என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது தற்போது அதிகரித்து உள்ளது. உணவுப் பொருட்களால் ஏற்படும் அலர்ஜி, 90 சதவீதம் சுவை, நிறம், மணத்திற்காக சேர்க்கப்படும் பொருட்களாலேயே ஏற்படுகிறது.
அலர்ஜி என்ற வார்த்தையை நான் சொன்னால், உடனடியாக, தோலில் தடிப்புத் தடிப்பாக வருவது தான், பொதுவாக நம் நினைவிற்கு வரும். வெறும், 5 -10 சதவீதம் மட்டுமே தோலில் தடிப்பாக தோன்றும். அடிக்கடி சளி பிடிப்பது, மூக்கடைப்பு, தும்மல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா, கண்கள் சிவப்பது, மாத்திரைகள், உணவால் ஏற்படுவது என்று அலர்ஜி பாதிப்புகளை நிறையப் பார்க்கிறோம். குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது தற்போது அதிகரித்து உள்ளது.
தாய்ப்பாலில் இருந்து வேறு உணவிற்கு மாற துவங்கும், ஆறு மாதங்களில் இருந்து, உணவு அலர்ஜி வருகிறது. உணவுப் பொருட்களால் ஏற்படும் அலர்ஜி, 90 சதவீதம் சுவை, நிறம், மணத்திற்காக சேர்க்கப்படும் பொருட்களாலேயே ஏற்படுகிறது.
எப்படி கண்டுபிடிப்பது?
ஒரு குழந்தைக்கு, பால் அலர்ஜி என்றால், பால் குடித்த, 24 மணி நேரத்திற்குள் முகம், கை, கால் வீங்கி விடும். எத்தனை முறை பால் குடித்தாலும், குடித்த, 24 மணி நேரத்திற்குள் அலர்ஜிக்கான அறிகுறிகள் வர வேண்டும்.
அப்போது தான், அந்த குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுகிறது என்று சொல்ல முடியும். பால் குடித்தவுடன், இன்று அலர்ஜிக்கான அறிகுறிகள் இருந்தது. ஆனால், அடுத்த நாள் வரவில்லை என்றால், அது பாலால் ஏற்பட்ட பிரச்னை இல்லை. வேறு காரணங்கள் இருக்கலாம். குறிப்பிட்ட உணவால் அலர்ஜி என்றால், எத்தனை முறை அந்தப் பொருளை சாப்பிட்டாலும், ஒவ்வொரு முறையும் அலர்ஜி வர வேண்டும்.
பால், முட்டை, நட்ஸ் ஆகியவற்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது பொதுவான விஷயம். கோதுமை சாப்பிடுவதால், மிக அபூர்வமாக சில குழந்தைகளுக்கு அலர்ஜி வருகிறது. உணவால் ஏற்படும் அலர்ஜி, பல நேரங்களில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
ஒரு சில ஆண்டுகளில் பால், முட்டை அலர்ஜி ஏற்படுத்துவது மாறி விடும். ஆனால், ‘நட்ஸ்’ சாப்பிடுவதை வாழ்க்கை முழுதும் தவிர்க்க வேண்டியிருக்கும்.
குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு பிரச்னை வருகிறது என்ற சந்தேகம் இருந்தால், அதை உறுதி செய்து கொள்ள, நவீன பரிசோதனை வசதிகள் உள்ளன. 20 நிமிடங்களிலேயே, எந்த உணவால் அலர்ஜி என்பதை கண்டுபிடித்து விட முடியும். அலர்ஜி ஏற்படுத்தும் உணவை தெரிந்து, தவிர்ப்பது பாதுகாப்பான வழி. உலகம் முழுவதிலும் இதைத் தான் பின்பற்றகின்றனர்.
இது தவிர, துாசு மாசினால் ஏற்படும் அலர்ஜியும், குழந்தைகள் மத்தியில் பொதுவானதாக உள்ளது. மூக்கடைப்பு, தும்மல், மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகள் அடிக்கடி வருகிறது, அலர்ஜியால் ஏற்பட்ட பாதிப்பு என்று தெரியாமலேயே சிகிச்சை எடுப்பர். இது ஏதோ வெளிப்புறத்தில் காற்று மாசு அதிகம்; அதனால், வருகிறது என்று நினைக்கிறோம். ஆனால், வீட்டிற்குள்ளேயே இருக்கும் பிரச்னை இது.
வீட்டில் பயன்படுத்தும் பொருட்களில், வளர்ப்பு பிராணிகளின் உரோமத்தினால், கரப்பான் பூச்சி யால் வரும் அலர்ஜி. இப்படி இருந்தால், மூக்கின் உட்பகுதியில் உள்ள மெல்லிய சவ்வில், எப்போதும், ரணம் இருந்து கொண்டே இருக்கும். ‘ஏசி’ அறைக்கு வந்தவுடன் அதிகமாக, தும்மல், மூக்கடைப்பு வரும்.
வெளியில் செல்லும் நேரங்களில், துணியால் முகத்தில் கட்டிக் கொள்வது, வெளியில் இருக்கும் மாசிலிருந்து பாதுகாக்குமே தவிர, வீட்டில் நிரந்தரமாக உள்ள பிரச்னையில் இருந்து காக்க உதவாது. இதை பரிசோதித்துஅறியவும் வசதிகள் உள்ளன.
தாய்ப்பாலில் இருந்து வேறு உணவிற்கு மாற துவங்கும், ஆறு மாதங்களில் இருந்து, உணவு அலர்ஜி வருகிறது. உணவுப் பொருட்களால் ஏற்படும் அலர்ஜி, 90 சதவீதம் சுவை, நிறம், மணத்திற்காக சேர்க்கப்படும் பொருட்களாலேயே ஏற்படுகிறது.
எப்படி கண்டுபிடிப்பது?
ஒரு குழந்தைக்கு, பால் அலர்ஜி என்றால், பால் குடித்த, 24 மணி நேரத்திற்குள் முகம், கை, கால் வீங்கி விடும். எத்தனை முறை பால் குடித்தாலும், குடித்த, 24 மணி நேரத்திற்குள் அலர்ஜிக்கான அறிகுறிகள் வர வேண்டும்.
அப்போது தான், அந்த குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுகிறது என்று சொல்ல முடியும். பால் குடித்தவுடன், இன்று அலர்ஜிக்கான அறிகுறிகள் இருந்தது. ஆனால், அடுத்த நாள் வரவில்லை என்றால், அது பாலால் ஏற்பட்ட பிரச்னை இல்லை. வேறு காரணங்கள் இருக்கலாம். குறிப்பிட்ட உணவால் அலர்ஜி என்றால், எத்தனை முறை அந்தப் பொருளை சாப்பிட்டாலும், ஒவ்வொரு முறையும் அலர்ஜி வர வேண்டும்.
பால், முட்டை, நட்ஸ் ஆகியவற்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது பொதுவான விஷயம். கோதுமை சாப்பிடுவதால், மிக அபூர்வமாக சில குழந்தைகளுக்கு அலர்ஜி வருகிறது. உணவால் ஏற்படும் அலர்ஜி, பல நேரங்களில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
ஒரு சில ஆண்டுகளில் பால், முட்டை அலர்ஜி ஏற்படுத்துவது மாறி விடும். ஆனால், ‘நட்ஸ்’ சாப்பிடுவதை வாழ்க்கை முழுதும் தவிர்க்க வேண்டியிருக்கும்.
குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு பிரச்னை வருகிறது என்ற சந்தேகம் இருந்தால், அதை உறுதி செய்து கொள்ள, நவீன பரிசோதனை வசதிகள் உள்ளன. 20 நிமிடங்களிலேயே, எந்த உணவால் அலர்ஜி என்பதை கண்டுபிடித்து விட முடியும். அலர்ஜி ஏற்படுத்தும் உணவை தெரிந்து, தவிர்ப்பது பாதுகாப்பான வழி. உலகம் முழுவதிலும் இதைத் தான் பின்பற்றகின்றனர்.
இது தவிர, துாசு மாசினால் ஏற்படும் அலர்ஜியும், குழந்தைகள் மத்தியில் பொதுவானதாக உள்ளது. மூக்கடைப்பு, தும்மல், மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகள் அடிக்கடி வருகிறது, அலர்ஜியால் ஏற்பட்ட பாதிப்பு என்று தெரியாமலேயே சிகிச்சை எடுப்பர். இது ஏதோ வெளிப்புறத்தில் காற்று மாசு அதிகம்; அதனால், வருகிறது என்று நினைக்கிறோம். ஆனால், வீட்டிற்குள்ளேயே இருக்கும் பிரச்னை இது.
வீட்டில் பயன்படுத்தும் பொருட்களில், வளர்ப்பு பிராணிகளின் உரோமத்தினால், கரப்பான் பூச்சி யால் வரும் அலர்ஜி. இப்படி இருந்தால், மூக்கின் உட்பகுதியில் உள்ள மெல்லிய சவ்வில், எப்போதும், ரணம் இருந்து கொண்டே இருக்கும். ‘ஏசி’ அறைக்கு வந்தவுடன் அதிகமாக, தும்மல், மூக்கடைப்பு வரும்.
வெளியில் செல்லும் நேரங்களில், துணியால் முகத்தில் கட்டிக் கொள்வது, வெளியில் இருக்கும் மாசிலிருந்து பாதுகாக்குமே தவிர, வீட்டில் நிரந்தரமாக உள்ள பிரச்னையில் இருந்து காக்க உதவாது. இதை பரிசோதித்துஅறியவும் வசதிகள் உள்ளன.
கர்ப்பப்பை இல்லாதவர்கள் அல்லது குழந்தையைச் சுமக்கும் உடற்தகுதி இல்லாதவர்கள் தங்களது கருவை இன்னொருவரின் கர்ப்பப்பைக்குள் வளர்த்தெடுக்கும் முறைதான் வாடகைத்தாய் முறை.
கர்ப்பப்பை இல்லாதவர்கள் அல்லது குழந்தையைச் சுமக்கும் உடற்தகுதி இல்லாதவர்கள் தங்களது கருவை இன்னொருவரின் கர்ப்பப்பைக்குள் வளர்த்தெடுக்கும் முறைதான் வாடகைத்தாய் முறை. வாடகைத்தாய் முறையின் மருத்துவத் தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ளலாம்.
‘‘வாடகைத்தாய் முறை மூன்று வகையான பெண்களுக்குத் தேவைப்படுகிறது. உடல்நலப் பிரச்சனை காரணமாக கர்ப்பப்பை அகற்றப்பட்டோ அல்லது வேறு பிற காரணங்களாலோ கர்ப்பப்பை இல்லாத பெண்கள் முதல் வகை. இவர்களுக்கு கர்ப்பப்பை மட்டும்தான் தேவைப்படும். அவர்கள் கருமுட்டையைக் கொண்டிருப்பார்கள். கருமுட்டையும் இல்லாத பெண்கள் இரண்டாவது வகை.
இச்சூழலில் கருமுட்டையை தானமாகப் பெற்றுதான் கருவை உருவாக்க முடியும். கர்ப்பப்பை, கருமுட்டை இருந்தும் குழந்தை பெறுவதற்கான உடல் வலு இல்லாத பெண்கள் மூன்றாவது வகை. 40 வயதைக் கடந்த பெண்களில் பெரும்பாலானோர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருப்பர். அவர்கள் இந்த வகைக்குள் அடங்குவர். மேற்சொன்ன காரணங்களால் குழந்தைப் பேறு அடைய முடியாத பெண்களுக்கு வாடகைத்தாய் முறை ஒரு வரப்பிரசாதம்.

அத்தம்பதியில் ஆணின் விந்தணு குழந்தைப் பேறுக்குத் தகுதியுடையதாக இருந்தும் பெண்ணிடம் கருமுட்டை இல்லை என்று வைத்துக் கொள்வோம். கருமுட்டையை தானமாகப் பெற்று கருவை உருவாக்கும்போது அந்தக் கருவுக்கும் ஆணுக்கும் மட்டுமே மரபியல் ரீதியிலான தொடர்பு இருக்கும். வாடகைத்தாய் முறை காலத்துக்குத் தேவையான தொழில்நுட்பம் என்றாலும் இதனை உதவி மனப்பான்மையோடுதான் மேற்கொள்ள வேண்டும்.
தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் மசோதா பல விதங்களிலும் வரவேற்கத்தக்கதாய் இருக்கிறது. வாடகைத்தாய்க்கும் கருவுக்கும் மரபியல் ரீதியிலாக எந்தத் தொடர்பும் இல்லையே தவிர பிரசவ வலி தொடங்கி தாய்ப்பால் சுரப்பு வரை தாய்மைக்கான எல்லாமும் அவர்களுக்கும் உள்ளது. அவர்கள் சுமக்கும் குழந்தை மீது அவர்களுக்கு பற்றுதல் இருக்கலாம் என்கிற ஐயப்பாடும் உள்ளது.
இதனால்தான் இதுவரையிலும் குழந்தை வேண்டும் தம்பதிக்கும் வாடகைத்தாய்மார்களுக்கும் நேரடித் தொடர்பு இல்லாத படியிலான அமைப்பு இருந்து வருகிறது. தங்கள் கருவைச் சுமந்த வாடகைத்தாய் யார் எனத் தெரிந்தாலோ அல்லது தான் சுமந்த கரு யாரிடம் வளர்கிறது என்று தெரிந்தாலோ எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்னைகள் வர வாய்ப்பிருப்பதாகக் கருதுகின்றனர். எனவே குழந்தை பிறந்தவுடன் வாடகைத்தாயிடமிருந்து, கருவுக்கு சொந்தமான தம்பதிக்கு குழந்தையைக் கொடுத்து விடுவர்.
கருவைச் சுமக்காத தாய்க்கு தாய்மைக்கான மாற்றங்கள் எதுவும் இருக்காது. ஆகவே அவருக்கு இயற்கையாகவே தாய்ப்பால் சுரப்பு இருக்காது. மருத்துவ ரீதியில் சுரப்பை ஏற்படுத்தலாம் அல்லது தாய்ப்பால் வங்கிகளிலிருந்து தாய்ப்பால் பெற்றுக்கொடுக்கலாம். குறைந்தது 6 மாதங்களுக்காகவாவது தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையானது.
‘‘வாடகைத்தாய் முறை மூன்று வகையான பெண்களுக்குத் தேவைப்படுகிறது. உடல்நலப் பிரச்சனை காரணமாக கர்ப்பப்பை அகற்றப்பட்டோ அல்லது வேறு பிற காரணங்களாலோ கர்ப்பப்பை இல்லாத பெண்கள் முதல் வகை. இவர்களுக்கு கர்ப்பப்பை மட்டும்தான் தேவைப்படும். அவர்கள் கருமுட்டையைக் கொண்டிருப்பார்கள். கருமுட்டையும் இல்லாத பெண்கள் இரண்டாவது வகை.
இச்சூழலில் கருமுட்டையை தானமாகப் பெற்றுதான் கருவை உருவாக்க முடியும். கர்ப்பப்பை, கருமுட்டை இருந்தும் குழந்தை பெறுவதற்கான உடல் வலு இல்லாத பெண்கள் மூன்றாவது வகை. 40 வயதைக் கடந்த பெண்களில் பெரும்பாலானோர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருப்பர். அவர்கள் இந்த வகைக்குள் அடங்குவர். மேற்சொன்ன காரணங்களால் குழந்தைப் பேறு அடைய முடியாத பெண்களுக்கு வாடகைத்தாய் முறை ஒரு வரப்பிரசாதம்.
பெண்ணின் கருமுட்டையையும், ஆணின் உயிரணுக்களையும் கொண்டு சோதனைக்குழாய் மூலம் கருவை உருவாக்கி அதை வாடகைத்தாயின் கர்ப்பப்பையில் பொருத்தி விடுவதுதான் இத்தொழில்நுட்பம். பெண்ணின் கருமுட்டைகளையும், ஆணின் விந்தணுக்களையும் தானமாகப் பெற்றும் கருவை உருவாக்கலாம். இது போன்று கருமுட்டை, விந்தணுக்களை தானமாகப் பெற்று உருவாக்கப்படும் கருவுக்கும் குழந்தை வேண்டும் தம்பதிக்கும் மரபியல் ரீதியில் எந்தத் தொடர்பும் இருக்காது.

அத்தம்பதியில் ஆணின் விந்தணு குழந்தைப் பேறுக்குத் தகுதியுடையதாக இருந்தும் பெண்ணிடம் கருமுட்டை இல்லை என்று வைத்துக் கொள்வோம். கருமுட்டையை தானமாகப் பெற்று கருவை உருவாக்கும்போது அந்தக் கருவுக்கும் ஆணுக்கும் மட்டுமே மரபியல் ரீதியிலான தொடர்பு இருக்கும். வாடகைத்தாய் முறை காலத்துக்குத் தேவையான தொழில்நுட்பம் என்றாலும் இதனை உதவி மனப்பான்மையோடுதான் மேற்கொள்ள வேண்டும்.
தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் மசோதா பல விதங்களிலும் வரவேற்கத்தக்கதாய் இருக்கிறது. வாடகைத்தாய்க்கும் கருவுக்கும் மரபியல் ரீதியிலாக எந்தத் தொடர்பும் இல்லையே தவிர பிரசவ வலி தொடங்கி தாய்ப்பால் சுரப்பு வரை தாய்மைக்கான எல்லாமும் அவர்களுக்கும் உள்ளது. அவர்கள் சுமக்கும் குழந்தை மீது அவர்களுக்கு பற்றுதல் இருக்கலாம் என்கிற ஐயப்பாடும் உள்ளது.
இதனால்தான் இதுவரையிலும் குழந்தை வேண்டும் தம்பதிக்கும் வாடகைத்தாய்மார்களுக்கும் நேரடித் தொடர்பு இல்லாத படியிலான அமைப்பு இருந்து வருகிறது. தங்கள் கருவைச் சுமந்த வாடகைத்தாய் யார் எனத் தெரிந்தாலோ அல்லது தான் சுமந்த கரு யாரிடம் வளர்கிறது என்று தெரிந்தாலோ எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்னைகள் வர வாய்ப்பிருப்பதாகக் கருதுகின்றனர். எனவே குழந்தை பிறந்தவுடன் வாடகைத்தாயிடமிருந்து, கருவுக்கு சொந்தமான தம்பதிக்கு குழந்தையைக் கொடுத்து விடுவர்.
கருவைச் சுமக்காத தாய்க்கு தாய்மைக்கான மாற்றங்கள் எதுவும் இருக்காது. ஆகவே அவருக்கு இயற்கையாகவே தாய்ப்பால் சுரப்பு இருக்காது. மருத்துவ ரீதியில் சுரப்பை ஏற்படுத்தலாம் அல்லது தாய்ப்பால் வங்கிகளிலிருந்து தாய்ப்பால் பெற்றுக்கொடுக்கலாம். குறைந்தது 6 மாதங்களுக்காகவாவது தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையானது.
சோளத்தில் மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து அதிகம் உள்ளது. நார்ச் சத்தும் நிறைந்து உள்ளது. இன்று சோள மாவில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சோளம் - 500 கிராம்,
உளுந்து - 100 கிராம்,
வெந்தயம் - 2 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
சோளம், உளுந்து, வெந்தயம் இவற்றை ஊறவைத்து, தனியாக தோசைமாவு பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்கவைத்து தோசையாக ஊற்றி எடுக்கவும்.
சோளம் - 500 கிராம்,
உளுந்து - 100 கிராம்,
வெந்தயம் - 2 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.

சோளம், உளுந்து, வெந்தயம் இவற்றை ஊறவைத்து, தனியாக தோசைமாவு பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்கவைத்து தோசையாக ஊற்றி எடுக்கவும்.
சூப்பரான சத்தான சோள தோசை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கூந்தல் வளர்ச்சிக்கும் சாப்பிடும் உணவிற்கும் தொடர்பு இருக்கிறது. வலுவான, நீளமான கூந்தலை பெறுவதற்கு ஒருசிலவகை உணவு வகைகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கூந்தல் வளர்ச்சிக்கும் சாப்பிடும் உணவிற்கும் தொடர்பு இருக்கிறது. வலுவான, நீளமான கூந்தலை பெறுவதற்கு ஒருசிலவகை உணவு வகைகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கூந்தல் ஆரோக்கியத்திற்கு புரதம் அவசியமானது. முட்டையில் புரதம் அதிகம் நிறைந்திருக்கிறது. அது கூந்தல் அடர்த்தியாக வளர்வதற்கு தூண்டுகோலாகவும் விளங்குகிறது.
ரோம கால்களின் வளர்ச்சிக்கு இரும்பு சத்து அவசியமானதாக இருக்கிறது. உடலில் இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால் முடி உதிர்வு தவிர்க்கமுடியாததாகிவிடும். அதை தவிர்க்க இரும்பு சத்து அதிகம் கொண்ட கீரை வகைகள், பச்சை இலை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தினமும் ஒரு எலுமிச்சை பழத்தில் உள்ள சாறு பருகுவதும் நல்லது. அதில் இருக்கும் வைட்டமின் சி, ஜொலாஜன் உற்பத்திக்கு அவசியமானது. அது தலைமுடியை வலுவாக்க உதவும். கூந்தல் வளர்ச்சியையும் மேம்படும்.
ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் முடி வளரவும், கூந்தலை வலுப்படுத்தவும் உதவும். பாதாம் மற்றும் வால்நட் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கிறது. ஆளி விதைகளை மதிய உணவுடன் சேர்த்து கொள்வதும் முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும்.
முழுதானிய வகைகளில் இரும்பு, துத்தநாகம், வைட்டமின் பி போன்றவை நிறைந்திருக்கின்றன. மேலும் அதில் இருக்கும் பயோட்டினும் முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தினமும் கேரட் ஜூஸ் பருகுவதும் கூந்தல் வளர்ச்சிக்கு வித்திடும். அதில் இருக்கும் வைட்டமின் ஏ ரோமக்கால்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
அவகோடாவும் வைட்டமின் ஈ நிரம்பப்பெற்றது. காலை உணவுடன் சாலட்டாக அதனை சாப்பிடலாம்.
கூந்தல் ஆரோக்கியத்திற்கு புரதம் அவசியமானது. முட்டையில் புரதம் அதிகம் நிறைந்திருக்கிறது. அது கூந்தல் அடர்த்தியாக வளர்வதற்கு தூண்டுகோலாகவும் விளங்குகிறது.
ரோம கால்களின் வளர்ச்சிக்கு இரும்பு சத்து அவசியமானதாக இருக்கிறது. உடலில் இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால் முடி உதிர்வு தவிர்க்கமுடியாததாகிவிடும். அதை தவிர்க்க இரும்பு சத்து அதிகம் கொண்ட கீரை வகைகள், பச்சை இலை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தினமும் ஒரு எலுமிச்சை பழத்தில் உள்ள சாறு பருகுவதும் நல்லது. அதில் இருக்கும் வைட்டமின் சி, ஜொலாஜன் உற்பத்திக்கு அவசியமானது. அது தலைமுடியை வலுவாக்க உதவும். கூந்தல் வளர்ச்சியையும் மேம்படும்.
ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் முடி வளரவும், கூந்தலை வலுப்படுத்தவும் உதவும். பாதாம் மற்றும் வால்நட் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கிறது. ஆளி விதைகளை மதிய உணவுடன் சேர்த்து கொள்வதும் முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும்.
முழுதானிய வகைகளில் இரும்பு, துத்தநாகம், வைட்டமின் பி போன்றவை நிறைந்திருக்கின்றன. மேலும் அதில் இருக்கும் பயோட்டினும் முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தினமும் கேரட் ஜூஸ் பருகுவதும் கூந்தல் வளர்ச்சிக்கு வித்திடும். அதில் இருக்கும் வைட்டமின் ஏ ரோமக்கால்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
அவகோடாவும் வைட்டமின் ஈ நிரம்பப்பெற்றது. காலை உணவுடன் சாலட்டாக அதனை சாப்பிடலாம்.
தேனின் காலவரையின்றி பயன்படுத்தும் தன்மை மற்றும் அதன் மருத்துவ குணங்கள் ஆகிய அனைத்துமே நம் முன்னோர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டுள்ளது.
மலர்களின் மகரந்தத்தில் இனிமையான தேன் இருக்கிறது. தேனீ, தேனை தன் வயிற்றில் உள்ள பையில் நிரப்பி பின்னர் தேன் கூட்டில் சேமித்து வைக்கிறது.
தேனீ தன் இறக்கைகளால் விசிறி தன் வயிற்றில் இருந்து சுரக்கும் அமிலத்துடன் கலந்து தேனை நீண்ட காலம் கெடாத தன்மையுடையதாக மாற்றி சேகரிக்கிறது. நவீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பூர்வ எகிப்திய கல்லறைகளை அகற்றிய போது, தேன் பானைகள் காணப்பட்டுள்ளன.
அதில் இருந்த தேன் நீண்ட காலமாக பாதுகாக்கபட்டவை என்றும், அது எந்த தன்மையும் மாறாமல் இருப்பதையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அதன் அமிலத்தன்மை, தண்ணீர் இல்லாமை மற்றும் தேனில் உள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு தன்மை போன்றவற்றின் சிறந்த கலவையே தேனை பல நூறு வருடங்களுக்கு கெடாமலும், மருத்துவத் தன்மை நிறைந்ததாகவும் வைத்திருக்கிறது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இத்தகைய சிறப்புத்தன்மை கொண்ட தேனை காலவரையின்றி நம்மால் பயன்படுத்த முடியும்.
சுத்தமான தேன் எளிதில் செரிக்க கூடியது. அதிக சத்து நிறைந்தது. தேனின் ரசாயனக் கலவை, அதன் சுவை, காலவரையின்றி பயன்படுத்தும் தன்மை மற்றும் அதன் மருத்துவ குணங்கள் ஆகிய அனைத்துமே நம் முன்னோர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தான் இயற்கை மற்றும் சித்த மருத்துவத்தில் தேன் மிக முதன்மையான இடத்தை பெற்றிருக்கிறது.
தேன் இயற்கையாகவே அமிலத்தன்மை உடையது. தேன் அதன் இயற்கை வடிவத்தில் மிகவும் குறைந்த ஈரப்பதம் உடையது. அதில் மிக சில பாக்டீரியாக்கள் அல்லது நுண்ணுயிர்கள் தோன்றும், அவையும் எளிதில் இறந்துவிடும்.
தேன் பல நூற்றாண்டுகளாக மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் இறுக்கமான நிலையில் இருப்பதால், எந்தவிதமான நுண்ணுயிர் வளர்ச்சியையும் நிராகரிக்கிறது.
காயம் அல்லது தீக்காயத்தை குணமாக்க தேன் பயன்படுத்தப்பட்டது. பண்டைய காலங்களில் மூலிகை மருத்துவத்தில் தேனைதான் அதிகம் பயன்படுத்தினர். கொடுக்கப்படும் மருந்தை உடலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதில் தேனின் பங்கு அதிகம். இதனால் தான் தேனுடன் மற்ற மருந்தை சாப்பிட கொடுக்கிறார்கள் .
இத்தகைய அழியாத் தன்மையுடைய அமிர்தமான தேனை நாமும் பல நூறு ஆண்டுகள் பாதுகாக்க வேண்டுமானால், தேன் நிறைந்த ஜாடியை இறுக்கமாக மூடி அலமாரியில் வைத்தாலே போதும். இயற்கையையும் அதை சார்ந்த உயிரினங்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையை தேனும், தேனீக்களும் நமக்கு வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன.
தேனீ தன் இறக்கைகளால் விசிறி தன் வயிற்றில் இருந்து சுரக்கும் அமிலத்துடன் கலந்து தேனை நீண்ட காலம் கெடாத தன்மையுடையதாக மாற்றி சேகரிக்கிறது. நவீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பூர்வ எகிப்திய கல்லறைகளை அகற்றிய போது, தேன் பானைகள் காணப்பட்டுள்ளன.
அதில் இருந்த தேன் நீண்ட காலமாக பாதுகாக்கபட்டவை என்றும், அது எந்த தன்மையும் மாறாமல் இருப்பதையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அதன் அமிலத்தன்மை, தண்ணீர் இல்லாமை மற்றும் தேனில் உள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு தன்மை போன்றவற்றின் சிறந்த கலவையே தேனை பல நூறு வருடங்களுக்கு கெடாமலும், மருத்துவத் தன்மை நிறைந்ததாகவும் வைத்திருக்கிறது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இத்தகைய சிறப்புத்தன்மை கொண்ட தேனை காலவரையின்றி நம்மால் பயன்படுத்த முடியும்.
சுத்தமான தேன் எளிதில் செரிக்க கூடியது. அதிக சத்து நிறைந்தது. தேனின் ரசாயனக் கலவை, அதன் சுவை, காலவரையின்றி பயன்படுத்தும் தன்மை மற்றும் அதன் மருத்துவ குணங்கள் ஆகிய அனைத்துமே நம் முன்னோர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தான் இயற்கை மற்றும் சித்த மருத்துவத்தில் தேன் மிக முதன்மையான இடத்தை பெற்றிருக்கிறது.
தேன் இயற்கையாகவே அமிலத்தன்மை உடையது. தேன் அதன் இயற்கை வடிவத்தில் மிகவும் குறைந்த ஈரப்பதம் உடையது. அதில் மிக சில பாக்டீரியாக்கள் அல்லது நுண்ணுயிர்கள் தோன்றும், அவையும் எளிதில் இறந்துவிடும்.
தேன் பல நூற்றாண்டுகளாக மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் இறுக்கமான நிலையில் இருப்பதால், எந்தவிதமான நுண்ணுயிர் வளர்ச்சியையும் நிராகரிக்கிறது.
காயம் அல்லது தீக்காயத்தை குணமாக்க தேன் பயன்படுத்தப்பட்டது. பண்டைய காலங்களில் மூலிகை மருத்துவத்தில் தேனைதான் அதிகம் பயன்படுத்தினர். கொடுக்கப்படும் மருந்தை உடலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதில் தேனின் பங்கு அதிகம். இதனால் தான் தேனுடன் மற்ற மருந்தை சாப்பிட கொடுக்கிறார்கள் .
இத்தகைய அழியாத் தன்மையுடைய அமிர்தமான தேனை நாமும் பல நூறு ஆண்டுகள் பாதுகாக்க வேண்டுமானால், தேன் நிறைந்த ஜாடியை இறுக்கமாக மூடி அலமாரியில் வைத்தாலே போதும். இயற்கையையும் அதை சார்ந்த உயிரினங்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையை தேனும், தேனீக்களும் நமக்கு வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன.
மின்சாரத்தை மிச்சம் பிடித்து என்ன கோட்டையா கட்டப் போகிறோம் என மெத்தனமாக கேட்கிறோம். ஆனால் மின் ஆற்றலை சேமிப்பது நமக்கு மட்டுமல்ல, நமது நாட்டுக்கே நல்லது.
தேவையே இல்லாத நேரத்திலும் வீட்டில் மின் விசிறி சுற்றும், மின் விளக்கு எரியும். இதை நாம் கண்டுகொள்வதே இல்லை. மின்சாரத்தை மிச்சம் பிடித்து என்ன கோட்டையா கட்டப் போகிறோம் என மெத்தனமாக கேட்கிறோம். ஆனால் மின் ஆற்றலை சேமிப்பது நமக்கு மட்டுமல்ல, நமது நாட்டுக்கே நல்லது.
மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் காற்று மாசை குறைத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். ஏனெனில் இரண்டு சாதாரண கார்கள் வெளியேற்றும் கார்பன்-டை ஆக்சைடை விட, ஒரு வீட்டின் மின்சார பயன்பாட்டால் அதிகமான கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறும். பொதுவாக ஒரு வீட்டின் மொத்த மின் பயன்பாட்டில் பிரிட்ஜ், ஏ.சி., மின்விளக்குகளுக்கு அதிகம் செலவாகிறது.
ஏ.சி பொருத்தப்பட்டுள்ள அறையை முறையாக மூடி வைக்க வேண்டும், அதில் இடைவெளி இருந்தால் அதிக மின்சாரம் செலவாகும். ஆகவே இதைத் தவிர்க்க வேண்டும். சுவிட்சுகளும், அவற்றை நாம் பயன்படுத்தும் முறையும் கூட மின் ஆற்றலை வீணாக்கும் வகையில் அமைந்துவிடும். எனவே இவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.
வீட்டின் மின் பயன்பாட்டில் கிட்டத்தட்ட 20 சதவீதம் ஏ.சி.க்கு செலவாவதால் ஏ.சி. எந்திரத்தின் பயன்பாட்டை முறைப்படுத்துதல் நல்லது. ஏ.சி.யின் ‘அவுட்டோர் யூனிட்’டை மரத்தடி போன்ற நிழலான இடத்தில் வைத்தால் 10 சதவீதம் அளவில் மின் ஆற்றலை சேமிக்க அது உதவும். வீட்டை கிழக்கு, மேற்காக அமைப்பதன் மூலமும், வீட்டைச் சுற்றி மரங்களை வளர்ப்பதன் மூலமும், பசுமைக் கூரை அமைப்பதன் மூலமும், மென்மையான, ஒளிரும் நிற பெயிண்ட்டை வீட்டின் வெளிச் சுவர்களில் பூசுவதன் மூலமும் மின் ஆற்றலை சேமிக்கலாம்.
அதே போன்று பிரிட்ஜையும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான குளிர் நிலவும்படி பிரீசர்களை வைத்திருத்தல் நல்லதல்ல. கூடுமான வரையில் பிரிட்ஜை அடிக்கடி மூடி திறப்பதைக் குறைத்து கொள்ள வேண்டும். நொடிக்கொரு முறை பிரிட்ஜை மூடித் திறந்தால் மின் ஆற்றல் வீணாகும்.
பிரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம். இதனால் பிரிட்ஜின் மின்சாரத் தேவை குறைய வாய்ப்புள்ளது. பிரிட்ஜின் கதவு நன்கு இறுக்கமாக மூடி இருக்க வேண்டும். அதில் இடைவெளி இல்லாமல் இருப்பது அவசியம்.
வாஷிங் மெஷினைப் பொறுத்தவரை எப்போதும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதாவது அதன் மேக்ஸிமம் லோடு அளவுக்கு துணிகள் இடம் பெற வேண்டும். டிடர்ஜெண்ட் பவுடர் தேவையான அளவு போட வேண்டும். மிக அழுக்கான துணிகளுக்கு மட்டுமே சுடுநீரைப் பயன்படுத்த வேண்டும். எனவே வீடுதோறும் அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுவை தடுப்போம்.
மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் காற்று மாசை குறைத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். ஏனெனில் இரண்டு சாதாரண கார்கள் வெளியேற்றும் கார்பன்-டை ஆக்சைடை விட, ஒரு வீட்டின் மின்சார பயன்பாட்டால் அதிகமான கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறும். பொதுவாக ஒரு வீட்டின் மொத்த மின் பயன்பாட்டில் பிரிட்ஜ், ஏ.சி., மின்விளக்குகளுக்கு அதிகம் செலவாகிறது.
ஏ.சி பொருத்தப்பட்டுள்ள அறையை முறையாக மூடி வைக்க வேண்டும், அதில் இடைவெளி இருந்தால் அதிக மின்சாரம் செலவாகும். ஆகவே இதைத் தவிர்க்க வேண்டும். சுவிட்சுகளும், அவற்றை நாம் பயன்படுத்தும் முறையும் கூட மின் ஆற்றலை வீணாக்கும் வகையில் அமைந்துவிடும். எனவே இவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.
வீட்டின் மின் பயன்பாட்டில் கிட்டத்தட்ட 20 சதவீதம் ஏ.சி.க்கு செலவாவதால் ஏ.சி. எந்திரத்தின் பயன்பாட்டை முறைப்படுத்துதல் நல்லது. ஏ.சி.யின் ‘அவுட்டோர் யூனிட்’டை மரத்தடி போன்ற நிழலான இடத்தில் வைத்தால் 10 சதவீதம் அளவில் மின் ஆற்றலை சேமிக்க அது உதவும். வீட்டை கிழக்கு, மேற்காக அமைப்பதன் மூலமும், வீட்டைச் சுற்றி மரங்களை வளர்ப்பதன் மூலமும், பசுமைக் கூரை அமைப்பதன் மூலமும், மென்மையான, ஒளிரும் நிற பெயிண்ட்டை வீட்டின் வெளிச் சுவர்களில் பூசுவதன் மூலமும் மின் ஆற்றலை சேமிக்கலாம்.
அதே போன்று பிரிட்ஜையும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான குளிர் நிலவும்படி பிரீசர்களை வைத்திருத்தல் நல்லதல்ல. கூடுமான வரையில் பிரிட்ஜை அடிக்கடி மூடி திறப்பதைக் குறைத்து கொள்ள வேண்டும். நொடிக்கொரு முறை பிரிட்ஜை மூடித் திறந்தால் மின் ஆற்றல் வீணாகும்.
பிரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம். இதனால் பிரிட்ஜின் மின்சாரத் தேவை குறைய வாய்ப்புள்ளது. பிரிட்ஜின் கதவு நன்கு இறுக்கமாக மூடி இருக்க வேண்டும். அதில் இடைவெளி இல்லாமல் இருப்பது அவசியம்.
வாஷிங் மெஷினைப் பொறுத்தவரை எப்போதும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதாவது அதன் மேக்ஸிமம் லோடு அளவுக்கு துணிகள் இடம் பெற வேண்டும். டிடர்ஜெண்ட் பவுடர் தேவையான அளவு போட வேண்டும். மிக அழுக்கான துணிகளுக்கு மட்டுமே சுடுநீரைப் பயன்படுத்த வேண்டும். எனவே வீடுதோறும் அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுவை தடுப்போம்.
உடல் நலப்பிரச்சனை வெப்பத்துக்குப் பழக்கப்பட்ட நமது உடல் குளிரைச் சமாளிக்கத் தடுமாறும். காலநிலை மாறுவதால், சுவாசப் பிரச்சனை, காய்ச்சல், தோல் வறட்சி போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
வெப்பத்துக்குப் பழக்கப்பட்ட நமது உடல் குளிரைச் சமாளிக்கத் தடுமாறும். காலநிலை மாறுவதால், சுவாசப் பிரச்சனை, காய்ச்சல், தோல் வறட்சி போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். பனிக்காலத்தில் நமது உடலை நோயின்றி பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
1. குளிர்காலத்தில் உடலுக்குக் கதகதப்பு அளிக்கும் சில உடற்பயிற்சிகள், நிமிர்வது, குனிவது போன்ற அசைவுகளைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். இதனால், குளிரினால் ஏற்படும் உடல் மற்றும் தசை பனிவலி நீங்கும்.
2. குளிர் காலத்தில் உணவை மிதமானச் சூட்டில் உண்ண வேண்டும். நேரம் தவறாமல் சாப்பிடுவதால் உடல் ஆற்றல் அதிகரிக்க உதவும். எளிதில் செரிக்கக் கூடிய பச்சைக் காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து மிகுந்த பீன்ஸ், முருங்கைக்காய் அதிக அளவில் சாப்பிடலாம். அசைவ உணவுகள் எளிதில் ஜீரணமாகாது என்பதால் அதனைக் குறைத்துக் கொள்வது நல்லது.
3. குளிக்கச் செல்லும்முன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை உடலில் தேய்த்து மசாஜ் செய்தால், சருமம் வறண்டு போகாமல் ஆரோக்கியமாக இருக்கும். கற்றாழையைக் கூழாக அரைத்து முகம் மற்றும் உடலில் தேய்த்தாலும் சருமம் மிருதுவாக இருக்கும். ஒவ்வாமை மற்றும் சுவாசப் பிரச்சனை உடையவர்கள் கற்றாழை க்ரீம் பயன்படுத்தலாம்.
4. குளிர்காலத்தில் வெந்நீர் குளியல் நல்லது. அதிக சூடான தண்ணீரில், அதிக நேரம் குளித்தால் சருமத்தில் அதிக வறட்சி ஏற்படும். அதனால் வெதுவெதுப்பான சூட்டில் குளிக்க வேண்டும்.
5. பனிக்காலத்தில் தாகம் குறைவாக ஏற்படும். அதனால் தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து, வேறு பிரச்சனைகளை உருவாக்கும். எனவே, ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு லிட்டர் வரை தண்ணீர் அவசியம் குடிக்கவேண்டும்.
6. அதிக குளிர் காணப்படும் நேரத்தில் உடலுக்குக் கதகதப்பு தரும் கம்பளி ஆடைகளை உடுத்த வேண்டும். இந்த ஆடைகள் குளிர்காலத்தில் வரும் நடுக்கத்தைக் குறைக்கும். கை, கால்கள், மூக்கு, காது பகுதியையும் கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
7. மாத்திரைகள் - ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் சுவாச நோய்களால் அவதிப்படுபவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தங்களுக்கான மாத்திரை மருந்துகளை எப்போதும் உடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
1. குளிர்காலத்தில் உடலுக்குக் கதகதப்பு அளிக்கும் சில உடற்பயிற்சிகள், நிமிர்வது, குனிவது போன்ற அசைவுகளைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். இதனால், குளிரினால் ஏற்படும் உடல் மற்றும் தசை பனிவலி நீங்கும்.
2. குளிர் காலத்தில் உணவை மிதமானச் சூட்டில் உண்ண வேண்டும். நேரம் தவறாமல் சாப்பிடுவதால் உடல் ஆற்றல் அதிகரிக்க உதவும். எளிதில் செரிக்கக் கூடிய பச்சைக் காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து மிகுந்த பீன்ஸ், முருங்கைக்காய் அதிக அளவில் சாப்பிடலாம். அசைவ உணவுகள் எளிதில் ஜீரணமாகாது என்பதால் அதனைக் குறைத்துக் கொள்வது நல்லது.
3. குளிக்கச் செல்லும்முன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை உடலில் தேய்த்து மசாஜ் செய்தால், சருமம் வறண்டு போகாமல் ஆரோக்கியமாக இருக்கும். கற்றாழையைக் கூழாக அரைத்து முகம் மற்றும் உடலில் தேய்த்தாலும் சருமம் மிருதுவாக இருக்கும். ஒவ்வாமை மற்றும் சுவாசப் பிரச்சனை உடையவர்கள் கற்றாழை க்ரீம் பயன்படுத்தலாம்.
4. குளிர்காலத்தில் வெந்நீர் குளியல் நல்லது. அதிக சூடான தண்ணீரில், அதிக நேரம் குளித்தால் சருமத்தில் அதிக வறட்சி ஏற்படும். அதனால் வெதுவெதுப்பான சூட்டில் குளிக்க வேண்டும்.
5. பனிக்காலத்தில் தாகம் குறைவாக ஏற்படும். அதனால் தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து, வேறு பிரச்சனைகளை உருவாக்கும். எனவே, ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு லிட்டர் வரை தண்ணீர் அவசியம் குடிக்கவேண்டும்.
6. அதிக குளிர் காணப்படும் நேரத்தில் உடலுக்குக் கதகதப்பு தரும் கம்பளி ஆடைகளை உடுத்த வேண்டும். இந்த ஆடைகள் குளிர்காலத்தில் வரும் நடுக்கத்தைக் குறைக்கும். கை, கால்கள், மூக்கு, காது பகுதியையும் கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
7. மாத்திரைகள் - ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் சுவாச நோய்களால் அவதிப்படுபவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தங்களுக்கான மாத்திரை மருந்துகளை எப்போதும் உடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பன்னீர் கீர் எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
துருவிய பன்னீர் - 1/2 கப்
சுண்டக்காய்ச்சிய பால் - 3/4 கப்
பால் - 1/2 லிட்டர்
உலர்ந்த திராட்சை - தேவையான அளவு
பாதாம் பருப்பு - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் துருவிய பன்னீரை சேர்க்க வேண்டும். உடனே பாலையும் அதனுடன் சேர்க்கவும். 5-6 நிமிடங்கள் விடாமல் கிளறிக்கொண்டே கட்டியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இப்பொழுது சுண்டக்காய்ச்சிய கெட்டியான பாலை சேர்த்து 3-4 நிமிடங்கள் நன்றாக கிளறவும்.
ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும். இதனுடன் உலர்ந்த திராட்சை மற்றும் நறுக்கிய பாதாம் பருப்பை சேர்த்து கிளறவும். நன்றாக கிளறி அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.

நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை, குங்குமப்பூ அதன்மேல் தூவி அலங்கரிக்கவும். கொஞ்சம் குளிர வைத்து பரிமாறவும். சுவையான நாவிற்கு விருந்தளிக்கும் பன்னீர் கீர் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
துருவிய பன்னீர் - 1/2 கப்
சுண்டக்காய்ச்சிய பால் - 3/4 கப்
பால் - 1/2 லிட்டர்
உலர்ந்த திராட்சை - தேவையான அளவு
பாதாம் பருப்பு - தேவையான அளவு
ஏலக்காய் பொடி - தேவையான அளவு
குங்குமப்பூ - சிறிதளவு
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் துருவிய பன்னீரை சேர்க்க வேண்டும். உடனே பாலையும் அதனுடன் சேர்க்கவும். 5-6 நிமிடங்கள் விடாமல் கிளறிக்கொண்டே கட்டியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இப்பொழுது சுண்டக்காய்ச்சிய கெட்டியான பாலை சேர்த்து 3-4 நிமிடங்கள் நன்றாக கிளறவும்.
ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும். இதனுடன் உலர்ந்த திராட்சை மற்றும் நறுக்கிய பாதாம் பருப்பை சேர்த்து கிளறவும். நன்றாக கிளறி அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.

நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை, குங்குமப்பூ அதன்மேல் தூவி அலங்கரிக்கவும். கொஞ்சம் குளிர வைத்து பரிமாறவும். சுவையான நாவிற்கு விருந்தளிக்கும் பன்னீர் கீர் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகள் விரும்பும் சாக்லேட் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா - 250 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
வெண்ணெய் - 150 கிராம்
முட்டை - 3
பேக்கிங் சோடா - 1 ஸ்பூன்
சூடான நீர் - அரை கப்
கோக்கோ பவுடர் - 2 ஸ்பூன்
செய்முறை:
* கோக்கோ பவுடரை வெந்நீரில் கட்டியில்லாமல் கலக்கவும்.
* மைதாவையும், பேக்கிங் பவுடரையும் 3 முறை சலித்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், பொடித்த சர்க்கரையையும் போட்டு நன்கு மிருதுவான அடித்துக் கொள்ளவும்.
* பின் ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி நன்றாக கட்டி இல்லாமல் அடிக்கவும்.
* அடுத்து மைதா கலவையையும், கோக்கோ கலவையையும் மாற்றி மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய்க்கலவையில் சேர்த்துக்கொண்டே கைவிடாமல் கட்டி இல்லாமல் அடிக்கவும்.

* இப்போது கேக் கலவையை அந்த பாத்திரத்தில் பாதியளவு வரும்படி ஊற்றவும். எப்பொழுதும் கேக் பாத்திரத்தின் பாதி அளவு தான் ஊற்ற வேண்டும், அப்போது தான் கேக் வெந்தவுடன் மேலே எழும்பி வரும்.
* மைக்ரோ வேவ் அவனில் 160 டிகிரி C-யில்25 -35 நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும்.
* கேக் நன்கு வெந்ததும் அவனில் இருந்து எடுத்து துண்டங்கள் போடவும்.
மைதா - 250 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
வெண்ணெய் - 150 கிராம்
முட்டை - 3
பேக்கிங் சோடா - 1 ஸ்பூன்
சூடான நீர் - அரை கப்
கோக்கோ பவுடர் - 2 ஸ்பூன்
செய்முறை:
* கோக்கோ பவுடரை வெந்நீரில் கட்டியில்லாமல் கலக்கவும்.
* மைதாவையும், பேக்கிங் பவுடரையும் 3 முறை சலித்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், பொடித்த சர்க்கரையையும் போட்டு நன்கு மிருதுவான அடித்துக் கொள்ளவும்.
* பின் ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி நன்றாக கட்டி இல்லாமல் அடிக்கவும்.
* அடுத்து மைதா கலவையையும், கோக்கோ கலவையையும் மாற்றி மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய்க்கலவையில் சேர்த்துக்கொண்டே கைவிடாமல் கட்டி இல்லாமல் அடிக்கவும்.
* பின்னர் கேக் செய்யும் கனமான அலுமினிய பாத்திரத்தில், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது எல்லா இடங்களிலும் பரவும் படி தடவவும். அதன் மேலே கொஞ்சம் மைதா மாவை தூவவும். இப்படி செய்தால் கேக் ஒட்டாமல் வரும்.

* இப்போது கேக் கலவையை அந்த பாத்திரத்தில் பாதியளவு வரும்படி ஊற்றவும். எப்பொழுதும் கேக் பாத்திரத்தின் பாதி அளவு தான் ஊற்ற வேண்டும், அப்போது தான் கேக் வெந்தவுடன் மேலே எழும்பி வரும்.
* மைக்ரோ வேவ் அவனில் 160 டிகிரி C-யில்25 -35 நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும்.
* கேக் நன்கு வெந்ததும் அவனில் இருந்து எடுத்து துண்டங்கள் போடவும்.
* கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சாக்லேட் கேக் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குக்கீஸை கடைகளில் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இன்று கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் நட்சத்திர குக்கீஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 100 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
பட்டைத்தூள் - அரைடீஸ்பூன்
தூளாக்கிய சர்க்கரை - தேவைக்கு
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
கிராம்புத்தூள் - அரை டீஸ்பூன்
பட்டர் பேப்பர் - தேவைக்கு

செய்முறை:
வெண்ணெயுடன் மைதா மாவு, சர்க்கரை, கிராம்புத்தூள், பட்டைத்தூள், ஏலக்காய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
பின்னர் சப்பாத்தி தயார் செய்வது போல் மெலிதாக உருட்டிக்கொள்ளுங்கள்.
அதனை நட்சத்திர வடிவங்களில் வெட்டி பட்டர் பேப்பர் மேல் வைத்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வையுங்கள்.
பின்னர் வெளியே எடுத்து ஓவனில் உள்ள பேக்கிங் டிரேவில் பட்டர் பேப்பர்களை விரித்து அதில் நட்சத்திர வடிவ குக்கீஸ்களை வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கால் மணி நேரம் வையுங்கள்.
குக்கீஸ்களின் விளிம்பு பகுதி பிரவுன் நிறத்திற்கு மாறியதும் வெளியே எடுத்து ஆறவைத்து ருசிக்கலாம்.
மைதா மாவு - 100 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
பட்டைத்தூள் - அரைடீஸ்பூன்
தூளாக்கிய சர்க்கரை - தேவைக்கு
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
கிராம்புத்தூள் - அரை டீஸ்பூன்
பட்டர் பேப்பர் - தேவைக்கு
உப்பு - சிறிதளவு

செய்முறை:
வெண்ணெயுடன் மைதா மாவு, சர்க்கரை, கிராம்புத்தூள், பட்டைத்தூள், ஏலக்காய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
பின்னர் சப்பாத்தி தயார் செய்வது போல் மெலிதாக உருட்டிக்கொள்ளுங்கள்.
அதனை நட்சத்திர வடிவங்களில் வெட்டி பட்டர் பேப்பர் மேல் வைத்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வையுங்கள்.
பின்னர் வெளியே எடுத்து ஓவனில் உள்ள பேக்கிங் டிரேவில் பட்டர் பேப்பர்களை விரித்து அதில் நட்சத்திர வடிவ குக்கீஸ்களை வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கால் மணி நேரம் வையுங்கள்.
குக்கீஸ்களின் விளிம்பு பகுதி பிரவுன் நிறத்திற்கு மாறியதும் வெளியே எடுத்து ஆறவைத்து ருசிக்கலாம்.
சூப்பரான நட்சத்திர குக்கீஸ் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குளிர்காலத்தில் அவசியம் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். ஏனெனில் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அவற்றை சீராக பராமரிக்க ஆரஞ்சு பழம் உதவும்.
குளிர்காலத்தில் அவசியம் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். ஏனெனில் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சரும ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகும். அவற்றை சீராக பராமரிக்க ஆரஞ்சு பழம் உதவும்.
குளிர்காலத்தில் செரிமான செயல்பாடுகளும் மந்தமாக இருக்கும். அதனை துரிதப்படுத்துவதிலும் ஆரஞ்சு பழத்தின் பங்களிப்பு இருக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் குளிர்காலத்தில் தவறாமல் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். அதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தும். கலோரியும் செலவாகும். ஆரஞ்சு பழத்தை ஜூஸாக பருக விரும்புபவர்கள் தோலையும் சேர்த்து ஜூஸாக்க வேண்டும். அதில்தான் அதிக நார்ச்சத்து இருக்கிறது. குளிர்காலத்தில் சளி பிரச்சினை அதிகமாக இருக்கும். ஆரஞ்சு பழம் சளி தொல்லையில் இருந்து தற்காத்து கொள்ளவும் உதவும்.
ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சளிக்கு நிவாரணம் தரும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க இதய நோய்த்துறை அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வின் படி, பக்கவாத பாதிப்புக்கு ஆளாகாமல் தற்காத்து கொள்ளவும் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டியது அவசியமாகிறது. அதில் இருக்கும் பிளாவனாய்டுகள் இதய நோய்கள் வராமலும் காக்க உதவுகிறது.
ரத்த நாளங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் துணைபுரிகிறது. சிட்ரேட் குறைபாடு இருப்பதுதான் சிறுநீரக கல் பிரச்சினைக்கு காரணம். ஆரஞ்சு பழத்தில் இயற்கையாகவே சிட்ரேட் அமிலம் நிறைந்திருக்கிறது.
ஆரஞ்சு பழத்தை ஜூஸாக பருகுவதன் மூலம் சிறுநீர கல் படிவதை கட்டுப்படுத்தலாம். சிறுநீரக கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்களும் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் ஆரஞ்சு ஜூஸ் பருகி வரலாம்.
குளிர்காலத்தில் செரிமான செயல்பாடுகளும் மந்தமாக இருக்கும். அதனை துரிதப்படுத்துவதிலும் ஆரஞ்சு பழத்தின் பங்களிப்பு இருக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் குளிர்காலத்தில் தவறாமல் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். அதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தும். கலோரியும் செலவாகும். ஆரஞ்சு பழத்தை ஜூஸாக பருக விரும்புபவர்கள் தோலையும் சேர்த்து ஜூஸாக்க வேண்டும். அதில்தான் அதிக நார்ச்சத்து இருக்கிறது. குளிர்காலத்தில் சளி பிரச்சினை அதிகமாக இருக்கும். ஆரஞ்சு பழம் சளி தொல்லையில் இருந்து தற்காத்து கொள்ளவும் உதவும்.
ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சளிக்கு நிவாரணம் தரும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க இதய நோய்த்துறை அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வின் படி, பக்கவாத பாதிப்புக்கு ஆளாகாமல் தற்காத்து கொள்ளவும் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டியது அவசியமாகிறது. அதில் இருக்கும் பிளாவனாய்டுகள் இதய நோய்கள் வராமலும் காக்க உதவுகிறது.
ரத்த நாளங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் துணைபுரிகிறது. சிட்ரேட் குறைபாடு இருப்பதுதான் சிறுநீரக கல் பிரச்சினைக்கு காரணம். ஆரஞ்சு பழத்தில் இயற்கையாகவே சிட்ரேட் அமிலம் நிறைந்திருக்கிறது.
ஆரஞ்சு பழத்தை ஜூஸாக பருகுவதன் மூலம் சிறுநீர கல் படிவதை கட்டுப்படுத்தலாம். சிறுநீரக கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்களும் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் ஆரஞ்சு ஜூஸ் பருகி வரலாம்.
ஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள்.
ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக கூட இருக்கலாம்.
மாதவிடாய் நிற்கும் காலம் வரும் முன்னர் Perimenopause எனும் நிலை வரும். இது பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் வரும். இந்த காலத்தில் ஹார்மோன் லெவல் சமநிலையில் தாக்கம் உண்டாகலாம், எனவே, இதுப்பற்றி கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரிடன் சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஹார்மோன் சமநிலை தான் தாம்பத்திய உணர்சிகள் சரியாக இருக்க உதவும் கருவி.
நடுவயதில் நீங்கள் உங்களை பரமாரித்துக் கொள்வது மட்டுமின்றி, உங்கள் குழந்தைகள், உங்கள் பெற்றோரையும் பராமரிக்க வேண்டிய கடமைகள் இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கே ஓய்வு தேவைப்படும். ஆனால், அதை யாரிடமும் கேட்காமல், நீங்கள் பம்பரமாக சுற்றிக் கொண்டே இருந்தால், உங்கள் ஆசைகள் தான் கானலாகி போகும்.
ஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். 35 வயதிற்கு மேல் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு, இதற்கு தகுந்த பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொண்டால், நல்ல தீர்வுக் காண முடியும்.
இளம் வயதில் அவரவர் விருப்பம் அல்லது எப்போதும் போல ஒரே மாதிரியான தாம்பத்திய உறவில் நீங்கள் ஈடுபட்டிருக்கலாம். நாற்பதுக்கு மேல் உடல் இணைதல் என்பதை தாண்டி தாம்பத்தியம் வேறு வகையில் பயணிக்கும். எனவே, உங்கள் துணைக்கு என்ன வேண்டும், அவரது விருப்பம் என்ன என்பதை கேட்டு அதன்படி தாம்பத்தியத்தில் ஈடுபடுதலே சிறந்தது.
மாதவிடாய் நிற்கும் காலம் வரும் முன்னர் Perimenopause எனும் நிலை வரும். இது பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் வரும். இந்த காலத்தில் ஹார்மோன் லெவல் சமநிலையில் தாக்கம் உண்டாகலாம், எனவே, இதுப்பற்றி கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரிடன் சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஹார்மோன் சமநிலை தான் தாம்பத்திய உணர்சிகள் சரியாக இருக்க உதவும் கருவி.
நடுவயதில் நீங்கள் உங்களை பரமாரித்துக் கொள்வது மட்டுமின்றி, உங்கள் குழந்தைகள், உங்கள் பெற்றோரையும் பராமரிக்க வேண்டிய கடமைகள் இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கே ஓய்வு தேவைப்படும். ஆனால், அதை யாரிடமும் கேட்காமல், நீங்கள் பம்பரமாக சுற்றிக் கொண்டே இருந்தால், உங்கள் ஆசைகள் தான் கானலாகி போகும்.
ஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். 35 வயதிற்கு மேல் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு, இதற்கு தகுந்த பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொண்டால், நல்ல தீர்வுக் காண முடியும்.
இளம் வயதில் அவரவர் விருப்பம் அல்லது எப்போதும் போல ஒரே மாதிரியான தாம்பத்திய உறவில் நீங்கள் ஈடுபட்டிருக்கலாம். நாற்பதுக்கு மேல் உடல் இணைதல் என்பதை தாண்டி தாம்பத்தியம் வேறு வகையில் பயணிக்கும். எனவே, உங்கள் துணைக்கு என்ன வேண்டும், அவரது விருப்பம் என்ன என்பதை கேட்டு அதன்படி தாம்பத்தியத்தில் ஈடுபடுதலே சிறந்தது.






