என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு காஷ்மீரில் மலையேற்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பு
    X

    ஜம்மு காஷ்மீரில் மலையேற்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பு

    • இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
    • பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உதம்பூர், பூஞ்ச், ரஜௌரி பகுதிகளில் பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் மலையேற்ற நடவடிக்கைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    Next Story
    ×