search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐநா சபை"

    • தீர்மானத்திற்கு ஆதரவாக 12 வாக்குகள் பதிவானது, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து வாக்களிக்கவில்லை.
    • தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வருகிறது. இதில் காசாவில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இப்போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.

    இந்த நிலையில் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக அனுமதிக்க வேண்டும் என்ற முயற்சியை பாலஸ்தீனம் மேற்கொண்டது.

    இதை பரிந்துரைக்கும் வரைவு தீர்மானத்தின் மீது 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 12 வாக்குகள் பதிவானது, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து வாக்களிக்கவில்லை. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    தற்போது பாலஸ்தீனம் ஐ.நா.வில் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடாக உள்ளது. ஐ.நா.வின் நடவடிக்கைகளில் பாலஸ்தீனம் பங்கேற்க முடியும். ஆனால் தீர்மானங்களில் வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது.
    • தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள் என்றார்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    சமீபத்தில் ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே, இந்தியாவிலும் வாக்காளர்களின் அரசியல் மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் என நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.

    இந்நிலையில், தேர்தலை நடத்துவது குறித்து ஐ.நா.சபை எங்களுக்கு சொல்ல தேவையில்லை என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவது குறித்து ஐ.நா. எங்களுக்கு சொல்ல தேவையில்லை. தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள். எனவே அது குறித்து கவலை கொள்ள வேண்டாம் என குறிப்பிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானில் மனித உரிமைகள் சாதனை "உண்மையிலேயே பரிதாபத்திற்குரியது.
    • தனது சொந்த சிறுபான்மையினரை துன்புறுத்தி, உண்மையிலேயே மோசமான மனித உரிமை சாதனைகளைக் கொண்ட ஒரு நாடு.

    காஷ்மீர் விவகாரம் பற்றி பாகிஸ்தான் ஐ.நா.சபையில் அடிக்கடி பேசி இந்தியா மீது குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் 55-வது அமர்வில், இந்தியாவின் செயலாளர் அனுபமா சிங் பேசியதாவது:-

    இந்தியாவைப் பற்றிய விரிவான பாகிஸ்தானின் குறிப்புகளைப் பொறுத்தவரை, சபையின் தளம் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக வெளிப்படையான பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்க தவறாகப் பயன்படுத்தப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

    நாங்கள் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய முழு யூனியன் பிரதேசங்களும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சமூக- பொருளாதார மேம்பாடு மற்றும் நல்லாட்சியை உறுதி செய்வதற்காக இந்திய அரசு எடுத்துள்ள அரசியலமைப்பு நடவடிக்கைகள் இந்தியாவின் உள் விவகாரங்கள்.

    இதில் பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை. பாகிஸ்தானில் மனித உரிமைகள் சாதனை "உண்மையிலேயே பரிதாபத்திற்குரியது. தனது சொந்த சிறுபான்மையினரை துன்புறுத்தி, உண்மையிலேயே மோசமான மனித உரிமை சாதனைகளைக் கொண்ட ஒரு நாடு, சாதிப்பதில் பெரும் முன்னேற்றங்களைச் செய்து வரும் இந்தியாவைப் பற்றி கருத்துத் தெரிவிப்பது, வெறும் முரண்பாடானவை அல்ல. மாறாக விபரீதமானவை.

    உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது. பயங்கரவாதம், கடனில் சிக்கித் தவிக்கும் தேசிய இருப்புநிலைகள் மற்றும் தங்கள் நலன்களுக்கு சேவை செய்யத் தவறியதற்காக அதன் மக்கள் உணரும் அவமானம் ஆகியவற்றால் ரத்தம் சிந்தப்பட்ட ஒரு நாட்டிற்கு இந்தியா அதிக கவனம் செலுத்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரக ஆலோசகர் மதுசூதன் பதிலடி கொடுத்தார்.
    • சர்வதேச சமூகம் வெளிப்படையான, சமமான நிதியுதவியில் பணியாற்ற வேண்டும்.

    நியூயார்க்:

    ஐ.நா. சபையில் காஷ்மீர் விவகாரத்தை பற்றி பாகிஸ்தான் தொடர்ந்து பேசி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கிறது.

    இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், காஷ்மீர் விவகாரம் பற்றி பாகிஸ்தானின் ஐ.நா. தூதர் முனீர் சுக்ரம் பேசினார். இதற்கு ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரக ஆலோசகர் மதுசூதன் பதிலடி கொடுத்தார்.

    அவர் கூறும்போது, இந்தியாவுக்கு எதிராக ஒரு நிரந்தரப் பிரதிநிதி (பாகிஸ்தான் தூதர்) முன் வைத்து உள்ள தேவையற்ற மற்றும் வழக்கமான கருத்துக்களை நிராகரிக்க சில வினாடிகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளமாட்டேன். அதற்கு பதில் அளித்து நான் அவர்களை கண்ணியப்படுத்த மாட்டேன்.

    சர்வதேச கவனத்தை கவர பாகிஸ்தான், ஐ.நா. கூட்டங்களில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி வருகிறது என்றார்.

    மேலும் அவர் கூறும்போது, சர்வதேச சமூகம் வெளிப்படையான, சமமான நிதியுதவியில் பணியாற்ற வேண்டும். கடன் பொறிகளின் தீய சுழற்சிக்கு வழிவகுக்கும் நிதியுதவியின் ஆபத்துக்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சீனாவை மறைமுகமாக குறிப்பிட்டார்.

    இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா கடன்களை கொடுத்து தனது பொறியில் சிக்க வைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது
    • காசா மற்றும் பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தீர்மானம் கொண்டு வரப்பட்டது

    ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பெரும்பாலான நாடுகள் காசா மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றன.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ந்தேதி கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியதால், அரபு நாடுகள் உள்ளிட்டவை இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக களம் இறங்க முடியவில்லை. இதனால் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது.

    காசாவில் சுமார் 20 லட்சம் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பாலஸ்தீன மக்களும் இந்த போரால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

    இந்த தீர்மானத்தில், அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகளால் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என அமெரிக்கா ஆதரவுடன் கனடா, தீர்மானத்தில் மாற்றம் கொண்டு முயற்சித்தது. அது நிராகரிக்கப்பட்டது.

    இறுதியாக 193 உறுப்பினர்களை கொண்ட சபையில், தீர்மானத்திற்கு ஆதரவாக 120 பேர் வாக்களித்தனர். 14 பேர் எதிர்த்து வாக்களித்தனர். 45 பேர் கலந்து கொள்ளவில்லை.

    இந்த தீர்மானத்திற்கு ஐ.நா. சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாகிஸ்தான் வழக்கமான குற்றச்சாட்டை கூறி வருகிறது.
    • உலகின் கவனத்தை திசை திருப்பவே பாகிஸ்தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் சபையின் 78-வது அமர்வு கூட்டம் நடந்தது. இதில் பேசிய பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் அன்வருல் ஹக்கக்கர் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பினார்.

    இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இந்திய பிரதிநிதி பெடல் கெஹ்லோட் பேசியதாவது:-

    பாகிஸ்தான் வழக்கமான குற்றச்சாட்டை கூறி வருகிறது. இந்தியாவுக்கு எதிராக முற்றிலும் பொய் பிரசாரத்தினை பாகிஸ்தான் செய்கிறது. அடிப்படை ஆதராமற்ற குற்றச்சாட்டுகளை தவறான முறையில் தெரிவித்து வருகிறது.

    ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். ஜம்மு-காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்பான விவகாரங்கள் முற்றிலும் இந்தியாவுக்கு உட்பட்டது.

    எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை. பாகிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் மோசமாக இருக்கிறது.

    உலகின் கவனத்தை திசை திருப்பவே பாகிஸ்தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரஷியாவின் போர் எங்களுடன் நிற்கப்போவதில்லை என ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருந்தார்
    • ரஷியா போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கு கனடா ஆதரவு தெரிவித்து வருகிறது

    ஐ.நா. சபையின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாதுகாப்பு கவுன்சிலில் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    ரஷியா எரிசக்தி மற்றும் உணவை ஆயுதமாக்கி வருகிறது. மில்லியன் கணக்கான மக்கள் உணவு தட்டுப்பாட்டால் அவதிப்படுகின்றனர். பசி மற்றும் பட்டினியால் வாடுகின்றனர். மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தணிப்பதில் கனடா அர்ப்பணிப்புடன் உள்ளது.

    உக்ரைன்- நிலையான வளர்ச்சி இலக்கு மற்றும் உலகளாவிய முன்னேற்றம் ஆகிவற்றிற்கு இடையேயான ஆதரவை முடிவு செய்வதை நாங்கள் நம்பவில்லை. உண்மையிலே, ஒரே பொறுப்பு இரண்டையும் தேர்வு செய்வதுதான். ஒற்றுமை மற்றும் நிதி அர்ப்பணிப்புடன் அதை செய்து கொண்டிருக்கிறோம். ரஷியா முற்றிலுமாக, உடனடியாக உக்ரைனில் இருந்து துருப்புகளை திரும்பப்பெற வேண்டும்.

    இவ்வாறு ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

    • கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
    • தானிய விலை உயர்வு என்பது வளரும் நாடுகளில் உள்ள குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது.

    நியூயார்க்:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் துறைமுகங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. பல நாடுகளுக்கு கருங்கடல் வழியாக கோதுமை, பார்லி போன்ற தானியங்கள், சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசிய உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் போர் காரணமாக தடைப்பட்டது.

    இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் கருங்கடல் தானிய ஒப்பந்தம் செய்தது. அதன்படி உக்ரைனின் மூன்று துறைமுகங்களில் இருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி செய்ய ரஷியா சம்மதித்தது.

    இந்நிலையில் கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

    இந்நிலையில், தானிய ஒப்பந்ததில் இருந்து ரஷியா விலகியதால் தானியங்களின் விலை உயர்வு, கோடிக்கணக்கான மக்களுக்கு பசி மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஐ.நா.வின் அவசர கால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிபித்ஸ் கூறும்போது, "தற்போது 69 நாடுகளில் சுமார் 36 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. தானிய விலை உயர்வு என்பது வளரும் நாடுகளில் உள்ள குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது. பசி-பட்டினியால் வாடுவார்கள். இதன் காரணமாக பலர் இறக்கக் கூடும் என்றார்.

    போதுமான உக்ரேனிய தானியங்கள் ஏழை நாடுகளை சென்றடையவில்லை என்று ரஷியா புகார் தெரிவித்து, ஒப்பந்தத்தில் இருந்து விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.

    உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களுக்கு செல்லும் எந்த கப்பலையும் ராணுவ பொருட்கள் ஏற்றி செல்லும் கப்பலாக கருதப்படும் என்று ரஷியா தெரிவித்துள்ளது.

    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கூட்டம் இன்று நடக்கிறது.
    • இந்தக் கூட்டத்திற்கு பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்குகிறார்.

    நியூயார்க்:

    செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தப் போகும் தாக்கம் குறித்து உலகெங்கிலும் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

    வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலக பொருளாதாரத்துக்கும், சர்வதேச பாதுகாப்புக்கும் எவ்வாறு பயன்படுத்துவது என்று பல்வேறு உலக நாடுகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

    இந்நிலையில், நியூயார்க் நகரில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதல் கூட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இன்று நடைபெற உள்ளது.

    இந்தக் கூட்டத்திற்கு பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்குகிறார். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நன்மை, தீமைகள் குறித்தும் முக்கிய விவாதம் நடைபெற உள்ளது.

    • பல்நாட்டு கூட்டு முயற்சி தேவைப்படுவதாக பிரிட்டனின் தூதர் பார்பரா உட்லேண்ட் கூறியிருக்கிறார்.
    • செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு உரிமம் வழங்கும் அமைப்பை உருவாக்க ஓபன்ஏஐ ஆலோசனை வழங்கி உள்ளது.

    செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து உலகெங்கிலும் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் மூலம் வரக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை, முதல் முறையாக ஒரு கூட்டத்தை நடத்த இருக்கிறது. இந்த கூட்டத்தை பிரிட்டன் அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது.

    செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டினால் வரக்கூடிய அனுகூலங்களை உணர்ந்திருந்தாலும், அவற்றை அணு ஆயுதங்களை கட்டுப்படுத்த பயன்படுத்தும் போது அதனால் வரக்கூடிய ஆபத்துக்கள் குறித்தும் கவலை கொள்ள வேண்டியுள்ளதால் இந்த கூட்டம் பிரிட்டனால் நடத்தப்படுகிறது.

    "விஞ்ஞானிகளும், நிபுணர்களும், அணுசக்தியால் ஏற்படக்கூடிய போர் அபாயத்திற்கு இணையாக செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என அறிவித்து, இதனை கட்டுப்படுத்தும் விதமாக செயல்பட உலகிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்" என்று ஐ.நா. தலைவர் கூறியிருக்கிறார்.

    செப்டம்பரில் செயற்கை நுண்ணறிவு குறித்த ஒரு ஆலோசனைக் குழுவை நியமிக்க திட்டமிருப்பதாகவும் ஐ.நா. பொதுச்செயலாளர், அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்தார்.

    "செயற்கை நுண்ணறிவு விளைவிக்கப்போகும் சாதக, பாதகங்களை குறித்து தீர்மானிக்க ஒரு பல்நாட்டு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது" என பிரிட்டனின் தூதர் பார்பரா உட்வார்ட் கூறியிருக்கிறார்.

    ஓபன்ஏஐ (OpenAI) நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறும்போது, "அமெரிக்க அல்லது உலகின் சில நாடுகளின் கூட்டு முயற்சியால் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு உரிமம் வழங்கவும், தேவைப்பட்டால் அந்த உரிமத்தை ரத்து செய்யவும் அதிகாரம் உள்ள ஒரு அமைப்பை உருவாக்கலாம்" என ஆலோசனை வழங்கியுள்ளார்.

    பிரிட்டன் பிரதம மந்திரி ரிஷி சுனக் கூறுகையில், "உலகளாவிய பலதரப்பு விவாதத்தை நாங்கள் நடத்த முடியும். இதற்காக இந்த ஆண்டின் பிற்பகுதியில் செயற்கை நுண்ணறிவு பற்றிய உச்சிமாநாட்டை பிரிட்டன் நடத்தும்" என்று தெரிவித்தார்.

    • போர் நீடித்தால், சித்ரவதை மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து மேலும் பல அறிக்கைகள் வெளிவரலாம்.
    • சித்ரவதை செய்த நபர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    நியூயார்க்:

    ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது 2022ம் வருடம் பிப்ரவரி மாதம் ராணுவ நடவடிக்கையை தொடங்கி முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. ரஷியாவுக்கு உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷியாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வருகிறது.

    இந்நிலையில், உக்ரைன் போரில் கைது செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் போர்க் கைதிகளை ரஷிய படைகள் சித்ரவதை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த செயல் ரஷிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயலாக இருக்கலாம் என ஐ.நா. சபை கூறியுள்ளது.

    இதுபற்றி ஐ.நா. சபையின் அறிக்கையாளரான அலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் கூறியிருப்பதாவது:

    உக்ரைனில் உள்ள ரஷியப் படைகள், உக்ரைன் குடிமக்கள் மற்றும் ராணுவ போர்க்கைதிகளை தொடர்ச்சியாக, வேண்டுமென்றே உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் துன்புறுத்துவதாக சில அறிக்கைகள் மற்றும் சாட்சியங்கள் மூலம் அறிந்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்த சித்ரவதை நடவடிக்கைகளில் மின்சார ஷாக் கொடுத்தல், முகத்தை மூடி தாக்குதல் மற்றும் மரண அச்சுறுத்தல்கள் ஆகியவை அடங்கும்.

    இந்த குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப்பட்டால், அவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட சித்ரவதையின் ஒரு மாதிரியாகவும் இருக்கலாம் என தோன்றுகிறது. இந்த சித்ரவதைகளை பார்க்கும்போது, உயர் அதிகாரிகளிடமிருந்து நேரடி அங்கீகாரம் பெற்று, வேண்டுமென்றே கொள்கை ரீதியாக செய்ததுபோல் தெரிகிறது.

    சித்ரவதை ஒரு போர்க்குற்றம் மட்டுமின்றி இந்த நடைமுறை மனிதகுலத்திற்கே எதிரான குற்றமாகும். உயர்ந்த இடத்திலிருந்து வந்த உத்தரவு அல்லது அரசின் கொள்கை வழிகாட்டுதலுக்கு கீழ்ப்படிந்து கைதிகளை சித்ரவதை செய்வதை நியாயப்படுத்த முடியாது. சித்ரவதை செய்த நபர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    சித்ரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுபவர்கள், உக்ரைனுக்குள் ரஷியப் படைகள் கட்டுப்பாட்டில் உள்ள தங்குமிடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உள் உறுப்புகள் சேதம் அடைந்துள்ளன. எலும்பு முறிவுகள், பக்கவாதம் மற்றும் நாட்பட்ட நோய்களின் தாக்கம் காணப்படுகிறது. சிலர் பிரமை பிடித்தவர்கள் போன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    போர் இன்னும் நீண்ட காலம் நீடித்தால், சித்ரவதை மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து மேலும் பல அறிக்கைகள் வெளிவரலாம்.

    பொதுமக்கள் மற்றும் போர்க்கைதிகள் எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்படுவதையும் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதையும் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

    மேலும், ஐ.நா. மனித உரிமை நிபுணர்களுடன் இணைந்து ரஷியாவிற்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், அதில் தங்கள் கவலைகளை தெரிவித்திருப்பதாகவும் அலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் கூறியுள்ளார்.

    • இந்தியாவில் குழந்தை தொழிலாளர் தடை சட்டம் ஏற்கனவே அமலில் இருக்கிறது.
    • உடல் ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.

    கொத்தடிமைகளாக இருந்து மீண்டு தங்கள் உழைப்பால், சாதனையால் கெத்து காட்டும் தேவி-துர்கா சகோதரிகள்

    சுகத்தையும், சந்தோசத்தையும் மட்டுமே சுமக்க வேண்டிய பருவம் குழந்தை பருவம். அப்படிப்பட்ட பருவத்தை கஷ்டத்தை சுமக்க வைக்கும் பருவமாக மாற்றுவது வேதனையானது.

    தோளில் புத்தக பையும், முகத்தில் புன்னகையுமாக துள்ளித்திரிய வேண்டிய பருவத்தில் அவர்களை தொழிலாளர்களாக்கி கல், மண் சுமப்பது முதல் கடினமான பல வேலைகளை செய்யும் தொழிலாளர்களாக மாற்றுவதை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் குழந்தை தொழிலாளர்கள் எண்ணக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

    இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருப்பதாக ஐ.நா. சபையின் யுனிசெப் நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவில் குழந்தை தொழிலாளர் தடை சட்டம் ஏற்கனவே அமலில் இருக்கிறது. ஆனாலும் குடும்ப வறுமை காரணமாக குழந்தை தொழிலாளர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

    2021-22 கால கட்டத்தில் தமிழ்நாட்டில் 2,586 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டார்கள். அதே நேரம் 28 சதவீதமாக இருந்த குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை கொரோனாவுக்கு பிறகு 79 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

    இவர்களுக்கு கடினமான பணிகளை கொடுப்பதால் வளர் இளம் பருவம் முற்றிலுமாக சிதைந்து போகிறது. உடல் ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.

    மண்ணுக்கு மரம் பாரமா.... பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா...? என்று பெருமையுடன் கூறிக் கொண்டாலும் குடும்பத்தின் மொத்த பாரத்தையும் சுமக்கும் கட்டாயத்துக்கு குழந்தைகளை ஆக்கி விடுகிறார்கள்.

    எதுவும் புரியாத அந்த வயதில் வருமானத்துக்காக, வரும் துயரத்தை உணராமல் தொழிலாளர்களாக்கி விடுகிறார்கள்.

    உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அந்த குழந்தைகள் அனுபவிக்க வேண்டிய ஆசைகள், கனவுகள் அனைத்தும் சிதைக்கப்படுகின்றன.

    குழந்தை தொழிலாளர்கள் நடத்தப்படும் விதமும், அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும் வலி நிறைந்தது. குறைந்த கூலி கொடுத்து நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என்ற உணர்வுடன்தான் தொழில் நடத்துபவர்கள் அவர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்.

    இந்த மாதிரி வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களும் சரி, வேலைக்கு அமர்த்துபவர்களும் சரி அந்த குழந்தைகளின் விருப்பு வெறுப்பை பற்றி யோசிப்பது கிடையாது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமான இன்று இருளர் சமூகத்தைசேர்ந்த இளம் பெண்களான தேவி (23), துர்கா (25) என்ற சகோதரிகள் இருவரும் மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இதற்கு காரணம் இவர்களும் கொத்தடிமைத் தொழிலாளர்களாக இருந்து மீண்டவர்கள். தாங்கள் அனுபவித்த வேதனைகளையும், கஷ்டங்களையும் மற்ற குழந்தைகளும் அனுபவிக்க கூடாது என்ற வைராக்கியத்துடன் பணியாற்றுகிறார்கள்.

    இருளர் சமூகத்தில் பிறந்து அடிமைத் தொழிலாளர்களாக இருள் சூழ்ந்த வாழ்க்கை வாழ்ந்ததையும் மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டார்கள்.

    எங்கள் இருளர் சமூகத்தில் கல்வி அறிவு அவ்வளவாக கிடையாது. நாங்கள் பெற்றோருக்கு மொத்தம் உள்ள 5 சகோதரர்களில் நாங்கள்தான் கடைசி பிள்ளைகள். எங்கள் சமூகத்தில் அவ்வளவாக யாரையும் பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள்.

    அதே போல்தான் சிறு வயதிலேயே எங்களையும் திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் ரைஸ்மில் வேலையில் ஈடுபட வைத்தார்கள். அந்த மில்லில் வேலைக்கு கொத்தடிமை தொழிலாளர்களாக அமர்த்தப்பட்டிருந்தோம்.

    எங்கள் தாத்தா 20 ஆயிரம் ரூபாயை அந்த மில் உரிமையாளரிடம் முன் பணமாக வாங்கியிருக்கிறார். தனது மகன் மாரியின் திருமணத்துக்காக வாங்கிய அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியாததால் வேலை செய்து கழித்து கொள்வதாக சொல்லி வேலையில் சேர்ந்தோம். திருமணம் முடிந்த மாரி மற்றும் அவரது மனைவி மல்லிகாவும் அதே மில்லில் வேலைக்கு சேர்ந்தார்கள்.

    அந்த மில்லில் இரவில் நெல் அவிப்பார்கள். பகலில் அதை உலர வைத்து அள்ளி மூட்டை கட்ட வேண்டும். அதிகாலை 3 மணிக்கெல்லாம் மில் உரிமையாளர் வந்து எங்களை எழுப்புவார். ஏற்கனவே இரவில் நீண்ட நேரம் வேலை பார்த்த களைப்பால் தூக்கம் தூக்கமாக வரும். தூங்கி வழிந்தாலும் அடிப்பார்கள். அந்த அடியை வாங்கிக் கொண்டு வலியோடு வேலை செய்ய ஓடுவோம்.

    பல ஆண்டுகள் அங்கேயே அடைத்து வைக்கப்பட்டு இருந்தோம். ஒரு தம்பதி அவர்களது சின்ன குழந்தை மற்றும் எங்களை நெல் ஊற வைத்த தொட்டியை கழுவ வைப்பார்கள். சரியாக கழுவவில்லை என்றாலும் முதலாளி அடிப்பார்.

    எத்தனையோ நாட்கள் வலி தாங்க முடியாமல் அழுதிருக்கிறேன். அந்த நெல் ஊற வைத்த தொட்டிக்குள் ஒருமுறை நான் தவறி விழுந்து காப்பாற்றப்பட்டதாகவும் என் அம்மா கூறியிருக்கிறார்.

    இரவு பகல் பாராமல் வேலை பார்ப்போம். சரியாக தூங்க முடியாது. தூங்குவதற்கு விரிப்பு கூட கிடையாது. தரையில்தான் படுத்து தூங்க வேண்டும். ஒருவேளை சாப்பாடு கூட வாய்க்கு ருசியாக கிடைக்காது. பெரும்பாலும் பழைய கஞ்சிதான் தருவார்கள்.

    திடீரென ஒருநாள் எனது தாத்தா இறந்து போனார். அவரது இறுதிச் சடங்குக்கு கூட எங்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

    அந்த மில் அருகிலேயே உடலை அடக்கம் செய்தார்கள். அப்போதும் எங்களை தப்பி சென்று விடாமல் பார்த்து கொள்வதற்காக மில்லின் கணக்காளர் எங்களோடு நின்று கொண்டார்.

    அந்த மில்லில் இருந்து எப்படியாவது விடுதலையாக வேண்டும் என்று நினைத்தாலும் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது ஒரு நாள் எனது சகோதரர் ரகுபதியும், மாமாவும் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்து கொண்ருந்தார்கள்.

    அப்போது தண்ணீரில் மூழ்கி மாமா இறந்து போனார். அவரது உடலை ஊருக்கு கொண்டு செல்ல உரிமையாளருடன் பெரும் போராட்டமே நடத்தினோம். ஊருக்கு சென்ற பிறகு திரும்பி வேலைக்கு செல்ல மறுத்தேன். இதனால் எங்களை மட்டும் ஊரில் விட்டு விட்டு அம்மாவும், அப்பாவும் மீண்டும் வேலைக்கு சென்று விட்டார்கள்.

    தொடர்ந்து அங்கு நடந்த சித்ரவதைகளை தங்க முடியாத எனது பெற்றோர் ஒரு பொது தொலைபேசியில் இருந்து போன் மூலம் உதவி கேட்டுள்ளார். அந்த தகவல் அடிப்படையில் அரசு அதிகாரிகள் அந்த மில்லுக்கு வந்து அடிமைப்பட்டு கிடந்த அனைவரையும் மீட்டனர் என்று தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்தார்கள்.

    வெளியே வந்ததும் எல்லோரும் படிக்க ஆசைப்பட்டுள்ளார்கள். ஆனால் தேவியின் அண்ணன்கள் சின்னராசு, ரகுபதி அக்காள் நாகம்மாள் ஆகியோர் வயது அதிகமாகி விட்டதால் பள்ளியில் சேர்ந்து படிக்க முடியாமல் ஆகி விட்டது.

    அந்த நேரத்தில் தந்தையும் குடும்பத்தை விட்டு பிரிந்து விட்டதால் குடும்பத்திற்காக போராட வேண்டியிருந்துள்ளது. அந்த சூழ்நிலையிலும் கஷ்டப்பட்டு துர்கா 12-வது வகுப்பு வரை படித்துள்ளார்.

    அதன் பிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து தனது தங்கை தேவியை நர்சிங் படிக்க வைத்துள்ளார். நர்சிங் படித்துள்ள தேவிக்கு அரசு ஆஸ்பத்திரியில் வேலைக்கு சேர்ந்து ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை. அந்த ஆசை நிறைவேறுமா? என்ற கனவோடு காத்திருக்கிறார்.

    ×