search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக கவர்னர்"

    வீதிக்கு வந்து போராடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மீது அரசியல் சாசன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னரிடம் பா.ஜனதா புகார் அளித்தது. #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு, பா.ஜனதா ஆட்சி அமைக்க தீவிர முயற்சி செய்து வருகிறது. இதனால் குமாரசாமி தலைமையிலான அரசு ஆட்டம் கண்டு வருகிறது.

    இதைத் தொடர்ந்து முதல்-மந்திரி குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் வீதிக்கு திரண்டு வந்து கிளர்ச்சியில் ஈடுபடவேண்டும் என்று பகிரங்கமாகவே அழைப்பு விடுத்தார். இதைக் கண்டித்த பா.ஜனதா, குமாரசாமி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

    மேலும் எதிர்க்கட்சிக்கு எதிராக மக்களை போராடத்தூண்டியதாக கூறி முதல்-மந்திரி குமாரசாமியை கண்டித்து பா.ஜனதா சார்பில் கர்நாடகா முழுவதும் நேற்று பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் பெங்களூருவில் மாநில கவர்னர் வஜூபாய் வாலாவை, மத்திய மந்திரி சதானந்த கவுடா, பா.ஜனதா முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஷோபா, முன்னாள் மந்திரி சுரேஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்தனர்.


    அப்போது அவர்கள் ஒரு புகார் மனுவை கவர்னரிடம் வழங்கினர். அதில், “ஒரு கட்சிக்கு (பா.ஜனதா) எதிராக மக்கள் வீதிக்கு திரண்டு வந்து கிளர்ச்சியில் ஈடுபடவேண்டும் என்று மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரியே பேசுகிறார். இதுபோல் ஒரு முதல்-மந்திரியே பேசுவது மிக ஆபத்தானது.

    மேலும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பாவின் வீட்டின் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். எனவே அரசியல் சாசன சட்டத்தின்படி முதல்-மந்திரி குமாரசாமி மீது தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.  #Kumaraswamy #BJP #Yeddyurappa
    திவாகரனுக்கும் எனக்கும் எந்த வித சொத்து தகராறும் இல்லை என்று டி.டி.வி. தினகரன் சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். #Divakaran #dinakaran #karnatakagovernor

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் நடைபெறும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக டி.டி.வி. தினகரன் நேற்றிரவு சேலத்திற்கு வந்தார். இன்று காலை சேலத்தில் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அண்ணன் தம்பி என்றால் சொத்து தகராறு வரும். எனது முன்னாள் மாமா திவாகரனுக்கும், எனக்கும் சொத்து தகராறு இருப்பதாக கூறப்படுவது ஏற்புடையது அல்ல, அவருக்கும் எனக்கும் எந்த வித சொத்து தகராறும் இல்லை.

    துரோக கும்பலுடன் அவர் சேர்ந்து விட்டார். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சுக்கு அவர் ஏஜெண்டாக செயல் படுகிறார். மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம்.


    கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்காமல் பெரும்பான்மையை முதலில் நிரூபிக்கும் படி கவர்னர் கூறி இருக்கலாம்.

    104 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றும் பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் நீடித்துள்ளது. தற்போது உச்சநீதிமன்ற உத்தரவால் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பு வரவேற்கதக்கது.

    அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலத்திலேயே பொதுச்செயலாளருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது தொடர்பாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்.

    இது தொடர்பாக எங்கள் வாதங்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். இதன் அடிப்படையில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அ.தி.மு.க. வை சேர்ந்த பலரும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். விரைவில் நிர்வாகிகளும் எங்கள் பக்கம் வருவார்கள்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகள் அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் ஆகியோரிடம் பேசினேன். மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்ற உத்தரவை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 

    இவ்வாறு அவர் கூறினார். #Divakaran #dinakaran #karnatakagovernor

    கர்நாடகாவில் குறைவான எண்ணிக்கை கொண்ட பா.ஜனதாவை பதவியேற்க அழைத்த கர்நாடக கவர்னர் தாமாகவே பதவி விலக வேண்டும் என நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

    புதுச்சேரி:

    கர்நாடக மாநில ஐ.என்.டி.யூ.சி. சார்பில் ஆண்டுதோறும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு ஜோதி யாத்திரை நடத்தப்படுகிறது. 27-வது ஜோதி யாத்திரை கடந்த 15-ந்தேதி பெங்களூரில் இருந்து கிளம்பியது. சேலம், கோவை, கொச்சின், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, விழுப்புரம் வழியாக வந்த ஜோதி யாத்திரை நேற்று புதுவைக்கு வந்தது.

    இன்று காலை ஜோதி யாத்திரை ஸ்ரீபெரும் புதூருக்கு கிளம்பியது. ஜோதி யாத்திரையாக வந்தவர்களுக்கு காங்கிரஸ் துண்டு அணிவித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்து ஜோதியை வழியனுப்பினார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., டெல்லி பிரதிநிதி ஜான்குமார், புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    கர்நாடக ஐ.என்.டி.யூ. பொதுச்செயலாளர் சிவப்பிரகாசம் 27-வது ஆண்டாக ராஜீவ் நினைவு ஜோதி யாத்திரையை நடத்துகிறார். அவருக்கு என் பாராட்டுக்கள்.

    ராஜீவ்காந்தி இன்றைய காலத்தில் தலைவர்கள் இறந்தவுடன் மறந்து விடுகின்றனர். சாதனை புரிந்த தலைவர்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருப்பார். அதுபோல் ராஜீவ்காந்தி நினைவில் இருப்பவர்.

    ராஜீவ் விமான பைலட்டாக இருந்தவர். சந்தர்ப்ப சூழ்நிலையில் இந்திராகாந்தி அவரை அரசியலுக்கு இழுத்தார். அரசியலுக்கு வந்த ராஜீவ், நாடு விஞ்ஞானத்தில் வளர்ச்சி பெற வேண்டும் என விரும்பினார்.

    கம்ப்யூட்டரை அவர்தான் கொண்டு வந்தார். பஞ்சாயத்துராஜ் சட்டம், பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு, கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ராஜீவ் கால கட்டத்தில் நாடு நன்றாக வளர்ச்சி அடைந்திருந்தது. இருப்பினும் அரசியல் சூழ்ச்சியால் அவர் தோல்வி அடைந்தார்.

    அடுத்த தேர்தலில் வெற்றியடைய நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். அப்படி பிரசாரத்துக்கு வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.

    ஸ்ரீபெரும்புதூரில் தப்பினால் புதுவை, மயிலாடுதுறைதான் இலக்காக இருந்தது. இன்று நாடு ஒற்றுமையாக இருக்க ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி சிந்திய ரத்தம்தான் காரணம்.

    தற்போது நாடு மதச் சார்புடையவர்களிடம் சிக்கி தவிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினருக்கும், தலித் மக்களுக்கும் பல தொந்தரவு தருகின்றனர். தாக்குகின்றனர்.

    பா.ஜனதா ஜனநாயக முறையில் ஆட்சி அமைப்பதில்லை. பல இடங்களில் குறைந்த இடங்களை பெற்றிருந்தாலும் கோவா, மணிப்பூர், மேகாலாயாவில் அங்குள்ளவர்களை அரசியல் பலத்தால் மிரட்டி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர்.

    அதேபோல கர்நாடகாவிலும் ஆட்சியை பிடிக்க நினைத்தனர். ஆனால், அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி 116 இடங்களை பிடித்திருந்தது. பா.ஜ.க. 104 இடங்களையே பிடித் திருந்தது.

    ஆனால், காங்கிரஸ், ஜனதாதள எம்.எல்.ஏ.க்களை பிடிக்க பேரம் பேசினர். அந்த எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டோம் என கூறிவிட்டனர்.

    மோடி நாங்கள் ஜன நாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள். விலைக்கு வாங்கி ஆட்சி செய்ய மாட்டோம். அரசுக்கு எந்த தொல்லையும் தர மாட்டோம் என்கிறார்.

    பின்னர் ஏன் கர்நாட காவில் பா.ஜனதா ஆட்சி அமைக்க முன்வந்தார்? கர்நாடகாவில் குறைவான எண்ணிக்கை கொண்ட பா.ஜனதாவை பதவியேற்க அழைத்த கர்நாடகா கவர்னர் தாமாகவே பதவி விலக வேண்டும்.

    இதில், ஐகோர்ட்டு மூலம் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. 2019 பாராளு மன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை பிடித்து வெற்றி பெறும். ராகுல்காந்தி பிரதமராகி நாட்டில் அமைதியை உருவாக்க தொடர்ந்து பாடுபடுவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    எடியூரப்பா ராஜினாமா செய்த நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்றிரவு கவர்னரை சந்தித்த குமாரசாமி வரும் 21-ம் தேதி கர்நாடக முதல் மந்திரியாக பதவி ஏற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #kumaraswamy #karnatakacmrace
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள சட்டசபையில் இன்று போதுமான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதல் மந்திரி எடியூரப்பா தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, ஏற்கனவே காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சேர்த்து 117 உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என உரிமை கோரி இருந்த குமாரசாமிக்கு இன்று மாலை கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    இன்றிரவு, சுமார் 7.15 மணியளவில் ராஜ் பவனுக்கு சென்ற குமாரசாமி கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்தார். வரும் 21-ம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் கர்நாடக மாநில முதல் மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்பார் என ராஜ் பவன் வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிரபல செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. #kumaraswamy #karnatakacmrace
    கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கவர்னர் வஜுபாய் வாலா ராஜினாமா செய்வது நல்ல யோசனையாக இருக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #rahulgandhi #karnatakagovernor
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பா அறிவித்தார். 

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘கர்நாடக மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களை வெளிப்படையாக விலைக்கு வாங்குவதை பிரதமர் மோடி நேரடியாக ஆதரித்ததை மக்கள் பார்த்தனர்.

    எனவே, நாட்டில் ஊழலை ஒழிப்பேன் என்று அவர் பேசி வருவது அப்பட்டமான பொய் என்பதும் அவரே ஊழல்வாதி என்பதும் தெளிவாக புரிகிறது. 

    பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நின்றதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். இனியும் காங்கிரஸ் கட்சி இதர எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க.வை வீழ்த்தும். கவர்னர் வஜுபாய் வாலா ராஜினாமா செய்வது நல்ல யோசனையாக இருக்கும் என நான் கருதுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். #rahulgandhi #karnatakagovernor
    கர்நாடக சட்டசபையில் இன்று எடியூரப்பா ராஜிமாமா செய்த பின்னர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தேசிய கீதத்துக்கு மதிப்பளிக்காமல் வெளியேறியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #nationalanthem #rahulgandhi #karnatakaassembly
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பின்னர், அவையை விட்டு அவர் வேகமாக வெளியேறியதும், சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒப்படைப்பதாக தற்காலிக சபாநாயகர் போபையா அறிவித்தார். 

    அப்போது, வழக்கமாக இசைக்கப்படும் தேசிய கீதம் ஒலிபரப்பானது. சில எம்.எல்.ஏ.க்கள் மட்டும் தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் நின்றிருந்தனர். ஆனால், பலர் அவசரமாக வெளியே செல்வதில் குறியாக இருந்தனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தேசிய கீதத்துக்கு மதிப்பளிக்காமல் வெளியேறியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவில், ‘கர்நாடக மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களை வெளிப்படையாக விலைக்கு வாங்குவதை பிரதமர் மோடி நேரடியாக ஆதரித்ததை மக்கள் பார்த்தனர்.


    எனவே, நாட்டில் ஊழலை ஒழிப்பேன் என்று அவர் பேசி வருவது அப்பட்டமான பொய் என்பதும் அவரே ஊழல்வாதி என்பதும் தெளிவாக புரிகிறது. பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நின்றதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.

    கர்நாடக சட்டசபையில் இன்று அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்த பின்னர் எம்.எல்.ஏ.க்களும், தற்காலிக சபாநாயகரும் தேசிய கீதத்துக்கு மதிப்பளிக்காமல் வெளியே சென்றதை கவனித்தீர்களா? ஆட்சி, அதிகாரத்தில் இருந்தால் அரசின் எந்த அமைப்பையும் அவமரியாதைப்படுத்த இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பது தெரிகிறது’ என குறிப்பிட்டுள்ளார். #nationalanthem #rahulgandhi #karnatakaassembly 
    கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைத்ததை கண்டித்து, குஜராத்தில் உள்ள கவர்னர் வஜுபாய் வாலாவின் வீட்டின் முன் காங்கிரசார் தர்ணாவில் ஈடுபட்டனர். #Vajubhaivala #Congress #Protest
    அகமதாபாத்: 

    கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க.வுக்கு தனி பெரும்பான்மை இல்லாத நிலையில் அக்கட்சியை ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். அத்துடன் எடியூரப்பாவுக்கு முதல் மந்திரியாக பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். இன்னும் 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

    கர்நாடகத்தில் ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. எனவே, கவர்னரை கண்டித்து காங்கிரசார் நாடு முழுவதும் இன்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைத்ததை கண்டித்து, குஜராத்தில் உள்ள கவர்னர் வஜுபாய் வாலாவின் வீட்டின் முன் காங்கிரசார் தர்ணா நடத்தினர்.

    ராஜ்கோட்டின் நியூட்டன் நகர் சொசைட்டியில் உள்ள வஜுபாய் வாலா வீட்டின் முன்பு காங்கிரசார் திரண்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    இதுதொடர்பாக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் மகேஷ் ராஜ்புத் கூறுகையில், கவர்னர் வஜுபாய் வாலாவின் நடவடிக்கை ஜனநாயகத்தின் மீது படிந்துள்ள கறை போல் உள்ளது. மாநிலத்தை நிர்வகிக்கும் கவர்னர் பாஜக தொண்டர் போல் செயல்பட்டு வருகிறார் என குற்றம் சாட்டினார்.

    இதேபோல். குஜராத்தில் அகமதாபாத் மற்றும் வதோதராவிலும் காங்கிரசார் தர்ணாவில் ஈடுபட்டனர். #Vajubhaivala #Congress #Protest
    கோவையில் கர்நாடக கவர்னரை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    கோவை:

    கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என். கந்தசாமி, மகேஷ் குமார், கே.பி.எஸ். மணி, கே.வி. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கர்நாடகாவில் பெரும்பான்மையான காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல் பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்த கர்நாடக கவர்னரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் தென்றல் நாகராஜ், கணபதி சிவகுமார், உமாபதி, குருமூர்த்தி, கருணாகரன், திலகவதி, வக்கீல் கருப்பசாமி, சவுந்திரகுமார், ராம. நாகராஜன், குமரேசன், பாஸ்கர், வசந்தி, துளசிராஜ், காந்தகுமார், ஆடிட்டர் குருசாமி, விஜயசாந்த், இஸ்மத், விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கர்நாடக கவர்னரின் நடவடிக்கை அரசியல் சட்டத்தை மீறுவதாகும். இது நாட்டுக்கு நல்லதல்ல என்று மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

    ஆட்சி அமைக்க 112 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. ஆனால் 104 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ள பா.ஜனதா ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய்வாலா அழைப்பு விடுத்தார். அதை தொடர்ந்து முதல்-மந்திரியாக எடியூரப்பா நேற்று பதவி ஏற்றார்.

    இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    “ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பெற்ற மதசார்பற்ற ஜனதாதள தலைவர் எச்.டி. குமாரசாமியை தான் ஆட்சியை அழைக்க கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்து இருக்க வேண்டும். மாறாக பா.ஜனதா ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுத்தார்.

    கவர்னரின் இத்தகைய நடவடிக்கை அரசியல் சட்டத்தை மீறுவதாகும். இது நாட்டுக்கு நல்லதல்ல. கவர்னர் அரசியமைப்பின் அதிகாரம் பெற்றவர். அவரால் தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாது என தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங் கூறும் போது, மைனாரிட்டி எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சியை ஆட்சி அமைக்க அழைத்ததன் மூலம் கவனர் வஜூபாய் வாலா ஜனநாயக படுகொலை நிகழ்த்தியுள்ளார்.

    பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் வழங்கியதன் மூலம் எதிர்க்கட்சிகளை உடைத்து குதிரை பேரம் நடத்த வழி வகுத்துள்ளார். கவர்னரின் இத்தகைய செயல் அதிர்ச்சி அளிக்கிறது என்றார் மேலும் அவர் கூறும் போது ஆர்.எஸ்.எஸ். கவர்னரிடம் இதைவிட வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

    பா.ஜனதா கட்சியின் அதிருப்தியாளரும் நடிகருமான சத்ருகன் சின்கா கூறியதாவது:-

    போதுமான மெஜாரிட்டி எம்.எல்.ஏ.க்கள் இல்லாத நிலையில் அங்கு ஆட்சி அமைக்க பா.ஜனதா முடிவு செய்தது ஏன்?.

    அரசிலில் பண பலத்தை விட மக்கள் பலமே ஏற்றுக் கொள்ளத்தக்கது. அனைவரால் விரும்பக் கூடியது என்றார்.


    கர்நாடக கவர்னர் பா.ஜனதாவின் ஏஜெண்டுபோல செயல்படுகிறார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.
    களக்காடு:

    ம.தி.மு.க. வெள்ளி விழா கொடியேற்றும் நிகழ்ச்சி நாங்குநேரியில் இன்று நடந்தது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில் மெஜாரிட்டி இல்லாத எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது அப்பட்டமான ஜனநாயக படுகொலை. இது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். கர்நாடக கவர்னர் பா.ஜனதாவின் ஏஜெண்டுபோல செயல்படுகிறார். 116 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ள குமாரசாமியை அழைக்காமல் எடியூரப்பாவை அழைத்தது மற்ற கட்சிகளில் இருந்து ஆள் பிடியுங்கள் என்று கூறுவதுபோல் உள்ளது.

    தமிழகத்திற்கு விரோதமாக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரி பிரச்சினையிலும் கூட மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்துவிட்டது.

    இவ்வாறு வைகோ கூறினார்.

    எடியூரப்பாவுக்கு கவர்னர் 15நாள் அவகாசம் கொடுத்தது சரியான நடைமுறைதான் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ponradhakrishnan

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றது மட்டற்ற மகிழ்ச்சி. மீண்டும் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றது கர்நாடக விவசாயிகளுக்கு அடிதட்டாகவும், மக்களுக்கு பக்க பலமாகவும் அமைந்துள்ளது. இனி கர்நாடக மக்களுக்கு நல்ல வாழ்க்கையை அவர் ஏற்படுத்தி கொடுப்பார்.

    இந்த வெற்றியை பெற்று தந்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    பா.ஜனதா தனி ஒரு கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்துள்ளார். வேறு யாருக்கு அழைப்பு கொடுக்க முடியும்? எடியூரப்பாவுக்கு கவர்னர் 15நாள் அவகாசம் கொடுத்தது சரியான நடைமுறைதான்.


    கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா ரூ.56 ஆயிரம் கோடி விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்தது அவரது முதல் பெரிய முயற்சியாகும். பா.ஜனதா ஆட்சி எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகவில் பா.ஜனதா ஆட்சி மூலம் காவிரி தண்ணீர் உறுதியாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கர்நாடக தேர்தலுக்கு முன்பே அங்கு பா.ஜனதா ஆட்சி அமையும் என்று நான் கூறியிருந்தேன். முதல்வர் எடியூரப்பாவிடம் காவிரி பிரச்சினை, இரு மாநில உறவு பிரச்சினை, தமிழ் சொந்தங்களுக்கு உள்ள பிரச்சினை குறித்து பேசுவேன். இன்னும் ஒரு மாதத்தில் அவரை சந்திப்பேன்.

    காவிரி விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது. இதை போட்டது தி.மு.கவும் காங்கிரசும் தான். அதை கிழியாமல் கவனமாக எடுக்க வேண்டும். இந்த முறை காவிரி தண்ணீர் கண்டிபாக வரும்.

    தமிழகத்தில் எது தேவை,எது வேலை வாய்ப்பை கொடுக்கும் என்பதை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மற்றவர்களின் சதி திட்டம் காரணமாக மக்கள் புறக்கணித்து வருகிறார்கள்.

    ஒரு சுப நிகழ்ச்சிக்கு நான் போயிருந்தேன். அங்கு நடிகர் எஸ்.வி.சேகர் வந்தது எனக்கு தெரியாது. அவரை கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தஞ்சை சுற்றுலா பயணியர் மாளிகையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை வைத்திலிங்கம் எம்.பி. மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.  #ponradhakrishnan #yeddyurappa #karnatakagovernor

    குதிரை பேரம் நடத்துவதற்கு வசதியாக 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாகவும் அரசியலமைப்புச் சட்டத்தை மோடி அரசு மீறி விட்டதாகவும் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.#KarnatakaElections2018 #Yeddyurappa #Kumarasamy
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இதை தொடர்ந்து எடியூரப்பா முதல்- மந்திரியாக இன்று பதவி ஏற்றார்.

    எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த வி‌ஷயத்தை நாங்கள் எளிதாக விட்டுவிட மாட்டோம். ஏனெனில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை நாங்கள் அளித்துள்ளோம். ஆனால் எங்கள் கூட்டணிக்கு பதிலாக பெரும்பான்மை இல்லாத பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.



    மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 3 அல்லது 4 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தால் கூட பரவாயில்லை. அவர்கள் குதிரை பேரம் நடத்துவதற்கு வசதியாக 15 நாட்கள் அவகாசம் அளித்து உள்ளார்.

    கவர்னரை பயன்படுத்தி இந்த நாடகத்தை நடத்தியதன் மூலம் மோடி தலைமையிலான மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை மீறியுள்ளது.

    எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு எடுப்போம்.

    இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.#KarnatakaElections2018 #Yeddyurappa #Kumarasamy
    ×