என் மலர்
நீங்கள் தேடியது "திமுக இளைஞரணி மாநாடு"
- மக்களிடம் திமுக இளைஞரணி கொள்கை விதையை விதைக்க வேண்டும்.
- திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
பாஜகவிற்கு எதிராக கொள்கை ரீிதியாக திமுக வெற்றி பெற்று வருகிறது. பாஜகவினரால் வெற்றிக்கொள்ள முடியாதது தமிழ்நாட்டில் மட்டும் தான். தமிழ்நாட்டை பார்த்தாலே அமித்ஷாவிற்கு எரிச்சல் வருகிறது. சங்கி படைகளை கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.
அன்போது வந்தால் அரவணைப்போம், ஆணவத்தோடு வந்தால் அடிபணிய மாட்டோம். இந்தயாவிலேயே சித்தாந்த ரீதியாக சண்டை போடும் ஒரே மாநில கட்சி திமுக தான்.
மக்களிடம் திமுக இளைஞரணி கொள்கை விதையை விதைக்க வேண்டும். திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
அரசியலில் சொகுசு பார்க்க வேண்டாம்; கடுமையாக உழைத்தால் தான் இடம் கிடைக்கும். கடந்த கால ஆட்சியாள்கள் செய்த தவறை திமுக இளைஞரணி கொண்டு சேர்க்க வேண்டும்.
கடந்த கால ஆட்சியர்கள் மீண்டும் ஆட்சி வந்தால் நடக் உள்ள அநீதிகளை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைத்த பாஜக முன்பு இல்லாத அளவிற்கு ஆக்ரோஷத்துடன் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் திராவிட மாடல் 2.O அமைய திமுக இளைஞரணி கடுமையக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியது.
- நினைவுப்பரிசாக வழங்கப்பட்ட சிம்மாசனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்தார்.
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
தமிழகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் சக்திகளை எதிர்த்து திமுக வெற்றி பெற்றது. எடுத்தோம், கவிழ்த்தோம் என எதையும் செய்யவில்லை.
சோதனைகள், அடக்குமுறைகளுக்கு மத்தியில் திமுக ஒளிவிட்டுக் கொண்டிருக்க அதன் அடித்தளம் தான் காரணம்.
மக்களை சந்தித்து திமுகவை வளர்த்தோம். உதயநிதி தனது பொறுப்பை உணர்ந்து பவர்புல்லாக செயல்படுகிறார், இறங்கி அடிக்கிறார்.
கொள்கை ரீதியாக திமுகவை வலுவாக இயக்க உதயநிதி ஸ்டாலின் பாசறை கூட்டங்களை நடத்தினார்.
உதயநிதி Most Dangerous என கொள்கை எதிரிகள் புலம்பும் அளவிற்கு இறங்கி அடிக்கிறார்.
திமுகவிற்கு புதுப்பேச்சாளர்களை உருவாக்கி, அறிவுத்திருவிழாவை உதயநிதி ஸ்டாலின் நடத்தியுள்ளார்.
நம் தோளில் தமிழ்நாட்டை காக்கும் கடமை மட்டுமல்ல இந்தியாவையே காக்க வேண்டிய கடமை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிகழ்ச்சிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
- முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளரும், நகராட்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்களான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார். முடிவில் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பிரபு கஜேந்திரன் நன்றி கூறுகிறார்.
முன்னதாக இன்று திருவண்ணாமலைக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு மாவட்ட எல்லையான மேல்செங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.
- மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு நடத்தப்பட்டது.
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி இலக்கை முன் வைத்து வியூகம் வகுத்து செயல்படுகிறார்.
தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடி முகவர்களை முழுமையாக நியமித்து அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார். இப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெறுவதால் அதில் விடுபடும் வாக்காளர்களை கண்டறிந்து அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
அதுமட்டுமின்றி என் வாக்குச்சாவடி-வெற்றி வாக்குச்சாவடி என்று அறிவித்து கடுமையாக உழைக்க வேண்டும் என்று தி.மு.க.வினருக்கு கட்டளையிட்டுள்ளார். ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
அவ்வாறு வீடு வீடாக செல்லும் பூத் கமிட்டி குழுக்களில் கட்டாயம் மகளிர் இடம் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
இதன் அடிப்படையில் கட்சி நிர்வாகிகள் இப்போது வீடு வீடாக சென்று தி.மு.க.வின் சாதனைகளை எடுத்து சொல்லி வருகிறார்கள்.
இந்த நிலையில் தி.மு.க.வின் இளைஞரணி மாநாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலையில் வருகிற 14-ந்தேதி நடத்துகிறார்.
தேர்தலுக்கு முன்னோட்டமாக நடத்தப்படும் இந்த மண்டல மாநாட்டில் வட மாவட்டங்களில் உள்ள 91 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். அப்போது சட்டசபை தேர்தல் தொடர்பாக கட்சியினருக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என தெரிகிறது.
தி.மு.க. கூட்டணிக்கு மேலும் 2 கட்சிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் அதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுப்படுத்துவார் என தெரிகிறது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றிருந்தாலும், த.வெ.க. கட்சியுடன் காங்கிரஸ் ரகசியமாக பேசி வருவது பற்றியும் இந்த மாநாட்டில் அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவார் என தெரிகிறது.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு நடத்தப்பட்டது. அது தி.மு.க.வின் வெற்றியை முடிவு செய்தது. அதேபோல் திருவண்ணாமலையில் இளைஞரணி மண்டல மாநாடு நடத்தப்படுகிறது.
இது 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை நிச்சயம் உறுதி செய்யும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்காக இளைஞரணி மண்டல மாநாட்டை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
- இன்று தொடங்கி உள்ள இருசக்கர வாகன பேரணியானது மொத்தம் 13 நாட்கள் பயணித்து வருகிற 27-ந்தேதி முடிவடைகிறது.
- தி.மு.க. இளைஞரணி மாநாட்டையொட்டி 504 பிரசார மையங்கள், 38 தெருமுனை பிரசாரங்கள் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி:
தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்து வருகிறார்.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.
இந்த மாநாட்டுக்கான ஆயத்த பணிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை இளைஞரணி நிர்வாகிகள் மூலம் நடத்தி வருகிறார்.
இதன் அடுத்த கட்டமாக இப்போது இளைஞரணி நிர்வாகிகள் மோட்டார் சைக்கிளில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இருசக்கர வாகன பிரசாரத்தை கன்னியாகுமரியில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த இருசக்கர வாகன பிரசார பேரணியில் 188 மோட்டார் சைக்கிள்கள் செல்கின்றன. இந்த பேரணி 38 மாவட்டங்களில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்ல உள்ளது.
இன்று தொடங்கி உள்ள இருசக்கர வாகன பேரணியானது மொத்தம் 13 நாட்கள் பயணித்து வருகிற 27-ந்தேதி முடிவடைகிறது.
தி.மு.க. இளைஞரணி மாநாட்டையொட்டி 504 பிரசார மையங்கள், 38 தெருமுனை பிரசாரங்கள் நடைபெற உள்ளது. இருசக்கர வாகன பிரசாரப் பேரணி செல்லும் மாவட்டங்கள் வள்ளுவர், பெரியார், அண்ணா, கலைஞர் என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8ஆயிரத்து 647கிலோமீட்டர் பயணித்து சுமார் 3 லட்சம் இளைஞர்களை நேரில் சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
- கருப்பு-சிவப்பு சட்டை அணிந்து போர் வீரர்கள் போல் கலந்து கொள்ள வந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- நாம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து வாங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.
கன்னியாகுமரி:
தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்து வருகிறார்.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டுக்கான ஆயத்த பணிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை இளைஞரணி நிர்வாகிகள் மூலம் நடத்தி வருகிறார்.
இதன் அடுத்த கட்டமாக இப்போது இளைஞரணி நிர்வாகிகள் மோட்டார் சைக்கிளில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இருசக்கர வாகன பிரசாரத்தை கன்னியாகுமரியில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இருசக்கர வாகன பிரசார தொடக்க விழா கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இன்று நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. இளைஞரணி சார்பில் 2-வது மாநில உரிமை மீட்பு மாநாடு சேலத்தில் நடைபெறுகிறது. மத்திய அரசு நமது உரிமைகளை பறித்து வருகிறது. உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெறும் மாநாட்டில் திரளான நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும்.
கருப்பு-சிவப்பு சட்டை அணிந்து போர் வீரர்கள் போல் கலந்து கொள்ள வந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ள நிர்வாகிகள் மாவட்டம் தோறும் சென்று லட்சக்கணக்கான மக்களை சந்திக்க உள்ளீர்கள்.
நீங்கள் நமது அரசினுடைய கொள்கைகளை, சாதனைகளை எடுத்து கூற வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு மக்களுக்கு பல்வேறு இன்னல்களை செய்து உள்ளது. இதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். கல்வி உரிமையை விட்டுக்கொடுத்து உள்ளோம். நீட் தேர்வின் அவல நிலையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
நாம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து வாங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். தற்பொழுது இணையதளம் மூலமாக 9 லட்சம் பேரும், போஸ்ட் கார்டு மூலமாக 10 லட்சம் பேரும் கையெழுத்திட்டுள்ளனர். ஒரு மாதத்தில் 50 லட்சத்தை தாண்டி கையெழுத்து வாங்க வேண்டும்.
கடந்த 9 ஆண்டுகளில் நாம் மத்திய அரசுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி கொடுத்துள்ளோம். ஆனால் மத்திய அரசு நமக்கு ரூ.2000 கோடி தான் தந்துள்ளது. நமது உரிமைகளை மீட்க நாம் போராட வேண்டும்.
மதுரையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாநாடு எப்படி நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஒப்புக்கு செப்பாக மாநாடு நடத்தப்பட்டது. சேலத்தில் நடைபெறும் இளைஞரணி எழுச்சி மாநாடு வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக அமைய வேண்டும். நமது மாநாடு குறித்து வரலாறே பேச வேண்டும்.
சேலம் மாநாடு மத்திய அரசு திரும்பி பார்க்கும் வகையில் அமைய வேண்டும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் சொன்னதை மட்டும் இன்றி சொல்லாத பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளது.
குறிப்பாக 4 திட்டங்களை நினைவு கூறுகிறேன். இலவச மகளிர் பேருந்து திட்டம் முதல் திட்டமாக கையெழுத்திடப்பட்டது. இதன் மூலமாக ஒரு மகளிர் மாதம் ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்த முடியும். ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் மிச்சமாகலாம்.
தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டமான புதுமைப்பெண் திட்டம் மூலமாக அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது.
1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 31 ஆயிரம் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தால் பயன் அடைந்து வருகிறார்கள். பக்கத்து மாநிலங்கள் இந்த திட்டங்களை வியந்து பார்க்கும் அளவிற்கு அரசு செயல்பட்டு வருகிறது.
செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒரு கோடியே 18 லட்சம் மகளிர் இதன் மூலமாக பயன்பெறுகிறார்கள். தற்பொழுது இருசக்கர வாகன பேரணி மேற்கொண்டுள்ள நிர்வாகிகள் 15 நாட்கள் 8,400 கிலோ மீட்டர் பயணம் செய்ய உள்ளீர்கள்.
நீங்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும். விதிமுறைகளை பின்பற்றி பயணத்தை மேற்கொள்ளுங்கள். உங்களது குடும்பத்தினர் உங்களுக்காக காத்திருக்கிறார்கள். நான் சேலத்தில் உங்களுக்காக காத்திருப்பேன். இந்த பயணம் வெற்றி பயணமாக அமைய வேண்டும். இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ள 188 பேரும் தமிழகம் முழுவதும் 3 லட்சம் பேரை சந்திக்க உள்ளீர்கள். நீங்கள் பொதுமக்களிடம் நமது சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இருந்து புறப்பட்டது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் கருப்பு-சிவப்பு கலரில் டீ-சர்ட் அணிந்திருந்தனர்.
இருசக்கர வாகன பிரசாரத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். இங்கிருந்து புறப்பட்ட பிரசார பேரணி கன்னியாகுமரி, குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, பத்மநாபபுரம், நாகர்கோவில் தொகுதிகளுக்கு இன்று செல்கிறது.
நாளை (16-ந்தேதி) நெல்லை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (17-ந்தேதி) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிரசார பேரணி செல்கிறது.
18-ந்தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளிலும் 19-ந்தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளிலும் 20-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளிலும் வாகன பிரசார பேரணி செல்கிறது.
இதை தொடர்ந்து மதுரை, தேனி, திண்டுக்கல் வழியாக நவம்பர் 27-ந்தேதி சேலம் சென்று அடைகிறது.
இதே போல் பெரியார் மண்டலத்திலிருந்து தொடங்கும் பிரசார பேரணி திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு செல்கிறது. அண்ணா மண்டலத்தில் இருந்து தொடங்கும் பிரசார பேரணி திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பிரசார பேரணி செல்கிறது.
கலைஞர் மண்டலத்திலிருந்து தொடங்கும் பிரசார பேரணி புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி வழியாக சேலம் செல்கிறது.
- தமிழக காவல்துறை அனைவருக்கும் பொதுவானது.
- தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பா.ம.க.வின் இரு சக்கர ஊர்தி பேரணிக்கு தமிழக காவல்துறை உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க.வின் இளைஞரணி மாநாட்டையொட்டி, அக்கட்சியின் இளைஞரணி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,647 கி.மீ நீளத்திற்கு இரு சக்கர ஊர்தி பேரணி கன்னியாகுமரியில் இருந்து இன்று தொடங்கப்பட்டுள்ளது.
வரும் 27-ந்தேதி வரை மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் இந்த பேரணியில் 188 இருசக்கர ஊர்திகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓர் அரசியல் கட்சியின் கொள்கையை விளக்குவதற்காக இத்தகைய பேரணிகள் நடத்தப்படுவது இயல்பானது; தேவையானது. ஆனால், இத்தகைய பேரணிகளுக்கு அனுமதி வழங்குவதில் தமிழக காவல்துறை இரட்டை நிலைப்பாட்டை மேற்கொள்வது ஏன்? என்பது தான் எனது வினா.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உன்னத கொள்கையை வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 5-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் இருசக்கர ஊர்தி பேரணிகளை நடத்தும்படி பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு அழைப்பு விடுத்து இருந்தேன். பேரணியில் அதிக அளவாக 50 ஊர்திகள் மட்டுமே பங்கேற்க வேண்டும்; பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இருசக்கர ஊர்தி பேரணி நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தேன்.
ஆனால், இல்லாத காரணங்களைக் கூறி, பா.ம.க.வின் இரு சக்கர ஊர்தி பேரணிக்கு அனுமதி மறுத்திருந்த தமிழக காவல்துறை, இப்போது தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இரு சக்கர ஊர்தி பேரணி நடத்த அனுமதி அளித்திருக்கிறது. இது எந்த வகையில் நியாயம்?
மதுவிலக்கு பரப்புரைக்கான பேரணிக்கு அனுமதி மறுத்துவிட்ட காவல்துறை, இப்போது கட்சி மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பேரணிக்கு அனுமதி வழங்கியிருப்பது எந்த வகையில் நியாயம். தி.மு.க.வுக்கு ஒரு நீதி... பா.ம.க.வுக்கு ஒரு நீதியா?
தமிழக காவல்துறை அனைவருக்கும் பொதுவானது. அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். ஆளுங்கட்சியின் கைப்பாவையாக நடந்து கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பா.ம.க.வின் இரு சக்கர ஊர்தி பேரணிக்கு தமிழக காவல்துறை உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாமக்கல்லில் மாலை 4 மணியளவில் நடைபெறும் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி சேலம், நாமக்கல் மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (17-ந் தேதி) பிற்பகல் 4 மணியளவில் ஈரோட்டில் இருந்து கார் மூலம் சேலம் வருகிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான சங்ககிரி அருகே மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி, ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இளைஞரணியினர் திரளாக பங்கேற்கிறார்கள்.
தொடர்ந்து சேலம் வரும் அவர் அடுத்த மாதம் 17-ந்தேதி பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறும் மாநில இளைஞரணி மாநாட்டு திடலுக்கு செல்கிறார். அங்கு மாநாட்டு பந்தல் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநாட்டு வழிகாட்டு குழுவினருடன் மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் இரவில் சேலத்திற்கு வரும் அவர் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஓய்வெடுக்கிறார்.
18-ந் தேதி காலை சேலம் சீலநாயக்கன்பட்டியில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து சிறப்புரையாற்றுகிறார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி மற்றும் மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், இளைஞரணி அமைப்பாளர்கள் அருண்பிரசன்னா, வீரபாண்டி பிரபு, மணிகண்டன் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞரணியினர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
தொடர்ந்து அன்று பிற்பகல் நாமக்கல் மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். நாமக்கல்லில் மாலை 4 மணியளவில் நடைபெறும் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் செய்து வருகிறார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி சேலம், நாமக்கல் மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- தி.மு.க ஆட்சி அமைத்ததும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
- தன்னலம் பார்க்காமல் சுயநலம் பார்க்காமல் செயல்படுபவர்கள் தி.மு.க.வினர் தான்.
ஊட்டி:
ஊட்டியில் நடந்த இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
இந்தியாவிலேயே கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கிய ஒரே கட்சி தி.மு.க. தான். தி.மு.க.வில் எத்தனை அணிகள் இருந்தாலும் முதன்மையான அணி இளைஞரணி தான்.
நாட்டிலேயே இளைஞரணி என்பது முதன் முதலில் தி.மு.க.வில் தான் தொடங்கப்பட்டது.
2 மாதத்திற்கு முன்பு மதுரையில் மாநாடு நடந்தது. ஒரு மாநாடு எப்படி நடக்க கூடாது என்பதற்கு அந்த மாநாடே உதாரணம். மதுரையில் நடந்தது கேலிக்கூத்தான மாநாடு.
பா.ஜ.க.வினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம் தான். என்னை பற்றியே பேசி கொண்டிருக்கின்றனர். நான் ஒரு அரங்கத்தில் பேசினேன். அதில் பிறப்பால் அனைவரும் சமம் என்று மட்டுமே பேசினேன். ஆனால் நான் பேசாததை பேசியதாக திரித்து கூறி வருகின்றனர்.
எங்கு போனாலும் தி.மு.க.வை பற்றி பேசுவதே அமித்ஷாவுக்கு வேலையாக உள்ளது. பொய் குற்றச்சாட்டுகளை சொல்வதில் அமித்ஷா வல்லவர். அதுபோல பிரதமரும் இதையே பேசி வருகின்றனர்.
ஒட்டுமொத்த தமிழ்நாடும் கலைஞரின் குடும்பம் தான்.
தன்னலம் பார்க்காமல் சுயநலம் பார்க்காமல் செயல்படுபவர்கள் தி.மு.க.வினர் தான்.
தி.மு.க ஆட்சி அமைத்ததும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தி.மு.க. அளித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களின் பசியை போக்கிய ஆட்சி தான் தி.மு.க. மாணவ சமுதாயத்தினருக்கு பல்வேறு நலத்திடங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். தமிழ்நாட்டு குழந்தைகளின் பாதுகாவலராக தி.மு.க அரசு உள்ளது.
மத்திய அரசு 9 வருடங்களில் செய்த ஊழல்களை சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலமாகிவிட்டது. மத்திய அரசால் பலன் அடைந்தது என்று பார்த்தால் அது அதானி குடும்பம் மட்டுமே. கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு உள்ளது. 2021 சட்டமன்ற தேர்தல் போன்று, 2024 பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
+2
- சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 24-ந்தேதி தி.மு.க. 2-வது இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது.
- ஆர்டர் கொடுத்ததுமே 4 நிறுவனங்களிலும் பனியன் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் மூலம் பனியன் உள்ளிட்ட ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் விளையாட்டு போட்டிகள், கோவில் திருவிழாக்கள், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் அணியும் வகையில் ஆர்டரின் பேரில் டீ-சர்ட் பனியன்கள் தயாரித்து கொடுக்கப்படுகிறது.
இந்தநிலையில் சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ள தி.மு.க. 2-வது இளைஞரணி மாநாட்டிற்காக திருப்பூர் பனியன் நிறுவனங்களில் 4 லட்சம் டீ-சர்ட் பனியன்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பனியன் உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-
சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 24-ந்தேதி தி.மு.க. 2-வது இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கும் இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவதற்காக தி.மு.க., சார்பில் 4 லட்சம் பனியன்கள் தயாரிக்க திருப்பூரில் உள்ள 4 பனியன் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டது. முதலில் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெற இருந்த நிலையில், சென்னை மிச்சாங் மழை வெள்ள பாதிப்பு காரணமாக 24-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் ஆர்டர் கொடுத்ததுமே 4 நிறுவனங்களிலும் பனியன் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
முதலில் மாநாடு 17-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் அதற்கு 2 நாள் முன்னதாகவே பனியன்கள் தயாரித்து கொடுத்து விட வேண்டும் என்று தயாரிப்பு பணியில் ஈடுபட்டோம். தற்போது 4 லட்சம் பனியன்களும் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்டுள்ள டீ-சர்ட் பனியனில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளது. பனியனின் இடது, வலதுபுற கைகளில் கலைஞர் நூற்றாண்டு விழா லோகோ அச்சிடப்பட்டுள்ளது. மேலும் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு-2023, மாநில உரிமை மீட்பு முழக்கம் என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. மிகவும் தரமாகவும், தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்களை கவரும் வகையில் பனியன்களை தயாரித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள டீ-சர்ட் பனியன்கள் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாநாடு நடைபெறும் 24-ந்தேதி அன்று அந்தந்த மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் டீ-சர்ட் அணிந்து கலந்து கொள்ள உள்ளனர்.
- உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராகி அமைச்சரான பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் அதிக முக்கியத்துவம் கொடுத்து மாநாட்டை நடத்த தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர்.
- அமைச்சராக பொறுப்பெற்ற பிறகு மூத்த அமைச்சர்கள், எம்.பி.க்கள் துணையின்றி டெல்லி சென்று பிரதமர் மோடியை 2 முறை சந்தித்து பேசி விட்டு வந்துள்ளார்.
சென்னை:
தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் அவரை கட்சியின் மூத்த அமைச்சர்கள் அணுகி வருகின்றனர்.
அரசு நிகழ்ச்சிகளுக்கு மூத்த அமைச்சர்கள் வந்திருந்தாலும் அதில் உதயநிதி ஸ்டாலின்தான் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். கட்சி நிர்வாகிகள் அவரை 'சின்னவர்' என்று பவ்யமாக அழைக்கின்றனர்.

அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மூத்த அமைச்சர்கள், எம்.பி.க்கள் துணையின்றி டெல்லி சென்று பிரதமர் மோடியை 2 முறை சந்தித்து பேசி விட்டு வந்துள்ளார்.
இன்னும் 2 மாதத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளதால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்ய வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக தி.மு.க.வின் இளைஞரணி மாநாடு சேலத்தில் இம்மாதம் மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது. உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராகி அமைச்சரான பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் அதிக முக்கியத்துவம் கொடுத்து மாநாட்டை நடத்த தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர்.
இளைஞரணி மாநாடு முடிந்ததும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டு விடும் என்று கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் இந்த விசயம் கிசுகிசுக்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகும் பட்சத்தில் அமைச்சரவையில் இலாகா மாற்றங்களும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
- மிச்சாங் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஒத்திவைப்பு.
- தி.மு.க. இளைஞரணி மாநாடு 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை:
தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு கடந்த டிசம்பர் 17-ந்தேதி நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. சென்னையில் ஏற்பட்ட புயல் பாதிப்பு காரணமாக மாநாட்டு தேதி மாற்றப்பட்டது. டிசம்பர் 24-ந் தேதி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 24-ந் தேதி நடைபெறுவதாக இருந்த இளைஞர் அணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இப்படி 2 முறை மாநாடு தள்ளிப்போன நிலையில் தற்போது வருகிற 21-ந் தேதி இளைஞர் அணி மாநாடு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'மிச்சாங்' புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று சேலத்தில் நடைபெறும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






