என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் டியூட்.
    • இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியாகி பெரிய அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.

    இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற இடம்பெற்ற "Oorum Blood" பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக தெரிவித்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர், நன்றி தெரிவிக்கும் விதமாக லவ் யூ மக்களே எனவும் கூறியுள்ளார்.

    இசையமைப்பாளர் சாய் அபயங்கர், சூர்யா நடிக்கும் கருப்பு உள்பட பல படங்களில் இசையக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


    பிரணவ் முனிராஜ் இசையில் பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தது.

    சென்னையில் தனது மனைவி விஜயலட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார் முனிஷ்காந்த். மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து வரும் இவர்களுக்கு வெவ்வேறு கனவுகளும் இருக்கிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் முனிஷ்காந்த் குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார். ஆனால், முனிஷ்காந்திற்கு சொந்த ஊரில் நிலம் வாங்கி செட்டிலாக வேண்டும் என்பது கனவு.

    ஆனால், விஜயலட்சுமிக்கு சென்னையிலேயே சொந்தமாக வீடு வாங்கி இங்கேயே செட்டில் ஆக வேண்டும் என்பது கனவு. இதற்கிடையே, ஊரில் பெரிய ஆளாக இருந்த முனிஷ்காந்தின் தந்தையின் சொத்து மூலம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை கிடைக்கிறது. அதற்குள், நமக்கு வரப்போகிறது என்று இருவரும் தாம் தூம் என்று கடன் வாங்கி செலவு செய்கிறார்கள்.

    இந்தநிலையில், காசோலை தொலைந்துவிடுகிறது. இறுதியில் காசோலை கிடைத்ததா? தங்களது வாழ்க்கையே மாறப்போகிறது என்ற கனவில் மிதந்த இவர்களின் மிடில் கிளாஸ் வாழ்க்கை மாறியதா என்பது படத்தின் மீதிக்கதை...

    நடிகர்கள்

    மிடில் கிளாஸ் நாயகனாக வரும் முனிஷ்காந்த் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஒரு குடும்பத் தலைவனாக, மிடில் கிளாஸ் அப்பாவாக தனது நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்தி இருக்கிறார். மிடில் கிளாஸ் குடும்ப தலைவி கதாப்பாத்திரத்தில் விஜயலட்சுமி அசத்தி இருக்கிறார். இவர்களை தாண்டி கோடாங்கி வடிவேல், குரேஷி, காளி வெங்கட், ராதா ரவி, வேல ராமமூர்த்தி ஆகியோரும் கதாப்பாத்திற்கு ஏற்ப சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    இயக்கம்

    ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையை தத்ரூபமாக படமாக எடுத்துள்ளார் இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம். சொந்த ஊரிலிருந்து சென்னை வந்து, மாத சம்பளத்தை மட்டுமே வைத்து ஒரு குடும்பத்தை நடத்தும் ஒரு சராசரி தம்பதி படும்பாடை அழகான காட்சிகள் மூலம் எடுத்துரைத்துள்ளார். படத்தில் சில ஏற்றம் இறக்கங்கள் இருந்தாலும் எந்த ஒரு தொய்வும் இல்லாமல் படம் நகர்கிறது.

    இசை

    பிரணவ் முனிராஜ் இசையில் பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறார்.

    • கைதான சர்புதீனிடம் இருந்து ரூ.27 லட்சம் ரொக்க பணமும், ஒரு சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • போதை விருந்தில் சினிமா பிரபலங்களும் பங்கேற்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை கஞ்சா வழக்கில் சர்புதீன், சீனிவாசன், சரத் என்ற 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதில் கைதான சர்புதீன் நடிகர் சிம்புவின் 'ஈஸ்வரன்' பட இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார். எல்டாமஸ் சாலையில் உள்ள சர்புதீன் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போதை விருந்து நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கைதான சர்புதீனிடம் இருந்து ரூ.27 லட்சம் ரொக்க பணமும், ஒரு சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரூ.27 லட்சம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஒரு கட்சியின் தேர்தல் வியூக நிறுவனத்துடன் சர்புதீன் தொடர்பில் இருப்பதும், அந்நிறுவனத்தின் பணம் தான் என சர்புதீன் தெரிவித்த போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் சர்புதீன் நடத்திய போதை விருந்தில் சினிமா பிரபலங்களும் பங்கேற்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ‘AB4’ எனப்பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
    • கேஜிஎப் பட நடிகை ரவீனா தாண்டனின் மகள் ராஷா ததானி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

    தமிழ் சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை பெற்ற இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

    இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தெலுங்கு படத்தில் இசையமைக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அஜய் பூபதி இயக்கத்தில் கட்டமனேனி ஜெயகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் 'AB4' எனப்பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

    கேஜிஎப் பட நடிகை ரவீனா தாண்டனின் மகள் ராஷா ததானி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சந்தமாமா கதலு பிக்சர்ஸ் சார்பில் ஜெமினி கிரண் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

    ஜி.வி.பிரகாஷ் இதற்கு முன், தெலுங்கில் வருண் தேஜ் நடித்த மட்கா, ராபின்ஹுட் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களில் இசையமைத்துள்ளார். இப்படங்கள் இசைக்காக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 



    • கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் இப்படம் வெளியானது.
    • குஷ்பு, ரேகா, ராதா ரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, மனோரமா ஆகியோரும் நடித்துள்ளனர்.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    மீண்டும் வெளியாகும் படங்கள் வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுரேஷ் கிருஷ்ணாவுடன் முதன்முதலில் இணைந்து பணியாற்றிய திரைப்படமான அண்ணாமலை விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

    ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை ஒட்டி, டிசம்பர் 12-ந்தேதி முதல் இந்தப் படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளது.

    அதிரடியான இப்படத்தில் ரஜினிகாந்த், ஒரு சாதாரண பால் வியாபாரியான அண்ணாமலையாக நடிக்கிறார், அவர் தனது பணக்கார நண்பர் அசோக்கால் (சரத் பாபு) ஏமாற்றப்படுகிறார். அண்ணாமலையின் வீடு இடிக்கப்பட்டு, அவரது குடும்பம் (கால்நடைகள் உட்பட) வெளியேற்றப்படும்போது பழிவாங்க சபதம் செய்கிறார். இதன் விளைவாக, அசோக்கை எதிர்த்து அண்ணாமலையின் போராட்டம் தொடங்குகிறது.

    அண்ணாமலையின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா இருவர் கூட்டணியில் வீரா (1994), பாஷா (1995), மற்றும் பாபா (2002) ஆகிய படங்கள் எடுக்கப்பட்டது.

    கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் வெளியான அண்ணாமலை படத்தில் குஷ்பு, ரேகா, ராதா ரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, மனோரமா ஆகியோரும் நடித்துள்ளனர். தேவா இசையமைப்பில் வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

    • நான் அந்தப் பாடலை விட்டு ஓட முயற்சி செய்கிறேன்.
    • தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மெய்ன்' திரைப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாகவுள்ளது.

    துபாய் வாட்ச் வீக்கில் கலந்து கொண்ட நடிகரும் இயக்குநருமான தனுஷ், ' ஒய் திஸ் கொலவெறி ' எப்படி தற்செயலாக உருவாக்கப்பட்டது என்பது பற்றியும், அதற்கு கிடைத்த வரவேற்பு முற்றிலும் எதிர்பாராதது என்றும் பேசினார்.

    இந்தப் பாடல் முதலில் தயாரிக்கப்பட்டது, ஆனால் அது கைவிடப்பட்டது. ஒரு நாள், கணினியில் இதைக் கண்டுபிடித்து மீண்டும் கேட்டோம். அப்போது அது வேடிக்கையாக இருந்தது. வேடிக்கையாக இருந்தாலும், குறிப்பாக ஒரு பாடலாக கேட்க முடிகிறது. எனவே அதை ஒரு முயற்சியாகப் பார்க்க முடிவு செய்தோம். எங்களுக்குத் தேவையானது ஒரு வெற்றி மட்டுமே, ஆனால் அது வைரலாகி மார்க்கெட்டில் பெரும் வெற்றியை பெற்றது என்றார்.

    மேலும் இந்தப் பாடலை "வரம் மற்றும் சாபம்" என்று கூறிய தனுஷ், "நான் அந்தப் பாடலை விட்டு ஓட முயற்சி செய்கிறேன், ஆனால் அது என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது" என்றார்.

    தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மெய்ன்' திரைப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாகவுள்ளது. கிருதி சனோன் கதாநாயகியாக நடிக்கும் இந்த காதல் படம், 'ராஞ்சனா' மற்றும் 'அத்ரங்கி ரே' படங்களுக்குப் பிறகு ஆனந்த் எல் ராயுடன் தனுஷ் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படமாகும்.

    • AI ஒரு எரிச்சலூட்டும் விதமாக தான் இருக்கிறது.
    • AI தொழில்நுட்பம் வளர வளர பாதிப்பும் அதிகரித்து வருகிறது

    ரிவால்வர் ரீட்டா' பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கீர்த்தி சுரேஷ், "இப்போ இருக்கின்ற பெரிய பிரச்சனை AI. தொழில்நுட்பம் என்பது மனிதர்கள் கண்டுபிடித்தது. அது நம்மையே மீறி எங்கேயோ போகின்றது போல் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் பார்க்கும்போது, நான் இதுபோன்று உடை அணிந்தேனா என்று..? அவ்வளது ரியலாக இருக்கிறது பார்ப்பதற்கு..

    சமீபத்தில் நடந்த படப்பூஜையின் புகைப்படங்களில் என் டிரஸ்ஸ பாத்து நானே ஷாக் ஆயிட்டேன். அவ்வளவு ஆபாசமாக நான் போஸ் கொடுக்கவில்லையே என்று. அப்போது தான் தெரிந்தது நான் இல்லை. என்னை வைத்து உருவாக்கிய AI படம் என்று.. AI ஒரு எரிச்சலூட்டும் விதமாக தான் இருக்கிறது. இது எங்கு போகுதுன்னு தெரியல. தொழில்நுட்பம் வளர வளர பாதிப்பும் அதிகரித்து வருகிறது" என்று தெரிவித்தார்.

    கீர்த்தி சுரேஷ் பேசியது தொடர்பாக நடிகர் விஜய் ஆன்டனியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "வரும் காலங்களில் AI தொழில்நுட்பத்தால் விவசாயிகள் அதிக அளவில் பயன்பெற வாய்ப்புள்ளது. மனிதனின் உழைப்பை எளிமைப்படுத்தும் ஒரு தளமாக தான் தற்போதைய AI விளங்கி வருகிறது" என்று தெரிவித்தார்.

    • விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
    • விஜய் பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார்.

    இதற்கிடையே சென்னையில் சமீபத்தில் நடந்த த.வெ.க. சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசும்போது, எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்றும், தி.மு.க. மீது கடும் விமர்சனத்தையும் முன்வைத்து பேசினார்.

    அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்துவிட்டதால் அருகில் உள்ள மாவட்டமான சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்குமாறு விஜய்யிடம் விருப்பம் மற்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

    அந்த வகையில் சேலத்தில் விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் த.வெ.க.-வினர் மனு அளித்துள்ளனர். காவல்துறை அனுமதியை பொறுத்து தேதியை இறுதி செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் விஜய் ஆன்டனியிடம் செய்தியர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "அரசியலில் எத்தனைபேர் போட்டியிட்டாலும் மகிழ்ச்சி தான். அதனை ஏன் போட்டியாக பார்க்க வேண்டும்? விஜய்யும் வரட்டும், அவரைப் போல் இன்னும் பலரும் வரட்டும். மக்களுக்கு சேவை செய்யட்டும்" என்று கூறினார்.

    • ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும்.
    • மாதம்பட்டி ரங்கராஜ் இப்போ எங்க தலைமறைவா இருக்காரு

    தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    இதனிடையே, தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று திட்டவட்டமாக மறுத்தார்.

    மேலும், "ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும். அதில் நான்தான் தந்தை என தெரியவந்தால் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்க தயார்" என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்தார்.

    இந்நிலையில், DNA பரிசோதனைக்கு வாங்க கணவரே என்று மாதம்பட்டி ரங்கராஜை கிண்டலடித்து ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

    அந்த பதிவில், "என் கணவர் மாதம்பட்டி ரங்கராஜை யாராவது பார்த்தால் தயவுசெய்து DNA பரிசோதனைக்கு வர சொல்லுங்க. 15 நாள் ஆச்சு, இப்போ எங்க தலைமறைவா இருக்காரு? தைரியமும் நேர்மையும் இருந்தால் தயவுசெய்து பரிசோதனைக்கு வாங்க கணவரே" என்று பதிவிட்டுள்ளார்.

    • அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.
    • இப்படத்தை ‘டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார்.

    சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து சொல்லப்பட்டு இருந்ததால் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

    இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் அடுத்து எந்த நடிகரை வைத்த படம் இயக்குவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரே கதாநாயகனாக அறிமுகமாவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறப்பட்டது.

    இந்த நிலையில், அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தில், அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக கேரளாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமான அனஸ்வர ராஜன் நடித்துள்ளார்.

    இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகும் என தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

    இந்த படத்தின் டைட்டில் டீசரை நாளை மாலை 6 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட உள்ளதாக அவர் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.

    • சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே.
    • ஒருவேளை படித்திருந்தால் இதை விட சிறப்பான இடத்திற்கு கூட நான் சென்றிருப்பேன்.

    தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் கவின். கவினின் லிஃப்ட், டாடா, ஸ்டார் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றநிலையில், அண்மையில் வெளிவந்த 'கிஸ்' கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது கவின் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'மாஸ்க்'. இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகை ருஹானி சர்மா கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களைத் தவிர சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.

    வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் படத்தை தயாரிக்க அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மதுரை தனியார் கல்லூரியில் நடந்த பட பிரமோஷன் விழாவில் கவின் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.  மாணவர்களிடையே பேசிய கவின், 

    "ஒருவேளை படித்திருந்தால் இதை விட சிறப்பான இடத்திற்கு கூட நான் சென்றிருப்பேன். என்ன பிடிக்கிறதோ அதை படியுங்கள், என்ன வேலை பிடிக்கிறதோ அதை செய்யுங்கள், சந்தோஷமாக இருங்கள், மற்றவர்களையும் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ளுங்கள்.

    மாஸ்க் நவ.21 (நாளை) வெளியாகிறது. வெள்ளிக்கிழமை கல்லூரி இருக்கும். அதனால் அனைவரும் சமத்தாக கல்லூரி செல்லுங்கள். அந்த வேலையை முடித்துவிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையில் சென்று பாருங்கள். எதுவும் பிரச்சனை இல்லை. சினிமா ஒரு பொழுதுபோக்குதான். தேவைப்படும்போது செல்லுங்கள், முடிந்தவுடன் வெளியே வந்துவிடுங்கள். பொழுதுபோக்கு பொழுதுபோக்காக இருக்கும்வரை நல்லது" எனப் பேசியிருந்தார். கவினின் இந்தப் பேச்சு பலரிடமும் பாராட்டுகளை பெற்றுவருகிறது.

    • TTF வாசன் நடித்துள்ள ஐபிஎல் படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
    • இயக்குனர் ஷங்கர், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்

    ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜி.ஆர். மதன்குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர்- TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் "ஐபிஎல்".

    பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    ஐபிஎல் படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய TTF வாசன், "தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவது போன்ற அரசியல் ஆசை இல்லை. நடிகர் விஜயுடன் என்னை ஒப்பீடு செய்ய வேண்டாம், இயக்குனர் ஷங்கர், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்" என்று தெரிவித்தார். 

    ×