search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்கான தேதி அறிவிப்பு
    X

    தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்கான தேதி அறிவிப்பு

    • மிச்சாங் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஒத்திவைப்பு.
    • தி.மு.க. இளைஞரணி மாநாடு 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு கடந்த டிசம்பர் 17-ந்தேதி நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. சென்னையில் ஏற்பட்ட புயல் பாதிப்பு காரணமாக மாநாட்டு தேதி மாற்றப்பட்டது. டிசம்பர் 24-ந் தேதி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 24-ந் தேதி நடைபெறுவதாக இருந்த இளைஞர் அணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இப்படி 2 முறை மாநாடு தள்ளிப்போன நிலையில் தற்போது வருகிற 21-ந் தேதி இளைஞர் அணி மாநாடு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    'மிச்சாங்' புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று சேலத்தில் நடைபெறும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×