என் மலர்
சினிமா செய்திகள்
பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பெங்களூரு சென்றிருந்தார். பெங்களூருவில் கட்டப்பட்டு இருந்த கிம்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் திறப்பு விழா நேற்று (மார்ச் 8) நடைபெற்றது. இதனை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். பங்கேற்றது அந்த விழாவுக்கு வந்தவர்களை திணறடித்தது.
ஜூனியர் என்.டி.ஆர். மருத்துமனையை திறந்து வைக்கும் தகவல் அறிந்து அங்கு கூடிய ரசிகர்களால் பரபரப்பான சூழல் உருவானது. மிகக் குறுகிய இடத்தில் ஒரே நேரத்தில் ரசிகர்கள் திரண்டதால், மருத்துவமனைக்குள் தள்ளுமுள்ளு சூழல் உருவானது. அளவுக்கு அதிகமான கூட்டத்தை கட்டுப்பட்டுத்த முடியாமல் விழா ஏற்பட்டாளர்கள் திணறினர்.
இதையடுத்து காவல் துறையினர் கூட்டத்திற்குள் நுழைந்து ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ காண ஒன்று திரண்ட ரசிகர்களால் திறப்பு விழாவுக்காக தயாராகி இருந்த நகரும் படிக்கட்டுகள் உள்பட மருத்துவமனை உள்கட்டமைப்புகள் சேதமடைந்தது.
புதிய மருத்துவமனை திறப்பு விழாவின் போது திடீரென அளவுக்கு அதிகமான ரசிகர்கள் ஒரே இடத்தில் கூடியது, அங்கு கூட்ட நெரிசல் போன்ற சூழ்நிலையை உருவாக்கியது.
- சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார்.
- சஞ்சு சாம்சனின் இந்த சிறப்பான ஆட்டத்தால் தான் இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3 ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 89 ரன்கள் விளாசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த தொடரில் தொடக்கத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியிலும், அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து மூன்று அரைசதங்கள் விளாசிய சஞ்சு சாம்சன் இந்த தொடரில் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்து தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார்.
சஞ்சு சாம்சனின் இந்த சிறப்பான ஆட்டத்தால் தான் இந்தியா கோப்பையை கைப்பற்றியது என்று சொன்னால் அது மிகையாகாது. அவ்வகையில் சஞ்சு சாம்சனின் மறக்கமுடியாத இந்த உலகக்கோப்பை ஆட்டத்தை பாராட்டி பிரபல மலையாள நடிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் சஞ்சு சாம்சனை புகழ்ந்து பதிவிட்டுள்ளனர்.
- சிவாத்மிகா, தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.
- யதார்த்த கதைகளில் நடித்துவிட்டேன்.
'இதுதாண்டா போலீஸ்' படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்த டாக்டர் ராஜசேகர் -ஜீவிதாவின் இளைய மகள் ஷிவாத்மிகாவும் நடிகை ஆவார். தமிழில் 'பாம்', 'ஆரோமலே' படங்களில் நடித்துள்ள சிவாத்மிகா, தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷிவாத்மிகாவிடம், 'என்ன மாதிரியான கதைகளில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கும் போது, "யதார்த்த கதைகளில் நடித்துவிட்டேன். எனக்கு ஆக்ஷன் கதா பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. எனது தந்தையை போல ஆக்ஷனில் கலக்க விரும்புகிறேன். அதேவேளை காதல் நிரம்பி வழியும் படங்களிலும் நடிக்க துடிக்கிறேன். நல்ல கதைகள் அமையும் என்று நம்புகிறேன்" என்றார்.
- குந்தவையை வெளியே வராம பார்த்துக்கோங்க.
- மைக் முட்டாள்தனத்தை உரக்கச் சொல்ல மட்டுமே உதவும்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் திரிஷாவை மறைமுகமாக தாக்கி நடிகர் பார்த்திபன் பேசியிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில், த்ரிஷாவின் புகைப்படம் காண்பிக்கப்பட்டு பார்த்திபனிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு," இந்த குந்தவையை கொஞ்ச நாள் வீட்டிலேயே குந்தவைக்கிறது (உட்கார வைப்பது) நல்லதுங்க. வெளியே வராம பார்த்துக்கோங்க. அதனால நிறைய பிரச்சனைகள் உண்டாகமா பார்த்துக்கலாம்.
அதனால சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர, அந்த கவிதையை சொல்லாம இருக்கிறது பெட்டர்ன்னு நினைக்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
பார்த்திபனின் கருத்துக்கு, நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து த்ரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்தாவது:-
ஒரு மைக்ரோ போன், ஒரு கருத்தை அறிவார்ந்தது அல்லது நகைச்சுவையானது என மாற்றிவிடாது. அது முட்டாள்தனத்தை உரக்கச் சொல்ல மட்டுமே உதவும். அறிவு இல்லாமல் பேசப்படும் தரம் குறைந்த வார்த்தைகள், அவை யாரை நோக்கி வீசப்படுகிறதோ அவரை விட, பேசுபவரின் தரத்தையே அதிகம் வெளிப்படுத்திவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திரிஷா கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது. இதில் வருந்துவதை தவிர வேறு வழியில்லை" என்று கூறி நடிகர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
- விஜய் குமார் தற்போது அறிவு என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
- சத்யசிவா அறிவு படத்தை இயக்கியுள்ளார்.
'உறியடி', 'உறியடி 2', 'ஃபைட் கிளப்' என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை அடுத்து விஜய் குமார் தற்போது அறிவு என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மகளிர் தினத்தை ஒட்டி வெளியிடப்பட்டுள்ளது.
பெண் உரிமைகளை மையமாகக் கொண்டு வலுவான சமூகச் செய்தியுடன் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
- விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சங்கீதா முன்வைத்தார்.
- கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண விழாவில் ஒரே காரில் திரிஷாவுடன் விஜய் வந்தார்.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் குறித்து கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. இதனிடையே கரூர் சம்பவத்தை அடுத்து அவர் மீது குற்றச்சாட்டுகள், வழக்குகள் என நடைபெற்று வருகிறது. இதற்கெல்லாம் அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையே, விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவரது மனைவி சங்கீதா முன்வைத்தார். இதுதொடர்பாக மறுப்பு எதுவும் தெரிவிக்காத விஜய், சங்கீதா கூறியது உண்மை என்பதை மெய்பிக்கும் வகையில் கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண விழாவில் ஒரே காரில் திரிஷாவுடன் விஜய் ஒன்றாக வந்தது அமைந்தது. இதுதொடர்பாக விஜய் மீது கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. முன்னதாக விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்கள் கூட தற்போது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒரே காரில் விஜய் - திரிஷா வந்தது குறித்து நடிகர் விமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சட்டென விமல், "அந்தக் காரை இப்போ யாரு வச்சிருக்கா" என்று கூறியதும் அங்கிருந்தவர்கள் சிரிக்க தொடங்கினர்.
இது தொடர்ந்து விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லாமல் மழுப்பலான பதில்களை விமல் கொடுத்தார்.
- விஜயின் வாகனத்தை ரசிகர்கள் பின்தொடர்ந்து பயணம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.
- விபத்தில் சிக்கி திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரத்திற்கு செல்லும் போதெல்லாம் அவரது வாகனத்தை ரசிகர்கள் பின்தொடர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.
அண்மையில் தஞ்சாவூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று, விபத்தில் சிக்கி திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார்
இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் விமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், நடிகரை பிடிக்கும் என்றால் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உயிரை பணயம் வைத்து வாகனத்தை விரட்டி பின்தொடராதீர்கள் என்று விஜய் வாகனத்தை விரட்டும் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார்.
- விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார்.
- நடிகையுடன் விஜய் ஜோடியாக வலம் வந்தது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
சென்னையில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் நடிகர் விஜய்யும், நடிகை திரிஷாவும் ஜோடியாக பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், நடிகையுடன் அவர் ஜோடியாக வலம் வந்தது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் விஜய்க்கு எதிர்ப்புகளும், ஆதரவும் எழுந்து வரும் நிலையில், கிருத்திகா உதயநிதி வெளியிட்ட ஒரு பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவியும், சினிமா இயக்குனருமான கிருத்திகா உதயநிதி தனது 'எக்ஸ்' பக்கத்தில், 'பிரபலம் என்பது யார்? நீங்களும், உங்கள் மீதான மக்களின் பார்வை மற்றும் புரிதல் தான் உங்களை ஒரு பிரபலமாக்குகிறது. ஆனால் மக்களின் பார்வை தான் நான் என்று நினைத்துக்கொண்டு, உங்கள் சுய அடையாளத்தை நீங்கள் இழக்கும்போது, நீங்கள் கடுமையான பிரச்சனையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்', என்று குறிப்பிட்டுள்ளார்.
இது பிரச்சனையில் மாட்டிக்காதீங்க... என்று நடிகர் விஜய்யை, கிருத்திகா உதயநிதி மறைமுகமாக தாக்கி எச்சரிப்பதாக இருக்கிறது என்று பேசப்படுகிறது.
- நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதி மறுப்பதால் சென்னையில் வீடின்றி தவிக்கிறேன் என்று சங்கீதா குற்றச்சாட்டு
- ஹர்ட் ஆகாதீர்கள், இது அந்த அளவிற்கு WORTH இல்லை என்று விஜய் பேசினார்.
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி செங்கல்பட்டு குடும்பல நல நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளதாக கடந்த மாதம் 27-ந்தேதி செய்திகள் வெளியாகின. சங்கீதா தாக்கல் செய்த மனுவில் விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார்.
இந்த நிலையில், தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு விஜய்க்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில் நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதி மறுப்பதால் சென்னையில் வீடின்றி தவிக்கிறேன். விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க விஜய் அனுமதிக்க வேண்டும். விஜய் வசிக்கும் நீலாங்கரை இல்லத்தில் தனக்கு சரிபாதி உரிமை உள்ளது. நீலாங்கரை வீட்டில் வசிப்பதற்கு அனுமதி கோரினால் வழக்கறிஞர் மூலமாக விஜய் தரப்பு மிரட்டுகின்றனர்.
படத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கும் விஜய் தனக்கும், பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும். விஜய் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் நியாயமாக சேர வேண்டியதை வழங்க வேண்டும். பலமுறை முயற்சித்தும் பரஸ்பரம் பிரிந்து செல்ல விஜய் மறுப்பு தெரிகிறார் என்று சங்கீதா கூறியுள்ளார்.
சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு குறித்து தவெக மகளிர் தின விழா கொண்ட்டாட்டத்தில் பேசிய விஜய், "சமீபத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு நீங்கள் போராடி, ஹர்ட் (hurt) ஆவதை நான் பார்க்கிறேன். அதை பார்த்து எனக்கு ஹர்ட் ஆகிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்களும், நானும் மக்களின் பிரச்சினைகளை மட்டும் பார்ப்போம், சரியா. ஹர்ட் ஆகாதீர்கள், இது அந்த அளவிற்கு WORTH இல்லை" என்றார்.
விஜயின் இந்த பேச்சுக்கு தவெக பெண் நிர்வாகிகள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். இந்நிலையில், விஜயின் இந்த பேச்சை நடிகை சனம் செட்டி விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், என்னது?? WORTH ஏ இல்லியா ??? இதற்கு பெண்கள் கைதட்டி உற்சாகம் அடைகின்றனர்" என்று விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக விஜயை ஆதரித்து வீடியோ வெளியிட்டு வந்த சனம் செட்டி, திருமண விழாவில் திரிஷாவுடன் ஒரே காரில் ஒரே நிறத்திலான ஆடைகள் அணிந்து வந்த வீடியோவை பகிர்ந்து எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரபுதேவாவுடன் இணைந்து அந்த சிறுவர்கள் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
- சாய் அபயங்கரின் பவழ மல்லி பாடலின் ப்ரோமோவிலும் அந்த சிறுவர்கள் நடித்திருந்திருந்தனர்.
இன்ஸ்டாகிராமில் நான் உங்கள் தேவா என்று பேச தொடங்கி 2 சிறுவர்கள் வைரலானார்கள். தற்போது இந்த சிறுவர்கள் பல திரை பிரபலங்களோடு இணைந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.
அண்மையில் பிரபுதேவாவுடன் இணைந்து அந்த சிறுவர்கள் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும், சாய் அபயங்கரின் பவழ மல்லி பாடலின் ப்ரோமோவிலும் அந்த சிறுவர்கள் நடித்திருந்திருந்தனர்.
இந்நிலையில், நடிகர் பார்த்திபனுடன் இணைந்து அந்த சிறுவர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இதை பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் துபாய்க்கு செல்ல பார்த்திபனிடம் சிறுவர்கள் வழி கேட்கின்றனர். அதற்கு அவர் வெற்றிக்கொடி கட்டு பட பணியில் பதில் கூறுகிறார். இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
- பூமியை நாம் பூமா தேவி என்றே அழைக்கிறோம்.
- எவனோ even அவன் எமனோ அவனை ஈன்றதும் ஒரு பெண்ணே
உலக மகளிர் தினத்தையொட்டி திரைப்பட நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
It's WORTH ! Worth & worth!
Because women is another EARTH .
பூமியை நாம்
பூமா தேவி என்றே அழைக்கிறோம்.
சாமா நாதன் என்று ஆணின் பெயர் கொண்டு அழைப்பதில்லை.
எவனோ even அவன் எமனோ அவனை
ஈன்றதும் ஒரு பெண்ணே,
சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு women-ஏ !
Happy WOMEN'S DAY !
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.
- இசை நிகழ்ச்சியை காண வந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
2017ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்திருந்த மீசைய முறுக்கு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே இதையும் ஹிப்ஹாப் தமிழா ஆதியே இயக்கி, இசையமைக்கிறார்.
இந்நிலையில், ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சி நேற்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ (YMCA) மைதானத்தில் நடைபெற்றது.
அப்போது எதிர்நீச்சல் படத்தில் இடம்பெற்ற எதிர்நீச்சல் அடி பாடலை ஹிப் ஹாப் ஆதி பாடினார். அப்போது திடீரென மேடையில் தோன்றிய அனிருத் அவருடன் இணைந்து அப்பாடலை பாடினார். இதனால் இசை நிகழ்ச்சியை காண வந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.






