என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடப்பாடி பழனிசாமி"

    சிங்காநல்லூர் தொகுதிக்கு வேறு ஒரு பொறுப்பாளரை கட்சி நியமிக்கும்.அண்ணாமலை பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகிக் கொண்டது பா.ஜ.க.வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    தமிழ்நாட்டில் பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்ற பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் 72 பேர் நியமிக்கப்பட்டனர்.

    இதில் பா.ஜ.க. முன்னாள் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலைக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு அண்ணாமலை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் அந்த தேர்தல் பொறுப்பாளர் பணிகளை தன்னால் நிறைவேற்ற முடியாது என அண்ணாமலை அறிவித்துள்ளார். தந்தையின் உடல்நிலை காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.

    இதுதொடர்பாக அண்ணாமலை கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவீர்களா என கேட்கிறீர்கள். தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார்நாகேந்திரனிடம் நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன். எனது தந்தையின் உடல் நிலை காரணமாக அவரை பார்த்துக் கொள்ள வேண்டும்.

    அதனால் தான் தற்போது கோவை பகுதியில் உள்ளேன். எனது தந்தை டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ளார். அவரை பார்த்துக் கொள்ள வேண்டும். அது எனது முதல் கடமை. அதனால் தற்போது தேர்தல் அடிப்படை வேலைகள் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே அதிக தூரம் பயணம் செய்ய முடியாது என வேண்டுகோள் வைத்துள்ளேன். கட்சியும் அதை ஏற்றுக்கொண்டு வேறு, வேறு பொறுப்பாளர்களை நியமிப்பார்கள்.

    அதேசமயம் பா.ஜ.க., அடுத்தடுத்த பிரசாரத்துக்கு வேறு என்ன சொல்கிறார்களோ அதற்கு தயாராக இருக்கிறேன். கட்சிக்கு என்ன வேலை செய்ய வேண்டும். கூட்டணிக்கு என்ன வேலை செய்ய வேண்டும். இங்கு இருக்கும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு என்ன வேலை செய்ய வேண்டும். அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் என்ன வேலை செய்ய வேண்டும் என்று கட்சி சொல்கிறதோ அந்த வேலையை செய்வேன். இப்போதைக்கு அதிகம் பயணம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது.

    அதனையும் கட்சியும் புரிந்து கொண்டது. நான் தேர்தலில் நிற்கவேண்டுமா, வேலை செய்ய வேண்டுமா என்பதை கட்சி சொன்னால் அதன்பிறகு பேசுகிறேன். சிங்காநல்லூர் தொகுதிக்கு வேறு ஒரு பொறுப்பாளரை கட்சி நியமிக்கும். வேறு ஒரு தலைவர்கள் வருவார்கள். 6 தொகுதிகளுக்கும் வேறு பொறுப்பாளர்கள் வருவார்கள். அதற்கான காலமும், சூழ்நிலையும் நிறைய இருக்கிறது.

    கோவையில் பா.ஜ.க.வுக்கு ஒரு எம்.எல்.ஏ. உள்ளார். அவர் மீண்டும் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்ல வேண்டும். அதேபோன்று கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றி பெற்று மெஜாரிட்டியுடன் சட்டசபைக்கு செல்ல வேண்டும். அதற்குரிய பணிகளில் ஒரு தொண்டராக ஈடுபடுவேன்.

    விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அதனை வரவேற்கிறோம். என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அதற்கு இ.வி.எம். எந்திரம் பதில் சொல்லும். ஆனால் விஜய்யிடம் என்ஜின் இருக்கிறதா என்று தெரியவில்லையே. எங்களிடம் என்ஜின் இருக்கிறது. டபுள் என்ஜின் இருக்கிறது. விஜய்யிடம் என்ஜின் இருக்கிறதா, கார்ப்பரேட்டர் இருக்கிறதா? அந்த என்ஜினை ஸ்டார்ட் பண்றதுக்கு ஆள் இருக்கிறதா? வண்டி இல்லை, என்ஜின் இல்லை, அதற்கு போட பெட்ரோல் இல்லை, டீசல் இல்லை. எனவே விஜய் என்ஜினை பற்றி பேசக்கூடாது.

    தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்திக்கிறது. அந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் களத்துக்கு செல்கிறோம். இதனை எங்கள் தலைவர்கள் முடிவு செய்து விட்டனர். பிரசாரமும் தொடங்கி விட்டது. தொண்டர்கள் வீதி, வீதியாகச் சென்று பணியாற்றி வருகிறார்கள். ஆனால் விஜய் பேச்சு மக்களை சிந்திக்க வைக்கும் வகையில், அர்த்தங்கள் நிறைந்ததாக இல்லை. விசிலுக்காகவும், கைதட்டலுக்காக மட்டுமே அவர் அப்படி பேசி வருகிறார்.

    நாட்டின் வளர்ச்சியை கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே பட்ஜெட்டின் நோக்கம் ஆகும் என்றார்.

    அண்ணாமலை பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகிக் கொண்டது பா.ஜ.க.வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 தொகுதிகளில் மட்டுமே தான் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது அண்ணாமலைக்கு மன வருத்தத்தை தந்ததாகவும், அதனாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
    • அண்ணா நினைவிடத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அ.தி.மு.க.வின் பல்வேறு அணிகளை சேர்ந்த மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணாவின் 57-வது ஆண்டு நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.

    அண்ணா நினைவிடத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அ.தி.மு.க.வின் பல்வேறு அணிகளை சேர்ந்த மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்த வந்தபோது திரண்டு இருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    • அண்ணா கண்ட அந்த வெற்றி தான், தமிழ்நாட்டின் அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்தது.
    • தமிழ்நாட்டை, தீயசக்தியின் கோரப் பிடியில் இருந்து மீட்க வேண்டியது அண்ணாவின் பெயர் தாங்கிய நம் அ.தி.மு.க. இயக்கத்தின் வரலாற்று கடமையாகும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அசாத்திய வாழ்க்கை வாழ்ந்த

    சாமானிய மனிதன்!

    தலைமுறைகள் தாண்டி,

    எல்லோரும் விரும்பி விளிக்கும்

    "அண்ணா"!

    "தம்பி, மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; அவர்களிடம் கற்றுக்கொள்; அவர்களை நேசி; அவர்களுக்கு சேவை செய்"

    என்று மேடைப் பேச்சாக மட்டும் அல்லாமல், தன் வாழ்வின் மூச்சாக வாழ்ந்து, இன்றும் என்றும் மக்களுக்கான திராவிடவழி அரசியலின் துருவ நட்சத்திரமாக விளங்கும் நம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று...

    அன்றைய கொடுங்கோல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த, மக்களுக்கான கூட்டணி அமைத்து அண்ணா கண்ட அந்த வெற்றி தான், தமிழ்நாட்டின் அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்தது.

    அண்ணா அவர்கள் உயிரில், உணர்வில் கலந்திருந்த தமிழ்நாட்டை, தீயசக்தியின் கோரப் பிடியில் இருந்து மீட்க வேண்டியது அண்ணாவின் பெயர் தாங்கிய நம் அ.தி.மு.க. இயக்கத்தின் வரலாற்று கடமையாகும். மக்கள் துணையோடு இந்த விடியா திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!

    #அண்ணாயிசம் போற்றும் அஇஅதிமுக நல்லாட்சியை மீண்டும் நிறுவிடுவோம்!

    அதுவே நம் பேரறிஞர் பெருந்தகைக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி!

    #மக்களைக்_காப்போம்

    #தமிழகத்தை_மீட்போம்

    அண்ணா நாமம் வாழ்க! என்று கூறியுள்ளார். 

    • தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் நட்பு ரீதியான கூட்டணி என்பார்கள்.
    • தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி மீது அனைத்து மக்களும் அதிகமான வெறுப்பில் இருக்கிறார்கள்.

    மதுரை:

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மதுரையில் முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்த பின்னரும் 30 சதவீத பகுதிகளுக்கு இன்னும் குடிநீர் போய் சேரவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் மூன்று மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மதுரை மக்கள் அனைவரும் பயனடைவார்கள்.

    தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் நட்பு ரீதியான கூட்டணி என்பார்கள். அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் அடிமை என்கிறார்கள்.

    இது தி.மு.க.வுக்கு தான் பொருந்தும். பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தபோது தமிழ்நாட்டில் இந்தியை கொண்டு வந்தவர்கள் தி.மு.க.வினர். தற்போது அதி.மு.க., பா.ஜ.க. கூட்டணி செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

    தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் பல்வேறு குழப்பம் ஏற்பட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாக இருக்கிறது.

    அ.தி.மு.க.வில் இருந்து தொண்டர்களின் ரத்தத்தை உறிஞ்சி பதவி சுகத்தை அனுபவித்த செங்கோட்டையன் செல்லாகாசாகி விட்டார். அவரைப் பற்றி பேசுவது தேவையில்லை. எடப்பாடி பழனிசாமி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர். அவர் மு.க. ஸ்டாலினை விட பன்மடங்கு சிறந்த நிர்வாகியாக திகழ்கிறார். அவருக்கு அதிகரித்து வரும் செல்வாக்கை பார்த்து மு.க.ஸ்டாலினுக்கு பதட்டம் அதிகரித்துள்ளது.

    மத்திய பட்ஜெட்டை தமிழகத்தைச் சேர்ந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 9-வது முறையாக தாக்கல் செய்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மத்திய பட்ஜெட் சிலருக்கு கசப்பாகவும், பலருக்கு இனிப்பாகவும் இருக்கிறது.

    ஆனால் மத்திய பட்ஜெட் பொருத்தவரை நெல்லிக்கனி போல சிறப்பாக அமைந்துள்ளது. மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை மத்திய அரசு தர மறுக்கவில்லை. ஆனால் தி.மு.க. அரசு தயார் செய்துள்ள திட்ட விவரங்களில் குளறுபடிகள் உள்ளன.

    எனவே தான் அதை மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளது. ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசு மெட்ரோ ரெயிலை ரத்து செய்து விட்டதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.

    தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி மீது அனைத்து மக்களும் அதிகமான வெறுப்பில் இருக்கிறார்கள். இப்படி ஒரு ஆட்சி நமக்கு தேவை இல்லை என்று உறுதியாக இருக்கிறார்கள். எனவே வருகிற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி மாற்றத்தை மக்கள் நிச்சயம் கொண்டு வருவார்கள்.

    இவர் அவர் கூறினார்.

    • செல்லும் இடங்களில் எல்லாம் முதலமைச்சருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள்.
    • தி.மு.க தான் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அனைவருக்கும் தெரியும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று தி.மு.க முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி சொல்வதை எல்லாம் மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். பெண்களுக்கான ஏராளமான நல்ல திட்டங்களை நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். எந்த ஆட்சிலும் நடைபெறாத அளவுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செய்து சாதனை படைத்துள்ளார். நான் ஏற்கனவே சொன்னது போல 2006, 2016-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது அதைவிட சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் நடத்திக் கொண்டு வருகிறார்.

    கடந்த 6 மாதத்திற்கு முன்பே தி.மு.க தேர்தல் பரப்புரை தொடங்கிவிட்டது. கூட்டணி கட்சிகளை முதலமைச்சர் நல்லபடியாக வைத்துள்ளார். தி.மு.க கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சர். கருத்துக்கணிப்பு திமுகவுக்கு சாதகமாக வந்து கொண்டிருக்கிறது. செல்லும் இடங்களில் எல்லாம் முதலமைச்சருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள். முதலமைச்சர் மீது தனி மரியாதை வைத்துள்ளார்கள்.

    தி.மு.க தான் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அனைவருக்கும் தெரியும். நீங்க எந்த ஆட்சிலும் இல்லாத அளவிற்கு அரசின் நல திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேருகிறதா என்பதை கண்டறிந்து, எங்கையாவது குறை இருந்தால் அதனை உடனடியாக மாவட்ட கலெக்டர்களிடம் பேசி சரி செய்து கொடுக்கிறார். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் ஒவ்வொரு இடத்திலேயேயும் நடத்தி ஒரு 20 ஆண்டு காலம், 30 ஆண்டு காலமாக நடைபெறாத பணிகளெல்லாம் ஒரே நாளில் முடிச்சு தந்தது நமது முதலமைச்சர் தான். தீர்க்க முடியாத பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

    தி.மு.க.வுடன் யார் யார் கூட்டணி என்பது குறித்து முதலமைச்சர் தான் பேசி இறுதி முடிவு எடுப்பார். எங்களிடம் என்ன வேலை சொல்கிறாரோ அதை நிறைவேற்றுவதுதான் எங்களது வேலை. கண்டிப்பாக தி.மு.க. தான் தேர்தலில் ஜெயிக்கும் என்றார். 

    • 2026 தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படை மீண்டும் ஆட்சி அமைப்போம்.
    • சர்வாதிகாரி பற்றியெல்லாம் பாடம் எடுக்க பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா?

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக சர்வாதிகாரிகள் அத்தனை பேரின் டி.என்.ஏ-வாக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஹிட்லர், முசோலினி, நீரோ போன்றவர்களை எல்லாம் திமுக ஆட்சியின் மீது அடைமொழியாகக் காட்டுவது அரசியல் அவலம். வரலாறு தெரிந்தால் பேசுங்கள் பழனிசாமி அவர்களே! இல்லையென்றால் வழக்கம் போல அடிமைத்தனம் என்ற விசுவாசத்தை மட்டுமே மோடிக்குக் காட்டிக் கொண்டிருங்கள். ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரை இரண்டாம் உலகப்போரின் இறுதியில் வீழ்த்தியது ஸ்டாலினின் செம்படைதான். இந்தச் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படை மீண்டும் ஆட்சி அமைத்து, உங்களின் எதிர்கட்சி என்ற அந்தஸ்தையும் வீழ்த்தும். எதிர்க் கட்சித் தலைவர் பதவியையும் பறிகொடுத்துவிட்டு நிற்கப் போகிறீர்கள்!

    தமிழ்நாட்டில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்றும் தமிழ்நாட்டில் பெண்களின் பெரும்பான்மையான ஆதரவு திமுகவிற்குத்தான் உள்ளது என்றும் முன்னணி ஊடகங்களில் கருத்துக் கணிப்புகள் வெளியாகி, தமிழ்நாட்டு மக்களின் உணர்வைப் பிரதிபலித்துக் கொண்டிருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், வெற்றி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அவதூறுகளையாவது அள்ளித் தெளிப்போம் என சூனா பானாவாக கிளம்பிவிட்டார் பழனிசாமி!

    மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்புகளால் விரக்தியில் என்ன செய்வது என்று தெரியாமல் அறிக்கை என்ற பெயரில் கிறுக்கித் தள்ளியிருக்கிறார் பழனிசாமி.

    டெல்லியில் சதித்திட்டம் தீட்டி சர்வாதிகார எண்ணத்தோடு தமிழ்நாட்டின் மீது ஏவப்படும் எந்த ஆதிக்கத்தையும் வெற்றியடைய விடமாட்டோம். எந்தக் கொம்பனாலும், தமிழ்நாட்டைத் தலைதாழ்த்தி விட முடியாது என்பதில் உறுதியாகப் போரடிக் கொண்டிருப்பது திராவிட மாடல் அரசும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும்தான். ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்குச் செய்யும் அநீதிகளுக்கும் அவர்களது தமிழ்ப் பகை நடவடிக்கைகளுக்கும் எதிராக 'தமிழ்நாட்டைத் தலைகுனியவிட மாட்டேன்'என்று சொன்னால் பழனிசாமிக்கு ஏன் எரிகிறது?

    டெல்லி ஓனர்களுக்கு அடிமையாக வாழ்வதிலே தனக்கு நிகராக யாரும் வந்துவிடக் கூடாது எனப் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் வாழ்நாள் அடிமை பழனிசாமி, சரித்திரப் புத்தகங்கள், சர்வாதிகாரிகள் என்றெல்லாம் நகைச்சுவை செய்துகொண்டிருக்கிறார். ஜனநாயகத்தைச் சீரழித்து இந்த நாட்டையே சர்வாதிகார ஆட்சியாக்கிவிடும் நோக்கத்தோடு நாளும் பொழுதும் ஆதிக்கத் திட்டங்களைச் செயல்படுத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. மோடி என்ற சர்வாதிகாரியைப் போற்றிக் கொண்டிருக்கும் பழனிசாமி, சர்வாதிகாரி பற்றியெல்லாம் பாடம் எடுக்க அருகதை இருக்கிறதா?

    ஒன்றிய அரசின் காலில் விழுந்து, கைகோத்து தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்கின்ற பழனிசாமிக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரைக் குறைகூற எந்த அருகதையும் இல்லை. பொள்ளாச்சி சம்பவத்தை வேடிக்கை பார்த்துவிட்டு இப்பொழுது பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேச தகுதியும் இல்லை. பழனிசாமியின் படுபாதக ஆட்சியில் தமிழ்நாட்டுப் பெண்கள் எப்படிப் பட்ட சூழ்நிலையில் வாழ்ந்தார்கள்? என்பதற்கு பொள்ளாச்சியே உதாரணம். தமிழ்நாட்டு மக்கள் அந்த அவலங்களை மறந்திருப்பார்கள் என்று நினைத்து பொய்களை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில்தான் போதைப் பொருள்களைத் தடுக்க வரலாற்றில் இல்லாத அளவுக்குக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. போதைப் பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். கைது செய்யப்பட்டவர்களை விசாரித்தால் பின்னணியில் இயங்கும் போதைப் பொருள் மாஃபியாக்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. இந்த மாஃபியாக்களோடு தொடர்பில் இருப்பவர்களாக அதிமுக நிர்வாகிகள் இருக்கின்றனர். நடிகர்களுக்குப் போதைப் பொருள் விநியோகம் செய்த பிரசாத் என்பவருக்கு அதிமுக ஐடி விங் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்துவிட்டு, செய்தி வெளியில் தெரிந்ததும் அவசர அவசரமாக அவரைப் பொறுப்பிலிருந்து நீக்கிய உத்தமர்தான் பழனிசாமி.

    ஏய்ப்பவருக்கே காலம் என்று எண்ணிவிடாதே என எம்.ஜி.ஆரின் பாடலை மேற்கோள் காட்டும் பழனிசாமிக்கு, அதே எம்.ஜி.ஆர் பாடிய அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு? என்ற பாடல் ஏன் நினைவுக்கு வரவில்லை. தமிழ்நாட்டில் திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் மீண்டும் அமையப் போகிறது. தமிழ்நாட்டில் இனி ஒரு நாளும் பாஜகவின் அடிமை ஆட்சி அமையப் போவதில்லை, பழனிசாமியின் அரசியல் அத்தியாயத்திற்கு 2026 தேர்தலோடு முடிவுரை எழுதப்படப் போகிறது என்கிற உண்மைகள் சுடுவதால் விரக்தியில் பழனிசாமி உதிர்த்து வரும் உளரல்கள் உண்மையாகிவிடாது" என்று தெரிவித்தார்.

    • 6 வயது சிறுமி முதல் மூதாட்டிகள் வரை ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை.
    • போதை ஆசாமிகள் எந்த நேரம் இவர்களை சீரழிப்பார்கள், கொலை செய்வார்கள் என்று தெரியவில்லை.

    மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தலைகுனிந்து நிற்கும் தமிழகம் என்றும் தமிழ்நாட்டை தலைநிமிர வைப்பேன் என்று வாய சவடால் பேசும் ஸ்டாலினுக்கு கண்டனம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலக சரித்திரத்தில் ஹிட்லர், முசோலினி, நீரோ போன்ற கொடுங்கோல் மன்னர்களைப் பற்றி மக்கள்

    கேள்விப்பட்டிருப்பார்கள்; சரித்திரப் புத்தகங்களில் படித்திருப்பார்கள். ஆனால், இந்த சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக, தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கிறார்கள்.

    `நடு இரவில் ஒரு பெண் தனியாக, பாதுகாப்பாக நடந்துசெல்கிறாரோ அன்றுதான் உண்மையான சுதந்திரம்

    பெற்ற நாள்' என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால்,

    கடந்த 56 மாத தி.மு.க. ஆட்சியில் காவல் துறையை தனது ஏவல் துறையாக, முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றி வைத்துள்ளதால் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. 6 வயது சிறுமி முதல் மூதாட்டிகள் வரை ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை.

    போதை ஆசாமிகள் எந்த நேரம் இவர்களை சீரழிப்பார்கள், கொலை செய்வார்கள் என்று தெரியவில்லை. இந்நிலையில்,

    தீய சக்தி தி.மு.க-வின் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், `ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில்

    வாசித்தது போல்' மகளிர் மாநாடு நடத்துகிறார்.

    56 மாதங்களாக நிர்வாகத் திறனற்ற ஆட்சி செய்து, இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ் நாட்டை மாற்றிவிட்டு, நிதியே இல்லாமல் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, கோடிக்கணக்கான ரூபாய்க்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    சென்னை தரமணியில் வெளி மாநில இளம்பெண், போதை ஆசாமிகளால் சீரழித்து கொல்லப்பட்டுள்ளார். கண்முன்னே மனைவி பலாத்காரம் செய்யப்படுவதை தடுத்த கணவனும்; இந்த கொடுஞ்செயலைப் பார்த்து அழுத இரண்டு வயது

    குழந்தையும் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

    சென்னையில் உள்ள நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேன்டீனில் பணியாற்றும் அரியலூரைச் சேர்ந்த பெண், திமுக பிரமுகரால் சீரழிக்கப்பட்டுள்ளதோடு; அவரது நண்பர்களுக்கும் விருந்தாக்கப்பட்டுள்ள கொடுமை அரங்கேறியுள்ளது.

    கொடுஞ்செயலில் ஈடுபடுபவர்களுக்கு போலீசை கண்டு பயமில்லாத நிலை இருப்பதற்கு ஆட்சியாளர்களின் செயல்பாடுகளே காரணம்.

    குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ஏதாவது ஒரு வகையில் ஆளும் கட்சியினர் அடைக்கலம் அளிப்பதுதான்,

    தற்போது தமிழகம் குற்றவாளிகளின் கூடாரமாக மாறி உள்ளதற்குக் காரணம் என்று அவதியுறும் மக்கள்

    புலம்புகிறார்கள்.

    பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை தடை இல்லாமல் போதைப் பொருட்கள் கிடைப்பதும், அவைகளை கொண்டு செல்வதில் ஆளும் கட்சியினரில் சிலர் ஈடுபட்டு வருவதும், பெரும் சீரழிவுக்கு காரணமாக உள்ளது.

    பள்ளி சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை, போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், பள்ளி மாணவிகளில் சிலர் சீருடையிலேயே மது அருந்துவது போன்ற காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாவதும், விடியா தி.மு.க-

    வினர் நடத்தும் ஆட்சியின் லட்சணத்தைப் பறை சாற்றுகிறது.

    சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதலமைச்சர் மு.க.

    ஸ்டாலினைக் கண்டித்து வீதியில் இறங்கி நாள்தோறும் போராடி வருகிறார்கள்!

    போராடுபவர்களின் கோரிக்கைகளை

    நிறைவேற்றுவதற்கு பதில், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வேலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசு ஈடுபட்டுள்ளது. பல லட்சம் கோடி ரூபாய் மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்து தங்கள் பரம்பரையின் வாழ்வை மட்டுமே வளப்படுத்தும் நோக்கில், அல்லும் பகலும் `கரப்ஷன், கமிஷன், கலக்ஷன்' என்று செயல்படும் ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கிவிட்டது.

    விடியா திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள் அதை பொறுக்கமாட்டாது அழுத கண்ணீரே ஓர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை ஆகும் என்பதை,

    அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீரன்றே

    செல்வத்தைத் தேய்க்கும் படை...

    என்று, இரு வரிகளில் திருவள்ளுவர் கூறியிருப்பதை, தன்னிலை மறந்து செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு

    நினைவூட்டுகிறேன். நம்மை கேள்வி கேட்க யாருமில்லை; நம்மை வெல்லும் சக்தி எங்குமில்லை என்ற மமதையோடு சுற்றித் திரியும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே,

    `ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே,

    பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே..

    ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு,

    அந்த மாறுதலை செய்வதற்கு தேறுதல் (தேர்தல்) உண்டு'

    என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளையும் நினைவூட்டுகிறேன்.

    விரைவில் தேர்தலை தமிழகம் சந்திக்கும்; மக்கள் மாறுதலை தருவார்கள். ஏய்த்து பிழைக்கும் தொழிலை இதுநாள்வரை செய்து வந்த தீயசக்தி தி.மு.க. கூட்டம்

    மூலைக்கு மூலை அடக்கி ஒடுக்கி வைக்கப்படும். தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் சுதந்திரம் பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய நாட்டிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • வர்த்தக ஒப்பந்தம் தங்களுக்கு எத்தகைய நன்மைகளை பயக்கவுள்ளது என்பதை பல்வேறு வர்த்தக மற்றும் தொழில் பிரதிநிதிகள் விளக்கினர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சமீபத்தில் நம் இந்திய நாட்டிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் குறித்து, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த பல்வேறு வர்த்தக மற்றும் தொழில் பிரதிநிதிகள் என்னைத் தொடர்பு கொண்டு, இந்த வர்த்தக ஒப்பந்தம் தங்களுக்கு எத்தகைய நன்மைகளை பயக்கவுள்ளது என்பதை விளக்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, தொடர்ந்து இதுபோன்ற நல்ல திட்டங்களை மத்திய அரசு சார்பிலும், விரைவில் தமிழ்நாட்டில் அமையவுள்ள அ.தி.மு.க. அரசு சார்பிலும் அளித்திட தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

    இத்தருணத்தில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த வர்த்தக ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்திய மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



    • 2011, 2016-ல் அ.தி.மு.க. கொடுத்த எந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றியதா?
    • அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையை தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து காரைக்குடி கழனிவாசலில் ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டக் கல்லூரி, சிவகங்கை மாவட்டத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டம், ரூ.2.559.50 கோடி மதிப்புள்ள 49 முடிவுற்ற திட்டப் பணிகள், ரூ.13.36 கோடி மதிப்புள்ள 28 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது முதலமைச்சர் கூறியதாவது:

    * தி.மு.க. அரசின் திட்டங்களை காப்பியடித்து வாக்குறுதிகள் என அள்ளி வீசுகிறார் இ.பி.எஸ்.

    * 2011, 2016-ல் அ.தி.மு.க. கொடுத்த எந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றியதா?

    * சென்னை- கன்னியாகுமரி இடையே கடலோர சாலை என அ.தி.மு.க. அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதா?

    * அ.தி.மு.க. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற போவதில்லை என்பது மக்களுக்கு தெரியும்.

    * தமிழ்நாட்டுக்காக குரல் கொடுக்க முடியாதவர் பத்து தோல்வி பழனிசாமி.

    * வாக்குறுதி அளித்தபடியே மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கி வருகிறோம்.

    * அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையை தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது.

    * 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 58 விழுக்காடாக உயர்த்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிமுக பலமான கூட்டணி அமைத்துள்ளது, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
    • தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    எம்ஜிஆரின் 109வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    இவ்வாறு அவர் கூறினார்:-

    காங்கிரஸ் கை கொடுக்கும் என்றார் உதயநிதி. ஆனால், இப்போது காங்கிரஸ் கை நழுவிவிட்டது.

    அதிமுக பலமான கூட்டணி அமைத்துள்ளது, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வராக பதவியேற்றதும், 10 நாள் கூட ஆட்சி நிற்காது என்றார்கள், சிறப்பான ஆட்சியை கொடுத்தோம்.

    இன்னும் 2 அமாவாசைகள் தான் உள்ளது. திமுகவின் ஆட்சிகாலம் முடியப்போகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த தேர்தல்களில் தி.மு.க. வரலாறு காணாத பல தோல்விகளை கண்டுள்ளது.
    • ஓ.பன்னீர் செல்வம் நாடகமாடுகிறார்.

    மதுரை:

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில் புதிய நியாய விலை கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து பல்வேறு முறை சட்டசபையில் பேசியிருக்கிறேன். தொகுதி வாரியாக சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் மதுரை மேற்கு தொகுதியில் 10 திட்டங்களை செய்ய வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால் ஒரே ஒரு திட்டம் மட்டும் செயல்முறைக்கு வந்துள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எதிரான பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தி.மு.க. அரசுக்கு எதிராக சுனாமி போல தமிழக மக்கள் வெகுண்டு எழுந்து உள்ளனர்.

    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். அந்த அளவுக்கு தி.மு.க.வுக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு அலை வீசி வருகிறது.

    நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கி இருக்கிறார். அவர் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்ததால் நாங்களும் அவரை விமர்சனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்தபோது மக்களோடு மக்களாக நின்றார். மக்கள் துயரங்களில் பங்கெடுத்தார். மக்களுக்கான திட்டங்களை செய்தார்.

    ஆனால் அவரோடு விஜயை ஒப்பிட முடியாது. அவர் அறைக்குள் இருந்து அரசியல் செய்கிறார். கரூர் சம்பவத்தில் 41 உயிர்கள் பலியான போது கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் வந்து அனுதாபம் தெரிவிக்க அவரால் முடியவில்லை. இது வினோதமாக இருக்கிறது. அவரை தமிழக மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.

    கடந்த தேர்தல்களில் தி.மு.க. வரலாறு காணாத பல தோல்விகளை கண்டுள்ளது. 1991-ல் கருணாநிதி மட்டும் வெற்றி பெற்றார். பின்பு அவரும் அந்த பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் தொடர்ந்து பத்திரிகைகளில் தனது உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதி கட்சியை வளர்த்தார். எனவே தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க. பேசக்கூடாது.

    அ.தி.மு.க. மக்களுக்கான இயக்கம். வருகிற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பத்திரிகைகள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் முதலமைச்சராக இருந்தவர், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர், அ.தி.மு.க.வின் கொள்கை கோட்பாடுகள் தெரிந்து எப்படி நடக்க வேண்டும் என்று அவருக்கு தெரியாதா? இதை முறைப்படி எப்படி தெரிவிக்க வேண்டும்.

    எனவே ஓ.பன்னீர் செல்வம் இந்த விஷயத்தில் நாடகமாடுகிறார். கருணாநிதி, ஸ்டாலின் நாடகங்களை எல்லாம் பார்த்து விட்டோம். எனவே ஓ.பன்னீர் செல்வத்தின் நாடகம் எங்களிடம் எடுபடாது என்றார். 

    • ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்களை இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
    • கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில்,

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன், இருசக்கர வாகனத்தில் சென்றபோது காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது.

    உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடியே அவர் சாலையில் ஓடிய காட்சி, இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம்–ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கான பயங்கர சாட்சி.

    தினந்தோறும் "இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?" என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். "இதற்கும் மேலாக சட்டம்–ஒழுங்கு சீர்கெட முடியாது" என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்களை இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

    தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல — தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்.

    இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான

    விசாரணை நடத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.



    ×