search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலையேற்றம்"

    • மலையேறும்போது கடும் நெரிசல், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அஞ்சலி உயிரிழந்தார்.
    • 60 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இந்தியாவின் ஒரே மலையேற்ற வீரர் ஷரத் குல்கர்னி

    கணவன்-மனைவி இடையே உள்ள அன்யோன்யம் மற்றும் அன்புக்கு உதாரணமாக பல சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். அந்த வகையில், 60 வயது நிரம்பிய ஷரத் குல்கர்னி, வயதையும் பொருட்படுத்தாமல் தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

    மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஷரத் குல்கர்னியும், அவரது மனைவி அஞ்சலியும் மலையேற்ற வீரர்கள். இருவரும் உலகின் உயரமான ஏழு சிகரங்களிலும் ஏற முடிவு செய்தனர். இதற்காக தீவிர பயிற்சி எடுத்த அவர்கள் ஒன்றாக இணைந்து 2019ம் ஆண்டு மே 22ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தயாரானார்கள். ஆனால், மலையேறும்போது கடும் நெரிசல், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அஞ்சலி உயிரிழந்தார். அப்போது எப்படியும் சிகரத்தில் ஏற வேண்டும் என அவர் தன் கணவரிடம் கூறியிருந்தார்.

    எனவே, மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முடிவு செய்தார். அதன்படி, மனைவி இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த மாதம் 23ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

    இந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இந்தியாவின் ஒரே மலையேற்ற வீரர் ஷரத் குல்கர்னி என்பது குறிப்பிடத்தக்கது.

    • கமி ரீட்டா முதன் முதலில் 1994ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.
    • மற்றொரு ஷெர்பா 27வது முறை சிகரத்தை அடைந்துள்ளார்.

    காத்மாண்டு:

    உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைவது மலையேற்ற வீரர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மலையேற்ற சீசனில் ஏராளமான வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகின்றனர். அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கென வழிகாட்டிகள் உள்ளனர். அவர்களும் வீரர்களுடன் சிகரத்தில் ஏறி இறங்குகின்றனர்.

    அவ்வகையில் இந்த ஆண்டு நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டி கமி ரீட்டா (வயது 53), மலையேற்ற வீரர்களுடன் இன்று சிகரத்தை அடைந்தார். இந்த வாரத்தில் மட்டும் இரண்டு முறை அவர் சிகரத்தை அடைந்துள்ளார். அத்துடன் தன் வாழ்நாளில் 28 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார்.

    அவர் பாரம்பரியமான தென்கிழக்கு மலைமுகட்டு பாதை வழியாக சென்று 8,849 உயரம் கொண்ட சிகரத்தை வெற்றிகரமாக அடைந்ததாக நேபாள சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

    கமி ரீட்டா முதன் முதலில் 1994ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். மலையேற்றம் தடை செய்யப்பட்ட ஆண்டுகளைத் தவிர, ஒவ்வொரு ஆண்டும் சிகரத்தில் ஏறி உள்ளார்.

    தென்கிழக்கு மலைமுகட்டு பாதையை முதன்முதலாக 1953ஆம் ஆண்டில் நியூசிலாந்தைச் சேர்ந்த சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் ஷெர்பா டென்சிங் நோர்கே ஆகியோர் பயன்படுத்தினர். அதன்பின்னர் இந்த பாதையில் அதிக வீரர்கள் பயணிக்கத் தொடங்கி, தற்போது மிகவும் பிரபலமான பாதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கமி ரீட்டாவுக்கு அடுத்தபடியாக, மற்றொரு ஷெர்பா 27வது முறை சிகரத்தை அடைந்துள்ளார். அவர் கடந்த வாரம் இந்த சாதனையை எட்டினார்.

    பிரிட்டனைச் சேர்ந்த கென்டன் கூல் என்ற வீரர், 17வது முறையாக கடந்த வாரம் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார். வெளிநாட்டு வீரர்களில் இவர் அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    • அன்னபூர்ணா சிகரத்தில் மலையேற்ற பயணம் மேற்கொள்வது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.
    • மலையேற்றத்தின்போது இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    காத்மாண்டு:

    நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா மலைச்சிகரம் உலகின் 10வது உயரமான மலைச்சிகரம் ஆகும். 8,091 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதற்காக ஏராளமான மலையேற்ற வீரர்கள் நேபாளம் வருகின்றனர். ஆனால் அடிக்கடி பனிச்சரிவு ஏற்படும் என்பதால் இங்கு மலையேற்ற பயணம் மேற்கொள்வது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் நோயல் ஹன்னா என்பவர் நேற்று அன்னபூர்ணா சிகரத்தில் ஏறினார். சிகரத்தில் இருந்து இறங்கியபோது நான்காவது முகாமில் இரவு தங்கியிருந்த சமயத்தில் திடீரென உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. இவர் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 10 முறை ஏறி சாதனை படைத்தவர் ஆவார்.

    மேற்கு நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா சிகரத்தில் முதன் முதலில் ஏறியவர் பிரான்ஸ் நாட்டின் மாரிஸ் ஹெர்சாக் ஆவார். இவர் 1950களின் முற்பகுதியில் இந்த சாதனையை படைத்தார். அதன்பின்னர் 365 பேர் சிகரத்தில் ஏறி உள்ளனர். மலையேற்றத்தின்போது 72 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் கூறி உள்ளனர். கடந்த வாரம் ஷெர்பா வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

    உலகின் உயரமான 14 மலைகளில் 8 மலைகள் நேபாளத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×