search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி பட்டாசு"

    • சிறுமி உயிரிழந்த செய்தியை கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் கதறி அழுதனர்.
    • சிறுமியின் பெரியப்பா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ், இவரது மனைவி அஸ்வினி. தம்பதியின் மகள் நவிஷ்கா (4), ஒரு வயது மகனும் உள்ளார்.

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு வேண்டுமென நவீஷ்கா தந்தையிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து ரமேஷ் தனது மகளுடன் கடைக்கு சென்று விதவிதமான பட்டாசுகளை வாங்கி வந்தனர்.

    நேற்று மாலை நவீஷ்கா தனது குடும்பத்தினருடன் இணைந்து பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். தந்தை ரமேஷ் விதவிதமான பட்டாசுகளை வெடித்தார். அதனை பார்த்து சிறுமி மகிழ்ச்சியடைந்தார்.

    அப்போது சிறுமியின் பெரியப்பாவான ரமேஷின் அண்ணன் விக்னேஷ் (31) பெரிய அணுகுண்டு வகை பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி பட்டாசு அருகே சென்றுவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் ஓடிப்போய் சிறுமியை காப்பாற்ற முயன்றார். அப்போது பயங்கர சத்தத்துடன் பட்டாசு வெடித்து சிதறி விக்னேஷ் மற்றும் சிறுமியின் மீது விழுந்தது.

    இதில் விக்னேசுக்கு வலது கையிலும், சிறுமிக்கு கை மற்றும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நவிஷ்கா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமி உயிரிழந்த செய்தியை கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் கதறி அழுதனர்.

    போலீசார் விசாரணையின் போது மதுபோதையில் சிறுமியை ஒரு கையில் வைத்து கொண்டு, மற்றொரு கையால் பட்டாசை வெடித்த போது விபத்தில் சிறுமி உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

    அஜாக்கிரதையாக செயல்பட்ட சிறுமியின் பெரியப்பா மீது வாழைப்பந்தல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • தீபாவளி என்றால் நம் நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான்.
    • தீபாவளியை களைகட்டச் செய்வது பட்டாசுதான்.

    பட்டாசு வெடிப்பது ஏன்?

    ஜோதிட ரீதியாக இந்த தீபாவளி பண்டிகை திதியை அடிப்படையாக கொண்டு உள்ளது. திதிக்கு சூரிய சந்திரர்கள் மட்டுமே முக்கியம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி தொலைவை திதி என்கிறோம். சதுர்தசியில் குளித்து விட்டு எம தர்ப்பணம் செய்து விட்டு பின்னர் குடும்பத்தோடு தெய்வ பூஜைகள் செய்து பின்னர் மாலையில் தீபம் வைக்க வேண்டும். மத்தாப்பு போன்ற வெளிச்சம் தரும் வெடிகளை சந்தோஷமாக வைக்க வேண்டும்.

    தீபாவளி என்றால் நம் நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான். ஆனால் அந்த பட்டாசுகள் இல்லாமலும் தீபாவளி கொண்டாடலாமா என்றால் வாய்ப்பே இல்லை என்கின்றனர் நம்ம வீட்டு குட்டீசுகள். தீபாவளி பண்டிகை வருவதற்கு 2-3 வாரங்களுக்கு முன்பாகவே பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

    தீபாவளியைக் களைகட்டச் செய்வது பட்டாசுதான். பட்டாசு இல்லாத தீபாவளி, திரியில்லாத புஸ்வானம்போல, சுரத்தே இல்லாமல் போய்விடும். பட்டாசு வெடிப்பதில் சிறுவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் அப்பாக்களுக்கும் ஏன் தாத்தாக்களுக்கும் கூட ஆவல்தான். ஆனால் பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிக்காவிட்டால் தீபாவளியின் தித்திப்பு காற்றில் கரைந்துவிடும்.

    பாதுகாப்பாகப் பட்டாசு வெடிப்பது தொடர்பாக தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறையின் சார்பில் ஆண்டுதோறும் தீவிர பிரசாரம் செய்யப்பட்டு வருவதால் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதனால் விபத்துகளும் குறைந்து வருகிறது என்று தெரியவருகிறது.

    `காற்று மாசு ஏற்படும்' என்று பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது. இதனால் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறையும் என்றாலும், அந்த குறைவான நேரத்திலும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகளை கவனமாகக்கையாளாவிட்டால் ஆபத்தை விளைவிக்கும்.

    கை, கால்களில் காயம், ஆடைகளில் தீப்பிடிப்பது போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. புஸ்வானம், தரைச்சக்கரம் போன்றவை சிலநேரங்களில் வெடிக்கக்கூடும். அந்தத் தீப்பொறி பட்டு கண்கள் பாதிகப்படலாம். பட்டாசு வெடிப்பதால் வெளிவரும் நச்சுப்புகை சுவாசம், நுரையீரல் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

    பட்டாசு வெடிக்கும் பகுதியில் ஒரு வாளி தண்ணீரை எப்போதும் வைத்திருக்க வேண்டும். சிறுவர்கள், பெரியவர்களின் துணையுடன் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். புடவை, பட்டுப்பாவாடை போன்ற தளர்வான ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்கக் கூடாது.

    பருத்தி ஆடை, ஜூன்ஸ் பேண்ட் அணிந்து கொள்ளலாம். பட்டாசு வெடிக்கும்போது காலில் செருப்பு அணிவது அவசியம்.

    கம்பி மத்தாப்புகளைக் கொளுத்தி முடித்ததும் வாளியில் உள்ள தண்ணீரில் போட்டுவிட வேண்டும். வெடிக்காத பட்டாசு களை கையில் எடுத்துப் பார்க்கக்கூடாது. அதன்மீது உடனே தண்ணீர் ஊற்றிவிட வேண்டும். எந்த பட்டாசுகளையும் கைகளில் வைத்து வெடிக்கக் கூடாது.

    சட்டை, பேண்ட் பாக்கெட்டுகளில் பட்டாசுகளைப் போட்டு வைத்துக் கொண்டு பட்டாசுகளைக் கொளுத்தக் கூடாது. நீளமான ஊதுவத்தியைப் பயன்படுத்தி தூரமாக நின்று பட்டாசைக் கொளுத்த வேண்டும்.

    பட்டாசு கொளுத்திய பிறகு கிடக்கும் குப்பைகள், வெடிக்காத பட்டாசுகள் ஆகியவற்றைச் சேர்த்து ஒன்றாக வைத்துக் கொளுத்தக்கூடாது.

    பட்டாசு விபத்து ஏற்பட்டால் அந்த காயத்தின்மீது தண்ணீர் ஊற்றவேண்டும். அதன்பிறகு காயம்பட்ட இடத்தைச் சுத்தமான பருத்தித்துணியைக் கொண்டுமூடி, காயம்பட்டவரை உடனே மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லவேண்டும். எந்த காரணம் கொண்டும் காயம் ஏற்பட்ட இடத்தில் பேனா மை, எண்ணெய், பற்பசை, ஐஸ்கட்டி, மஞ்சள், மாவு போன்ற எதையும் தடவக்கூடாது.

    வெடிக்கும்போது ஆடையில் தீப்பிடித்தால், தண்ணீர் அருகில் இல்லை என்றால், தீப்பிடித்தவர்களை ஒரு கம்பளியில் சுற்றி தரையில் உருட்டவேண்டும். கம்பளி சுற்றிய பகுதிக்குள் ஆக்சிஜன் செல்ல முடியாமல், தீ அணைந்துவிடும். அதன் பிறகு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். எனவே பட்டாசு இல்லாத தீபாவளியை நினைத்து பார்க்க முடியாது. அதே நேரத்தில் நாம் அனைவரும் பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாடுவோம்.

    • 7 மடங்கு அதிகமான சத்தத்தை விலங்குகள் உணர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    • குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

    ஒளிரும் பட்டாககளும், அவை எழுப்பும் சத்தங்களும் பண்டிகையை உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் கொண்டாட வழிவகுக்கும். அதேநேரம் நாய், பூனை போன்ற விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பட்டாசுகளின் திடீர் வெளிச்சமும், அதிர வைக்கும் சத்தமும் அச்சுறுத்தலாகவே அமையும்.

    பட்டாசுகள் வெடிக்கும்போது நாம் கேட்பதை விட, 7 மடங்கு அதிகமான சத்தத்தை செல்லப் பிராணிகள் உணர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய திடீர் சத்தங்கள் அவற்றின் உயிருக்கே ஆபத்தாகவும் மாற வாய்ப்பு உள்ளது. தீபாவளியின் போது பட்டாசு சத்தத்தில் இருந்து உங்கள் செல்லப்பிராணிகளை பாதுகாப்பாக வைத்திருக்க சில குறிப்புகள்.

    தீபாவளி பண்டிகை அன்று அனைவரும் பட்டாசு வெடிக்கத் தொடங்கும் நேரத்துக்கு முன்பாகவே, உங்கள் செல்லப்பிராணிகளை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லுங்கள். இதனால் வெடிகளின் பயத்தில் இருந்து அவை தப்பிக்க முடியும். அதேபோல பட்டாசு சத்தத்துக்கு உங்கள் செல்லப்பிராணி அதிகமாக பயப்படும் என்று நீங்கள் எண்ணினால், முன்னதாகவே கால்நடை மருத்துவரை அணுகி அதன் பதற்றத்தை குறைப்பதற்கான மருத்துகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

    தீபாவளி அன்று ஏற்றிவைக்கும் தீபங்கள் மற்றும் அலங்கார மெழுகுவர்த்திகளை, செல்லப்பிராணிகள் இருக்கும் இடங்களுக்கு அருகில் வைப்பதை தவிர்க்கவும். பட்டாசு சத்தத்துக்கு பயந்து உங்கள் செல்லப்பிராணி சோபா, கட்டில் போன்றவற்றுக்கு அடியில் ஒளிந்துகொள்ள நேரிடலாம். அத்தகைய சமயங்களில் அவற்றை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியே இழுத்து வருவதைத் தவிர்க்கவும். அவை அந்த சூழ்நிலையை இயல்பாக கையாள்வதற்கு உதவி செய்யவும்.

    பலரும் மொட்டை மாடிகளில் கூண்டு அமைத்து முயல்களை வளர்க்கிறார்கள். தீபாவளி பண்டிகை சமயத்தில் மட்டும் வீட்டுக்குள்ளேயே அவற்றுக்கு பாதுகாப்பான முறையில் கூண்டுகள் அமைத்து பராமரிக்கலாம்.

    பட்டாசு சத்தத்தால் விலங்குகளும், பறவைகளும் பாதிக்கப்படுவதை உங்களது குழந்தைகளுக்கு தெரிவித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இது வருங்காலத்தில் விலங்குகளின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்.

    • பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
    • உச்சநீதிமன்றம், இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது.

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இதுதொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம், இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது.

    அதனடிப்படையில், தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்தது.

    இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, புதுச்சேரியில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தீபாவளியை முன்னிட்டு பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு சார்பில் அறிவுறுத்தி உள்ளது.

    தீபாவளி திருநாளில் காலையில் ஒரு மணி நேரம், இரவு ஒரு மணி நேரம் என இரண்டு மணி நேரம் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
    தீபாவளி திருநாள் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றாலே, சட்டென்று ஞாபகத்திற்கு வருவது பட்டாசுதான். யாராவது பட்டாசு வெடிக்கவில்லை என்றாலும், என்னப்பா... தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் இருக்கிறாயே... என்று கேட்பார்கள்.

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், காற்று மாசு அடைதலை கருத்தில் கொண்டும் பட்டாசு வெடிக்க பல்வேறு மாநிலங்கள் தடைவிதித்துள்ளன. காற்று மாசுபாடு ஏற்படாத வண்ணம் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையார்களை கருத்தில் கொண்டு காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது.

    புகை மூட்டம்

    சென்னையில் காலையிலேயே எழுந்து குழித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகள் சாப்பிட்டு, சாமி தரிசனம் செய்த பின், பட்டாசு வெடிக்க கிளம்பிய நிலையில், பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. இதனால் காலையில் மிகப்பெரிய அளவில் பட்டாசு சத்தங்கள் கேட்கவில்லை.

    ஆனால், நேரம் செல்ல செல்ல வானம் பளிச்சென்றாகியது. இதனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து மக்கள் பட்டாசு வெடித்தனர். இதனால் போலீசார் தரப்பில் சுமார் 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    மாலை நேரம் முடிந்து இரவு வந்ததும் மக்கள் உற்சாகமாகி சக்கரம், புஸ்வானம், ராக்கெட், மத்தாப்பு போன்ற வெடிகளை வெடிக்க ஆரம்பித்தனர். ஒரு மணி நேரம்தான் என்பதை மனதில் போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து பட்டாசு வெடிக்க ஆரம்பினர்.

    புகை மூட்டம்

    புஸ்வானம், மத்தாப்பு, சக்கரம், ராக்கெட் போன்ற வெடிகள் அதிக அளவு புகையை வெளியிடக்கூடியவை. இதனால் எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் பட்டாசு புகையால் சூழ்ந்து காணப்பட்டன. ஏற்கனவே, பருவமழை காரணமாக கருமேகம் சூழ்ந்து வானம் காணப்பட்ட நிலையில், பட்டாசு புகையால் பார்க்க முடியாத அளவிற்கு புகை மூட்டமாக காட்சியளித்தது.

    மார்கழி மாதம் பனி சூழ்ந்து காணப்படுவதுபோல் சாலைகள் காணப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகனத்தை பார்க்க முடியாத அளவிற்கு அவதிக்குள்ளானார்கள். நடந்து செல்பவர்களுக்கு கூட எதிரே வரும் வாகனங்கள் மிக அருகில் வந்த பின்னர்தான் தெரியும் அளவிற்கு மேக மூட்டமாக காணப்பட்டது.
    ×