search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "climbers"

    உலகப் புகழ்பெற்ற 3 மலையேறும் வீரர்கள் பனிப்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
    மாண்ட்ரியல்:

    உலகப் புகழ்பெற்ற மலையேறும் வீரர்கள் ஜெஸ்ரோஸ்கெல்லி (36), ஹன்ஸ் ஜோர்ஜ் அயூயர் (35), டேவிட்லாமா (28), இவர்களில் ஜெஸ்ரோஸ்கெல்லி அமெரிக்காவை சேர்ந்தவர். மற்ற 2 பேரும் ஆஸ்திரியாவை சேர்ந்தவர்கள்.

    இவர்கள் கனடாவில் உள்ள அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா எல்லையில் உள்ள பனி மலையில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    உரிய பாதுகாப்பு உபகரண வசதிகளுடன் மலையேறிய இவர்கள் திடீரென மாயமாகி விட்டனர். அவர்களை தேடும் பணி நடைபெற்றது. இருந்தும் அவர்கள் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே இவர்கள் மலையேறிய பகுதியில் பனிப்பாறை சரிவு நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் 3 பேரும் பனிப்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

    மோசமான வானிலையே இவர்களின் மரணத்துக்கு காரணம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    எவரெஸ்ட் சிகரத்தில் ஆண்டுதோறும் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து வருவதாக சாகர்மாதா மாசு கட்டுப்பாட்டு குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. #Everest #Trash
    காட்மாண்டு:

    இமயமலைத்தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரம் 8,848 மீட்டர் உயரம் கொண்டது. உலகிலேயே மிகவும் உயரமான சிகரம் என்ற பெருமையை பெற்ற இதன் உச்சியில் கால்பதிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மலையேற்ற வீரர்கள் சிகரத்தில் ஏறி வருகின்றனர். இந்த நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஆண்டுதோறும் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து வருவதாக சாகர்மாதா மாசு கட்டுப்பாட்டு குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.



    வீரர்கள் தங்குவதற்கான கூடாரங்கள், ஏறுவதற்காக பயன்படுத்தும் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் மனித கழிவுகள் குப்பைகளாக எவரெஸ்ட் சிகரத்தை ஆக்கிரமித்து உள்ளன.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தில் குப்பைகளை அகற்ற முடிவு செய்த நேபாள அரசு அதற்காக நவீன யுக்தியை கையாண்டது. அதாவது மலையேற்றம் செல்லும் குழுவினர் சுமார் ரூ.2,64,000-ஐ வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். பின்பு சிகரத்தில் இருந்து கீழே இறங்கும்போது ஒவ்வொரு வீரரும் தலா 8 கிலோ குப்பைகளை தன்னுடன் எடுத்து வந்து செலுத்திய தொகையை திரும்ப பெற்று கொள்ளலாம்.

    இதன்படி கடந்த ஆண்டு மட்டும் சுமார் 25 டன் குப்பைகளும், 15 டன் மனித கழிவுகளும் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டது.

    இந்த ஆண்டும் மலையேற்ற வீரர்கள் டன் கணக்கில் குப்பைகளை கீழே கொண்டு வந்தாலும் சிகரத்தில் தொடர்ந்து குப்பைகள் குவிந்து வருவதாக சாகர்மாதா மாசு கட்டுப்பாட்டு குழு கவலை தெரிவித்துள்ளது.  #Everest #Trash
    ×