search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை
    X

    வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

    • சாத்தூர் அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    • இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெருமாள்பட்டியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான தரிசு நிலம் உள்ளது.

    இங்கு சம்பவத்தன்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது தலை, கை, கால்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன.

    இதுகுறித்து ஊமத்தம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த வாலிபரின் அருகில் ஒரு பை கிடந்தது. அதில் விபூதி, கோவில் ரசீதுகள் உள்ளிட்டவை இருந்தன. மேலும் சில அடி தூரத்தில் டி.என்.37, ஏ.க்யூ. 1333 என்ற எண் கொண்ட மொபட்டும் கேட்பாரற்றுக கிடந்தது.

    மேற்கண்டவற்றை கைப்பற்றிய போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கொலையான வாலிபரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×