search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதிமுறைகளை மீறும் பட்டாசு ஆலை, விற்பனையாளர்கள் உரிமம் ரத்து செய்யப்படும்
    X

    விதிமுறைகளை மீறும் பட்டாசு ஆலை, விற்பனையாளர்கள் உரிமம் ரத்து செய்யப்படும்

    அரியலூர் மாவட்டத்தில் ஆலோசனை கூட்டம்:விதிமுறைகளை மீறும் பட்டாசு ஆலை, விற்பனையாளர்கள் உரிமம் ரத்து செய்யப்படும்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசு நிரந்தர விற்ப னையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது,

    பட்டாசு உற்பத்தியா ளர்கள் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவின்படி மட்டுமே வெடி மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் வழங்கபட வேண்டும். மேலும் பட்டாசு தொடர்பான பணிகளில் அனுபவமில்லாத உள்ளுர் ஆட்களை எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்த கூடாது. உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றிட வேண்டும். பட்டாசு தயாரிப்பு தொடர்பான பணிகளில் அனுமதிக்கப்பட்ட அளவு நபர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். உரிமத்தில் குறிப்பிட ப்பட்டுள்ள இடஅமைப்பில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும். தீ அணைப்பான்களை பயன்படுத்தக் கூடிய நிலையில் வைத்திருக்க வேண்டும் முறையாக அதனை தகுந்த காலத்திற்குள் புதுப்பித்தல் செய்திருக்க வேண்டும். உற்பத்தி நிலையத்திற்குள் எந்த ஒரு வாகனத்தினையும் நிறுத்தக் கூடாது உற்பத்தி நிலையத்திற்கு வெளியில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். இதனை தொடர்ந்து கண்கா ணித்திடும் பொருட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    உரிமதாரர்கள் உரிமத்தி ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் கடைபிடிக்க ப்படாமல் மற்றும் மேற்கூடிய நெறிமுறைகளை பின்பற்றாத நேர்வுகளில் உரிமம் ரத்து செய்யப்ப டுவதுடன் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க ப்படும் எனவும், உரிமம் இன்றி புதுப்பிக்கப்படாமல் உற்பத்தி அலகுகள் மற்றும் விற்பனைக்கடைகள் செயல்படுவது தெரிய வந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர்அம்பிகா, அரசு அலுவலர்கள் மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள், நிரந்தர விற்பனையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×