search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதிமுறைகளை பின்பற்றாத 48 பட்டாசு கடைகளின் உரிமம் ரத்து
    X

    விதிமுறைகளை பின்பற்றாத 48 பட்டாசு கடைகளின் உரிமம் ரத்து

    • அரசு விதிமுறைகளை பின்பற்றா மல் பட்டாசு கடை நடத்தி வந்ததாக 48 கடைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • பட்டாசுக் கடைகளின் உரிமம் இந்திய வெடிப் பொருள் சட்டம் 1884 விதி 138-ன் கீழ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழைய பேட்டை நேதாஜி சாலையில் கடந்த மாதம் 29ம் தேதி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர்.

    இச்சம்பவத்தை தொட ர்ந்து மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவின் பேரில், அனைத்து பட்டாசு சில்லரை விற்பனை கடை களில் வருவாய்த்துறையினர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதே போல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் உத்தரவின் பேரில் போலீ சாரும் ஆய்வு செய்து, மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், அரசு விதிமுறைகளை பின்பற்றா மல் பட்டாசு கடை நடத்தி வந்ததாக 48 கடைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து அலுவலர் களிடம் கேட்ட போது, மரக்கடை, வெல்டிங் கடை, குடியிருப்புகள், ஹார்டு வேர்ஸ் கடை, வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தனியார் மருத்துவனைகள், போக்குவரத்து நிறைந்த, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், போதிய பாதுகாப்பு மற்றும் அவசர விபத்து காலங்களில் வெளி யேற போதிய வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் பின்பற்றாமல் செயல்பட்டு வந்த பட்டாசு சில்லரை விற்பனை கடைகளுக்கு போலீசார் சார்பில் வழங்கப்பட்ட தடையின்மை சான்று ரத்து செய்யப்பட்டு, அறிக்கை அளித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில், பட்டாசுக் கடைகளின் உரிமம் இந்திய வெடிப் பொருள் சட்டம் 1884 விதி 138-ன் கீழ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றனர்.

    மேலும், வருவாய்துறை சார்பிலும் பட்டாசு கடை களில் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×