search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடப்பாடி பழனிசாமி"

    • 2-வது கட்ட கலந்துரையாடல் நடைபெறுகிறது.
    • திருப்பூர் தொகுதி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் தோல்வியை தழுவியதால் அதற்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்க முடிவு செய்தார்.

    அதன்படி கடந்த 10-ந் தேதியில் இருந்து பாராளு மன்ற தொகுதி வாரியாக சந்தித்து வருகிறார். மாவட்ட செயலாளர்கள் முக்கிய பொறுப்பாளர்களிடம் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து கேட்டறிந்தார்.

    ஒவ்வொரு நிர்வாகிகள் கூறும் கருத்தும் பதிவு செய்யப்படுகிறது. முதல் கட்டமாக தொகுதி நிர்வாகி களை சந்தித்து முடித்த பிறகு தற்போது 2-வது கட்டமாக 17 தொகுதிகளுக்கு கலந்துரையாடல் நடைபெறுகிறது.

    இன்று காலையில் திருப்பூர் தொகுதி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதற்காக அவர் காலை 10.30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.

    திருப்பூர் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவராக கருத்துக்களை கூறினர்.

    திருப்பூரில் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அங்கு அ.தி.மு.க.வின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். பகல் 2 மணி வரை ஆலோசனை நடைபெற்றது.

    மாலையில் கடலூர் தொகுதி நிர்வாகிகளை சந்திக்கிறார். நிர்வாகிகளுக்கு தன்னம்பிக்கையுடன் புத்துணர்வு அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சனி, ஞாயிறு இரு நாட்களும் ஆலோசனை கூட்டம் நடைபெறாது. மீண்டும் 29-ந் தேதி திங்கட்கிழமை முதல் கூட்டம் தொடங்கி ஆகஸ்ட் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • ஆயிரம் விலக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் ஹசன் முகமது ஜின்னா.
    • 'புதிய குற்றவியல் தொடர்பான நிலைப்பாட்டில் திமுக இரட்டை வேடம் போடுகிறது'

    தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக கடந்த 2021 முதல் பணியாற்றி வந்த ஹசன் முகமது ஜின்னா தமிழ்நாடு அரசின் குற்றவியல்துறை இயக்குநராக சில நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.

    இந்த நிலையில், தமிழக குற்றவியல் துறை இயக்குநராக ஹசன் முகமது ஜின்னா நியமனம் செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு தலைமை வழக்கறிஞராக இருப்பவருக்கு குற்றவியல் துறை துணை தலைவராக பதவி உயர்வு கொடுத்து, அதன் பிறகு அவர் தலைவராக பொறுப்பேற்பது தான் மரபு.

    மேலும் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்ப்பதாக கூறிவிட்டு அதன் அடிப்படையில் தற்போது இந்த நியமனம் நடந்துள்ளது. புதிய குற்றவியல் தொடர்பான நிலைப்பாட்டில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். 

    • 9-வது நாளாக இன்று ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
    • இதுவரையில் 25 தொகுதி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி உள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்தும் அடுத்த கட்ட செயல்பாடுகள் பற்றியும் அவர் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார்.

    2 கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பகிரங்கமாக தங்கள் மனதில் உள்ள ஆதங்கங்களை கொட்டி தீர்த்து வருகின்றனர். 9-வது நாளாக இன்று ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

    தென்காசி பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தார். மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அனைத்து அணி நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொருவருக்கும் பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இதுவரையில் 25 தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி இன்று மாலையில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்திக்கிறார்.

    நாளை காலையில் திருப்பூர் தொகுதியிலும், மாலையில் கடலூர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறாது. மீண்டு்ம திங்கட்கிழமை நடக்கிறது.

    • எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் இந்த கூட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
    • அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து பயணிப்பதே நல்லது என்கிற கருத்தையும் அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

    சென்னை:

    ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்டமோதல் நீடித்துக் கொண்டே செல்கிறது.

    அ.தி.மு.க.வில் இருந்து பன்னீர்செல்வத்தை முழுமையாக ஓரம் கட்டி விட்டு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை தலைமையேற்று நடத்தி வருகிறார். இவரது இந்த தலைமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கூறி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வையே தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்க முடியாது என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

    ஓ.பன்னீர்செல்வத்தை போலவே சசிகலாவும் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டு தனித்து செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று கூறிக்கொண்டு சுற்றுப்பயணம் செய்து வரும் அவர் நிச்சயம் எனது தலைமையில் அ.தி.மு.க. ஓன்றுபடும் என்று தொடர்ந்து கூறிவருகிறார்.

    சசிகலாவின் இந்த சுற்றுப்பயணமும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை. அதே நேரத்தில் டி.டி.வி. தினகரனும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கி கட்சியை நடத்தி வருகிறார். இப்படி அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள இந்த மூன்று பேரையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்கிற குரல் எழுந்துள்ள போதிலும் எடப்பாடி அதனை கண்டு கொள்ளாமலேயே உள்ளார்.

    இந்த நிலையில்தான் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் எம்.பி.யாகி விடலாம் என்று கனவு கண்டார். அதுவும் பலிக்காமல் போய்விட்டது. இதன் காரணமாக அரசியலில் அவர் திசை தெரியாமல் பயணித்து வருவதாகவே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

    வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது தெரியவில்லை. சசிகலாவுடன் கைகோர்த்து அவர் செயல்பட இருப்பதாக கூறப்படுகிறது. சசிகலாவை விரைவில் சந்திப்பேன் ஓ.பி.எஸ். கூறியுள்ள நிலையில் நாளை மறுநாள் 26-ந்தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் முன்னணி நிர்வாகிகளின் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்டியுள்ளார். எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் இந்த கூட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

    அதில் செல்வம் தனது எதிர்காலம் பற்றி பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்தது போல வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அந்தக் கூட்டணியிலேயே நீடிக்க வேண்டும் என்பதே ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சிலரின் விருப்பமாக உள்ளது.

    அதே நேரத்தில் பா.ஜ.க.வுடனான இந்த பயணம் வெற்றி பயணமாக இருக்காது. அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து பயணிப்பதே நல்லது என்கிற கருத்தையும் அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வத்தை சேர்க்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருப்பதால் சசிகலாவுடன் கைகோர்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி முக்கிய முடிவுகளை பன்னீர்செல்வம் எடுக்க இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • நாளை தென்காசி, ஈரோடு ஆகிய தொகுதி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்படுகிறது.
    • தேர்தல் வியூகங்களை இப்போதே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் வாரியாக கடந்த 10-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை முதல்கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இதுவரையில் 7 நாட்கள் நடந்த கலந்துரையாடலில் 23 தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

    கூட்டணி குறித்து சரியான முடிவு எடுக்காதது தேர்தல் தோல்விக்கு காரணம் என்று பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க சரியான திட்டமிடல், தேர்தல் வியூகங்களை இப்போதே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.


    இந்த நிலையில் 2-வது கட்ட கலந்துரையாடல் இன்று தொடங்கியது. மீத முள்ள 17 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளை இன்று முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    காலையில் தேனி பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டறிந்தார். சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், இந்நாள், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கும் தேனி தொகுதி தோல்விக்கு என்ன காரணம் என்பது பற்றி விவாதித்தார்.

    முன்னதாக ஆலோசனை நடத்துவதற்காக தலைமை கழகத்திற்கு காலை 10.15 மணிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். அவரை தொண்டர்கள் வரவேற்று உள்ளே அழைத்து சென்ற னர். மாலை 4 மணிக்கு ஆரணி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

    நாளை தென்காசி, ஈரோடு ஆகிய தொகுதி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    • 'ஆல் இந்தியா பாட்டில் அசோசியேஷன்' சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
    • அரசுக்கு வருமானம் வரக்கூடிய டெண்டரை நான்கு மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைத்துள்ளது ஏன்?

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    உயர்நீதிமன்ற ஆணைப்படி, டாஸ்மாக் நிறுவனம் காலி பாட்டில்களை டெண்டர் விட்டு திரும்பப் பெற வேண்டும்; அதன்மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். ஆனால், இந்த விடியா திமுக அரசு பதவியேற்றது முதல் டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால், தமிழ்நாடு அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 200 கோடி ரூபாய் வரை வருமான இழப்பு ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, ஆளும் கட்சியினர் சிண்டிகேட் அமைத்து முறைகேடாக டாஸ்மாக் பார் நடத்துவதால், அரசுக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    உயர்நீதிமன்ற ஆணைப்படி நீலகிரி, திண்டுக்கல், கோவை வடக்கு, கோவை தெற்கு, தேனி, நாகப்பட்டினம், நாகர்கோவில், தருமபுரி, பெரம்பலூர், அரியலூர் என்று சில குடோன்களில் படிப்படியாக காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை

    அரசு நடைமுறைப்படுத்தியது. ஆனால், மற்ற மாவட்ட குடோன்களுக்கு காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான டெண்டரை கோராமல் இந்த அரசு காலதாமதம் செய்தது.

    எனவே, காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான திட்டத்தை அமல்படுத்த வேண்டி 'ஆல் இந்தியா பாட்டில் அசோசியேஷன்' சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், வருமானம் வரக்கூடிய திட்டத்தை செயல்படுத்த ஏன் தாமதம் என்றும், யார் அதிக விலைக்கு டெண்டர் கோரியுள்ளனரோ அவர்களுக்கு டெண்டரை வழங்கவும் அறிவுறுத்தியது.

    அதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிறுவனம் இந்தாண்டு பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின்கீழ் ஒப்பந்தப் புள்ளி கோரியது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் நிபந்தனையின்படி, உரிய சான்றிதழ்களுடன் ஒவ்வொரு டாஸ்மாக் குடோனுக்கும் 2 லட்சம் ரூபாய் வீதம் முன்வைப்புத் தொகை செலுத்தி டெண்டரில் பலர் கலந்துகொண்டதாகவும், பிப்ரவரி மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலேயே 'டெக்னிக்கல் பிட்டை' அதிகாரிகள் திறந்துவிட்டதாகவும், ஆனால், டெண்டர் போட்டவர்களிடம் பேரம் படியாததால், 'பைனான்ஸ் பிட்டை' திறக்காமல் கடந்த 5-ஆம் தேதி டெண்டரை ரத்து செய்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளிலிருந்து மதுபானங்களை வாங்கிக் குடித்துவிட்டு விவசாய நிலங்கள், காலி மனைகள், பூங்காக்களில் மறைவான இடங்கள், சுற்றுலாப் பகுதிகள் என்று அனைத்துப் பகுதிகளிலும் காலி பாட்டில்களை தூக்கி எறிந்து, அவை உடைந்து சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும், குறிப்பாக பாதசாரிகளுக்கும் பெரும் பாதிப்பை 'குடிமகன்கள்' ஏற்படுத்தி வரும் நிலையில், அரசுக்கு வருமானம் வரக்கூடிய இந்த டெண்டரை நான்கு மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைத்துள்ளது ஏன்?

    ஏற்கெனவே, டாஸ்மாக் பார்களை சிண்டிகேட் அமைத்து, முழுமையாக ஏலம் விடாமலும், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிக விலை வைத்துவிற்பதாகவும், சந்துக் கடைகளின் மூலம் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுவதாகவும், இதனால் அரசுக்கு வரக்கூடிய கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் ஒருசிலரின் பாக்கெட்டுகளுக்கு சென்றுவிடுகிறது என்றும்; டாஸ்மாக் அதிக ஊழல் நிறைந்த துறையாக செயல்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மூன்று ஆண்டுகளாக காலி பாட்டில்களை ஏலம் விடாமல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் இச்செயல், அக்குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளது போல் இருக்கிறது.

    ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்தாமல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். உடனடியாக காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான டெண்டரை விட்டு, சட்டவிதிகளின்படி அதிக விலை கோரியவர்களுக்கு முறைப்படி ஒப்பந்தம்விட்டு, அரசின் வருவாயை அதிகரிப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    • மு.க.ஸ்டாலினை, மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்.
    • தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

    ஓசூர்:

    ஓசூரில் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி பெங்களூர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அம்மா உணவகம் மேம்பாட்டுக்காக ரூ.21 கோடி நிதி ஒதுக்கியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மனப்பூர்வமாக பாராட்டுகிறேன். அம்மா உணவகத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் அவர் மேலும் பல கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

    பல மாநிலங்களில் இந்த திட்டம் தோல்வியடைந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

    தனது 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அம்மா உணவகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்காமல் ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.

    தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைத்தால் மக்களுக்கு பயனுள்ளதகாக அமையும். மத்தியில் பிரதமர் நாற்காலி ஆடிக்கொண்டிருக்கிறது. அது நிரந்தரமானது அல்ல.

    சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் எப்போது வேண்டுமானாலும் பிரதமர் நாற்காலியை தள்ளி விடுவார்கள். நாட்டில் எதிர்கட்சிகள் வலுப்பெற்றுள்ளன. ஜனநாயகம் தழைத்தோங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    அப்போது ஜான் திமோதி, ராஜேந்திர கவுடா, ஜெயசந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனை மனதில் வைத்து தொண்டாற்றுபவர் முதலமைச்சர்.
    • முதலமைச்சர் அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல், சிறுமதி ஒருநாளும் இருந்ததில்லை.

    சென்னை:

    ஏழை, எளியவர்களின் அன்னலட்சுமியாக திகழ்ந்த அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்த முயற்சித்து, தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் என்று எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மேயர் பிரியா கூறுகையில்,

    * திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்படும் அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரை பாராட்ட எதிர்க்கட்சி தலைவருக்கு மனமில்லை.

    * கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனை மனதில் வைத்து தொண்டாற்றுபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    * திமுகவால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமை செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கிய திட்டத்தை மக்கள் அறிவர்.

    * பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புலம்பி தவிக்கிறார்.

    * மனிதநேயர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல், சிறுமதி ஒருநாளும் இருந்ததில்லை என்று அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயலலிதா ஆட்சியில் சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்ட நிலையில் 19 உணவகங்களை மூடியது ஏன்?
    • தமிழகத்தின் அன்னலட்சுமியாக செயல்படும் அம்மா உணவகங்கள் சுமார் 19 உணவகங்களை திமுக அரசு மூடி உள்ளது.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டதை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    * அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்த முயற்சித்துவிட்டு தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    * ஜெயலலிதா ஆட்சியில் சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்ட நிலையில் 19 உணவகங்களை மூடியது ஏன்?

    * தமிழகத்தின் அன்னலட்சுமியாக செயல்படும் அம்மா உணவகங்கள் சுமார் 19 உணவகங்களை திமுக அரசு மூடி உள்ளது.

    * வாய்பந்தல் போடாமல் மூடியுள்ள உணவகங்களை திறப்பதுடன் புதிய உணவகங்களையும் திறக்க வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • ஒருசில கொலை நிகழ்வுகளைத் தவிர, ஏனைய குற்றங்களில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
    • உண்மைக் குற்றவாளிகள் இதுவரை பிடிபடாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    யார் ஆட்சியில் இருந்தாலும் அங்கொன்றும், இங்கொன்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வக்கிர புத்தி படைத்தவர்களாலும், ஒருசில கொலைகள் நடப்பது இயல்பு. குற்றவாளிகளை காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்வது நடைமுறை.

    ஆனால், தி.மு.க. ஆட்சியில் கொலைகள் செய்வதையே தொழிலாகக் கொண்டு பலர் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து வெறியாட்டம் ஆடுவதும், பல கொலைகளில் ஈடுபட்ட கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறுவதும் கண்கூடாகும்.

    பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில்கூட 'நாங்கள்தான் செய்தோம்' என்று தானாகவே முன்வந்து சிலர் சரணடைந்துள்ளதும், அதில் ஒருவரை சென்னை மாநகர் காவல் துறையினர் என்கவுண்டர் செய்ததும் விந்தையான சம்பவமாகும்.


    காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் படுகொலை, சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிக் கழகச் செயலாளர் சண்முகம் படுகொலை, மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் படுகொலை என்று கட்சி பேதமின்றி பல படுகொலைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன.

    இவற்றில் ஒருசில கொலை நிகழ்வுகளைத் தவிர, ஏனைய குற்றங்களில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. உண்மைக் குற்றவாளிகள் இதுவரை பிடிபடாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 2021-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தின் தலைநகராம் சென்னை கொலை நகரமாக மாறியுள்ளது என்ற நிலையில், கடந்த 200 நாட்களாக தமிழகமே கொலைக்களமாக மாறியுள்ளது. மக்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் வாழ்வது அபாயகரமான ஒன்றாகும்.

    தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 80 கொலைகளும், பிப்ரவரி மாதம் 64 கொலைகளும், மார்ச் மாதம் 53 கொலைகளும்; ஏப்ரல் மாதம் 76 கொலைகளும், மே மாதம் 130 கொலைகளும், ஜூன் மாதம் 104 கொலைகளும், ஜூலை 17-ந் தேதி வரை 88 கொலைகளும் என, மொத்தம் சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    தமிழகத்தில் சென்னை மாநகரில் மட்டும் 86 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது, இரண்டாவது மதுரையில் 40 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 35-ம், விருதுநகரில் 31 கொலைகளும் நடைபெற்று முறையே மூன்றாவது, நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    'அடுத்தவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும்' என்ற இரு மாப்போடு இனியும் செயல்படாமல், சுய சிந்தனையோடு கொலை பாதகர்களிடமிருந்து மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து, போர்க்கால அடிப்படையில் இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
    • பொள்ளாச்சி, நீலகிரி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததையொட்டி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர் வாகிகளை சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறார். பாராளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 10-ந்தேதி தொடங்கிய கருத்து கேட்பு கூட்டம் நாளையுடன் முடிகிறது. இன்று 7-வது நாளாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தார்.

    பொள்ளாச்சி, நீலகிரி தொகுதி நிர்வாகிகளை காலையில் அவர் சந்தித்து பேசினார். மாலையில் கோவை, பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கிறார்.

    தேர்தல் தோல்விக்கு நிர்வாகிகள் பல்வேறு காரணங்களை எடுத்து கூறி வருகிறார்கள். இதுவரையில் நடந்த தேர்தலில் தோல்வியை தழுவினாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுத்து செயல்பட வேண்டும் என அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினார்கள்.

    நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கட்சியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாதையில் தொண்டர்களை அரவணைத்து கட்சிக்குள் இருக்கும் ஒரு சில முரண்பாடுகளை களைந்து சீர்செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

    கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுத்து வருகின்ற தேர்தலில் வெற்றி வாகை சூட தேவையான அரசியல் வியூகங்கள் இப்போதே தொடங்கிவிட்டன என்று எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் உறுதிப்பட கூறியுள்ளார்.

    பாராளுமன்ற தொகுதி முதல் கட்ட கருத்து கேட்பு கூட்டம் நாளை முடிகிறது. விழுப்புரம், கன்னியாகுமரி, தர்மபுரி ஆகிய தொகுதி நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

    தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி அழைத்து பேசி வருவதால் அ.தி.மு.க.வில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மலர்க்கொடி சேகரை அதிமுக-விலிருந்து நீக்கம் செய்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    • அதிமுக பிரமுகர் மலர்க்கொடி பிரபல தாதாவின் மனைவி ஆனார்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அ.தி.மு.க. இணை செயலாளர் மலர் கொடி கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். 

    இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம், திருவல்லிக்கேணி மேற்கு பகுதி கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த மலர்கொடி சேகர் ( திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×