என் மலர்
நீங்கள் தேடியது "பியூஷ் கோயல்"
- அண்டை நாடுகளை விட சிறந்த வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்கா உடன் ஏற்பட்டுள்ளது.
- சீனாவுக்கு 37 சதவீதம், வங்கதேசத்திற்கு 20 சதவீதம், பாகிஸ்தானுக்கு 19 சதவீதம் வரி விதித்துள்ளது.
இந்தியா- அமெரிக்கா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவை குறைப்பதாக இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் இந்தியா மீதான 50 சதவீதம் வரி விதிப்பை 18 சதவீதமாக குறைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்தியா- அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தை இந்திய அரசுதானே முதலில் அறிவிக்க வேண்டும். டிரம்ப் அறிவித்தது ஏன்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இதற்கு பியூஷ் கோயல் பதில் அளிக்கும் வகையில் கூறியதாவது:-
இந்தியா- அமெரிக்கா ஒப்பந்தம் குறித்து டொனால்டு டிரம்ப் அறிவித்தது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பியதை பார்த்தேன். அமெரிக்கா இந்தியா மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தியது. இதனால் அது நீக்கப்பட்டதை அவர்கள் அறிவித்திருக்க வேண்டும்.
பல தடைகள் மற்றும் பல மாத பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அண்டை நாடுகளை விட சிறந்த வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்கா உடன் ஏற்பட்டுள்ளது.
போட்டி பொருளாதாரத்திற்கான குறைந்த வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனா, பாகிஸ்தான் நாடுகளை விட இந்தியாவுக்கான வரி விதிப்பு குறைவானதாகும்.
நெருக்கடியின் கீழ் பிரதமர் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ராகுல் காந்தி தெரிவிக்கிறார். அவர் மக்களை தவறாக வழி நடத்த விரும்புகிறார். இந்தியாவின் வளர்ச்சி குறித்து அவர் கவலைப்படவில்லை. ராகுல் காந்தியின் பிரச்சனைதான் என்ன?. எதிர்மறையான மனநிலையால் அவர் சாதிக்க விரும்புவது என்ன? என்பதை மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.
சீனாவுக்கு 37 சதவீதம், வங்கதேசத்திற்கு 20 சதவீதம், பாகிஸ்தானுக்கு 19 சதவீதம் வரி விதித்துள்ளது.
- பிரதமர் மோடி அமெரிக்காவுடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளார்.
- மோடிக்கும் டிரம்புக்கும் இடையிலான தனிப்பட்ட உறவின் காரணமாக ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளோம்.
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:-
* நமது போட்டியாளர்களை விட சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை நாம் பெற்றுள்ளோம்:
* இந்த ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச விரும்பினேன். ஆனால் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் உருவாக்கிய விரும்பத்தகாத காட்சிகளால் என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை.
* இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஏழைகள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள்.
* பிரதமர் மோடி அமெரிக்காவுடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளார்.
* ஒட்டுமொத்த தேசமும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறது
* பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இடையிலான தனிப்பட்ட உறவின் காரணமாக இந்தியா அமெரிக்காவுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
* கால்நடை வளர்ப்பு, விவசாயம் மற்றும் பால்வளத் துறைகளின் நலன்களை பிரதமர் மோடி கருத்தில் கொண்டுள்ளார்.
* அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா, முக்கியத்துவம் வாய்ந்த விவசாயம் மற்றும் பால்வளத் துறைகளின் நலன்களைப் பாதுகாத்துள்ளது
* வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு ஒரு நல்ல சகுனம்
இவ்வாறு பியஷ் கோயல் தெரிவித்தார்.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் பியூஷ் கோயலுக்கு காலை விருந்தளித்தார்.
- மிகப் பெரிய பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்.
தமிழ்நாடு பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரியுமான பியூஸ் கோயல் முன்னிலையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் நேற்று இணைந்தார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் பியூஷ் கோயலுக்கு காலை விருந்தளித்தார்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
* மிகப் பெரிய பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்.
* சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசும் உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
அப்போது த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவித்தார்.
- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் தனது இல்லத்துக்கு வந்தது மகிழ்ச்சி.
- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலுக்கு காலை விருந்தளித்தார்.
அவருடன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் தனது இல்லத்துக்கு வந்தது மகிழ்ச்சி.
* பிரதமர் மோடி பங்கேற்கும் நாளைய பொதுக்கூட்டம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.
* தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி அமையும்.
* மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.
* அனைத்து துறைகளிலும் தி.மு.க. அரசு தோல்வி அடைந்துள்ளது.
* தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது.
* தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பான அறிக்கையை ஆளுநரிடம் வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. குடும்ப ஆட்சியில் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனது பழைய நண்பர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலுக்கு காலை விருந்தளித்தார்.
அவருடன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் தி.மு.க. அரசை அகற்றிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும்.
* தி.மு.க. குடும்ப ஆட்சியில் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* அனைத்து துறைகளிலும் ஊழல் செய்தது மட்டும் தான் தி.மு.க. அரசின் சாதனை.
* உதயநிதி ஸ்டாலினை உடனடியாக துணை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
* உதயநிதி ஸ்டாலின் தேசியத்திற்கு எதிரான கருத்துகளை கூறி வருகிறார்.
* உதயநிதி பேச்சுக்கு நீதிமன்றமே தனது கண்டனத்தை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
* அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனது பழைய நண்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பியூஸ் கோயல் முன்னிலையில் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.
- தேசிய ஜனநாயக கூட்டணி என்பது 2026 தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக மாறிக்கொண்டு இருக்கிறது.
தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் இருந்து தொடர்ந்து வருகிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதிபடுத்தியுள்ளது. இந்த கூட்டணியில் ஏற்கனவே பா.ம.க. இணைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டணி தலைவர்கள் அணிவகுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரியுமான பியூஸ் கோயல் முன்னிலையில் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் நேற்று இணைந்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்ததற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலுக்கு வருகை புரிந்தார்.
அவருடன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் வந்து இருந்தனர். எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில், மத்திய அமைச்சர், பியூஷ் கோயல், பா.ஜ.க. தலைவர்களுக்கு காலை விருந்து அளிக்கிறார்.
இதுதொடர்பாக கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறுகையில்,
தேசிய ஜனநாயக கூட்டணி என்பது 2026 தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக மாறிக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எங்களுக்கு பலம் சேர்ந்து கொண்டே இருக்கிறது.
நாளை பிரதமர் மோடி சென்னை வருகின்றபோது அங்கு கூடுகின்ற கூட்டம் என்பது தமிழகத்தினுடைய ஆட்சி மாற்றத்திற்கு கட்டியம் கூறுகின்ற கூட்டமாக இருக்கும்.
காலை உணவு முடிந்த பிறகு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உங்களை சந்தித்து பேசுவார் என்று அவர் கூறினார்.
- டி.டி.வி. தினகரனை எடப்பாடி பழனிசாமி வரவேற்று, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணி முடிவை அறிவித்த பின்னர், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்து தினகரன் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில், "மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர்
மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.
- பியூஸ் கோயல், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
- கூட்டணி அறிவிப்புக்கு பிறகு இபிஎஸை டிடிவி தினகரன் சந்திக்கவில்லை.
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணி முடிவை அறிவித்த பின்னர், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்து தினகரன் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.
இந்த சந்திப்பின்போது பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர். ஆனால் இக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான இபிஎஸ் இல்லை. தொடர்ந்து பியூஸ் கோயல், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது உங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? எடப்பாடியை ஏற்றுக்கொள்வீர்களா? என்பதுபோன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அப்போது டிடிவி தினகரன் பதிலளித்துக்கொண்டிருந்தபோதே, பியூஷ் கோயல் நயினார் நாகேந்திரனிடம் கிளம்பலாம் எனக்கூறி பேச்சை நிறுத்தினார். இது தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
- ஊழல் நிறைந்த தி.மு.க. அரசை அகற்ற ஒன்றாக இணைந்துள்ளோம்.
- தமிழக மக்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் தி.மு.க. தாக்குகிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான பியூஷ் கோயல், கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இணைவது தொடர்பாக டி.டி.வி.தினகரன் சென்னையில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற டி.டி.வி. தினகரன், பா.ஜ.க. தலைவர்களை சந்தித்தார். தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை அவர் சந்தித்தார். அப்போது டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். இதையடுத்து பா.ஜ.க. - அ.ம.மு.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
* பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்ததில் மகிழ்ச்சி.
* தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளார்.
* ஊழல் நிறைந்த தி.மு.க. அரசை அகற்ற ஒன்றாக இணைந்துள்ளோம்.
* தி.மு.க.வின் ஊழல்கள் அனைத்தும் வெளிக்கொண்டு வரப்படும்.
* தமிழக மக்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் தி.மு.க. தாக்குகிறது.
* டி.டி.வி.தினகரனின் வருகை தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும்.
- நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 95% வரை குறையும்
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், "இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும். இது முதலீடுகளை ஊக்குவிக்கும்.
நியூசிலாந்து அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் உற்பத்தி, உள்கட்டமைப்பு, சேவைகள், புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய துறைகளை இலக்காகக் கொண்டு, 20 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை எளிதாக்க உறுதியளித்துள்ளது
அடுத்த 20 ஆண்டுகளில் நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு 1.1 முதல் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் வரை உயர்த்த இலக்கு என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்தியா நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 95 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், "நாங்கள் இந்தியாவுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளோம். இது நியூசிலாந்து விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு வாய்ப்புகளைத் திறந்து, ஏற்றுமதியை அதிகரித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வருமானத்தை உயர்த்தி, அனைத்து நியூசிலாந்து மக்களும் முன்னேற உதவும்" என்று கூறினார்.
- இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
- வர்த்தக ஒப்பந்தங்கள் வெறும் வரிகள் மட்டும் உள்ளடக்கியது கிடையாது என்றார்.
பெர்லின்:
இந்தியா, அமெரிக்கா இடையே பரிந்துரை செய்யப்பட்ட இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நவம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என இரு நாட்டு தலைவர்களும் தங்கள் நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி விவாதிக்க மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் ஜெர்மனி சென்றுள்ளார். பெர்லினில் நடந்த நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் பேசியதாவது:
இந்தியா அவசரமாக எந்த வர்த்தக ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாது.
வர்த்தக ஒப்பந்தங்கள் வெறும் வரிகள் மட்டும் உள்ளடக்கியது கிடையாது.
வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான இந்தியாவின் அணுகுமுறை, உடனடி வர்த்தக இலக்குகளை அடைவதற்கான அழுத்தத்தால் அல்ல, நீண்டகால தொலைநோக்கு பார்வையைக் கொண்டது. வர்த்தக ஒப்பந்தங்கள் நீண்ட காலத்திற்கு உரியவை.
இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. விரைவில் ஒரு நியாயமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பமென நம்புகிறோம் என தெரிவித்தார்.
- இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் செய்தியாளர்களை சந்தித்தார்.
- இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோடியைப் பாராட்ட முன்வருகிறார். அவர்களுக்கு இடையே ஒரு நம்பமுடியாத உறவு உள்ளது
ரஷியாவிடம் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக இந்தியாவின் பொருட்களுக்கு 50 சதவீதம் விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதைதொடர்ந்து இந்தியா - அமெரிக்கா உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக பேச்சுவார்தைகளிலும் சுணக்கம் உருவானது.
இந்நிலையில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், " ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தச் செய்வது எங்கள் நிர்வாகத்தின் முன்னுரிமை.
வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து நாம் வெகு தொலைவில் இல்லை. அவர்கள்(இந்தியா) இந்த ஒப்பந்தத்தின் விவரங்களைப் பற்றி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மற்ற நாடுகளை விட சில நேரங்களில் இந்தியாவிடமிருந்து நாங்கள் அதிகமாக எதிர்பார்க்கிறோம். அடுத்த சில வாரங்களில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும் டிரம்ப் - மோடி உறவு குறித்து பேசிய கோர், " நீங்கள் கவனித்திருந்தால் தெரியும். அதிபர் டிரம்ப் மற்ற நாடுகள் மீது வரி விதிக்க நேரும்போதெல்லாம் அந்த நாடுகளின் தலைவர்களை அவர் குறிவைக்கிறார். ஆனால் இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோடியைப் பாராட்ட முன்வருகிறார். அவர்களுக்கு இடையே ஒரு நம்பமுடியாத உறவு உள்ளது" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், "வர்த்தக ஒப்பந்த விவாகரத்தில் மிகவும் நல்ல முறையில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் இந்தாண்டு நவம்பர் மாதத்துக்குள் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இருதரப்பிலும் திருப்தியடைந்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.
அதேநேரம், இந்தியாவுடனான வர்த்தகம் குறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லூட்னிக் பேசுகையில், ''ரஷியாவுடன் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் மட்டுமே, வர்த்தகப் பிரச்னைகள் தீர்க்கப்படும்'' என்று தெரிவித்தார்.
இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திச் செய்வதே அமெரிக்காவின் முதன்மை நோக்கமாக இருக்கும் நிலையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று இரு தரப்பும் கூறுவதில் முரண்பாடு எழுந்துள்ளது.
இதனால் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் எந்த காரணம் கொண்டும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மாட்டோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.






