search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசா போர்"

    • அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது வழக்கம்.
    • இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

    காசா போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வேல்ஸ் இளவரசர் வில்லியம் வலியுறுத்தி உள்ளார். பொதுவாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது வழக்கமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில், 41 வயதான வேல்ஸ் இளவரசர் வில்லியம் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் மத்திய கிழக்கில் நடத்திய தாக்குதல் மற்றும் அதன் பிறகு அங்கு நடைபெறும் சம்பவங்களால் மனித குலம் எதிர்கொள்ளும் இழப்புகளை கண்டு பெரிதும் வருந்துகிறேன். இதில் பலர் கொல்லப்பட்டு விட்டனர்."

    "நான், மற்றவர்களை போன்றே, இந்த சண்டை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றே நினைக்கிறேன். காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் அதிகளவில் தேவைப்படுகிறது. உதவிகள் அதிவேகமாக சென்றடைய வேண்டியதும், பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டியதும் அவசியம் ஆகும்," என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • இதுவரை 28,000 பேர் காசா பகுதியில் உயிரிழந்துள்ளனர்
    • உயிரிழந்துள்ள ஹாசெம் ஹனியே ஒரு கல்லூரி மாணவர்

    கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    125 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் இப்போரில் இஸ்ரேலிய ராணுவ படை (Israeli Defence Forces) பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் மறைந்திருப்பதாக சந்தேகிக்கும் இடங்களில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை நடத்தி வருகிறது.

    தற்போது வரை சுமார் 28,000 பேர் காசாவில் உயிரிழந்து விட்டனர்; அப்பகுதி மக்களில் பாதிக்கும் மேல் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.

    இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் (Ismail Haniyeh) மகன் ஹாசெம் இஸ்மாயில் ஹனியே (Hazem Ismail Haniyeh) இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    22 வயதான ஹாசெம் ஒரு கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல்-ஹமாஸ் போரில் முன்னரே, ஹனியே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

    • இஸ்ரேல் துருப்புகள் மற்றும் டாங்கிகள் கடலோர காசா பகுதி எல்லை வேலி வழியாக கான்யூனுஸ் நகருக்குள் நுழைந்து வருகின்றன.
    • கான்யூனுஸ் பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் எச்சரிக்கை துண்டு பிரசுரங்கள் வீசப்படுகின்றன.

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா முனை பகுதி முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.

    வடக்கு காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பகுதி முற்றிலும் சின்னா பின்னாமாகி உள்ளது. இதற்கிடையே தெற்கு காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் அறிவித்தது.

    அங்குள்ள மக்கள் இடம் பெயர இஸ்ரேல் வலியுறுத்தியது. அதன்படி தெற்கு காசாவில் இஸ்ரேல் தீவிர தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. அங்குள்ள முக்கிய நகரங்கள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன. தரைப்படை வீரர்களும் முன்னேறி வருகிறார்கள்.

    இந்நிலையில் தெற்கு காசாவின் முந்தய நகரமான தான் யூனிசை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவத்தின் தளபதி ஜெனரல் பிங்கெல் மேன் கூறுகையில்ற, "தரைப்படை நடவடிக்கை தொடங்கியதில் இருந்து நாங்கள் மிகவும் தீவிரமான நிலையில் இருக்கிறோம். தெற்கு காசாவில் உள்ள முக்கிய நகரமான கான் யூனுசை முற்றிலும் சுற்றி வளைத்து உள்ளோம். அந்த நகரின் மையப்பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் செயல்பட்டு வருகிறது.

    ஏற்கனவே வடக்கு காசாவில் ஜபாலியா, ஷுஜாய் பகுதிகளில் சண்டையிட்டு வருகிறோம். வடக்கு காசா பகுதியில் பல ஹமாஸ் கோட்டைகளை கைப்பற்றினோம். தற்போது தெற்கில் ஹமாசின் கோட்டை நகருக்கு எதிராக செயல்பட்டு வருகிறோம்" என்றார்.

    இஸ்ரேல் துருப்புகள் மற்றும் டாங்கிகள் கடலோர காசா பகுதி எல்லை வேலி வழியாக கான்யூனுஸ் நகருக்குள் நுழைந்து வருகின்றன.

    கான்யூனுஸ் பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் எச்சரிக்கை துண்டு பிரசுரங்கள் வீசப்படுகின்றன. அதில், "உங்கள் பாதுகாப்புக்காக நீங்கள் இருக்கும் தங்குமிடங்களிலும், மருத்துவமனைகளிலும் இருங்கள். வெளியே வராதீர்கள். வெளியே செல்வது ஆபத்தானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் போர் முடிந்த பிறகு காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் கையாளும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, "போருக்கு பிறகு காசா பகுதியில் பாதுகாப்பை இஸ்ரேல் மட்டுமே கையாள முடியும். காசாவில் ராணுவமற்ற மண்டலத்தை உருவாக்க இஸ்ரேல் படை செய்யும். இதை செய்யக்கூடிய ஒரே சக்தி இஸ்ரேல்தான். காசா பகுதியின் ராணுவ மயமாக்கலுக்கான எந்தவொரு சர்வதேச சக்தியையும் அல்லது முயற்சியையும் நான் நம்பவில்லை.

    ஹமாசின் ராணுவ மற்றும் அரசியல் திறன்களை முற்றிலுமாக அகற்றி இஸ்ரேலுக்கு எதிர்காலத்தில் காசா பகுதியில் இருந்து எந்த அச்சுறுத்தலும் வராது என்பதை உறுதிப்படுத்துவோம். தற்போது காசாவில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் அனைவரையும் மீட்போம்" என்றார்.

    ×