என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'.
- இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடல் 'ஹே மின்னலே' ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பங்கேற்றனர்.
பல சுவாரசியமான விஷயங்கள் இசை வெளியீட்டு விழாவில் நடைப்பெற்றது. இயக்குனர் மணி ரத்னம் பேசுகையில் " நான் சாய் பல்லவிக்கு மிகப்பெரிய ரசிகை. உங்களுடன் இணைந்து ஒரு நாள் பணியாற்றுவேன் என நம்புகிறேன் என்றார்.
அதற்கு சாய் பல்லவி " நான் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் எனக்கு பல இயக்குனர்களின் பெயர் தெரியாது. ஆனால் சினிமாவில் எனக்கு தெரிந்த ஒரே இயக்குனரின் பெயர் அது மணி ரத்னம் தான்.இன்று வரை நான் எனது கதாப்பாத்திரங்களையும், படக்கதைகளையும் தேர்ந்தெடுப்பதற்கு மிக முக்கிய காரணம் மணி ரத்னம் சார் தான் " என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜெயம் ரவி தற்போது ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஜெயம் ரவி தற்போது ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.
திரைப்படத்தின் ஜெயம் ரவியுடன், சரண்யா பொன்வண்ணன்,பூமிகா, விடிவி கணேஷ், சீதா, நட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தின் டீசர் மற்றும் மக்காமிஷி என்ற பாடல் மிகப்பெரியளவில் ஹிட்டாகியது.
தற்பொழுது திரைப்படத்திற்கு யு சான்றிதழை தணிக்கை குழு கொடுத்துள்ளது. படத்தின் காலநேரம் 2 மணி நேரம் 20 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
திரைப்படம் ஒரு அக்கா மற்றும் தம்பி பாசப்பின்னணியில் கதைக்களம் அமைந்துள்ளது. திரைப்படம் தீபாவளிக்கு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'.
- இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடல் 'ஹே மின்னலே' ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பங்கேற்றனர்.
பல சுவாரசியமான விஷயங்கள் இசை வெளியீட்டு விழாவில் நடைப்பெற்றது. சிவகார்த்திகேயன் சில விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார் அதில் பிரேமம் திரைப்படம் வெளியான போது படத்தை பார்த்துவிட்டு நானும் மலர் டீச்சருக்கு ரசிகனானேன். பிறகு சாய் பல்லவியின் போன் நம்பரை கண்டுபிடித்து கால் செய்து மலர் டீச்சராக அருமையாக நடித்ததற்காக வாழ்த்து தெரிவித்தேன். அப்பொழுது அவர் போனில் " அண்ணா... தேங்க் யூ சோ மச் அண்ணா.." என்றார். நான் ஆனாலும் அதை கண்டுக்காமல் வேறு சீன்களை பற்றி பேசினேன் ஆனாலும் அவர் தேங்க் யூ அண்ணா சொல்வதை நிறுத்தவில்லை.
பிறகு " ஹே ஸ்டாப் நான் மலர் டீச்சரா மன்சுல நெனசு பேசுறேன் நீயும் அப்படியே பேசு இல்லன்னா அந்த படத்துல வந்த மாதிரி மறந்துக் கூட போயிடு ஆனா என்ன அண்ணான்னு மட்டும் சொல்லாத" என மிகவும் நகைச்சுவை பாணியில் கூறியுள்ளார். இதைக்கேட்ட அரங்கம் சிரிப்பலையில் மூழ்கியது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்
- திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கவின் ஒரு பிச்சைகாரன் தோற்றத்தில் காணப்படுகிறார். இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நெல்சன் பேசியதாவது " முதலில் இப்படத்திற்கு கதாநாயகனாக கவின் வேணும் என இயக்குனர் சிவபாலன் கூறும் போது நான் அதை மறுத்தேன் அப்பொழுது கவினின் டாடா திரைப்படம் வெளியாகவில்லை. சிவபாலனிடம் நீ நட்புக்காக எதுவும் செய்ய வேண்டாம் அதை தனியாக செய்துக்கொள் என்றேன். ஆனாலும் அவன் பிடிவாதமாக எனக்கு கவின் தான் கதாநாயகனாக வேண்டும் என்றான். படப்பிடிப்பு பணி முடித்தப்பின் திரைப்படத்தை பார்த்த பிறகுதான் தெரிகிறது. கவின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த கதாப்பாத்திரத்தில் இவரை தவிர வேறு ஒருவரை பொறுத்தி பார்க்க முடியவில்லை. இதற்குமுன் இப்படத்திற்கு நடிகர் தனுஷ் அல்லது விஜய் சேதுபதியைதான் நடிக்க வைக்க வேண்டும் என இருந்தேன்" என கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த வருடம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ.
- லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த வருடம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. வசூல் ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற லியோ வெளியாகி இன்றுடன் 1 வருடம் நிறைவடைந்துள்ளது
இந்த ஓராண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, தி கிரானிகல்ஸ் ஆகஃப் லியோ[The Chronicles Of Leo] என்ற தலைப்பில் அப்டேட் ஒன்றை செவன் ஸ்க்ரீன் படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் அல்லது BTS எனப்படும் படப்பிடிப்புக்கு நடுவே நடந்த நிகழ்வுகள் குறித்த சிறப்புத் தொகுப்பு வெளியிடப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில தீவிர ரசிகர்கள் இது லியோ 2 படத்துக்கான அப்டேட் ஆக இருக்குமோ என்றும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கிடையே லியோ படம் ஓராண்டு நிறைவு குறித்து லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- பரஸ்பரம் விவாகரத்து கோரி இருவர் தரப்பிலும் சென்னை குடும்ப நல நீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.
சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர். இவ்விவகாரம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பரஸ்பரம் விவாகரத்து கோரி இருவர் தரப்பிலும் சென்னை குடும்ப நல நீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு மீதான விசாரணையை அக். 7-ந்தேதிக்கு ஒத்திவைத்து, இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த அக்.7-ந்தேதி நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகாததால் விசாரணையை 19-ந்தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு 2-வது முறையாக தனுஷூம் ஐஸ்வர்யாவும் ஆஜராகவில்லை.
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கு விசாரணையை நவ.2-ந்தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது
- ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
நடிப்பு, இயக்கம் என பிஸியாக இயங்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜியும் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா. ரஞ்சித் தற்போது வெளியிட்டுள்ளார்.
ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை இயக்கி உள்ளார். படத்திற்கு சொர்கவாசல் என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குநர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளனர்.
கடைசியாக ஆர்.ஜே.பாலாஜி அவரே இயக்கி நடித்த சிங்கப்பூர் சலூன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் சொர்கவாசல் பாலாஜிக்கு கை கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.455 கோடி வரை வசூலை எடுத்தது.
- ரஜினிகாந்த் தன்னை தொடர்புகொண்டு பாராட்டியதாகப் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (தி கோட்). இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்தனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் கடந்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.455 கோடி வரை வசூலை எடுத்தது. தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னை தொடர்புகொண்டு பாராட்டியதாகப் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " போன் செய்து கோட் படத்தை அன்புடன் பாராட்டியதற்காக நன்றி தலைவா. முழு மனதார பாராட்டியதற்காக மீண்டும் நன்றி" எனக் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரஜினியின் வேட்டையன் பட ரிலீஸான போது விஜய்யும் வெங்கட் பிரபுவும் திரையரங்கில் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜே-ஹோப் [30 வயது] தனது ராணுவ சேவையை முடித்துள்ளார்
- ராணுவ சேவையை நல்ல உடல்நலத்தோடு, பாதுகாப்பாக முடித்ததாக தெரிவித்தார்
தென் கொரியாவில் 7 இளைஞர்களால் உருவான BTS இசைக்குழு எல்லைகள் கடந்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைத் தனது இசையால் கட்டிப்போட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இந்த கே- பாப் இசைக்கு ரசிகர்கள் அதிகம்.
ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப், ஜிமின், வி, ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களைக் கொண்ட இந்த இசைக்குழு உலகம் முழுவதும் சென்று தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதற்கிடையே தென் கொரியாவில் இளைஞர்கள் கட்டாயம் ராணுவ சேவை செய்யவேண்டும் என்ற விதி உள்ளதால் BTS குழுவைச் சேர்ந்தவர்களும் ராணுவ சேவைக்கு சென்றனர். இதில் ஜின்னின் சேவைக் காலம் கடந்த ஜூன் மாதம் முடிந்தது.
தொடர்ந்து தற்போது ஜே-ஹோப் [30 வயது] தனது ராணுவ சேவையை முடித்துக் கொண்டு நேற்று முன் தினம் [வியாழக்கிழமை] வெளியே வந்துள்ளார். கேங்வான் மாகாணத்தில் உள்ள வோன்ஜுவில் உள்ள ராணுவ தளத்தில் தனது சேவையை முடித்துக்கொண்டு அங்கிருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்த அவரை பார்க் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஜின்னும் அங்கு வந்து அவரை வரவேற்றார்.

தொடர்ந்து பயிற்சி குறித்து பேசிய ஜே-ஹோப், ராணுவ சேவையை நல்ல உடல்நலத்தோடு, பாதுகாப்பாக முடித்ததாக தெரிவித்தார். தொடர்ந்து BTS குழு வேளைகளில் அவர் மீண்டும் ஈடுபட உள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
- இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'.
- இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடல் 'ஹே மின்னலே' ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
படத்தின் இசை வெளியீட்டு விழா தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு பங்கேற்றுள்ளனர்.
விழாவிற்கு சிவகார்த்திகேயன் என்.சி.சி மாணவர்களின் அணுவகுப்புடன் உள்ளே வந்தார். விழாவில் தொகுப்பாளர் லோகேஷ் கனகராஜிடம் " எங்க டான்ன எப்போ வச்சு ஒருப்படம் பண்ண போறீங்க" அதற்கு லோகேஷ் கனகராஜ் " ரொம்ப நாளா பேசிட்டு இருக்குற விசயம் தான் சீக்கிரமே பண்ணிடலாம் அதான் துப்பாக்கிய கையில வாங்கிடார்ல" என்றதும் அரங்கமே அதிர்ந்தது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'.
- திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 20 ஆம் தேதி சென்னை சாய் ராம் கல்லூரியில் நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகளை வட இந்தியாவில் படக்குழு தொடங்கியது. படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றது.
கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான் Vamos Brincar Babe என்ற பாடல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் புது உலக கதாப்பாத்திர சூர்யாவும் திஷா பதானியும் கையில் பாட்டிலுடன் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.
- தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார்.
சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் கண்டனங்களை பதிவு செய்து இருந்தனர்.
இந்நிலையில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற உயிர் வாக்கியத்தைத் தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து தவிர்த்ததைக் காதும் கண்ணுமுள்ள தமிழர்கள் கடந்துபோக மாட்டார்கள் என்று கவிஞர் வைரமுத்து கண்டனத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழையும்
தமிழ் நாட்டையும்
திராவிடக் கருத்தியலையும்
எதிர்க்கும் அல்லது இழிவுசெய்யும்
பல நிகழ்வுகளைக் கண்டும்
காணாமல் போயிருக்கிறோம்
ஆனால்,
தமிழ்த்தாய் வாழ்த்தில்
"தெக்கணமும் அதிற்சிறந்த
திராவிடநல் திருநாடும்"
என்ற உயிர் வாக்கியத்தைத்
தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து
தவிர்த்ததைக்
காதும் கண்ணுமுள்ள தமிழர்கள்
கடந்துபோக மாட்டார்கள்
இருதயக் கூடு எரிகிறது
எவ்வளவுதான்
பொறுமை காப்பது?
இந்தச் செயலுக்குக்
காரணமானவர்கள்
யாராக இருந்தாலும்
தமிழர்கள் அவர்களை
மன்னிக்கவே மாட்டார்கள்
"திராவிட" என்ற
சொல்லை நீக்கிவிட்டு
தேசிய கீதத்தைப் பாடமுடியுமா?
தமிழ்த்தாய் வாழ்த்தில்
தவிர்ப்பதற்கு மட்டும்
யார் தைரியம் கொடுத்தது?
திராவிடம் என்பது நாடல்ல;
இந்தியாவின்
ஆதி நாகரிகத்தின் குறியீடு
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்
இதுபோன்ற இழிவுகள்
தொடர்ந்தால்
மானமுள்ள தமிழர்கள்
தெருவில் இறங்குவார்கள்;
தீமைக்குத் தீயிடுவார்கள்
மறக்க வேண்டாம்
தாய்மொழி காக்கத் தங்கள்
உடலுக்கும் உயிருக்குமே
தீவைத்துக் கொண்டவர்கள்
தமிழர்கள்
அந்த நெருப்பின் மிச்சம்
இன்னும் இருக்கிறது எங்களிடம்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






