search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தந்தையை அரிவாளால் வெட்டிய சிறுவன் மீது வழக்கு
    X
    கோப்புபடம்.

    தந்தையை அரிவாளால் வெட்டிய சிறுவன் மீது வழக்கு

    • 17 வயது சிறுவனான இவரது மகன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து அந்தோணியை வெட்டியதாக கூறப்படுகிறது.
    • பல்லடம் அரசு மருத்துவமனையில் அந்தோணி சிகிச்சை பெற்று வருகிறார்.

    பல்லடம் :

    பல்லடம் அண்ணா நகர் பகுதியில் வசிப்பவர் அந்தோணி,(வயது 40), பெயிண்டர்.நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தவர் தனது மனைவி புஷ்பா, மற்றும் மகளையும், மகனையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 17 வயது சிறுவனான இவரது மகன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து அந்தோணியை வெட்டியதாக கூறப்படுகிறது .இதில் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனையில் அந்தோணி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில்,இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×