என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஜிப்ரான் இசை படத்திற்கு பெரிய பலம்.

    திரௌபதி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கதை தொடங்குகிறது. நாயகன் ரிச்சர்ட் தனது குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். ஊரில் வக்பு வாரியம் மூலம் கோவில் நிலம் பறிபோகும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்காக ஊர் மக்களை ஒன்று திரட்டுகிறார். அப்போது வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும் நாயகி ரக்ஷனா, கோவிலை பராமரிக்க முன் வருகிறார். கோவிலுக்கு செல்லும் ரக்ஷனா உடம்பில் அமானுஷ்ய சக்தி ஊடுருவி வினோதமாக நடந்து கொள்கிறார்.

    இறுதியில் ரக்ஷனா உடம்பில் ஊடுருவிய அமானுஷ்ய சக்தி யார்? எதற்காக வந்தார்? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரிச்சர்ட், கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நடிப்பதற்கான நிறைய வாய்ப்புகள் இருந்தும், அதை சரியாக பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார். வீரம், ஆக்ரோஷமான காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். நாயகியாக நடித்து இருக்கும் ரக்ஷனா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்டி நட்ராஜின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.

    இயக்கம்

    வல்லாள மகாராஜா கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. 13 ஆம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த வல்லாள மகாராஜாவிற்கும் சுல்தான் அரசர்களுக்கும் இடையே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்கி இருக்கிறார். இந்து, இஸ்லாம் மதத்திற்கு இடையே நடந்த பிரச்சனையை திரைக்கதையாக வைத்து இருக்கிறார். படத்தில் அழுத்தமான மற்றும் சுவாரசியமான காட்சிகள் இல்லாதது வருத்தம்.

    இசை

    ஜிப்ரான் இசை படத்திற்கு பெரிய பலம்.

    ஒளிப்பதிவு

    பிலிப் ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவு சிறப்பு.

    ரேட்டிங்-2/5

    • இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.
    • உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது.

    நடிகை அனுபமா பரமேஸ்வரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லாக் டவுன்'. அனுபமா பரமேஸ்வரனுடன் சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.

    என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் ஒரு பெண் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது.

    படத்தின் வெளியீடு பலமுறை தள்ளிவைக்கப்பட்ட பிறகு, தற்போது ஜனவரி 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


    திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்குவது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவு.

    தமிழ் ஆன்மிக இலக்கிய உலகின் உச்ச சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் திருவாசகம், இப்போது சமகால இசை வடிவில் புதிய உயிர் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஜி.வி. பிரகாஷ் குமார் குரலும், இசையும் இணைந்து உருவான திருவாசகத்தின் முதல் பாடல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி, ஆன்மிக இசை ரசிகர்களிடையே ஆழ்ந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

    இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் இசை நிகழ்ச்சியாக வழங்கியபோது, அந்த மேடை முழுவதும் ஒரு தெய்வீக அமைதி சூழ்ந்ததாக பேசப்பட்டது. அந்த ஒரே நிகழ்விலேயே, திருவாசக இசை முயற்சியின் ஆழமும் ஆன்மிக வலிமையும் வெளிப்பட்டது.

    ஜி.வி. பிரகாஷின் YouTube சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள இந்த முதல் பாடல், சிவனின் மகிமையை போற்றும் சொற்களாலும், திருவாசகத்தின் ஆத்மார்த்தமான பக்தி உணர்வாலும் நிரம்பியுள்ளது.

    ஆதியும் அந்தமும் இல்லாத சிவன், கருணை வடிவமாகவும், ருத்ர ரூபமாகவும், யோகி வடிவமாகவும் தோன்றும் பல்வேறு நிலைகளை இசை வழியாகக் காட்சிப்படுத்துகிறது. அந்த வரிகளில் ஒலிக்கும் சிவபக்தி, ஜி.வி. பிரகாஷின் குரலால் இன்னும் ஆழமாக மனதிற்குள் இறங்குகிறது. அவரது குரலில் இருக்கும் வலிமை, பக்தி, பணிவு – அனைத்தும் சேர்ந்து, திருவாசகத்தின் தத்துவத்தை இசையின் உன்னத அனுபவமாக மாற்றுகிறது.

    திரைப்பட இசை உலகில் தனித்த அடையாளம் பதித்த ஜி.வி. பிரகாஷ், பாரம்பரியமும் நவீனமும் இணையும் இசை பற்றிய தேடல் கொண்டவர். அந்த தேடலின் ஒரு முக்கியமான கட்டமாகவே இந்த திருவாசக இசை முயற்சி பார்க்கப்படுகிறது.

    திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்குவது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவு. அதன் முதல் படியாக வெளியாகியுள்ள இந்தப் பாடல், அந்த கனவு சரியான பாதையில் தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்துகிறது. சிவனின் பல வடிவங்களையும், மனித மனத்தின் தவிப்பையும், இறைவனிடம் நம்மை சரணடைய வைக்கும் இசை அனுபவமாக மாற்றியுள்ள இந்த முயற்சி, தமிழ் ஆன்மிக இசையில் ஒரு முக்கியமான அடையாளமாக நிலைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    ஜி.வி. பிரகாஷ் குரலில், சிவனின் மகிமையை ஒலிக்கும் இந்த திருவாசகத்தின் முதல் பாடல், கேட்பவரை ஒரு தெய்வீக பயணத்துக்கே அழைத்துச் செல்கிறது.

    • அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வருகிறது.
    • லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.

    செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில் L. K. அக்ஷய் குமார் நடிக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 13 ' படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு, படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது

    'சிறை ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அழுத்தமான அடையாளத்தை பதிவு செய்திருக்கும் நடிகர் L. K. அக்ஷய் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 13' படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.


    அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் L. K . அக்ஷய் குமார், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA , ஷாரீக் ஹாஸன் மற்றும் 'டியூட்' படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.

    படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கிறார். பிரியா ஆடை வடிவமைப்பாளராகவும், K. அருண் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஃபன் என்டர்டெய்னராக (( Fun Entertainment)) தயாராகும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.

    இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் இந்த படத்தை எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    புதுமுக நடிகர் L. K .அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான, 'சிறை ' திரைப்படம் இதுவரை உலக அளவில் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இதனால் நடிகர் L. K. அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி வரும் இப்படத்தினை பற்றிய புதிய அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

     


    அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

    அஜித் குமாரின் 50-வது படமான 'மங்காத்தா', தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த 'ஹெய்ஸ்ட் த்ரில்லர்' (Heist Thriller) படங்களில் ஒன்று. வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011-ல் வெளியான இந்தப் படம், அஜித்தின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

    2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

    இன்ஸ்பக்டர் விநாயக் மகாதேவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார். ஒரு கடத்தல்காரனை தப்பிக்க விட்டதற்காக அவரை ச்ஸ்பண்ட் செய்து விடுவார்கள். அப்பொழுது அவர் ஒரு கும்பலை சந்திக்கிறார். அவர்கள் 500 கோடி ரூபாய் பணத்தொகையை கடத்த திட்டம் போடுகிறார்கள். அதற்கு அஜித் உதவுவதாக கூறுவார் அதற்கு அடுத்து என்ன நடந்தது என்பதே கதைக்களம்.

    "Money, Money, Money!" என்று சொல்லிக்கொண்டு, முழுக்க முழுக்க வில்லத்தனமான கதாபாத்திரத்தில் அஜித் மிரட்டியிருப்பார். அவரது 'சால்ட் அண்ட் பெப்பர்' லுக் மற்றும் ஸ்டைலான நடிப்பு படத்திற்குப் மிகப்பெரிய பலம்.

    இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். படத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும். படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.

    இந்நிலையில், மங்காத்தா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ஜனவரி மாதம் 23-ம் தேதி(இன்று) படம் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அஜித்தின் மங்காத்தா படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

    • ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
    • காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது.

    ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜன நாயகன். பொங்கலை முன்னிட்டு, ஜன.9ஆம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. முன்னதாக படத்திற்கு விரைந்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி படக்குழு உயர்நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

    இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அத்தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே ஜனவரி 20 அன்று இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று பொங்கலன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து ஜன.20 அன்று ஜன நாயகன் வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அன்று தயாரிப்பு நிறுவனம், தணிக்கை வாரியம் என இருதரப்புகளும் மாறி மாறி தங்கள் வாதங்களை முன்வைத்தன. நீதிபதிகளும் பல்வேறு கேள்விகளை இருதரப்பினரிடமும் எழுப்பினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தநிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம். இதனால் ஜன நாயகன் வெளியீடு இன்னும் தள்ளிப்போகும் சூழல் உருவானது.

    இந்நிலையில்  இந்த வழக்கில் வரும் ஜன.27ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம். காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக தலைமை நீதிபதி அமர்வு ஜன நாயகன் தணிக்கை வழக்கை விசாரிக்கிறது. 

    'ராஞ்சனா' (Raanjhanaa) பாணியில் ஒரு உணர்ச்சிகரமான காதல் கதை.

    தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிப்படங்கள் மற்றும் வெப் சிரீஸ்களை இந்த வாரம் வெளியிடுகிறது இந்திய ஓடிடி தளங்கள். அந்த வகையில் இந்த வாரம் எந்தெந்த ஓடிடிகளில் வெளியாகிறது என்பது குறித்து பார்ப்போம்..

    சிறை (Sirai)- விக்ரம் பிரபு நடித்துள்ள இந்த விறுவிறுப்பான போலீஸ் த்ரில்லர் திரைப்படம் இன்று முதல் ஜீ5-ல் தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

    மார்க் (Mark)- கிச்சா சுதீப் நடித்த இந்த அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.

    45- சிவராஜ்குமார், உபேந்திரா மற்றும் ராஜ் பி ஷெட்டி நடித்த இந்த கன்னட பேண்டஸி ஆக்ஷன் திரைப்படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஆன்மீகம் மற்றும் கர்மா சார்ந்த கதையம்சம் கொண்ட திரைப்படம்.

    தேரே இஷ்க் மேன் (Tere Ishk Mein)- தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் நடித்த இந்தித் திரைப்படம் இன்று முதல் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இது 'ராஞ்சனா' (Raanjhanaa) பாணியில் ஒரு உணர்ச்சிகரமான காதல் கதை.

    The Smashing Machine- டுவைன் ஜான்சன் (The Rock) நடித்த, எம்.எம்.ஏ (MMA) வீரர் மார்க் கெரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம் இன்று முதல் HBO Max ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    ஏ நைட் ஆஃப் தி செவன் கிங்டம்ஸ் (A Knight of the Seven Kingdoms) - 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கதையின் முற்பகுதியான இது, கடந்த ஜனவரி 19 அன்று ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியானது. இதன் புதிய எபிசோட்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளியாகும்.

    வின்சென்ட் மஸ்ட் டை (Vincent Must Die)- ஆங்கிலத் த்ரில்லர் திரைப்படமான வின்சென்ட் மஸ்ட் டை ப்ரைம் வீடியோ ஓட்டி தளத்தில் வெளியாகியுள்ளது.

    தி ஸ்ட்ரேஞ்சர்ஸ்: சேப்டர் 2 (The Strangers: Chapter 2)- திகில் பட வரிசையான இதன் இரண்டாம் பாகம் தற்போது ஸ்டார்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

    சதீஷ் ரகுநாதனின் இசையும், ஜகதீஷ் ரவியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

    ஹாட் ஸ்பாட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமாக ஹாட் ஸ்பாட் 2 மச் வெளியாகியுள்ளது. இந்த படத்திலும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், மூன்று வெவ்வேறு கதைகளை ஒரே படத்தில் இணைத்து சொல்ல முயற்சி செய்துள்ளார்.

    பிரபல சினிமா நடிகர்களின் வெறித்தனமான ரசிகர்களின் உறவினர்களை கடத்திச் செல்லும் எம்.எஸ். பாஸ்கர், அவர்கள் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மிரட்டுகிறார். அந்த நிபந்தனைகள் என்ன? உறவினர்கள் என்ன ஆனார்கள்? என்பதே முதல் கதை..

    வெளிநாட்டில் படித்து வளர்ந்த தம்பி ராமையாவின் மகள் சஞ்சனா திவாரி, நாகரீகம் என்ற பெயரில் மிகவும் மாடர்னாக நடந்துக் கொள்கிறார். இதனால், தந்தை, மகள் பிரச்சனை ஏற்படுவது இரண்டாவது கதை.

    2025-ம் ஆண்டில் வாழும் அஸ்வின் குமாருக்கு, 2050-ல் வாழும் பவானிஸ்ரீயுடன் காதல் உருவாகிறது. டைம் டிராவல் மூலம் அஸ்வின் குமாரை சந்திக்கும் பவானிஸ்ரீக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. இது மூன்றாவது கதை.

    நடிகர்கள்

    மாஸ் ஹீரோக்களுக்கு தீவிர ரசிகர்களாக நடித்துள்ள ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன் கதாபாத்திரங்கள் இன்றைய இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வை தரும் வகையில் அமைந்துள்ளது. எம்.எஸ். பாஸ்கர் வழக்கம்போல் தனது நடிப்பால் கவனம் ஈர்த்து இருக்கிறார்.

    நாகரீகம் என்ற பெயரில் ஆடை அணிவதில் தாராளம் காட்டும் சஞ்சனா திவாரி, கவர்ச்சி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறார். அதே நேரத்தில் தம்பி ராமையா பேசும் வசனங்கள், இன்றைய இளம் தலைமுறை பெண்களை நோக்கி கடுமையாக அமைந்துள்ளன.

    அஸ்வின் குமார் – பவானிஸ்ரீ இணையும் காட்சிகள் கலகலப்பாக இருக்கின்றது. கதையைக் கேட்கும் தயாரிப்பாளராக பாலமணி மார்பன், அவரிடம் கதை சொல்ல வரும் பிரியா பவானி சங்கர் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. பிரிகிடா சகா அழகான தோற்றத்துடன் வந்து தனது நடிப்பால் கவனம் ஈர்க்குகிறார்.

    இயக்கம்

    ஹாட் ஸ்பாட் 2 மச் சுவாரஸ்யத்தில் பெரிய ஆச்சரியம் இல்லாவிட்டாலும், இளம் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் காமெடியை கலந்து, ஒரு பொழுதுபோக்கு படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். முதல் கதை பெரியதாக ஈர்க்க வில்லை. இரண்டாம், மூன்றாம் கதைகளை ரசிக்க முடிகிறது.

    இசை மற்றும் ஒளிப்பதிவு

    சதீஷ் ரகுநாதனின் இசையும், ஜகதீஷ் ரவியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

    ரேட்டிங்- 3/5


    One Battle After Another திரைப்படம் 13 பிரிவுகளில் இறுதிப்போட்டிக்கு நாமினேட் ஆகி உள்ளது.

    திரையுலகில் சர்வதேச அளவில் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16-ம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும்.

    இதற்கிடையே, நடப்பு ஆண்டில் 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் 24 பிரிவுகளில் வழங்கப்படும் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் சமீபத்தில் வெளியானது.

    இதில் 16 பிரிவுகளில் நாமினேட் ஆகி ஆஸ்கார் வரலாற்றிலேயே அதிக பிரிவுகளில் நாமினேட் ஆன படமாக சின்னர்ஸ் (Sinners) திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

    இயக்குநர் ரையன் கூக்லர் இயக்கிய 'சின்னர்ஸ்' திரைப்படம், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒப்பனை அலங்காரம், சிறந்த ஒலி, சிறந்த விஎப்எக்ஸ், சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் மற்றும் சிறந்த நடிகர் என 16 ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்போட்டியில் போட்டியிட தேர்வாகி உள்ளது.

    முன்னதாக ஆல் அபவுட் ஈவ், டைட்டானிக் மற்றும் லாலா லேண்ட் ஆகிய படங்களின் 14 பிரிவுகளில் போட்டியில் இருந்த நிலையில் சின்னர்ஸ் அந்த சாதனையை முறியடித்துள்ளது.

    சின்னர்ஸ் படத்திற்கு அடுத்தபடியாக இந்த வருட ஆஸ்காரில் லியனார்டோ டி காப்ரியோ நடித்த 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' (One Battle After Another) திரைப்படம் 13 பிரிவுகளில் இறுதிப்போட்டிக்கு நாமினேட் ஆகி உள்ளது.

    அடுத்ததாக 'மார்ட்டி சுப்ரீம்', 'சென்டிமென்டல் வேல்யூ' மற்றும் 'ப்ராங்கன்ஸ்டைன்' ஆகிய படங்கள் தலா 9 பரிந்துரைகளைப் பெற்றுள்ளன.

    F1, தி சீக்ரெட் ஏஜென்ட், டிரைன் ட்ரீம்ஸ், ஹாம்நெட், பிராங்கண்ஸ்டைன், பிகோனியா உள்ளிட்ட படங்களும் இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

    அதேநேரம் இந்தியாவின் சார்பில் ரேஸில் இருந்த ஜான்வி கபூரின் ஹோம்பவுண்ட் திரைப்படம் இறுதிப்போட்டிக்கு தேர்வாகாமல் ஏமாற்றம் அளித்தது. 

    ரஜினிகாந்துடன் சத்ருஹன் சின்ஹா, ஹேமமாலினி, அம்ரிஷ் புரி, ஜகதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ரஜினிகாந்த் தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு முதல் ஹாலிவுட் வரை பல படங்களில் நடித்துள்ளார்.

    குறிப்பாக 1980, 90களில் ரஜினி, சல் பஸ், ஹும் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்திருந்தார்.

    அந்த வகையில் ரஜினி நடித்த "ஹம் மே ஷாஹென்ஷா கவுன்" (உங்களில் யார் ராஜா) என்ற இந்தி படம் 1989 இல் படப்பிடிப்பு முடிந்தும் இன்னும் வெளியாகவில்லை.

    மறைந்த இயக்குனர் ஹர்மேஷ் மல்ஹோத்ரா இதனை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் சத்ருஹன் சின்ஹா, ஹேமமாலினி, அனிதா ராஜ், பிரேம் சோப்ரா மற்றும் மறைந்த நடிகர்கள் அம்ரிஷ் புரி, ஜகதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.

    படத்தின் தயாரிப்பாளரான ராஜா ராய் உடைய மகன் இறந்தது, இயக்குனரின் மறைவு ஆகியவற்றால் படம் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டது.

    தற்போது 37 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் படம் ஏப்ரல் 2026-ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தப் படம் 4K தரத்திற்கு மாற்றப்பட்டு மெருகூட்டப்பட்டுள்ளது என்று கூறபடுகிறது. 

    • இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • நீரஜ் கய்வான் இயக்கிய நிலையில், கரன் ஜோஹர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் படத்தை தயாரித்திருந்தனர்.

    வாஷிங்டன்:

    திரையுலகில் சர்வதேச அளவில் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16-ம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும்.

    இதற்கிடையே, நடப்பு ஆண்டில் 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் 24 பிரிவுகளில் வழங்கப்படும் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் சமீபத்தில் வெளியானது.

    இதில் இந்தியாவில் இருந்து 'ஹோம்பவுண்ட்' என்ற இந்தி படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பரிந்துரை பட்டியலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இப்படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் முன்னணி காதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நீரஜ் கய்வான் இயக்கிய நிலையில், கரன் ஜோஹர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் படத்தை தயாரித்திருந்தனர்.

    இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் இருந்து ஹோம்பவுண்ட் திரைப்படம் வெளியேறியது.

    தடயம் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் ஒரு முக்கிய படைப்புடன் வருகிறார். "தடயம்" எனும் இந்த புதிய படைப்பு, விரைவில் ZEE5-ல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில், அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியுள்ள "தடயம்", சமுத்திரகனியின் வலுவான நடிப்புத் திறனை மையமாகக் கொண்டு உருவான ஒரு தீவிரமான கதையம்சம் கொண்ட படைப்பாக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    இதற்கு முன்னதாக, சமுத்திரகனி இயக்கி நடித்த "விநோதய சித்தம்" திரைப்படம் ZEE5-ல் வெளியானபோது, விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, "தடயம்" திரைப்படமும் ZEE5 தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நினைவில் நிற்கும் அனுபவமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.

    கதையின் விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படாத நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் இப்படம் காவல்துறை பின்னணியில் ஒரு அழுத்தமான திரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×