search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டணி ஆட்சி"

    ஈராக் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களில் வென்ற மதகுரு மக்தாதா பதே கட்சி தலைவர் ஹைதி அல்-அம்ரி உடன் கூட்டணி ஆட்சியை அமைக்கிறார். #Iraq
    பாக்தாத்:

    ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இந்த நிலையில் திடீரென ஐ.எஸ். தீவிரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர். 

    தினமும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். எனவே அமெரிக்க கூட்டுப் படையின் உதவியுடன் கடந்த டிசம்பரில் அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர்.

    அதைதொடர்ந்து ஈராக்கில் கடந்த 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. அதில் மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணி போட்டியிட்டது. அவரை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணியும், பதே கட்சி கூட்டணியும் மோதின.

    இந்த தேர்தலில் 44.5 சதவீதம் வாக்குகள் பதிவாகிய நிலையில், ஓட்டு எண்ணிக்கையில் மதகுரு மக்தாதா தலைமையிலான கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது. இவருக்கு அடுத்தபடியாக பதே கட்சி 47 இடங்கள் வந்துள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் அபாடி தலைமையிலான நசார் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இக்கட்சி 42 இடங்கள் பிடித்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில், அங்கு தொங்கு பாராளுமன்றம் அமைந்தது. இதனால், அதிக இடங்களில் வென்ற மக்தாதா, கூட்டணி ஆட்சியமைக்க முடிவு செய்து அதற்கான பணியில் இறங்கினார்.

    பதே கட்சித்தலைவர் ஹைதி அல்-அம்ரியுடன் நடத்தப்பட்ட பல தரப்பு பேச்சுவார்த்தையில் ஆட்சியமைக்க உடன்பாடு எட்டப்பட்டது. 
    மேலும், ஹைதி அல்-அம்ரியுடன் உடன் மக்தாதா சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து, கூட்டாக பேட்டியளித்த அவர்கள் ஈராக்கில் கூட்டணி ஆட்சியமைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    தேர்தலில் வெற்றி பெற்றாலும் மதகுரு மக்தாதா சதார் பிரதமராக முடியாது. ஏனெனில் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. இவர் ஷியா பிரிவு தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்தார். 

    இதனால் இவர் அமெரிக்காவின் நீண்டகால எதிரி ஆவார். மக்தாதா பிரதமராக முடியாவிட்டாலும் புதிய அரசு அமைவதில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கூட்டணி ஆட்சியில் எந்த குழப்பத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
    பெங்களூரு:

    பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைத்துள்ளது. பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் இந்த கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளோம். அதேபோல் அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். இடங்கள் பங்கீடு குறித்து அடுத்து வரும் நாட்களில் நாங்கள் ஆலோசித்து முடிவு எடுப்போம்.

    கூட்டணி ஆட்சியில் நாங்கள் எந்த குழப்பத்திற்கும் வாய்ப்பு கொடுக்க மாட்டோம். கூட்டணி அரசில், விட்டுக்கொடுத்து போகும் போக்கை இரு கட்சிகளும் கடைபிடிக்க வேண்டும். எங்கள் கட்சிக்கு 22 மந்திரி பதவி கிடைத்துள்ளது. இதில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கும் மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அனைத்து மந்திரி பதவிகளையும் நிரப்பாமல், சில இடங்களை காலியாக வைப்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

    முதல்-மந்திரி நடத்தும் ஆய்வு கூட்டங்களில் அதிகாரிகள் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சரியான முடிவு தான். இதனால் கூட்டங்களில் தேவை இல்லாத தொல்லைகள் நீங்கும். அதிகாரிகள் கவனம் சிதறாமல் செயல்படும் நிலை ஏற்படும். தகுதியான ஒருவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கும்.

    எங்கள் கட்சியில் மந்திரி பதவிக்கு நிறைய பேர் போட்டி போடுகிறார்கள். அவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும். பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை விரைவில் நிறைவடையும். மத்திய அரசு, சி.பி.ஐ. விசாரணை அமைப்பை தவறாக பயன்படுத்துகிறது.

    எங்கள் கட்சியை சேர்ந்த டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த அதிகாரிகள், டி.கே.சுரேஷ் எம்.பி.யின் பெயரை குறிப்பிடுமாறு வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சரியல்ல.

    இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.
    ×