search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admk demonstration"

    • உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது என்பது உள்ளிட்டவற்றுக்கு மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    மாநில அந்தஸ்து வழங்காதது, மத்திய நிதிக்குழுவில் புதுவையை இணைக்காதது, மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுவை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காதது, ஜிப்மர் கல்லூரி வேலை வாய்ப்பில் புதுவைக்கு இடஒதுக்கீடு வழங்காதது ஆகியவற்றுக்காக மத்திய அரசை கண்டித்தும், ரேஷன்கடைகளை திறந்து பொது விநியோக திட்டத்தை அமல்படுத்தாதது, சிறப்புக்கூறு நிதியை முழுமையாக செலவு செய்யாதது, புதிய தொழிற்சாலைகளை அமைக்காதது, உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது என்பது உள்ளிட்டவற்றுக்கு மாநில அரசை கண்டித்தும் இந்த ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஊர்வலத்துக்காக கடலூர் சாலை ரோடியர் மில் திடலில் காலை 9 மணி முதல் அ.தி.மு.க.வினர் திரள தொடங்கினர். புதுவையின் பல்வேறு தொகுதிகளிலிருந்தும், காரைக்காலிலிருந்தும் வேன், பஸ் உள்ளிட்டவற்றில் அ.தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர்.

    தொடர்ந்து காலை 11.15 மணிக்கு ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. தலைமை தாங்கினார். புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் ரோடியர் மில் திடலில் தொடங்கி, வெங்கடசுப்பாரெட்டியார் சிலை, அண்ணாசாலை, நேருவீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபை பின்புறத்தை அடைந்தது. அங்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

    • விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார் பேட்டையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் கலந்து கொண்ட சில அ.தி.மு.க. நிர்வாகிகள் கழுத்தில் தக்காளி, சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட சில காய்கறிகளை அணிந்து பங்கேற்றனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி, மசாலா பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், தி.மு.க. அரசை கண்டித்தும் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார் பேட்டை செல்லப் பாண்டியன் மேம்பாலம் கீழ் பகுதியில் இன்று கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

    காய்கறி மாலை

    இதில் கலந்து கொண்ட சில அ.தி.மு.க. நிர்வாகிகள் கழுத்தில் தக்காளி, சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட சில காய்கறிகளை அணிந்து பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன், ஏ.கே. சீனி வாசன், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, செவல் முத்துசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செய லாளர் ஜெரால்டு, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, இணை செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு, மாவட்ட துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜான்சிராணி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆவரை குளம் பால்துரை, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்துப் பாண்டி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் சிவந்தி மகா ராஜேந்திரன், ஒன்றிய செய லாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராம சுப்பிர மணியன், கே.பி.கே. செல்வ ராஜ், அந்தோணி அமலராஜா, பகுதி செய லாளர்கள் சிந்து முருகன், திருத்து சின்னத்துரை, சண்முககுமார், காந்தி வெங்கடாசலம், ஜெனி, வக்கீல் ஜெயபாலன், நெல்லை மாவட்ட ஆவின் பாலக தலைவர் கட்டளை அன்பு, முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், கவுன்சிலர் சந்திரசேகர், பகுதி இளைஞர் பாசறை சம்சு சுல்தான், பகுதி துணைச்செயலாளர் மாரிசன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட பொருளாளர் காளிதாஸ் பாண்டியன், பகுதி அவைத்தலைவர் ஆறுமுகம், ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் சீனிமுகமது சேட், விவசாய அணி கனித்துரை மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீவை சின்ன துரை, டால் சரவணன், தச்சை மாதவன், நத்தம் வெள்ளபாண்டி, பக்கீர் மைதீன், ஆபீஸ் மணி, பூக்கடை சப்பானி முத்து, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சட்டம் ஒழுங்கு சீர்கேடு கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்

    வேலூர்:

    வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே வேலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், மாவட்ட பொருளாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், பகுதி செயலாளர்கள் குப்புசாமி, ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

    • விலைவாசி உயர்வை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு தி.மு.க. அரசை கண்டித்து அக்ரி.கிருஷ்ண மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    லஞ்ச வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் கண்டன கோஷம் எழுப்பினர். வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் முன்னிலை வகித்து பேசினார்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டியில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பங்கேற்று பேசினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் தமிழக அரசை கண்டித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பேரூர் செயலா ளர் டாக்டர் கே.எஸ். அசோக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எம்.வீ. கருப்பையா, எஸ்.எஸ். சரவணன், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கணேச ன், அரியூர் ராதா கிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை, மாவட்டத் துணைச் செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் சேர்மன் மகா லட்சுமி ராஜேஷ் கண்ணா வரவேற்றார். கவுன்சிலர் கே.எஸ்.இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவை நடந்து வருகிறது. இந்த விடியா அரசு அ.தி.மு.க. கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் முடக்கி விட்டது.

    கள்ளச்சாராய சாவுக்கு காரணமான அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலக வேண்டும். அவரை நீக்கும் வரை அ.தி.மு.க.வில் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அவைத் தலைவர் ராமசாமி, பேரூர் பேரவை செயலாளர் தனசேகரன், மருதையா, ரவி செல்வராஜ், பொன்ராம், ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேரூர் துணை செயலாளர் சந்தன துரை நன்றி கூறினார்.

    • அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு

    ஆற்காடு நகர அ.தி.மு.க. சார்பில் ஆற்காடு நகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நகர செயலாளர் ஜிம்.சங்கர் தலைமையில் தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, போதை பொருட்கள் விற்பனை ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாக தி.மு.க. அரசை கண்டித்து பேசினார்.இதில்

    கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • விலைவாசி உயர்வை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நகரம் மற்றும் ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் சார்பில் திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வாணியம்பாடி நகரம் மற்றும் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோ.செந்தில்குமார் மற்றும் நகர செயலாளர் சதாசிவம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் கே.சி. வீரமணி, வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் எம்எல்ஏ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி.சம்பத் குமார் ஆகியோர் தொடக்கி வைத்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வடிவேல், மாவட்ட கழக துணை செயலாளர் ஏ.ஆர். ராஜேந்திரன், மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா கந்தன், மேற்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் எஸ். பாரதிதாசன், பேரூர் கழக செயலாளர் சரவணன், சிவக்குமார், நாட்டறம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் சாம்ராஜ் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள் 1000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • விலைவாசி உயர்வை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகர அதிமுக சார்பில் நகராட்சி அலுவலகம் அருகே அரசு உயர்த்தி உள்ள சொத்து வரி உயர்வு மின் கட்டணம், பால் விலை, விலைவாசி உயர்வு, உள்ளிட்டவைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குடியாத்தம் நகர செயலாளர் ஜே.கே.என். பழனி தலைமை தாங்கினார்.

    மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, எஸ். அமுதா, முன்னாள் நகர மன்ற தலைவர் எம்.பாஸ்கர், நகர அவை தலைவர் ஆர்.கே.அன்பு, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர துணை செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், நகர பொருளாளர் வி.என். தனஞ்செயன், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ், மாவட்ட பிரதிநிதி எஸ்.என்.சுந்தரேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எஸ்.ஐ.அன்வர்பாஷா, நகர துணை செயலாளர் கே.அமுதா, மாவட்ட பிரதிநிதிகள் எம்.கே.சலீம், அட்சயாவினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி. லோகநாதன், ஒன்றிய செயலாளர் வி.ராமு, டி. சிவா, பொகளூர்பிரபாகரன், சீனிவாசன், ஆனந்தன், மாவட்ட பொருளாளர் காடை மூர்த்தி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரமேஷ் குமார், வழக்கறிஞர் கே.எம்.பூபதி உள்பட இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், பிற அணி பொறுப்பாளர்கள், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • விலைவாசி உயர்வை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொணடனர்

    ஆலங்காயம்:

    ஆலங்காயத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம் மற்றும் ஆலங்காயம் பேரூராட்சி அதிமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னால் சட்டமன்ற உறுப்பினரும், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான கோவி. சம்பத்குமார், பேரூராட்சி செயலாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கே.சி. வீரமணி, வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடக்கி வைத்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் ஏ.ஆர். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஆர். மகேந்திரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா கந்தன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாண்டியன், வாணியம்பாடி நகர செயலாளர் சதாசிவம், உட்பட பலர் கலந்து கொணடனர்.

    • சொத்துவரி, மின்கட்டணம் உயர்வை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவைகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். நகரச் செயலாளர் பாட்ஷா தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

    முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணி கலந்துக் கொண்டு பேசினார்.

    மாவட்ட அவைத் தலைவர் டிகேபி. மணி, ஜெ.பாலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பவானி அன்பழகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் லோகேஷ்வரன், தெள்ளார் ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் அர்ஜுனன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் செய்யாறில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.

    நகர செயலாளர் கு.வெங்கடேசன் தலைமை வகித்தார். ரவிச்சந்திரன், அருணகிரி, ஆர்.கே.மெய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் வி.முனுசாமி, ஜி புவனேந்திரன், பூக்கடை கோபால், கோவிந்தராஜ், டி.பி. துரை, தணிகாசலம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் சொத்துவரி, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • களக்காடு நகராட்சி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    நெல்லை:

    தமிழகத்தில் சொத்துவரி, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி, நகராட்சிகளில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    களக்காடு

    களக்காடு நகராட்சி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    இதில் அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நாராயணபெருமாள், எம்.ஜி.ஆர்.மன்ற இளைஞரணி செயலாளர் பால்துரை, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் செல்வகுமார், மீனவரணி செயலாளர் அகிலன், விவசாய அணி தலைவர் லாசர், நகர செயலாளர் செல்வராஜ் சுவாமிதாஸ், ஒன்றிய செயலாளர்கள் வேலுச்சாமி, ஜெயராமன், சங்கரலிங்கம், விஜயகுமார், பேரூர் செயலாளர்கள் முருகன், பாபு, விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வண்ணார்பேட்டை

    நெல்லை வண்ணார் பேட்டையில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைசெயலாளர் கல்லூர் வேலாயுதம், பேரவை செயலாளர் ஜெரால்டு, பகுதி செயலாளர்கள் ஜெனி, திருத்து சின்னத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாநகர பகுதியில் தச்சநல்லூரில் டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் முன்னாள் துணைமேயர் ஜெகநாதன் என்ற கணேசன், அைவத்தலைவர் பரணிசங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    டவுனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன் சிறப்புரை யாற்றினார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில் ஆறுமுகம், பகுதி செய லாளர்கள் காந்தி வெங்கடாசலம், மோகன், ஒன்றிய செயலாளர் லெட்சுமண பெருமாள், கவுன்சிலர் சந்திரசேகர், வக்கீல் அன்பு அங்கப்பன், நிர்வாகிகள் சீனிமுகம்மது சேட், பாறையடி மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டி யன், மருதூர் ராம சுப்பிர மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அம்பை

    அம்பை நகராட்சியில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பு செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில் நகர செயலாளர்கள் அறிவழகன், கண்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவன்பாபு, தலைமை கழக பேச்சாளர் மின்னல் மீனாட்சி, கவுன்சிலர்கள் மாரிமுத்து, சிவக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் பார்வதி பாக்கியம், எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் முத்தையா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்தது
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.

    வேலூர்:

    அ.தி.மு.க., சார்பில், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலை வாசி உயர்வு உள்ளிட்ட தி.மு.க., அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனீ சதீஷ்குமார், சி‌கே.சிவாஜி, தாஸ், பி.எஸ் பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அணைக்கட்டில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வேலழகன் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி தலைவர் புகழேந்தி, ஒன்றிய செயலாளர்கள் பாபுஜி, ஆனந்தன், நகர செயலாளர்கள் கோவிந்தன், ஜோதி குமார், உமாபதி உட்பட ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.

    ×