search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national flag"

    • பிரான்ஸ் தேசிய கொடியை மஹ்ஜோபி அவமதித்து வீடியோ பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது
    • நாட்டை அவமதிப்பவர்களை எளிதாக தப்பி செல்ல விட மாட்டோம் என்றார் டர்மனின்

    பிரான்சில் பக்னோல்ஸ்-சர்-செஸ் (Bagnols-sur-Ceze) பகுதியில் மத பணிகளில் ஈடுபட்டு வந்தவர் இமாம் மஹ்ஜோப் மஹ்ஜோபி (Mahjoub Mahjoubi). துனிசியா (Tunisia) நாட்டை சேர்ந்த மஹ்ஜோபி 38 வருடங்களுக்கு முன்பே பிரான்சில் குடியேறியவர்.

    மஹ்ஜோபி ஒரு சமூக வலைப்பதிவில் பிரான்ஸ் நாட்டு தேசிய கொடியை "சாத்தான்" என பொருள்பட பேசி ஒரு வீடியோவை பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    பிரான்ஸ் அரசின் கவனத்திற்கு இந்த பதிவு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து மஹ்ஜோபியை நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு உள்துறை உத்தரவிட்டது.

    மஹ்ஜோபி வெளியிட்டுள்ள கருத்துகள் பிரெஞ்சு குடியரசின் அடிப்படை சித்தாந்தங்களுக்கு எதிராக உள்ளதாகவும், பெண்களுக்கு எதிராகவும், தவறான சிந்தனைகளை ஊக்குவித்து யூத மக்களுக்கு பதட்டத்தை உண்டாக்கும் வகையில் உள்ளதாகவும் பிரான்ஸ் அரசு தெரிவித்தது.


    ஆனால், மஹ்ஜோபி தனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் தனக்கு தேசிய கொடியை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.

    "கைது செய்யப்பட்ட 12 மணி நேரத்தில் மஜ்ஜோபி பிரெஞ்சு எல்லையை விட்டே வெளியேற்றப்பட்டார். தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். நாட்டிற்கு எதிரானவர்கள் எளிதாக தப்பி செல்ல விட மாட்டோம்" என பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் (Gerald Darmanin) கூறினார்.

    இந்நிலையில், துனிசியா தலைநகர் துனிஸ் (Tunis) செல்லும் விமானத்தில் அவர் ஏற்றப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக வழக்கு தொடுக்க போவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

    வெளிநாடுகளிலிருந்து பிரான்சிற்கு வந்து வாழ்பவர்களை அந்நாடு வெளியேற்ற விரும்பினால், உடனடியாக செயல்படுத்தும் வகையில் அந்நாட்டு குடியுரிமை சட்டங்களில் சமீபத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • உழைப்பாளர் சிலை அருகில் நாளை குடியரசு தின விழா நடைபெறுகிறது.
    • ராணுவப்படைப் பிரிவு, கடற்படைப்பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படைப் பிரிவினர் அணி வகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்துவார்கள்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆனால் அந்தப் பகுதியில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கின்றன. எனவே கடந்த ஆண்டு குடியரசு தினவிழா, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆண்டும் உழைப்பாளர் சிலை அருகில் நாளை (வெள்ளிக்கிழமை) குடியரசு தின விழா நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து உழைப்பாளர் சிலை பகுதியில் பிரமாண்டமான அளவில் பந்தல்கள் போடப்படுகின்றன. அங்கு சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, நீதிபதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் அமர்வார்கள். காலை 7.52 மணிக்கு விழாப்பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவார்.

    காரின் முன்னும் பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அவர் அழைத்து வரப்படுவார். பொதுமக்களுக்கும், விழா பந்தலில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களுக்கும் அவர் கையசைத்து வாழ்த்து தெரிவிப்பார். அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே முதலமைச்சரை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்பார்.

    காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் வருகை தருவார். அவர், விமானப்படையினர் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்படுவார். அவரும் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவிப்பார். அதைத்தொடர்ந்து, 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்பார்.

    பின்னர், தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல், கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை கவர்னருக்கு சம்பிரதாயப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைப்பார்.

    அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசியக்கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைப்பார். அப்போது அந்தப் பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவும். அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும்.

    பின்னர் ராணுவப்படைப் பிரிவு, கடற்படைப்பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படைப் பிரிவினர் அணி வகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்துவார்கள். அதை அவர் ஏற்றுக் கொள்வார். அப்போது, கடற்படை ஊர்தியில் போர்க்கப்பலின் சிறிய வடிவம், வான்படை ஊர்தியில் சிறிய வடிவிலான விமானம், கடலோர காவல்படை ஊர்தியில் சிறிய வடிவிலான படகுகள் ஆகியவை அணிவகுத்து கொண்டு வரப்படும்.

    அதைத்தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படை, கடலோர பாதுகாப்புக்குழு, ஊர்க்காவல் படை (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்பட 30 படைப்பிரிவினர் அணிவகுத்துச் செல்வார்கள்.

    அதன்பின்னர் அணிவகுப்பு மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்குவார். வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு முதலமைச்சர் வழங்குவார். பின்னர், பதக்கம் பெற்றோர் குழுவாக முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள்.

    அதைத்தொடர்ந்து விழா மேடையில் கவர்னர், முதலமைச்சர் அமர்ந்திருக்க, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மங்கள இசை ஊர்தி உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் ஊர்திகள், அரசில் நலத்திட்டங்களை விவரிக்கும் வகையிலான வடிவமைப்புகளுடன் வலம் வரும். அதற்கு முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 

    • குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    தமிழக அரசின் சார்பில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினம் நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். 

    இந்நிலையில் காமராஜர் சாலையில் குடியரசு தின விழாவுக்கான இறுதிகட்ட ஒத்திகை இன்று நடைபெற்றது. குறிப்பாக முப்படை, தேசிய மாணவர் படை, காவல் துறை, தீயணைப்பு துறையும் அணிவகுப்பில் பங்கேற்றனர். 

    கவர்னர், முதலமைச்சர் வருவதுபோலவும், அவர்களுக்கு மரியாதை செய்வது போலவும் ஒத்திகை நடைபெற்றது. பள்ளி மாணவ-மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளின் ஒத்திகையும் நடைபெற்றது.

    குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள்.
    • மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் 2 வாரங்களுக்கு முன்பு இருந்தே போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    நாடு முழுவதும குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினம் நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

    குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் கூடும் இடங்கள் அனைத்திலும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள். சென்னை மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் 2 வாரங்களுக்கு முன்பு இருந்தே போலீசார் கண்காணித்து வருகிறார்கள். கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பஸ் நிலையம் பகுதிகளிலும் போலீசார் சோதனை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    தங்கும் விடுதிகள், லாட்ஜுகளில் இரவு நேரங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேக நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    • குவைத் மன்னரின் மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • பிரதமர் மோடி உள்பட உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா, உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் காலமானார்.

    இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், குவைத் மன்னரின் மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, குவைத் மன்னர் ஷேக் நவாப் அஹமத் ஜாபர் சபாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மத்திய அரசின் உத்தரவின் பேரில் சென்னை தலைமைச் செயலகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது.

    • எவரெஸ்ட், தெனாலி (வட அமெரிக்கா), கிளிமாஞ்சாரோ (ஆப்பிரிக்கா), எல்ப்ரஸ் (ஐரோப்பா) ஆகிய சிகரங்களில் ஏறி கொடி நாட்டி உள்ளார்.
    • முற்றிலும் பனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான சிகரமான வின்சனில் ஏற முடிவு செய்தார்.

    கேரளாவை சேர்ந்த ஷேக் ஹசன்கான் மாநில அரசில் பணியாற்றி வருகிறார். இவர் தனது ஓய்வு நாட்களில் உலகின் மிக உயர்ந்த மலை சிகரங்களில் ஏறி சாதனை படைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    அந்தவகையில் எவரெஸ்ட், தெனாலி (வட அமெரிக்கா), கிளிமாஞ்சாரோ (ஆப்பிரிக்கா), எல்ப்ரஸ் (ஐரோப்பா) ஆகிய சிகரங்களில் ஏறி கொடி நாட்டி உள்ளார்.

    இதன் தொடர்ச்சியாக முற்றிலும் பனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான சிகரமான வின்சனில் ஏற முடிவு செய்தார். இதற்காக அங்கு சென்ற ஷேக் ஹசன்கான், கடும் சவால்களை கடந்து வின்சன் சிகரத்தில் ஏறி இந்திய கொடியை பறக்க விட்டுள்ளார்.

    உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் வின்சன் சிகரத்தில் இந்திய கொடியை பறக்கவிட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள ஷேக் ஹசன்கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    • காவல் துறையினர் ரசிகர்கள் கையில் இருந்த இந்திய தேசிய கொடிகளை பறிமுதல் செய்தனர்.
    • இந்திய தேசிய கொடியை குப்பை தொட்டியில் போட முயன்றார்.

    உலகக் கோப்பை 2023 தொடரின் லீக் போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை கண்டுகளிக்க ரசிகர்கள் அதிகளவில் மைதானத்திற்கு வந்தனர்.

    அவ்வாறு மைதானத்திற்கு வந்த ரசிகர்களில் பலர் இந்திய தேசிய கொடியுடன் மைதானத்திற்குள் செல்ல முயற்சித்தனர். அப்போது மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் ரசிகர்கள் கையில் இருந்த இந்திய தேசிய கொடிகளை பறிமுதல் செய்தனர்.

    அந்த வகையில், காவல் துறை உதவி ஆய்வாளர் நாகராஜன் ரசிகர் ஒருவரிடம் இருந்து வாங்கிய இந்திய தேசிய கொடியை அருகில் இருந்த குப்பை தொட்டியில் போட முயன்றார். இந்த சம்பம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட காவல் துறை உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை விளக்கம் அளித்து இருந்தது.

    அதன்படி இந்திய தேசிய கொடியை குப்பை தொட்டியில் போட முயன்ற காவல் துறை உதவி ஆய்வாளர் நாகராஜன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். இதற்கான உத்தரவை சென்னை மாநகர காவல் துறை ஆய்வாளர் வெளியிட்டுள்ளார்.

    • 13-ஆம் நூற்றாண்டில் ஒன்றாம் நரசிம்மதேவ அரசரால் இந்த சக்கரம் உருவாக்கப்பட்டது
    • இந்தியாவின் மூவர்ணக்கொடியின் மத்தியிலும் இச்சக்கரம் இடம்பெற்றுள்ளது

    உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுடன் இந்தியா உட்பட 19 உலக நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உருவாக்கிய ஒரு பன்னாட்டு நாடுகளின் கூட்டமைப்பு ஜி20.

    இக்கூட்டமைப்பின் தலைமை இம்முறை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதால், இதன் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இம்மாநாடு நாளை வரை நடைபெற இருக்கிறது.

    இதில் பங்கேற்க இக்கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகளை சேர்ந்த பெரும்பாலான உலக தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தந்துள்ளனர். அவர்களை வரவேற்கும் விதமாக அம்மையத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய முறைப்படி கைகளை கூப்பி வரவேற்றார்.

    பிரதமர் மோடி நின்று வரவேற்ற இடத்திற்கு பின்னால் ஒடிசா மாநில பூரி நகரில் உள்ள புகழ்பெற்ற சூரிய பகவான் கோவிலிலிருக்கும் கொனார்க் சக்கரத்தின் பிரதி அமைக்கப்பட்டிருந்தது.

    இந்தியாவில் 13-ஆம் நூற்றாண்டில் ஒன்றாம் நரசிம்மதேவன் மன்னரால் இந்த சக்கரம் உருவாக்கப்பட்டது.

    ஒடிசாவின் சூரியபகவான் கோவிலில் உள்ள இச்சக்கரம், பண்டைய இந்தியர்களின் அறிவாற்றலையும், முன்னேறிய நாகரிக வளர்ச்சியையும், கட்டிட மற்றும் சிற்பக் கலைகளில் அவர்களுக்கிருந்த நுண்ணறிவையும் பறைசாற்றும் விதமாக இருப்பதாக உலகம் முழுவதும் புகழ் பெற்றது.

    வளர்ச்சியயும் முன்னேற்றத்தையும் குறிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட இச்சக்கரத்தில் உள்ள 24 ஆரக்கால்கள் (spokes) ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தை குறிக்கும்.

    ஜனநாயகத்தின் அடிப்படை சித்தாந்தங்களையும், சமூக முன்னேறத்திற்கான உறுதியான நோக்கத்தையும் இந்த சக்கரம் பிரதிபலிக்கிறது என்பதும் இந்திய தேசிய கொடியாகிய மூவர்ணக்கொடியின் மத்தியிலும் இச்சக்கரத்தின் பிரதி இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விழாவில் ஊராட்சி தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தேசிய கொடி ஏற்றினார்.
    • கிராம சபை கூட்டத்தை தொடர்ந்து 77 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    கடையம்:

    கடையம் பெரும்பத்து ஊராட்சியில் சுதந்திர தினவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செய்தார். இதைத்தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பின்னர் 77 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் ஊராட்சி உறுப்பினர்கள், அதிகாரிகள், தொழிலதிபரும் தி.மு.க. நிர்வாகியுமான பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
    • தேசியக்கொடிக்கு செங்கமலம் யானை மரியாதை செலுத்தியது.

    திருவாரூர்:

    மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

    அப்போது அங்கு பாகனுடன் ராஜகோபாலசாமி கோவில் யானை செங்கமலம் வந்தது.

    தொடர்ந்து யானை செங்கமலம் தனது துதிக்கையை தூக்கி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது.

    பாப் கட்டிங் செங்கமலம் என பக்தர்களால் அழைக்கப்பட்டு புகழ்பெற்ற செங்கமலம் யானை தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது கண்கொள்ளாக்காட்சியாக இருந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் ஊராட்சியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது
    • ஒன்றிய பெருந்தலைவர் கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காடுவெட்டி ரவி சங்கர் தேசிய கொடி ஏற்றி மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் அலுவலக பணியாளர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • முதுகுளத்தூர் அருகே சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
    • சேர்மன் சண்முகபிரியா ராஜேஷ் தேசிய கொடி எற்றி வைத்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வட்டாட்சியர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தலைமை துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், அலுவலகப் பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர், மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். முதுகுளத்தூர் யூனியன் அலுவலகத்தில் சேர்மன் சண்முகபிரியா ராஜேஷ் தேசிய கொடி எற்றி வைத்தார். ஆணையாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வெங்கல குறிச்சி கிராமத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

    ×