என் மலர்
சினிமா செய்திகள்
ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் படத்தில் அஜித், விஜய் வில்லன்கள் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #BreakingNews
ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'பிரேக்கிங் நியூஸ்'. இப்படத்தில் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வரும் நிலையி, ராகுல் தேவ் (அஜித்தின் வேதாளம் புகழ்) மற்றும் தேவ் கில் (மகதீரா மற்றும் விஜய்யின் சுறா புகழ்) ஆகியோர் இந்த படத்தில் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருக்கிறது.
இது குறித்து இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறும்போது, ‘நிச்சயமாக, சூப்பர் ஹீரோவுக்கு இணையாக சக்திவாய்ந்த சூப்பர் வில்லன்கள் இருக்கும் போது மட்டுமே மோதலின் தீவிரம் மிகவும் கடுமையானதாக இருக்கும். ஜெய்யை நாயகனாக நடிக்க முடிவெடுத்த போதே, எங்கள் அடுத்த வேலை, தோற்கடிக்க முடியாத ஒரு வில்லனை தேடும் படலத்தில் தொடர்ந்தது.
நிறைய விஷயங்களை மனதில் வைத்து வில்லனை தேடியபோது, ராகுல் தேவ் மற்றும் தேவ் கில் ஆகியோரை நடிக்க வைக்க முடிவெடுத்தோம். இருவருமே சினிமா அர்ப்பணிப்பு உடையவர்கள், வில்லனாக நடித்தாலும் அகில இந்திய அளவில் பிரபலமானவர்கள். இந்த படத்தில் இருவரும் சகோதரர்களாக நடிக்கிறார்கள், ராகுல் தேவ் ஒரு சக்தி வாய்ந்த சர்வதேச தாதாவாக நடிக்கிறார். ஒரு சாதாரண மனிதர் தன்னுடைய மக்களின் நலனுக்காக சூப்பர் சக்திகளை வைத்து எப்படி போராடுகிறார் என்பது தான் கதை" என்றார்.

இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் அந்நியன், முதல்வன் உட்பட 90க்கும் மேற்பட்ட படங்களுக்கு VFX மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய் மற்றும் பானுஸ்ரீ முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை நாகர்கோவில் சார்ந்த திருக்கடல் உதயம் தயாரிக்கிறார். ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பை கையாள்கிறார். விஷால் பீட்டர் இசையமைக்க, மகேஷ் கலை இயக்குனராகவும், ராதிகா நடன இயக்குனராகவும் பணிபுரிகிறார்கள்.
சில்க் சுமிதாவை தொடர்ந்து சகுந்தலா தேவியின் பயோபிக் படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகை வித்யாபாலன். #VidyaBalan #ShakuntalaDevi
கணக்கு புலி, மனித கணிப்பொறி என்று சிறப்புப் பெயர் கொண்டு குறிப்பிடப்படும் சகுந்தலா தேவியின் பயோபிக் சினிமாவில் வித்யாபாலன், சகுந்தலா தேவியாக நடிக்க இருக்கிறார். இந்த செய்தியை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்த படத்தை அனு மேனன் இயக்குகிறார். இவர் சில ஆங்கில படங்களை இயக்கியுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்களைப் பெருக்கி விடை கூறுவதில் இயந்திரத்தைவிட மின்னல் வேகத்தில் கூறும் திறன் கொண்டவர் சகுந்தலா. எண்களின் கனமூலத்தைச் சொல்வதில் பலமுறை கணினியைத் தோற்கடித்துள்ளார்.

1980-ல் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் இரண்டு 13 எண்களைப் பெருக்கி, 23 விநாடிகளில் பதில் கூறி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். கணிதம் தவிர, நாவல்கள், சமையல் குறிப்புகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் மீது உதவி இயக்குனர் ஜெயம் கொண்டான் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். #Parthiban
பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன். இவரிடம் உதவியாளராக பணிபுரியும் ஜெயம் கொண்டான், தன்னை பார்த்திபன் கொலை செய்ய முயற்சி செய்ததாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், நான் பாடல் ஆசிரியராக இருக்கிறேன். நடிகர் பார்த்திபன் இயக்குனர் என்ற முறையில் 10 வருடமாக பழகி வருகிறேன். அவருக்கு ஆபிஸ் வேலை, வீட்டு வேலை, தோட்ட வேலை என எல்லா வேலைகளையும் எடுத்துக்கட்டி செய்து வந்தேன். இப்போது எடுத்துக் கொண்டு இருக்கும் ‘ஒத்த செருப்பில்’ தொடர்ந்து பணிபுரிந்து வருகிறேன்.
பார்த்திபனால் வேலையில் இருந்து நீக்கப்பட்டவரிடம் இவரது தோட்ட வேலை காரணமாக ஒரு அட்ரஸ் கேட்டேன். இவருக்காக அட்ரஸ் கேட்ட என்னை நுங்கம்பாக்கம் 4 பிரேம் தியேட்டரில் 3வது மாடியில் வைத்து 8/5/2019 சுமார் 3 மணியளவில் இவரும் இவரது உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் என்னை அடித்து உதைத்து மாடியில் இருந்து தள்ளிவிட பார்த்தனர். நான் அவரிடம் இருந்து தப்பித்து வந்துவிட்டேன். 4 பிரேம் தியேட்டரில் 3வது மாடியில் உள்ள சிசிடிவி-யில் இந்த காட்சி பதிவாகியிருக்கும்.

என்னைப் போல் எத்தனையோ உதவி இயக்குனர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இவரால் என் உயிர்க்கு ஆபத்து நேரிடும் என்பதால் எனக்கு தக்க பாதுகாப்பு கேட்டு இவ்விண்ணப்பத்தை கோருகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் கூறியிருக்கிறார்.
மு.களஞ்சியம் இயக்கத்தில் சீமான், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் நாயகனாக நடிக்கும் ‘முந்திரிக்காடு’ படத்தின் முன்னோட்டம். #Munthirikaadu
தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘முந்திரிக்காடு’.
இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - ஜி.ஏ.சிவசுந்தர், இசை - ஏ.கே.பிரியன், படத்தொகுப்பு - எல்.வி.கே.தாஸ், பாடல்கள் - கவிபாஸ்கர், கலை - மயில்கிருஷ்ணன், ஸ்டண்ட் - லீ.முருகன், தயாரிப்பு மேற்பார்வை - டி.ஜி. ராமகிருஷ்ணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மு.களஞ்சியம்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, “ ‘முந்திரிக்காட்டு மக்களின் வாழ்க்கை படம். யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலை உயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதை பதிவு செய்கிறோம் என்றார். #Munthirikaadu
வீட்டுக்குள் புகுந்து டிவி நடிகையை திருமணம் செய்வதாக கூறி மிரட்டல் விடுத்த என்ஜினீயரிங் மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Rithika
போரூர்:
பிரபல டிவி சீரியல் நடிகை ரித்திகா. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
இவர் வடபழனி நூறடி சாலையில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தந்தை சுப்பிரமணியுடன் வசித்து வருகிறார்.
இன்று காலை குடியிருப்புக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் நடிகை ரித்திகாவின் வீட்டிற்கு சென்றார். அவர் கதவைத் தட்டியதும் ரித்திகாவின் தந்தை சுப்பிரமணி அங்கு வந்தார். அப்போது அந்த வாலிபர் நடிகை ரித்திகாவை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அந்த வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே வாலிபர் நடிகையை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். அப்போது நடிகை ரித்திகாவும் இருந்தார்.
இதற்குள் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்களும், குடியிருப்பு காவலாளியும் அங்கு வந்தனர். அவர்கள் மிரட்டல் விடுத்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை வடபழனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பரத் என்பது தெரிந்தது. என்ஜினீயரிங் மாணவரான அவர் வேலை சம்பந்தமாக சென்னை வந்துள்ளார். இன்று சொந்த ஊருக்கு செல்ல இருந்த நிலையில் நடிகையின் வீட்டிற்கு வந்து ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார்.
போலீசாரின் விசாரணையின் போதும் நடிகையை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக பரத் தொடர்ந்து கூறி வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிடிபட்ட பரத்திடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Rithika
பிரபல டிவி சீரியல் நடிகை ரித்திகா. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
இவர் வடபழனி நூறடி சாலையில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தந்தை சுப்பிரமணியுடன் வசித்து வருகிறார்.
இன்று காலை குடியிருப்புக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் நடிகை ரித்திகாவின் வீட்டிற்கு சென்றார். அவர் கதவைத் தட்டியதும் ரித்திகாவின் தந்தை சுப்பிரமணி அங்கு வந்தார். அப்போது அந்த வாலிபர் நடிகை ரித்திகாவை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அந்த வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே வாலிபர் நடிகையை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். அப்போது நடிகை ரித்திகாவும் இருந்தார்.
இதற்குள் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்களும், குடியிருப்பு காவலாளியும் அங்கு வந்தனர். அவர்கள் மிரட்டல் விடுத்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை வடபழனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பரத் என்பது தெரிந்தது. என்ஜினீயரிங் மாணவரான அவர் வேலை சம்பந்தமாக சென்னை வந்துள்ளார். இன்று சொந்த ஊருக்கு செல்ல இருந்த நிலையில் நடிகையின் வீட்டிற்கு வந்து ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார்.
போலீசாரின் விசாரணையின் போதும் நடிகையை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக பரத் தொடர்ந்து கூறி வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிடிபட்ட பரத்திடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Rithika
‘சர்கார்’ படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் எந்த தமிழ்ப்படத்திலும் ஒப்பந்தமாகாத நிலையில், தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. #KeerthySuresh
‘இது என்ன மாயம்‘ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தன் அடுத்தடுத்த படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘நடிகையர் திலகம்‘ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது.
இனி தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறியிருந்தார். அதனாலேயே, ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். நரேந்திரநாத் இயக்கத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

அடுத்து போனி கபூர் தயாரிப்பில், அஜய் தேவ்கனுடன் பாலிவுட் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, நாகேஷ் குகுனூர் இயக்கத்தில், ஸ்போர்ட்ஸ் காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில், அவருக்கு ஜோடியாக ஆதி நடிக்கிறார்.
கீர்த்தியின் கைவசம் தற்போது எந்த தமிழ்ப் படமும் இல்லை. இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KeerthySuresh #KarthickSubbaraj
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் `சங்கத்தமிழன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. #SangaTamizhan #VijaySethupathi
‘வாலு’, `ஸ்கெட்ச்‘ ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து `சங்கத்தமிழன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் முறுக்கு மீசையுடன் வித்தியாசமான தோற்றத்தில் விஜய்சேதுபதி உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் நிலையில், விஜய் சேதுபதி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில், இரட்டை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாசர், சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர். #SangaTamizhan #VijaySethupathi #VijayChander #RaashiKhanna #NivethaPethuraj
சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா இணைந்து நடிக்கும் `100' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார். #Atharvaa #Hansika
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 100. முதன்முறையாக அதர்வா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் நாளை ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக படத்தின் இயக்குநர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் சாம் ஆண்டன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
Thanks for all the wonderful reviews for #100 .. me and my team have given our heart and soul for this film .. we r really sorry we cudn release our film in time .. sorry guys 100 won't release tomorrow ..
— sam anton (@samanton21) May 8, 2019
My job is done
Moving on to GURKHA :)
100 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. எங்களது இந்த படத்தை குறித்த நேரத்தில் ரிலீஸ் செய்ய முடியாததற்காக வருந்துகிறேன். இதில் என் தவறு ஏதும் இல்லை. மன்னிக்கவும். இவ்வாறு கூறியிருக்கிறார்.
ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ், அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். #Atharvaa #Hansika
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த போவதாக பாடகி சின்மயி கூறியுள்ளார். #Chinmayi #RanjanGogoi
சென்னை:
தமிழ் சினிமாவில் பாடகியாகவும் டப்பிங் கலைஞராகவும் விளங்குபவர் சின்மயி.
பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் கொடுமைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்காக தொடங்கப்பட்ட மீடூ இயக்கத்தில் தமிழகத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளில் இருந்து மற்றவர்களுக்கு நிகழ்ந்த சம்பவங்களையும் வெளியே கூறினார்.
சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக உச்சநீதி மன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாருக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்தது.
இதன் அடிப்படையில், அந்தப் பெண்ணின் புகாரை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறைகளுக்கு சில வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இது குறித்து சின்மயி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
நான் கமிஷனர் அலுவலகத்தில் நுழைந்த உடனே அங்கு இருந்த பெண் காவலர் என்னிடம்,
‘சென்னையில் யாரும் இதுகுறித்து போராட்டம் நடத்த அனுமதி கேட்கவில்லையே?’ என்றுதான் கேட்டார்.
அவரிடம் நான் முதலில் தொடங்கினால் என்னுடன் போராடுவதற்கு பலர் தயாராக இருக்கிறார்கள் என்று கூறினேன். காவல்துறையினர் என்னிடம் போராட்டம் நடத்துவதற்கு வசதியான 5 தேதிகளையும் இடங்களையும் குறிப்பிட சொன்னார்கள்.
நான் வள்ளுவர் கோட்டத்தை குறிப்பிட்டுள்ளேன். நான் மீடூ இயக்கத்தில் புகார் கூறியதில் இருந்து இன்று வரை எனக்கு மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் வந்துகொண்டே தான் இருக்கின்றன. டப்பிங் யூனியனில் என்னை நீக்கியதற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளேன்.
என்னைப் போல பாதிக்கப்பட்ட பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்களும் துணிச்சலாக வெளியில் வந்து தங்களுக்கு நேர்ந்த அநீதிகளை கூறவேண்டும்’.இவ்வாறு அவர் கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு எதிரான சின்மயியின் போராட்டத்துக்கு சில பெண்கள் அமைப்பினரும் பெண் பத்திரிகையாளர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். #Chinmayi #RanjanGogoi
தமிழ் சினிமாவில் பாடகியாகவும் டப்பிங் கலைஞராகவும் விளங்குபவர் சின்மயி.
பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் கொடுமைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்காக தொடங்கப்பட்ட மீடூ இயக்கத்தில் தமிழகத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளில் இருந்து மற்றவர்களுக்கு நிகழ்ந்த சம்பவங்களையும் வெளியே கூறினார்.
சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக உச்சநீதி மன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாருக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்தது.
இதன் அடிப்படையில், அந்தப் பெண்ணின் புகாரை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறைகளுக்கு சில வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில் சின்மயியும் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பெண் ஊழியர் கொடுத்த புகாரை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். போராட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

ரஞ்சன் கோகாய்
இது குறித்து சின்மயி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
நான் கமிஷனர் அலுவலகத்தில் நுழைந்த உடனே அங்கு இருந்த பெண் காவலர் என்னிடம்,
‘சென்னையில் யாரும் இதுகுறித்து போராட்டம் நடத்த அனுமதி கேட்கவில்லையே?’ என்றுதான் கேட்டார்.
அவரிடம் நான் முதலில் தொடங்கினால் என்னுடன் போராடுவதற்கு பலர் தயாராக இருக்கிறார்கள் என்று கூறினேன். காவல்துறையினர் என்னிடம் போராட்டம் நடத்துவதற்கு வசதியான 5 தேதிகளையும் இடங்களையும் குறிப்பிட சொன்னார்கள்.
நான் வள்ளுவர் கோட்டத்தை குறிப்பிட்டுள்ளேன். நான் மீடூ இயக்கத்தில் புகார் கூறியதில் இருந்து இன்று வரை எனக்கு மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் வந்துகொண்டே தான் இருக்கின்றன. டப்பிங் யூனியனில் என்னை நீக்கியதற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளேன்.
என்னைப் போல பாதிக்கப்பட்ட பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்களும் துணிச்சலாக வெளியில் வந்து தங்களுக்கு நேர்ந்த அநீதிகளை கூறவேண்டும்’.இவ்வாறு அவர் கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு எதிரான சின்மயியின் போராட்டத்துக்கு சில பெண்கள் அமைப்பினரும் பெண் பத்திரிகையாளர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். #Chinmayi #RanjanGogoi
தனி அதிகாரிக்கு உதவ பட அதிபர்கள் சங்கத்துக்கு 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ProducerCouncil
தனி அதிகாரிக்கு உதவ பட அதிபர்கள் சங்கத்துக்கு 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தனி அதிகாரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பதிவுத்துறை தலைவரின் கடிதத்தில், ‘அரசாணையின்படி சங்கத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்தும் வகையில், விரைந்து செயல்பட ஏதுவாக தனி அதிகாரியின் நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில் தற்காலிக குழு ஒன்றை அமைத்து அதன் விவரத்தை தெரிவிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி 9 நபர்கள் கொண்ட தற்காலிக குழு அமைக்கப்படுகிறது. அந்த குழுவில் இடம்பெற்றோர் பெயர்கள் வருமாறு:-

பாரதிராஜா, டி.ஜி.தியாகராஜன், கே.ராஜன், டி.சிவா, சிவசக்தி பாண்டியன், எஸ்.வி.சேகர், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், எஸ்.எஸ்.துரைராஜ், ஆர்.ராதாகிருஷ்ணன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. #ProducerCouncil
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஈஷா ரெபா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #GVPrakashKumar #Ezhil
ரமேஷ்.பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தை எழில் இயக்குகிறார். ஜி.வி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஈஷா ரெபா தமிழில் அறிமுகமாகிறார்.
காமெடி படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திருநெல்வேலியில் நடந்து வருகிறது. நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் நேற்று படத்தின் பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர். இதில் ஜி.வி.பிரகாஷ், நகைச்சுவை நடிகர்கள் சதிஷ், வையாபுரி, மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா ஆகியோர் நடனமாடும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
Song shoot with @actorsathish 💫✨ ezhil sir shoot ... #tirunalveli .. Dinesh master Choreo pic.twitter.com/PzO5Fln9u2
— G.V.Prakash Kumar (@gvprakash) May 8, 2019
படப்பிடிப்பை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சி.சத்யா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #GVPrakashKumar #Ezhil
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் எஸ்கே 16 படம் பக்கா மாஸ் குடும்ப படமாக உருவாகுவதாக பாண்டிராஜ் கூறியுள்ளார். #SK16 #Sivakarthikeyan
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே.16 படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.
படம் பற்றி இயக்குநர் பாண்டிராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
உங்கள் தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சித்தப்பா, பெரியப்பா, சின்னம்மா, பெரியம்மா, அத்தை, மாமா, மச்சான்,
அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பையன், மாமன் பொண்ணு, இந்த சொந்தங்களை மொத்தமாக திரையில் காண
இன்று துவக்கம் என்று குறிப்பிட்டு, இந்த படம் பக்கா மாஸ் குடும்ப படமாக உருவாகுவதாக குறிப்பிட்டுள்ளார்.
உங்கள்
— Pandiraj (@pandiraj_dir) May 8, 2019
தாத்தா,பாட்டி
அண்ணன்,தம்பி
அக்கா,தங்கை,
சித்தப்பா,பெரியப்பா
சின்னம்மா,பெரியம்மா
அத்தை,மாமா,மச்சான்,
அத்தைபையன்,அத்தைபொண்ணு,
மாமன்பையன்,மாமன்பொண்ணு
இந்த சொந்தங்களை மொத்தமாக திரையில் காண
இன்று துவக்கம் 😁🙏 #PakkaFamilyMassEntertainer@Siva_Kartikeyan@sunpicturespic.twitter.com/bKVDyL7xLF
இந்த படத்தில் கதாநாயகிகளாக அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா
ராஜேஷ் நடிக்கின்றனர். யோகி பாபு, சூரி காமெடி வேடத்திலும், ஆர்.கே.சுரேஷ், நட்டி நட்ராஜ், இயக்குநர் பாரதிராஜா, சமுத்திரக்கனி, வேலராமமூர்த்தி, நாடோடிகள் கோபால், சுப்பு பஞ்சு, அர்ச்சனா, ரமா
உள்ளிட்டோரும் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும், வீரசமர் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். #SK16 #Sivakarthikeyan #AnuEmmanuel #AishwaryaRajesh #Bharathiraja #Samuthirakani






