் உதடுகளை மென்மையாக்கி மீண்டும் நீரேற்றல் செய்யும்.

    வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாலாடை போன்றவை இந்த வகையை சார்ந்தவைகளாகும். இவற்றுள் தேங்காய் எண்ணெய் உங்கள் வெடித்த உதடுகளை சரிசெய்வதற்கு சிறந்ததாகும். இந்த எண்ணெய் உங்கள் உதடுகள் வறண்டு போவதை குறைத்து உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும்.

    தேங்காய் எண்ணெய் உங்கள் வறண்ட வெடித்த உதடுகளைச் சுற்றி ஒரு படலத்தை ஏற்படுத்தி குளிர்காற்றில் இருந்து பாதுகாக்கும். தேங்காய் எண்ணெய் எளிதில் கிடைக்ககூடிய விலை மலிவான பொருளாகும். அதனால், எல்லோரும் வறண்ட வெடித்த உதடுகளின் சிகிச்சைக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் கொண்டு வெடித்த உதடுகளை சிகிச்சை செய்வதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.

    தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் எப்பொழுதும் உங்கள் கைப்பையில் சிறிய தேங்காய் எண்ணெய் பாட்டில் ஒன்று எடுத்து செல்ல வேண்டும். போதுமான இடைவேளைகளில் எண்ணெயை தடவிக்கொள்ள வேண்டும். உங்கள் விரல் நுனிகளில் சிறிதளவு எடுத்துக்கொண்டு உங்கள் உதடுகளில் தடவிக்கொள்ள வேண்டும்.

    குளிர்காலங்களில் இதனை பயன்படுத்தி சிறந்த பலன்களை பெறுங்கள். தேங்காய் எண்ணெய்க்கு என்று ஒரு தனி மணமும் சுவையும் உள்ளது. இதன் மணம் பிடிக்கவில்லை என்றால் பகல் நேரங்களில் இதனை உபயோகிக்காமல் வேறு வழியில் உபயோகிக்கலாம். இரவு படுப்பதற்கு முன் இதனை உங்கள் உதடுகளில் தடவிவிடுங்கள் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். காலையில் எழுந்தவுடன் தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். பகல் நேரங்களில் மற்ற லிப் பாம்களை உபயோகிக்க மறந்துவிடாதீர்கள்.

    தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பிற எண்ணெய்களின் கலவை உங்கள் உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும். இந்த கலவையை இரவு நேரங்களிலும் அல்லது பகல் நேரங்களிலும் தொடர்ந்து உபயோகிக்கலாம். இந்த கலவை உங்கள் உதடுகளுக்கு மிகுந்த பலனை அளிக்கும். மேலும் வறண்ட குளிர்ந்த காற்றிலிருந்து உங்கள் உதடுகளை பாதுகாக்கும்.

    குளிர்காலத்தில் உதடுகள் வறண்டு மற்றும் நிறம் மாற ஆரம்பிக்கும். இதற்கு வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தீர்வு காண முடியும்.
    குளிர்காலத்தில் நம்முடைய சருமம் வறண்டு போவதற்கு காரணம் உடலிலுள்ள நீரின் அளவு குறைவது தான். இதனால் குறிப்பாக உதடுகள் வறண்டு போக ஆரம்பிக்கும். உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால் உதடுகளால் நீர்த்தரத்தைப் பற்றிக் கொள்ள முடியாது. இதனால்தான், உதடுகள் வறட்சியோடு சேர்த்து வெடிப்படையவும் செய்கின்றது. எனவே உதட்டுக்கு எண்ணெய் பசை தன்மையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    தேங்காய் எண்ணெய்யை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் ஐந்து சொட்டு அளவுக்கு ஆலிவ் எண்ணெய்யை ஊற்ற வேண்டும். பின்னர், அதை லேசாகச் சூடுபடுத்தி காட்டன் துணியில் நனைத்து அதை உதட்டில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, காட்டன் துணியால் அதிகப்படியாக இருக்கக்கூடிய எண்ணெய் பசையைத் துடைத்துக்கொள்ள வேண்டும். இதை வாரத்துக்கு இரு முறை செய்தால் உதடுகள் வெடிக்காமல் இருக்கும்.

    சிலருக்குக் குளிர்காலத்தில் உதடுகள் நிறம் மாற ஆரம்பிக்கும். அவர்களுக்கான டிப்ஸ்...



    கிரீன் டீ தற்போது பெரும்பாலானோர்களின் வீட்டிலும் பயன்படுத்துகிறார்கள். அந்த கிரீன் டீ பேக்கை எடுத்து சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், மெதுவாக அந்த டீ பேக்கால் உதட்டை தேய்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நிமிஷங்கள் வரை தேய்த்துக்கொள்ள வேண்டும். பின்னர், உலர்ந்த காட்டன் துணியால் உதடுகளைத் துடைக்கும்போது இயல்பான பிங்க் கலரில் உதடுகள் மாறிவிடும்.

    பிங்க் நிற ரோஸ் இதழ்களை ஒரு நாள் இரவு முழுவதும் தேனில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதை உதட்டின் மேல் தடவிக் கொண்டு மெதுவாக மசாஜ் போன்று செய்ய வேண்டும். அந்தக் கலவை வாயினுள் போனாலும் எந்தப் பிரச்னையும் கிடையாது. அதனால், இரண்டு அல்லது மூன்று முறை மசாஜ் செய்ய வேண்டும். முதலில் கொஞ்சம், அடுத்து கொஞ்சம் என மேலே மேலே அந்தக் கலவைகளை தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உதடுகளைக் கழுவி விட்டுப் பார்க்கும் போது உதடுகள் மிகவும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.

    கடைகளில் பாதாம் எண்ணெய் கிடைக்கும். அதில் ஸ்வீட் பாதாம் எண்ணெய்யை வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெய்யை ஒரு துளி அல்லது இரண்டு துளி இட்டு இரவு தூங்குவதற்கு முன்னர் உதடுகளில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். காலையில் பார்க்கும் பொழுது உதடுகள் ரொம்ப அழகாக இருக்கும்.
    கிளிசரினை பயன்படுத்துவதன் மூலம் உதடுகளில் படிந்திருக்கும் இறந்த செல்களும் நீங்கிவிடும். புதிய செல்களின் வளர்ச்சிக்கும் கிளிசரின் அவசியமானது.
    குளிர்காலத்தில் உதடு வெடிப்பு, உலர்தன்மை போன்ற பிரச்சினைகளுக்கு கிளிசரின் நிவாரணம் தரும். உதடு உலர்வடைவதை தடுத்து ஈரப்பதத்தை தக்க வைக்க இது உதவும்.

    இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு கிளிசரினை பஞ்சில் முக்கி உதடுகளில் தடவி வரலாம். தொடர்ந்து அவ்வாறு செய்து வருவதன் மூலம் உதடுகள் உலர்ந்து போவதை தவிர்க்கலாம்.

    உதடுகள் மிருதுவாகவும், இளஞ்சிவப்பு நிறத்திலும் காட்சியளிப்பதற்கும் கிளிசரினை பயன்படுத்தலாம்.

    சுற்றுச்சூழல் மாசுபாடு, முறையான பராமரிப்பு இன்மை போன்ற காரணங்களால் சிலருடைய உதடுகள் கருமை நிறத்திற்கு மாறத்தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள் தினமும் கிளிசரின் பயன்படுத்தலாம். தொடர்ந்து கிளிசரின் தடவி வருவதன் மூலம் உதடுகள் மென்மையாகும். அதேவேளையில் தரமான கிளிசரினை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

    வறண்ட உதடுகளால் சிலருக்கு தொந்தரவுகள் ஏற்படும். உதடு வெடிப்பு, அரிப்பு, எரிச்சல் போன்ற பாதிப்புகள் நேரும். அதனால் உதடுகளின் உள் அடுக்குகளும் பாதிப்புக்குள்ளாகும். அதற்கு தீர்வு காண்பதற்கு டாக்டரிடம் ஆலோசனை பெற்று பிரத்யேக கிரீம்களை பயன்படுத்தலாம்.

    நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்களுக்கு உதடுகள் உலர்ந்து காணப்படும். உதடுகள் உணர்திறன் மிக்கவை. அவைகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உதடு வெடிப்பு, உதட்டு வலி பிரச்சினைகளை தவிர்க்க கிளிசரினை பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்வது நல்லது.

    கிளிசரினை பயன்படுத்துவதன் மூலம் உதடுகளில் படிந்திருக்கும் இறந்த செல்களும் நீங்கிவிடும். புதிய செல்களின் வளர்ச்சிக்கும் கிளிசரின் அவசியமானது.
    பெண்களின் முகத்திற்கு அழகு சேர்க்கும் உதட்டை மிக கவனமாக பாதுகாத்தால் வெடிப்புகள் ஏற்படாமலும், மென்மையாகவும், அழகாகவும் காட்சி தரலாம்.
    பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதனை மிக கவனமாக பாதுகாத்தால் வெடிப்புகள் ஏற்படாமலும், மென்மையாகவும், அழகாகவும் காட்சி தரலாம்.

    * உதடுகள் மென்மையாக இருக்க, வெண்ணெயை லேசாகப் பூசி வரலாம்.

    * சந்தனத்தை பன்னீரில் குழைத்து உதடுகளில் பூசி, ஊற வைத்து, கழுவி வந்தால் உதடுகள் மென்மையாகும்.

    * ரோஜா இதழ்களை பால் விட்டு அரைத்து உதடுகளில் பூசி வந்தால் உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் மறையும்.

    * பாலாடையை உதடுகளில் தினமும் பூசி வந்தால் வெடிப்பு மறைந்து அழகாக மாறும்.

    * வெண்ணெயுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் காய்ந்து போகாமல் இருக்கும்.

    * பீட்ரூட்டை துண்டுகளாக்கி அதை உதடுகளின் மேல் லேசாக தேய்த்து வந்தால் உதடுகள் ரோஜா கலரில் மாற்றம் ஏற்படும்.

    * பன்னீரை பஞ்சினால் எடுத்து உதடுகளில் தினமும் பூசி வந்தால் உதடுகள் பொலிவாக மாறி விடும்.

    * கொத்தமல்லித்தழையின் சாறை உதடுகளில் இரவு நேரத்தில் பூசி வந்தால் உதடுகள் சிவப்பாக மாறி அழகு தரும்.
    உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வதற்கு காண்பிக்கும் அக்கறையை பெரும்பாலோர் உதடுகளை பராமரிப்பதில் காண்பிப்பதில்லை. உதட்டை பராமரிக்கும் வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.
    உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வதற்கு காண்பிக்கும் அக்கறையை பெரும்பாலோர் உதடுகளை பராமரிப்பதில் காண்பிப்பதில்லை. உலர்ந்த, வெடிப்புகள் கொண்ட மற்றும் சீரற்ற உதடுகள் முக அழகுக்கு பங்கம் விளைவித்துவிடும். வலியையும் ஏற்படுத்தும். மென்மையாக, கவர்ச்சிகரமாக உதட்டு அழகை பராமரிக்கும் வழிமுறைகள்!

    பழைய, இறந்த செல்களால் உதடுகள் கடினமானவோ, உலர்வாகவோ தோன்றும். உதடுகள் ஒருபோதும் உலராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,

    உதடுகள் மிருதுவாகவும், பொலிவாகவும் காட்சியளிப்பதற்கு மென்மையான பிரஷை பயன்படுத்தலாம். தூங்க செல்வதற்கு முன்பாக மென்மையான பிரஷ் மூலம் உதடுகளை இதமாக மசாஜ் செய்வது நல்லது.

    சிறிதளவு சர்க்கரையுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து ஒன்றாக கலந்து உதடுகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து அவ்வாறு செய்துவந்தால் உதடுகள் மென்மையாக மிளிரும்.

    சமச்சீரான சத்துணவுகளை சாப்பிட்டால் உதடுகள் பார்க்க அழகாக இருக்கும்.

    உதடுகளில் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு எண்ணெய் வகைகளை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றில் அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் கலந்திருக்கின்றன. அவை சருமத்தால் உறிஞ்சப்பட்டு பொலிவை தக்கவைத்துக்கொள்ள துணைபுரியும்.

    சருமம் உலர்வடையும்போது உதடுகளும் பாதிப்புக்குள்ளாகும். சிலவகை லிப்ஸ்டிக்குகள் வாசனை திரவியங்கள் சருமத்துக்கும், உதடுகளுக்கும் ஒத்துக்கொள்ளாது. உதடுக்கான பிரத்யேக கிரீம்களை பயன்படுத்தலாம். அவை புற ஊதாக்கதிர்களிடம் இருந்து உதடுகளை பாதுகாக்கும். 
    ×