என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விஜய் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை
    • கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்

    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    பிரபல நடிகை ஒருவருடன் விஜய்க்கு தகாத உறவு இருப்பதே இந்த முடிவுக்கு காரணம் எனவும் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், சுமூகமாகப் பிரிய பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்ததால் நீதிமன்றத்தை நாடியதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போதுவரை இந்த குற்றச்சாட்டுக்கு விஜய் தரப்பிலிருந்து எந்தப் பதிலும், மறுப்பும் வரவில்லை. இந்த வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் ஏப்.20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

    விஜய் மற்றும் சங்கீதா ஆகியோருக்கு 1999-இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

     

    • படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்
    • பன்மொழி திரைப்படமாக உருவாகிறது

    3, வை ராஜா வை, லால் சலாம் படங்களை இயக்கியவர் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்நிலையில் தற்போது பன்மொழி திரைப்படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனத்தின் 9வது படமான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வெளியாகிறது. படத்திற்கு டெக்ஸ்லா என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் அனிரூத் ரவிச்சந்தர் டீசரை வெளியிட்டுள்ளார்.

    இந்த டீசர் தற்போது ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துவருகிறது.  


    • மார்ச் 27ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரின் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தியாகராஜன் குமாரராஜாவுடன் மீண்டும் இணைந்து பாக்கெட் நாவல் படத்தில் நடித்துவருகிறார்

    ஆண்டவன் கட்டளை' மற்றும் 'கடைசி விவசாயி' படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் கூட்டணியில் புதிதாக உருவாகியுள்ள தமிழ் வெப் சீரிஸ் 'முத்து என்கிற காட்டான்'. விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்' மூலம் இதைத் தயாரித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், வடிவேல் முருகன் மற்றும் பிக் பாஸ் புகழ் வி.ஜே. பார்வதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

    இந்நிலையில் இதன் டீசர் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதியின் துண்டிக்கப்பட்ட தலையை வைத்து கதை நகர்வதுபோல் டீசரில் காட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் இரட்டை வேடங்களில் நடித்துள்ளரா எனத் தோன்றுகிறது. வெப் சீரிஸ் மார்ச் 27ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தவிர தியாகராஜன் குமாரராஜாவுடன் மீண்டும் இணைந்து பாக்கெட் நாவல் படத்தில் நடித்துவருகிறார் விஜய்சேதுபதி. இந்த படத்தில் மாளவிகா மோகனன், கிஷோர் மற்றும் ராஜ் பி ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.


     

    • முழுவழக்கு விசாரணையும் கேமராவில் பதிவுசெய்யப்படவேண்டும்.
    • நடிகை இருவரும் இருக்கும் படங்களை தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுவந்தார்.

    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், தவெக தலைவருமான விஜய் இடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ள சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் ஒன்றாக இல்லை என்றும், குடும்பத்தில் பிரச்சனை என்றும் தகவல்கள் வெளியான நிலையில் இன்று அது உறுதியாகி உள்ளது. பிரபல நடிகை உடனான தொடர்பே இந்த விவாகரத்து முடிவுக்கு காரணம் என சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.

    செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது;

    ஆரம்பத்தில் திருமணவாழ்க்கை சுமூகமாகவும், நன்றாகவும் சென்றது. அவர் வசதியான வாழ்க்கைமுறையை கொடுத்தார். நான் எனது வாழ்க்கையை வீட்டிற்காகவும், குழந்தைகளுக்காவும், அவருடைய நலனுக்காகவும் அர்ப்பணித்தேன்.

    குடும்பத்துடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றோம். நான் ஆண்டுதோறும் லண்டனில் உள்ள எனது பெற்றோரை சந்தித்துவந்தேன். அவர் என்னை திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துச் சென்றார்.  திருமண வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சனை வந்தாலும், அதனை சமாளித்து வாழ்க்கையை தொடர்ந்தோம். 

    இச்சூழலில் 2021-ல் அவர் வேறு நடிகையுடன் தவறான உறவில் இருந்ததை அறிந்தேன். இது எனக்கு ஆழ்ந்த மனவேதனையும், மன உளைச்சலையும் தந்தது. இது திருமண உறவின் மீது நான் வைத்திருந்த நம்பிக்கைக்கு இழைத்த துரோகமாகும். நடிகை உடனான உறவை முறித்துக்கொள்வதாக என்னிடம் உறுதியளித்தப் பின்னும் எவ்வித குற்ற உணர்வும் இன்றி, மீண்டும் அந்த தவறான உறவைத் தொடர்ந்தார். இது என்னை மேலும் மேலும் வேதனைக்கு உட்படுத்தியது.

    செப்டம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை வழக்கறிஞர் மூலம் பேசி பிரச்சனையை தீர்க்க முயன்றோம். ஆனால் எந்த உடன்பாடும் எட்டவில்லை. மறுபுறம் குழந்தைகளின் படிப்பு மற்றும் அவர்களின் உணர்வுகளை கருத்தில்கொண்டு இந்த வழக்கை ஒத்திவைத்தோம்.

    இதனைத்தொடர்ந்து என்னை உடல், உணர்ச்சி, மனரீதியாக ஒதுக்கிவைத்தார். என்னுடனான தாம்பத்ய வாழ்க்கையிலிருந்து முழுமையாக விலகி, சமூக மற்றும் தொழில் வாழ்க்கை என அனைத்திலும் என்னை ஒதுக்கிவைத்தார். ஒரே வீட்டிற்குள் தனித்தனியாக வாழ்ந்துவந்தோம்.

    மறுபுறம் அந்த குறிப்பிட்ட நடிகையுடன் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டார். நடிகை அதுதொடர்பான படங்களை தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுவந்தார். ஆனால் அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், மறைமுகமாக ஆதரவு கொடுத்துவந்தார். இந்தப் பதிவுகள் எனக்கும், எனது குழந்தைகளுக்கும் மீண்டும் மீண்டும் அவமானத்தை தந்தது. இந்த செயல் எங்களுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சங்கடத்தை கொடுத்தது.

    தேவையற்ற விளம்பரத்தை தவிர்க்கவும், அனைத்து தரப்பினரின் மாண்பை காக்கும்வகையிலும் அந்த நடிகையின் பெயரை குறிப்பிடுவதை தவிர்க்கிறேன். ஆனால் தேவைப்படும் பட்சத்தில் அவரை இரண்டாவது பிரதிவாதியாக சேர்ப்பேன். குறிப்பிட்ட நடிகையை 2வது பிரதிவாதியாகச் சேர்க்க நீதிமன்றம் அனுமதி அளிக்கவேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை தேவை ஏற்பட்டால் அதற்கான ஆதாரங்களையும் சமர்பிப்பேன்.

    2024-ல் நடிகை மற்றும் அவர் தொடர்பான செய்திகள் அதிகம் வெளிவந்தபோது மன உளைச்சல் அதிகமானது. பொது அவதூறுகளை தவிர்க்காமல், அமைதியாக இருந்தார். வருத்தப்படுவதற்கு பதிலாக வீட்டில் எனக்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தார். பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். 

    ஒவ்வொரு முறையும் தனது வழக்கறிஞர்மூலம் அவர் அளிக்கும் பதில்கள் அவரது நிதி உதவி மற்றும் மேலாதிக்கத்தையே பிரதிபலித்தன. இது எனக்கு மேலும் அவமானத்தை தந்தது. இதை ஒருபோதும் என்னால் மன்னிக்கமுடியாது, இந்த செயலை ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன். தேவைப்பட்டால் அந்த கடிதங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க அனுமதி கோருகிறேன். 

    எப்போதோ இந்த பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. வெறும் காகிதத்தில் மட்டும்தான் இந்த உறவு நீடிக்கிறது. மீண்டும் சரிசெய்ய முடியாத அளவிற்கு இந்த உறவு முறிந்துவிட்டது. தொடர்ச்சியான மன வேதனை, கண்ணியமின்மை, அவமானம் மற்றும் துயரத்தின் ஊற்றாக மாறியுள்ள இந்த உறவில் என்னால் இனி தொடரமுடியாது. 

    அவரின் தகாத உறவினால் பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் தொடர்ச்சியான அவமானங்கள் எழுந்தபோதும் அவரது பொது வாழ்க்கையையும், புகழையும் கருத்தில் கொண்டு, இப்பிரச்சனையை சுமூகமாக தீர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். ஒருபுறம் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினாலும், மறுபுறம் அவரை நேரடியாக சந்தித்து இருவரும் கௌரவமான முறையில் பிரிந்து செல்வது குறித்து பேசினேன். இதில் கடைசி முயற்சி 09.11.2025 அன்று நடைபெற்றது. எனது அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. 

    எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனவேதான் இந்த நீதிமன்றத்தை நாடி விவாகரத்துக் கோருகிறேன். இந்த முழுவழக்கு விசாரணையும் கேமராவில் பதிவுசெய்யப்படவேண்டும். யூடியூப், ஃபேஸ்புக் போன்ற எந்த சமூக ஊடங்களிலும் இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கும், அச்சு ஊடகங்களிலும் எங்கள் விவாகரத்து தொடர்பான செய்திகளை வெளியிடவேண்டும் எனவும் கேட்டுகொள்கிறேன். 

    மேலும் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரையில் திருமண வீட்டில் வசிக்கும் உரிமையை எனக்கு வழங்கவேண்டும். அவரது வருமானம், சமூக அந்தஸ்துக்கு ஏற்ப நியாயமான மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் வழங்கவும் உத்தரவிட வேண்டும். வழக்கு விசாரணைக்காக செலவுகளையும் அவரே ஏற்க உத்தரவிடவேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார்.
    • அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார்.

    நடிகரும், தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு 73வது எண்ணாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், விஜய்க்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரியவந்தது.

    நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.

    இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம்.

    விஜயுடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை 'அந்த நடிகை' சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

    அந்த பதிவுகளுக்கு விஜய் மறுப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார்.

    நடிகையுடன் உறவை முறித்துக் கொள்வதாக முதலில் கூறியும், நடவடிக்கையில் மாற்றமில்லை.

    திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.

    நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள கள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • சங்கீதா விஜயை பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் விவாகரத்து கோரி மனு.
    • விஜய்க்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகக் குற்றச்சாட்டு.

    நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சங்கீதா, விஜயை பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    விஜய்க்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகக் குற்றம்சாட்டி சங்கீதா விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    நிவாஸ் கே பிரச்சன்னாவின் இசை படத்திற்கு கச்சிதம்.

    பவனுதாயி என்கிற பெயரில் தாய் கிழவியாக ஊரில் வலம் வருபவர் ராதிகா. அங்குள்ளவர்களுக்கு வட்டிக்கு விட்டு மிரட்டி வட்டி வசூலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் கிழவி எப்போது இறக்கும் என ஊரே காத்திருக்கிறது.

    ராதிகாவிற்கு அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி என 3 மகன்கள், ஒரு மகளும் இருக்கிறார்கள். ஒற்றை பெண்மணியாக பிள்ளைகளை வளர்த்து வந்த ராதிகாவிற்கு திடீரென உடல்நலம் மோசமாகிறது. இன்னும் சில நாட்களில் ராதிகா இறந்து விடுவார் என்று ஊரே வந்து பார்த்துவிட்டு செல்கிறது.

    அப்போது, ராதிகா 160 சவரன் சேர்த்து வைத்துள்ளதாக மகன்களுக்கு தெரியவருகிறது. பாசத்தால் இல்லாவிட்டாலும், நகை சொத்துக்காகவாவது தாய் ராதிகாவை காப்பாற்ற வேண்டும் என மெனக்கிடுகிறார்கள்.

    இறுதியில் தாய் கிழவி உயிர் பிழைத்தாரா? அந்த 160 சவரன் நகை என்னவாயிற்று? என்பது படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    ராதிகா படத்தில் தாய் கிழவியாகவே வாழ்ந்திருக்கிறார். ஊரில் கடன் வாங்கியவர்களிடம் வட்டியை மிரட்டி வசூல் செய்யும் காட்சிகளிலும், அவருக்கான கதாப்பாத்திர காட்சிகளிலும் மிரள வைத்திருக்கிறார்.

    ராதிகா மட்டுமில்லை பால சரவணன், அருள் தாஸ், சிங்கம்புலி இவர்களுடைய மகள்கள் என படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அசர வைத்துள்ளனர். கமல் ரசிகராக வரும் சிங்கம்புலி, அவர் போடும் பாடல்கள், இடைவேளை, கிளைமேக்ஸ் எல்லாம் சரவெடி.

    இயக்கம்

    தாய் கிழவி மூலம் பெண்ணியம், சம உரிமை என்று நமக்கு மிரட்டலான பாடம் எடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் கதைக்கரு முதல் கதாப்பாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் வரை சரியான தேர்வு. படத்திற்கு கூடுதல் பலம்.

    பெண்கள் சும்மா இல்லாமல் எதாவது வேலை செய்ய வேண்டும்.. அது தான் உண்மையான சுதந்திரன் போன்ற வசனங்கள் அதிரவைத்துள்ளது. படம் முழுவதும் நகைச்சுவை, எமோஷ்னல் என அறிமுக படத்திலேயே சிக்ஸர் அடித்துள்ளார் இயக்குனர்.

    மொத்தத்தில், குடும்பங்கள் கொண்டாடும் படம் இந்த தாய் கிழவி.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார் அப்படியே அந்த ஊர் மக்கள், இடம் , கலாச்சரம் என அனைத்தையும் கண்முன் கொண்டு வந்துள்ளார்.

    இசை

    நிவாஸ் கே பிரச்சன்னாவின் இசை படத்திற்கு கச்சிதம்.

    ரேட்டிங்-4/5

    • படத்தை நெல்சன் இயக்குகிறார்.
    • ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.

    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். தற்காலிகமாக 'KH x RK Reunion' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். படத்திற்கு அனிரூத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இன்பநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. ராஜிவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    படத்தின் புரோமோ வீடியோ எல்லாம் வெளியாகி வைரலானது. ஆனால் ரசிகர்கள் பலருக்கும் இருக்கும் கேள்வி படத்தில் யார் ஹீரோ, யார் வில்லன்? என்பதுதான். புரோமோவில் கூட கமலும் இந்தக் கேள்வியை கேட்டிருப்பார். இந்நிலையில் இருவருமே வில்லன் இல்லை எனவும், மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டிதான் இப்படத்தின் வில்லன் எனவும் தற்போது தகவல் வெளியாகிவருகிறது.  ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

    ரஜினி தற்போது நடித்து வரும் 'ஜெயிலர் 2' மற்றும் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படங்களை முடித்த பிறகு, இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் 2027-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • திருமண விழாவில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஆடைகள் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன.
    • விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஆடைகளை பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா வடிவமைத்திருந்தார்.

    விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா காதல் திருமணம் உதய்ப்பூரில் நேற்று நடந்தது. காலையில் தெலுங்கு முறைப்படியும், மாலையில் கொடவா முறைப்படியும் நடந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

    திருமண புகைப்படங்களை நேற்று மாலை விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் வெளியிட்டனர். புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் டிரெண்டிங் ஆனது. திருமண விழாவில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஆடைகள் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன. இருவரது தோற்றமும் ராமர்-சீதாவை நினைவுப்படுத்துகிறது. விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஆடைகளை பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா வடிவமைத்திருந்தார். சிவப்பு நிற பார்டருடன் கோவில் மைய கருக்கள் சேலையின் விளிம்பில் எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளது.

     

    இது ஐதராபாத்தில் உள்ள பாரம்பரிய கோவில்களின் ஆன்மிகத்தை எதிரொலிக்கும் வகையில் அமைந்திருந்தது. மேலும் பழங்கால தங்கத்தை பயன்படுத்தி ஒரு அற்புதமான கலை திறனோடு பக்தி மணத்துடன் ராஷ்மிகா ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது. விஜய் தேவரகொண்டா வேட்டி சிண்டூர் அங்க வஸ்திரத்துடன் கோவில்களின் கலைத்திறனுடன் எம்பிராய்டரி செய்யப்பட்டு புனித கட்டிட கலையின் சின்னங்கள் ஆடையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுமண ஜோடிகளின் ஆடை அணிகலன்கள் விருந்தினர்கள் மட்டுமல்ல பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

    வருகிற மார்ச் 4-ந்தேதி விஜய் தேவரகொண்டாவுக்கும்-ராஷ்மிகாவுக்கும் திருமண வரவேற்பு ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்ட முறையில் நடைபெற இருக்கிறது. விழாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் இந்திய திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்த இருக்கின்றனர். விதவிதமான சைவ, அசைவ பிரமாண்ட விருந்துடன் நடைபெறும் திருமண வரவேற்பு விழாவை விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா குடும்பத்தினர் பிரமாண்டமாக செய்து வருகின்றனர்.

    பின்னணி இசை திகில் காட்சிகளில் தேவையான பதட்டத்தை உருவாக்குகிறது.

    கணினி துறையில் பணியாற்றும் ஆரி அர்ஜுனன், பணி மாறுதலால் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து, புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் யாரும் வசிக்காத வீட்டில் தங்குகிறார். வேலை வாழ்க்கையுடன், தன்னை காப்பாற்றுமாறு உதவி கேட்ட முன்னாள் காதலியை தேடும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்.

    அந்த வீட்டில் காதலியின் புகைப்படத்தை காணும் அதிர்ச்சியுடன், இரவு நேரங்களில் தொடரும் அமானுஷ்ய கனவுகள் அவரை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. கனவா, நிஜமா என்ற சந்தேகத்துடன் தொடங்கும் இந்த மர்ம பயணம், பல அதிர்ச்சியான உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

    இறுதியில் காணாமல் போன காதலி கிடைத்தாரா? கனவுகளுக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு? என்பது படத்தின் மீதிக்கதை..

    நடிகர்கள்

    நாயகனாக நடித்திருக்கும் ஆரி, சாதாரண ஐடி இளைஞராக தொடங்கி, மர்மங்களை அவிழ்க்கும் மனிதராக மாறும் பயணத்தை நம்பகமாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் இழப்பு, குற்ற உணர்வு, மன அழுத்தம், அமானுஷ்ய அச்சம் என பல்வேறு உணர்வுகளை அளவாக வெளிப்படுத்தி கதையை தாங்கிச் செல்கிறார்.

    நாயகிகளாக நடித்திருக்கும் பவித்ரா மற்றும் தீப்ஷிகா இருவரும் கதைக்கு தேவையான அளவில் நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். வில்லனாக வரும் சுப்பிரமணிய சிவா, முதல் பாதியில் முகபாவனைகளால் கவனம் ஈர்த்தாலும், அமானுஷ்ய அம்சங்கள் அதிகமாக இருப்பதால் அவரது வில்லத்தனம் முழுமையாக வெளிப்படவில்லை. தலைவாசல் விஜய் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்கள் திரைக்கதை நகர்வுக்கு உதவியாக இருக்கின்றன.

    இயக்கம்

    திகில், கிரைம் திரில்லர், குடும்ப உணர்வு, சமூக கருத்து என பல அடுக்குகளுடன் கதையை வடிவமைத்துள்ள இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டியன், ஆரம்பத்தில் பரபரப்பாக நகரும் திரைக்கதையை இடைப்பட்ட பகுதிகளில் சற்று மெதுவாக்கினாலும், தொடர்ச்சியான திருப்பங்கள் மூலம் மீண்டும் சுவாரஸ்யத்தை கூட்டுகிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் நோக்கி செல்லும் போது மர்மங்கள் அவிழும் விதம் படத்தை கவனத்துடன் பார்க்க வைக்கிறது.

    இசை

    தரண்குமார் இசையில் பாடல்கள் சாதாரணமாக இருந்தாலும், பின்னணி இசை திகில் காட்சிகளில் தேவையான பதட்டத்தை உருவாக்குகிறது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மண், அடுக்குமாடி குடியிருப்பின் தனிமையும் நான்காவது தளத்தின் மர்மமான சூழலையும் சரியாக பதிவு செய்து இருக்கிறார்.

    ரேட்டிங்-2.5/5

    • இருவீட்டார் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
    • விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண வரவேற்பு ஐதராபாத்தில் மார்ச் 4-ந்தேதி நடைபெறுகிறது.

    நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர். கீதா கோவிந்தம், புஷ்பா ஆகிய படங்களில் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர். தமிழில் விஜய்யுடன் வாரிசு படத்திலும், கார்த்தியுடன் சுல்தான் படத்திலும் நடித்தார். ராஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது முதலே அவர்கள் இருவரும் காதல் வயப்பட்டனர்.

    இருவரும் வெளிப்படையாக தங்களது காதலை அறிவிக்காதபோதும், பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே கலந்து கொண்டனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவ்வப்போது செய்திகள் வந்தாலும், வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை.

    இந்த நிலையில் மிக சமீபத்தில் அவர்களது திருமணம் பற்றிய தகவல் வெளிவந்தது. விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இருவரது திருமணம் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனை அருகேயுள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது.

    இதில் இருவீட்டார் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சரியாக நேற்று காலை 10.10 மணிக்கு இந்த திருமணம் நடந்தது. முதலில் விஜய் தேவரகொண்டா குடும்பத்து வழக்கப்படி தெலுங்கு பாரம்பரிய முறையிலும், அதனைத்தொடர்ந்து ராஷ்மிகா குடும்ப வழக்கப்படி கொடவா பாரம்பரிய முறையிலும் திருமணம் நடந்தது.

    திருமணத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவின் தாய் மாதவி, தங்களின் பாரம்பரியப்படி மருமகள் ராஷ்மிகாவுக்கு பரம்பரை வளையல்களை பரிசாக வழங்கியுள்ளாராம்.

    விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண வரவேற்பு ஐதராபாத்தில் மார்ச் 4-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா தம்பதிக்கு திரையுலகினரும். ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

     

     

    இதனிடையே வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ள திருமண வரவேற்பில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.

    திருமணத்திற்கு முன்பே டெல்லியில் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்திற்கு சென்ற இருவரும் சிறிது நேரம் உரையாடி புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

    இதன்பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கினர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எனவே மார்ச் 4இல் இவர்களது திருமண வரவேற்பில் பிரதமர் மோடி அல்லது அமித் ஷா கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 9-வது படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார்.
    • தற்போது இரண்டாவது முறையாக இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

    நடிகர் தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்றை பெற்றதை தொடர்ந்து 'வை ராஜா வை', 'லால் சலாம்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா தற்போது புதிய படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகி உள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது. கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 9-வது படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தற்போது இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அதன்படி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இதற்கு முன்னதாக 'வை ராஜா வை' படத்தில் ஐஸ்வர்யா- யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைந்து பணியாற்றியது. தற்போது இரண்டாவது முறையாக இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளனர். 



    ×