search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமம் ரத்து"

    • வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் அலுவலர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • எந்திரங்கள் மூலமாக கழிவுகள் அகற்றும் உபகர ணங்கள் இல்லாதது தெரிய வந்தது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதி யில் கமிஷனர் கிருஷ்ண ராஜன் தலைமையில் பொறியாளர் பாரதி, சுகா தார ஆய்வாளர் கோபால கிருஷ்ணன், நகரமைப்பு ஆய்வாளர் சேகர், வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் அலுவலர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கழிவுகள் அகற்றும் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது நகராட்சியில் உரிய அனுமதி பெறாமலும், எந்திரங்கள் மூலமாக கழிவுகள் அகற்றும் உபகர ணங்கள் இல்லாதது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வாகன உரிமை யாள ருக்கு அபராதம் விதித்தும், வருங்காலங்க ளில் இது போன்ற நட வடிக்கை யில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்து போலீஸ் நிலை யத்தில் ஒப்படைக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்த னர்.

    பின்னர் கமிஷனர் கிருஷ்ணராஜன் கூறுகை யில் , நெல்லிக்குப்பம் நகராட்சியில் வீடுகள், கடைகள் வணிக வளா கங்கள் மற்றும் தொழிற்சா லைகளில் கழிவு தொட்டி களை சுத்தம் செய்ய நகராட்சியிடம் அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மனிதக் கழிவு களை மனிதனே அகற்றி னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது போன்ற செயல்களை தடுக்க நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் 8 பேர் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும். இதனை தவிர்த்து யாரே னும் அனுமதி பெறாமல் இது போன்ற நடவடிக்கை யில் ஈடுபட்டால் உரிமம் ரத்து செய்வதோடு, தண்ட னையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அரியலூர் மாவட்டத்தில் ஆலோசனை கூட்டம்:விதிமுறைகளை மீறும் பட்டாசு ஆலை, விற்பனையாளர்கள் உரிமம் ரத்து செய்யப்படும்

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசு நிரந்தர விற்ப னையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது,

    பட்டாசு உற்பத்தியா ளர்கள் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவின்படி மட்டுமே வெடி மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் வழங்கபட வேண்டும். மேலும் பட்டாசு தொடர்பான பணிகளில் அனுபவமில்லாத உள்ளுர் ஆட்களை எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்த கூடாது. உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றிட வேண்டும். பட்டாசு தயாரிப்பு தொடர்பான பணிகளில் அனுமதிக்கப்பட்ட அளவு நபர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். உரிமத்தில் குறிப்பிட ப்பட்டுள்ள இடஅமைப்பில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும். தீ அணைப்பான்களை பயன்படுத்தக் கூடிய நிலையில் வைத்திருக்க வேண்டும் முறையாக அதனை தகுந்த காலத்திற்குள் புதுப்பித்தல் செய்திருக்க வேண்டும். உற்பத்தி நிலையத்திற்குள் எந்த ஒரு வாகனத்தினையும் நிறுத்தக் கூடாது உற்பத்தி நிலையத்திற்கு வெளியில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். இதனை தொடர்ந்து கண்கா ணித்திடும் பொருட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    உரிமதாரர்கள் உரிமத்தி ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் கடைபிடிக்க ப்படாமல் மற்றும் மேற்கூடிய நெறிமுறைகளை பின்பற்றாத நேர்வுகளில் உரிமம் ரத்து செய்யப்ப டுவதுடன் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க ப்படும் எனவும், உரிமம் இன்றி புதுப்பிக்கப்படாமல் உற்பத்தி அலகுகள் மற்றும் விற்பனைக்கடைகள் செயல்படுவது தெரிய வந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர்அம்பிகா, அரசு அலுவலர்கள் மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள், நிரந்தர விற்பனையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு விதிமுறைகளை பின்பற்றா மல் பட்டாசு கடை நடத்தி வந்ததாக 48 கடைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • பட்டாசுக் கடைகளின் உரிமம் இந்திய வெடிப் பொருள் சட்டம் 1884 விதி 138-ன் கீழ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழைய பேட்டை நேதாஜி சாலையில் கடந்த மாதம் 29ம் தேதி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர்.

    இச்சம்பவத்தை தொட ர்ந்து மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவின் பேரில், அனைத்து பட்டாசு சில்லரை விற்பனை கடை களில் வருவாய்த்துறையினர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதே போல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் உத்தரவின் பேரில் போலீ சாரும் ஆய்வு செய்து, மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், அரசு விதிமுறைகளை பின்பற்றா மல் பட்டாசு கடை நடத்தி வந்ததாக 48 கடைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து அலுவலர் களிடம் கேட்ட போது, மரக்கடை, வெல்டிங் கடை, குடியிருப்புகள், ஹார்டு வேர்ஸ் கடை, வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தனியார் மருத்துவனைகள், போக்குவரத்து நிறைந்த, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், போதிய பாதுகாப்பு மற்றும் அவசர விபத்து காலங்களில் வெளி யேற போதிய வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் பின்பற்றாமல் செயல்பட்டு வந்த பட்டாசு சில்லரை விற்பனை கடைகளுக்கு போலீசார் சார்பில் வழங்கப்பட்ட தடையின்மை சான்று ரத்து செய்யப்பட்டு, அறிக்கை அளித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில், பட்டாசுக் கடைகளின் உரிமம் இந்திய வெடிப் பொருள் சட்டம் 1884 விதி 138-ன் கீழ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றனர்.

    மேலும், வருவாய்துறை சார்பிலும் பட்டாசு கடை களில் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • 26 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • ஆய்வு செய்வதற்காக மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் 203 நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    தரமற்ற, போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில், கடந்த 15 நாட்களாக நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மத்திய, மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் முதற்கட்டமாக 76 மருந்து உற்பத்தி நிறுவனங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

    ஆய்வின் முடிவில் போலி மற்றும் கலப்பட மருந்துகள் தயாரித்தது தெரியவந்ததையடுத்து 18 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 26 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் 203 நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளனர். இதில் பெரும்பாலான நிறுவனங்கள் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவை. அங்கு மட்டும் 70 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து உத்தரகாண்ட் (45) மற்றும் மத்தியப் பிரதேசம் (23) அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாகவும், வரும் நாட்களில் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரம் விற்பனை உரிமம் ரத்து என்று கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி தகவல் தெரிவித்துள்ளார்.
    • அதிகபட்ச சில்லரை விலை ப்பட்டியலின் விவரங்களை தகவல் பலகையில் விவசாயி களின்பார்வைக்கு தெரியும் வண்ணம் வைக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்து ள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் பருத்தி, மக்காச்சோளம், நெல், கம்பு போன்ற பயிர்களு பயிர் செய்து வருகிறது. மேலும் ஏற்க னவே உள்ள பயிர்க ளுக்கு விவசாயிகள் உர ங்கள்இட்டும் பராமரித்து வருகின்றனர். தற்சமயம் இம்மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் யூரியா 1189 மெ.டன், டி.ஏ.பி 939 மெ.டன். பொட்டாஷ் 1421 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 889 மெ,டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 5362 மெ.டன் அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் உர விற்பனையாளர்கள் அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்களை விவசா யிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். இரசாயன உரங்களின் இருப்பு மற்றும் அதிகபட்ச சில்லரை விலை ப்பட்டியலின் விவரங்களை தகவல் பலகையில் விவசாயி களின்பார்வைக்கு தெரியும் வண்ணம் வைக்க வேண்டும். உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் விருப்ப த்திற்கு மாறாக உரங்களுடன் இணை இடுபொருட்களை வாங்கிட கட்டாயப்படுத்த கூடாது. மேலும் உர விற்பனை யாளர்கள் உரங்களை விற்பனை செய்யும் போது விற்பனை ரசீது வழங்கிட வேண்டும். மேற்கண்ட அரசு விதிகளை மீறும் உர விற்பனையாளர்கள் மீது 1985- உரச்சட்டத்தின் அடிப்படையில் கடுமை யான நடவடிக்கை மேற்கொ ள்வதுடன் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை மருத்துவ குழு சிறுமியிடம் இன்று விசாரணை நடத்தியது.
    • விசாரணையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது தவறு இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது மகளுடன் வசித்து வந்த தாய் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். அப்போது அந்த பெண்ணிற்கும் பெயிண்டர் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு அவருடன் வசித்து வந்தார். பெயிண்டரும், அந்தப் பெண்ணும் ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களில் கருமுட்டை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர்.

    அப்போது கருமுட்டையை கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்யும் புரோக்கர் மாலதி என்பவரிடம் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது புரோக்கர் மாலதி உங்கள் மகளின் கருமுட்டையையும் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

    இந்நிலையில் அந்த பெயிண்டர் சிறுமியை பலாத்காரம் செய்து தொந்தரவு கொடுத்துள்ளனர். பின்னர் பெயிண்டரும், சிறுமியின் தாயும் இணைந்து சிறுமியின் கருமுட்டையை 8 முறை விற்பனை செய்துள்ளனர்.

    இதன் மூலம் கிடைத்த பணத்தில் இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இதற்காக சிறுமியின் பெயர், பிறந்த தேதி, ஆதார் அட்டையை போலியாக தயாரித்து ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கருமுட்டையை விற்பனை செய்துள்ளனர். இதற்கு ஈரோடு பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ஜான் என்பவர் உதவி செய்துள்ளார்.

    இதனையடுத்து சிறுமி அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து சேலத்தில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார். பின்னர் உறவினர்கள் சிறுமியை அழைத்துக் கொண்டு ஈரோடு சூரம்பட்டி போலீசில் நடந்த விஷயம் குறித்து புகார் அளித்தனர்.

    இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமியின் தாய், பெயிண்டர், புரோக்கர் மாலதி, ஜான் ஆகியோரை போக்சோ உள்பட 10 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இது தொடர்பாக ஈரோடு கூடுதல் டி.எஸ்.பி. கனகேஸ்வரி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கருமுட்டை விவகாரம், போலி ஆதார் அட்டை தயாரித்தது தொடர்பாக ஈரோடு, பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    இதன் அடிப்படையில் நேற்று மாலை 2 மருத்துவமனையின் நிர்வாகிகள் 3.30 மணி அளவில் ஏ.டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்தனர். மருத்துவ நிர்வாகிகளிடம் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி விசாரணை நடத்தினார்.

    சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. விசாரணையில் என்னென்ன கேள்வி கேட்கப்பட்டது என்பது குறித்த தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

    நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த விவகாரத்தில் விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில் சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனரகத்தில் இருந்து மருத்துவ அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு அவர்கள் விசாரணைக்காக ஈரோடுக்கு வந்துள்ளனர்.

    இந்த மருத்துவ குழு இன்று காலை அரசு காப்பகத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமி இடம் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    அந்த குழு சிறுமியிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் விரிவாக கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு மருத்துவ குழு விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

    இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த குழு தங்கியிருந்து அனைத்து மருத்துவமனைகளிலும் விசாரணையை மேற்கொண்டு அதன் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும்.

    இதனடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விசாரணையின் அடி ப்படையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தவறு செய்தது கண்டு பிடிக்கப்பட்டால் அதன் உரிமம் ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் இந்த விவகாரம் தற்போது மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    ×