search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coalition rule"

    பா.ஜனதாவின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது என்றும், கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #Kumaraswamy #BJP
    ஹாசன் :

    ஹாசனில் உள்ள பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவிலில் நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. இந்த கோவிலில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த குமாரசாமி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    5 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த இடைத்தேர்தல் அடுத்த ஆண்டு (2019) நடக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி தொடரும். ராமநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விலகியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவர் எங்கள் கட்சியை சேர்ந்தவர் இல்லை. அவர் முன்பு இருந்த கட்சிக்கே மீண்டும் வந்துள்ளார். அவர் விலகியதற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    கூட்டணி ஆட்சி மீது பா.ஜனதாவினர் தேவையில்லாத குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள். ராமநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விலகியதற்கு பா.ஜனதாவினரே காரணம். தங்கள் மீதுள்ள தவறை மறைக்க அவர்கள், மற்ற கட்சிகள் மீது குற்றம்சாட்டுகிறார்கள். பா.ஜனதாவினர் கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும் என்று கூறிக் கொண்டே இருக்கிறார்கள். இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி இருக்காது என்று கூறி வருகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. ஆபரேஷன் தாமரை திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தாலும், அதுவும் தோல்வி அடையும். பா.ஜனதாவின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யும்.



    பிரதமர் மோடிக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து கொண்டே செல்வதாகவும், அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் மத்தியில் பா.ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராவார் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. கருத்துக்கணிப்பில் எனக்கு நம்பிக்கை கிடையாது. கருத்துக்கணிப்பு நடத்தியவர்கள் பா.ஜனதா ஆதரவாளர்களாக இருக்கக்கூடும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறாது.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தான் பிரதமர் வேட்பாளர் இல்லை என்று கூறியுள்ளார். இது அவர் நாட்டு மக்களை நேசிப்பதை காட்டுகிறது. கர்நாடகத்தில் ஆன்லைன் மதுபானம் விற்பனைக்கு முந்தைய ஆட்சியில் முடிவு எடுக்கப்பட்டது. எக்காரணம் கொண்டும் ஆன்லைன் மதுபானம் விற்பனைக்கு அனுமதிக்க மாட்டேன். ஆன்லைன் மூலம் மதுபான விற்பனை செய்ய தடை விதிக்கப்படும்.

    ஹாசனாம்பா கோவிலில் பத்திரிகையாளர்கள் செல்ல அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் எடுத்த முடிவு தவறானது. பத்திரிகையாளர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #BJP
    சித்தராமையாவே கூறிவிட்டதால், கூட்டணி ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்று தேவேகவுடா கூறியுள்ளார். #Siddaramaiah #DeveGowda






    பெங்களூரு :



    முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஹாசனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சித்தராமையாவும், நானும் ஒரு காலத்தில் நல்ல நண்பர்களாக இருந்தோம். எங்களிடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததால் அவர் காங்கிரசில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டது. கூட்டணி ஆட்சியை காப்பது எனது பொறுப்பு என்று குமாரசாமியிடம் சித்தராமையா உறுதி அளித்துள்ளார். சித்தராமையாவே கூறிவிட்டதால், கூட்டணி ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது.

    ஹாசன் மாவட்ட வளர்ச்சி குறித்து எச்.டி.ரேவண்ணா கனவு வைத்துள்ளார். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, ஹாசனை சேர்ந்த யாருக்கும் மந்திரி பதவி கிடைக்கவில்லை. அப்போது நான் ஹாசனில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள சில முடிவுகளை எடுத்தேன். அதற்கு குறுக்கீடுகள் வந்தன.

    குமாரசாமியின் முதல்-மந்திரி நாற்காலி கெட்டியாக உள்ளது. குமாரசாமிக்கு 2 முறை இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இப்போது அவர் தினமும் 16 மணி நேரம் மாநில வளர்ச்சிக்காக பாடுபடுகிறார். கூட்டணி ஆட்சிக்கு எந்த அபாயமும் இல்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, எடியூரப்பா எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

    கூட்டணி ஆட்சி மீது எடியூரப்பாவுக்கு கோபம் வருவதற்கு ஒரு காரணம் உள்ளது. 104 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில், அவசரகதியில் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ஏற்றார். அவர் நினைத்தது போல் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியவில்லை. அதனால் கூட்டணி ஆட்சி மீது அவர் கோபத்தை காட்டுகிறார்.

    மத்தியில் பெரும்பான்மை இல்லாததால் வாஜ்பாய் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து நான் பிரதமரானேன். அதன் பிறகு நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் வாஜ்பாய் தனது கோபத்தை காட்டவில்லை. சபையை நடத்தவிடாமல் செய்யவில்லை. அவர் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். கண்ணியமாக நடந்து கொண்டார்.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார். #Siddaramaiah #DeveGowda
    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிப்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று மவுனத்தை கலைத்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தர்மஸ்தலா உஜிரியில் உள்ள ஆயுர்வேத இயற்கை மருத்துவ மையத்தில் சேர்ந்து புத்துணர்ச்சி சிகிச்சை பெற்று வந்தார். அவர் அங்கு 12 நாட்கள் தங்கி இருந்தார். அப்போது தனது ஆதரவாளர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசிய வீடியோ காட்சிகள் செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய தேவை இல்லை என்றும், இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்றும் அவர் கூறிய உரையாடல் வீடியோ வெளியானது.

    இந்த நிலையில் பெங்களூரு திரும்பிய சித்தராமையா காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு பின் மவுனத்தை கலைத்து பேசிய சித்தராமையா, கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று தெரிவித்தார்.



    இதுகுறித்து அவர் கூறுகையில், “சாதாரணமாக பேசுவதை வீடியோ எடுத்து அதை பகிரங்கமாக வெளியிடுவது நீதி நெறிமுறைகளுக்கு எதிரானது. எந்த சூழ்நிலையில் நான் கருத்து சொன்னேன் என்பது உங்களுக்கு தெரியாது. நான் தனிப்பட்ட முறையில் ஒருவருடன் பேசுவதை வீடியோ எடுத்து வெளியிடுவது என்பது சரியானதா?. இந்த கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என்றார்.

    துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறுகையில், “நான் சொன்ன கருத்துக்கு நீங்கள் வேறுவிதமாக அர்த்தம் கற்பித்தீர்கள். நான் எந்த அர்த்தத்தில் கருத்து சொன்னேன் என்பது உங்களுக்கு தெரியாது. மதவாத கட்சியான பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளோம். இந்த கூட்டணி அரசு நிலையாக நீடிக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என்றார். 
    கூட்டணி ஆட்சியின் பொது செயல் திட்ட அறிக்கை தயாரானது. இந்த பொது செயல் திட்டத்தில் 5 ஆண்களுக்கு தேவையான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அறிக்கை சித்தராமையாவிடம் தாக்கல் செய்யப்படுகிறது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சியை சுமூகமாக நிர்வகிக்க முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் முதல் கூட்டத்தில், பொது செயல் திட்டத்தை வகுக்க 5 உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது.

    அந்த குழுவின் உறுப்பினர்களாக காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி, மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, டி.கே.சிவக்குமார், ஜனதா தளம்(எஸ்) சார்பில் மந்திரிகள் எச்.டி.ரேவண்ணா, பண்டப்பா காசம்பூர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

    அந்த குழுவினர் ஏற்கனவே பல முறை கூடி இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் அந்த குழுவின் கூட்டம் வீரப்பமொய்லி தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களான மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, டி.கே.சிவக்குமார், எச்.டி.ரேவண்ணா, பண்டப்பா காசம்பூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் பொது செயல் திட்டம் வகுக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த பொது செயல் திட்டத்தில் 5 ஆண்களுக்கு தேவையான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் முக்கியமாக விவசாய கடன் தள்ளுபடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முடிவு எடுக்க குமாரசாமிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்துறைக்கு ரூ.1.25 கோடி ஒதுக்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

    அந்த பொது செயல் திட்ட அறிக்கை ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையாவிடம் தாக்கல் செய்யப்படும் என்று வீரப்பமொய்லி கூறினார். 
    ×