என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நயன்தாரா தான் காது குத்திக் கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
    • காதில் ரத்தம் வரும்போது விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாறே பாடலை நயனதாரா பாடுகிறார்.

    நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கு விக்கி மற்றும் நயன் அவ்வப்போது அவர்கள் ஒன்றாக வெளியே செல்வது மற்றும் குழந்தைகளுடன் செலவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

    அவ்வகையில் நயன்தாரா தற்போது தான் காது குத்திக் கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், காது குத்தும் கடைக்குச் செல்லும் நயன், அங்கு தனக்குப் பிடித்த தோடை தேர்வு செய்கின்றார். அதன் பின்னர் அங்கிருக்கும் ஊழியர்கள், நயன்தாராவுக்கு அந்த தோடை குத்தி விடுகின்றனர். இப்படியான நிலையில், நயனுக்கு காதில் இருந்து ரத்தம் வருகின்றது. அப்போது, விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாறே பாடலைப் பாடுகிறார்

    இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்


    • இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • பிளாக் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

    மாநகரம், மான்ஸ்டர், டானாக்காரன், இறுகப்பற்று போன்ற வெற்றி படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் அடுத்ததாக ஜீவா நடித்துள்ள "பிளாக்" திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம் பற்றி கதையை கொண்டுள்ளது.

    இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம். சென்னையில் எடுக்கப்பட்ட இப்படத்தின் படபிடிப்பு முடிவடைந்து படம் வெளியீட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ஹாரர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் வெற்றிப் படமாக அமையுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நடிகை புகார்.
    • இவரது யூடியூப் சேனலை 1 கோடிக்கும் அதிகமானோர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர்.

    தெலுங்கானாவின் பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், நிர்வாண படங்கள், வீடியோக்களை வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் நடிகை ஒருவர் ஹர்ஷா சாய் மீது புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தன் மீது பொய் புகார்களை சுமத்துவதாகவும், அதை சட்ட ரீதியில் சந்திக்கப்போவதாக ஹர்ஷா சாய் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஏழை மக்களுக்கு பணம், பொருட்கள் உதவி செய்வதை வீடியோவாக எடுத்து யூடியூப் மற்றும் தனது சமூக வலைதள பக்கங்களில் யூடியூபர் ஹர்ஷா சாய் பதிவிட்டு வருகிறார். இவரது யூடியூப் சேனலை 1 கோடிக்கும் அதிகமானோர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நான் சம்பளம் அதிகம் கேட்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
    • இந்தப் படம் வருகிற 27 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    கோல்டன் ஈகிள் ஸ்டூடியோஸ் சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கியுள்ள புதிய திரைப்படம் "தில் ராஜா." இந்தப் படத்தில், விஜய் சத்யா, ஷெரீன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற 27 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகை வனிதா பேசும் போது, "விஜய் சத்யாவிற்கும், ஏ வெங்கடேஷ் சாருக்கும், அம்ரீஷுக்கும் என் வாழ்த்துக்கள். அம்ரீஷை அதிகம் வெளியில் பார்த்ததில்லை, இப்போது தான் பார்க்கிறேன். எல்லாப் பாடல்களும் நன்றாக வந்துள்ளது வாழ்த்துக்கள்."

    "10 ஆண்டுகளுக்கு முன் என் தந்தையுடன் சண்டை நடந்த போது, மீண்டும் சினிமாவில் நடிக்க நினைத்தேன். அப்போது, ஏ வெங்கடேஷ் சார் தான் நடிக்க வைத்தார். இந்தப்படத்தில் நடிக்க என்னைத் தேடியபோது, நான் சம்பளம் அதிகம் கேட்பதாக சொல்லியிருக்கிறார்கள்."

    "ஏ வெங்கடேஷ் சார் கேட்ட போது, சார் என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம், என்றைக்கு என்று சொல்லுங்கள் நான் வருகிறேன் என போய் நடித்தேன். இப்போது நானும் இயக்குநராக மாறியிருக்கிறேன், ஒரு பெரிய படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன்."

    "எனக்கு படம் செய்வதில் உள்ள கஷ்டம் தெரியும். விஜய் சத்யா இந்தப் படத்தை கஷ்டப்பட்டு எடுத்து, இங்கு கொண்டு வந்துள்ளார். செப்டம்பர் 27 ஆம் தேதி இப்படம் வருகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்," என்றார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அஜித்குமார் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ரேஸ் டிராக்கில் களம் இறங்கப் போகிறார்.
    • கடந்த ஜூலை மாதம் துபாயில் விலை உயர்ந்த பெராரி காரை அஜித்குமார் வாங்கினார்.

    நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டும் அல்லாமல் கார் மற்றும் பைக் ரேசிங்கில் மிகப்பெரியளவில் ஆர்வம் காட்டுபவர்.

    கடந்த ஜூலை மாதம் துபாயில் விலை உயர்ந்த பெராரி காரை அஜித்குமார் வாங்கினார். இந்நிலையில் அஜித்குமாரை கவுரவிக்கும் விதமாக அவருக்கு பெராரி கையுறைகள் பரிசாக வழங்கப்பட்டது.

    அஜித்குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்தில் திரிஷா, அர்ஜூன், ரெஜினா மற்றும் ஆரவ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தாண்டு இறுதியில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஊர்மிளாவுக்கும், மொஹ்சின் அக்தர் மிர்-க்கும் 2016-ல் திருமணம் நடைபெற்றது.
    • திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே அழைக்கப்பட்டனர்.

    1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் ஊர்மிளா மடோன்கர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக திகழ்ந்தவர். இவருக்கென இந்தி திரையுலகில் தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது.

    சினிமாவில் நடித்து கொண்டிருந்த போதே தொழில் அதிபரும், மாடலிங் துறையை சேர்ந்தவருமான மொஹ்சின் அக்தர் மிர்-ஐ 2016-ம் ஆண்டு திருமணம் செய்தார். சினிமா, நடிப்பு மட்டுமின்றி அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு கொண்டிருக்கிறார் ஊர்மிளா மடோன்கர்.

    இந்நிலையில் ஊர்மிளாவுக்கும், கணவர் மொஹ்சின் அக்தர் மிர்-க்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், விவாகரத்து கேட்டு கோர்ட்டில் ஊர்மிளா மடோன்கர் மனு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கவனமாக பரிசீலித்து இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனார் பரஸ்பர முடிவால் இந்த விவாகரத்து முடிவுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

    அவர்களது 8 வருட சினிமா வாழ்க்கையில் தற்போது பிரிவு ஏற்பட்டுள்ளது. ஊர்மிளாவுக்கு 50 வயதாகிறது. வயது மொஹ்சினுக்கு 40 வயதுதான் ஆகிறது. 10 வயது இடைவெளி என்பது திருமணத்தின்போது பெரிய விவாத பொருளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இருவருடைய திருமணம் ஒரு ரகசிய திருமணம் போன்று நடந்தது. திருமணம் ஊர்மிளா மடோன்கரின் மும்பை இல்லத்தில் நடைபெற்றது. அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

    இந்தியில் ரங்கீலா, ஜுடாய், மஸ்த், பியார் துனே கியா கியா பூட் போன்ற பிரபல படங்களில் நடித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எந்த படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளும்.
    • 6 திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

    கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கடைசி உலகப் போர், லப்பர் பந்து, நந்தன், தோனிமா, தோழர் சேகுவாரா, கோழிப்பண்ணை செல்லத்துரை என ஏழு திரைப்படங்கள் வெளியானது. அதே போல இந்த வாரம் (27-ந்தேதி) 6 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இதில் எந்த படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளும் என்று பார்க்கலாம்...


    மெய்யழகன்

    சூர்யா தயாரிப்பில் அரவிந்த் சாமி- கார்த்தி நடிக்கும் படம் மெய்யழகன். இந்த திரைப்படம் செப்டம்பர் 27 -ந் தேதி வெளியாகிறது. ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். சி.பிரேம் குமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.


    தேவாரா

    ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் செப்டம்பர் 27 ல் வெளியாக இருக்கும் திரைப்படம் தேவரா. இந்த படத்தில் சைத்ரா ராய், சயிப் அலி கான், சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கொரட்டலா சிவா இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரூ.300 கோடி செலவில் இத்திரைப்படம் தயாராகி உள்ளது.


    சட்டம் என் கையில்

    சதீஷ் நாயகனாக நடித்துள்ள 'சட்டம் என் கையில்' படம் 27ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. மெரினா, வாகை சுடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி உள்ளிட்ட பல்வேறு படங்களின் மூலம் கவனம் பெற்றவர் சதீஷ். நாய் சேகர் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

    தற்போது சட்டம் என் கையில் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதில், சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    ஹிட்லர்

    விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள `ஹிட்லர்' திரைப்படம் செப்டம்பர் 27 -ந் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படைவீரன், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய தனா இப்படத்தி இயக்கி உள்ளார்.

    இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.


    பேட்ட ராப்

    எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம் பேட்ட ராப். இதில் வேதிகா நாயகியாக நடித்துள்ளனர். மேலும், ரியாஸ்கான், மைம் கோபி, பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உட்பட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    புளு ஹில் பிலிம்ஸ் சார்பில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சன்னிலியோன் ஒரு பாடலுக்கு பிரபுதேவாவுடன் நடனமாடியுள்ளார். இந்த படம் செப்.27-ல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


    தில் ராஜா

    விஜய் சத்யா, ஷெரின் நடித்திருக்கும் தில் ராஜா திரைப்படம், செப்டம்பர் 27 ம் தேதி வெளியாகிறது. இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கும் இத்திரைப்படத்தில், கலக்கப்போவது யாரு புகழ் பாலா காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அம்ரிஷ் இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு சூப்பர் சுப்பராயன் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஷ்ணு விஷால் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
    • கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் ஆர்யன் என்ற படத்தில் கமிட் ஆனார்.

    விஷ்ணு விஷால் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

    இது தவிர்த்து கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் ஆர்யன் என்ற படத்தில் கமிட் ஆனார். ஒரு சில காரணத்தினால் படப்பிடிப்பு பாதியில் நிற்கப்பட்டது. தற்பொழுது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இன்று படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஷ்ணு அதை பதிவிட்டு அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இப்படத்தை அறிமுக இயகுனரான பிரவீன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீனாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இது ஒரு போலிஸ் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் அமைக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படத்திற்கு சாம். சி எஸ் இசையமைக்கவுள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழியில் வெளியாகவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் நடித்து வருகிறார்.
    • ஆசிய ஃபார்முலா BMW சாம்பியன்ஷிப் ஆகிய ரேஸிங் போட்டியில் கலந்துள்ளார்.

    நடிகர் அஜித் நடிப்பு மட்டும் அல்லாமல் அவருக்கு கார் மற்றும் பைக் ரேசிங்கில் மிகப்பெரியளவில் ஆர்வம் இருக்கிறது என நமக்கு தெரிந்த விஷயமாகும். திரைப்படம் நடித்து அதன் இடையே பைக்கை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் அவருக்கு பிடித்த இடத்திற்கு செல்லும் பழக்கமுடையர் நடிகர் அஜித் குமார்.

    இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ரேஸ் டிராக்கில் களம் இறங்கப் போகிறார். தி ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா அஜித் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்க யுரோப்பியன் ஜிடி4 சாம்பியன்ஷிப் ரேஸிங் ஈவண்டின் கலந்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

    அஜித் குமார் இதற்குமுன் நடந்த தேசிய மோட்டார்சைக்கிள் ரேஸிங் சாம்பியன்ஷிப் மற்றும் பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப், ஆசிய ஃபார்முலா BMW சாம்பியன்ஷிப் ஆகிய ரேஸிங் போட்டியில் கலந்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

    அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்த்ல் திரிஷா, அர்ஜூன், ரெஜினா மற்றும் ஆரவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தாண்டு இறுதியில் திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
    • ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாக தகவல் வெளியானது.

    நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்து உள்ளார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார்.

    இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, "இது எனது கவனத்துக்கு வராமலும் எனது ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு'' என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது.

    ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் தற்போது கெனிஷா DT NEXT நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    அதில் "ஜெயம் ரவிக்கும் தனக்கும் இருக்கும் நட்பு என்பது தொழில்முறை சார்ந்தது மட்டும் தான். ஜெயம் ரவி என்னுடைய நண்பர், எனது வாடிக்கையாளர் அவ்வளவு தான். அவர்கள் விவாகரத்துக்கு நான் காரணம் என சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய். ஜெயம் ரவி அவரது மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பும் வரை அவரை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.

    இது உங்க வீட்டு பிரச்சனை இல்லை, வேறொருவரின் குடும்ப பிரச்சனை. அதில் இருந்து விலகி இருங்கள். என்னை இந்த விவகாரத்தில் இழுக்காதீர்கள். எனக்கு வேலை இருக்கிறது, அதற்கு நேரம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
    • ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாக தகவல் வெளியானது.

    நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்து உள்ளார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார்.

    இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, "இது எனது கவனத்துக்கு வராமலும் எனது ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு'' என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது.

    ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், சென்னை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத்தர வேண்டும் ஜெயம் ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.

    விவாகரத்து விவகாரம் சர்ச்சையான நிலையில் மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மெய்யழகன் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் அளித்துள்ளது.
    • இப்படமும் 96 திரைப்படத்தைப்போல் ஓர் இரவில் நடக்கும் கதையாக கதைக்களம் அமைந்துள்ளது.

    96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். படத்தின் இசை சில வாரங்களுக்கு முன் வெளியானது.

    இப்படமும் 96 திரைப்படத்தைப்போல் ஓர் இரவில் நடக்கும் கதையாக கதைக்களம் அமைந்துள்ளது. திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் ஒரு ஃபீல் குட் திரைப்படமாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    மெய்யழகன் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் அளித்துள்ளது. திரைப்படத்தின் நேர அளவு 2 மணிநேரம் 57 நிமிடங்களாகும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×