search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "butchery"

    • கேமரா காட்சிகள் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் திருவண்ணாமலையில் டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு இரவு 9.30 மணிளவில் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தாமரை நகர் பகுதியில் உள்ள ஹவு சிங் போர்டு அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென மர்ம கும்பல் ஆறுமுகத்தை தடுத்து நிறுத்தி சரமாரியாக வெட்டினர். இதில் ஆறுமுகம் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டவுன் டிஎஸ்பி குணசேகரன் மற்றும் போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முன் விரோத தகராறில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 17 வயது சிறுவனான இவரது மகன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து அந்தோணியை வெட்டியதாக கூறப்படுகிறது.
    • பல்லடம் அரசு மருத்துவமனையில் அந்தோணி சிகிச்சை பெற்று வருகிறார்.

     பல்லடம் : 

    பல்லடம் அண்ணா நகர் பகுதியில் வசிப்பவர் அந்தோணி,(வயது 40), பெயிண்டர்.நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தவர் தனது மனைவி புஷ்பா, மற்றும் மகளையும், மகனையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 17 வயது சிறுவனான இவரது மகன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து அந்தோணியை வெட்டியதாக கூறப்படுகிறது .இதில் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனையில் அந்தோணி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில்,இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×