search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெட்டிக்கொலை"

    • சிவகாசி அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    • திருத்தங்கல் ேபாலீசார் 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள நமஸ் கரித்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 58). பந்தல் அமைக்கும் பணி செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இளையமகன் பொன்னு பாண்டி (23). கூலி வேலைக்கு சென்ற இவர் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுக ளாக வசித்து வந்தார்.

    தீபாவளியை முன்னிட்டு பொன்னுபாண்டி தனது தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று மாலை அதே கிராமத்தை சேர்ந்த வீரபாண்டி என்பவர் சாலையில் பட்டாசு வெடித்துக் கொண்டு இருந்தார். அந்த சமயம் காளீஸ்வரி என்பவர் தனது மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தார். பட்டாசு வெடி சத்தத்தில் அந்த மாடுகள் மிரண்டன.

    உடனே காளீஸ்வரி வீரபாண்டியை கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே தகராறு உருவானது. இதையடுத்து அங்கு வந்த பொன்னு பாண்டியின் சகோதரர் முனிராஜ் இருவரையும் சமாதானம் செய்துவைத் தார். இதற்கு எதிர்ப்பு தெரி வித்த வீரபாண்டி முனிரா ஜிடம், இந்த பிரச்சினை யில் நீ தலையிடாதே என்று எச்சரித்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    பின்னர் வீரபாண்டி தனது தோட்டத்திற்கு சென்றார். வடமலாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவ ருக்கு சொந்தமன இந்த தோட்டத்தை வீரபாண்டி குத்தகைக்கு எடுத்திருந்தார். இதற்கிடையே பொன்னு பாண்டி, முனிராஜ் ஆகி யோரை பத்திரமாக பார்த் துக்கொள்ளுமாறும், பிரச்சி னைகளுக்கு செல்லவேண் டாம் என்று அறிவுரை கூறு மாறும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வத்தி டம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு பொன்னுபாண்டி தனது இருசக்கர வாகனத்தில் வீரபாண்டியின் தோட்டத் திற்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவில்லை. இதுபற்றி அந்த பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் செல்வம் அங்கு சென்றுபார்த்தபோது, பொன்னுபாண்டி அரிவா ளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந் தார்.

    அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது பொன்னுபாண்டி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரி வித்தனர். இதுகுறித்து செல்வம் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீ சார், வடமலாபுரம் கார்த்திக், வீரபாண்டி, அசோக் என்ற அய்யாதுரை உள்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகி றார்கள்.

    • உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • முன்பகை காரணமாக சாமியப்பனை யாராவது வெட்டி கொலை செய்தனரா என விசாரிக்கின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது 53). கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மாணிக்கம்கவுண்டன் புதூரில் உள்ள தோட்டத்துக்கு வேலைக்காக வந்தார். பின்னர் அங்கு தங்கி இருந்து கூலிவேலை செய்து வந்தார்.

    நேற்று மாலை தோட்டத்து க்குள் நுழைந்த மர்மநபர் யாரோ சாமியப்பனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் நித்யா, சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், சிவக்குமார், தனிப்பிரவு ஏட்டு சிவபிரசாத் மற்றும் போலீ சார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினர்.

    பின்னர் போலீசார் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சாமியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்கு கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    தொடர்ந்து முன்பகை காரணமாக சாமியப்பனை யாராவது வெட்டி கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதாவது காரணமாக என விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமி ராக்களில் கொலையாளி கள் வந்து செல்லும் காட்சி கள் பதிவாகி உள்ள தா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    • வயலில் பதுங்கி இருந்த தங்கவேல், மணியை அரிவாளை சரமாரியாக கை, கால், தலை உள்பட 10 இடங்களில் வெட்டினார்.
    • டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி அடுத்துள்ள ஜொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது65). இவருக்கு சேட்டு (46), சம்பத் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (60), இவர் மணியின் உறவினர் ஆவர். தங்கவேலுக்கும், மணிக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் இவர்களுக்குள் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    இன்றுகாலை மணி தனது பேத்தி இந்துஜாவை இருசக்கர வாகனத்தில் பெரியாம்பட்டி நோக்கி பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது வயலில் பதுங்கி இருந்த தங்கவேல், மணி வந்த இருசக்கர வாகனத்தை மறித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தங்கவேல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மணியை சரமாரியாக கை, கால், தலை உள்பட 10 இடங்களில் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை பார்த்த இந்துஜா அதிர்ச்சி அடைந்து வீட்டிற்கு ஓடினார். அங்கு நடந்த சம்பவத்தை எடுத்து கூறினார். இது பற்றி சேட்டுவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பதறி போய் வயலில் உழுது கொண்டிருந்த டிரா க்டருடன் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    பின்னர் மணியின் வீட்டை நோக்கி தங்கவேல் சென்று கொண்டிருந்தார். அப்போது டிராக்டரில் வந்த சேட்டுவை மறித்து அவரின் கால்களை வெட்டினார். இதனால் டிராக்டர் தானாக முன்னால் சென்றது. அப்போது டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கவேல் உடலையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் படுகாயம் அடைந்த சேட்டுவை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேமரா காட்சிகள் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் திருவண்ணாமலையில் டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு இரவு 9.30 மணிளவில் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தாமரை நகர் பகுதியில் உள்ள ஹவு சிங் போர்டு அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென மர்ம கும்பல் ஆறுமுகத்தை தடுத்து நிறுத்தி சரமாரியாக வெட்டினர். இதில் ஆறுமுகம் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டவுன் டிஎஸ்பி குணசேகரன் மற்றும் போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முன் விரோத தகராறில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாத்தூர் அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    • இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெருமாள்பட்டியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான தரிசு நிலம் உள்ளது.

    இங்கு சம்பவத்தன்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது தலை, கை, கால்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன.

    இதுகுறித்து ஊமத்தம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த வாலிபரின் அருகில் ஒரு பை கிடந்தது. அதில் விபூதி, கோவில் ரசீதுகள் உள்ளிட்டவை இருந்தன. மேலும் சில அடி தூரத்தில் டி.என்.37, ஏ.க்யூ. 1333 என்ற எண் கொண்ட மொபட்டும் கேட்பாரற்றுக கிடந்தது.

    மேற்கண்டவற்றை கைப்பற்றிய போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கொலையான வாலிபரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • விழுப்புரம் அருகே பா.ம.க. பிரமுகரை வெட்டிக்கொன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஆதித்யனை திட்டமிட்டு தீர்த்து கட்டியதாக வாக்கு மூலம் கூறியுள்ளனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி போலீஸ் சரகம் கப்பியாம்புலியூரை சேர்ந்தவர் ஆதித்யன் (வயது 45) பா.ம.க.மாவட்ட துணைச் செயலாளர். நேற்று முன்தினம் இரவு ஆதித்யன் பனையபுரத்தி லிருந்து கப்பியாம் புலியூ ருக்கு மோட்டார் சைக்கி ளில் சென்றார். மண்டபம் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள வாதானூரான் வாய்க்கால் அருகே வரு ம்போது மர்ம நபர்கள் வழி மறித்து கத்தியால் வெட்டி னர். ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தார். தகவல் அறிந்த விக்கிர வாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆதித்யன் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ் பி ஸ்ரீநாதா டிஎஸ்பி பார்த்திபன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இறந்தவர் மனைவி சாந்தி யிடம் விசாரணை செய்த னர்.

    இது பற்றி ஆதித்யன் மனைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் கப்பி யாம்புலியூரை சேர்ந்த லட்சுமி நாராயணன் ,அவர் தம்பி ராமு,உறவினர் விஷ்ணு, வினோத், கோலியனூரைச் சேர்ந்த ராகவன். ஆகிய 5 பேரை தனிப்பிரிவு போலீ சார்கைது செய்துள்ளனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.விசாரணை யில் முன் விரோதம் காரண மாக ஆதித்யனை திட்டமிட்டு தீர்த்து கட்டியதாக வாக்கு மூலம் கூறியுள்ளனர். மேலும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.பா.ம.க., பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட பதட்டம் காரணமாக கப்பி யாம்புலியூர், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ள்ளது.

    ×