என் மலர்
நீங்கள் தேடியது "கள்ளச்சாராயம்"
- 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் குறித்து வீடு வீடாகச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான், " கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்தது சோகமான நிகழ்வாகும். அப்பாவி மக்களைக் கொன்ற இந்த கொலையாளிகள் எக்காரணம் கொண்டும் தப்பவிடப்பட மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பகவத் மான் அறிவித்தார்.
2020 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து மொத்தம் 120 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. .
- 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் குறித்து வீடு வீடாகச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 14 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பங்கலி, பாதல்புரி, மராரி கலன், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் ஆகிய 5 கிராமங்களில் நேற்று இரவு கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவம் குறித்து அறிந்து வந்த போலீசார் முக்கிய குற்றவாளிகளான பிரப்ஜித் சிங், குல்பீர் சிங், சாஹிப் சிங், குர்ஜந்த் சிங் மற்றும் நிந்தர் கவுர் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் குறித்து வீடு வீடாகச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தலைமறைவாக உள்ள ஜிதேந்திரகுமாரை தேடி வருகின்றனர்.
- கைப்பற்றப்பட்ட 7 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகில் உள்ள முந்தல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக உத்தமபாளையம் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள சோதனை சாவடியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு வேனை நிறுத்தி ஆய்வு செய்தனர்.
அப்போது தண்ணீர் குடிப்பதற்கு பயன்படுத்தப்படும் கேன்களில் குடிநீர் கொண்டு செல்வது போல 6 பாட்டில்களில் கள்ளச்சாராயம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் வேனை ஓட்டி வந்த கேரள மாநிலம் நெடுங்கண்டம் அருகில் உள்ள பத்துவலவு பகுதியை சேர்ந்த சுகேரியா குரியன் (வயது 52) என்பவரை கைது செய்தனர்.
இவரிடம் விசாரணை நடத்தியதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜிதேந்திரகுமார் என்பவரிடம் இருந்து சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்களை வாங்கி கடந்த பல ஆண்டுகளாக இந்த வியாபாரம் செய்து வந்துள்ளார். காய்ச்சிய சாராயத்தை கேரளாவில் உள்ள தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார் என்று போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுகேரியா குரியனை கைது செய்து வேனையும் கைப்பற்றினர். தலைமறைவாக உள்ள ஜிதேந்திரகுமாரை தேடி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட 7 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
- சிவான் மாவட்டத்தில் உள்ள பாலா கிராமத்தில் விஷ சாராயம் குடித்ததில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 3 பேரை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
சிவான்:
பீகாரில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பீகாரில் சரண், சிவான் மற்றும் பெகுசாரய் உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
25-க்கும் மேற்பட்டோருக்கு பார்வை பறிபோனது. இந்த விவகாரம் பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சிவான் மாவட்டத்தில் உள்ள லகாரி நபிகஞ்ச் பகுதியில் உள்ள பாலா கிராமத்தில் விஷ சாராயம் குடித்ததில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 3 பேரை அவர்களது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவர்களில் ஒருவர் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். மற்றொருவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுதவிர 20-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- போலீசார் சோதனையில் சிக்கியது
- குற்றவாளிகளை தேடி வருகின்றனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பூங்குளம் மலைப்பகுதியில் ரகசியமாக சிலர் அடுப்புகள் அமைத்து கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாகவும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் போலீசார் சோதனைக்கு வருவதற்குள் சாராய காய்சுபவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்து தப்பி விடுவதாகவும் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது.
இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பரண்டு ராமமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்தார்.
இந்த தனிப்படையினர் கிராமப் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கள்ளச்சாராயம் காய்ச்சினாலும் விற்றாலும் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு செல்போன் என்னை கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து பூங்குளம் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சசும் தகவல் தனிப்படையினருக்கு தெரிவிக்கப்பட்டு அடிக்கடி சாராய ஊறல்களை அளித்தனர்.
நேற்று மாலையில் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தததை தொடர்ந்து குடியாத்தம் போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் பூங்குளம் மலைப்பகுதிக்கு சென்று அதிரடியாக சோதனை செய்தபோது 15 பேரல்கள் கள்ளச்சாராயம் ஊறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிலிருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை உடனடியாக போலீசார் அழித்தனர் மேலும் அங்கு கள்ளச்சாராயம் காய்ச்ச அமைக்கப்பட்டிருந்த 2 அடுப்புகளையும் போலீசார் அடித்து உடைத்தனர். மேலும் லாரி டியூப் களிலிருந்த கள்ள சாராயத்தையும் பறிமுதல் செய்து அழித்தனர்
கள்ளச்சாராய ஊறல்கள் காய்ச்சியது சம்பந்தமாக பூங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, செம்மட்ட சரவணன் ஆகியோர் மீது குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர்.
- 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 6 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
களக்காடு:
நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் மற்றும் போலீசார் நாங்குநேரி ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். இதைக்கண்ட போலீசார் விரட்டி சென்று 2 பேரை பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விஜயநாரா யணத்தை சேர்ந்த இசக்கி பாண்டி (வயது 45), ஆண்டான்குளத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (32), என்பதும், தப்பி ஓடியது புதுக்குளம் நடுத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் (34) என்பதும், 3 பேரும் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
- போலீசார் கச்சிராயப்பாளையம் அருகே மட்டப்பாறை சோதனைச் சாவடியில் வாகன சோதனை ஈடுபட்டனர்.
- லாரி ட்யூபில் சுமார் 180 லிட்டர் கள்ளச்சாரயத்தை கடத்தி வந்தது தெரிந்தது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரணேஸ்வரி தலைமையிலான போலீசார் கச்சிராயப்பாளையம் அருகே மட்டப்பாறை சோதனைச் சாவடியில் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் 2 மோட்டார் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். அப்போது போலீசார் வாகனத்தை சோதனை செய்த போது லாரி ட்யூபில் சுமார் 180 லிட்டர் கள்ளச்சாரயத்தை கடத்தி வந்தது தெரிந்தது.
இதனை தொடர்ந்து கள்ளச்சாராயத்தை போலீசார் சம்பவ இடத்திலேயே அழித்தனர். தொடர்நது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவான குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- கடந்த 10 ஆண்டு கழக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தீவிரமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்தன.
சென்னை:
தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் மீண்டும் தலை தூக்கி உள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
மரக்காணம் அருகே கள்ளச் சாராயம் அருந்தியதால் சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் மரணம் அடைந்ததாகவும், மேலும் 16 பேர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க பட்டிருப்பதாகவும் வருத்தத்துக்குரிய செய்திகள் வருகிறது.
மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். சிகிச்சை பெற்றுவருவோரை கவனத்துடனும் அக்கறையுடனும் கவனித்து அவர்களின் உயிரை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்.
கடந்த 10 ஆண்டு கழக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்த விடியா ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலை தூக்கியுள்ளது.
இதே மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தீவிரமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்தன.
அவற்றை அறிந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தற்போது நிகழ்ந்துள்ள இந்த மரணங்களுக்கு விடியாஅரசு பொறுப்பேற்க வேண்டும்.
இனியாவது கள்ளச் சாராயத்தை அறவே ஒழிக்க நடவடிக்கைகளை எடுக்க இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர்.
- கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியானார்கள்.
மேலும், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர்.
எக்கியார் குப்பத்தில் உள்ள பூமீஸ்வரர்கோவில் பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் கண்ணீர்மல்க மறியலில் ஈடுபட்டனர். கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு கலால் காவல்துறை காவல் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
- போலீஸ் சூப்பரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சாராயம் பதுக்கி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு ஆகிய 7 உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சாராயம் பதுக்கல் மற்றும் சாராயம் கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சாராயம் பதுக்கி விற்பனை செய்த 30 பேர்மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் சாராயம் பதுக்கி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- கள்ளச்சாராய விற்பனை தலைதூக்கியிருப்பது தி.மு.க. அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது.
- தமிழக அரசு தூக்கத்தில் இருந்து விழித்து, கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் உட்கொண்டதால், சுரேஷ், சங்கர், தரணிவேல் எனும் மூன்று பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், கவலைக்கிடமான நிலையில் 16 பேர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தெரிகிறது. அவர்கள் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். டாஸ்மாக் மூலம் கட்டுப்பாடற்ற சாராய விற்பனை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, தற்போது கள்ளச்சாராய விற்பனையும் தலைதூக்கியிருப்பது தி.மு.க. அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது.
உடனடியாக தமிழக அரசு தூக்கத்தில் இருந்து விழித்து, கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த 6 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர்.
- தமிழகத்தில் குட்கா, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகரித்தது கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த 6 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். மேலும் 28 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று மதியம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர். மேலும், அங்கிருந்த டாக்டர்களிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் குட்கா, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகரித்தது கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்கவைத்ததே அவர்கள்தான்.
கடந்த 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது தொடர்பாக சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக காவல்துறைக்கு அவர் அடிக்கடி ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். மேலும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறையில் தனி ஆணையத்தையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி உள்ளார். அதனால் தான் குறைந்துள்ளது.
தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை. கடந்த காலத்தில் ஜெயலலிதா ஆட்சியில் தான் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுவை அரசே விற்பனை செய்யும் என அறிவித்தார். அரசின் வருமானத்திற்காக டாஸ்மாக் மூலம் மது விற்பனையை கொண்டு வந்தார். அதற்கு சட்டமன்றத்தில் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். தற்போது வேண்டுமென்றே அரசின் மீது குறை, பழி சொல்லவேண்டும் என ஒருவர் பேசியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.






